Saturday, February 1, 2025

தென் கைலாயம் வெள்ளியங்கிரி ஆண்டவர் 01.02.2025 காலை சிறப்பு பூஜை

 


தென் கைலாயம் வெள்ளியங்கிரி ஆண்டவர்

🙏
இன்று பிப்ரவரி 01.02.2025 காலை சிறப்பு பூஜை நடைபெற்று வெள்ளியங்கிரி மலை யாத்திரை செல்ல பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது..
அவன் அருளாலே அவன்தாள் வணங்கி 🙏
ஓம் சிவாய நமக 🙏
திருச்சிற்றம்பலம் 🙏

DR. HOWARD KELLY (1858-1943)

 




வீடு_வீடாக பொருட்களை விநியோகிக்கும் அந்த சிறுவனுக்கு ரொம்ப பசித்தது. எதையாவது வாங்கி சாப்பிடலாம் என்றால் கையில் பணமே இல்லை. அருகில் இருந்த வீட்டில் ஏதாவது சாப்பிட கேட்கலாம் என்று நினைத்தான்.
அந்த வீட்டின் கதவைத் தட்டினான். ஒரு பெண் கதவைத் திறந்தாள். ஏதாவது கேட்கலாம் என்று நினைத்தான். ஆனால் கூச்சம். கேட்க மனம்வரவில்லை.
“கொ… கொஞ்சம் தண்ணி கிடைக்குமா குடிக்க?” தயக்கத்துடன் கேட்கிறான்.
அவள் சிறுவனின் கண்களில் இருந்த பசியை கவனிக்கிறாள். உள்ளே சென்றவள், ஒரு கப் பாலை கொண்டு வந்து கொடுத்தாள்.
பாலைக் குடித்து பசியாறிய சிறுவன் கேட்டான்… “நான் எவ்வளவு கடன்பட்டிருக்கிறேன்?”
“கடனா… அப்படி ஒன்றும் இல்லை. அன்பான செயலுக்கு விலை எதுவும் இல்லை என்று என் அம்மா சொல்லியிருக்கிறார்.” அவள் சிரித்துக்கொண்டே சொன்னாள்.
“ரொம்ப நன்றி…” சிறுவன் புன்னகையுடன் கடந்து சென்றான்.
ஆண்டுகள் கழிந்தன. கஷ்டப்பட்டு முட்டி மோதி படிப்பை முடித்த அந்த சிறுவன் மருத்துவம் படித்து அந்த நகரிலேயே மிகப் பெரிய டாக்டர் ஆனான்.அந்த சமயத்தில் அந்த பெண்ணுக்கோ ஒரு கொடிய நோய் வந்தது.
அவர் பணியாற்றிய மருத்துவமனையிலேயே அவளும் அனுமதிக்கப்பட்டிருந்தாள். அந்த டாக்டரிடமே அவளுடைய பரிசோதனையும் வந்தது.
மெடிக்கல் ரிப்போர்ட்டில் அந்த பெண்ணின் ஊர் பெயரை பார்த்ததும் அவருக்குள் ஒரு சின்ன மின்னல். விரைவாக வார்டுக்கு போய் அந்த பெண்ணை பார்த்தார். அவள் தான். தனது பசியாற்றிய அந்த தாயுள்ளம் தான்.
அன்று முதல் தனது அத்துனை உழைப்பையும் கவனத்தையும் செலுத்தி அந்த பெண்ணுக்கு சிகிச்சை அளித்தார்.
நீண்ட சிகிச்சைக்கு பின்னர் அவள் குணமானாள்.
பல லட்சங்கள் செலவானது.
மருத்துவமனை அந்த பெண்ணுக்கு ஒரு நீண்ட பில்லை அனுப்பியது.
இதை எப்படி கட்டப்போகிறோமோ என்று பதட்டத்துடன் அதை பிரித்தவள் திகைத்துப் போனாள்.
அந்த பில்லின் கடைசியில் கையால் எழுதப்பட்டிருந்தது.
“இந்த பில்லை நீங்கள் செலுத்தவேண்டியதில்லை.
ஒரு கப் பாலில் உங்கள் கடன் முழுதும் தீர்க்கப்பட்டுவிட்டது. இது நன்றி சொல்லும் நேரம்!”
அவளுக்கு கண்கள் பனித்தன.
அந்த சிறுவன் வேறு யாருமல்ல… அமெரிக்காவின் மிகப் பிரபல மருத்துவராக விளங்கிய DR. HOWARD KELLY (1858-1943) தான்.
நான் என்னன்னெவோ சொல்ல நினைச்சேன் முடிவுல. ஆனா கீழே பாருங்க அத்தனையையும் நம்ம வள்ளுவர் ரெண்டே வரியில சொல்லிட்டார்.
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி. (குறள் 226)
பொருள் : வறியவர்களின் பசியைப் போக்குங்கள். அது தான் செல்வம்.!

