Showing posts with label பொங்கப்பூ. Show all posts
Showing posts with label பொங்கப்பூ. Show all posts

Saturday, January 25, 2025

பொங்கப்பூ,

 பொங்கல் பண்டிகைக்கு வீட்டின் முன்வைக்கும் பீளைப் பூவுக்கு பல்வேறு பெயர்கள் உள்ளன. பூளைப் பூ, பொங்கப்பூ, சிறுகண்பீளை, கண்ணுப் பிள்ளைச்செடி என பல்வேறு பெயர்களில் அழைக்கப் படுகின்றன. அமரன் தேசியா எனும் தாவர வகைக் குடும்பத்தைச் சேர்ந்தது. பீளைப்பூ பாம்பு கடிக்கு சிறந்த மருந்தாகும். இச்செடியில் பல மருத்துவ குணங்கள் உள்ளன. வீடுகளில் பூச்சிகள் பிரவேசிக்காமல் தடுக்கும். பொங்கல் திருவிழாவின்போது காப்புக் கட்டவும், வீடுகளுக்கும், மாடுகளுக்கும் தோரணம் கட்டவும் பயன்படுத்தப்படுகிறது.

இது ஒரு வற்றாத புதர் பயிர், பயிரிடப்படாத நிலங்களில் காணப்படுகிறது. மழைக் காலங்களில் நன்றாக வளரும். மழை நின்ற பிறகு பூப்பூக்கும். இதன் இலைகளை ரசம் தயாரிக்கவும் பயன்படுத்துகின்றனர். சீரான சிறுநீர் போக்குக்கும், விஷ முறிவுக்கும் உதவும். மேலும், நோய்த் தொற்றிலிருந்து பாதுகாக்கும் வகையில், ஆவாரம்பூ, மாவிலை, வேப்ப இலை ஆகிய மூன்றும் கூரைப்பூவுடன் இணைத்து கட்டப்படுகின்றன. இந்த மலரைப் பாதுகாக்கும் தாவரங்களாக ஆவாரம்பூ, மாவிலை, வேப்ப இலை உள்ளன. இத்தாவரங்கள் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, வைரஸ் எதிர்ப்பு தாவர மூலக்கூறுகளை கொண்டுள்ளதாக, சமீபத்திய ஆராய்ச்சிகள் மூலம் தெரிய வந்துள்ளன.

Featured Post

ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதைகள் இருக்கிறது

ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதைகள் இருக்கிறது என்பதையும், ஓர் பலாப்பழத்தைப் பிளக்காமல் அதன் உள்ளிருக்கும் சுளையின் எண்ணிக்கையைய...