Monday, July 25, 2022

தமிழர்களின் சிறப்பு மிக்க மாதம் ஆடி மாதம்.

தமிழர்களின் சிறப்பு மிக்க மாதம் ஆடி மாதம்.

சூரியன் கடக ராசியில் உட்புகுந்து அதிலிருந்து வெளியேறும் வரையிலான 31 நாள், 28 நாடி, 12 விநாடி கொண்ட கால அளவே ஆடி மாத மாகும்.

முன்முற்காலத்தில் நம் தமிழர் ஆடிப்பிறப்பைச் மிகச்சிறப்பாகக் கொண்டாடுவர்.

ஆடி மாதத்தில் வரும் புதுநிலவு மறைந்த குடும்ப முன்னோர்களுக்கு ஆற்றங்கரை அல்லது கடற்கரையில் திதி கொடுக்கும் ஆடி அமாவாசை மற்றும் ஆறுகளில் புனல் பொங்கிவந்து ஆடிப்பட்டம் தேடி விதை விதைக்கும் திருநாளாக ஆடி மாத பதினெட்டாம் நாள் ஆடிப்பெருக்கு என இம்மாதம் முழுதும் கொண்டாடப்படுகின்றது.

மேலும் ஆடி மாதம் தட்சிணாயனம் அதாவது தென்திசையேகல் ஆரம்பமாகிறது.

தமிழ் ஆண்டினை இரண்டு அயனங்களாக (கதிர் நகர்வு) பிரித்து ஆடி முதல் மார்கழி வரையிலான காலம் தட்சிணாயனமும், தை முதல் ஆனி வரை உள்ள காலம் உத்திராயனமும் (வடதிசை நகர்தல்) என்பதாகும்.

அதிகாலை வேளையில் கதிரவன் வடகிழக்கு நோக்கி நகர்தலை விட்டு விட்டு தென்கிழக்கு திசை நோக்கி நகரும்.

நமது இந்து தொன்மயான இயலில் இது சூரியனின் தேர் திசை திரும்புவதாக அறிப்பிடப்படுகிறது.

ஒன்று மழைக் காலத்தின் துவக்கத்தையும், மற்றொன்று கோடைக் காலத்தின் துவக்கத்தையும் குறிக்கிறது.

கோடி நன்மை தரும் ‘ஆடி வெள்ளி’ ஆன்மிக ரீதியாக வெள்ளிக்கிழமை சிறப்பு மிகுந்த தினமாக கருதப்படுகிறது.

கிழமைகளில் ‘சுக்ர வாரம்’ என்றழைக்கப்படுவது வெள்ளிக்கிழமை தான் இதன் சிறப்பு.

அள்ளிக் கொடுக்கும் சுக்ரனுக்குரிய வெள்ளிக்கிழமை அன்று, துள்ளித் திரியும் சிங்கத்தின் மேல் ஏறி பவனி வரும் தூயவளாம் அம்பிகையை வழிபட்டால், நல்ல காரியங்கள் இல்லத்தில் நடைபெறும்.

சூரியன் கடகத்தில் சஞ்சரிக்கும் மாதமான ஆடி மாதம், இறைவியை நாடிச் சென்றவர்களுக்கு எல்லாம் கோடி கோடியாய் நற்பலன்கள் பெருகும் மாதமாகும்.

இந்த மாதத்தில் தான் ஈஸ்வரனின் சக்தி அன்னை லோக நாயகியின் சக்திக்குள் ஐக்கியமாகி விடுகிறது. இம்மாதத்தில் அம்மானை வழிபடுதல் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. ஆடி மாதத்தில் எல்லா ஊர்களிலும் கூழ் ஊற்றுதல், தீ மிதித்தல், அம்மனுக்கு திருவிழா என பல வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.
பொதுவாகவே சித்திரை வருடப் பிறப்பு முடிந்ததும் எந்தப் பண்டிகையும் வராது. ஆவணியில்தான் கிருஷ்ண ஜெயந்தி, விநாயக சதுர்த்தி என்று வரிசையாக பண்டிகைகளின் அணிவகுப்புத் துவங்கும். அதனால் ஆடி மாதத்தை பண்டிகைகளை அழைக்கும் மாதம் என்பர். இந்த மாதம் முழுவதும் இறை வழிபாட்டில் மனதைச் செலுத்த வேண்டும் என்பதாலேயே பிற விசேஷங்களை செய்யக்கூடாது என்றார்கள். உதாரணமாக கல்யாணம், காது குத்து, புதுமனை புகுதல் போன்றவை இம்மாதத்தில் செய்ய மாட்டார்கள்.

