Monday, February 10, 2025

அகத்தியர் கூறிய ஜலதோசத்திற்கான மருத்துவம்,

 அகத்தியர் கூறிய ஜலதோசத்திற்கான மருத்துவம்,

உலகிலே மிகப்பெரிய நோய் என்று சொல்லக்கூடிய நோய்களில் ஒன்று தான் ஜலதோசம், மூக்கில் இருந்து தண்ணீர் வடிந்து கொண்டே இருக்கிறது அதோடு தலைவலி, மூக்கடைப்பு என அனைத்தும் இருக்கிறது இதற்கு சித்த மருத்துவத்தில் உடனடியாக தீர்வு காண பல மருந்துகள் புத்தகத்தில் படித்தாலும் எந்த மருந்துமே உடனடியாக வேலை செய்யவில்லை என்று ஜலதோஷம் பிடித்தவர்கள் புலம்புவதை கேட்டிருக்கிறோம்.
ஆனால், உடனடியாக ஜலதோசத்தை குணப்படுத்தும் மருந்துகள் குருநாதர் அகத்தியரில் நூலில் நிறைந்து கிடைக்கிறது. அவற்றில் குறிப்பிட்ட ஒரு சிலவற்றை பார்ப்போம்.
முதலில் ஜலதோசம் ஏன் வருகிறது என்று பார்த்தால் குறிப்பிட்ட வைரஸால், தலையில் (மண்டையில் ) நீர் சேர்வதால் வருகிறது, ஜலதோசம் வருவது நல்லது தான் மண்டையில் இருக்கும் நீரை மூக்கின் வழியாக வெளியே தள்ளிக்கொண்டே இருக்கிறது, தொடர்ந்து சளி பிடித்து தும்மல் வருவதாலும், மூக்கில் இருக்கும் நீரை பல முறை வெளியே சிந்துவதாலும் மூக்கில் வலியும் தொண்டையில் வேதனையும் தான் அதிகமாகிறது. ஜலதோசம் வரும் முன்னே நமக்கு தெரிந்துவிடும் எப்படி என்றால் தொண்டையில் சற்று வலி போன்று எரிச்சல் ஏற்படும் இதிலிருந்தே நமக்கு ஜலதோசம் வரப்போகிறது என்பதை கண்டுபிடிக்கலாம். இந்த நேரத்தில் நாம் 13 மிளகு எண்ணி எடுத்து மென்று சாப்பிட வேண்டும். தூசு குப்பையினால் மூக்கில் ஏற்படும் அலர்ஜி (Dust allergy) போன்றவைகளினால் வரும் ஜலதோசம் மிளகு சாப்பிட்ட 15 நிமிடத்திற்குள்ளே குணமாகும்.
மஞ்சள் பொடி மற்றும் சுண்ணாம்பு
மண்டையில் நீர் சேர்ந்திருப்பதால் ஏற்படும் ஜலதோசம் மிளகு சாப்பிட்டால் கட்டுக்குள் வருமே தவிர முழுமையான குணம் கிடைக்காது.தலையில் சேர்த்திருக்கும் நீரை எடுப்பதற்கான மருந்தை சற்றுவிரிவாக கூறப்பட்டுள்ளது.
அகத்தியர் தன் நூலில் ‘அக்கினிசேகரத்தையும் வெள்ளை-யையும் சேர்த்தால் இரத்தம் வரும் இதை பூசினால் உடனடியாக குணம் கிடைக்கும்’ என்று தெரியப்படுத்தி இருந்தார். வெளியே இருந்து பார்ப்பதற்கு ஏன் இப்படி குழப்பி இருக்கிறார் என்று நினைக்கத்தோன்றும், ஆனால் அக்கினிசேகரம் என்றால் மஞ்சளையும், வெள்ளை என்றால் வெற்றிலைக்கு வைக்கும் சுண்ணாம்பு -ஐ குறிக்கும். இரண்டும் சேர்த்தால் இரத்தமான சிகப்பு வண்ணத்தில் கிடைக்கும். இதுதான் ஜலதோஷத்தை தீர்த்து வைக்கும மருந்து. நமது முன்னோர்கள் மருத்துவ குறிப்புகள் பலவற்றை மர்மமான வார்த்தை ஜாலத்தால் பல்வேறு காரணங்களால் மறைத்து வைத்திருக்கின்றனர். அதை நம்மால் புரிந்து கொள்ள முடியாததால்தான் நமது பாரம்பரிய வைத்திய முறைக்கு ஆதரவு குறைந்து போனதற்கு முக்கிய காரணமாகும்.
வெற்றிலைக்கு வைக்கும் சுண்ணாம்பு ஒரு சிறிய பாக்கெட் , மஞ்சள் பொடி (சிறிய ஸ்பூன் ) இரண்டு ஸ்பூன் மஞ்சள் பொடி 1/4 ஸ்பூன் அளவு சுண்ணாம்பு எடுத்து சிறிது தண்ணீர் விட்டு பூசுவதற்கு தகுந்தாற்போல் கலந்து மண்டையைச்சுற்றி நெற்றியிலும் மூக்கின் மேலும் இதை பூச வேண்டும். சுண்ணாம்பு தேய்ப்பதால் நெற்றி புண்ணாகிவிடுமோ என்ற பயம் வேண்டாம். மஞ்சள் சேர்வதால் எக்காரணம் கொண்டும் உடல் புண்ணாகாது.
இக்கலைவை பூசியதும் சுமார் 1 மணி நேரம் நன்றாக தூங்கம் வரும், ஒரு மணிநேரத்திற்கு பின்பு பார்த்தால் ஜலதோசம் சளி பிடித்தற்கான எந்த அறிகுறியும் இல்லாமல் முழுவதுமாக குணமாகிவிடும். சிறுவர்களுக்கும் இதை பயன்படுத்தலாம்.

