Friday, August 19, 2022

நீ எதையும் உன்னுடன் கொண்டு போக முடியாது...!

 ஒரு கிராமத்தில் வசித்து வந்த ஒரு மனிதன் திடீரென இறந்து போனான்...! 

அவன் அதை உணரும் போது கையில் ஒரு பெட்டியுடன் கடவுள் 

அவன் அருகில் வந்தார்...!

கடவுள் :

" வா மகனே...! 

நாம் கிளம்புவதற்கான 

நேரம் வந்து விட்டது...! " 

மனிதன் :

" இப்பவேவா ? 

இவ்வளவு சீக்கிரமாகவா ?

என்னுடைய திட்டங்கள்

என்ன ஆவது ? "  

கடவுள் :

" மன்னித்துவிடு மகனே...!

உன்னை கொண்டு 

செல்வதற்கான நேரம் இது...! "

மனிதன் :" அந்தப் பெட்டியில் என்ன உள்ளது ? "

கடவுள் :" உன்னுடைய உடைமைகள்...! "

மனிதன் :" என்னுடைய உடைமைகளா...!

என்னுடைய பொருட்கள், உடைகள், பணம் 

எல்லாமே இதில்தான்

இருக்கின்றனவா ? "

கடவுள் :" நீ கூறியவை அனைத்தும் 

உன்னுடையது அல்ல.. 

அவைகள் பூமியில் 

நீ வாழ்வதற்கு தேவையானது...! "

மனிதன் :" அப்படியானால் என்னுடைய நினைவுகளா ? "

கடவுள் :" அவை காலத்தின் கோலம்...! "

மனிதன் :" என்னுடைய திறமைகளா ? "

கடவுள் :" அவை உன் சூழ்நிலைகளுடன் சம்பந்தப்பட்டது...! "

மனிதன் :" அப்படியென்றால் என்னுடைய குடும்பமும் நண்பர்களுமா ? "

கடவுள் :" மன்னிக்கவும் !குடும்பமும் நண்பர்களும் நீ வாழ்வதற்கான வழிகள்...!"

மனிதன் :" அப்படி என்றால் என் மனைவி மற்றும் மக்களா ? "

கடவுள் :" உன் மனைவியும் மக்களும் உனக்கு சொந்தமானவர்கள் அல்ல...! அவர்கள் உன் இதயத்துடன் சம்பந்தப்பட்டவர்கள்.! "

மனிதன் :" என் உடலா ? "

கடவுள் :"அதுவும் உனக்கு சொந்தமானதல்ல...!உடலும் குப்பையும் ஒன்று...! "

மனிதன் :" என் ஆன்மா ? "

கடவுள் :"அதுவும் உன்னுடையது அல்ல...! அது என்னுடையது...! "

🍂 மிகுந்த பயத்துடன் கடவுளிடமிருந்து அந்தப் பெட்டியை வாங்கி திறந்தவன் 

காலி பெட்டியை கண்டுஅதிர்ச்சியடைகிறான்...!

🍂 கண்ணில் நீர் 

வழிய கடவுளிடம்" என்னுடையது என்று எதுவும் இல்லையா ? "என கேட்க...!

கடவுள் சொல்கிறார் :🍂 அதுதான் உண்மை !நீ வாழும் ஒவ்வொரு நொடி மட்டுமே உன்னுடையது...!வாழ்க்கை என்பது நீ கடக்கும் ஒரு நொடிதான்...!

🍂 ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்...!

எல்லாமே உன்னுடையது என்று நினைக்காதே...!

🍂 ஒவ்வொரு நொடியும் வாழ்...! உன்னுடைய வாழ்க்கையை வாழ்...!

🍂 மகிழ்ச்சியாக வாழ்...! அது மட்டுமே நிரந்தரம்...!

🍂 உன் இறுதி காலத்தில் 

நீ எதையும் உன்னுடன் கொண்டு போக முடியாது...!

🍂 வாழுகின்ற ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்வோம்..

இதை விட வேறு எவர் வாழ்க்கைப் பாடத்தை சொல்லித் தர முடியும்?

