Friday, July 5, 2024

மனைவி கணவனிடம் அதிகம் எதிர்பார்ப்பது...

தாம்பத்திய சூத்திரம்....

மனைவி கணவனிடம் அதிகம் எதிர்பார்ப்பது...

அவங்க எதிர்பார்ப்பு எல்லாமே ரொம்ப சிம்பிளா தான் இருக்கும்…..

நாம தான் ஏதோ பெரிய பெரிய விஷயத்தை நெனச்சிகிட்டு இருப்போம்..

ஆனா அவங்க எதிர்பார்ப்பது…

முதல்ல நம்பிக்கை, அன்பு மற்றும் தாய்மைதான்.
எல்லாவற்றிலும் நம்பிக்கை கொடுங்கள். 

நம் துணையிடம் சொன்னால் இதற்கு தீர்வு கிடைக்கும் என்று நம்புங்கள்…

பாசம் கொடுப்பதில் பாரி வள்ளலாக இருக்க வேண்டும்…

அடுத்து அவங்க எதிர்பார்க்கிறது…

அரவணைப்பு..அவர்கள் வீட்டில் செல்லமாக வளர்ந்து இருப்பார்கள்.. 

நம்ம வீட்டில் அவர்கள் உள்ள கால சூழ்நிலை தெரிய சில காலம் ஆகும் அதுவரை அவர்களை குழந்தை போல அரவணைத்து 

இது அப்படி அது இப்படி என்று சொல்லி கொடுத்து அரவணைக்க வேண்டும்..

அடுத்து

விட்டு கொடுத்தல்…

யாருக்கு விட்டுகொடுக்கிறோம்..
நம்முடைய துணை தானே என்று எண்ணுதல் வேண்டும்.. 

விட்டு கொடுப்பவர்கள் யாரும் கெட்டு போனதாய் சரித்திரம் இல்லை…

அதுக்கு அப்பறம் டெய்லியும் அவங்க நம்ம கிட்ட எதிர்பார்ப்பது…

• காலையில நமக்கு காபி கொடுக்கும் போதே…நீ காபி குடிச்சிட்டியா செல்லம்னு கேக்கனும்…

• சாப்பிடும்போது சமையலை பாராட்ட வேண்டும்…

தயவு செய்து யாருடன் ஒப்பிட்டு பார்க்காதீர்கள்..(பத்திரகாளி போல கோவம் வரும்)

• எடுத்த பொருளை எடுத்த இடத்தில் வைக்கனும்

• அலுவலகம் போகும் போது போயிட்டு வரேன் குட்டிமா அல்லது சின்ன பிலையிங்/ மவுத் கிஸ் ஒன்று கொடுக்கனும்..

• அலுவலகத்ல இருக்கும்போது மதியம் போன் பண்ணி சாப்பிடியானு கேக்கனும்..

• அலுவலகம் விட்டு வீட்டுக்கு வரும்போதே உனக்கு ஏதாவது வேணுமானு கேக்கனும்…

எதுவும் வேணாம் சொன்னாங்க அப்படினா மல்லிப்பூ மட்டும் வாங்கி வரலாம்..

• வீட்டுக்கு வந்த உடனே அலைபேசியை தூக்கி எறிந்து விட்டு அவங்க கிட்ட கொஞ்ச நேரம் மனசு விட்டு பேசணும்..

• சமைக்கிற அப்போ உதவி செய்யனும். 
(பின்னால நின்னு இல்லை ஹிஹிஹி..)

• முக்கியமான ஒன்னு நம் உடைகளை கண்ட இடங்களில் போட கூடாது. அந்த அந்த இடத்தில் வைக்கனும்.

• எக்காரணத்தை கொண்டும் பொண்டாட்டியை அடிக்க கூடாது....

குழந்தைகள் முன் சண்டை போட/ வாக்குவாதம் செய்யக் கூடாது

• அவர்கள் உடல் நலத்தில் அக்கறை கொள்ளுங்கள்..

