கண்களைக் காக்கும் பொன்னான உணவுகள்
உண்மையில்
பொத்தி பாதுகாக்க வெண்டிய கண்ணை நாம் மொபைல்,
கணிப்பொறி என எப்போதும் அவற்றை பார்த்துக் கொண்டு அதற்கு சிரமத்தை
தந்துவிடுகிறோம். கண் நரம்புகள் பாதித்து சிறு வயதிலேயே கண்ணாடி போடுபவர்கள்
இப்போது மிக அதிகம். குடும்பத்தில் கண்குறைபாடு இருந்தால் அது உங்களுக்கும்
வரலாம். உணவினால் மாலைக் கண் நோயினால் உண்டாகும் பார்வைக் கோளாறை தடுத்து கண்
பார்வையை அதிகரிக்கச் செய்யும் வாய்ப்புகள் அதிகம்.
நல்ல உணவுகள் கண் பார்வையை அதிகப்படுத்தும். நரம்புகளை வலுப்படுத்தும். ஆரோக்கியமான புரதம் மற்றும் விட்டமின்கள் கண்களுக்கு சேரும்போது வயதானாலும் தெளிவாக பார்க்க முடியும் . கீழே சொல்லப்பட்டிருக்கும் உணவுகளை சாப்பிட்டால் உங்கள் கண்களுக்கு எந்தவித பாதிப்பும் வராமல் பார்வையை அதிகரிக்கச் செய்யும்.
கிவி :
கிவி மிகச்
சிறந்த சத்துக்களை கொண்டது. கண்களில் உண்டாகும் சிரமம் மற்றும் அழுத்தத்தை
குறைக்கும். கண் பார்வையை தெளிவுபடுத்தும். மழைக்காலத்தில் கொரோனாவுடன் இந்த
நோய்த்தொற்றும் ஏற்பட அதிக வாய்ப்பிருக்கு... உஷாரா இருங்க...
ஆரஞ்சு :
ஆரஞ்சில் அதிக
விட்டமின் சி உண்டு. கண்களில் உண்டாகும் செல்சிதைவுகளை தடுக்கிறது. கண் பார்வையை
அதிகரிக்கச் செய்யும். எச்சரிக்கை! இந்த டீ குடிச்சா நன்மையை விட தீமை தான்
அதிகமாக இருக்குதாம்...
கேரட் :
கேரட்
கண்ணிற்கான சிறந்த உணவு. அதிலுள்ள பீட்டா கரோடின் கண் பார்வையை தூண்டும். தினமும்
ஒரு கேரட் சாப்பிடுங்கள்.முடிந்த வரை வாரம் ஒரு நாட்களாவது சாப்பிடுங்கள்
மஞ்சள் :
கலப்படமில்லாத மஞ்சள் உங்களுக்கு பலவித நோய்களிலுருந்து
காக்கிறது. ஆனால் நாம் துரதிருஷ்டவசத்திடம் இருக்கிறோம். ராசயனங்கள் கலந்த
மஞ்சள்தான் வணிகத்தில் கிடைக்கிறது. ஆகவே மஞ்சள் பொடி ரெடிமெட்டாக வாங்காமல்
மஞ்சள் கிழங்கை வாங்கி பொடி செய்து கொள்ளுங்கள். இது கண்களில் 40 வயதிற்கு மேல் கேடராக்ட் வருவதை
தடுக்கும்.
முட்டை :
முட்டையை
தவறாமல் வாங்கி சாப்பிடுங்கள். நாட்டு முட்டைகளையே வாங்கிடுங்கள். இவை கண்
பார்வையை தூண்டும். கிட்டப் பார்வை தூரப் பார்வைகளை விரட்டலாம்.
அவகாடோ :
இதுவும் கண்பார்வையை அதிகரிக்கச் செய்யும்
சிறந்த உணவுகளில் ஒன்றாகும். குழந்தைகளுக்கு கொடுத்து வந்தல் பின்னாளில் வரும்
குறைபாடு பிரச்சனைகள் வராது.
நட்ஸ் :
வேர்க்கடலை, பாதாம், முந்திரி
ஆகியவை கண்பார்வையை அதிகரிக்கச் செய்யும். விட்டமின் ஈ அதிகம் இருக்கிறது.
கண்பார்வைக்கு விடமின் ஈ யும் அவசியமான ஒன்றாகும்.
