Tuesday, July 9, 2024

நீங்கள் ஒரு மகாராணி என்று...

நடுத்தர வர்க்க ஆணுக்கு வாழ்க்கைப்பட்டு வரும் பெண்தான் உண்மையிலேயே மஹாராணிகள்....!

பெரிய இடத்துக்கு வாழ்க்கைப்பட்டு போகிறவர்கள் அடிமை வாழ்க்கை வாழ வேண்டும்... இல்லை என்றால் தனெக்கென ஒரு பாதையை அமைத்துக்கொள்ள வேண்டும்... !

இவர்களிடம் பணம், நகைகள் குவிந்திருக்கலாம்.... ஏறினால்/இறங்கினால் குளிரூட்டப்பட்ட வாகனங்கள் இருக்கலாம்..... அடுக்கு மாடி வீடிருக்கலாம்... அதட்டி வேலை வாங்க ஆள் இருக்கலாம்... ஆனாலும் அவர்கள் பணக்கார உரிமையற்றவர்கள் தான்...!

அடித்தட்டு ஆணுக்கு வாழ்க்கைப்படுபவர்கள் சரிக்கு சரியாய் உழைக்க வேண்டும்.. வெளியில் கணவனுக்கு சமமாகவும், வீட்டில் கணவனுக்காகவும் உழைக்கவும் அல்லது அதற்கு மேலும் கூட உழைக்க வேண்டும்...!

குடிகார கணவெனென்றால் அவனுக்கும் சேர்த்து உழைக்க வேண்டும்... இங்கே அதிகாரமிக்க அடிமையாகத்தான் பெண் வாழ முடியும்...

நடுத்தர குடும்ப ஆணுக்கு வாழ்க்கைப்பட்டவர்களுக்கு சம்பாதிக்க உழைக்க வேண்டிய கட்டாயமில்லை...!
அவர்கள் உழைக்க தயாரானாலும் தடை இல்லை....!

கணவனின் வருமானத்தை கணக்கிட்டு செலவு செய்யவோ, சேமிக்கவோ முழு அதிகாரம் உண்டு...!

வேண்டியவர்களை சேர்க்கலாம்... வெறுப்பவர்களை விலக்கலாம்.. எல்லா முடிவுகளையும் தாமே எடுக்கலாம்....!

வியர்வையோடு தூங்கினாலும் பாதுகாப்பாய், ஆதரவாய் தூங்கலாம்.... பேருந்தில் பயணித்தாலும் உற்றவர்களுடன் பயணிக்கலாம்...!

கடன் வாங்கினாலும் கவலை பட்டாலும் உனக்கு நான் எனக்கு நீ என சாய்ந்துகொள்ள தோளிருக்கும் ... இன்ஸ்டால்மெண்டில் வாங்கினாலும் சந்தோஷத்தை ஒவ்வொரு நொடியும் உணரலாம்..வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்ப தாமதமானால் தேடி வர ஆளிருக்கும்...

இப்படி ஆயிரமாயிரம் இருக்கும்...

தன் பொறுப்புணர்ந்து வாழும் நடுத்தர வர்க்க பெண்ணா நீங்கள்..?

உரக்கச்சொல்லுங்கள் இந்த உலகிற்கு.... நீங்கள் ஒரு மகாராணி என்று....!

காலம் கடந்து தெரிந்து கொண்ட உண்மைகள்....

காலம் கடந்து தெரிந்து கொண்ட உண்மைகள்....
1. அம்மா அப்பாவைத் தவிர வேறு யாரும் நம்மீது கடைசிவரை சுயநலமில்லாத உண்மையான அன்பு வைத்திருப்பதில்லை.

2. மதிப்பெண் சான்றிதழும் பட்டப்படிப்பு சான்றிதழும் மட்டுமே நல்ல வேலையை அமைத்துக் தராது. ஜால்ரா அடிக்க வேண்டும்...

3. ஆசிரியர்கள் கூறியது திட்டியது அனைத்துமே நம் நன்மைக்கு மட்டுமே

4. பணம் இருந்தால் மட்டுமே மதிப்பும் மரியாதையும் தேடி வரும். நம் நல்லவரா கெட்டவரா என்பதையும் பணமே தீர்மானிக்கும்.

