Saturday, January 4, 2025

அசோகர் பயன்படுத்திய செடிவளர்ப்பு

செடி நட்டால் மட்டும் போதுமா தண்ணீர் ஊற்றி வளர்க்க வேண்டுமல்லவா.. அசோகர் பயன்படுத்திய செடிவளர்ப்பு முறை ரகசியம் பற்றி சிறு விளக்கம்..
நாம் பயன்படுத்தாத பானை ஒன்றை எடுத்து அதன் அடியில் சிறுதுளையிட்டு..நட்ட மரச்செடியின் அருகில் குழிதோண்டி வைக்க வேண்டும்.
பிறகு பானையில் நீரை ஊற்றிவிட்டு ஒரு துணியால் மூடிவிட்டால்...நீர் எளிதாக நீராவி ஆகாது.நீரும் துளையின் வழியாக சொட்டு சொட்டாக வேருக்கு அருகிலேயே இறங்கும்.
இதனால் நாம் வாரம் ஒருமுறை நீர் ஊற்றினாலே போதும்.நீரும் மிச்சம்.நேரமும் மிச்சம்.
செடியும் ஆரோக்கியமாக கிளைத்து வளரும்.தண்ணீர் அதிகமாக இல்லாத (அல்லது) நீர் ஊற்ற நேரம் கிடைக்காத இளைஞர்கள் இம்முறையை கடைப்பிடித்தால் நிச்சயமாக நம்மால் நிறைய செடிகளை நட்டு எளிதாக பராமரிக்கவும் முடியும்.
நீரையும் ஆவியாகாமல் சேமிக்கலாம்....
படித்துவிட்டு நிச்சயமாக ஒரு மரச்செடியை நடுவீர்கள் என்று நம்புகின்றேன்.
வாழ்த்துக்கள்...
நன்றி
உயிர்நாடி விவசாயம்

பணம் யாருக்கும் இழப்பில்லாம

ஒரு லாட்ஜ் ஓனர் இருந்தாரு. அவரு லாட்ஜுக்கு ஒருத்தர் வந்தாரு. ரூம் புக் பண்றதுக்கு முன்னாடி ரூம் எப்பிடியிருக்கு என பார்க்கணும்னு சொன்னாரு. உடனே லாட்ஜ் ஓனர் அப்பிடின்னா 500 ரூவா டெபாஸிட் குடுக்கணும்னு சொன்னாரு. உடனே அந்த ஆள் ஒரு புது 500 ரூவாவை எடுத்து டேபிள் மேல வச்சிட்டு படியேறி ரூம் பார்க்க போனாரு.*
*லாட்ஜ் ஓனர் அந்த 500 ரூவாவை எடுத்து லாட்ஜ்ல ரூம் தொடைக்கிற அம்மாகிட்ட குடுத்து போன மாசம் சம்பளத்துல பாக்கி வச்ச 500 ரூவா இந்தான்னாரு. அந்தம்மா அந்த 500 ரூவாவ எடுத்துக்கிட்டுப் போய் பக்கத்துல இருந்த டீக்கடையில குடுத்து போன மாச டீ பாக்கி இந்தா வச்சிக்கோன்னு குடுத்தாங்க.*
*அந்த டீக்கடைக்காரரு அந்த 500 ரூவாவ எடுத்துக்கிட்டுப் போய் பால் பண்ணையில முதலாளிக்கிட்ட குடுத்து போன மாச பால் பாக்கி இந்தாங்கன்னு சொன்னாரு. பால் பண்ணை முதலாளி அந்தப் பணத்தை எடுத்துக்கிட்டுப் போய் கால்நடை மருத்துவர்கிட்ட கொடுத்து, இந்தாங்க சார், கடந்தமாதம் மாடுகளுக்கு வைத்தியம் பார்த்தபோது, சில்லறை இல்லைன்னு 2000 ரூவா நோட்டு வாங்கிக்க மாட்டேன்னு சொன்னீங்கல்ல, இந்தாங்கன்னு கொடுத்தார். அந்த நோட்டை எடுத்துக்கிட்டு லாட்ஜுக்கு வந்த மருத்துவர், கடந்தமாதம் தங்கி இருந்த ரூம் வாடகை பாக்கி இந்தாங்கன்னு 500 ரூவாவை குடுத்தார்.*
*லாட்ஜ் ஓனர் அந்த 500 ரூவா நோட்டை மறுபடி டேபிள் மேல வச்சாரு. ரூம் பார்க்க வந்தவரு, எனக்கு எந்த ரூமும் பிடிக்கலை. நான் போறேன்னு 500 ரூவாவ எடுத்துக்கிட்டு கிளம்பிட்டாரு.*
*இப்ப 500 ரூவா வந்த இடத்துக்கே போயிடுச்சி. ஆனா போற வழியில சம்பள பாக்கி, டீக்கடை பாக்கி, பால் பாக்கி,பால் பண்னை பாக்கி,மருத்துவர் பாக்கி, லாட்ஜ் வாடகை பாக்கி என எல்லாத்தையும் சரி பண்ணிட்டுப் போயிடுச்சி. யாருக்கும் இழப்பில்லாம.*
படித்தேன் ரசித்தேன் .👍