மஞ்சள் பூசினால் மங்களம்!
அம்மனுக்கு உகந்த நாட்கள் செவ்வாயும், வெள்ளியும். அதோடு ஆடி மாதமும் சேர்ந்து விட்டால் இவ்விரண்டு நாட்களுக்கும் சிறப்புத் தன்மை அதிகமாகிவிடுகிறது. சாதாரண நாட்களில் இருக்கும் விரதத்தைப் போல பல மடங்கு பலன் தருகிறது, ஆடி மாத செவ்வாய்கிழமை விரதம், ஆடிச் செவ்வாய் தேடி குளி, அரைத்த மஞ்சளை பூசிக் குளி என்பது பழமொழி. அதாவது ஆடி செவ்வாய்க் கிழமைகளில் எண்ணெய் தேய்த்து, மஞ்சள் பூசிக் குளித்து விரதமிருந்தால் அன்னை உமையவள் கேட்ட வரம் தருவாள் என்பது ஐதிகம். இந்த விரதம் இருந்தால் வீட்டில் அமைதி என்றும் நிலவும்.
ஆடி வெள்ளியும் விசேஷமானதுதான். அன்றும் எண்ணெய் தேய்த்துக் குளித்து அம்மனை நினைத்து கூழ் ஊற்றி, தானும் அந்தக் கூழையே குடித்தால் அம்மன், செல்வம், ஆரோக்கியம் நல்ல குழந்தைகள் என வரம் அருளுவாள்.

ஆடி மழைக்காலத்தின் துவக்கமாகும். பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் நோய்க் கிருமிகளைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் வேப்பி லைக்கும் எலுமிச்சைக்கும் உண்டு. எனவே, ஆடி வழிபாடுகளில் இவை இரண்டும் முக்கியத்துவம் பெறும்.

திருமணமாகாத பெண்கள் ஆடி வெள்ளியில் குத்துவிளக்கினை அலங்கரித்து தீபம் ஏற்றி, மானசீகமாக அதில் அம்மனை எழுந்தருளச் செய்து, லலிதா சஹஸ்ரநாமம் பாராயணம் செய்து வழிபட நல்ல கணவன் அமைவார்கள். மேலும், ஆடி வெள்ளிக்கிழமைகளில் கன்யா பூஜை, ராகு கால பூஜை, நாக தோஷ பூஜை செய்வதால், குடும்பத்தில் சந்தோஷம் பெருகும்.

கருடன் பிறந்த ஆடிச் சுவாதி!

பெரிய திருவடியான கருடாழ்வார் பிறந்தது ஆடி மாதம் சுவாதி நட்சத்திரத்தன்றுதான். இந்தத் திருநாளில் கருட தரிசனம் செய்வ தாலும், கருடனை வழிபடுவதாலும் சகல தோஷங்களும் நீங்கும்; மாங்கல்யம் பலம் பெறும். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆடி முளைகொட்டு விழா பத்து நாட்களுக்கு நடைபெறும். நான்கு ஆடி வீதிகளிலும் அம்பாள் வீதியுலா வருவாள். அதேபோல், ஆடி சுவாதி தினத்தில் சுந்தர மூர்த்தி சுவாமிகளுக்கு ஆராதனையும், புறப்பாடும் நடைபெறும்.

ஆடிக்குருவி

காவிரி தீரத்தில் வாழும் ஒருவகை பறவைகளை அக்கோ குருவிகள் என்று அழைப்பார்கள். இந்தப் பெயருக்குப் பின்னணியாக சுவாரஸ்ய கதையொன்று உண்டு!

காவிரிக்கரையோரம் சகோதரிகளான இரண்டு குருவிகள் வசித்தன. காவிரி வறண்டு காணப்பட்ட ஒருநாள், மணற்பரப்பில் உலர்த்தி இருந்த பொருட்களை தின்றுகொண்டு இருந்தபோது, காவிரியில் வெள்ளம் திடீரென வந்தது. தங்கைக்குருவி உடனடியாக பறந்து மரத்தில் அமர்ந்துவிட்டது. அக்காள் குருவி கவனிக்காததால், வெள்ளத்தோடு அடித்து சென்று விட்டது. அதைக் கண்ட தங்கைக்குருவி, ‘அக்கோ, அக்கோ’ என கதறி அழுதது. அதன் பிறகு ஒவ்வொரு வருடமும் காவிரியில் வெள்ளம் பெருக்கெடுக்கும்போதெல்லாம் அக்காள் குருவி திரும்ப வந்து விடும் என்ற நம்பிக்கையில் காவிரி கரை ஓரத்தில் மறத்தில் அமர்ந்து கொண்டு, அக்கோ.... அக்கோ.... என்று குரல் எழுப்பி, அக்காள் குருவியை தேடுமாம். இப்போதும் காவிரியில் நீர் பெருக்கெடுத்து ஓடும் தருணங்களில் அந்தக் குருவியின் குரலைக் கேட்கலாம் என்கிறார்கள் அந்தப் பகுதியில் வாழும் பெரியவர்கள்!

’ஆடி வேல்' வைபவம்!