5. கடின உழைப்பு மட்டுமே முன்னேற்றத்தை கொடுக்கும்.

6. நாம் கீழே விழுந்தால் அதை பார்த்து சிரிக்க ஒரு கூட்டமே காத்துக் கொண்டிருக்கிறது.

7. நம்மளை தவிர நமக்கு உதவி செய்ய வேறு யாருமே இல்லை. தன் கையே தனக்கு உதவி.

8. குணத்தை பார்க்காமல் அழகையும் பணத்தையும் பார்த்து காதல் செய்வது தவறு.

9. போனிலேயே மூழ்கி இருந்தால் எதையும் சாதிக்க முடியாது என்று பெற்றோர் கூறியது சரியே.

10. சோம்பேறித்தனமே பல தீமைகளுக்கும் தோல்விகளுக்கும் அடிப்படை காரணம்.

இவை அனைத்தையுமே நாம் காலம் கடந்த பிறகே தெரிந்து கொள்கிறோம்.

அத்ரிமலை கோயில் பயணம் மிக சிறப்பாக இருந்தது.

#தென்காசி_மாவட்டம் #ஆழ்வார்குறிச்சி கடனா நதி அனண ஒட்டிய வனப்பகுதியில் அத்ரிமலை கோயில் பயணம் மிக சிறப்பாக இருந்தது.

வடக்கே உள்ள கேதார்நாத் திருத்தலம் போன்று தெற்கே மகிமை பெற்று திகழ்கின்றது அத்ரிநாத் எனப்படும் அத்ரிமலை கோயில்.

ஓம் நமசிவாய

அனுசுயா தேவி சமேத அத்ரி மகரிஷி திருவடிதாள் போற்றி போற்றி 

#TenkasiDistrict

#தென்காசி
#temple

தென்காசித் தலபுராணம்

*தாய்க்கு பின் தாரம் மறந்து விடாதீர்கள்

*இல்லற வாழ்வில் கணவன்-மனைவி தாம்பத்திய உறவை வர்ணிக்கும் அருமையான கண்களில் நீரை வரவழைக்கும் வரிகள்.*🥺

📷 ஒரு கணவர் அவரது மனைவியுடன் வாழ்ந்த வாழ்க்கையின் அனுபவத்தை எழுதுகிறார்...

📷 எழுபத்தைந்து வயதில்..... ஆதரவு இன்றி நிக்குது மனசு...

📷 நாற்பதைந்து வருடம் - ஒரு நாளாவது அவளை கொண்டாடி இருக்கலாம்....

📷 என் கோபத்தை தள்ளுபடி செய்து ஒரு நாளாவது அவளை கொண்டாடி இருக்கலாம்....

📷 அவள் சமையலை ஒருமுறையாவது நான் மனம் நிறைய பாராட்டி இருக்கலாம்...

📷 ஒரு நாளாவது நான் சமையல் செய்து அவளுக்கு ஊட்டி இருக்கலாம்...

📷 ஒரு நாளாவது அவளுக்கு பதில் - நான் அவளது துணியையும் சேர்த்து துவைத்து இருக்கலாம்...

📷 ஒரு நாளாவது TV யையும், Mobil லையும் அணைத்துவிட்டு, அவளை கொஞ்சி இருக்கலாம்...

📷 ஒரு நாளாவது வேலை தளத்தின் கோபத்தையும் எரிச்சலையும் அங்கேயே விட்டு விட்டு வந்து இருக்கலாம்...

📷 ஒரு நாளாவது, என் விடுமுறை நாட்களில் - அவளை வெளியிளே அழைத்து சென்று இருக்கலாம்...

📷 ஊர் ஊராய் சுற்றி அவளை உற்சாகப்படுத்தி இருக்கலாம்...

📷 அவள் விரும்பி கேட்காத போதும் - ஒரு புடவை வாங்கி கொடுத்து இருக்கலாம்...

📷 ஒரு மாசமாவது− என் முழு சம்பளப் பணத்தை அவளிடமே கொடுத்து இருக்கலாம்...

📷 ஒரு நாளாவது காலையில் அலாரத்தை கொஞ்சம் அணைத்து வைத்து அவளை தூங்க விட்டு இருக்கலாம்...

