Sunday, February 23, 2025

சென்னை எழும்பூர் இருந்து திருநெல்வேலி நெல்லை விரைவு ரயில்

 பயணிகள் கனிவான கவனத்திற்கு வண்டி எண் 12631 சென்னை எழும்பூர் இருந்து திருநெல்வேலி நெல்லை அதிவேக விரைவு ரயில்

சென்னை எழும்பூர் : 8:40pm
தாம்பரம்:9:05pm
செங்கல்பட்டு:9:38pm
மேல்மருவத்தூர்:10:03pm
திண்டிவனம்:10:28pm
விழுப்புரம்:11:18pm
விருத்தாசலம்:12:00Am
திருச்சிராப்பள்ளி:1:50Am
திண்டுக்கல்:2:57Am
சோழவந்தான்:3:29Am
மதுரை:4:00Am
விருதுநகர்:4:38Am
சாத்தூர்:4:58Am
கோவில்பட்டி:5:16Am
திருநெல்வேலி:6:40Am தேவைப்படுவோர் பயன்படுத்திக் கொள்ளுங்கள் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

நெல் சாகுபடி தொடங்கப்பட்ட வரலாறு

 நெல் சாகுபடி தொடங்கப்பட்ட வரலாறு !!!

உலகில் முதன் முதலாக ஆசிய நெல் (Oryza sativa), ஆப்பிரிக்க நெல் (Oryza glaberimma) என இருவகை நெற்பயிர்கள் பயிரிடப்பட்டன.
ஆசியாவில் நெல் சாகுபடி கி.மு 4500க்கு முன்பாகவே பல நாடுகளில் ஒரே சமயத்தில் துவங்கியதாகக் கருதப்படுகிறது. மேற்கூறிய இருவகை நெல் இனங்களின் பொதுவான முன்னோடி காட்டு நெல் இனம் Oryza rufipogan ஆகும். ஆசிய நெல் சிற்றினம் இமயமலை அடிவாரத்தில் தோன்றியதாகக் கருதப்படுகிறது. இந்தியப்பகுதியில் Oryza sativa var. indica வும், சீனப்பகுதியில் Oryza sativa var. japonica வும் தோன்றின.
இந்தியாவில் அவ்வையார் மற்றும் பல பழம்பெரும் புலவர்கள் பாடிய நெல் மற்றும் அரிசி பற்றிய பாடல்கள் பல உள்ளன. நெல் விளையும் பகுதிகளில், நெல் நடுதல், அறுவடை போன்ற காலத்தையொட்டி பண்டிகைகளும் கொண்டாடப்படுகின்றன. நெல் பற்றிய சில சமஸ்கிருத குறிப்புகளும் உள்ளன. சீனாவில் , விவசாயம், நெல் ஆகிய இரண்டையும் குறிக்கும் சொல் ஒன்றே (XXX) ஆகும்.
ஆப்பிரிக்காவில் நெல் சுமார் கி.மு 1500 முதல் பயிரிடப்பட்டு வருகிறது. கி.மு 1500 - 800 ஆம் ஆண்டுகளில், நைகர் நதித்துவாரத்தில் பயிரிடப்பட்டு, பின் செனெகல் நாடு வரை பரவியது. எனினும், இதன் சாகுபடி மேற்கொண்டு பரவவில்லை. அரேபியர்களால் கி.பி 7 - 11 ஆம் நூற்றாண்டுகளில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆசிய நெல் இனங்கள் பயிரிடப்பட்டன.
ஜப்பானில் நெற்பயிர் சீனாவிலிருந்து அறிமுகப்படுத்தப்பட்டது என ஒரு சாரார் கருதுகின்றனர். ஆனால், ஜப்பானியர்கள் முன்னாளில் நீளமான தண்டுடைய, நீரில் வளரும் நெற்பயிர்களை படகில் சென்று அறுவடை செய்ததாக சில குறிப்புகளும் உள்ளன. உலர்நில (மானாவாரி) நெல் சாகுபடி கி.மு 1000 ஆம் ஆண்டு ஜப்பானில் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னாளில், கி.மு 300 இல் தற்கால நீர்நில சாகுபடி முறை யாயோய் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது .
ஆசிய நெல் இனம் மத்திய கிழக்கு நாடுகளிலும் மத்திய தரைக்கடல் பகுதிகளிலும் சுமார் கி.மு 800 இல் பயிரிடத் துவங்கப்பட்டது. மவுரியர்கள் நெற்பயிரை ஸ்பெயின் நாட்டுக்கு அறிமுகப்படுத்தினர். 15 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நெல் இத்தாலி பிரான்ஸ் நாடுகளுக்கும் பின்னர் எல்லா கண்டங்களுக்கும் பரவியது.
1694இல் அமெரிக்காவின் தென் கரோலினா மாகாணத்தில், மடகாஸ்கரிலிருந்து நெல் அறிமுகமானது. புயலால் பாதிப்படைந்து 'சார்ல்ஸ்டன்' என்ற துறைமுகத்துக்கு வந்த கப்பலின் தலைவர் ஒரு நெல் மூட்டையை அங்குள்ள விவசாயிகளுக்கு அன்பளிப்பாக கொடுத்தார். அவர்கள் அதனை பயிரிடத் தொடங்கினர். தென் அமெரிக்காவில் நெல் 18ஆம் நூற்றாண்டில் ஸ்பெயின் நாட்டவரால் அறிமுகப்படுத்தப்பட்டது.
முந்தைய அமெரிக்காவின் தென் கரோலினா, ஜார்ஜியா மாகாணங்கள்,மேற்கு ஆப்பிரிக்காவிலிருந்து கொண்டு வரப்பட்ட கறுப்பின அடிமைகள் மூலம் நெல் பயிர் செய்து மிக அதிக இலாபம் ஈட்டினர். இவ்வடிமைகளுக்கு முன்னமே நெல் பயிர் பற்றிய அறிவு இருந்ததால், அதிக விலை கொடுத்து வாங்கப்பட்டனர். நில முதலாளிகள் அடிமைகளிடமிருந்து பாத்தி கட்டுதல், நீர் தேக்குதல் போன்ற உத்திகளை தெரிந்து கொண்டனர்.
முதலில் அமெரிக்காவில், நெல் கையால் (மர உலக்கை கொண்டு) குத்தப்பட்டு, பின் கூடைகளில் புடைக்கப்பட்டு அரிசி பிரித்தெடுக்கப்பட்டது. இவ்வுத்திகளும் ஆப்பிரிக்க அடிமைகளே அறிமுகப்படுத்தினர். பின்னர் 1787 இல், நீரால் இயங்கும் அரிசி அரவை இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டு நெல் சாகுபடி நல்ல இலாபம் ஈட்டியது. 20ஆம் நூற்றாண்டில், அமெரிக்க உள்னாட்டு போருக்குப் பின் அடிமைகள் இல்லாமையால் நெல் சாகுபடி குறைந்து விட்டது.