 சிவகங்கை மாவட்டம் நெற்குப்பை to மகிபாலன்பட்டி செல்லும் 

சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய  பழமையான பாடல் ஓன்று, இன்று 

உலகம் முழுவதும்

உச்சரிக்கப்படுகிறது.


யாதும் ஊரே யாவரும் கேளிர்....


இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது.

பாடலின்

எல்லா வரிகளும் வாழ்வின்

முழு தத்துவத்தைச் 

சொல்கிறது.....


முழு பாடலும்... அதன் பொருளும்....


"யாதும் ஊரே; யாவரும் கேளிர்;

தீதும் நன்றும் பிறர்தர வாரா;

நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;.....

சாதலும் புதுவது அன்றே;...

வாழ்தல் இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; 

மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது

கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று

நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்

முறைவழிப் படூஉம் என்பது திறவோர்காட்சியின் தெளிந்தனம்...

ஆதலின் மாட்சியின்

பெயோரை வியத்தலும் இலமே;

சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.


– கணியன் பூங்குன்றனார்


"யாதும் ஊரே யாவரும் கேளிர்...."


எல்லா ஊரும்

எனது ஊர்....

எல்லா மக்களும் எனக்கு உறவினர் என்று நினைத்து,

அன்பே வாழ்வின் அடிப்படை,ஆதாரம் என்று

வாழ்ந்தால் , இந்த வாழ்வு நமக்கு எவ்வளவு இனிமையானது............. சுகமானது......


"தீதும் நன்றும் பிறர் தர வாரா...."


தீமையும்,நன்மையும் அடுத்தவரால் வருவதில்லை.......

எனும் உண்மையை,

உணர்ந்தால்,

சக மனிதர்களிடம்,

விருப்பு வெறுப்பு இல்லா ஒரு சம நிலை,சார்ந்த வாழ்வு கிட்டும்.....


"நோதலும் தணிதலும்

அவற்றோ ரன்ன...."


துன்பமும் ஆறுதலும்கூட

மற்றவர் தருவதில்லை....

மனம் பக்குவப்பட்டால்,

அமைதி அங்கேயே கிட்டும்...


"சாதல் புதுமை யில்லை.."


பிறந்த நாள் ஒன்று உண்டெனில் .....

இறக்கும் நாளும் ஒன்று உண்டு....*

இறப்பு புதியதல்ல....அது

இயற்கையானது....

எல்லோருக்கும்*

*பொதுவானது....

இந்த உண்மையை

உணர்ந்தும், உள் வாங்கியும் வாழ்ந்தால்....

எதற்கும் அஞ்சாமல்,

வாழ்க்கையை, வாழும் வரை ரசிக்கலாம்.......


"வாழ்தல்இனிது என மகிழ்ந்தன்றும் இலமே

முனிவின் இன்னாது என்றலும் இலமே....."


இந்த வாழ்க்கையில்

எது, எவர்க்கு, எப்போது,

என்னாகும் என்று

எவர்க்கும் தெரியாது.....

இந்த வாழ்க்கை மிகவும்

நிலை அற்றது.....

அதனால், இன்பம் வந்தால்

மிக்க மகிழ்வதும் வேண்டாம்...

துன்பம் வந்தால் வாழ்க்கையை வெறுக்கவும் வேண்டாம்......

வாழ்க்கையின் இயல்பை உணர்ந்து இயல்பாய் வாழ்வோம்......


"மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர் முறைவழிப் படூஉம் என்பது திறவோர் காட்சியின் தெளிந்தனம் ....."


இந்த வானம் நெருப்பாய்,

மின்னலையும் தருகிறது....

நாம் வாழ 

மழையையும்

தருகிறது.....இயற்கை வழியில் அது,அது

அதன் பணியைச் செய்கிறது....


ஆற்று வெள்ளத்தில்,

கற்களோடு, அடித்து முட்டிச் செல்லும் படகு போல,

வாழ்க்கையும்,

சங்கடங்களில் அவர்,அவர் ஊழ்படி அதன் வழியில்

அடிபட்டு போய்க்கொண்டு

இருக்கும்....

இது இயல்பு என மனத்தெளிவு கொள்ளல் வேண்டும்...


