Sunday, September 25, 2022

பெருமாள் கோவிலில் தீர்த்தம்

 அகால மரணம் ஏற்படக்கூடாது 

என்று ஆசையா? 

பெருமாள் கோவிலில் தீர்த்தம் கொடுப்பதன் நோக்கம் என்ன?.. 


"யாருக்குமே அகால மரணம் ஏற்பட கூடாது"என்ற அக்கறை நம் ஹிந்து மதத்துக்கு எப்பொழுதுமே உண்டு.


'மோக்ஷம் அடையும் வரை, பிறந்து கொண்டே இருக்கிறான்' என்று மறுபிறவியை காட்டும் தர்மம், நம்முடைய ஹிந்து தர்மம்.


சில கோவிலுக்கு சென்று வழிபட்டால், அங்கு ரிஷிகளுக்கு ப்ரத்யக்ஷமான தெய்வங்கள், 'நமக்கு அகால மரணம் ஏற்படாமல் இருக்க' அனுக்கிரஹம் செய்வார்கள், என்று பலனாக சொல்லப்படுகிறது.


உதாரணத்திற்கு, 'திருவெள்ளக்குளம்'  என்றும் 'அண்ணன் பெருமாள் கோவில்' என்று அழைக்கப்படும் திவ்ய தேசத்துக்கு சென்று (சீர்காழி அருகில் உள்ளது), அங்கு உள்ள 'ஸ்ரீநிவாச பெருமாளை பக்தியுடன் வணங்கி, அங்குள்ள தீர்த்தத்தில் நீராடினால், அகால மரணம் ஏற்படாது' என்று பலன் சொல்லப்படுகிறது


வட இந்தியாவில், வெளி 

நாட்டில், வெகு தொலைவில் இருப்பவர்களால், வயதானவர்களால், இது போன்ற பிரத்யேகமான கோவிலுக்கு சென்று பெருமாளை வணங்கி, அங்குள்ள தீர்த்தத்தில் நீராட முடியாமல் போகலாம்.


'யாருமே அகால மரணம் 

அடைய கூடாது' என்று வேதம் ஆசைபடுகிறது.


கோவிலுக்கு போக முடியாதவர்களுக்கும், அகால மரணம் ஏறபடாமலிருக்க ஒரு வழி சொல்கிறது நம் சனாதன ஹிந்து தர்மம்.


சீர்காழி அருகில் இருக்கும் திருவெள்ளக்குளம் சென்று பெருமாளை தரிசித்து, அங்குள்ள குளத்தில் நீராட முடியாதவர்கள், பெருமாளுக்கு அபிஷேகம் செய்த தீர்த்தத்தை, சாளக்கிராம மூர்த்திக்கு அபிஷேகம் செய்த தீர்த்தத்தை, எடுத்து கொண்டால் கூட 'அகால மரணம் ஏற்படாது' என்று பலனை வேதமே சொல்கிறது.


இதனால் தான், பெருமாள் கோவிலில், தீர்த்தம் அனைவருக்கும் கொடுக்கப்படுகிறது.


எத்தனை அற்புதமானது நம் ஹிந்து தர்மம்!!


'நமக்கு அகால மரணம் ஏற்பட கூடாது' என்று பெருமாள் ஆசைப்படுகிறார்.


'நீண்ட நாள் வாழ்ந்து கிருஷ்ண பக்தி இவன் செய்ய வேண்டும்' என்று பெருமாள் ஆசைப்பட்டு நமக்கு நீண்ட ஆயுளை அருளிகிறார்.


கோவிலுக்குள் வரும் நம் அனைவருக்கும், தீர்த்தம் கொடுத்து, கருணையை வர்ஷிக்கிறார்.


அவர் செய்யும் கருணையை நாம் சிறிது நேரமாவது, நினைத்து பார்க்க வேண்டும்.


.நம் வீட்டில் உள்ள ராம, கிருஷ்ண விக்ரஹங்களுக்கும், சாளக்கிராம மூர்த்திக்கும், உண்மையான பக்தியுடன் (அன்புடன்) அபிஷேகம் செய்து,அந்த அபிஷேக தீர்த்தத்தையும் நாம் மரியாதையோடு எடுத்து கொண்டால் கூட, அகால மரணம் ஏற்படாது.

தீர்க்க ஆயுசு பெருமாள் அருளால் கிடைக்கும்.


ஒவ்வொரு ஹிந்துக்கள் வீட்டிலும் தெய்வ விக்ரஹங்கள் உண்டு. இருக்க வேண்டும்.

ஒவ்வொரு வீட்டிலும் அவரவர்கள் அவர்கள் வீட்டில் உள்ள தெய்வ விக்ரஹங்களுக்கு அபிஷேகம் செய்து வந்தனர். செய்து வருகின்றனர்.

அந்த அபிஷேக தீர்த்தத்தை பக்தியுடன் எடுத்து கொண்டனர்.

இதனால், ஹிந்துக்கள் மனதில் தெய்வ சிந்தனையும் வளர்ந்தது. அகால மரணம் ஏற்படாமல், தெய்வங்கள் அணுகிரஹத்தால், ஆரோக்கியமாக 90 வயது வரை ஆஸ்பத்திரி கால் வைக்காமல் வாழ்ந்தனர்.


கடந்த சில பத்தாண்டுகளாக தான், ஹிந்துக்கள் தடம் புரண்டு ஒடுகிறோம்.


ஒருவரும் தன் வீட்டில் அபிஷேகம் செய்து தெய்வ வழிபாடு செய்வதில்லை.