ஈரோடு இருந்து செங்கோட்டை

 பயணிகள் கனிவான கவனத்திற்கு வண்டி எண் 16845 ஈரோடு இருந்து செங்கோட்டை தினசரி விரைவு ரயில் உள்ளது ஈரோடு :2:00pm

கொடுமுடி :2:29pm
புகழுர்:2:44pm
கரூர்:3:03pm
வெள்ளியணை:3:19pm
எரியோடு:3:59pm
திண்டுக்கல்:4:42pm
அம்பத்துறை:4:56pm
கொடைக்கானல் ரோடு:5:09pm
சோழவந்தான்:5:23pm
மதுரை:5:55pm
திருப்பரங்குன்றம்:6:10pm
திருமங்கலம்:6:19pm
கள்ளிக்குடி:6:30pm
விருதுநகர்:6:48pm
சாத்தூர்:7:09pm
கோவில்பட்டி:7:24pm
கடம்பூர் :7:39pm
வஞ்சிமணியாச்சி:7:59pm
திருநெல்வேலி :8:35pm
சேரன்மகாதேவி: 8:54pm கல்லிடைக்குறிச்சி:9:03pm
அம்பாசமுத்திரம்:9:09pm
கீழகடையம்:9:19pm
பாவூர்சத்திரம்:9:29pm
தென்காசி :9:48pm
செங்கோட்டை:10:12pm தேவைப்படுவோர் பயன்படுத்திக் கொள்ளுங்கள் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

ஓபீர் பட்டணம். - உவரி

 உவரி இந்தியாவில், தமிழ்நாடு மாநிலத்தில், திருநெல்வேலி மாவட்டத்தில் 2011ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி 10,000 மக்கள் தொகை கொண்ட ஒரு கடலோரக் கிராமம் ஆகும். இது திருநெல்வேலியில் இருந்து 75 கி.மீ மற்றும் கன்னியாகுமரி இருந்து 45 கி.மீ தொலைவில் உள்ளது. இது ராதாபுரம் சட்டமன்றத் தொகுதியில் அமைந்துள்ளது. தமிழ் வரலாற்றின்படி, உவரியின் குடிமக்கள் நெய்தல் (கடல் நிலம்) உலகின் பரதர்கள் என்று அழைக்கப்பட்டனர். உவரியின் வரலாற்றுப் பெயர் ஓபீர் பட்டணம். இது பாண்டிய வம்சத்தால் ஆளப்பட்டது.