“ 7வது சொர்க்கம் வால்பாறை என்பது உண்மை தான்”

 “ 7வது சொர்க்கம் வால்பாறை என்பது உண்மை தான்”

வால்பாறை தன்னுள் இயற்கை அழகை கொட்டி வைத்திருக்கிறது.
கொடைக்கானலுக்கு மேற்கே மூணார் மலைப்பகுதியும் மூணாறுக்கு மேற்கே வால்பாறை மலைப்பகுதியும் உள்ளது.
வால்பாறையை சுற்றி காட்டும் ஜீப் ஓட்டுநர்கள் வால்பாறையை ஐந்து பகுதிகளாக பிரித்து சுற்றிக் காட்டுகிறார்கள்.
முதல் பகுதி..
ஆழியார் அணையில் இருந்து தொடங்கும் டைகர் வேலி.
மங்கி பால்ஸ்.ஆகியவை.
இரண்டாவது பகுதி,.
பாலாஜி கோயில்.
வெள்ளமலை தனல்.
அக்காமலை வியூ பாயிண்ட் ஆகியவை.
மூன்றாவது பகுதி.
கூழாங்கல்லாறு.
நீரார் டேம்.
சின்னக் கல்லாறு அருவி ஆகியவை..
நான்காவது பகுதி.
சித்தி விநாயகர் கோயில்.
நல்ல முடி பூஞ்சோலை.
நும்பர் பாறை வியூ பாயிண்ட்.ஆகியவை..
ஐந்தாவது பகுதி..
சோலையார் டேம்.
அதிரப்பள்ளி பால்ஸ்.
இதில் ஒன்றாவது பகுதியும் ஐந்தாவது பகுதியும் வால்பாறையில் இருந்து 40 கிலோ மீட்டருக்கு மேல் தூரம் கொண்டவை...
இரண்டு நாள் தங்கினால் வால்பாறையை முழுதும் சுற்றி பார்க்கலாம்.

ஓரிதழ் தாமரை என்பது, மருத்துவ குணங்கள் நிரம்பிய தாவரம்


 