"ஆதலின் மாட்சியின்

பெரியோரை வியத்தலும் இலமே;

சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே...."


இந்தத் தெளிவு

பெற்றால்.....,

பெரிய நிலையில் உள்ள பெரியவர்களைப் பார்த்து

மிகவும் வியந்து பாராட்டவும் வேண்டாம்...

சிறிய நிலையில் உள்ள

சிறியவர்களைப் பார்த்து

ஏளனம் செய்து இகழ்வதும்

வேண்டாம்.....

அவரவர் வாழ்வு

அவரவர்க்கு.....

அவற்றில் அவர்,அவர்கள்

பெரியவர்கள்...


இதை விட வேறு எவர்

வாழ்க்கைப் பாடத்தை

சொல்லித் தர முடியும்?

Saturday, August 13, 2022

Website released by Government of Tamilnadu for 10th std Online Teaching

 web  name:----

https://diksha.gov.in/tn/

ஏழையின் நிம்மதிக்கு காரணம்

கிருஷ்ண பக்தி என்றால் என்ன?

பூலோகத்தில் ஒரே தெருவில் ஒரு செருப்பு விற்கும் தொழிலாளியும், ஒரு செல்வந்தரும் இருந்தனர். செருப்புத் தொழிலாளி தினமும் தான் செருப்புக் கடையின் ஓரத்தில் கிருஷ்ணரின் படம் ஒன்றை வைத்து அதை வணங்கி வந்தான். 
செல்வம் இல்லாவிட்டாலும் சந்தோசமும் மன அமைதியுடனும் இருந்தார். செல்வந்தரோ தினமும் காலையில் குளித்துவிட்டு, பல மணி நேரம் பூஜை புனஸ்காரம் எல்லாம் செய்வார். பல தலைமுறைக்கு காணும் செல்வம் இருந்தும் நிம்மதியின்றி வாழ்ந்து வந்தார்.

ஒரு நாள் நாரத முனிவர் விஷ்ணுவைப் பார்த்து ”அந்தச் செல்வந்தர் மிகுந்த பக்திமானாக இருக்கிறார்; தினமும் உங்களுக்குப் பல மணி நேரம் பூஜை எல்லாம் செய்கிறார். அவர் நிம்மதியாய் வாழ, ஏதாவது செய்யக்கூடாதா?” என்றார்.

விஷ்ணுவும் அதற்குச் சம்மதித்துவிட்டு நாரதரை பூலோகத்துக்கு அனுப்பினார். போகும்போது நாரதரைப் பார்த்து, “நீங்கள் கீழே சென்று, ‘நான் நாரயணனிடமிருந்து வருகிறேன்,’ என்று செல்வந்தரரிடம் சொல்லுங்கள்.
அவர் ‘தற்பொழுது நாராயணன் என்ன செய்துகொண்டு இருக்கிறார்?’ என்று கேட்பார். அதற்கு நீங்கள் ‘நாராயணன் தற்போது ஓர் ஊசியின் காது வழியாக யானையை நுழைத்துக்கொண்டு இருக்கிறார்’ என்று பதில் சொல்லுங்கள்” என்று சொல்லி அனுப்பினார்.

”அப்படியே அந்தச் செருப்பு தைக்கும் தொழிலாளியையும் போய்ப் பார்த்துவிட்டு வந்துவிடுங்கள்” என்று சொல்லி அனுப்பினார் விஷ்ணு.

நாரதரும் முதலில் அந்தச் செல்வந்தரின் வீட்டுக்கு சென்றர். பூஜை எல்லாம் முடித்துவிட்டு வந்த செல்வந்தர், நாரதரிடம், “நீங்கள் யார்?” என்று கேட்க, நாரதர் தான் நாரயணரிடமிருந்து வருவதாகச் சொல்கிறார். 
அதற்கு அந்தச் செல்வந்தர் “தற்போது நாராயணன் என்ன செய்துகொண்டு இருக்கிறார்?” என்று கேட்க, நாரதரும், நாராயணன் ஒர் ஊசியின் காதுவழியாக யானையை நுழைத்துக்கொண்டு இருப்பதை பார்த்தாகச் சொல்கிறார். அதற்கு அந்த செல்வந்தர் “அது எப்படி முடியும்? இது என்ன நடக்கிற காரியமா?” என்று கேட்டார்.