• அவர்கள் கனவுக்கு உதவுங்கள்

பிறந்த நாள் திருமண நாள் தீபாவளி பொங்கல் இந்த நாட்களுக்கு ஆடை எடுத்து அவர்களுக்கு பரிசளியுங்கள்.

முக்கியமாக அந்த 3 நாட்களில் ஓய்வு கொடுங்கள்...
உளுந்த கஞ்சி அல்லது உளுந்து வடை வாங்கி கொடுத்து தலையை கோதி விட்டு நெற்றியில் ஒரு முத்தம் கொடுங்கள்.

அப்புறம் பாருங்கள் உங்கள் வீட்டில் சந்தோஷமும் குதூகலமும் குசலம் விசாரிக்கும். . 

தலை/ மீசை நரைத்தாலும் வீட்டில் அன்யோன்யம் சிட்டு குருவியைபோல துள்ளி விளையாடும் ...✍🏼🌹

நாம் ஒரு படி இறங்கினால் பெண்கள் இரண்டு படி இறங்குவார்கள்.

இப்படி இருந்து பாருங்கள் வீட்டில்...

அப்பா அம்மாவின் அன்பும், கண்டிப்பும் இருந்தால் மகள், மகனின் வாழ்வு இனிமையாக அமையும்

தன் மகளை அளவுக்கு அதிகமாக 
நேசிக்கும் ஒரு தகப்பனின்.... 🗣 👼🏻 #உணர்வுப்_பூர்வமான_எச்சரிக்கை...!!
~~~~~~ 🐝 🌷 🌴🌷 🐝 ~~~~~~
தன் மகளை சில விசயங்களுக்காக அடிக்கடி கடிந்து கொள்வதால் அவள் அப்பாவிடம் கேட்டாள்... ஏம்பா என்னை இப்படி கண்டிப்புடன் நடத்துகிறீர்கள்...??? என்னை கொஞ்சம் சுதந்திரமாக விடலாமே என்று..

ஆனால் அதை அப்பா சற்று கஷ்டமாகவே உணர்ந்தார்... இதை எப்படி இவளுக்கு சொல்லிக்கொடுப்பது என யோசித்தார்..

ஒரு நாள் மகள் தன் தகப்பனிடம் வந்து கேட்டாள்.. அப்பா நான் பட்டம் விட்டு விளையாடபோகிறேன், நீங்களும் வாங்க.., என அழைத்துக்கொண்டு வீட்டின் மொட்டை மாடிக்கு சென்றாள்..

பட்டத்தை நூலில் கட்டி பறக்கவிட்டு மகிழ்ந்தாள்... அப்படி மகிழ்திருக்கும் வேளையில் அப்பா கேட்டார்... பட்டம் மேலே பறக்க, பறக்க அழகாய் இருக்கிறது.... ஆனால் அதன் விருப்பம்போல பறக்க முடியவில்லை.. அதற்கு தடையாய் இருப்பது என்னம்மா?? என கேட்டார்..🐝 

மகள் பட்டென பதில் சொன்னாள் இந்த நூல் தான் அப்பா அதை தன் இஷ்டத்திற்கு விடாமல் கட்டி வைத்திருக்கிறது என்று சொன்னாள்..

அப்படியா என கேட்டுவிட்டு அந்த நூலை அப்படியே அறுத்து விட்டார்... பட்டமும் தன் இஷ்டபடி பறந்தது. ஆனால் சற்று நேரத்திலேயே கிழிந்த காகிதமாய் கீழே விழுந்தது...

அப்பா சொன்னார்.. மகளே.. இந்த பட்டத்தை தன் இஷ்டபடி பறக்கவிடாமல் தடுக்கவில்லை... நேரான வழியில் இந்த பட்டம் பறந்து உயரங்களை கீழடக்க இந்த நூல் உதவியாய் இருக்கிறது...

இதேபோலத்தான் மகளே உன் அப்பாவாகிய நானும் ஒரு நூல்தான்... நீதான் அந்த பட்டம்... நீ என்னுடைய பேச்சை கேட்டு அதன்படி நடப்பாயெனில் என் பாதுகாவலுடன் உயர பறக்கலாம்... உன் இஷ்டப்படி வாழ நினைத்தால் அந்த பட்டம் கிழிந்து காகிதம் ஆனதுபோல உன் வாழ்க்கையும் சீரழிந்துவிடும்...ஷ...ரு🌴🌷 