ஓரிதழ் தாமரை

ஓரிதழ் தாமரை என்பது, மருத்துவ குணங்கள் நிரம்பிய தாவரம். நிலத்தில் வளரும் சிறு செடி வகையை சேர்ந்தது. ஐயோனிடியம் சபருடிகோசம் என்ற அறிவியல் பெயர் கொண்ட இந்த செடி, ஆசிய நாடுகளில் அதிகப்படியாக காணப்படுகிறது.
இதன் இலை, தண்டு, பூ, வேர், காய் அனைத்துமே மருத்துவக் குணம் கொண்டவை. ஓரிதழ் தாமரையின் சமூலத்தை நிழலில் உலர்த்தி காயவைத்து பொடி செய்து பாலில் கலந்து காலை, மாலை என இருவேளையும் அருந்திவந்தால் உடல் வலுப்பெறும்.
ஓரிதழ் தாமரையின் இலையை அதிகாலையில் மென்று சாப்பிட்டு, பால் குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். இதேபோல், ஓரிதழ் தாமரையின் சமூலத்தையும் (வேர் முதல் பூ வரை) உண்டு வரலாம்.
நோயின் தாக்கத்திலிருந்து விடுபட்டவர்களுக்கு உடல் தேற ஒரிதழ் தாமரையின் சமூலம் நல்ல மருந்தாகும்.
மேகவெட்டை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஓரிதழ் தாமரை சமூலம், பச்சை கற்பூரம், கோரோசனை இவற்றை சம அளவு எடுத்து இடித்து பசுவின் நெய்யுடன் கலந்து மேகவெட்டை தாக்கிய பகுதிகளில் பூசி வந்தால் நோய் குணமாகும்; உடலில் உள்ள புண்களின் மீது தடவி வந்தால் புண்கள் விரைவில் ஆறும்.
காய்ச்சலால் அவதியுறுபவர்கள் ஓரிதழ் தாமரையின் சமூலத்தை கஷாயம் செய்து அருந்தி வந்தால் காய்ச்சல் நீங்கும். இரைப்பு நோய்க்கு இது அருமருந்தாகும். உடல் எடை குறைய ஓரிதழ் தாமரை கஷாயம் சிறந்த மருந்தாக உள்ளது. இளம் வயது ஆண்பிள்ளைகளுக்கு பருவ வயது வளர்ச்சியின் போது சில பாதிப்புகளால் இரவில் தூங்கும்போது விந்து வெளியேறும்.
தாது நஷ்டப்பட்டு உடல் தேறாமல் நோஞ்சான் போல் காணப்படுவர். இவர்கள் ஓரிதழ் தாமரையின் சமூலத்தை இடித்து தேன் அல்லது பாலில் கலந்து இரவு படுக்கைக்கு செல்லும்முன் சாப்பிட்டு வந்தால் இழந்த தாதுவை மீட்கலாம். இதன் சமூலத்தை (வேர் முதல் பூ வரை) அரைத்து சுண்டைக்காய் அளவு எடுத்து பசும்பாலில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் ஆண்களுக்கு ஏற்படக்கூடிய வெள்ளை ஒழுக்கு, அடி வயிறு வலி போன்றவை சரியாகும்
சமூலத்தை 21 நாட்கள் காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு 50 மில்லி ஆட்டுப்பால் குடித்து வருவதன்மூலம் இழந்தை ஆண்மை சக்தி திரும்பக் கிடைக்கும். ஓரிதழ் தாமரையை பயன்படுத்தி காயகல்பம் தயார் செய்து சாப்பிட்டு வந்தால் உடல் வலுப்பெறும்.
வெள்ளை நரை போக்க...
தலைமுடி வெள்ளையாக நரைத்து விடுதல் தற்போது பெரும் பிரச்னை. இதற்கு சிறந்த எளிய தீர்வு, மருதோன்றி இலையாகும். இந்த மருதோன்றியுடன்,
நிலவாரை என்பதை சேர்த்து இடித்து, நீர்விட்டு அரைத்துப்பூசி வந்தால் தலை முடி விரைவில் கறுப்பு நிறம் பெறும். மனித உடலில் தோன்றும் தோல்
வியாதிகளுல் படர்தாமரையும் ஒன்று. இதை, அருகம்புல்லும், மஞ்சளும் சேர்த்து அரைத்து, படர்தாமரையில் பூசி வர, படர்தாமரை மெல்லமெல்ல மறைந்துவிடும்.

