Showing posts with label India tourism. Show all posts
Showing posts with label India tourism. Show all posts

Thursday, January 16, 2025

மூணார் ஆனைமுடி சிகரம்..

 


தென்னிந்தியாவிலேயே மிக உயரமான சிகரம் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள #மூணார் ஆனைமுடி சிகரம்..

ஆனைமுடி சிகரம் இரவிக்குளம் நேஷனல் பார்க் வரையாடு பூங்கா பகுதியில் தான் உள்ளது...
தமிழ்நாட்டின் மாநில விலங்கான #வரையாடு இந்தப் பகுதியில்தான் அதிகமாக காணப்படுகிறது...
ஆனை முடி சிகரத்தின் மொத்த உயரம் 2695 மீட்டர் உயரமும் அதாவது 8,842 அடி உயரமும் கொண்டது...
ஏறத்தாழ ஆணை முடி சிகரமும் தமிழ்நாட்டில் உதகை மாவட்டத்தில் உள்ள தொட்டபெட்டா சிகரமும் உயரத்தில் கொஞ்சம் தான் மாறுபடும்‌
தொட்டபெட்டா சிகரம் 2637 மீட்டர் உயரமும் அதாவது 8632 அடி உயரமும் கொண்டது..
இதில் சிறப்பு என்னவென்றால் உதகையில் உள்ள தொட்டபெட்டாவை எளிதில் சென்று அழகாக சுற்றிப் பார்க்கலாம்...
ஆனால் ஆணை முடி சிகரத்தை எளிதாக சென்று சுற்றிப் பார்க்க முடியாது.

பூம்பாறையும் ஒன்னா ஆயிடுச்சு

 

எப்பவும் மனசுக்கு நெருக்கமான இடங்கள்ல,

இதுவும் ஒன்னு...
பூம்பாறை💚
கொடைக்கானலோட மகுடம்னு சொல்லலாம்...
மலை முகடுகளை உரசி செல்லும் முகில் கூட்டங்கள்,
இந்த பூம்பாறையின் அழகான அடையாளம்...
பைன் மரங்கள், தைல மரங்கள் மற்றும் சொகுசு விடுதிகளின் ஆக்ரமிப்புக்கு தப்பிய,
சொச்ச சோலைக்காடுகள் இங்கு பேரழகு...
வருசத்துல அதிகமா மழை பெய்யற இடமும் இது தான்...
பல நீருற்றுகளுக்கு ஆதாரமும் இது தான்...
கோடை காலங்கள்ல கூட,
இங்க பனி மூட்டத்தை காணலாம்...
இது எல்லாத்தையும் விட,
குழந்தை வேலப்பர் கோயில்...
பூம்பாறைக்கு உரிய தனிச் சிறப்பு...
இன்னும் இப்படி பல சொல்லிட்டே போகலாம்...
இதனாலயே,
என் மனசுக்கு நெருக்கமான இடங்கள்ல,
பூம்பாறையும் ஒன்னா ஆயிடுச்சு🥰

Friday, January 10, 2025

தேன்சோலை ங்கற அழகான இடம்...

 




பழனி to கொடைக்கானல் போற வழில...

மேல்பள்ளம் தாண்டி...
வடகவுஞ்சி கிராமத்துக்குள்ள போனா...
அங்க...
பெரும்பள்ளம் போற வழில இருக்கு...
இந்த தேன்சோலை ங்கற அழகான இடம்...
Main roadல இருந்து தள்ளி 10 km இருக்கறதுனால...
இங்க சுத்தமாவே ஆள் நடமாட்டம் இருக்காது...
யூகலிப்டஸ் மரங்களும் பைன் மரங்களும் நிறைஞ்ச,
குட்டி காடு இது...
இங்க நிறைய தேன் கூடுகள் இருக்கு...
நாலு மரங்களுக்கு ஒரு மரம்னு தேனீக்கள் கூடு கட்டி இருக்கு...
அதனாலயே இந்த இடத்துக்கு தேன்சோலைனு பெயர் வந்துச்சாம்...
கழுகும், குட்டி குட்டி பறவைகளையும் இங்க பார்க்கலாம்...
கொஞ்சம் பட்டாம்பூச்சிகளையும் ரசிக்கலாம்...
Week end தவிர...
மத்த எல்லா நாட்களிலும்...
இந்த இடம் ஆள் நடமாட்டம் இல்லாம அமைதியா இருக்கும்...
இங்க இருக்கற குட்டி pine forestல...
கொஞ்ச நேரம் படுத்து தூங்க கூட செய்யலாம்...
அவ்ளோ அமைதியா அவ்ளோ சுத்தமா இருக்கும்...
காட்டோட பேசவும்...
காற்றோட பாடவும்...
மரங்களின் பாஷை அறியவும்...
அடிக்கடி இந்த இடத்துக்கு வந்திடுவேன்...
Machine மாதிரியான நம்ம வாழ்க்கைல...
கொஞ்ச break எடுக்க...
இந்த மாதிரி இடங்கள், அவசியம் தேவை...
Routine ah எல்லாரும் போற park, boatingனு போனா...
அங்க நாம இயல்பா இருக்க முடியாது...
குழந்தைதனத்தை expose பண்ண முடியாது...
மனிதர்கள் சத்தத்தை கடந்து, இயற்கையின் மொழியறிய முடியாது...
அதனால...
இப்படிபட்ட இடங்களை தேடுங்க...
அங்க மௌனமா இயற்கையோடு பேசுங்க🥰

Thursday, January 9, 2025

Kilavarai Village, Kodaikanal Tamilnadu

 #கிளாவரை #கொடைகானல் லின் உயரமான மலையில் அமைந்துள்ள ஓர் அழகிய சிறிய கிராமம்.

