#காமாட்சி_விருத்தம்_படித்ததுண்டா?
அவர் எவ்வளவு உரிமை எடுத்துக்கொண்டு அன்னையிடம் வாதாடுகிறார் பாருங்கள்.
எனக்கு நீ வரம் தர இருவரும் மடிபிடித்துத் தெருவினில் நிற்கவேண்டுமா தாயே?
என்ன ஒரு அதட்டல்?
எத்தனை நேசம்?
அடேங்கப்பா !!
பொல்லாத பிள்ளையாய் இருந்தாலும் பெற்ற தாய் புத்திகளைச் சொல்லவில்லையோ?
பேய்ப் பிள்ளையானாலும் தான் பெற்ற பிள்ளையைப் பிரியமாய் வளர்க்கவில்லையோ?
கல்லாகிலும் மூச்சு நில்லாமல் வாய்விட்டுக் கதறி நான் அழுத குரலில்
கடுகுதனில் எட்டிலொரு கூறு அதாகிலும் உன் காதினில் நுழைந்ததில்லையோ?
இல்லாத வன்மங்கள் என்மீதில் ஏனம்மா?
இனி விடுவதில்லை
சும்மா
இருவரும் மடிபிடித்துத் தெருதனில் வீழ்வதும் இது தருமம் இல்லையம்மா
எல்லோரும் உன்னையே சொல்லியே ஏசுவார்
இது நீதி அல்லவம்மா
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சி உமையே!
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