பழனி to கொடைக்கானல் போற வழில...
மேல்பள்ளம் தாண்டி...
வடகவுஞ்சி கிராமத்துக்குள்ள போனா...
Main roadல இருந்து தள்ளி 10 km இருக்கறதுனால...
இங்க சுத்தமாவே ஆள் நடமாட்டம் இருக்காது...
யூகலிப்டஸ் மரங்களும் பைன் மரங்களும் நிறைஞ்ச,
குட்டி காடு இது...
இங்க நிறைய தேன் கூடுகள் இருக்கு...
நாலு மரங்களுக்கு ஒரு மரம்னு தேனீக்கள் கூடு கட்டி இருக்கு...
அதனாலயே இந்த இடத்துக்கு தேன்சோலைனு பெயர் வந்துச்சாம்...
கழுகும், குட்டி குட்டி பறவைகளையும் இங்க பார்க்கலாம்...
கொஞ்சம் பட்டாம்பூச்சிகளையும் ரசிக்கலாம்...
Week end தவிர...
மத்த எல்லா நாட்களிலும்...
இந்த இடம் ஆள் நடமாட்டம் இல்லாம அமைதியா இருக்கும்...
இங்க இருக்கற குட்டி pine forestல...
கொஞ்ச நேரம் படுத்து தூங்க கூட செய்யலாம்...
அவ்ளோ அமைதியா அவ்ளோ சுத்தமா இருக்கும்...
காட்டோட பேசவும்...
காற்றோட பாடவும்...
மரங்களின் பாஷை அறியவும்...
அடிக்கடி இந்த இடத்துக்கு வந்திடுவேன்...
Machine மாதிரியான நம்ம வாழ்க்கைல...
கொஞ்ச break எடுக்க...
இந்த மாதிரி இடங்கள், அவசியம் தேவை...
Routine ah எல்லாரும் போற park, boatingனு போனா...
அங்க நாம இயல்பா இருக்க முடியாது...
குழந்தைதனத்தை expose பண்ண முடியாது...
மனிதர்கள் சத்தத்தை கடந்து, இயற்கையின் மொழியறிய முடியாது...
அதனால...
இப்படிபட்ட இடங்களை தேடுங்க...
அங்க மௌனமா இயற்கையோடு பேசுங்க