Kilavarai Village, Kodaikanal Tamilnadu


Wednesday, January 1, 2025

தமிழ்நாடு கேரளா எல்லையில் உள்ள ராமக்கல் மெட்டு...

 

தமிழ்நாடு கேரளா எல்லையில் உள்ள ராமக்கல் மெட்டு...

ஆசியாவிலேயே அதிகமாக காற்று வீசும் இடம் எந்த நேரமும் 35 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசிக்கொண்டே இருக்கும்..
கம்பம் மெட்டு வழியாகவும் இந்த இடத்திற்கு செல்லலாம் அல்லது குமுளிக்கு சென்று குமுளியில் இருந்து மூணாறு செல்லும் சாலை வழியாக நெடுமங்கண்டம் வழியாகவும் இந்த இடத்திற்கு வரலாம்...
உலகப் புகழ் பெற்ற டைட்டானிக் பட கதாநாயகன் லியானார்டோ டிகாப்ரியோ ஆசியாவில்லையே எனக்குப் பிடித்த சுற்றுலா தளங்களில் இந்த இடம் முதன்மையானது என்று குறிப்பிட்டுள்ளார்...
இந்த இடத்திற்கு மேலும் அழகு தருவது மலை உச்சியில் உள்ள குறவன் குறத்தி சிலை தான்..
வாருங்கள் ஒரு முறையாவது சென்று வருவோம்.


அழகிய சீத்தார்குண்டு அருவியும்

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களைப் பற்றி அறிந்து கொள்வோம்...

கண்ணுக்கும் நெஞ்சிக்கும் குளிர்ச்சி தரும் அழகிய மாவட்டம் பாலக்காடு மாவட்டம்...
கேரளா மாநிலத்தின் மிக அழகான அணை மிகப்பெரிய பூங்காவுடன் கூடிய அணை மலப்புழா அணை...
அணைக்கு அருகில் பாலக்காடு கோட்டை மிகவும் பிரம்மாண்டமான கோட்டை...
கேரளாவின் மிக அழகிய கிராமம் என்றால் அது கொல்லங்கோடு கிராமம் தான்...
கொல்லங்கோடு கிராமத்தின் அழகிய வயல்வெளிகள் முடிந்தவுடன் தொடங்கும் மலைப்பகுதிகள் அதுவே நெல்லியம்பதி மலைகள்...
நெல்லியாம்பதி மலையில்தான் அதிக காபி தோட்டங்கள் உள்ளது..
அழகிய சீத்தார்குண்டு அருவியும் உள்ளது

Tuesday, December 31, 2024

கொஞ்சம் தேனி பக்கம் வாங்க.

ஊட்டி, கொடைக்கானலைப் பார்த்து போர் அடிச்சிருச்சா.. கொஞ்சம் தேனி பக்கம் வாங்க.. கம்மி பட்ஜெட்டுல நிறைய விசிட் செய்யலாம்!