இலங்கையில் மிகவும் கோலாகலமாக கொண் டாடப்படும் விழா ஆடிவேல் வைபவம். ஆடி மாதத்தில் வேல் எடுத்து கொண்டாடப்படுவதால் ஆடிவேல் என அழைக்கிறார்கள்.

கதிர்காமத்தில் இவ்விழாவை கண்டுகளிக்க பக்த பெருமக்கள் பெருந்திரளாக வருவார்கள். இந்த ஆடிவேல் திருவிழா நான்கு தினங்கள் நடைபெறும்.

அழகன் முருகனுக்கு உகந்த ஆடிக்கிருத்திகை!

வருடத்தில் மூன்று கார்த்திகை தினங்கள் அதீத முக்கியத்துவம் பெறும். அவை: உத்தராயன துவக்கமான தை மாதம் வரும் தை கிருத்திகை, கார்த்திகை மாதம் வரும் பெரிய கிருத்திகை மற்றும் தட்சிணாயன துவக்கமான ஆடி மாதத்தில் வரும் ஆடிக் கிருத்திகை. இந்த மூன்றும் கார்த்திகேயக் கடவுளுக்கு உகந்த நாட்கள். ஆடிக்கிருத்திகையில் விரதம் இருந்து முருகனை வழிபடுவதால் வேண்டிய வரங்கள் கிடைக்கும். ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு விரதம் இருக்கும் முருக பக்தர்கள், அன்று புண்ணிய தீர்த்தங்களில் நீராடி, முருகனை வழிபடுவார்கள். குறிப்பாக பழநியில், பக்தர்கள் சண்முகா நதியில் நீராடி முருகனை வணங்கி, தங்களின் விரதத்தை பூர்த்தி செய்வார்கள்.

தீமித்துக்கும் வழக்கும் வந்தது எப்படி?
ஆடியில் தேய்பிறையின் போது வரும் ஏகாதசி யோகினி ஏகாதசி என்றும், வளர்பிறையில் வரும் ஏகாதசி சயனி ஏகாதசி என்றும் சொல்லப்படுகிறது. ஒரு சமயம் குபேரனிடம் ஹேம மாலி என்பவன் வேலை பார்த்து வந்தான். அவன் தனது மனைவியின் அழகில் மயங்கி அவளையே பார்த்துக் கொண்டிருந்ததால் அவனால் வேலையைச் சரியாக செய்ய முடியவில்லை. கோபம் கொண்ட குபேரன் அவனை பெரு நோயாளி ஆகும்படி சபித்தான்.
வேதனைப்பட்ட அவனுக்கு சாப விமோசனத்துக்கு வழி சொன்னார் ரோமச முனிவர். ஆடி மாதம் தேய்பிறை ஏகாதசியின் போது விரதமிருந்து தீமிதித்து அம்மனை வழிபட்டால் நோய் நீங்கி எழில் உருவம் கிடைக்கும் என்றார். அவனும் அதுபோல செய்து சாபம் நீங்கி நல்ல உருவம் பெற்றான். அதனால் ஆடி மாத தேய்பிறை ஏகாதசி யோகினி ஏகாதசி என்று அழைக்கப்பட்டது. அப்போது முதலே ஆடி மாதம் தீமிதி விழாவும் ஆரம்பமானது.
திருவிக்ரமனாக விஸ்வரூபம் எடுத்து மகாபலியை பாதாள உலகத்துக்கு அனுப்பிய மகாவிஷ்ணு மீண்டும் பாம்பணையில் சயனித்தது ஆடி மாத வளர்பிறை ஏகாதசி நாளில்தான். அவருக்கு களைப்பு நீங்கும்படி சேவை புரிந்தவள் ஏகாதசி தேவதையே. அதனால் அதற்கு சயனி ஏகாதசி என்று பெயர் வந்தது. இவ்விரு நாட்களிலும் விரதமிருந்து அம்மனை பூஜித்து வழிபட்டால் எல்லா நோய்களும் நீங்கும்; அம்மனருள் வாழ்வில் நிறைந்திருக்கும்.