📷 நீ சாப்பிட்டியா என்று அவளை ஒரு நாளாவது கேட்டு இருக்கலாம்...

📷 நீயும் வா என்னுடன் வந்து சாப்பிடு என்று ஒரு நாளாவது சொல்லி இருக்கலாம்...

📷 அவள் உடல் நலத்தைப் பற்றி ஒருமுறையாவது விசாரித்து இருக்கலாம்...

📷 அவள் தன்னை கவனிப்பதை விடுத்து பிள்ளைகளை மட்டும் கவனிப்பதை கண்டு நான் கொஞ்சம் - அவளை

கவனித்து இருக்கலாம்...

📷 அவள் நோயில் விழுந்த போது நான் கடன் பட்டேனும் அவளை காப்பாற்றி இருக்கலாம்...

📷 என் தாயே! தாரமே ! − நீ என்னுடன் இருந்த போது நான் கம்பீரமாய் வாழ்ந்தேன்...

📷 நீ என்னை விட்டு போனதும் நான் பலமுறை கால் தடுக்கி விழுகிறேன்...

📷 என்னை தூக்கி விடவும் மூத்தவனுக்கு நேரம் இல்லை...

📷 தேனீர் ஏதாவது போட்டுத்தரக் கேட்டால் இளையவளுக்கு சினம் வருது...

📷 என் மனைவியே உன்னை நான் தினமும் கொண்டாடி இருக்க வேண்டும்...

📷 நான் தவறுகள் இழைத்ததற்கு என்னை நீ மன்னித்து விடு...

📷 மூச்சு இழந்த - உன் புகைப்படத்துக்கு தினம் தினம் முத்தமிட்டு உன்னிடம் மன்னிப்பு கேட்கிறேன்...

மனைவியே! என்னை மன்னித்து விடு...

📷 மீண்டும் ஒரு பிறப்பு இருக்கும் என்றால் நீயே என் மனைவியாய் வந்து விடு... நான் உன்னை கொண்டாட வேண்டும்...

📷 எழுபத்தைந்து வயதில்... இந்த நிலை யாருக்கும் வராமலிருக்க....

உங்கள் மனைவியை தினமும் நீங்கள் நேசியுங்கள்

வாழ்க்கை வசந்தமாகும்.

*தாய்க்கு பின் தாரம் மறந்து விடாதீர்கள்*🤗

வீண் ஆடம்பரமும் வறுமையே..!

வீண் ஆடம்பரமும் வறுமையே..! 

உலகப் புகழ்பெற்ற 27 வயதான கால்பந்து வீரர் "சாடியோ மானே செனகல்" sadiyemane (மேற்கு ஆப்பிரிக்கா),

இந்திய ரூபாயில் வாரத்திற்கு ரூ .140 மில்லியன் (14கோடி) சம்பாதிப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வளவு சம்பாதிக்கும் அவர் டிஸ்பிளே உடைந்த மொபைலுடன் பல இடங்களில் காணப்பட்டார்.

ஒரு நேர்காணலில்,

அதைப் பற்றி அவரிடம் கேட்கப்பட்ட போது...

நான் அதை சரி செய்வேன்.

டிஸ்பிளே மாற்றி விடுவேன் என்றார்...

நீங்கள் ஏன் டிஸ்பிளே மாற்ற வேண்டும்...

பல கோடிகள் சம்பாதிக்கும் நீங்கள் புதிய மொபைலே வாங்கலாமே என்று அவரிடம் கேட்கப்பட்ட போது,

என்னால் ஆயிரம் மொபைல்கள்,

10 ஃபெராரிஸ்,

2 ஜெட் விமானங்கள்,

டயமண்ட் கடிகாரங்களை வாங்க முடியும், ஆனால் இதையெல்லாம் நான் ஏன் வாங்கனும்?...

நான் வறுமையைப் பார்த்திருக்கிறேன்...

சாப்பாட்டிற்கு கஷ்டப்பட்டுள்ளேன்...

என்னால் படிக்க முடியவில்லை...

எனக்கு காலணிகள் இல்லை...

காலணிகள் இல்லாமல் விளையாடுவேன்...

நல்ல உடைகள் இல்லை...

சாப்பிடவில்லை...

ஆனால்...

இன்று நான் நிறைய பணத்தை சம்பாதிக்குறேன்.