கோபிசெட்டிபாளையம் முதல் திருச்செந்தூர் கோவில் வரை செல்கிற TNSTC பேருந்தை


அன்பான பொதுமக்களே கோபிசெட்டிபாளையம் முதல் திருச்செந்தூர் கோவில் வரை செல்கிற TNSTC பேருந்தை பற்றி பார்ப்போம்.
இந்த பேருந்து கோபிசெட்டிபாளையம்
 டிப்போ சார்பாக இயக்கப்படுகிறது.
இந்த பேருந்து தினசரி இரண்டு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த பேருந்துக்கு மக்கள் கூட்டம் அதிகமாகவே இருக்கிறது. இந்த பேருந்து காலை சரியாக 8 மணிக்கு கோபிசெட்டிபாளையம்
 பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும்.
இது குன்னத்தூர் , பெருமாநல்லூர் , திருப்பூர் புதிய பேருந்து நிலையம் , திண்டுக்கல் புறவழி சாலை வழியாக மதுரை மாட்டுத்தாவணி , தூத்துக்குடி வழியாக திருச்செந்தூர் கோவில் வாசலுக்கு செல்கிறது. இதே மாதிரி மாலையில் சரியாக 8 மணிக்கு கோபிசெட்டிபாளையம்
பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும்.
இது குன்னத்தூர் , பெருமாநல்லூர் , திருப்பூர் புதிய பேருந்து நிலையம் , திண்டுக்கல் புறவழி சாலை வழியாக மதுரை மாட்டுத்தாவணி தூத்துக்குடி வழியாக திருச்செந்தூர் கோவில் வாசலுக்கு செல்கிறது. மறுமார்க்கமாக திருச்செந்தூர் கோவில் வாசல்பேருந்து நிலையத்திலிருந்து காலை சரியாக 7 மணிக்கு கோபிசெட்டிபாளையம்க்கு புறப்படும். இதே மாதிரி மாலையில் 7 மணிக்கும் ஒரு பேருந்து என தினசரி இரண்டு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த பேருந்துகளுக்கு முன் பதிவு வசதி உள்ளது. ஆதலால் TNSTC app download பண்ணி முன் பதிவு செய்தும் பயணிக்கலாம். இந்த பேருந்து திருப்பூர் தடத்தில் செல்வதால் , மக்கள் ஆதரவு அதிகமாகக் இருக்கிறது. இந்த பேருந்து புறவழி சாலை வழியாக செல்ல கூடியதாகும்.
 இந்த பேருந்தின் பயண நேரம் 9:30hrs ஆகும் .கோபிசெட்டிபாளையம்
 முதல் திருச்செந்தூர் வரைபயண கட்டணம் ஒரு நபருக்கு₹328. பொதுமக்களே நம் பேருந்து வேகம் கட்டுப்பாட்டுடன் போனாலும் , பாதுகாப்போடு இயங்குகிறது. என்னைக்குமே நம் அரசு பேருந்துகள் தான் பாதுகாப்பு . அதனால் அரசு பேருந்துகளில் பயணம் மேற்கொள்ளுங்கள்.

பனை மரத்தில் மொத்தம் 34

பனை மரத்தில் மொத்தம் 34 வகை இருக்கின்றன. 
அவைகள்...

