Subramaniya Swamy Temple, Tiruchendur
Tamil God Thirumurugan articales
* திருச்செந்தூரில் பாலசுப்பிரமணிய சுவாமி, சண்முகர் என்று 2 மூலவர்கள் உள்ளனர். பாலசுப்பிரமணிய சுவாமி கிழக்கு பார்த்தும், சண்முகர் தெற்கு பார்த்தும் அருள்பாலிக் கிறார்கள்.
* திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில்
வீரவாகுதேவர் காவல் தெய்வமாக உள்ளார். இதனால் இத்தலத்துக்கு ‘வீரவாகு பட்டினம்’ என்றும் ஒரு பெயர் உண்டு.
* திருச்செந்தூர்
தலத்தில் தினமும் வீரவாகு தேவருக்கு பூஜை நடத்தப்பட்ட பிறகே, மூலவரான முருகப்பெருமானுக்கு
பூஜை நடத்தப்படுகிறது.
* மூலவர்
பாலசுப்பிரமணியருக்கு தினமும் தூய வெள்ளை நிற ஆடை அணிவிக்கப்படுகிறது.
சண்முகருக்கு சிறப்பு பச்சை நிற ஆடைகள் அணிவிக்கப்படும்.
* மூலவருக்கு
பின்புறம் சுரங்க அறை ஒன்று உள்ளது. ரூ.5 கட்டணம் செலுத்தி உள்ளே சென்றால், முருகப்பெருமான் பூஜித்த பஞ்சலிங்கங்களை
தரிசனம் செய்யலாம். இந்த அறைக்கு ‘பாம்பறை’ என்றும் ஒரு பெயர் உண்டு.
* திருச்செந்தூர்
கோவில் இடது பக்கத்தில் வள்ளிக்குகை உள்ளது. இந்த குகைக்கு முன்புள்ள சந்தன
மலையில் தொட்டில் கட்டினால், குழந்தை
பாக்கியம் விரைவில் கிடைக்கும்.
* திருச்செந்தூர்
தலத்தில் சண்முகர், ஜெயந்தி
நாதர், குமரவிடங்கர், அலைவாய் பெருமான் என நான்கு
உற்சவர்கள் உள்ளனர். இவர்களில் குமரவிடங்கரை ‘மாப்பிள்ளை சுவாமி’ என்று அழைக்கிறார்கள்.
* திருச்செந்தூர்
கோவில் கோபுரம் 17-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. 9 அடுக்குகளை கொண்ட இந்த கோபுரம்
157 அடி உயரம் கொண்டது.
* 'திருச்செந்தூர்
முருகனே போற்றி' என்ற
தலைப்பில் அருணகிரி நாதர் திருப்புகழ் பாடி உள்ளார். இந்த பாடல்களை பக்தி
சிரத்தையுடன் பாடினால் பாவங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.
* திருச்செந்தூர்
கோவில் வடிவம், பிரணவ
மந்திரமான ஓம் எனும் வடிவில் அமைந்துள்ளது.
* மூலவருக்கு, பக்தர்கள் கட்டணம் செலுத்தி
தங்க அங்கி அணிவித்து வழிபடலாம். இந்த வழிபாட்டின் போது முருகருக்கும், பரிகார தெய்வங்களுக்கும் தங்க
அங்கி, வைர வேல் அணிவிக்கப்படும்.
* திருச்செந்தூர்
கோவிலில் உள்ள சண்முக விலாசம் எனும் மண்டபம் 120 அடி உயரமும், 60 அடி அகலமும் கொண்டது. 124 தூண்கள் இதை தாங்கி
நிற்கின்றன.
* திருச்செந்தூர்
கோவில் மூலவர் முன் உள்ள இடம் ‘மணியடி’ எனப்படுகிறது. இங்கு நின்று
பாலசுப்பிரமணியரை தரிசிப்பது சிறப்பானதாகக் கருதப்படுகிறது.
* நாழிக்கிணறு
24 அடி ஆழத்தில் இருக்கும் வற்றாத
நீரூற்றாகும். இங்கு நீராடிய பிறகே கடலில் நீராட வேண்டும் என்பது ஐதீகம்.
* திருச்செந்தூர்
கோவில் திருப்பணிக்காக மவுனசாமி, காசிநாத
சுவாமி, ஆறுமுகசாமி மூவரும் தங்கள்
வாழ்நாளை அர்ப்பணித்தனர். அவர்களது சமாதி நாழிக்கிணறு அருகே உள்ளது.
* தமிழகத்தில்
முதன் முதலில் நாகரிகம் தோன்றிய நகரங்களுள், திருச்செந்தூரும் ஒன்று.
* முருகப்பெருமானோடு
போரிட்ட படை வீரர்கள் ‘அய்யனார்கள்’ என்று அழைக்கப்பட்டார்கள்.
* திருச்செந்தூர்
கோவில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நிலைபெற்று இருப்பதாக வரலாற்று
ஏடுகள் கூறுகின்றன.
* இத்திருத்தலம்
மன்னார் வளைகுடாக் கடலின் கரையோரத்தில், அலைகள் தழுவ அமைந்திருப்பதால், ‘அலைவாய்’ என்று அழைக்கப்பட்டது. பின்னர், திரு என்னும் அடைமொழி
சேர்க்கப்பட்டு, ‘திருச்சீரலைவாய்’ என்று அழைக்கப்படுகின்றது.
* இந்த
ஆலயத்துக்குச் செல்லும் வழியில், தூண்டுகை
விநாயகர் கோவில் உள்ளது. இந்த விநாயகரை வணங்கிய பின்னர்தான் முருகப்பெருமானை
வணங்கிச் செல்ல வேண்டும்.