தென்னையில் பாரம்பரிய தொழில்நுட்ப அறிவு-2

 தென்னையில் பாரம்பரிய தொழில்நுட்ப அறிவு-2

எலி மரத்தில் ஏறுவதைத் தடுக்க, பெரிய பனை ஓலையை நடுப்பாகத்தில் இரண்டாகப் பிளந்து, ஒரு பாகத்தை, மேல்மரத்தின் குலைக்கு அடியில் மரத்தை சுற்றி கட்டிவிடவேண்டும். இன்னொரு பாகத்தை முதலில் கட்டிய பகுதிக்கு எதிராக கட்டிவிடலாம்.
தென்னையில் பூ உதிர்தலை கட்டுப்படுத்த உப்பை பூ பகுதியிலும் வேர்ப்பகுதியிலும் இட்டு அதிக நீர் பாய்ச்சவேண்டும்.
தென்னை நடவு குழியில் கொழிஞ்சியை இட்டு, ஆறு மாதம் மட்க வைத்தபின் நடவு செய்யவேண்டும்.
தென்னை நடவுச் செய்வதற்கு முன்பு, வேரையெல்லாம் வெட்டி செய்தால், புதிய வேர் விரைவாக விட ஏதுவாகும்.
அரை வட்டக் குழி எடுத்து மரத்தைச் சுற்றி, எருக்களை 1 கிலோ, கொழிஞ்சி 1 கிலோ, 1 கிலோ பூதகள்ளி, 1 கிலோ மீன்கழிவு, 1 கிலோ, உப்பு 1 கிலோ இடுவதால் அதிக மகசூல் கிடைக்கும்.
தேங்காய் மட்டையை, மரத்தைச் சுற்றில் மண்போர்வையாக இடுவதால் மண் ஈரப்பதம் காக்கப்படுவதோடு, களையை கட்டுப்படுத்தலாம்.
தென்னை தோட்டத்தில் தென்னைக்கு ஊடே உள்ள பகுதியை ஜீன் – ஜீலை மற்றும் டிசம்பர் – ஜனவரி மாதத்தில் உழவுசெய்தால் வேர் பகுதியில் நல்ல காற்றோட்டம் கிடைப்பதோடு, களையைக் கட்டுப்படுத்தலாம்.
வேப்ப எண்ணெய் தெளிப்பதால் பூ உதிர்தலை குறைக்கலாம்.
குரும்பை உதிர்வதை தடுக்க சாதாரண உப்பை வளர் நுனிப்பகுதியில் மரத்திற்கு 2 கிலோ வீதம் மழைக்காலத்தில் இடவேண்டும்.
குரும்பை உதிர்வதை தடுக்க சாம்பலை இடவேண்டும்.
குரும்பை உதிர்வதைக் கட்டுப்படுத்த, பூப்பதற்கு முன்பு மரத்தைச் சுற்றி வட்ட வடிவில் பாத்தி எடுத்து அதில் கொழிஞ்சி மற்றும் எருக்களையை இடலாம்.
பூச்சி மற்றும் எறும்பு தொல்லையை தடுக்க, நடவுக்கு முன்பு வேப்பம் புண்ணாக்கைக் குழிகளில் இடவேண்டும்.
தண்ணீர் மற்றும் ஆமணக்கு புண்ணாக்கு கலந்த மண் பாண்டங்களை அங்காங்கு தென்னை தோப்பிற்குள் சிறிய குழிகளில் வைத்திருந்தால் மூன்று நாட்களுக்குப் பின்பு, அதிலிருந்து கிளம்பும் வாடையினால் காண்டாமிருக வண்டு கவரப்பட்டு பானையில் விழுந்து இறந்து விடும்.
வேப்பம் புண்ணாக்குச் சாற்றை வளர் நுனியிலும், அதற்கடுத்த ஓலையிலும் கொட்டுவதால் காண்டமிருக வண்டின் தாக்கதலைத் தடுக்கலாம்
தண்டு கூண் வண்டின் சேதாரத்தைக் கட்டுப்படுத்த துளை ஏற்பட்ட பகுதியில் சுத்தம் செய்து சாதாரண உப்பை நிரப்பி பின்பு மூடிவிடவேண்டும்.
தென்னை நாற்று நடும்போது 1-2 கிலோ உப்பை குழிகளில் கொட்டினால், கரையானைக் கட்டுப்படுத்துவதோடு ஈரப்பதத்தைக் காக்கலாம்.
தென்னை நடவு செய்யும்போது கற்றாலை ‘மடல் ஒன்று குழிகளில் நட்டால் ஈரப்பதம் காக்கப்படுவதோடு கரையான் தாக்குதலையும் தடுக்கலாம்.
தென்னைந்தோப்பில், நீரை அதிகம் தேக்கினால் கரையான் எல்லாம் நீரோடு அழிந்துவிடும்.
தென்னை மரத்தின் அடிப்பாகத்திலிருந்து 2-3 அடி வரை சுண்ணாம்பு பூசினால் கரையான் தாக்குதல் கட்டுப்படும்.
கரையான் தாக்குதலை கட்டுப்படுத்த, 500 கிராம் சாதாரண உப்பை 5 லி தண்ணீரில் கலந்து தண்டின் ஊற்றினால் போதும்.
கோழிகளை தென்னந்தோப்பில் வளர்ப்பதால், அவை கரையானை தின்றுவிடும்.
தஞ்சாவூர் வாடல் நோயைக் கட்டுப்படுத்த, பசுந்தாள் உரச்செடியாக கொழிஞ்சி அல்லது தக்கைப்பூண்டு செடியை வளர்த்து, மடக்கி உழலாம்
அல்லது வேப்பம் புண்ணாக்கை நன்கு மட்கிய தொழு உரம் இட்டபின் இட்டு விடலாம்.
தென்னை தண்டு செவ்வொழுகல் (stem bleeding) யைக் கட்டுப்படுத்த ஒழுகல் பகுதியில் வாயை சுரண்டி சுத்தம் செய்து அதன்பின் சுண்ணாம்பு கரைசலை ஊற்றவேண்டும்.
மரத்தின் மீது எலி மற்றும் அணில் ஏறுவதைத் தடுக்க மரத்தின் அடியிலிருந்து 2-3 அடி உயரத்தில் சீமைக் கருவேல் கிளையைவோ முள் கம்பிவேலி சுற்றி கட்டினால் போதும்.
சிறிது நாட்டுக் சக்கரையை தேங்காய் எண்ணெயில் இட்டால் தூசுக்கள் எல்லாம் தனியாகப் பிரிந்து, எண்ணெய் தெளிவாக இருக்கும்.