புவனேசுவர் இருந்து ராமேஸ்வரம் வராந்திரா ரயில் வண்டி எண் 20896

 பயணிகள் கனிவான கவனத்திற்கு வெள்ளி கிழமையில் வண்டி எண் 20896 புவனேசுவர் இருந்து ராமேஸ்வரம் வராந்திரா ரயில் உள்ளது புவனேசுவர் :12:10pm குர்தா சாலை: 12:25pm பெர்காம்பூர் : 1:57pm விஜயநகரம் : 5:40pm விசாகப்பட்டினம்:6:50pm துவ்வாடா : 7:43pm இராசமன்றி :10:28pm விஜயவாடா :1:28Am ( சனி )

நெல்லூர் : 5:04Am கூடூர் :5:38am சென்னை எழும்பூர் :8:10Am விழுப்புரம் :10:50am திருப்பதிரிபுலியூர் : 11:35Am சிதம்பரம் :12:18Pm

சீர்காழி :12:39pm மயிலாடுதுறை : 1:18pm கும்பகோணம் :1:58pm தஞ்சாவூர் :2:33pm திருச்சிராப்பள்ளி : 4:15pm புதுக்கோட்டை : 5:13pm காரைக்குடி :6:25pm தேவகோட்டை ரோடு :6:37pm சிவகங்கை :7:03pm மானாமதுரை :7:40pm பரமக்குடி :8:08pm ராமநாதபுரம் : 8:33pm மண்டபம் :9:59pm ( குறிப்பு தற்பொழுது வரை மண்டபம் வரை செல்கிறது விரைவில் ராமேஸ்வரம் செல்லும் ) தேவைப்படுவோர் பயன்படுத்திக் கொள்ளுங்கள்

எல்லாம்_ஆன்மீகம்

 #எல்லாம்_ஆன்மீகம்.