இப்போது புரிந்திருப்பாய் ஏன் உன்னை கண்டித்தேன் என்பதனை... நூலாகிய என்னை அறுத்துவிடாதே என்று சொல்லும்போதே மகள் தன் அப்பாவை கட்டி அணைத்துக் கொண்டாள்...!!!

ஆம் அன்பான பிள்ளைகளே... உங்களுக்கு இனிமையாய் தோன்றுகின்ற வழிகள் ஏராளம் இருக்கலாம்.. ஆனால் அவற்றின் முடிவு பயங்கரமானது...

எனவே பெற்றோருக்கு கீழ் படிந்து வாழ கற்றுக் கொள்ளுங்கள் உங்கள் இனிய வாழ்வு உங்களை வரவேற்கும்...!!! 🌷 🌴🌷 

அப்பா அம்மாவின் அன்பும், கண்டிப்பும் இருந்தால் மகள், மகனின் வாழ்வு இனிமையாக அமையும்

காலம் கடந்தும் திருமணம் ஆகாமல் இருக்கும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரிக்க காரணங்கள் என்ன?

காலம் கடந்தும் திருமணம் ஆகாமல் இருக்கும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரிக்க காரணங்கள் என்ன?

 தற்போதைய நடைமுறையில் பெண்ணை விட மணமகன் அதிகமாக படித்திருக்க வேண்டும் என்பது முதல் அடியாக வைக்கப்படுகிறது. படித்து முடித்ததும் பெண் வேலைக்கு சென்று விட்டால் நல்லது தான். ஆனால் அந்த இடத்தில் ஒப்பீடு என்பது ஆரம்பம் ஆகிறது.

பெண் BE முடித்து இருந்தால் பையன் ME முடித்திருக்க வேண்டும்.

பெண் ஒரு லட்சம் சம்பளம் வாங்கினால் பையன் அதைவிட 20000 ரூபாயாவது அதிகமாக வாங்கவேண்டும்.

பெண் வேலை பார்க்கும் இடத்திற்கு பையன் மாறி வரவேண்டும்.

திருமணத்திற்கு பின்னர் பெண் வேலையை விடமாட்டாள் என்றெல்லாம் பெண்ணைப்பெற்றவர்களின் எதிர்பார்ப்புகளும்,நிபந்தனைகளும் கூடிக்கொண்டு செல்கின்றன.

நல்லவிதமாக குணமாக,ஒழுக்கமாக இருக்கும் பையன் கூட ஏதேனும் ஒரு காரணத்தால் இரண்டு அல்லது மூன்று கம்பெனிகள் மாறி சீனியாரிட்டி இழந்து 80,000 வாங்கிக் கொண்டிருக்கும் சமயத்தில் கூட அவனை நிராகரித்த பெண்களை எனக்கு தெரியும்.

பெண்களின் படிப்பு முடிந்து வேலைக்கு வந்ததுமே பெண்களின் பெற்றோருக்கும் சம்பாதிக்கும் போது சிறிது ஆணவம் வந்துவிடுகிறது என்பதில் யாராலும் மறக்க முடியாத உண்மை.

என் பொண்ணு சம்பாதிக்கிறா.

என் பொண்ணு வேலைக்கு போறா.

என் பொண்ணு இவ்வளவு வாங்குறா.

என் பொண்ணு இந்த கம்பெனியில் இன்ன போஸ்டிங்! என்றெல்லாம் முன்னைப்போல இல்லாமல் இப்போது பெண்ணை பெற்றவர்தான் மாப்பிள்ளையின் பெற்றோர்களிடம் கெத்து காண்பிக்கும் நிலை வந்துவிடுகிறது .இங்கேயே அமரலாமா? தொடரலாமா?என்ற மணமகனை பெற்றவர்களுக்கு எண்ணம் எழுவது தவிர்க்க இயலாததாகி விடுகிறது.