சிவராத்திரி கதைகள்...கால் மாற்றி ஆடிய ஈசன்

 சிவராத்திரி கதைகள்...

🎍 கால் மாற்றி ஆடிய ஈசன்!
பாண்டிய மன்னன் ராஜசேகரன் அறுபத்துமூன்று கலைகளில் தேர்ச்சி பெற்றவன்.பரதக்கலை மட்டும் தெரியாது.
ஒரு சமயம் சோழநாட்டுப் புலவன் ஒருவன் எங்கள் கரிகாலனுக்கு பரதக்கலை தெரியும்.அதில் வல்லவன் அவன் என்று ஏகத்திற்கும் பெருமையாக பேசினார்.
இதைக் கேட்ட பாண்டியனுக்கும் பரதம் கற்கும் ஆசை ஏற்பட்டது.ஆனால் பயிற்சி காலத்தில் உடல் வலியால் அவதிப்பட்டான்.நமக்கே இப்படி இருக்கின்றதே சதா சர்வகாலமும் வெள்ளியம்பலத்தில் நடனம் ஆடுகின்ற இறைவனின் திருவடிகள் எவ்வளவு வலிக்கும் என மிகுந்த கவலையுற்றான்.
சிவராத்திரியன்று நடராஜப் பெருமானை கண்ணீர் மல்க வணங்கி எம்பெருமானே நடனம் ஆடும்போது பூப்போன்ற தங்கள் பாதங்களுக்கு வலிக்குமே எனவே நின்ற திருவடியை எடுத்து வீசி அடியேன் காணும்படி கால் மாற்றி தாங்கள் ஆடவேண்டும்.இல்லையேல் நான் இங்கேயே உயிரி துறப்பேன் என வேண்டினான்.
பாண்டியனின் அன்பிற்கு மனம் இரங்கி சிவபெருமான் கால் மாறி ஆடிக்காட்டி அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.
🎍 என்னை அடிக்கவில்லையே?
கஞ்சனூர் என்ற ஊரில் அரதத்த சிவாசாரியார் என்ற அருளாளர் வாழ்ந்தார்.... ஒரு நாள் ஊரில் உள்ள சிவாலயத்துக்கு சென்றார்... அந்த நேரத்தில் ஒரு இளம் பெண்ணை தூணில் கட்டி வைத்து காவலர்கள் அடித்தார்கள்.... சிவாச்சாரியார் கண்கலங்கி அழுதார்...
அதைப் பார்த்த கோவில் நிவாகி " சுவாமி... இவள் நேற்று ஆலயத் தொண்டு செய்ய வரவில்லை... அதனால் தண்டனை கொடுக்கிறார்கள்... நீங்கள் ஏன் அழுகிறீர்கள் ?' என்று கேட்டார்...
இந்த பெண் ஒருநாள் கோவிலுக்கு வரவில்லை என்று இப்படி அடிக்கிறீர்களே... நான் பல நாள் வராமல் இருந்திருக்கிறேன்.. என்னையும் யாராவது அடித்திருந்தால் நானும் ஒழுங்காக சிவத் தொண்டு புரிந்திருப்பேன் என்று விம்மியபடி சொல்ல அனைவரும் அதிர்ந்து போயினர்...
அவருடைய சிவ பக்தியை கண்டு உருகிய காவலர்கள் அப்பெண்ணை விடுதலை செய்தனர்.