வீட்டில் உள்ள தெய்வ விக்ரஹங்கள் மரியாதை அற்று இருக்கிறது. இப்படிப்பட்ட செயல்களால், இன்று உள்ள ஹிந்துக்களுக்கு மனதில் தெய்வ சிந்தனையை விட, கீழ் தரமான சிந்தனைகள் பல எழும்புகிறது.


அகால மரணத்தை நோக்கி, பல நோய்கள் இளம் வயதிலேயே வருகிறது.


ஹிந்துக்கள் கொஞ்சம் சிந்திக்க வேண்டும். தெய்வ பக்தி வளர நாம் முயற்சி செய்ய வேண்டும்.


அகால ம்ருத்யு ஹரணம்,

சர்வ வியாதி நிவாரணம்,

சமஸ்த பாபக்ஷய ஹரம்,

விஷ்ணு பாதோதகம் சுபம்


என்கிறது வேத வாக்கு.


விஷ்ணுவின் பாதத்தில் பட்ட தீர்த்தம்

அகால மரணத்தை நீக்க கூடியது,

அனைத்து வியாதியும் போக்க கூடியது,அனைத்து பாபத்தையும் போக்க கூடியது,

 என்று வேதமே சொல்கிறது.


மஹா விஷ்ணுவின் கால் நகத்தில் பட்டு ஓடி வந்ததால் தான், கங்கை நதிக்கே 'புண்ணியநதி' என்று பெயர் கிடைத்தது என்றால்,

நாம் செய்யும் அபிஷேகம் தீர்த்தம்,

நாம் கோவிலில் பெறும் அபிஷேக தீர்த்தம்,எத்தனை மகத்துவம் வாய்ந்தது!!  என்று புரிந்து கொள்ள வேண்டும்.


கோவிலில் பெருமாள் தீர்த்தத்தை வாங்கும் போது, 

இடது கையில் துணியை வைத்துக்கொண்டு, அதன் மேல் வலது கையால், ஜாக்கிரதையாக அபிஷேக தீர்த்தத்தை வாங்கி கொள்ள வேண்டும்.


நம்முடைய காலிலேயே தீர்த்தம் சிந்தி விடாமல், பெருமாள் அபிஷேக தீர்த்தம் என்ற மகத்துவம் தெரிந்து வாங்கிக்கொள்ள வேண்டும்.


பெருமாள் அபிஷேக தீர்த்தத்தை, கொடுப்பவரும் ஜாக்கிரதையாக கொடுக்க வேண்டும்.


அகால மரணத்தை தடுக்கும் அருமருந்து என்ற ஞாபகத்துடன், 

கங்கை நதியே இவர் கால் நகம் பட்டதால் தான், புண்ணிய நதியாக ஒடுகிறாள் என்ற ஞானத்துடனும், அபிஷேக தீர்த்தத்தை எடுத்து கொள்ள வேண்டும்.


பகவானுடைய பாத தீர்த்தத்தை பருகியவன் 'அல்ப ஆயுசாக போக மாட்டான்'.


"சரத்தையும் (நம்பிக்கை), பக்தியும் (பெருமாளி


டம் அன்பு)" இருந்தால், நீண்ட ஆயுசு உண்டாகும், எந்த நோயும் சரியாகும்.


'நோய்' வருவதற்கு காரணம் - 

நாம் செய்த 'பாபங்களே',

'ஆயுள்' குறைவுக்கு காரணமும் - 

நாம் செய்த 'பாபங்களே'.


'சரத்தையும் (நம்பிக்கை), பக்தியும் (பெருமாளிடம் அன்பு)' இருந்து, பகவானுடைய பாத தீர்த்தத்தை பருகியவனுக்கு, 

அவனிடம் உள்ள பாபங்களும் பொசுங்கி போகும் 

என்று வேதமே சொல்கிறது.


கோவிலில் நாம் பெற்றுக்கொள்ளும் பெருமாள் 'தீர்த்ததுக்கு' இத்தனை மகத்துவம் உண்டென்றால்,  பெருமாளிடம் சரத்தையும் (நம்பிக்கை), பக்தியும் (பெருமாளிடம் அன்பு) வைக்க நமக்கு என்ன தடை இருக்க முடியும்?


பெருமாளின் பாத தீர்த்ததுக்கு அத்துனை பெருமை உண்டு என்று அறிந்து, "நம் பெருமாள்" என்று ஆசையுடன், நாம் அனைவரும் பக்தி செய்வோம்.


அதே சமயம் மரியாதையுடன் தெய்வ சந்நிதியில், பெருமாள் நம்மை பார்க்கிறார் என்ற கவனத்துடன் செயல்படுவோம்.


எனவே பெருமாள் கோவிலில் நாம் தீர்த்தம் பெற்றுக்கொள்ளும்போது


அகால ம்ருத்யு ஹரணம்

சர்வ வியாதி நிவாரணம்,

சமஸ்த பாபக்ஷய ஹரம்

விஷ்ணு பாதோதகம் சுபம்


என்ற ஸ்லோகத்தை மனதிற்குள.் சொல்லியபடி தீர்த்தத்தை  சிந்தி விடாமல்,நமது அகால மரணத்தை தவிர்க்க கூடிய பெருமாள் அபிஷேக தீர்த்தம் என்ற மகத்துவம் தெரிந்து

அருந்த வேண்டும்

பசுவை ஒரு முறை பிரதட்சணம்

 * பசுவை ஒரு முறை பிரதட்சணம் செய்வதால் பூலோகம் முழுவதும் பிரதட்சணம் செய்த புண்ணிம் கிடைக்கும்.