இதில் சராசரியாக பெண்ணின் திருமண வயது 22 இல் ஆரம்பித்து 25 /27 என்று உயர்ந்து இன்றைக்கு 29 இல் வந்து நிற்கின்றது. 29 வயது பெண்ணுக்கு நான்கு வயது வித்தியாசத்தில் மாப்பிள்ளை பார்த்தால் கூட மணமகனுக்கு 33 வயதாயிருக்கும். அந்த நேரம் வாலிபன்தோற்றத்திலிருந்து அடுத்த நிலைக்கு மாறும் சமயம் உடல், முகம், முடி போன்றவற்றில் மாற்றங்கள் ஏற்படும் காலம்.

இன்னொருபக்கம் பெண் வயதுகூடினால் கருவுறுதல் முதற்கொண்டு சிரமங்கள் அதிகரிக்கும்.இன்றைக்கெல்லாம் பல் மருத்துவமனைகளும் ,செயற்கைகருத்தரிப்பு மருத்துவமனைகளும் ,அதிகரிப்பது இங்கேதான் ஆரம்பம்.

மனது வலிக்கும் விஷயம் தான் இருந்தாலும் சொல்வது தவறில்லை.தெரிந்த பெண்மணி ஒருவருக்கு வரனுக்காக பேசிய சமயம்என்னுடைய மைத்துனி ஒருமுறை சொன்னார் வயது என்ன? என்று கேட்டார். 31 என்று பதிலுக்கு மாமா !எக்ஸ்பயர்ட் என்று பொட்டிலடித்தாற்போல கூறினார். அந்த வார்த்தை உண்மையாகவே இப்போதும் மனதில் சுடுகின்றது.

செல்லக்கிளியின் சொந்தங்களிலேயே திருமண வயது அதிகரித்தநிலையில் பெண்கள் இருக்கவே செய்கின்றார்கள். ஆனால் அதே சமயம் பத்தாம் வகுப்பு முடித்த பெண்களும், பன்னிரண்டாம் வகுப்பு முடித்த பெண்கள் மிகச் சரியாக 19லிருந்து 21 வயதுக்குள் திருமணம் ஆகி விடுகிறது. இன்னும் சொல்லப்போனால் 18 வயது நிரம்பாமல் கோவிலில் ரிஜிஸ்டர் செய்ய முடியாமல் நடந்த திருமணமும் எனக்கு தெரியும்.

எனவே இவற்றில் பெண்ணை பெற்றவர்கள் விட்டுக் கொடுக்க வேண்டுமா? பையனைப் பெற்றவர்கள் விட்டுக் கொடுக்க வேண்டுமா? என்பது அவர் அவர்தான் தீர்மானிக்க வேண்டும்.

ஆனால் இவர்கள் இருவருக்கும் செல்லக்கிகிளியின் தினசரி பிரார்த்தனை ஒன்று உண்டு. திருமணம் ஆகாமல் இருக்கும் வரன்களுக்கு திருமணம் விரைவில் நடக்க வேண்டும். அப்படியும் திருமணம் ஆகி குழந்தைப்பேறு தாமதிப்பவர்களுக்கு விரைவில் குழந்தை கிடைக்க வேண்டும்.

சட்டுபுட்டுன்னு பேசி காலகாலத்துல கல்யாணத்த முடிச்சு வைங்கப்பா!!!

காலத்தே பயிர் செய்!

கல்யாணமும் செய்து கொள்!

பருவத்தில் பயிர் செய்!

பிள்ளையும் பெற்றுக்கொள்!

நன்றி

வணக்கம்.

Featured Post

ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதைகள் இருக்கிறது

ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதைகள் இருக்கிறது என்பதையும், ஓர் பலாப்பழத்தைப் பிளக்காமல் அதன் உள்ளிருக்கும் சுளையின் எண்ணிக்கையைய...