பூர்வ புண்ணியம்!
ஆடி மாதம் என்பது தேவர்களுடைய மாலை நேரம் ஆகும். அதுவே நாம் நமது முன்னோருக்கு பித்ருக் காரியங்கள் அதாவது திதி முதலியவை கொடுத்து அவர்களை சந்தோஷப்படுத்த ஏற்ற தருணம். ஆடி மாதம் எந்த நாளில் வேண்டுமானாலும் திதி கொடுக்கலாம். அதிலும் ஆடி அமாவாசை அன்று கொடுக்கப்படும் திதிக்கும் பலன் மிக அதிகம்.
சிலருக்கு ஜாதகத்தில் பூர்வ புண்ணிய ஸ்தானம் மிகவும் பலவீனமாக இருக்கும். அப்படி இருந்தால் செய்யும் செயல்களுக்குரிய முழுமையான பலன்கள் கிடைக்காது. எந்தச் சிறு செயலையும் மிகவும் போராடித்தான் செய்ய வேண்டி இருக்கும். அப்படியும் அது வெற்றிகரமாக முடியும் என்று சொல்ல முடியாது. அதை சரி செய்ய முன்னோரின் ஆசியும், சந்தோஷமும் முக்கியம். அதனால்தான் சிரார்த்தம், திதி முதலியவற்றைக் கொடுக்கிறோம். அதனை ஆடி அமாவாசை அன்று செய்தல் கூடுதல் நன்மை பயக்கும்.
அன்று திதி கொடுத்தால் நூறு வருடங்கள் திதி கொடுத்து முன்னோரை திருபதிப்படுத்திய சந்தோஷம் அவர்களுக்குக் கிடைக்கும்.

கர்ப்பிணி அம்மன்
ஆடி மாதத்தின் போது அம்மன் கர்ப்பமாக இருப்பதாக ஐதிகம். அப்போது முளைப்பயிறை வயிற்றில் கட்டிக் கொண்டு அம்மனை வழிபட்டால் குழந்தைப்பேறு கிட்டும். அம்மனுக்குச் செய்ய வேண்டிய சடங்குகளான வளைகாப்பு, பூச்சூட்டல் போன்றவை ஆடிப்பூரத்தில் செய்யப்படுகின்றன. அப்போது வேண்டுதல் செய்து கொண்டு வளையல்களை வாங்கி கொடுக்க வேண்டும். பின்னர் கோயிலில் பிரசாதமாகத் தரும் வளையல்களை அணிந்து கொண்டால் மாங்கல்யம் நிலைத்து நிற்கும்; நன்மக்கட்பேறு வாய்க்கும்.
பூமாதேவி பெரியாழ்வார் திருமகளாக கோதை நாச்சியாராக துளசிச் செடியின் கீழ் அவதரித்தது ஆடிப்பூர நாளில் தான். அன்றைய தினம் கன்னிப் பெண்கள் ஆண்டாளை வழிபட்டு அவளது பூ பிரசாதத்தை சூடிக் கொண்டால் மனதுக்கினிய கணவர் வருவார் என்பது ஐதிகம்.

அம்பிகை தவம்!
நெல்லை மாவட்டம் சங்கரன் கோயிலில் ஆடித்தபசு மிகப்பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது. ஒரு முறை தேவி ஈசனிடம் நீங்கள் சங்கர நாராயணராகக் காட்சி கொடுக்க வேண்டும். அப்போதுதான் சிவ்ன பெரியவரா? விஷ்ணு பெரியவரா? என்ற சண்டை இருக்காது. எல்லாமே தாங்கள்தான் என்ற உண்மையை மக்களுக்குத் தெரிய வரும் என்று வேண்டினாள். அவளது கோரிக்கைக்கு மனம் இரங்கிய சிவபெருமான், "தென் தமிழகத்தில் புன்னை வனத்திற்குச் சென்று தவமியற்று. நான் சங்கர நாராயணனாகக் காட்சி கொடுத்து உன்னையும் ஆட்கொள்ளுவேன்' என்று கூறினார்.
பெம்மானின் வார்த்தையை கேட்ட அன்னை அவ்வாறே புன்னை வனம் வந்தாள். சுற்றிலும் அக்கினி சூழ ஊசி முனையில் நின்று தவமியற்றினாள். அவளது தவத்தின் உக்கிரம் அனைவரையும் வாட்டியது. உடனே சங்கரன் பாதி, நாராயணன் பாதி என சங்கர நாராயணனாகக் காட்சி கொடுத்தார் சிவபெருமான். நிலவு போல முகம் படைத்தவள் என்ற பொருளில் அம்மனுக்கு கோமதி என்ற பெயரையும் அளித்தார். இன்றும் கூட இந்த விழா கோமதியம்மன் அருளும் சங்கரன் கோயிலில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்த தபசுக் காட்சியைக் கண்டால் எல்லா துன்பங்களும் நீங்கிவிடும் என்பது நம்பிக்கை.

