Showing posts with label வில்வம். Show all posts
Showing posts with label வில்வம். Show all posts

Thursday, February 3, 2022

வில்வம்

வில்வம் !மகாவில்வம் !
நமக்கு நாமே வைத்தியம் மூலிகை மருத்துவம் 9
            யாவர்க்குமாம் இறைவனுக்கு ஓர் பச்சிலை என திருமூலர் அருளிய ஒரு வாசகம் இறைவனுக்கு மட்டுமல்ல மனிதர்களுக்கும் பொருந்தும்.
              இறை வழிபாடு செய்ய பூ பணியார பலகாரம் தேவையில்லை ஒரு பச்சிலை போதும் இறைக்கும் இரைக்கும்!
           வில்வம் மூன்று இலைகள் கொண்டது சிவனுக்கும் மகாலக்ஷ்மி பூஜைக்கும் வில்வமே பிரதானமானது கும்பகோணம் சாரங்கபாணி கோவிலில் பில்வாஷ்டகம் சொல்லி வில்வ பூஜை உண்டு தற்போது நிறைய சிவன் கோவிலில் வில்வம் என்று நொச்சி இலையை தான் அர்ச்சித்து வருகின்றனர். சிதம்பரம் நடராஜர் கோவிலிலும் வைத்தீஸ்வரன் கோவிலிலும் இந்த நிலை உண்டு .
   வில்வத்தில் 3,5,7,9, 11, 12, என்று இலைகள் இணைந்த தொகுப்பு உண்டு இதில் சில இடங்களில் 13 இலைகள் கொண்டது மகாவில்வம் .
            திதிகளில் பிரதமை துவிதியை என்று கணக்கிட்டில் 13 திதி சிவனுக்கு உகந்த திதி பிரதோஷ நாள் இந்த 13 இலை கொண்ட மகாவில்வாச்சனை செய்வது சிறப்பானது 13 இலை கொண்ட மகாவில்வத்தை கொண்டு சிவபூஜை செய்து இன்னும் சிறப்பானது 
          10, 13 முகம் கொண்ட ருத்ராட்சம் மனிதர்கள் அணிய கூடாது என்று சொல்வதுண்டு அதற்கு காரணம் அதை அணியும் தகுதி சிவனுக்கு மட்டுமே உள்ளது.
       பத்து இலை கொண்ட வில்வத்தை கொண்டு பத்து தலை ராவணன் சிவபூஜை செய்து சாகாவரம் பெற்றார். தசாவதாரம் பத்து என்று பத்தையும் பற்றியதால் பத்து முகம் ருத்ராட்சமும் மனிதர்கள் அணிய கூடாது. தற்போது கிடைப்பதும் மிக அரிது அதிக அளவில் மூன்று ஐந்து முகம் கொண்ட மரங்கள் தான் உள்ளது முன்பு ஒரு முகம் முதல் பல முகம் கொண்ட ருத்ராட்சம் இந்தியாவில் இருந்தது இந்த மரத்தின் அடர்வு காரணமாக ஆங்கிலேயர் இரயில் தண்டவாளம் அமைக்கும் பணிகளும் பயன்படுத்தியதால் பல அரிதான ருத்ராட்சம் மரங்கள் அ அழிந்து விட்டது. 
            இந்த 13 என்ற எண்ணை கண்டால் ஆங்கிலேயர்கள் கூட அலறி ஓடுவார்கள் இதற்கு பின்னால் இருப்பது இந்திய இலை ரகசியம் தான்! 
       உலகில் குள்ளமான சீனர்கள் எல்லாவற்றையும் குறைக்க முயற்சி செய்வார்கள் எல்லா நாட்டையும் குறைந்து மதிப்பிடுவார்கள் 13 னை 1+3=4 என்று குறைத்து 4 ஆம் எண்ணை பேய் எண் என்று சொல்லி பேய்யை கண்டது போல் பேய் போல் ஓடுவார்கள்.