அதனால்தான் சம்பாதித்த பணத்தில் மக்கள் படிக்கும்படி பள்ளிகளை உருவாக்கியுள்ளேன்.

என் நாட்டில் உள்ள ஏழைக் குழந்தைகளுக்கு புதிய காலணிகளும், உடைகளும், உணவும் கொடுக்குறேன்.

வசதியாக வாழ்வதற்கு பதிலாக அதை என் மக்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்."

என்றார் அந்த அற்புதமான மனிதர்.

#needsraja #childalertalliance 
#football #poverty

பாண தீர்த்தம் அருவி



நமது தாமிரபரணி தாயின்‌ முதல் அருவி....
பாண தீர்த்தம் அருவி......

Thirunelveli district, பாபநாசம் ஊர் 

அகோரிகள்

அகோரிகள்..

நிர்வாண உடலெங்கும் சாம்பல் பூசிக்கொண்டு, நீண்ட ஜடாமுடிகளோடு உலா வரும் இவர்கள்தான் கும்பமேளாவில் முதலில் குளிக்கும் உரிமை பெற்றவர்கள். 

ஹரி ஓம் ஷம்போ சிவ ஷம்போ மகாதேவ் அமைதியை தேடுங்கள் அன்பே சிவம்

நுனி நாக்கு ஆங்கிலத்தில் உரை நிகழ்த்துவதில்லை, தங்க நாற்காலியில் அமர்வதில்லை, கைகளை உயர்த்தி ஆசீர்வதிப்பதில்லை, ‘எல்லாவற்றையும் நான் பார்த்துக் கொள்கிறேன்’ என மக்களுக்கு ஆறுதல் வார்த்தைகள் சொல்வதில்லை, டி.வி கேமராவைப் பார்த்ததும் புன்னகை பூப்பதில்லை. ஆனாலும் இவர்களை விடாமல் மக்கள் கூட்டம் துரத்துவது ஏன்?

‘நங்கா’ என்ற இந்தி வார்த்தைக்கு ‘நிர்வாணம்’ என அர்த்தம். ‘நங்கா சாது’ என்ற பெயர்தான் பேச்சுவழக்கில் ‘நாகா சாது’ ஆனது. அகோரிகள் எனவும் இவர்கள் அழைக்கப்படுகிறார்கள். ‘அகோரப் பசியோடு மனித உடல்களைத் தின்பவர்கள் என்பதால் இப்படி பெயர் பெற்றார்கள்’ என பலர் தப்பாக திகில் கதை விட்டிருக்கிறார்கள். ‘கோரம்’ என்றால் கொடூரமானது; 

‘அகோரா’ என்றால் கால பைரவர். அவரை வணங்கும் சாதுக்கள் என்பதால் இவர்களுக்கு இந்தப் பெயர்.

நாகா சாதுக்கள் தத்தாத்ரேயர் உருவாக்கிய படை என்பார்கள். சனாதன தர்மத்தைக் காப்பாற்றுவதற்கு இவர்களை சங்கராச்சாரியார் பயன்படுத்தினார். அறிவாலும் ஆயுதத்தாலும் எப்போதும் சண்டையிடத் தயாராக இருக்கும் படை இவர்கள். மரணத்தைப் பற்றிய அச்சம் இவர்களுக்குத் துளியும் கிடையாது. வாள், மண்டை ஓடு குத்திய திரிசூலம், ஈட்டி என ஆயுதங்களை ஏந்தியபடி இவர்கள் பயணம் மேற்கொள்வார்கள். எந்த ஊருக்குப் போனாலும் சுடுகாட்டில்தான் தங்குவார்கள். 

இந்தியாவிலும் நேபாளத்திலும் இமயமலையை ஒட்டிய பகுதிகளில் இவர்கள் இருக்கிறார்கள். நாகா சாதுக்கள் இருக்குமிடம் ‘அகாரா’ எனப்படும். சைவம், வைணவம் என சகல பிரிவிலும் சேர்த்து மொத்தம் 16 அகாராக்கள் உண்டு. இந்த அகாராக்களை சாராமல் தனியாக நாகா சாதுக்கள் கிடையாது. ஏதோ ஒரு குகையில் தனியாக அடைந்து கிடந்து தவம் இருப்பதெல்லாம் வழக்கம் இல்லை. 