நாரதர் அடுத்தது அந்தச் செருப்புத் தொழிலாளியைப் பார்க்கச் சென்றார்.
அவரிடமும் இதே சம்பாஷணை நடைபெற்றது. ஆனால் கடைசி பதிலுக்கு அந்தச் செருப்புத் தைக்கும் தொழிலாளி, கண்களில் தாரை தாரையாக கண்ணீர் பெருகியது இதை ஒரு சாதாரண மனிதன் செய்ய முடியுமா பகவானைத் தவிர யாராலும் செய்ய முடியாது என அவர் கூறினார்
“இதில் என்ன விந்தை? ஒரு பெரிய ஆலமரத்தை சின்ன விதையில் அடக்கியவர், பிரபஞ்சத்தை தன் வாயில் காண்பித்தவர், அவருக்கு யானையை ஊசியில் நுழைப்பது என்ன பெரிய விஷயமா?” என்று பதில் சொன்னார்.

அவர்கள் இருவரும் சொன்ன பதிலை நாராயணனிடம் வந்து சொன்னார் நாரதர். கிருஷ்ண பக்தி என்பது, பூஜை, புனஸ்காரங்கள் செய்வது மட்டுமில்லை. 
கிருஷ்ணர் ஆகிய எல்லா சூழ்நிலையிலும் நான் ஒருவனே காப்பாற்ற முடியும் என்று எனது பாதத்தை பூரண நம்பிக்கையுடன், நீயே சரணம் என்று பற்றுவதே ”உண்மையான கிருஷ்ணன் பக்தி” 

இப்பொழுது தெரிகிறதா? ஏழையின் நிம்மதிக்கு காரணம் என்று பதிலளித்தார் பகவான் கிருஷ்ணர்.

ஹரேகிருஷ்ண பிரபுபாத்கீ ஜெய்

வினை விதைத்தவன் வினை அறுப்பான் !

அடுத்தவர்களைப் போல் வசதியாக வாழ முடியவில்லை என்று நினைக்காதே... 

*பிறப்பிற்கும்*
      *இறப்பிற்கும் இடையில்,*
      *நீ செய்யும்* *பாவம்*
      *புண்ணியம்* *மட்டுமே*
      *உனக்கு மிஞ்சும்...*
      *உன்னுடன் கடைசி*
      *வரை வருவதும்*
      *இதுவே...!!*

01) பெற்றோர்களை 
     நோகடிக்காதே...
     நாளை உன் பிள்ளையும்
     உனக்கு அதை தான்
     செய்யும்...!!

02) பணம் பணம் என்று
     அதன் பின்னால்
     செல்லாதே...
     வாழ்க்கை போய் 
     விடும்...
     வாழ்க்கையையும்
     ரசித்துக் கொண்டே 
     போ...!!

03) நேர்மையாக இருந்து
     என்ன சாதித்தோம்
     என்று நினைக்காதே...
     நேர்மையாக இருப்பதே
     ஒரு சாதனை தான்...!!

04) நேர்மையாக
இருப்பவர்களுக்கு
     சோதனை வருவது
     தெரிந்ததே, அதற்காக
     நேர்மையை கை விட்டு
     விடாதே...
     அந்த நேர்மையே
     உன்னை
     காப்பாற்றும். ..!!

05) வாழ்வில் சின்ன சின்ன
     விஷயத்திற்கெல்லாம்
     கோபப்படாதே...
     சந்தோஷம்
     குறைவதற்கும்,
     பிரிவினைக்கும் இதுவே
     முதல் காரணம்...!!

06) உன் அம்மாவிற்காக
     ஒரு போதும்
     மனைவியை விட்டு
     கொடுக்காதே...
     அவள் உனக்காக
     அப்பா அம்மாவையே
     விட்டு வந்தவள்...!!

07) உனக்கு உண்மையாக
     இருப்பவர்களிடம்...
     நீயும் உண்மையாய்
     இரு...!!

