வாழ்க வளமுடன் .
ஆசான் வேதாத்திரி மகரிஷி அவர்கள் நமக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம். மனித வாழ்வு எப்படி எல்லாம் இருக்க வேணடும் என்று நமக்கு உணர வைத்திருக்கிறார்.
உடல், உயிர், மனம் எனும் இம் மூன்றும் நமக்கு எந்தளவு முக்கியம் என்பதை நன்கு அறிவுறுத்தி உள்ளார்.
உடலுக்கு உணவின் அவசியத்தையும் அதன் அளவு முறைப் பற்றி 15 கவிகள் மூலமாக விளக்கி உள்ளார்.
இதோ இந்த கவி,
" உணவும் எண்ணமும் " என்ற தலைப்பிலே (21-12-1957) அன்று வடித்த கவியை இன்று பார்ப்போம்.
உண்ணும் உணவு உடல்மட்டும்
பாயும்,
எண்ணும் எண்ணங்கள் எங்குமே
பாயும்,
எண்ணமோ உணவில்
எழுச்சிபெறும் இயக்கமே,
உண்பதோ எண்ணத்தால்,
உற்றுப்பார்! உறவையறி!
%%%%%%%%%%%
அதாவது,
நாம் உண்ணும் உணவு உடல் மட்டுமே பாயும்.
எண்ணும் எண்ணங்கள் எல்லா இடத்திலும் பாயும்.
எண்ணம் என்பது உணவிலே எழுச்சி பெறுகின்ற இயக்கமாகும்.
நாம் உண்ணவேண்டும் என்று நினைப்பது நம்மில் எழும் எண்ணத்தால் தானே; அதை அறிந்தால் உறவை அறிவாய்.