நாமக்கல், ராசிபுரத்தில் இருந்து திருச்செந்தூர் செல்ல இணைப்பு ரயில் சேவையை பயன்படுத்தி எளிதாக ரயிலில் சென்று வரலாம்.

நாமக்கல் - திருநெல்வேலி - திருச்செந்தூர் இணைப்பு ரயில் விவரம்:-

நாமக்கலில் தினசரி இரவு 11:00 மணிக்கு 17235 நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறினால் மறுநாள் அதிகாலை 5:25 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும். அங்கு இறங்கி காலை 7:15 மணிக்கு புறப்படும் 56727 திருச்செந்தூர் பயணிகள் ரயிலில் ஏறி ஶ்ரீவைகுண்டம், திருச்செந்தூர் போன்ற பகுதிகளுக்கு எளிதாக செல்லலாம்.

இதேபோல கோவிலுக்கு சென்று திரும்புவோர் தினசரி மாலை 4:25 மணிக்கு திருச்செந்தூரில் புறப்படும் 56730 திருநெல்வேலி பயணிகள் ரயிலில் ஏறி மாலை 5:50 மணியளவில் திருநெல்வேலி ரயில்நிலையம் வந்து இறங்கி, அருகில் இருக்கும் நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோவிலுக்கு பேருந்துகள் மூலம் சென்று மீண்டும் திருநெல்வேலி ரயில்நிலையம் வந்து இரவு 9:15 மணியளவில் வரும் 17236 SMVT பெங்களூரூ எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறி அதிகாலை 2:40 மணிக்கு நாமக்கல் வந்தடையலாம்.

நாமக்கல் - திருநெல்வேலி வரை sleeper வகுப்பில் செல்ல ரூ. 225/- ம், திருநெல்வேலி - திருச்செந்தூர் வரை முன்பதிவில்லா வகுப்பில் செல்ல ரூ. 20/- ம் பயண கட்டணமாகும். இந்த குறைந்த கட்டணத்தில் வசதியாக குறைந்த நேரத்தில் பயணம் செய்ய முடியும். மேலும் நாமக்கலில் இருந்து இது போல அதிகம் பயணம் செய்வதால் புதிய ரயில் சேவைகள் கிடைக்கும் வாய்ப்பும் உள்ளது.

இந்த ரயிலின் முழு கால அட்டவணை இணைக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலில் வார நாட்களில் செல்ல எளிதாக டிக்கெட் கிடைக்கும் என்பதால் நாமக்கல் பகுதி மக்கள் முன்கூட்டியே திட்டமிட்டு முன்பதிவு செய்து பயனடைய கேட்டுக்கொள்கிறோம்

.