முடவாட்டுகால் சூப் தினம் ஒரு கப் குடித்தால் மூட்டு

முடவாட்டுகால் சூப் தினம் ஒரு கப் குடித்தால் மூட்டு வலி பறந்தே போகும்..
முடவாட்டுக்கால் கிழங்கு. ஒரே இடத்தில் முடங்கியவர்களையும் இயக்க செய்யும் அருமருந்து என்று சொல்லப்படுகிறது. இது ஆட்டுக்கால் போன்று மேல் புறம் நார்களை கொண்டிருப்பதால் சைவ ஆட்டுக்கால் என்றும் அழைக்கப்படுகிறது. முடவன் ஆட்டுக்கால், ஆட்டுக்கால் கிழங்கு என்று அழைக்கப்படும் இதை சூப் வைத்து குடித்தால் மூட்டு வலிகளை போக்கும் நிவாரணியாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. முடவாட்டுக்கால் என்றால் என்ன, இதை எப்படி சூப் வைக்கலாம், இதன் நன்மைக்ள் என்னென்ன என்பதை இப்போது பார்க்கலாம்.
முடவாட்டுக்கால் கிழங்கு சூப் தயாரிக்கும் முறை
தேவை
முடவாட்டுக்கால் - 200 கிராம்
இஞ்சி பூண்டு விழுது -3 டீஸ்பூன்
மிளகு, சீரகம் - தலா 2 டீஸ்பூன்
கசகசா - 1 டீஸ்பூன் ( தேவையெனில்)
தேங்காய்த்துருவல் - 3 டீஸ்பூன் ( தேவையெனில்)
சின்ன வெங்காயம் - பொடியாக நறுக்கியது அரை கப்
தக்காளி - பொடியாக நறுக்கியது அரை கப்
இலவங்கப்பட்டை - சிறு துண்டு
பூண்டு - 3 பல்
உப்பு, மிளகுத்தூள், சீரகத்தூள், நல்லெண்ணெய் - தேவைக்கேற்ப
கொத்துமல்லித்தழை விரும்பினால் சேர்க்கலாம்.
செய்முறை:
முடவாட்டுக்கால் ஆட்டுக்கால் போன்று இருக்கும். இதை நன்றாக கழுவி மேல் தோலில் இருக்கும் ரோமங்களையும் அதன் புறணியையும் நீக்கி சுத்தம் செய்யவும். பிறகு சிறு துண்டுகளாக வெட்டிகொள்ளவும். முடவாட்டுக்கால் துண்டுகளாக சாப்பிட பிடிக்காதவர்கள் தோலை நீக்கி நன்றாக மைய அரைத்தும் பயன்படுத்தலாம்.
இஞ்சி, பூண்டு, கசகசா, தேங்காய்த்துருவல் அனைத்தையும் சேர்த்து மைய அரைக்கவும். சின்ன வெங்காயம், தக்காளி இரண்டையும் பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு இலவங்கப்பட்டை சேர்த்து வதக்க வேண்டும். பிறகு சாம்பார் வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கி கொள்ளவும். இவை வதங்கியதும் முடவாட்டுக்கால், அரைத்த மசாலா சேர்த்து ஒரு லிட்டர் நீர் விட்டு கொதிக்க விடவும். இது 20 நிமிடங்கள் வரை கொதிக்க வேண்டும். பிறகு இறக்கி பூண்டு தட்டி போட்டு இதை சூப் போல் டம்ளரில் விட்டு உப்பு, மிளகுத்தூள் தூவி குடிக்கவும்.
தொடர்ந்து 10 முதல் 15 நாட்கள் வரை தினமும் ஒரு டம்ளர் வீதம் குடித்து வந்தால் முடக்குவாதம், மூட்டுவலி ஓரளவு கட்டுப்படுவதை பார்க்கலாம்.
முடவாட்டுக்கால் கிழங்கு நன்மைகள் என்ன? எலும்புகளை அடர்த்தியாக வைத்திருக்குமா?
முடவாட்டுக்கால் எலும்பு அடர்த்தி நோயை தடுக்கும் திறன் கொண்டிருப்பதாக மருத்துவ ஆய்வுகள் தெரிவிப்பது குறிப்பிடத்தக்கது.
குழந்தைகளுக்கு வாதம் தாக்கினால் இந்த கிழங்கு போட்டு கொதிக்க வைத்த நீரில் குளிக்க வைத்தால் வாத நோய் குணமாகும். கழுத்து வலி, தோள்பட்டை வலி, முதுகு வலி போன்றவற்றை குணப்படுத்தும்.
இதன் பெயரே சொல்லும் நோய் தீர்க்கும் தன்மையை . முடவன் ஆட்டும் கால் என்பதாகும். முடக்குவாதம் வந்து முடங்கியவர்கள் இந்த சூப் குடித்துவந்தால் முடக்குவாதம் குணமாகும்.
முடவாட்டுக்கால் சூப் போன்று சட்னி, துவையலாகவும் செய்து சாப்பிடலாம்.
நாள்பட்ட மூட்டுவலி அது உடலில் எங்கு இருந்தாலும் அதன் வலி மேலும் தீவிரமாகமால் தடுக்க இந்த சூப் உதவும். இது உணவாக எடுத்துகொள்வதால் பக்க விளைவுகள் கிடையாது.
இன்று இளவயதிலேயே மூட்டு வலியை எதிர்கொள்பவர்கள் ஆரம்ப கட்டத்திலேயே கவனித்து முடவாட்டுக்கால் சூப் எடுத்துகொள்வதன் மூலம் மூட்டு வலி வராமலே தவிர்க்க முடியும்.
இந்த சூப் கடுமையான மூட்டுவலி, முழங்கால் வலி, குதிகால் வலி, கெண்டைக்கால் சதை இழுத்தல், உடலில் உண்டாகும் வலி,அசதி, தசைபிடிப்பு போன்ற அனைத்துமே சரியாகும்.
எல்லாம் சரி முடவாட்டுக்கால் எங்கு கிடைக்கும் என்கிறீர்களா? கொல்லி மலைபகுதிகளில் கிடைக்கும். சமீப காலமாக இது பல இடங்களில் கிடைக்கவும் செய்கிறது. முடவாட்டுக்கால் கிழங்கு ஆறுமாதங்கள் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம் என்றாலும் தற்போது எல்லா இடங்களிலும் கிடைக்கின்றன என்பதால் மொத்தமாக வாங்கி சேமிக்க முடியாதவர்கள் தேவைப்படும் போது வாங்கி பயன்படுத்தி கொள்ளலாம். முடவாட்டுக்கால் கிழங்கு பொடியும் தற்போது கிடைக்கிறது என்றாலும் அவை சரியான முறையில் தயாரிக்கப்பட்டவையா.. முடவாட்டுக்கால் கிழங்கு பொடியா என்பதை கவனித்து வாங்குவது முக்கியம்.