Other foods
இது தவிர அரிசி,
கோதுமை, பார்லி, பச்சைப்
பயறு, கடலைப் பருப்பு, உளுந்து,
சோளம் போன்ற உணவுகள் கண்ணுக்கு நன்மை தருபவை. வெந்தயம், வெந்தயக் கீரை, முருங்கைக்காய், முருங்கைக்கீரை, முட்டைக்கோஸ், பசலைக்கீரை, கொத்தமல்லி, கறிவேப்பிலை,
புதினா, ஜீரகம், கருமிளகு,
லவங்கம், கேரட், உருளைக்கிழங்கு,
வெங்காயம், பூண்டு, சர்க்கரை
வள்ளிக்கிழங்கு, முள்ளங்கி, பீட்ரூட்
போன்ற காய்கறிகளையும் தவறாது உட்கொள்ள வேண்டும். பேரீட்சைப்பழம், அத்திப்பழம், மாதுளம்பழம், திராட்சை,
இயற்கையாக பழுத்த மாம்பழம், ஆப்பிள், நெல்லிக்கனி, வாழைப்பழம், ஆரஞ்ச்,
கொய்யா, தக்காளி, கருப்பு
திராட்சை, எலுமிச்சம்பழம், பப்பாளி,
அன்னாசி, பலாப்பழம் முதலியவை கண்களுக்கு
ஏற்றது. எள் எண்ணெய், மீன் எண்ணெய், நதி
மீன்கள், கோழி, சுறா மீன், ஆட்டின் ஈரல், முட்டை, பசும்
பால், ஆட்டுப்பால், பசும்பாலிலிருந்து
எடுக்கப்பட்ட நெய், ஆட்டுப்பாலின் நெய், பசும்பாலிலிருந்து செய்யப்பட்ட வெண்ணெய், மோர்,
கிரீம் போன்ற உணவுகளை உட்கொள்ளலாம். மூலிகை கஷாயங்களால் அடிக்கடி
கண்களை கழுவுதல், பிரம்மி, நெல்லி,
பிருங்கராஜ் மூலிகைகளின் தைலத்தை தலைக்கு தேய்த்து குளிப்பது
கண்களுக்கு பாதுகாப்பானது என்கிறது ஆயுர்வேதம்.
Avoid foods
எதை தவிர்க்க வேண்டும் காராமணி, ராஜ்மா, சோயாபீன்,
முலாம்பழம், தர்பூசணி
கண்களை கழுவுங்கள்
காலையில் எழுந்தவுடன் கண்கள் மீது தண்ணீரை நன்றாகத் தெளித்து 3, 4 முறை கண்களை நன்றாக
சுத்தப்படுத்துங்கள்.வாய் நிறைய தண்ணீரை நிரப்பிக்கொண்டு, பின்
கண்கள்மீது குளிர்ந்த தண்ணீரைக் கொண்டு நன்றாக கழுவுங்கள். இதனால் கண்கள் நன்றாக
விரிந்தவாறு இருக்கும். பிறகு, ஆப்டிக்கல்ஸ் கடைகளில்
எளிதாகக் கிடைக்கும், ஐ வாஷ் கப் ஒன்று வாங்கிக்கொள்ளுங்கள்.
ரோஸ் வாட்டரை 15 துளிகள் இதில் நிரப்பி, பின் தண்ணீரால் இந்த கப்பை நிரப்பி, கண்களை
திறந்தவாறு இந்த கப் பயன்படுத்துங்கள். தண்ணீர் வெளியில் வராதவாறு கப்பை அழுத்தி
பிடித்துக்கொண்டு, தலையை மேலே தூக்குங்கள். கண் விழிகளை
சுற்றுங்கள். ரோஸ் வாட்டர் கண்களின் மேற்பரப்பை நன்றாக சுத்தம் செய்யுமாறு கண்
விழியை சுற்றுங்கள். ஒரு நிமிடம் களித்து, தண்ணீரை மாற்றி
அடுத்த கண்ணையும் இவ்வாறு சுத்தம் செய்யுங்கள். கண்களில் உள்ள தொற்றை சரி செய்ய
மிகவும் உதவும். மேலும், கண்களில் ஏற்படும் அழுத்தத்தை
குறைத்து, கண்களுக்கு நல்ல குளிர்ச்சியைத் தரும்.
கண்களுக்கு ஓய்வு கொடுங்கள்
வேலை செய்யும்போது ஒவ்வொரு 45 நிமிடங்களுக்கு ஒரு முறை சிறிது தண்ணீர் பருகுங்கள். பின் கைகளைத்
தேய்த்து, மூடிய கண்கள்மீது வைக்கவும். கைகளில் உள்ள
அக்குப்ரேசர் புள்ளிகளை அழுத்துங்கள். ஒவ்வொருமுறை சிறுநீர் கழிக்கச்
செல்லும்போதும், வாயில் தண்ணீர் நிரப்பி, கண்களைக் கழுவுங்கள்.