Showing posts with label தூத்துக்குடியில் சாலைகள் உயர்த்தப்பட்டுள்ளதால். Show all posts
Showing posts with label தூத்துக்குடியில் சாலைகள் உயர்த்தப்பட்டுள்ளதால். Show all posts

Tuesday, April 18, 2023

தூத்துக்குடியில் சாலைகள் உயர்த்தப்பட்டுள்ளதால்

தூத்துக்குடியில் சாலைகள் உயர்த்தப்பட்டுள்ளதால் அவசரகால வாகனங்கள் உரிய நேரத்தில் செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் சாலைப் பணிகள், கழிவு நீர் கால்வாய், மழைநீர வடிகால் போன்ற பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. மாநகரின் பல பகுதிகளில் சாலைகள் சுமார் 3அடி வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக மின்கம்பங்களில் வயர்கள் தாழ்ந்த நிலையில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் உள்ளது. 

இதனால் தீயணைப்பு வாகனங்கள் போன்ற அவசரகால வாகனங்கள் உரிய நேரத்தில் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் அண்ணா நகர் பகுதியில் தீவிபத்து ஏற்பட்டபோது தீயணைப்பு வாகனம் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து சிறிய வாகனம் மூலம் தீ ஆணைக்கப்பட்டது. மேலும் ஜேசிபி போன்ற வாகனங்கள் செல்வதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது. 

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டு மின் கம்பங்களை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் பல வீடுகளின் சாய்தளங்கள் சாலை வரை இழுத்து அமைக்கப்பட்டுள்ளதால் வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டு போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.  இது தொடர்பாக மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Featured Post

எண்ணம்_போல_வாழ்க்கை

#எண்ணம்_போல_வாழ்க்கை... ஒருமுறை, ஒரு பிச்சைக்காரன் ரயிலில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் போது, ​​ சூட் மற்றும் பூட்ஸ் அணிந்த ஒரு தொழிலதிபர...