*மகாலட்சுமி கூட நரசிம்மர் அருகில் செல்ல பயந்தாள்.*
*இரண்யனைக் கொல்வதற்காக நரசிம்மர் தூணில் இருந்து வெளிப்பட்டார்.*
*அதிபயங்கர உருவம்.*
*சிங்க முகம்...*
*மனித உடல்...*
*இதுவரை பார்க்காத வித்தியாசமான அமைப்பு.*
*இதைப் பார்த்தார்களோ இல்லையோ...*
*இரண்யனின் பணியாட்கள் தங்கள் ஆயுதங்களைப் போட்டுவிட்டு ஓடிவிட்டனர்.*
*தனிமையில் நின்ற இரண்யனை மகாவிஷ்ணு அப்படியே தூக்கி மடியில் வைத்தார்.*
*குடலைப் பிடுங்கி மாலையாகப் போட்டார்.*
*இதைக் கண்டு வானவர்களே நடுங்கினர்.*
*அவர்கள் நரசிம்மரைத் துதித்து சாந்தியாகும்படி வேண்டினர்.*
*பயனில்லை.*
*மகாலட்சுமி கூட அவர் அருகில் செல்ல பயந்தாள்.*
*"என் கணவரை இப்படி ஒரு கோலத்தில் நான் பார்த்ததே இல்லை.*
*முதலில் யாரையாவது அனுப்பி அவரை சாந்தமாக்குங்கள், பிறகு நான் அருகில் செல்கிறேன்,'' என்றாள்.*
*அவர் அருகில் செல்லும் தகுதி, பக்தனான பிரகலாதனுக்கு மட்டுமே இருந்தது.*
*தேவர்கள் அவனை நரசிம்மர் அருகில் அனுப்பினர்.*
*பிரகலாதன் நரசிம்மரைக் கண்டு கலங்கவில்லை.*
*அவனுக்காகத்தானே அவர் அங்கு வந்திருக்கிறார்!*
*தன்னருகே வந்த பிரகலாதனை நரசிம்மர் அள்ளி எடுத்தார்.*
*மடியில் வைத்து நாக்கால் நக்கினார்.*
*"பிரகலாதா! என்னை மன்னிப்பாயா?'' என்றார்.*
*அவனுக்கு தூக்கி வாரிபோட்டது.*
*"சுவாமி! தாங்கள் ஏன் இவ்வளவு*
*பெரிய வார்த்தையைச்*
*சொல்லுகிறீர்கள்?'' என்றான்.*
*"உன்னை நான்* *அதிகமாகவே*
*சோதித்து விட்டேன்*
*சிறுவனான நீ, என் மீது கொண்ட* *பக்தியில் உறுதியாய்* *நிற்பதற்காக*
*பல கஷ்டங்களை* *அனுபவித்து விட்டாய்.*
*உன்னைக் காப்பாற்ற மிகவும் தாமதமாக வந்திருக்கிறேன்.*
*அதற்காகத்தான் மன்னிப்பு,'' என்றார்.*
*இதைக்கேட்டு பிரகலாதனுக்கு கண்ணீர் வந்துவிட்டது.*
*"மகனே! என்னிடம் ஏதாவது வரம் கேள்,'' என்ற நரசிம்மரிடம்,*
*பிரகலாதன்,"ஐயனே! ஆசைகள் என் மனதில் தோன்றவே கூடாது,'' என்றான்.*
*பணம் வேண்டும், பொருள் வேண்டும் என அந்த மன்னாதி மன்னன் கேட்டிருக்கலாம்.*
*ஆனால், ஆசை வேண்டாம் என்றான் பிரகலாதன்.*
*குருகுலத்தில் அவன் கற்றது சம்பாதிக்க அல்ல!*
*பண்பாட்டை வளர்த்துக் கொள்வதற்கு!*
*பிரகலாதனின் இந்தப் பேச்சு நரசிம்மரின் மனதை உருக்கிவிட்டது.*
*பகவானைக் கண்டு பக்தன் தான் உருகுவான்.*
*இங்கோ கோபமாய் வந்து, வேகமாய் இரண்யனின் உயிரெடுத்த பகவான் பக்தனைக் கண்டு உருகி சாந்தமாகிப் போனான் நரசிம்மப் பெருமான்.*
*"இந்த சின்ன வயதில் எவ்வளவு நல்ல மனது!*
*ஆசை வேண்டாம் என்கிறானே!''*
*ஆனாலும், அவர் விடவில்லை.*
*விடாமல் அவனைக் கேட்டார்.*
*"இல்லையில்லை!*
*ஏதாவது நீ கேட்டுத்தான் ஆக வேண்டும்,''.*
*பகவானே இப்படி சொல்கிறார் என்றால்,*
*"தன் மனதில் ஏதோ ஆசை இருக்கத்தான் வேண்டும்" என்று முடிவெடுத்த பிரகலாதன்,*
*"இறைவா! என் தந்தை உங்களை நிந்தித்து விட்டார்.*
*அதற்காக அவரைத் தண்டித்து விடாதீர்கள். அவருக்கு வைகுண்டம் அளியுங்கள்,'' என்றான்.*
*நரசிம்மர் அவனிடம்,*
*"பிரகலாதா! உன் தந்தை மட்டுமல்ல!*
*உன்னைப் போல நல்ல பிள்ளைகளைப் பெற்ற தந்தையர் தவறே செய்தாலும், அவர்கள் பரமபதத்திற்கு வந்துவிடுவார்கள்.*
*அவர்களின் 21 தலைமுறையினரும் புனிதமடைவர்,'' என்றார்.*
*நல்ல பிள்ளைகள் அமைந்தால் பெற்றவர்களுக்கு மட்டுமில்லை.*
*அவர்களது வருங்கால சந்ததிக்கும் நல்லது.*