1. 🌴ஆண் பனை
2. 🌴பெண் பனை
3. 🌴கூந்தப்பனை
4. 🌴தாளிப்பனை
5. 🌴குமுதிப்பனை
6.🌴சாற்றுப்பனை
7. 🌴ஈச்சம்பனை
8. 🌴ஈழப்பனை
9. 🌴சீமைப்பனை
10. 🌴ஆதம்பனை
11. 🌴திப்பிலிப்பனை
12. 🌴உடலற்பனை
13. 🌴கிச்சிலிப்பனை
14. 🌴குடைப்பனை
15. 🌴இளம்பனை
16. 🌴கூறைப்பனை
17. 🌴இடுக்குப்பனை
18. 🌴தாதம்பனை
19. 🌴காந்தம்பனை
20. 🌴பாக்குப்பனை
21. 🌴ஈரம்பனை
22. 🌴சீனப்பனை
23. 🌴குண்டுப்பனை
24. 🌴அலாம்பனை
25. 🌴கொண்டைப்பனை
26. 🌴ஏரிலைப்பனை
27. 🌴ஏசறுப்பனை
28. 🌴காட்டுப்பனை
29. 🌴கதலிப்பனை
30. 🌴வலியப்பனை
31. 🌴வாதப்பனை
32. 🌴அலகுப்பனை
33. 🌴நிலப்பனை
34. 🌴சனம்பனை

பனையிலிருந்து பெறப்படும் பயன்கள் :
பனை உணவுப் பொருட்கள் :

🌴நுங்கு
🌴பனம் பழம்
🌴பூரான்
🌴பனாட்டு
🌴பாணிப்பனாட்டு
🌴பனங்காய்
🌴பனங்கள்ளு
🌴பனஞ்சாராயம்
🌴வினாகிரி
🌴பதநீர்
🌴பனங்கருப்பட்டி
🌴பனைவெல்லம்
🌴சில்லுக் கருப்பட்டி
🌴பனங்கற்கண்டு
🌴பனஞ்சீனி
🌴பனங்கிழங்கு
🌴ஒடியல்
🌴ஒடியல் புட்டு
🌴ஒடியல் கூழ்
🌴 புழுக்கொடியல்
🌴முதிர்ந்த ஓலை
🌴 பனை குருத்து

உணவுப்பொருள் அல்லாதவை :

🌴பனை ஓலைச் சுவடிகள்
🌴பனை ஓலைத் தொப்பி
🌴குருத்தோலை

வீட்டுப் பயன்பாட்டுப் பொருட்கள் :

🌴பனையோலை
🌴நீற்றுப் பெட்டி
🌴கடகம்
🌴பனைப்பாய்
🌴கூரை வேய்தல்
🌴வேலியடைத்தல்
🌴பனைப்பாய்
🌴பாயின் பின்னல்
🌴பனையோலைப் பெட்டி

விவசாயப் பயன்பாட்டுப் பொருட்கள் :

🌴கிணற்றுப் பட்டை
🌴எரு
🌴துலா
அலங்காரப் பொருட்கள் :
🌴பனம் மட்டை
🌴வேலியடைத்தல்
🌴நார்ப் பொருட்கள்
🌴தட்டிகள் பின்னல்

வேறு பயன்பாடுகள் :

🌴கங்குமட்டை
🌴தும்புப் பொருட்கள்
🌴விறகு
🌴மரம்

கட்டிடப்பொருட்கள் :

🌴தளபாடங்கள்
🌴பனம் விதை
🌴எரிபொருள்

கிடைக்கும் பனை உணவுப் பொருட்கள் :

🌴 பனங்கருப்பட்டி
🌴பனைவெல்லம்
🌴சில்லுகருப்பட்டி
🌴சுக்கு கருப்பட்டி
🌴பனங்கற்கண்டு
🌴பனஞ்சக்கரை
🌴 பனங்கிழங்கு மாவு
🌴 பனங்கிழங்கு சத்துமாவு
🌴பதநீர்
🌴பனம்பழம் ஜுஸ்
🌴பனை விதை
🌴பனங்கன்று
🌴பனங்கிழங்கு
🌴பனைப்பாய்
🌴புழுக்கொடியல்
🌴ஓடியல்

🌴நாம் ஒவ்வொருவரும் இரு பனை விதைகளை நடவு செய்தால் வரும் காலம் எப்படி இருக்கும் என்று யூகித்துப் பாருங்கள் √

Featured Post

ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதைகள் இருக்கிறது

ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதைகள் இருக்கிறது என்பதையும், ஓர் பலாப்பழத்தைப் பிளக்காமல் அதன் உள்ளிருக்கும் சுளையின் எண்ணிக்கையைய...