* பசுவைப் பூஜித்தால் பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் முதலான அனைத்து தெய்வங்களையும் பூஜை செய்த புண்ணியம் உண்டாகும்.


* பசு உண்பதற்கு புல் கொடுத்தாலும் (கோக்ராஸம்), பசுவின் கழுத்துப் பகுதியில் சொறிந்து கொடுத்தாலும் (கோகண்டுயனம்) கொடிய பாவங்கள் விலகும்.


இதனை உணர்ந்தே நம் முன்னோர்கள் ஆங்காங்கே ‘ஆவுரஞ்சுக்கல்’ அமைத்தனர்.


* பசுக்கள் மேய்ந்து விட்டு வீடு திரும்பும் சந்தியா காலம் கோதூளி காலம் (லக்னம்) என்று அழைக்கப்படுகிறது. இது மிக புண்ணியமான வேளை ஆகும்.


* பசு வசிக்கும் இடத்தில் பசுவின் அருகில் அமர்ந்து செய்யும் மந்திர ஜபமோ, தர்ம காரியங்களோ நூறு பங்கு பலனைத் தருகின்றன.


* மனிதனின் கண்ணுக்குப் புலப்படாத ம்ருத்யு, எமன், எமதூதர்கள் பசு மாட்டின் கண்களுக்கு மட்டுமே புலப்படுவார்கள்.


எனவே தான், ஒருவர் இறக்கும் போது பசுமாடு சத்தம் போடுகிறது.


* ஒருவர் இறந்த பின் பரலோகத்திற்கு அழைத்துச் செல்லப்படும் ஜீவன், அஸிபத்ர வனத்தில் வைதரணிய நதியைக் (மலம், சலம், சளி, சுடு நீர் ஓடும் நதி) கடக்க இயலாமல் தவிக்கிறது.


பூலோகத்தில் பசுதானம் செய்தவர்களுக்கு இத்துன்பம் நேர்வதில்லை. அவர் தானம் செய்த பசுமாடு அங்கு தோன்ற, அதன் வாலைப் பிடித்துக் கொண்டு வைதரண்ய நதியைக் கடந்து விடலாம் என்று கருட புராணம் கூறுகிறது.


* உலகம் எத்தகைய விஞ்ஞான வளர்ச்சியடைந்தாலும், அதன் தொடர்ச்சியாய் எத்தகைய பாதிப்பு நிகழ்ந்தாலும், பசுக்களை நாம் பேணிக் காக்கும் இடங்களுக்கு மட்டும் எவ்விதப் பாதிப்பும் நிகழாது என்பது ஆன்மிக ஆராய்ச்சியாளர்களின் கருத்தாகும்.


* கறவை நின்ற வயதான பசுக்களைக் கூட நாம் பேணிக் காக்க வேண்டும்.


* பிரம்ம ஹத்தி தோஷத்திற்கு இணையாக பசு ஹத்தி தோஷத்தையும் நம் வேதங்கள் குறிப்பிடுகின்றன.


பசு நடக்கும் போது எழும் புழுதியானது நம் உடலில் படுவது எட்டு வகை புண்ணிய ஸ்நானங்களில் ஒன்றாகும். பசுவின் கால்பட்ட தூசியைத்தான் ரகு சக்ரவர்த்தி, அஜசக்ரவர்த்தி, தசரத சக்ரவர்த்தி போன்ற மாமன்னர்கள் பூசிக்கொண்டார்கள்.


`மா’ என்று பசு கத்தும் ஓசை அப்பகுதிக்கு மங்களத்தைத் தருகிறது!


தர்மோ ரக்ஷதி ரக்ஷித:

தாணிப் பாறை

 சதுரகிரி தாணிப் பாறை  சர்வேஸ் வரர் தியான நிலையத்தில் கன்னிமூலையில் அபயஹஸ்த மகாவிநாயகர்சிரசில் பிறையுடன் உள்ளார். வலதுபுறம்  உள்ளராகுவில் சிவலிங்கமும்,இடதுபுறமுள்ள கேதுவில் காளிங்க நர்த்தனகிருஷ்ணனும் உள்ளனர். 

அவருக்கு  அடுத்தபடியாக வடக்குநோக்கி 18ம்படி கருப்பன்  சைவமாக உள்ளார்.

  அவரை தரிசித்து  

விட்டு உள்ளே வர வாசலுக்கு  வலதுபுறம்  சர்வேஸ்வரரை நோக்கியபடி  சண்டிகேஸ்வரர்தரிசனம் முடித்து வந்தால்   இடதுபுறம் நவகிரகங்கள் தங்கள் மனைவியருடன்  தங்கள் வாகனத்தில் உள்ளனர்.

வாசலைப் பார்த்தபடி சொர்ண ஆகர்சனபைரவர் தன்மனைவியுடன்  உள்ளார்.

தரிசனம்செய்து திரும்பினால் படிக்கட்டுகள்.

வலது புறம் மேற்கு நோக்கிய படிக்கட்டை நெருங்கி சித்தி விநாயகர் தரிசனம் செய்தால் சிறிய இடைவெளி வழியாக சென்றால்  படிக்கட்டின்கீழ் எட்டிப்பார்க்க சிவன்தலையில் கங்கையுடன்  தெரிகிறார்.  