அன்பாய் இருப்பது ஆன்மீகம்
அன்பாக பேசுவது ஆன்மீகம்
அறிவைத் தேடுவது ஆன்மீகம்
அறிவாக செயல்படுவது ஆன்மீகம்
அறிவை பக்குவப்படுத்துவது ஆன்மீகம்
அதிகாரம் செய்யாதிருப்பது
ஆன்மீகம்
அழகில் மயங்காதிருப்பது
ஆன்மீகம்
அகங்காரம் கொள்ளாதிருப்பது
ஆன்மீகம்
அடக்கமாக வாழ்வது ஆன்மீகம்
அறிவாக வாழ்வது ஆன்மீகம்
அறிந்து பேசுவது ஆன்மீகம்
ஆணவம் கொள்ளாதிருப்பது
ஆன்மீகம்
ஆசையை அடக்கி வாழ்வது ஆன்மீகம்
ஆதியை உணர்த்துவது ஆன்மீகம்
ஆதி ஏட்டினை உணர்வது ஆன்மீகம்
ஆசை வார்த்தைக்கு மயங்காதிருப்பது
ஆன்மீகம்
ஆண்டவனைத் தேடாதிருப்பது ஆன்மீகம்
ஆலயம் செல்லாதிருப்பது
ஆன்மீகம்
ஆகாய அதிசயம் உணர்வது ஆன்மீகம்
ஆசைக்குள் அறிவை அழியவிடாதிருப்பது ஆன்மீகம்
ஆகாய லோகங்களை உணர்வது ஆன்மீகம்
இல்லறத்தோடு வாழ்வது ஆன்மீகம்
இரக்ககுணம் உனக்கிருப்பது ஆன்மீகம்
இறந்தவரைப் பார்த்து அழாதிருப்பது ஆன்மீகம்
இயற்கையை உணர்வது ஆன்மீகம்
இரக்கத்தோடு வாழ்வது ஆன்மீகம்
இவ்வுலகம் நரகம் என்று அறிவது ஆன்மீகம்
உன் திமிரை பாசமாக்குவது ஆன்மீகம்.
உதவுபவனை தடுக்காதிருப்பது ஆன்மீகம்
உண்மை பேசுவது ஆன்மீகம்
உழைப்பால் உயர்வது ஆன்மீகம்
உறவாடி கெடுக்காதிருப்பது ஆன்மீகம்
உனக்கு உதவினவரை மறவாதிருப்பது ஆன்மீகம்
உன் உள்ளம் தான் உனக்கு நீதி என அறிவது ஆன்மீகம்
உன் பெற்றோரை உயிரிருக்க வணங்குவது ஆன்மீகம்
உனக்கு உதவுகின்றவரை வணங்குவது ஆன்மீகம்
உழைத்து வாழ்வது ஆன்மீகம்
உன்னை அறிவது ஆன்மீகம்
கலகம் செய்யாதிருப்பது
ஆன்மீகம்
ஒற்றுமையாக வாழ்வது ஆன்மீகம்
ஒழுக்கமாக இருப்பது ஆன்மீகம்
ஒழுக்கத்தோடு வாழ்வது ஆன்மீகம்
ஒளியை அறிவது ஆன்மீகம்
காற்றை வணங்குவது ஆன்மீகம்
உழைப்பது ஆன்மீகம்
உதவுவது ஆன்மீகம்
உன் செயலை உணர்வது ஆன்மீகம்
உன் சரீரத்தைப் பக்குவப்படுத்துவது ஆன்மீகம்
சான்றோராக வாழ்வது ஆன்மீகம்
சாந்தமாக இருப்பது ஆன்மீகம்
சிந்தித்து செயல்படுவது ஆன்மீகம்
சிந்தித்து உணர்வது ஆன்மீகம்
சித்தாந்தம் அறிவது ஆன்மீகம்
சுத்தத்தை விரும்புவது ஆன்மீகம்
சூழ்ச்சி செய்யாதிருப்பது
ஆன்மீகம்
சூதுவாது இல்லாதிருப்பது ஆன்மீகம்