நாகாக்கள் கூட்டமாகவே இருக்கிறார்கள். ஒவ்வொரு குழுவுக்கும் தலைவர் உண்டு. சும்மா வீட்டில் சண்டை போட்டுக்கொண்டு வருகிற எல்லோரும் நாகா ஆகிவிட முடியாது. உறவுகளை முற்றிலுமாகத் துண்டிக்க வேண்டும்; சோப்பு, சீப்பு, இனிப்பு என உலக வாழ்க்கை இன்பங்களைத் தரும் எந்தப் பொருளையும் பயன்படுத்தக் கூடாது; ஆசைகளைத் துறக்க வேண்டும்; உடைகள்தான் குடும்ப உறவோடு ஒரு மனிதனைப் பிணைக்கிறது என்பதால் அதையும் துறக்க வேண்டும். விபூதி சாம்பலை உடலில் பூசிக்கொள்ள வேண்டும். இமயமலைச் சூழலின் கடுங்குளிரிலிருந்து இவர்களை இந்த சாம்பலே காக்கிறது. உடலோடு இணையாத பொருளாக இவர்கள் அணிந்திருப்பது ருத்ராட்ச மாலை மட்டுமே! நீண்டிருக்கும் தலைமுடியை சடை போல சுருட்டி தலையில் கொண்டை போல வைத்திருப்பார்கள். சுடுகாட்டு சாம்பலைப் பூசியிருந்தாலும், இவர்கள்மீது துர்நாற்றம் வீசுவதில்லை.

பிறப்பதும் இறப்பதும் மறுபடியும் பிறப்பதுமான உலகச் சுழற்சியிலிருந்து தாங்கள் விடுபட்டு மோட்சத்தை அடைவதாக நாகாக்கள் நம்புகிறார்கள். காடுகளில் கிடைக்கும் மூலிகைகளை உண்டு வாழும் இவர்களுக்கு வயதானாலும் முடி நரைப்பதில்லை; கிழப்பருவத்தின் சுவடுகளும் உடலில் தெரிவதில்லை. யோகா, தியானம், மூலிகை ஆராய்ச்சி என இவர்களின் தினப்பொழுதுகள் கழிகின்றன. தங்களுக்குள் கூட இவர்கள் அநாவசியமாக ஒரு வார்த்தை பேசிக் கொள்வதில்லை. 

கும்பமேளா போன்ற காலங்களில் மட்டுமே மக்கள் கூடும் இடங்களுக்கு இவர்கள் வருகிறார்கள். அதன்பின் அமைதியாக நடந்தே இமயமலைக் காடுகளுக்குச் சென்றுவிடுகிறார்கள். பொதுவாக இவர்கள் கூச்ச சுபாவிகள். பொதுமக்களை தங்கள் அருகில் நெருங்க விட மாட்டார்கள். 

சண்டையில் எத்தனை பேரையும் எதிர்கொள்ளும் உடல்பலமும், மாயங்களை நிகழ்த்தும் சக்தியும் இவர்களுக்கு உண்டு என்பது பலரின் நம்பிக்கை. இறந்தவர்களை இவர்கள் உயிர்பிழைக்க வைத்த அதிசயமும் நடந்திருக்கிறதாம். ஒருமுறை டார்ஜிலிங் மன்னரை இப்படி நாகா சாதுக்கள் உயிர்பெற வைத்திருக்கிறார்களாம். இந்த வித்தைகளைக் கற்றுக்கொள்ளும் ஆசையில் பலர் இமயமலைக் காடுகளில் நாகா சாதுக்களைத் தேடி அலைகிறார்கள். 

நாகா சாதுக்களின் 16 அகாராக்களில் ஸ்ரீபஞ்ச்யாதி அகாரா மட்டும் ஒவ்வொரு கும்பமேளாவிலும் புதிதாக சாதுக்களை சேர்த்துக் கொள்கிறது. ‘பால நாகா சாது’ என்ற பெயரோடு இவர்களுக்கு தீட்சை தரப்படும். இவர்களுக்கு கோவணம் மட்டும் அணிந்துகொள்ள அனுமதி உண்டு. கடுமையான பரீட்சைகளில் தேறியே இவர்கள் ‘நாகா சாது’ ஆக முடியும். ஐந்து குருக்களிடம் தங்கள் மன உறுதியை இவர்கள் நிரூபிக்க வேண்டும். இடையில் சிறு சலனம் ஏற்பட்டாலும் வீட்டுக்கு அனுப்பி விடுவார்கள். 