    உள்ளே செல்ல வலதுபக்கம் படிக்கட்டு இறங்கிச் சென்றால்  இடதுபுறம் திரும்பி கீழே இறங்கி வலதுபுறம்திரும்ப நடுவில் சிவனுக்கு கீழே  பாலாம்பிகை 

 இடது புறம் ஆறு சித்தர்கள் வடக்குப்பார்த்தும், ஆறு சித்தர்கள்கிழக்குப்பார்த்தும், ஆறு சித்தர்கள்  தெற்குப்பார்த்தும் உள்ளனர்.நடுவில்

தெற்குப்பார்த்து யுகங்கள் கடந்த பகுளாதேவி சமேத காக புஜன்டர் இருவரும்18கரங்களுடன் ,நடுவில் மேற்குப்பார்த்து பிரம்மா (நான் முகன்),சிவன், விஷ்ணுவும், நடுவில் வடக்குப்பார்த்து நால்வர் பெருமக்கள் உள்ளனர்.18சித்தர்கள்  பெயர், நட்சத்திரம், வாழ்ந்த காலம், அடங்கிய இடம் ஆகியவை குறிப்பு உள்ளது.

 காகபுஜன்டர்  அவரது மனைவி யுகங்கள் கடந்த வர்கள் எனவே காலங்கள் குறிக்கப் படவில்லை.

Thursday, September 22, 2022

தாத்தாவும் பாட்டியும் சிரிக்கிறார்கள்

தாத்தாவும் பாட்டியும் சிரிக்கிறார்கள்......*
😁😁😁😁😁😁😁😁

*கரியையும் சாம்பல்தூளையும் கொடுத்து*
_பல் விளக்கச்சொன்னபோது_ ,

*பட்டிக்காடு* என *இளித்த பற்கள்*
*இன்று வேரற்று போனபோது*...

*ஓடி நின்றேன்* *சர்வோதயா காதிகிராப்ட்*.. *பல்பொடி வாங்க*...

தாத்தாவும் பாட்டியும்
சிரிக்கிறார்கள்...

*வெந்தயமும் சிகைக்காயும்*
*வடிதண்ணீரில் அரைத்து*
*தேய்த்துக்குளி என்றபோது* ,

*பித்துக்குளிகள்* என *எள்ளி நகையாடி*... *சிக் ஷாம்புவை* *சிக்கென பிடித்தும்*

*இன்று வெண் கேசம்* *வந்தபின்பு* *ஓடுகின்றேன்*
_சீகைக்காய் வாங்க_......

தாத்தாவும் பாட்டியும்
சிரிக்கிறார்கள்...

*பாசிப்பயறோ*
*கடலை மாவோ*
*அரைத்துக்குளி* என்ற போது ,

*லிரில்* ,
*லக்ஸ் சினிமா* *நட்சத்திரங்களின்*
*அழகு சோப்*
என *கைகாட்டிய* *கட்டிகளை*
*எல்லாம் போட்டு*,,
*தோள் சுருங்கி* *வயோதிகம் தெரிந்த பின்பு*..

*ஓடுகின்றேன் பயத்த மாவு அரைக்க*....

தாத்தாவும் பாட்டியும்
சிரிக்கிறார்கள்.....

*இருமலோ தும்மலோ*
*வந்தபோது*...
*துளசி, தூதுவளை, சுக்கு, மிளகு போட்டு* *கசாயம் தந்தபோது* ,

*முகத்தைச் சுளித்து* *காஃப் சிரப் குடித்து* *தைராய்டு வரை சென்ற பின்பு* ,

*ஓடுகின்றேன் துளசி , தூதுவளைச்செடி வளர்க்க*.....

தாத்தாவும் பாட்டியும்
சிரிக்கிறார்கள்.....

*வயிற்று வலி என்றபோது*
*வெறும் வயிற்றில்* *வெந்தயக்களியோ*,, *கற்றாழைச்சாறோ* *கொண்டு வந்து தந்தபோது*..

*சீறித் தூக்கி எறிந்து* ,
*ப்ருஃபென்னும்* *பெயின்கில்லரும்* *போட்டு*
*கருப்பை பழுதடைந்த பின்பு* ,
_ஓடுகின்றேன் கற்றாழை வளர்க்க_ ......

தாத்தாவும் பாட்டியும்
சிரிக்கிறார்கள்.....

*நல்லெண்ணெய் செக்கில் ஆட்டி*
*மணமாய் தந்தபோது* ,

*சன்ஃபிளவர் ஆயில்* *பார்*
*முகம் காட்டும் தூய்மை* எனக்கூறி *முகத்தில் அறைய,*
*பதிலுரைத்துவிட்டு*,

*இன்று உடல் நோய்க்கு* *ஓடுகின்றேன் செக்கு நோக்கி* .....

தாத்தாவும் பாட்டியும்
சிரிக்கிறார்கள்....

*மண்பானை சமையல்*
*மண்பானை குளிர் நீரை*
எல்லாம் மாற்றி விட்டு ,

*ஆர்வோ வாட்டர் என* *புழு பூச்சி கூட வாழத்தகுதியற்ற* *நீரைக்குடித்து குடித்து*
*சவமான பின்பு ஓடுகின்றேன்*

*மண்பானை வாங்க*.....

தாத்தாவும் பாட்டியும்
சிரிக்கிறார்கள்......

*படித்த தலைமுறை எனும் நாகரீகத்தில் திளைத்து*..

*குருகுலக்கல்வியை*
*கோடிக்கணக்கான ரூபாய்*
*கல்வியாக்கி* ,

*கொல்லைப்புற துளசியின்*
*வைத்தியம் மறந்து* ,
*மாடிகளில் குளீருட்டப்பட்ட அறைக்கு*
*இலட்ச இலட்சமாய்க்கொட்டி* 
*நடைப்பிணமாக வாழும்*
*வாழ்வில் எங்கே சுதந்திரம்*
*ஏது சுகாதாரம்* என்று அலைகிறேன்.....

