மருக்கள் மறைந்துவிடும்.
கழுத்தின் கீழ்ப்பகுதியில் இரண்டு மிளகு சைஸ் மருக்கள் பாடாய் படுத்தின. டாக்டரிடம் போனேன்.. வேர் ஆழமா இருக்கு, அறுத்துடலாம்.. ஒரு லோக்கல் அனஸ்திஷியா கொடுத்து எடுத்துடலாம்னார்.
இல்ல டாக்டர், வீட்ல சொல்லிட்டு வரலை. நாளைக்கு காலைல வந்துரேன். மறுநாள் போனேன். வெயிட் பண்ண சொன்னார்கள். அருகில் இருந்த தமிழ் இந்துவை புரட்டினேன். மூடி வைத்து விட்டு டூட்டி நர்சிடம் ஒரு அவசர அழைப்பு. அப்புறம் வரேன். டாக்டர் கிட்ட சொல்லிடுங்க என்றதற்கு பிழைச்சுப்போங்க என்பது போல பார்த்தார்
நேராக ஒரு நாட்டு மருந்துக்கடை.100 கிராம் திப்பிலி அரிசி வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வந்து நைசாக அரைத்து, தேனில் குழைத்து மருவை சுற்றி திக் லேயராக தடவி 20 நிமிடம் கழித்து கழுவினேன். இப்படி நான்கே நாட்கள். மருக்கள் மறைந்துவிடும்.