காவிரிக்கரையில் கலந்த சாதம்!
எண்களில் 18 என்ற எண் மிகவும் சிறப்பு வாய்ந்தது. மகாபாரத யுத்தம் நடந்த நாட்கள் 18, பதினெட்டுப் புராணங்கள், ஐயப்பன் கோயிலின் படிகள் 18, இப்படி நிறைய உண்டு. அதனாலேயே ஆடி 18 சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ஆடி மாதம் நதிகளில் பூரணப் பிரவாகம் பொங்கியிருக்கும். புது வெள்ளம் வந்து பழைய அழுக்குகளை நீக்கிவிடும். வேளாண் பெருமக்கள் ஆடி பட்டம் தேடி விதை என்ற பழமொழிக்கேற்ப விதை தெளிக்கும் பணிகளில் ஈடுபடுவர்.
பூமித்தாய் கண் திறந்து நிறைய மகசூலை அள்ளித்தர வேண்டும் அதற்கு ஆறுகள் துணை புரிய வேண்டும் என்று வேண்டிக் கொண்டு கொண்டாடப்படுவதே ஆடிப் பெருக்கு பண்டிகையாகும். காவிரி பாயும் இடங்களில் இது சிறப்பாக கொண்டாடப்படுகிறது. காவிரியை அம்மனாக பாவிக்கிறார்கள். ஆடி மாதம் அன்னையின் கர்ப்பகாலம். ஆதலால் காவிரிக்கு, மசக்கையில் இருக்கும் பெண்கள் மிகவும் விரும்பும் உணவு வகைகளான புளி சாதம், எலுமிச்சை சாதம், தேங்காய் சாதம், சர்க்கரை பொங்கல் என்று படைத்து வழிபடுகிறார்கள்.
அதோடு வருடம் முழுவதும் மங்களம் தங்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டு பூ, காதோலை, கருகமணி, மஞ்சள் கயிறு முதலியவற்றை ஆற்றில் சமர்ப்பிக்கிறார்கள். பல குடும்பங்கள் தாலி மாற்றும் சடங்கும் நடைபெறுகிறது. அவ்வாறு செய்தால் கணவன் நீண்ட ஆயுளும், மனைவியின் மேல் மாறாத அன்பும் கொண்டிருப்பான் என்பது மக்களின் நம்பிக்கை.
ஆடி மாதம் முழுவதுமே அன்னை உமையவளின் வழிபாட்டுக்குரிய மாதமாக இருந்து வருகிறது. நாமும் ஆடி மாத பூஜைகள், ஆராதனைகளில் கலந்து கொண்டு கூழ் வார்த்து, பாவம் நீங்கி நீண்ட ஆயுளும், பெருமைக்குரிய குழந்தைகளும் பெற்று நிறைவுடன் வாழ்வோம்.

நம்முடைய கடன்களை தீர்க்கும்

வாசுதேவநல்லூர்..!!
ஸ்ரீ அக்னி பைரவர்..!!

விண்ணப்ப மனு மூலமாக நம்முடைய கடன்களை தீர்க்கும் தாருகாபுரம்  ஸ்ரீ அக்னி பைரவர்!!!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் இருந்து தென்காசி செல்லும் வழியில் வாசுதேவநல்லூர் என்ற ஊர் அமைந்திருக்கிறது. 

வாசுதேவ நல்லூருக்கும்,  புளியங்குடி க்கும் நடுவில்  பிரதான சாலையில் இருந்து (NEXT OF SUBRAMANIYA PURAM..LEFT SIDE CUTTING..NAME BOARD IS THERE..)  சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளடங்கிய பகுதியில் அமைந்திருப்பது தாருகாபுரம் ஆகும்.

 இங்கே இருக்கும் அருள்மிகு மத்தியஸ்த நாதர் திருக்கோயில் வளாகத்தில, ஸ்ரீஅக்னி பைரவர் அருளாட்சி புரிந்துகொண்டிருக்கிறார். இந்த ஆலயம் 
தட்சிண பஞ்சபூதத் தலங்களில் நீர் தலமாக போற்றப்படுகிறது.

ஒவ்வொரு 
தேய்பிறை அஷ்டமி திதி அன்றும் இங்கே நிறைய கடன் தொல்லையால் அவதிப்படுபவர்கள் மனு எழுதித் தருகிறார்கள்.

அனுப்புனர் முகவரியில் தன்னுடைய முகவரியையும்,

 பெறுநர் முகவரியில் அருள்மிகு அக்னி  பைரவர், அருள்மிகு மத்தியஸ்த நாதர் திருக்கோயில், தாருகாபுரம் என்று எழுதி

 பொருள் :-கடன் தீர்ப்பது தொடர்பாக என்று குறிப்பிட்டு...

ஐயா வணக்கம்..!!

 கடந்த 5 ஆண்டுகளாக எனக்கு படிப்படியாக கடன் உருவாகி இப்பொழுது ரூபாய் ஒரு கோடி கடன் வந்துவிட்டது. நானும் என் குடும்பத்தாரும் சம்பாதிக்கும் வருமானம் வட்டி கொடுப்பதற்கே போதவில்லை. அருள்மிகு ஸ்ரீ  அக்னி பைரவர் ஆகிய தாங்கள் அடுத்த ஒரு வருடத்திற்குள் என்னுடைய  கடன் அனைத்தும் முழுமையாக தீர அருள்புரியும் பாடி தாழ்மையுடன் வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு எனது பெயர்
................

என கோயில் பூசாரியிடம் முறைப்படி இந்த மனுவை ஒப்படைக்க வேண்டும்.

