Showing posts with label காய்கறி மசாலா செய்ய. Show all posts
Showing posts with label காய்கறி மசாலா செய்ய. Show all posts

Tuesday, May 30, 2023

காய்கறி மசாலா செய்ய

தேவையான பொருட்கள் 

வெங்காயம் - 1 பச்சை மிளகாய் - 2 கேரட் - 1 பீன்ஸ் - 10 பட்டாணி - 1/2 கப் உருளைக்கிழங்கு - 4 பன்னீர் - 100 கிராம் காஷ்மீரி மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி கொத்தமல்லி தூள் - 1 தேக்கரண்டி சீரக தூள் - 1/2 தேக்கரண்டி கரம் மசாலா தூள் - 1/2 தேக்கரண்டி உப்பு - 1 தேக்கரண்டி ஆம்சூர் தூள் - 1/2 தேக்கரண்டி கொத்தமல்லி இலை நறுக்கியது எண்ணெய் - தேவையான அளவு சோள மாவு கலவை செய்ய சோள மாவு - 1 மேசைக்கரண்டி மைதா - 2 மேசைக்கரண்டி உப்பு - 1/4 தேக்கரண்டி மிளகு தூள் - 1/4 தேக்கரண்டி தண்ணீர் கார்ன் பிளேக்ஸ் செய்முறை: * வெங்காயம், ப.மிளகாய், கேரட், பீன்ஸ், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். * உருளைக்கிழங்கை வேக வைத்து துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். * பன்னீரை துருவிக்கொள்ளவும். * பட்டாணியை வேகவைத்து கொள்ளவும். * ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். * வெங்காயம் பாதி வதங்கியதும் காய்கறிகளைச் சேர்த்து 5 நிமிடம் வேகவைக்கவும். * காய்கறிகள் வெந்த பிறகு வேகவைத்த பச்சை பட்டாணி சேர்த்து வதக்கவும். * பின்பு காஷ்மீரி மிளகாய் தூள், கொத்தமல்லி தூள், சீரக தூள்,கரம் மசாலா தூள், உப்பு, ஆம்சூர் தூள் சேர்த்து நன்கு கலந்து விடவும். * பிறகு வேகவைத்த உருளைக்கிழங்கைச் சேர்த்து கலந்து விட்டு, மசித்து கொள்ளவும். * அடுத்து அடுப்பை அணைத்து விட்டு துருவிய பன்னீர், கொத்தமல்லி சேர்த்து நன்கு கலக்கவும். * ஒரு தட்டில் எண்ணெய் தடவி, மசாலாவை பரப்பி ஆறவிட்டு, 30 நிமிடம் பிரிட்ஜில் வைக்கவும். * கார்ன் பிளேக்ஸை பொடியாக்கி கொள்ளவும். * சோள மாவு கலவை செய்ய, சோள மாவு, மைதா, உப்பு, மிளகு தூள், தண்ணீர் சேர்த்து கட்டியின்றி தோசை மாவு பதத்திற்கு கரைத்து கொள்ளவும்.. * பிரிட்ஜில் வைத்த மசாலாவை எடுத்து உங்களுக்கு விருப்பமான வடிவத்தில் வெட்டவும். * பின்பு அதை சோள மாவு கலவையில் முக்கி கார்ன் பிளக்ஸில் பிரட்டி எடுத்து 5 நிமிடம் பிரீஸரில் வைக்கவும். * கடாயை அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்த நக்கெட்ஸை சூடான எண்ணெயில் போட்டு இருபுறமும் பொன்னிறமாகும் வரை பொரித்து எடுக்கவும். * இப்போது சூப்பரான வெஜிடபிள் நக்கெட்ஸ் ரெடி. * கெட்சப் அல்லது மயோனைஸ் உடன் சூடாக பரிமாறவும்.

Featured Post

உயிர் மேலே ஏறி கண்களை அடையும் அதன் பிறகு தான் இறைவனை காண முடியும்

ஆசைகள் இருந்தால் உடலுக்குள் இருக்கும் உயிரை கண்கள் வரை மேலே கொண்டு செல்ல முடியாது!! ஆசையை ஒழித்தால் தான்!!.. உயிர் மேலே ஏறி கண்களை அடையும் அ...