தாத்தாவும் பாட்டியும்
சிரிக்கிறார்கள் .......

*மூத்தோர் சொல்லும்*
*முது நெல்லிக்காயும்*
*முன்னே கசக்கும்* ,
*பின்னே இனிக்கும்*

வாழ்வு சிறப்பாக அமைய தெய்வீக ரகசியங்கள்!

வாழ்வு சிறப்பாக அமைய தெய்வீக ரகசியங்கள்!

சிவன் கோவில் வன்னி மரம், வில்வ மரத்தை 21 முறை வலம் வந்து நமது குறைகளைக் கூற, நல்ல பலன் கிடைக்கும்.

தீர்ப்புகள் சாதகம் ஆகும். இம்மரங்களுக்கு நாம் கூறுவதை கேட்கும் சக்தி உள்ளதாக ஒரு ஐதீகம் உண்டு.

இரண்டு சர்ப்பங்கள் இணைந்தது போல் இருக்கும் நாகராஜா சிலைக்கு, வெள்ளிக்கிழமை காலை [10.30 - 12.00 ] ராகு காலத்தில், மஞ்சள் குங்குமம் வைத்து, செவ்வரளிப் பூ சாற்றி, அபிசேகம் செய்து நெய்தீபம் ஏற்றி, தம்பதிகள் பெயருக்கு அர்ச்சனை செய்தால் தம்பதிகள்

ஒற்றுமையாக, அன்னியோன்யமாக வாழ்வார்கள்:

குடும்பத்தில் தாங்க முடியாத கஷ்டங்கள் வந்தால், மன அமைதி குறைந்தால் , அருகில்உள்ளஆலயங்களில் தீபம் ஏற்றி வழிபடுவது ரிஷிகள் சொல்லிய பரிகாரம்.

கொடிய கடன் தொல்லைகளுக்கு ஸ்ரீ யோக நரசிம்மரையும் , மற்ற கடன் தொல்லைகளுக்கு ஸ்ரீ லட்சுமி நரசிம்மரையும் வழிபடுவது நல்ல பரிகாரம் ஆகும். ஸ்ரீநரசிம்மரின் எந்த திருக்கோலத்தை தரிசித்தாலும் கடன் தொல்லைகள், பில்லி, சூனியம், ஏவல், திருஷ்டி, திருமண தடை விலகி நன்மை பெறலாம்.

ஆலய திரி சூலத்தில் குங்குமம் இட்டு, எலுமிச்சை பழம் குத்தி வழிபட, திருஷ்டி, செய்வினை தோஷம் நீங்கும்.

வெள்ளெருக்கு விநாயகரை வீட்டு அறைகளில் கைக்கு எட்டாத உயரத்தில் வைத்து இருந்தால், ஏதும் பூதகண சேஷ்டைகள் இருந்தால் நின்று விடும்.

சக்கரத்தாழ்வார் சந்நிதியில் நெய்தீபம் ஏற்றி 12 முறை, 48 நாட்கள் சுற்றி வழிபட தொழில், வழக்கு சாதகமாதல், பில்லி, சூனியம், ஏவல் நீங்கும். 21 செவ்வாய்க்கிழமைகளில் நெய்தீபம் ஏற்றி வழிபட கொடுத்த கடன் வசூல் ஆகும்.

கொடுத்த கடன் வசூல் ஆக பைரவர் சந்நிதியில் தொடர்ந்து 8 செவ்வாய் கிழமைகளில் நெய்தீபம் ஏற்றி சகஸ்ர நாம அர்ச்சனை செய்ய வேண்டும்.

ஜாதகப்படி சனிபகவானின் பாதிப்பு குறைய, திங்கட்கிழமைகளில் சிவபெருமானுக்கு, பால் அபிசேகம் செய்து, அர்ச்சனை செய்ய வேண்டும். சனிக் கிழமைகளில் சனி பகவான் சந்நிதியில் தேங்காய் உடைத்து, இரண்டு மூடிகளிலும் நல்லெண்ணெய் ஊற்றி, எள்ளு முடிச்சு தீபம் ஏற்றவும். சிவன் கோயிலில் கால பைரவரையும், விஷ்ணு கோயிலில் சக்கரத்தாழ்வாரையும் வழிபட செய்வினை தோஷம் நெருங்காது.

வெள்ளி கிழமைகளில் நவகிரக சுக்கிரனுக்கு அகல் விளக்கில் கற்கண்டு போட்டு, அதில் நெய் தீபம் ஏற்றி வழிபட, கணவன் - மனைவி கருத்து வேறுபாடுகள் நீங்கும்.

பிரதோஷ காலத்தில், ரிஷபா ரூட மூர்த்தியாய், மகேசனை தேவியுடன் வழிபடுவோர் 1000 அஸ்வமேத யாகங்களை செய்த பலனை பெறுவார்கள். அதிலும் ஈசானிய மூலையில் ஈஸ்வரனுக்கு காட்டப் படும் தீபாரதனையை பார்த்தால் எல்லா நோய்களும், வறுமையும் நீங்கும்

மாதாமாதம் உத்திர நட்சத்திரத்தன்று சிவனுக்கு தொடர்ந்து 11 மாதங்கள் பால் அபிஷேகம் செய்தால், விரைவில் திருமணம் நடை பெறும்.

கலியுகத்தில் காரிய சித்திக்கு துர்க்கை வழிபாடு அதுவும் இராகு காலத்தில், செய்வது சிறந்தது. இராகு காலத்தில் கடைசி 1/2 மணி நேரமான அமிர்தகடிகை நேரமே சிறப்பான பரிகார நேரம். நெய்விளக்கு ஏற்றவும் உகந்த நேரம். ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30-6.00 மணிக்குள் துர்க்கை க்கு விளக்கு ஏற்றி வழிபட நாம் வேண்டிய பிராத்தனை கள் நிறைவேறும்.