 கண்டிப்பாக தேய்பிறை அஷ்டமி பைரவர் பூஜையில் கலந்து கொள்ள வேண்டும்.

ஒரு வருடத்திற்குள் கடன் தீர்ந்த பிறகு மறக்காமல் நேரில் வந்து ஸ்ரீ அக்னி பைரவர்  பெருமானுக்கும், அருள்மிகு மத்தியஸ்த நாதர் பெருமானுக்கும் அம்பாளுக்கும் அபிஷேகம் செய்து அன்னதானம் செய்ய வேண்டும்.

பல நூற்றாண்டுகளாக இந்த அருள்மிகு மத்தியஸ்த நாதர் ஆலயத்தில் கடன் தீர இவ்வாறு மனு எழுதித்தரும் பழக்கம் இருக்கிறது..!!..

மகாபலி மன்னன் புராணம்

சிவ சிவ

ஒவ்வொருத்தருக்கும் ஒரு கதை உண்டு

இந்த கதையும் படியுங்கள் சிவமே
***********************************

#மகாபலி மன்னன் புராணம் தெரிந்த அனைவருக்கும் அறிமுகமானவன். 

#பெருமாள் வாமன அவதாரம் எடுத்து அவனை ஆட்கொண்டார். முற்பிறவியில் இவன் மிகவும் கெட்டவனாக இருந்தான். 

எந்த நேரமும் விலைமாதரின் வீட்டிலேயே வீழ்ந்து கிடந்தான். அவர்களுக்கு பொருளை அள்ளிக் கொடுப்பதற்காக சூதாடச் செல்வான். சூதாட்டத்தில் வல்லவனான இவனை வெல்வார் யாருமில்லை.

 எனவே, பெரும் பொருளுக்கு அதிபதியானான். ஒருமுறை பேரழகி ஒருத்தியை அடைய விரும்பினான். 

அவளோ அவனிடமுள்ள பணம் முழுவதையும் தனக்கு கூலியாகக் கேட்டாள். 

அவனும் அவளை அடையும் ஆசையில், பணத்துடன் சென்றான். வழியில் ஓரிடத்தில் மயக்கமாக வந்தது. 

அப்படியே விழுந்து விட்டான். அவ்விடத்தில் ஒரு #சிவலிங்கம் இருந்தது. சற்றுநேரம் கழித்து கண்விழித்த அவன் சிவலிங்கத்தைப் பார்த்தான். 

மனதில் ஏதோ ஒரு மாற்றம் ஏற்பட்டது. பணம் முழுவதையும் #சிவலிங்கத்தின் முன் கொட்டிவிட்டு சென்றான். சிறிதுகாலம் பட்டினியாய் கிடந்த அவன் இறந்து போனான்.

 எமதூதர்கள் அவனை இழுத்துச் சென்றனர். சித்திரகுப்தன் அவன் பாவ புண்ணிய கணக்கை வாசித்தார். 

#எமதர்மராஜா அதைக் கேட்டு விட்டு, அடேய் கொடுமைக்காரா, சூதாடியும், பரத்தையர் வீட்டுக்கு சென்று இன்பமாகவும் இருந்த நீ, நரகத்திற்கு செல், என ஆணையிட்டார். 

நடுங்கிப் போன அவன், தர்மராஜா, நன்றாகப் பாருங்கள். நான் ஒரு நன்மை கூட செய்யவில்லையா?

 என்றான். கணக்கில் ஒரு இடத்தில் மட்டும், அவன் #சிவலிங்கத்தின் முன்பு பணத்தைக் கொட்டியதையும், அதைக் கண்டெடுத்த அர்ச்சகர் ஒருவர், லிங்கத்துக்கு கோயில் கட்டியதும் தெரிந்தது.

அநியாய வழியில் வந்த பணமாயினும், பொதுக்காரியத்துக்கு பயன்படுத்திய காரணத்துக்காக, அவனுக்கு மூன்று நாழிகை (72 நிமிடம்) மட்டும் இந்திரலோகத்தின் அரசு தலைமைப் பதவியை அனுபவிக்க எமதர்மன் அனுமதித்தார். 

சூதாடியும் இந்திரலோக பதவியை சுகமாக வகித்தான். இந்திரன் ஒன்றரை மணிநேரம் தானே என ஒதுங்கிக் கொண்டான். 

இந்நேரத்தில் அகத்தியரை அழைத்த சூதாடி, அவருக்கு இந்திரனின் #ஐராவதம் யானையை பரிசாகக் கொடுத்தான். 

விஸ்வாமித்திரருக்கு #உச்சைச்ரவா என்ற குதிரையையும், காமதேனு பசுவை வசிஷ்டருக்கும் கொடுத்தான். #கற்பகவிருட்ச மரத்தை கவுண்டின்ய முனிவருக்கும், #சிந்தாமணி என்ற ரத்தினத்தை காலவ முனிவருக்கும் தானமாக வழங்கினான். 