எல்லாம் துறந்த நாகாக்கள், கும்பமேளாவின்போது மணப்பெண் போல தங்களை அலங்கரித்துக் கொண்டு குளிக்கிறார்கள். நெற்றியில் குங்குமப் பொட்டு, கண்களில் மை, உடலெங்கும் சந்தனம், கழுத்திலும் கைகளிலும் இடுப்பிலும் மாலை, கம்மல், வளையல் எல்லாம் அணிந்துகொண்டு மங்களகரமாக குளிக்கிறார்கள். 

அதன்பின் சாம்பலில் கலக்கிறது வாழ்க்கை

அன்புடன்
 அன்பே சிவம் கணேஷ் 

மற்றவர்கள் பெருமையாக பேசவேண்டும் என்று வாழ்வதைவிட, உங்கள் நிம்மதிக்காக வாழுங்கள்....

"பெருமை" உங்களுக்கு என்ன செய்யும்!

30 ஆண்டுகளுக்கு பிறகு எனது வகுப்பு தோழனை அன்று சந்தித்தேன்.

நான் அவரை ஒரு ஹோட்டல் லாபியில் மீண்டும் பார்த்தபோது, அவர் எளிமையானவராக இருந்தார்.

அவர் எளிய உடைகளை அணிந்திருந்தார். 

நான் கொஞ்சம் நிம்மதியாக உணர்ந்தேன்.

அவர் என்னிடம் நடந்து வந்து என்னை மீண்டும் பார்த்ததில் மகிழ்ச்சி என்றார். என்னுடன் ஒப்பிடுகையில் என்னைவிட கொஞ்சம் வசதி கம்மியானவராகவே தெரிந்தது.

நாங்கள் தொலைபேசி எண்களையும், தொடர்பு விவரங்களையும் பரிமாறிக்கொண்டோம்.
என்னுடையதை கொடுத்தபோது அவர் முகத்தில் ஒரு மகிழ்ச்சியைக் காண முடிந்தது.

பெருமிதத்துடன் எனது புத்தம் புதிய ரேஞ்ச் ரோவரில் அவரை வீட்டில் இறக்கி விடுகிறேன் என்று அவரிடம் சொல்லி அதை அவரிடம் காட்டினேன்.

அவர் மறுத்து, அவர் ஏற்கனவே தனது காரை வரச்சொல்லி இருப்பதாக கூறினார். 
அது பழையதாகத் தோன்றியது.

'2001 ஹோண்டா'

மறுநாள் அவரை என் வீட்டில் மதிய உணவுக்கு அழைத்தேன்.  
எனது வெற்றியையும் செல்வச் செழிப்பையும் அவருக்குக் காட்ட வேண்டும்.

நான் வசித்த பார்க்வியூவுக்கு அவர் காரில் வந்தார். 
எனது வீட்டைப் பார்த்து அவர் ஈர்க்கப்பட்டார்.
அந்த வீட்டை லோன் போட்டு கடனில் தான் வாங்கி இருந்தேன்.
நாங்கள் மதிய உணவு சாப்பிட்டோம். 

அவர் சிறு வணிகம் மற்றும் ரியல் எஸ்டேட்டில் இருப்பதாக என்னிடம் கூறினார்.  
நான் அவருக்கு எப்படி உதவுவது என்று கேட்டேன். 
அவர் நலமாக இருப்பதாக கூறி மறுத்து விட்டார். 
ஆர்வமிருந்தால் கொஞ்சம் கடனை அடைக்க உதவுகிறேன் என்று கூட சொன்னேன்... 
அவர் என்னைப் பார்த்து சிரித்தார்.

அவர் என்னை விரைவில் அவரது வீட்டிற்கு அழைப்பதாக என்னிடம் கூறினார். 
அவருடைய பழைய கார் வந்தது. என்னிடம் இருப்பவற்றிற்கு நான் கடவுளுக்கு நன்றியுள்ளவனாக இருந்தேன். 