தேனி பக்கம் வாங்க.. கம்மி பட்ஜெட்டுல நிறைய விசிட் செய்யலாம்.!

வைகை அணை:

தேனியில் இருந்து 17 கி.மீ தொலைவில் இருக்கிறது. இங்கு சிறுவர் பூங்காவும் உண்டு
சுருளி அருவி:
தேனியில் இருந்து 49 கி.மீ தொலைவில் இருக்கும் பாதுகாப்பான அருவி, சுருளி அருவி ஆகும். இங்கு அனைவரும் நின்று குளிக்கவும் உடை மாற்றவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேற்குத்தொடர்ச்சி மலையில் இருந்து மூலிகைகளுடன் கலந்து வரும் இந்த சுருளி அருவி நீர் உடலுக்கு புதுத்தெம்பைத் தரக்கூடியது.
மேகமலை:
தேனியில் இருந்து சின்னமனூர் வழியாக 51 கி.மீ பயணித்தால் குலுகுலு மேகமலையை அடையலாம். தங்குமிடம் வசதியுண்டு.
கொழுக்குமலை:
தேனி மாவட்டம், போடிநாயக்கனூரில் இருந்து சூரியநெல்லி சென்று, அங்கிருந்து ஜீப் மூலமாக கொழுக்கு மலையை அடையலாம். கொழுக்கு மலை தேனி மாவட்டத்தில் இருந்தாலும் பாதை வசதி இல்லாததால், இன்றும் கேரள மாநில எல்லைக்குள் நுழைந்து தான், கொழுக்கு மலை செல்ல வேண்டும். தேனியில் இருந்து சூரியநெல்லி வழியாக 65 கி.மீ பயணித்து கொழுக்குமலையை அடையலாம். கேம்பிங் செய்யவும், சூரிய உதயத்திற்கு உற்ற இடமாக இந்த இடம் திகழ்கிறது. இங்கு ஆங்கிலேயர்கள் காலத்தில் உருவாக்கப்பட்ட தேயிலை பொடி தயாரிக்கும் தொழிற்சாலையும் உண்டு.

Featured Post

ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதைகள் இருக்கிறது

ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதைகள் இருக்கிறது என்பதையும், ஓர் பலாப்பழத்தைப் பிளக்காமல் அதன் உள்ளிருக்கும் சுளையின் எண்ணிக்கையைய...