வெள்ளிக்கிழமை காலை 10.30 -12.00 ராகு காலத்தில் துர்க்கைக்கு தாமரை தண்டு திரி போட்டு நெய்விளக்கு ஏற்றி வழிபட, தெய்வ குற்றம், குடும்ப சாபம் நீங்கும். ஹஸ்த நட்சத்திரத்தன்று துர்க்கைக்கு சிகப்பு பட்டு துணி சாற்றி, சிகப்பு தாமரையை பாதத்தில் வைத்து 27 எண்ணிக்கை கொண்ட எலுமிச்சை பழ மாலை சாற்றி, குங்கும அர்ச்சனை செய்து, அந்த குங்குமத்தை நெற்றியில் வைத்து வர உடனே திருமணம் நடை பெறும்.

சங்கடஹர சதுர்த்தியில் விநாயகருக்கு அருகம் புல் மாலைசாற்றி, அர்ச்சனை செய்து வழிபட, சங்கடங்கள் தீரும்.

சங்கடஹர சதுர்த்தியில் விநாயகருக்கு எருக்கம் திரி போட்டு விளக்கு ஏற்றி வழிபடபிள்ளைகள் கல்வியில் முன்னேறுவார்கள்.

செவ்வாய்க்கு அதிபதியான முருகப் பெருமானுக்கு செவ்வாய் தோறும் நெய்விளக்கு ஏற்றி வழிபடமூன்று மாதத்தில் வேலை கிடைக்கும்.

ருத்ராட்சம், சாளக்கிராமம், துளசி,வில்வம் உள்ள இடத்தில் இருந்து சுமார் 10 கி.மீ தூரத்திற்கு செய்வினை அணுகாது.

புத்திர பாக்கியம் இல்லாதோர் 6 தேய்பிறை அஷ்டமிகளி ல் காலபைரவருக்கு சகஸ்ர நாம அர்ச்சனை செய்தால் விரைவில் புத்திர பாக்கியம் கிட்டும்.

பெருமாள் கோயிலில் உள்ள கருடாழ்வார் சந்நிதியை சுற்றி வந்து நெய்விளக்கு ஏற்றி வழிபடசர்ப்ப தோஷம், கால சர்ப்ப தோஷம் நீங்கும்.

Monday, September 19, 2022

எந்த நிலையிலும் இறைவனை நம்பு!இறைவன் சிலவற்றை தாமதமாக கொடுப்பான்

எந்த நிலையிலும் இறைவனை நம்பு!இறைவன் சிலவற்றை தாமதமாக கொடுப்பான்.ஆனால் சிறந்ததையே கொடுப்பான்!

படித்ததில் பிடித்தது!

மும்பையில், இந்து ஒருவர் மிகப் பெரும் செல்வந்தர்.. அவருக்கு மனைவி குழந்தைகள் என்று யாரும் இல்லை. பரோபகாரி.

ஒரு தீபாவளி பண்டிகையையொட்டி , தன்னிடம் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு மிக சிறந்த விருந்து ஏற்பாடு செய்து அவரே முன்னின்று அனைவரையும் உபசரிக்கிறார்..

விருந்து முடிந்தவுடன், ஒவ்வொருவருடைய இருக்கைக்கு முன் இரண்டு பெரிய வண்ண கவர்கள் வைக்கப் பட்டுள்ளன. ஒன்றில் பணம் என்றும் மற்றொன்றில் புனித ராமாயணம் புத்தகம் என்றும் எழுதி வைக்கபட்டுள்ளது..

நண்பர்களே, நீங்கள் எனக்காக உண்மையாக உழைக்கின்றீர்கள். உங்கள் வேலைக்கேற்ற அல்லது அதற்கும் அதிகமாகவே உங்களுக்கு சம்பளமும் கொடுத்து வந்துள்ளேன்.. என்னுடைய இந்த செல்வம் இறைவனால் அருளப்பட்டது.. என்னுடைய செல்வத்தை எவ்வாறு செலவழித்தேன் என்று இறைவனுக்கு பதில் சொல்ல கடமைபட்டுள்ளேன்...

உங்கள் முன் இரண்டு கவர்கள் உள்ளன. ஒன்றில் பணம், மற்றொன்றில் ராமாயணம் புத்தகம் இதில் ஏதாவது ஒன்றை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்...

முதலாமவர் தயங்கியவாறே சொன்னார்... முதலாளி, நான் ராமாயணத்தை மதிக்கிறேன். ஆனால் இப்போதைக்கு, நோய்வாய்பட்டிருக்கும் என் தாய்க்கு நல்ல சிகிட்சை அளிக்க வேண்டும். அதற்கு பணம் வேண்டும்.. பணம் என்று எழுதப்பட்ட கவரை எடுத்து கொண்டார்...

அடுத்தவர், என் ஓலை குடிசைக்கு பதில், சின்னதாக ஒரு கல் வீடு கட்ட வேண்டும்.. இந்த பணம் இருந்தால் என் கனவு வீடு கட்ட முடியும்... பணத்தை எடுத்து கொண்டு முதலாளிக்கு நன்றி சொல்லி நகன்றார்...

இப்படியே அடுத்தடுத்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணங்களோடு பணத்தை எடுத்து கொண்டனர்...

கடைசியாக, முதலாளியின் தோட்டத்தில் உள்ள கால்நடைகளை பராமரிக்கும் வாலிபனுடைய முறை...