மூன்று நாழிகை கடந்ததும் அவனாகவே நரகத்தை நோக்கி நடந்தான். இதற்குள் தேவேந்திரன் எமனிடம், 

எமதார்மனே!!

என்ன காரியம் செய்தாய்? 

சூதாடியை அரசனாக்கினாய். அவன் எல்லாவற்றையும் தானம் கொடுத்து விட்டான். 

இனி நான் எப்படி அரசாள்வது? என்றான். 

எமன் அவனிடம், இந்திரரே! தாங்கள் சொல்வது சரியல்ல.
அரசாட்சியில் இருப்பவன் தன்னிடமுள்ள விலை உயர்ந்த பொருட்களையும் தகுந்தவர்களுக்கு கொடுப்பதே முறையானது. நீங்கள் அதனை இத்தனை நாளும் செய்யவில்லை. 

ஆனால், இவன் தனக்கு ஆட்சி கிடைத்த குறைந்த நேரத்தில் பலரது மனம் மகிழும்படி செய்தான். 

அந்த மகரிஷிகள் மக்களுக்கு அதன் மூலம் பலன் கொடுப்பார்கள். உங்களுக்கு இப்படி ஒரு மனம் என்றாவது வந்ததா? 

என்றான். இந்திரன் தலை குனிந்தான். இந்திரலோகத்தில் செய்த தானத்துக்காக சூதாடியின் நரக வாழ்க்கை ரத்து செய்யப்பட்டது.

 அவன் உடனடியாக மறுபிறப்பெடுத்தான். முற்பிறவியில் சூதாடியாக இருந்த குற்றத்துக்காக அசுரகுலத்திலும், தானம் செய்த காரணத்துக்காக மகாபலி என்ற பெயரில் கொடையாளியாகவும் பிறந்தான். 

முற்பிறப்பில் #சிவத்தொண்டு செய்த அவன் இப்பிறப்பில் திருமாலின் திருவடி தரிசனம் கண்டு வைகுண்டத்தை அடைந்தான்.

சிவ சிவ

கன்னியாகுமரி பகவதி அம்மன்

#ஆடி_மாதம்_ஸ்பெஷல்

கன்னியாகுமரி பகவதி அம்மன் மூக்குத்தி எல்லோருக்கும் நல்ல ஒளியையும் வழியையும் காட்டக்கூடிய வரலாறு.  

விளக்கொளியில் மூக்குத்தி ஜொலிக்க கன்னியாக, அன்னையாக எல்லோருக்கும் அருள் புரிந்து வருகிறாள் கன்னியாகுமரி பகவதி அம்மன். அன்னையின் அருள் எல்லோருக்கும் கிடைக்கட்டும். அம்மே சரணம் ! தேவி சரணம்.
   
திருவிதாங்கூர் மகாராஜாவின்           ஆட்சியில் கன்னியாகுமரி பகுதி இருந்த காலம். அந்த காலத்தில் பனையேறி ஒருவன் இருந்தான். அவனுக்கு தனக்கு ஒரு ஆண் குழந்தை வேண்டும் என்று நீண்ட நாட்களாக ஆசை. ஆனால் அவன் மனைவி ஒவ்வொரு முறை கருவுறும் போதும் அவனுக்கு பெண் குழந்தை மட்டுமே பிறந்து கொண்டு இருந்தது. ஒவ்வொரு முறையும் அவன் மனைவிக்கு பிரசவம் ஆனதும் அவன் முதல் மகள் தான் அவனிடம் வந்து குழந்தை பிறந்த செய்தியை சொல்லுவாள்.
                
இப்படியே அவனுக்கு 5 பெண் குழந்தைகள் பிறந்து விட்டன. இதனால் மனம் வருந்திய அவன் இனி நமக்கு பெண் குழந்தை பிறந்தது என்று நம் மகள் வந்து நம்மிடம் சொல்லும் போது நாம் பனையின் உச்சியில் இருந்தால் அப்படியே இரண்டு கைகளையும் மரத்தில் இருந்து விடுவித்து கீழே விழுந்து தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தான்.
                 
இந்நிலையில் அவன் மனைவி 6வது முறையாக கருவுற்றாள். அப்போது வழக்கம் போல் அவனது முதல் பெண் ஓடி வந்து அப்பா அம்மாக்கு பிரசவம் ஆயிடுச்சு தங்கை பிறந்துருக்கா என்று சொன்னாள். ஆனால் அந்த நேரம் இவன் பனையில் இருந்து கீழே இறங்கி இருந்தான். அதனால் அவனால் உடனே தற்கொலை செய்ய முடியவில்லை.
                 