         கோனேரி ராஜபுரம் உமாமகேசுவர் கோவிலில் தல விருட்சமாக இருப்பது இந்த 13 இலைகள் கொண்ட மகாவில்வமாகும் !
🌿மருத்துவ பலன்கள்:
 வில்வம் துவர்ப்பு சுவையுள்ள தழை ! துவர்ப்பு சுவையுள்ள பொருட்கள் அனைத்தும் இரத்ததை சுத்தம் செய்யும் துவர்ப்பு சுவை அதிகம் உண்ணும் போது உடலில் தேவையற்ற சக்கரை அளவை சரிசெய்யும் ஆற்றல் வில்வத்திற்கு உண்டு.
              ஆதிமூலனுக்கு உகந்த இந்த இலை மனித உடலில் மூலத்தை சரிசெய்யும்.
   🌿தினமும் மூன்று வேளை ஐந்து இலையுடன் சிறிது ஜிரகத்தை வைத்து சாப்பிட்டால் மூல நோய் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.
🌿 ஜூரம் தீர ஐந்து வில்வ இலைகளை மென்று சாப்பிட்டால் ஜூரம் தீரும் குழந்தைகளுக்கு இலையை அரைத்து வடிகட்டி ஒரு சங்கு அளவு கொடுத்தால் ஜூரம் தீரும்.
🌿 பெண்களுக்கு ஏற்படும் அதிக படியான உதிரப்போக்கை கட்டுபடுத்த வில்வ இலைகளை அரைத்து ஒரு அரை நெல்லிக்காய் அளவு மூன்று வேலையும் சாப்பிட்டால் மூன்று தினங்களில் நிற்கும்.
🌿 தோல் வியாதிகளுக்கு வில்வ இலை சிறிது ஜிரகம் பத்து மிளகு இவைகளை அரைத்து பசும் மோரில் கலந்து மூன்று மாதங்கள் குடித்து வந்தால் ஆண்டு கணக்கில் இருந்த தோல் நோயாக இருந்தாலும் சரியாகும்.
🌿 கண்பார்வை குறைபாடு கண் எரிச்சல் இருந்தால் வில்வ இலைகளை விளக்கெண்ணெய் அல்லது வெண்ணெய் போட்டு வதைக்கி கண்மீது வைத்து கட்டினால் கண் நோய் தீரும்.
🌿 வில்வ இலைகளை அரைத்து இளநீரில் கலந்து குடித்தால் இளைஞர்கள் உடல் நோய் தீரும்.
🌿 வில்வ பட்டைகளை சந்தனம் போல் இழைத்து முகத்தில் போட்டால் விளக்கு போல் ஜொலிக்கும்.
🌿 வில்வ இலைகளை நிழலில் காய வைத்து சித்தரெத்தை அதிமதுரம் மிளகு வெள்ளெருக்கு பூ இதழ்களை நிழலில் உலர்த்தி பொடித்து சலித்து வைத்து இரண்டு கிராம் எடையளவு தேனில் கலந்து சாப்பிட்டால் ஆஸ்துமா அடியோடு தீரும். குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம்.
🌿 சித்தமேறி பித்து பிடித்து பிடித்தவர்களுக்கு இரு மண்டலம் வில்வம் இலைகளை அரைத்து விழுங்க வைத்தால் சித்தம் தனியும். 
