அன்பான பொதுமக்களே கோபிசெட்டிபாளையம் முதல் திருச்செந்தூர் கோவில் வரை செல்கிற TNSTC பேருந்தை பற்றி பார்ப்போம்.
இந்த பேருந்து கோபிசெட்டிபாளையம்
டிப்போ சார்பாக இயக்கப்படுகிறது.
இந்த பேருந்து தினசரி இரண்டு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த பேருந்துக்கு மக்கள் கூட்டம் அதிகமாகவே இருக்கிறது. இந்த பேருந்து காலை சரியாக 8 மணிக்கு கோபிசெட்டிபாளையம்
பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும்.
இது குன்னத்தூர் , பெருமாநல்லூர் , திருப்பூர் புதிய பேருந்து நிலையம் , திண்டுக்கல் புறவழி சாலை வழியாக மதுரை மாட்டுத்தாவணி , தூத்துக்குடி வழியாக திருச்செந்தூர் கோவில் வாசலுக்கு செல்கிறது. இதே மாதிரி மாலையில் சரியாக 8 மணிக்கு கோபிசெட்டிபாளையம்
பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும்.
இது குன்னத்தூர் , பெருமாநல்லூர் , திருப்பூர் புதிய பேருந்து நிலையம் , திண்டுக்கல் புறவழி சாலை வழியாக மதுரை மாட்டுத்தாவணி தூத்துக்குடி வழியாக திருச்செந்தூர் கோவில் வாசலுக்கு செல்கிறது. மறுமார்க்கமாக திருச்செந்தூர் கோவில் வாசல்பேருந்து நிலையத்திலிருந்து காலை சரியாக 7 மணிக்கு கோபிசெட்டிபாளையம்க்கு புறப்படும். இதே மாதிரி மாலையில் 7 மணிக்கும் ஒரு பேருந்து என தினசரி இரண்டு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த பேருந்துகளுக்கு முன் பதிவு வசதி உள்ளது. ஆதலால் TNSTC app download பண்ணி முன் பதிவு செய்தும் பயணிக்கலாம். இந்த பேருந்து திருப்பூர் தடத்தில் செல்வதால் , மக்கள் ஆதரவு அதிகமாகக் இருக்கிறது. இந்த பேருந்து புறவழி சாலை வழியாக செல்ல கூடியதாகும்.
இந்த பேருந்தின் பயண நேரம் 9:30hrs ஆகும் .கோபிசெட்டிபாளையம்
முதல் திருச்செந்தூர் வரைபயண கட்டணம் ஒரு நபருக்கு₹328. பொதுமக்களே நம் பேருந்து வேகம் கட்டுப்பாட்டுடன் போனாலும் , பாதுகாப்போடு இயங்குகிறது. என்னைக்குமே நம் அரசு பேருந்துகள் தான் பாதுகாப்பு . அதனால் அரசு பேருந்துகளில் பயணம் மேற்கொள்ளுங்கள்.