சுற்றுலாப் பயணிகள் கொளுக்குமலைக்கு குவிகிறார்கள்.

கொளுக்குமலை..
கொளுக்குமலை பாண்டிச்சேரியில் இருந்து 420 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.,
ஆசியாவிலேயே மிகவும் உயரமான இடத்தில் அதாவது 7200 அடி உயரத்தில் தேயிலை விளையும் இடம் கொளுக்குமலை தான்...
தென்னிந்தியாவிலேயே கொளுக்குமலையில் விளையும் தேயிலையின் டீ தான் மிகவும் சுவையானது
கொளுக்குமலை தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தில்தான் உள்ளது...
கொளுக்குமலை தேனி மாவட்டத்தில் இருந்தாலும் கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் மூணார் அருகில் உள்ள சூரியநெல்லி வழியாகத்தான் கொளுக்குமலைக்குச் செல்ல முடியும்...
தேனி மாவட்டம் குரங்கனியிலிருந்து டாப்ஸ்லிப் வழியாக சுமார் 3 கிலோமீட்டர் நடந்து செல்லலாம் ஆனால் வாகனங்கள் செல்வதற்கு வழியில்லை...
கொளுக்குமலை காலையில் சன்ரைஸிற்கு மிகவும் புகழ் பெற்றது காலை சன்ரைஸ் பார்க்கவே சுற்றுலாப் பயணிகள் கொளுக்குமலைக்கு குவிகிறார்கள்.

வண்டி எண் 20635 சென்னை எழும்பூர் இருந்து கொல்லம் அனந்தபுரி

 பயணிகள் கனிவான கவனத்திற்கு வண்டி எண் 20635 சென்னை எழும்பூர் இருந்து கொல்லம் அனந்தபுரி தினசரி அதிவேக விரைவு ரயில் சென்னை எழும்பூர் :7:50pm

தாம்பரம்:8:15pm
செங்கல்பட்டு:8:48pm
மதுராந்தகம்:9:08pm
மேல்மருவத்தூர்:9:18pm
திண்டிவனம்:9:43pm
விழுப்புரம்:10:28pm
விருத்தாசலம்:11:10pm
திருச்சிராப்பள்ளி:1:00Am
திண்டுக்கல்:2:18Am
மதுரை:3:20Am
திருமங்கலம்:3:44Am விருதுநகர்:4:08Am
சாத்தூர்:4:28Am
கோவில்பட்டி:4:48am
திருநெல்வேலி:6:05Am
நாங்குநேரி:6:35Am
வள்ளியூர்:6:47Am
ஆரல்வாய்மொழி:7:03Am
நாகர்கோயில் டவுன்:7:30Am
இரணியல்:7:48Am
குழித்துறை:8:08Am
பாறசாலை:8:19Am
நெய்யாற்றின்கரை:8:33Am
திருவனந்தபுரம் சென்ட்ரல் :9:25Am
வர்கலாசிவகிரி:10:10Am
பரவூர்:10:23Am
கொல்லம் :11:15Am தேவைப்படுவோர் பயன்படுத்திக் கொள்ளுங்கள் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

tamilfoods -2

 

வறுத்த பூண்டுபற்களை சாப்பிட்ட 24 மணிநேரத்தில் உடலினுள் ஏற்படும் அற்புதங்கள்.