சேர்ந்து வாழ்வது ஆன்மீகம்
ஞானத்தோடு வாழ்வது ஆன்மீகம்
தவறு செய்யாதிருப்பது
ஆன்மீகம்
சூதுவாது இல்லாதிருப்பது ஆன்மீகம்
தவறை மறைக்காதிருப்பது ஆன்மீகம்
தன்னம்பிக்கை உனக்கிருப்பது ஆன்மீகம்
தர்மம் செய்ய கால நேரம் பார்க்காதிருப்பது ஆன்மீகம்
தானம் கொடுப்பது ஆன்மீகம்
தாவரத் தன்மைகளை அறிவது ஆன்மீகம்
தாய் தந்தையர் செல்வத்தை விரும்பாதிருப்பது ஆன்மீகம்
தானும் மகிழ்ந்து பிறரையும் மகிழச் செய்வது ஆன்மீகம்
தாய், தந்தையரை துன்புறுத்தாதிருப்பது ஆன்மீகம்
தியாகம் செய்வது ஆன்மீகம்
திருடாதிருப்பது
ஆன்மீகம்
நல்வார்த்தை பேசுவது ஆன்மீகம்
நன்றி மறவாதிருப்பது ஆன்மீகம்
நம்பிக்கை துரோகம் செய்யாதிருப்பது
ஆன்மீகம்
நாவடக்கம் கொள்வது ஆன்மீகம்
நாம் என்று வாழ்வது ஆன்மீகம்
நாட்டுப்பற்று கொள்வது ஆன்மீகம்
நிலத்தை வணங்குவது ஆன்மீகம்
நிழல் தரும் மரத்தை நேசிப்பது ஆன்மீகம்
நேர்மையோடு வாழ்வது ஆன்மீகம்
பறவைகளை அறிவது ஆன்மீகம்
பசிப்பவனுக்கு உணவு அளித்தல் ஆன்மீகம்
பகை கொள்ளாதிருப்பது
ஆன்மீகம்
பசுவை வணங்குவது ஆன்மீகம்
பிறர் கெட நினைக்காதிருப்பது ஆன்மீகம்
பிறரை மதித்து நடப்பது ஆன்மீகம்
பிறர் துன்பம் போக்கிட நினைப்பது ஆன்மீகம்
பிறர் நலம் நாடுவது ஆன்மீகம்
பிறர் மனம் புண்படாது நடப்பது ஆன்மீகம்
பழி சொல்லாதிருப்பது
ஆன்மீகம்
பிரபஞ்ச வேதம்தான் ஆன்மீகம்
செல்வத்தை மதிக்காதிருப்பது ஆன்மீகம்
அழகென்று அலையாதிருப்பது ஆன்மீகம்
மலரை உணர்வது ஆன்மீகம்
மனைவியை துன்புறுத்தாதிருப்பது ஆன்மீகம்
மனிதா, துன்பம் வரும் இருந்தும் சிரிப்பது ஆன்மீகம்
பாதணி அணியாதிருப்பது ஆன்மீகம்
பிறருக்கு வழி சொல்வது ஆன்மீகம்
புலன் ஒன்பதை உணர்ந்து அறிவது ஆன்மீகம்
பூமாலை சூடாதிருப்பது ஆன்மீகம்
பெற்றோருக்கு பணிவிடை செய்வது ஆன்மீகம்
பெற்றோரை நேசிப்பது ஆன்மீகம்
பெண்ணை அடிமைப்படுத்தாதிருப்பது ஆன்மீகம்
பெருஞ்செல்வம் சேர்க்காதிருப்பது ஆன்மீகம்
பெற்றோரை பகைக்காதிருப்பது ஆன்மீகம்
தூய்மை ஆடைதான் ஆன்மீகம்
மேலுலக்கத்தாரை நேசிப்பது ஆன்மீகம்.
நற்றுணையாவது நமச்சிவாயவே!!!