🌿 வயிற்றில் புண் வந்தால் அல்சர் நோய் இதை சரிசெய்ய வில்வம் இலைகள் மட்டுமே தினமும் அரைத்து நெல்லிக்காய் அளவு மோரில் கலந்து குடித்தால் போதும் இலைகள் கிடைப்பது அரிது என்றல் வில்வாதி லேகியம் என்று கடைகளில் கிடைக்கும் அதை வாங்கி சாப்பிடலாம் எல்லா வகையான இரைப்பை குடல் நோய் தீர வில்வாதி லேகியம் காலை மாலை சாப்பிடலாம் வயிற்றில் புண் வந்தால் நாக்கில் மாவு படியும் வயிற்று புண் வந்தால் முதலில் நாக்கில் மாவு படரும் அதை அலோபதி மருத்துவத்தில் டைப்ஃபாயிடு மீனவர் என்று சொல்வார்கள் நாம் உடனே மருத்துவர் பரிந்துரைத்த டோலோ 650-1000 வரை வீட்டமீன் மாத்திரை இல்லாமல் இஷ்டப்படி போட்டு ஏற்கெனவே புண்ணாகி போன இரப்பையை மேலும் ரணபடுத்தி விடுவோம் அடுத்து வயிறு எல்லாம் எரியுது பத்து நாட்கள் கழித்து கதறுவது வழக்கம் உடனே மருத்துவர் ஒரு இண்டோஸ்கோப் செய்து பார்த்து விடலாம் பார்த்து பெப்டிக் அல்சர் என ஒரு முழம் நீளத்திற்கு மருத்துகளை எழுதி தருவார்கள் இதை ஈஸியாக சரி செய்ய வில்வாதி லேகியம் காலை மாலை அரை நெல்லிக்காய் அளவு எடுத்து கொண்டால் போதும். 
            சித்த வைத்தியம் தற்போது செயல் படாமல் இருக்க காரணம் அந்த காலத்தில் நோய் வந்து வைத்தியரிடம் சென்றால் முதலில் பேதி மருந்து கொடுத்து முதல் நாள் உணவில் உள்ள உப்பு புளியை உடலை விட்டு விலக வைத்து மறுநாள் மருந்துகளை உப்பு புளி இல்லாமல் பத்தியம் இருக்க சொல்லி மருந்துகளை கொடுப்பார் விருந்து மருந்தும் மூன்று நாட்கள் ஞாயிறு செவ்வாய் வியாழன் கிழமைகளில் மருந்து உண்ண விரைவில் பலன் கிடைத்தது புளியை சேர்த்தால் தழைகளில் உள்ள மருத்துவ குணங்கள் முறிந்து விடும் வீட்டில் உடலுக்கு நல்லது என்று கருவேப்பிலை கொத்தமல்லி புதினா சட்னி அரைப்பது உண்டு அதில் சுவைக்கு புளியை சேர்த்து விடுவார்கள் ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி தயிர் போல் பலனை முறிந்து விடும் அதற்கு பதிலாக தற்போது நெல்லிக்காய் எல்லா நேரத்திலும் கிடைக்கிறது அதை அதேஅளவு அல்லது சில துளி எலுமிச்சை சாறு சேர்த்து கொள்ளலாம் இலைகளில் உள்ள சத்துக்கள் முழுமையாக கிடைக்கும்.
 வில்வ பழம் சாப்பிட்டால் மலச்சிக்கல் தீரும் ஆனால் அதை சாப்பிடுவது கஷ்டம் பழத்தை தலைக்கு தேய்த்து குளித்தால் முடி உதிர்வது நிற்கும் அதுவே ஜெல் போல் இருக்கும்.
    வில்வ பூ வாசம் தாமரை பூ வாசம் போல் இருக்கும் மிகவும் ரம்மியமாக இருக்கும்.
 வில்வ இலை கொண்டு மகாலக்ஷ்மியை வழிபட்டால் மகா லக்ஷ்மி மனம் மகிழ்ந்து நமக்கு வேண்டியதை வேண்டிய படி அருள்வார் 

Featured Post

எண்ணம்_போல_வாழ்க்கை

#எண்ணம்_போல_வாழ்க்கை... ஒருமுறை, ஒரு பிச்சைக்காரன் ரயிலில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் போது, ​​ சூட் மற்றும் பூட்ஸ் அணிந்த ஒரு தொழிலதிபர...