செடி நட்டால் மட்டும் போதுமா தண்ணீர் ஊற்றி வளர்க்க வேண்டுமல்லவா.. அசோகர் பயன்படுத்திய செடிவளர்ப்பு முறை ரகசியம் பற்றி சிறு விளக்கம்..
நாம் பயன்படுத்தாத பானை ஒன்றை எடுத்து அதன் அடியில் சிறுதுளையிட்டு..நட்ட மரச்செடியின் அருகில் குழிதோண்டி வைக்க வேண்டும்.
பிறகு பானையில் நீரை ஊற்றிவிட்டு ஒரு துணியால் மூடிவிட்டால்...நீர் எளிதாக நீராவி ஆகாது.நீரும் துளையின் வழியாக சொட்டு சொட்டாக வேருக்கு அருகிலேயே இறங்கும்.
இதனால் நாம் வாரம் ஒருமுறை நீர் ஊற்றினாலே போதும்.நீரும் மிச்சம்.நேரமும் மிச்சம்.
செடியும் ஆரோக்கியமாக கிளைத்து வளரும்.தண்ணீர் அதிகமாக இல்லாத (அல்லது) நீர் ஊற்ற நேரம் கிடைக்காத இளைஞர்கள் இம்முறையை கடைப்பிடித்தால் நிச்சயமாக நம்மால் நிறைய செடிகளை நட்டு எளிதாக பராமரிக்கவும் முடியும்.
நீரையும் ஆவியாகாமல் சேமிக்கலாம்....
படித்துவிட்டு நிச்சயமாக ஒரு மரச்செடியை நடுவீர்கள் என்று நம்புகின்றேன்.
வாழ்த்துக்கள்...
நன்றி
உயிர்நாடி விவசாயம்