வண்டி எண் 16847 மயிலாடுதுறை இருந்து செங்கோட்டை தினசரி விரைவு ரயில்

 பயணிகள் கனிவான கவனத்திற்கு வண்டி எண் 16847 மயிலாடுதுறை இருந்து செங்கோட்டை தினசரி விரைவு ரயில் உள்ளது மயிலாடுதுறை : 12:10pm குத்தாலம் :12:21pm ஆடுதுறை : 12:31pm

கும்பகோணம் :12:40pm பாபநாசம் : 12:52pm தஞ்சாவூர் :1:13pm பூதலூர் : 1:31pm திருவெறும்புர் :1:45pm மஞ்சதிடல் :1:50pm திருச்சிராப்பள்ளி :2:20pm மணப்பாறை :2:54pm வையம்பட்டி :3:09pm வடமதுரை : 3:24pm திண்டுக்கல் : 3:55pm கொடைக்கானல் ரோடு :4:14pm மதுரை :5:10pm திருப்பரங்குன்றம்: 5:26pm திருமங்கலம் :5:35pm கள்ளிக்குடி :5:44pm விருதுநகர் : 6:03pm திருத்தங்கல்: 6:22pm சிவகாசி :6:29pm ஶ்ரீவில்லிபுத்தூர்:6:44pm இராசபாளையம்:6:59pm சங்கரன்கோவில் :7:29pm பாம்புக்கோவில்சந்தை:7:41pm கடையநல்லூர்:7:52pm தென்காசி :8:09pm செங்கோட்டை :8:55pm தேவைப்படுவோர் பயன்படுத்திக் கொள்ளுங்கள்

வண்டி எண் 20681 தாம்பரத்திலிருந்து செங்கோட்டை சிலம்பு அதிவேக விரைவு ரயில்

 பயணிகள் கனிவான கவனத்திற்கு வண்டி எண் 20681 தாம்பரத்திலிருந்து செங்கோட்டை சிலம்பு அதிவேக விரைவு ரயில் வாரம் மும்முறை (புதன், வெள்ளி, மற்றும் சனி ) ஆகிய தினங்களி தாம்பரம் :8:55pm செங்கல்பட்டு :9:23pm மேல்மருவத்தூர் :9:48pm விழுப்புரம் :10:58pm விருத்தாசலம் :11:40pm திருச்சிராப்பள்ளி :1:45Am . புதுக்கோட்டை :2:30Am காரைக்குடி :3:03Am தேவகோட்டை ரோடு :3:11Am சிவகங்கை :3:35Am மானாமதுரை :4:03Am அருப்புக்கோட்டை :4:54Am விருதுநகர் :5:18Am திருத்தங்கல்:5:36Am சிவகாசி :5:44Am ஶ்ரீவில்லிபுத்தூர்:5:59Am ராஜபாளையம் :6:13Am சங்கரன்கோவில் :6:38Am பாம்புக்கோவில் சந்தை :6:54Am கடையநல்லூர்:7:09Am தென்காசி :7:48Am செங்கோட்டை :8:30Am குறிப்பு ( இனி சிலம்பு அதிவேக விரைவு ரயில் சென்னை எழும்பூர் செல்லாது தாம்பரத்தில் இருந்து தான் புறப்படும் மற்றும் வந்து சேரும் ) தேவைப்படுவோர் பயன்படுத்திக் கொள்ளுங்கள்

பயணிகள் கனிவான கவனத்திற்கு வண்டி எண் 16847 மயிலாடுதுறை இருந்து செங்கோட்டை

 பயணிகள் கனிவான கவனத்திற்கு வண்டி எண் 16847 மயிலாடுதுறை இருந்து செங்கோட்டை தினசரி விரைவு ரயில் உள்ளது மயிலாடுதுறை : 12:10pm குத்தாலம் :12:21pm ஆடுதுறை : 12:31pm