08) அடுத்தவர்களுக்கு தீங்கு
     செய்யும் போது
     இனிமையாகத்தான்
     இருக்கும்...
     அதுவே உனக்கு வரும்
     போது தான், அதன்
     வலியும் வேதனையும்
     புரியும்...!!

09) உன் மனைவி
    உண்மையாக இருக்க
    வேண்டும் என்று, நீ
    நினைப்பது போல்...
    நீயும் உண் மனைவிக்கு
    உண்மையாய் இரு,
    எந்த பெண்ணையும்
    ஏறெடுத்து பார்க்காதே,
    அதுவே உன்
    மனைவிக்கு கொடுக்கும்
    மிகப்பெரிய பரிசு...!!

10) ஒருவன் துரோகி
      என்று தெரிந்து
      விட்டால்...
      அவனை விட்டு
      விலகியே இரு...!!

11) எல்லோரிடமும்
      நட்பாய் இரு...
      நமக்கும் நாலு
      பேர் தேவை...!!

12) நீ கோவிலுக்கு
      சென்று தான்
       புண்ணியத்தை
      சேர்க்க வேண்டும்
      என்பதில்லை...
      யாருக்கும் தீங்கு
      செய்யாமல்
      இருந்தாலே...
      நீ கோவில்
      சென்றதற்கு சமம்...!!

13) நிறை குறை இரண்டும்
      கலந்தது தான்
      வாழ்க்கை...
      அதில் நிறையை மட்டும்
      நினை...
      நீ வாழ்க்கையை
      வென்று விடலாம்...!!

14) எவன் உனக்கு உதவி
      செய்கிறானோ,
      அவனுக்கு மட்டும்
      ஒரு நாளும் துரோகம்
      செய்யாதே...
      அந்த பாவத்தை நீ
      எங்கு போனாலும்
      கழுவ முடியாது...!!

15) அடுத்தவர்களைப்
      போல் வசதியாக
      வாழ முடியவில்லை
      என்று நினைக்காதே...
      நம்மை விட 
      வசதியற்றவர்கள்
      கோடி பேர்
      இருக்கிறார்கள்
      என்பதை மனதில்
      கொள்...!!

16) பிறப்பிற்கும்
      இறப்பிற்கும் இடையில்,
      நீ செய்யும் பாவம்
      புண்ணியம் மட்டுமே
      உனக்கு மிஞ்சும்...
      உன்னுடன் கடைசி
      வரை வருவதும்
      இதுவே...!!🌿🦜

*விதி*
👆
👇
*வி*னை விதைத்தவன் வினை அறுப்பான் !
*தி*னை விதைத்தவன் தினை அறுப்பான் !!
👍🙏🏻

Friday, August 12, 2022

ஒருவர் தினசரி செய்ய வேண்டிய பழக்கங்கள்.

ஒருவர் தினசரி செய்ய வேண்டிய பழக்கங்கள்.

1.அதி காலை சூரிய உதயத்திற்கு முன் கண் விழிப்பது.

2.காலையில் வெறும் வயிற்றில் இரண்டு அல்லது மூன்று டம்ளர் நீர் அருந்துதல்.

3.முப்பது நிமிடம் நடை பயிற்சி அல்லது உடற் பயிற்சி அல்லது யோகா செய்வது.

4. எந்த மதமாக இருப்பினும் காலையில் கடவுள் வழிபாடு.

5.பெற்றோரை வணங்குதல்.

6.கட்டாயம் காலை உணவு சாப்பிடுதல் அதற்கு நேரம் ஒதுக்குதல்.

7.அன்று செய்ய வேண்டிய வேலைகளை முறை படுத்துதல்.

8.படிக்கும் பருவமாக இருப்பின் முறையாக கல்வி பயிலுதல்.

9. வேலைக்கு செல்பவர் என்றால் முறையாக வேலைக்கு செல்லுதல்.

10. சக நண்பர்களிடம் நட்பு பாராட்டுதல்.

11.எப்பொழுதும் நல்ல சிந்தனை கொள்ளுதல்.

12. அடுத்தவர்களோடு அனுசரனையோடு இருத்தல்.