பூண்டை வறுத்து சாப்பிட்டால், 24 மணிநேரத்தில் உடலினுள் அற்புதங்கள் ஏற்படும். இங்கு அந்த அற்புதங்கள் என்னவென்று கொடுக்கப்பட்டுள்ளது.
பூண்டு மிகவும் ஆரோக்கியமான உணவுப் பொருள் என்பது அனைவருக்கும் தெரியும். அந்த பூண்டுகளை அன்றாட உணவில் சேர்ப்பதுடன், அதனை பச்சையாக சாப்பிட்டால், உயர் இரத்த அழுத்தம், குறைந்த இரத்த அழுத்தம், உயர் கொலஸ்ட்ரால், இதய நோய்கள், மாரடைப்பு, பெருந்தமனி தடிப்பு போன்றவைகளை கட்டுப்படுத்தலாம்.
பூண்டுபற்க்கள் ஆன்ஜியோடென்சின் II என்னும் ஹார்மோன் உற்பத்தைத் தடுக்கும் மற்றும் இரத்த நாளங்களை ரிலாக்ஸ் அடையச் செய்யும். பூண்டு உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புக்கள் கட்டுப்படுத்தப்படும்.
பூண்டுபற்களை வறுத்து சாப்பிட்டால், 24 மணிநேரத்தில் உடலினுள் அற்புதங்கள் ஏற்படும். இங்கு அந்த அற்புதங்கள் குறித்து தான் கொடுக்கப்பட்டுள்ளது.
வறுத்த பூண்டுபற்களை சாப்பிட்ட ஒரு மணிநேரத்தில், இரைப்பையில் செரிமானமாகி, உடலுக்கு சிறந்த உணவாக மாறும்.
2-4 மணிநேரத்தில் பூண்டு உடலில் உள்ள ப்ரீ-ராடிக்கல்களை எதிர்த்துப் போராடும் மற்றும் உடலினுள் இருக்கும் புற்றுநோய் செல்களை அழிக்கும்.
4-6 மணிநேரத்தில் உடலின் மெட்டபாலிசம் தூண்டப்பட்டு, உடலினுள் இருக்கும் அதிகப்படியான நீர்மம் வெளியேற்றப்படும் மற்றும் தேங்கியிருக்கும் கொழுப்புக்கள் கரைய ஆரம்பிக்கும்.
6-7 மணிநேரத்தில் பூண்டில் உள்ள ஆன்டி-பாக்டீரியல், இரத்த நாளங்களில் நுழைந்தப் பின், இரத்தத்தில் உள்ள பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராட ஆரம்பிக்கும்.
7-10 மணிநேரத்தில் பூண்டில் உள்ள சத்துக்கள் உடலால் உறிஞ்சப்படுவதோடு, பூண்டு உடலுக்கு நல்ல பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தும்.
10-24 மணிநேரத்தில் முதல் 1 மணிநேரத்தில் பூண்டு செரிமானமாகியப் பின், பூண்டு உடலை ஆழமாக சுத்தம் செய்யும் பணியை ஆரம்பித்துவிடுவதுடன், கீழே கொடுக்கப்பட்டுள்ள செயல்களையும் செய்ய ஆரம்பிக்கும்.
கொலஸ்ட்ரால் அளவுகள் சீராக்கப்படும்.
தமனிகள் சுத்தம் செய்யப்படும் மற்றும் இதய நோய்களில் இருந்து பாதுகாப்பு கிடைக்கும்.
இரத்த அழுத்தத்தை சீராக்கும்.
உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தும்.
உடலினுள் கனமான மெட்டல்கள் நுழைவதைத் தடுக்கும்.
எலும்புகளின் வலிமை அதிகரிக்கும்.
அதிகப்படியான மருத்துவ குணத்தால், பூண்டு உடலில் உள்ள சோர்வைப் போக்கும்.
உடலில் உள்ள செல்களின் வாழ்நாளை நீட்டிக்கும்

Featured Post

ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதைகள் இருக்கிறது

ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதைகள் இருக்கிறது என்பதையும், ஓர் பலாப்பழத்தைப் பிளக்காமல் அதன் உள்ளிருக்கும் சுளையின் எண்ணிக்கையைய...