5.2.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் 12.38 முதல் 6.2.2023 திங்கட் கிழமை அன்று மதியம் 3.07 வரை
அகத்தியரின் ஜென்ம நட்சத்திரமான ஆயில்ய நட்சத்திரம் வருகிறது.
உங்களுக்கு அருகில் உள்ள அகத்தீஸ்வரர் ஆலயம் சென்று ஒரு மணிநேரம்
"ஓம் ஹ்ரீம் அகத்தியமகரிஷி நமக" என்று அல்லது " ஓம் ஹ்ரீம் அகத்தீசாய நமஹ" என்று ஜெபிக்கவும்.
முருக கடவுள் அவதாரம் எடுக்கும் முன்பே நமது தாய் தமிழ் மொழி தோன்றி விட்டது.
முருக கடவுள் அவதாரம் எடுத்த பிறகு அவருக்கு தாய் தமிழ் மொழியினை அண்ணாமலை என்ற சிவ பெருமான் போதித்தார்!
அதன் பின்னர் அகத்தியர் சித்தருக்கு முருக கடவுள் தாய் தமிழ் மொழி சொல்லி கொடுத்தார் !!!
அகத்திய சித்தர் நாம் வாழ்ந்து வரும் பூமி முழுவதும் பயணம் செய்து எல்லா பகுதியிலும் வாழ்ந்து வந்த மக்கள் அனைவருக்கும் தமிழ் மொழியை சொல்லி கொடுத்தார்!!!
கடந்த 28,55,124 ஆண்டுகளாக உலகம் முழுவதும் பேசப் பட்டு வரும் ஒரே மொழி நமது தமிழ் மொழி !!!
இன்று பாரத நாட்டில் தமிழ்நாடு மாநிலத்திலும் இலங்கை நாட்டிலும் முழுமையாக இன்று வரையிலும் ஆன்மீக தமிழ் பேசப்பட்டு எழுதப்பட்டு வருகிறது.
இது தவிர உலக நாடுகள் பலவற்றிலும் வாழ்ந்து வரும். தமிழ் மக்களால் பேசப்படும் மொழியாக இருக்கிறது.
உலகம் முழுவதும் இருக்கும் 22,000 தீவுகளுக்கு தமிழ் மக்களால் மட்டுமே சென்று வர. முடியும். வேறு யாராலும் அங்கே போக முடியாது.இவை அனைத்தும் ஆன்மீக ரகசியம் சார்ந்த தீவுகள் ஆகும் .
இதனால் நம்முடைய ஆதிமூல முதல் குரு அகத்தியரின் அருள் நமக்கு கிடைக்கும்!!!
தகுந்த ஆன்மீக குரு வேண்டும் என்று தேடல் நம்மில் பலருக்கு இருக்கிறது.
அவர்களுக்கு தகுந்த மற்றும் உண்மையான குரு இந்த பிறவியிலேயே கிடைக்க வேண்டும் என்று விரும்புவோர் தினமும் ஒரு மணி நேரம் வரை " ஓம் ஹ்ரீம் அகத்திய மகரிஷி நமக " என்ற மந்திரம் ஜெபித்து வர வேண்டும்.
தினமும் ஒரு மணி நேரம் வீதம் 3 முதல் 7 ஆண்டுகள் வரை இவ்வாறு ஜெபம் செய்து வந்தால் குரு கிடைத்து விடுவார்!!!