அவன் பரம ஏழை. வயதான தாய். மனைவி மற்றும் பிள்ளைகள்...

அவன் பணத்தின் தேவை அறிந்தவன்.. அவனும் பணம் உள்ள கவர் அருகில் சென்று, அதை எடுத்து கையில் வைத்து கொண்டு முதலாளியிடம்...... 

என்னுடைய தேவைக்கு நான் எப்போது கேட்டாலும் நீங்கள் தரத்தான் போகிறீர்கள்.. மேலும் என் அம்மா அடிக்கடி சொல்வார்கள், ...... ஏழ்மை என்பதும் இறைவனால் அருளப்பட்டதே... நம் தேவைகளை நிறைவேற்றுபவனாக எல்லாம் வல்ல இறைவன் இருக்கின்றான்... மேலும், எங்கள் வீட்டில் ஒரு பழக்கம்...

தினசரி, அதிகாலை ராமாயணம் படித்தும் மாலையில் அந்தி சாயும் நேரத்தில் மகாபாரதம் படித்தும் என் அம்மா அதன் அர்த்தம் சொல்லுவார்கள். நாங்கள் சுற்றி அமர்ந்து அதை செவிமடுப்போம்...

....... என்று சொன்ன அந்த வாலிபன், எடுத்த பண கவரை எடுத்த இடத்திலேயே வைத்து விட்டு..... நான் இந்த புனிதமான ராமாயணம் புத்தகம் தேர்ந்தெடுக்கிறேன் என்று அதை எடுத்தான்....

சம்பவம் இதோடு முடியவில்லை நண்பர்களே,

புனித ராமாயணம் இருந்த பெரும் கவரை எடுத்தவன், முதலாளியிடம் நன்றி சொன்னவன்.. அதை திறந்து பார்க்கிறான்......ஆச்சர்யம்

ராமாயணம் இருந்த கவருக்குள் மேலும் இரண்டு கவர்கள்.... ஒன்றில், பணமும் மற்றொன்றில் செல்வந்தரின் சொத்துக்களின் ஒரு பகுதியை தானமாக எழுதி கையெழுத்திட்ட பத்திரம்...

யாருக்கு என்ற பெயர் மட்டும் எழுதப்படாமல் இருந்தது....

அந்த வாலிபன் மட்டும் இல்லை,, ஏனைய தொழிலாளர்களும் அதிர்ந்து போயினர்...

செல்வம் நிலையானது அல்ல... இன்றைய நிலை அப்படியே தலைகீழாக மாறும், இறைவன் நினைத்தால்...

மனிதர்களை செல்வத்தை கொண்டும் சோதிப்போம் என்ற இறைவனின் கூற்று எப்படி பொய்யாக முடியும்...

வாலிபன் தாய் சொன்னதை நம்பினான்... ஆம், அவள் சொல்லி கொடுத்தார்.....

இறைவனையே நம்பு.. அவனிடமே உன் தேவைகளை கேள்.. அள்ள அள்ள குறையாத செல்வத்தை அவன் வழங்குவான்..... அசைக்க முடியாத இறை நம்பிக்கை என்ற செல்வம் மற்ற செல்வங்களிலெல்லாம் சிறந்த செல்வம் அல்லவா.
 

Saturday, September 10, 2022

கொலஸ்ட்ரால் காரணமாக

இந்தியாவில் பெரும்பாலான இறப்புகள் அதிக கொலஸ்ட்ரால் காரணமாக மாரடைப்பால் ஏற்படுகின்றன என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
   உங்கள் சொந்த வீட்டில் எடை மற்றும் கொலஸ்ட்ரால் உள்ள பலரை நீங்கள் அறிந்திருக்க வேண்டும்.
   பல அமெரிக்க பெரிய நிறுவனங்கள் இந்தியாவில் இதய நோயாளிகளுக்கு கோடிக்கணக்கில் மருந்துகளை விற்கின்றன.
   ஆனால் உங்களுக்கு ஏதேனும் பிரச்சனை இருந்தால் ஆஞ்சியோபிளாஸ்டி செய்யுமாறு மருத்துவர் கூறுவார்.
   இந்த அறுவை சிகிச்சையில், மருத்துவர் இதயக் குழாயில் ஸ்டென்ட் எனப்படும் ஸ்பிரிங் ஒன்றைச் செருகுகிறார்.
   இந்த ஸ்டென்ட் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டது மற்றும் தயாரிப்பதற்கு வெறும் $3 (ரூ. 150-180) ஆகும்.
   இந்த ஸ்டென்ட் இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டு 3-5 லட்சத்திற்கு விற்று கொள்ளையடிக்கப்பட்டது.
   டாக்டர்கள் லட்சக்கணக்கில் கமிஷன் பெறுகிறார்கள் அதனால்தான் ஆஞ்சியோபிளாஸ்டி செய்ய திரும்பத் திரும்ப கேட்கிறார்கள்.
   கொலஸ்ட்ரால், பிபி அல்லது மாரடைப்புக்கு ஆஞ்சியோபிளாஸ்டி ஆபரேஷன் ஒரு முக்கிய காரணம்.
   யாரும் வெற்றி பெறுவதில்லை.
   ஏனென்றால் வசந்தம் என்பது மருத்துவர் இதயக் குழாயில் வைக்கும் பேனா போன்றது.
   சில மாதங்களுக்குள், அந்த கிணற்றின் இருபுறமும் அடைப்புகள் (கொலஸ்ட்ரால் மற்றும் கொழுப்பு) சேர ஆரம்பிக்கின்றன.
   இதைத் தொடர்ந்து இரண்டாவது மாரடைப்பு ஏற்படுகிறது.
   மீண்டும் ஆஞ்சியோபிளாஸ்டி செய்ய வேண்டும் என்கிறார் டாக்டர்.
   உங்கள் லட்சக்கணக்கான பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது, உங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
 
                  இப்போது படியுங்கள்
          அதன் ஆயுர்வேத சிகிச்சை
 
   இஞ்சி சாறு -
 
   இது இரத்தத்தை மெல்லியதாக்குகிறது.
   இது இயற்கையாகவே வலியை 90% குறைக்கிறது.
 