13.தினம் ஒரு நல்ல அல்லது ஒரு புதிய பாடம் கற்றல்.

14. நாட்டு நடப்புகளை தெரிந்து கொள்ளுதல்.

15.செய்தித்தாள் , தொலைகாட்சி செய்தி அல்லது வானொலி செய்தி ஆகியவற்றை அறிந்து கொள்ளுதல்.

16. அலை பேசி உபயோகத்தை முடிந்த அளவு குறைத்து கொள்ளுதல்.

17. ஃபேஸ் புக், வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம் போன்ற பயன் பாட்டுகளை குறைத்து கொள்ள்ளுதல்.

18.அலை பேசி விளையாட்டை குறைத்து கொண்டு நம் பாரம்பரியம் கொண்ட , உடல் வேர்வை மற்றும் மனம் குளிர விளையாட்டை விளையாடுதல்.

19.பெற்றோர் மற்றும் குடும்பத்தாரிடம் நேரம் செலவு செய்தல்.

20.தொலைகாட்சியில் ஒளி பரப்பும் குடும்ப தொடர்களை தவிர்த்து நல்ல இசை , மற்றும் குழந்தை, அறிவு நிகழ்ச்சிகளை பார்ப்பது.

21.அதிகம் தேனீர் காபி குடிப்பதை தவிர்க்கவும்.

22.புறம் பேசுதல் தவிர்க்கவும்.

23 அரசு விதிகளை முறையாக பின் பற்றவும்.

24.இயற்கை அழகு சிதைக்காமல் இயற்கையோடு வாழ கற்று கொள்ளுதல்.

25.மன அமைதிக்கு புறம்பான எந்த செயலையும் செய்யாது இருத்தல்.

எல்லாவற்றையும் கடைப்பிடிக்க முடியவில்லை என்றாலும்  குறைந்த பட்சம் ஒரு பத்து நல்ல பழக்கங்களை
கடைப்பிடிக்க வேண்டும்...
#வாழ்க_நலமுடன்_வளமுடன்

Monday, August 8, 2022

Land prices in satyavedu Tamil Nadu per ground Price

 1.one square feet  rupees 400 to 800

The distance between Babu Mahal and the Hotel Tamil Nadu in Krishnagiri

13 min (6.3 km)

 via Madras High Rd, NH 48 

and NH Service Road 

Safe timings to go out for purchase of essentials in Chennai Tamil Nadu

 CHENNAI:

 Now, people will be safe to buy essentials only between 6 am and 1 pm, 

List of the golden goat breeds of Tamil Nadu

 sheep breeds · 

1. Mecheri · 

2. Chennai red · 

3. Ramanadhapuram white 

 4. Keezhakaraisal ·

5. Vembur ·

 6. Neelagiri ·

 7. Trichy black ·

 8. Coimbatore.

9.KanniAdu

10,Kodi Adu 

11,Salem Black

Bus in Tamil Nadu which zone

The zones


Zone I Coimbatore, The Nilgiris, Erode, Tiruppur, Karur, Salem and Namakkal


Zone II Dharmapuri, Vellore, Tirupattur, Ranipet and Krishnagiri


Zone III Villupuram, Tiruvannamalai, Cuddalore and Kallakurichi


Zone IV Nagapattinam, Tiruvarur, Thanjavur, Tiruchi, Ariyalur, Perambalur and Pudukkottai


Zone V Dindigul, Madurai, Theni, Virudhunagar, Sivaganga and Ramanathapuram


Zone VI Thoothukudi, Tirunelveli, Kanyakumari and Tenkasi


Zone VII Kancheepuram, Tiruvallur and Chengalpattu


Zone VIII Areas under Greater Chennai Police limits

Best quality leaf springs available in Tamil Nadu market

Leaf Springs in Coimbatore and chennai 

Featured Post

உணவு முறைல முடிஞ்ச அளவு மாற்றம் பண்ணுங்க.

  நாம ஏன் சோணகிரியா இருக்கோம்? தொத்த பாடியா இருக்கோம்? பழங்கால மக்களுக்கு மட்டும் எப்படி திமில் கொண்ட தோளும், மதர்த்த நெஞ்சும் வந்தது? உணவு ...