“விரல்கள் அனைத்தும் சமமாக இல்லை” என மனதுக்குள் நினைத்துக்கொண்டேன்...
நான் அதிர்ஷ்டசாலி. 
நான் நல்ல கம்பெனியில் வேலை செய்கிறேன்.

இரண்டு வாரங்கள் கழித்து, அவரைப் பார்க்க நானும் என் மனைவியும் சென்றோம்.
அந்த நண்பனின் அந்தஸ்தில் அவள் ஈர்க்கப்படாததால் கூட வர தயங்கினாள்.

கல்லூரியில் நாங்கள் நெருங்கிய நண்பர்கள் என்பதை சொல்லி என்னால் அவளை எளிதில் சமாதானப்படுத்த முடிந்தது.

எஸ்டேட்டைப் பார்த்தோம். 
அவரது வீட்டிற்குச் செல்லும் வழியைக் கேட்டோம். 
எங்களை வழிநடத்துபவர்கள் அவருடைய பெயரை கேட்டவுடன் மரியாதையுடன் பேசினார்கள்.

அது ஒரு எளிய ஆனால் அழகான வீடு. ஒரு 4 படுக்கையறை பங்களா. முன்னால் 4 கார்கள் நிற்பதைப் பார்த்தேன். 

நாங்கள் அவரது வீட்டிற்குள் நுழைந்தோம். 
அது உள்ளே மனதை தொடும் அழகுடன் எளிமையாக நேர்த்தியாக இருந்தது. எங்களை அன்புடன் வரவேற்றார்.

மதிய உணவு நன்றாக பரிமாறப்பட்டது.

மதிய உணவின் போது, அவர் எனது எம்.டி பற்றி கேட்டார். 
அவர்கள் இருவரும் நண்பர்கள் என்று கூறினார். 
அருகில் இருந்த அவரது டேபிள் ஒன்றில் கம்பெனி கிஃப்ட் ஒன்றைப் பார்த்தேன். நான் பணிபுரிந்த கம்பெனியின், சுமார் 38% பங்குகளை அந்த கம்பெனி வைத்திருந்தது. 

அவரிடம் இதுபற்றி விசாரித்தேன். அவர் சிரித்தார் . அவர் என்னிடம், அந்த கம்பெனி தன்னுடையது என்று சொன்னார்.
இந்த பெரிய தோட்டமும் அவருக்குச் சொந்தமானது என்றார்.

எப்போது "சார்" என்று கூப்பிட்டேன் என்று தெரியவில்லை... 
எனக்கும் அவர் மீது பிரமிப்பு ஏற்பட்டது.

பணிவு பற்றி நான் ஒரு பாடம் கற்றுக்கொண்டேன்.
ஒரு பெரிய பாடம். 

தோற்றம் ஏமாற்றும்.

என் அசௌகரியத்தை அவர் கவனித்தார்.

வீட்டிற்குத் திரும்பும்போது நான் மிகவும் அமைதியாக இருந்தேன். 

என் மனைவி பணிவாகவும் மிகவும் அமைதியாகவும் இருந்தாள். 

அவள் மனதில் உள்ள எண்ணங்களை என்னால் உணர முடிந்தது. 

கார் கண்ணாடியில் நான் என்னையே பார்த்தேன். 

கடன்கள், அதிக சுமைகள் ஆகியவற்றில் வாழ்கிறேன், ஆனால் எனக்குச் சம்பளம் கொடுப்பவர் மிகவும் அமைதியானவர், எளிமையான வாழ்க்கை வாழ்கிறார்..!

உண்மையில் ஆழமான ஆறுகள் அமைதியாக ஓடுகின்றன..!

மற்றவர்கள் பெருமையாக பேசவேண்டும் என்று வாழ்வதைவிட, உங்கள் நிம்மதிக்காக வாழுங்கள்....
🙏🙏🙏❤️❤️❤️ 

#படித்ததில்_பிடித்தது

Featured Post

ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதைகள் இருக்கிறது

ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதைகள் இருக்கிறது என்பதையும், ஓர் பலாப்பழத்தைப் பிளக்காமல் அதன் உள்ளிருக்கும் சுளையின் எண்ணிக்கையைய...