   பூண்டு சாறு
 
   இதில் உள்ள அல்லிசின் கொலஸ்ட்ரால் மற்றும் பிபியை குறைக்கிறது.
   இது இதயத்தின் தடையை நீக்குகிறது.
 
   எலுமிச்சை சாறு
 
   இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், வைட்டமின் சி மற்றும் பொட்டாசியம் ஆகியவை ரத்தத்தை சுத்திகரிக்கும்.
   இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
 
   ஆப்பிள் சாறு வினிகர்
 
   உடலில் உள்ள அனைத்து நரம்புகளையும் திறந்து, வயிற்றை சுத்தப்படுத்தி, சோர்வை நீக்கும் 90 வகையான பொருட்கள் இதில் உள்ளன.
 
            இந்த நாட்டுப்புற வைத்தியம்
          இதை இப்படி பயன்படுத்துங்கள்
 
   1- ஒரு கப் எலுமிச்சை சாறு எடுத்துக் கொள்ளுங்கள்;
   2- ஒரு கப் இஞ்சி சாறு எடுத்துக் கொள்ளுங்கள்;
   3- ஒரு கப் பூண்டு சாறு எடுத்துக் கொள்ளுங்கள்;
   4-ஒரு கப் ஆப்பிள் சைடர் வினிகரை எடுத்துக் கொள்ளுங்கள்;
 
   நான்கையும் கலந்து குறைந்த தீயில் சூடாக்கி, 3 கப் இருக்கும் போது, ​​ஆறவிடவும்;
   இப்போது நீங்கள்
   அதனுடன் 3 கப் தேன் சேர்க்கவும்
 
   இந்த மருந்தை தினமும் காலையில் வெறும் வயிற்றில் 3 தேக்கரண்டி எடுத்துக் கொள்ளுங்கள்.
   அனைத்து தொகுதிகளும் செல்கின்றன.
 
   இச்செய்தியை இயன்றவரை பரப்புமாறு கூப்பிய கரங்களுடன் கேட்டுக்கொள்கிறேன், இதன் மூலம் அனைவரும் இம்மருந்து மூலம் குணமடையலாம்;  நன்றி!
 
   மாலை பற்றி யோசி
   இரவு 7:25 ஆகிறது, அவர் தனியாக வீட்டிற்கு செல்கிறார்.
   அத்தகைய சூழ்நிலையில், திடீரென்று உங்கள் மார்பில் ஒரு கூர்மையான வலியை உணர்கிறீர்கள், அது உங்கள் கைகளை கடந்து செல்கிறது.
   தாடைகளை அடைகிறது.
   நீங்கள் அருகிலுள்ள மருத்துவமனையிலிருந்து உங்கள் வீட்டிற்கு 5 மைல் தொலைவில் உள்ளீர்கள், துரதிர்ஷ்டவசமாக நீங்கள் அங்கு செல்ல முடியுமா இல்லையா என்பது உங்களுக்குத் தெரியாது.
   நீங்கள் CPR இல் பயிற்சி பெற்றுள்ளீர்கள், ஆனால் அதை நீங்களே எவ்வாறு பயன்படுத்துவது என்று உங்களுக்குக் கற்பிக்கப்படவில்லை.
 
        மாரடைப்பை எவ்வாறு தவிர்ப்பது
               இந்த தீர்வுகள்
              
   பெரும்பாலான மக்கள் மாரடைப்பின் போது தனியாக இருப்பதால், உதவியின்றி சுவாசிப்பது கடினம்.
   அது அப்படியே நடக்கும்.  அவை சரிந்து 10 வினாடிகள் மட்டுமே நீடிக்கும்.
   அத்தகைய நிலையில், பாதிக்கப்பட்டவர் தீவிரமாக இருமல் மூலம் தன்னை இயல்பு நிலைக்கு கொண்டு வர முடியும்.  ஒரு பெருமூச்சு
   ஒவ்வொரு இருமலையும் முதலில் எடுக்க வேண்டும்
   மற்றும் இருமல் மிகவும் வலுவானது
   மார்பிலிருந்து துப்பியது.
   உதவி வரும் வரை
   இரண்டு விநாடிகளுக்கு செயல்முறையை மீண்டும் செய்யவும்
   அதனால் துடிப்பு சாதாரணமானது
   இதை செய்வோம்.
   நுரையீரலில் உரத்த சுவாசம்
   ஆக்ஸிஜனை உற்பத்தி செய்கிறது
   சத்தமாக இருமலும் ஒரு காரணம்
   அது இதயத்தை மூழ்கடிக்கச் செய்கிறது
   சீரான இரத்த ஓட்டம்
   ஓடு.
 

Featured Post

எண்ணம்_போல_வாழ்க்கை

#எண்ணம்_போல_வாழ்க்கை... ஒருமுறை, ஒரு பிச்சைக்காரன் ரயிலில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் போது, ​​ சூட் மற்றும் பூட்ஸ் அணிந்த ஒரு தொழிலதிபர...