கும்பகோணம் :12:40pm பாபநாசம் : 12:52pm தஞ்சாவூர் :1:13pm பூதலூர் : 1:31pm திருவெறும்புர் :1:45pm மஞ்சதிடல் :1:50pm திருச்சிராப்பள்ளி :2:20pm மணப்பாறை :2:54pm வையம்பட்டி :3:09pm வடமதுரை : 3:24pm திண்டுக்கல் : 3:55pm கொடைக்கானல் ரோடு :4:14pm மதுரை :5:10pm திருப்பரங்குன்றம்: 5:26pm திருமங்கலம் :5:35pm கள்ளிக்குடி :5:44pm விருதுநகர் : 6:03pm திருத்தங்கல்: 6:22pm சிவகாசி :6:29pm ஶ்ரீவில்லிபுத்தூர்:6:44pm இராசபாளையம்:6:59pm சங்கரன்கோவில் :7:29pm பாம்புக்கோவில்சந்தை:7:41pm கடையநல்லூர்:7:52pm தென்காசி :8:09pm செங்கோட்டை :8:55pm தேவைப்படுவோர் பயன்படுத்திக் கொள்ளுங்கள்

சின்ன சின்ன கைவைத்தியங்கள்

 பழைய காலத்தில் பெரியவர்கள் வீட்டிலிருக்கும் பொருட்களைக் கொண்டு சின்ன சின்ன கைவைத்தியங்கள் செய்தார்கள் அது என்னவென்று தெரியுமா?

1)தீராத விக்கலை நிறுத்தஒரு 30 வினாடிகள் இரு காது துவாரங்களையும்
விரல்களால்அடைத்துக்கொள்ளுங்கள்.நின்று போகும் தீராத விக்கல்!
2) ஒரே ஒரு சிறு கரண்டி அளவுக்குசர்க்கரையைவாயில் போட்டு
சுவையுங்கள்பறந்து போகும் விக்கல்!
3) கொட்டாவியை நிறுத்தகொட்டாவி வருவதற்கான காரணம்Oxigen பற்றாக்குறை தான்.ஒரு நான்கு அல்லது ஐந்து தடவை,நன்கு மூச்சை இழுத்து விடுங்கள்கொட்டாவி போய், நன்கு சுறுசுறுப்பாகிவிடுவீர்கள்.
4) உடல் துர் நாற்றத்தைப்போக்க நீங்கள்குளிக்கும் போது தண்ணீரில்ஒரே ஒரு தக்காளிப் பழத்தின் சாற்றினைகலந்து பிறகு குளிக்கவும்.நாள் முழுக்க புத்துணர்வுடன்இருக்கலாம்
5) வாய் துர்நாற்றத்தால் கஷ்டமாக உள்ளதா கவலை வேண்டாம். எலுமிச்சை சாற்றில் சிறிது உப்புசேர்த்து குடித்து வந்தாலும்,வாயைக் கொப்பளித்து வந்தாலும்வாய் துர்நாற்றம் நீங்கும்.
6)தலைமுடி வயிற்றுக்குள் போய் விட்டதா பயப்பட வேண்டாம். வாழைப்பழத்தினுள் அல்லது வெற்றிலையில்ஒரு நெல்லை வைத்து விழுங்க,முடி வெளியேறி பேதியும் நிற்கும்.
7)வேனல் கட்டி தொல்லையா கவலை வேண்டாம் வெள்ளைப் பூண்டை நசுக்கிசிறிது சுண்ணாம்பு கலந்து கட்டி மீது தடவி வர அது உடையும்.
😎 மூன்று ஏலக்காயை பொடியாக்கி நெய்யை பொடி மூழ்கும் அளவு ஊற்றி அடுப்பில் காய்ச்சவும். பிறகு கலக்கி வடிகட்டி எடுத்து இரண்டு சொட்டுகள் படுத்தவாறு மூக்கில் விட்டு கொண்டால்மூக்கடைப்பு நீங்கும்.
9) நான்கு வெற்றிலை, மூன்று மிளகு ஆகியவற்றை மென்று விழுங்கினால் நீர்க்கோவை, தலைபாரம் ஆகியவை குணமாகும்.
10)சதா மூக்கு ஒழுகி கொண்டே இருந்தால் ஜாதிக்காயை தண்ணீர் விட்டு உரசி அதை சூடேற்றி மூக்கு, நெற்றி மீது பூசினால் மூக்கு ஒழுகுவது நிற்கும்.
11) சுக்கை தட்டி அதை கஷாயமாக போட்டு அதை தேனுடன் கலந்து சாப்பிட்டால் ஜலதோஷம் போய்விடும்.
12) புளியமரப்பூ, உப்பு, மிளகாய், தேங்காய் இவற்றை சேர்த்து அரைத்தால் புளியமரப்பூ சட்னி ரெடி; ருசியானது. இட்லிக்கு தொட்டு கொண்டால் சுவையாக இருக்கும். இருமலை போக்கும்.
13) மாவு அரைக்கும்போது இரண்டு மூன்று வெண்டைகாய்களை நறுக்கி போட்டு, ஒரு தேக்கரண்டி விளக்கெண்ணையும் சேர்த்தால் இட்லி மல்லிப்பூ போல மிருதுவாக இருக்கும்.
14) சமையல் செய்யும்போது கையில் சூடு பட்டுவிட்டால் முட்டையின் வெள்ளைக்கருவை போடுங்கள் அல்லது பீட்ரூட்டை பிழிந்து அதன் சாறை எடுத்து தடவுங்கள்.
15)பாகற்காய் கசப்பு நீங்க, அரிசி களைந்த நீரில் ஐந்து நிமிடம் பாகற்காயை ஊற வையுங்கள்.

