Showing posts with label ஆம்பல் ஆம்பல். Show all posts
Showing posts with label ஆம்பல் ஆம்பல். Show all posts

Thursday, February 13, 2025

ஆம்பல் ஆம்பல்


இது வாய்க்காலில் முதல் பூ இந்த சீசன்ல. இனி பனி குறையும். சிவ ராத்திரி வந்துவிட்டால் குளிர் முற்றிலும் குறையும்.

இது என்ன பூ? ஆம்பல்? நீங்க சொல்லுங்க. மத்யானம் மலர்ந்தது மூடிக் கொள்ளும். இப்போ காலைல இந்த தரிசனம், உச்சிக்கு மொட்டு போல ஆகிறது. இப்படி எல்லாம் செய்யச் சொல்லி யார் சொன்னது? நான் ஒரு ஜீவன் இதை கண்டு களிக்கிறேன் என்பது அதற்கு ஓர்மை உண்டா? நான் இந்த மலரை கவனிப்பது போல என்னை அது கவனிக்குமா? அழுக்கு தண்ணி வாய்க்கால்ல எப்படி இவ்வளவு அழகான வண்ணத்தில்? எங்கிருந்து இந்த செடி வருது? காற்றோடு மிதந்து வெகு தூரத்தில் இருந்து வந்ததா? அல்லது வாய்க்கால் மண்ணுலயே இருக்குதா?  மழைக்காலத்துல மஞ்சள் மான்ஸ்டர் வரும். தூர் வார்ரோம்னு. இந்த வித்துகளையும் சேர்த்து மனசாட்சி இல்லாமல் கரைல அள்ளி கொட்டி விட்டு போகும். அந்த பிசாசு மெஷின்ல தப்பிச்ச விதைதான் இவ்வளவு மலர்ந்து நம்மை சந்தோஷப் படுத்துவது! சரி இவங்க பேரு என்ன? யாரு இந்த பூ?

Featured Post

ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதைகள் இருக்கிறது

ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதைகள் இருக்கிறது என்பதையும், ஓர் பலாப்பழத்தைப் பிளக்காமல் அதன் உள்ளிருக்கும் சுளையின் எண்ணிக்கையைய...