வைகை அணை: தேனியில் இருந்து 17 கி.மீ தொலைவில் இருக்கும் இங்கு சிறுவர் பூங்காவும் உண்டு
(1 / 6)
வைகை அணை தேனியில் இருந்து 17 கி.மீ தொலைவில் இருக்கும் இங்கு சிறுவர் பூங்காவும் உண்டு.
சுருளி அருவி: தேனியில் இருந்து 49 கி.மீ தொலைவில் இருக்கும் பாதுகாப்பான அருவி, சுருளி அருவி ஆகும். இங்கு அனைவரும் நின்று குளிக்கவும் உடை மாற்றவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேற்குத்தொடர்ச்சி மலையில் இருந்து மூலிகைகளுடன் கலந்து வரும் இந்த சுருளி அருவி நீர் உடலுக்கு புதுத்தெம்பைத் தரக்கூடியது.
(2 / 6)
சுருளி அருவி: தேனியில் இருந்து 49 கி.மீ தொலைவில் இருக்கும் பாதுகாப்பான அருவி, சுருளி அருவி ஆகும். இங்கு அனைவரும் நின்று குளிக்கவும் உடை மாற்றவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேற்குத்தொடர்ச்சி மலையில் இருந்து மூலிகைகளுடன் கலந்து வரும் இந்த சுருளி அருவி நீர் உடலுக்கு புதுத்தெம்பைத் தரக்கூடியது.
மேகமலை: தேனியில் இருந்து சின்னமனூர் வழியாக 51 கி.மீ பயணித்தால் குலுகுலு மேகமலையை அடையலாம். தங்குமிடம் வசதியுண்டு.
(3 / 6)
மேகமலை: தேனியில் இருந்து சின்னமனூர் வழியாக 51 கி.மீ பயணித்தால் குலுகுலு மேகமலையை அடையலாம். தங்குமிடம் வசதியுண்டு.
கொழுக்குமலை: தேனி மாவட்டம், போடிநாயக்கனூரில் இருந்து சூரியநெல்லி சென்று, அங்கிருந்து ஜீப் மூலமாக கொழுக்கு மலையை அடையலாம். கொழுக்கு மலை தேனி மாவட்டத்தில் இருந்தாலும் பாதை வசதி இல்லாததால், இன்றும் கேரள மாநில எல்லைக்குள் நுழைந்து தான், கொழுக்கு மலை செல்ல வேண்டும். தேனியில் இருந்து சூரியநெல்லிவழியாக 65 கி.மீ பயணித்து கொழுக்குமலையை அடையலாம். கேம்பிங் செய்யவும், சூரிய உதயத்திற்கு உற்ற இடமாக இந்த இடம் திகழ்கிறது. இங்கு ஆங்கிலேயர்கள் காலத்தில் உருவாக்கப்பட்ட தேயிலை பொடி தயாரிக்கும் தொழிற்சாலையும் உண்டு.
(4 / 6)
கொழுக்குமலை: தேனி மாவட்டம், போடிநாயக்கனூரில் இருந்து சூரியநெல்லி சென்று, அங்கிருந்து ஜீப் மூலமாக கொழுக்கு மலையை அடையலாம். கொழுக்கு மலை தேனி மாவட்டத்தில் இருந்தாலும் பாதை வசதி இல்லாததால், இன்றும் கேரள மாநில எல்லைக்குள் நுழைந்து தான், கொழுக்கு மலை செல்ல வேண்டும். தேனியில் இருந்து சூரியநெல்லிவழியாக 65 கி.மீ பயணித்து கொழுக்குமலையை அடையலாம். கேம்பிங் செய்யவும், சூரிய உதயத்திற்கு உற்ற இடமாக இந்த இடம் திகழ்கிறது. இங்கு ஆங்கிலேயர்கள் காலத்தில் உருவாக்கப்பட்ட தேயிலை பொடி தயாரிக்கும் தொழிற்சாலையும் உண்டு.
கும்பக்கரை: தேனி மாவட்டம் பெரியகுளம் அருகேயுள்ளது, கும்பக்கரை அருவி. கொடைக்கானல் மலைப்பகுதியில் உருவாகும் ஒன்றிணைந்து இந்த அருவியை உருவாக்குகிறது. இங்கு கெஜம் எனப்படும் சுழல்கள் இருப்பதால் சற்று பாதுகாப்பாக குளிக்கவேண்டிய அருவி.
(5 / 6)
கும்பக்கரை: தேனி மாவட்டம் பெரியகுளம் அருகேயுள்ளது, கும்பக்கரை அருவி. கொடைக்கானல் மலைப்பகுதியில் உருவாகும் ஒன்றிணைந்து இந்த அருவியை உருவாக்குகிறது. இங்கு கெஜம் எனப்படும் சுழல்கள் இருப்பதால் சற்று பாதுகாப்பாக குளிக்கவேண்டிய அருவி.
மேகமலை சின்னசுருளி: தேனியில் இருந்து கடமலைக்குண்டு வழியாக 46 கி.மீ பயணித்தால் சின்னசுருளியை அடைந்து ஜில்லென மூலிகை குளியல் போடலாம். இந்த அருவி சற்று வனத்தில் இருப்பதால் ஒரு குழுவாக சென்றால் பாதுகாப்பான முறையில் குளித்துவிட்டு வரலாம். அருவிக்குள் பிளாஸ்டிக் கேன்கள், கவர்கள் எடுத்துச் செல்ல தடையுண்டு.
(6 / 6)
மேகமலை சின்னசுருளி: தேனியில் இருந்து கடமலைக்குண்டு வழியாக 46 கி.மீ பயணித்தால் சின்னசுருளியை அடைந்து ஜில்லென மூலிகை குளியல் போடலாம். இந்த அருவி சற்று வனத்தில் இருப்பதால் ஒரு குழுவாக சென்றால் பாதுகாப்பான முறையில் குளித்துவிட்டு வரலாம். அருவிக்குள் பிளாஸ்டிக் கேன்கள், கவர்கள் எடுத்துச் செல்ல தடையுண்டு.
மற்ற கேலரிக்கள்

Featured Post

ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதைகள் இருக்கிறது

ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதைகள் இருக்கிறது என்பதையும், ஓர் பலாப்பழத்தைப் பிளக்காமல் அதன் உள்ளிருக்கும் சுளையின் எண்ணிக்கையைய...