திருப்பரப்பு அருவி – கனியமுதம் பொழியும் இயற்கை அழகு!

 திருப்பரப்பு அருவி – கனியமுதம் பொழியும் இயற்கை அழகு!


தமிழ்நாட்டின் அழகிய சுற்றுலா தலங்களில் ஒன்றான திருப்பரப்பு அருவி, கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு பிரபலமான அருவியாகும். இதன் அழகு, தண்ணீரின் சத்தம், சுற்றியுள்ள இயற்கை மற்றும் புனித தலமாக இருக்கும் சிறப்புகள் இதை தனித்துவமாக்குகின்றன.
📍 திருப்பரப்பு அருவியின் இருப்பிடம்
🔹 தமிழ்நாடு – கன்னியாகுமரி மாவட்டம்
🔹 நாகர்கோவிலில் இருந்து சுமார் 35 கி.மீ தொலைவில்
🔹 குலசேகரம் அருகில், கோதையாறு ஆற்றின் ஒரு பகுதி
💦 அருவியின் சிறப்பம்சங்கள்
✅ இயற்கை அழகு – மலைக்கிராம சூழலில் அமைந்துள்ள இது சுற்றுலாப் பயணிகளை அதிகமாக ஈர்க்கிறது.
✅ குளிக்க உகந்த இடம் – அருவியின் கீழ் அமைந்துள்ள சிறிய குளத்தில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுகிறார்கள்.
✅ சுற்றியுள்ள பசுமை – பசுமையான மலைகளும் மரங்களும் சூழ்ந்துள்ளதால், இது ஒரு அமைதியான இடமாகும்.
✅ பரதவாஜேஸ்வரர் கோவில் – அருவிக்கு அருகில் பாரம்பரியமான இந்த கோவில் அமைந்துள்ளது.
⏳ திருப்பரப்பு அருவிக்கு செல்ல சிறந்த காலம்
🍃 ஜூன் – ஜனவரி: பருவ மழை காலத்திலும், இதன் பின்னணியில் உள்ள அணை திறக்கப்படும் போது அருவியின் வெள்ளப்பெருக்கு அதிகமாக இருக்கும்.
🚗 எப்படி செல்லலாம்?
🛣 சாலை வழி – நாகர்கோவில், கன்னியாகுமரி, திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் இருந்து பஸ்கள் மற்றும் தனியார் வாகனங்கள் மூலம் செல்லலாம்.
🚉 ரயில் வழி – நாகர்கோவில் ரயில் நிலையம் அருகிலுள்ளது.
✈️ விமானம் – திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையம் (சுமார் 55 கி.மீ தொலைவில்).
✨ திருப்பரப்பு அருவி – சுற்றுலா, பக்தி, இயற்கை இவை அனைத்தும் ஒரே இடத்தில்!
இயற்கையின் அணைத்து அருமைத் தருணங்களையும் அனுபவிக்க, திருப்பரப்பு அருவிக்கு ஒரு பயணம் சென்று வாருங்கள்! நீங்கள் அங்கு சென்ற அனுபவத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்!

பயணிகள் கனிவான கவனத்திற்கு வண்டி எண் 20682 செங்கோட்டை இருந்து

 பயணிகள் கனிவான கவனத்திற்கு வண்டி எண் 20682 செங்கோட்டை இருந்து தாம்பரம் வாரம் மும்முறை ( ஞாயிறு, வியாழன் மற்றும் சனி )ஆகிய தினங்களில் மட்டும் , செங்கோட்டை :5:10pm

தென்காசி :5:22pm
கடையநல்லூர்:5:37pm
பாம்பு கோயில் சந்தை :5:49pn
சங்கரன்கோவில் :5:59pm
ராஜபாளையம் :6:23pm
ஸ்ரீவில்லிபுத்தூர் :6:39pm
சிவகாசி :6:53pm
திருத்தங்கல்:7:00pm
விருதுநகர் :7:23pm
அருப்புக்கோட்டை :7:48pm
மானாமதுரை :8:28pm
சிவகங்கை :8:48pm
தேவகோட்டை ரோடு:9:13pm
காரைக்குடி:9:33pn
புதுக்கோட்டை:10:04pm
திருச்சிராப்பள்ளி:11:30pm
விருத்தாசலம் :1:00Am
விழுப்புரம்:2:00Am
மேல்மருவத்தூர் :2:53Am
செங்கல்பட்டு :3:23Am தாம்பரம்:4:25Am தேவைப்படுவோர் பயன்படுத்திக் கொள்ளுங்கள்

பயணிகள் கனிவான கவனத்திற்கு வண்டி எண் 20666 திருநெல்வேலி இருந்து

 பயணிகள் கனிவான கவனத்திற்கு வண்டி எண் 20666 திருநெல்வேலி இருந்து சென்னை எழும்பூர் வந்தே பாரத் விரைவுவண்டி உள்ளது

திருநெல்வேலி:6:05Am
விருதுநகர்:7:18Am
மதுரை:7:50Am
திண்டுக்கல்:8:38Am
திருச்சிராப்பள்ளி:9:45Am
விழுப்புரம்:11:46Am
தாம்பரம்:1:13pm
சென்னை எழும்பூர் :1:55pm
குறிப்பு (செவ்வாய் கிழமைகளில் கிடையாது ) அதைப் போல டிக்கெட் கட்டணம் 1155 தேவைப்பட்டால் கேட்டரிங் 308 =1463 இல்லைஎன்றால் 1155 மட்டுமே ) தேவைப்படுவோர் பயன்படுத்திக் கொள்ளுங்கள்

ஒரு உண்மையான சிவன் அடிமை- யோகி ராம் சுரத் குமார்....

 



ஒரு உண்மையான சிவன் அடிமை

தன் தேவைகளுக்காகக்
கவலை அடையத் தேவையில்லை.
அவனின் எஜமானன்
அவனது தேவைகள் அனைத்தையும்
நிறைவேற்றி வைப்பான்.
எனவே அவன் கவலையற்று, நிச்சிந்தையாக
சுதந்திரமாக இருக்கலாம்.
இதன் உட்பொருள்,
என் தந்தையிடம் நீ
பூர்ண சரணாகதியடைந்த
அடியவனாக இருந்தால்
நீ உன்னை நினைத்துக்
கவலையுறத் தேவையில்லை.
என் தந்தை உனது தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றுவார்.
நீ கவலையற்று, நிம்மதியாக,
சுதந்திரமாக இருக்கலாம்.
யோகி ராம் சுரத் குமார்....

Featured Post

ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதைகள் இருக்கிறது

ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதைகள் இருக்கிறது என்பதையும், ஓர் பலாப்பழத்தைப் பிளக்காமல் அதன் உள்ளிருக்கும் சுளையின் எண்ணிக்கையைய...