7வது முறையும் இவன் பனையில் இருந்து இறங்கிய பிறகே முதல் மகள் வந்து பெண் குழந்தை பிறந்திருக்கும் செய்தியை சொன்னாள். இந்நிலையில் அவன் மனைவி 8வது முறை கருவுற்றாள். இம்முறையும் அவன் பனையை விட்டு இறங்கிய பிறகே அவன் மூத்த மகள் வந்து 8வதாக பெண் பிறந்த செய்தியை சொல்ல, மனம் வெறுத்து போன அவன் இனி நாம் உயிர் வாழவே கூடாது என முடிவு செய்து அருகில் இருந்த பாம்பு புற்றில் தன் கையை விட்டான். பாம்பு கடித்து விடும் நாம்  உயிரை விட்டு விடலாம் என்பது அவன் எண்ணம்.
                   
ஆனால் அம்பாளின் விருப்பம் வேறாக இருந்தது. அவன் புற்றின் உள்ளே கையை விட்டதும் கையில் ஏதோ சூடு பட்டது போல உணர்ந்தான். சூடு தாங்க முடியாமல் கையை வேகமாக வெளியே இழுத்து பார்க்கும் போது அவன் கையில் ஏதோ ஒன்று தக தகவென மின்னியது. புற்றில் இருந்த முதிர்ந்த நாகம் அவன் கையில் நாகரத்தினத்தை உமிழ்ந்து இருந்தது.
               
அது என்னவென்று அறியாத அவன் அதனை உடனே கொட்டாரத்திற்கு  (அரண்மனைக்கு)  கொண்டு சென்றான். அதை மஹாராஜாவிடம் கொடுத்தான். உடனே அதை பெற்று கொண்ட மகாராஜா அவரது குதிரையை அவிழ்த்து விட்டு அது எவ்வளவு தூரம் ஓடுகிறதோ அவ்வளவு இடத்தையும் அவன் பெயரில் எழுதி வைக்க சொன்னார். அவனும் மகிழ்ச்சியோடு அதை பெற்று கொண்டு வீட்டுக்கு சென்றான்.
               
அன்றிரவு மன்னரின் கனவில் ஒரு சின்னஞ்சிறு பெண் சென்று மன்னா ! இன்று காலை அரண்மனை தர்பாரில் உன்னிடம் ஒருவன் நாகரத்தினம் கொண்டு வந்து தந்தானே அதை நீ வாங்கி வைத்து கொண்டாயே ! அந்த நாகரத்தினத்தில் எனக்கு ஒரு மூக்குத்தியும், பில்லாக்கும் செய்து தர கூடாதா? என்று கேட்டு விட்டு மறைந்து விட்டாள்.
                  
திருவிதாங்கூர் மன்னர் மறுநாள் காலையில் நம்பூதிரிகளை வரவழைத்து தான் இரவு கண்ட கனவை கூறி அந்த சிறு பெண் யார் என பிரசன்னம் வைத்து கண்டு பிடிக்கும் படி கூறினார். நம்பூதிரிகள் பிரசன்னம் வைத்து பார்க்கும் போது அது வேறு யாரும் அல்ல கன்னியாகுமரி பகவதி அம்மன் தான் என்பது தெரிய வந்தது.
           
நம்பூதிரிகள் கூறியதை கேட்ட மன்னர் உடனடியாக தேவி கன்னியாகுமரி பகவதிக்கு நாகரத்தினத்தில் மூக்குத்தியும், பில்லாக்கும் செய்து கொடுத்தார். அது தான் இன்றும் அன்னை அணிந்து கொண்டு இருக்கிறாள். நாகரத்தினம் என்பதால் அது தக தகவென ஜொலிக்கும். கப்பலோட்டிகள் அம்பாளின் மூக்குத்தி வெளிச்சத்தை கலங்கரை விளக்க ஒளி என்று எண்ணியதால் கப்பல் திசை மாறி வந்த காரணத்தால் கோவிலின் கிழக்கு வாசல் அடைக்கப்பட்டு தெற்கு வாசல் வழியாக சென்று தான் தேவியை தரிசனம் செய்ய முடியும். அம்பாளின் கருணை முகத்தை கண்டால் நம்மால் அவள் சந்நிதியில் இருந்து திரும்பி வர மனம் வராது.
            
விளக்கொளியில் மூக்குத்தி ஜொலிக்க கன்னியாக, அன்னையாக எல்லோருக்கும் அருள் புரிந்து வருகிறாள் எனது இஷ்ட தெய்வம் கன்னியாகுமரி பகவதி அம்மன். அன்னையின் அருள் எல்லோருக்கும் கிடைக்கட்டும். அவள் கருணையினால் உலகம் இந்த கொடிய நோயில் இருந்து மீண்டு வரட்டும்.  
      
அம்மே சரணம் ! தேவி சரணம் !

இடி விழுந்த சிவலிங்கம்

இடி விழுந்த சிவலிங்கம்

ஒரு ஏழைப்பெண் பூ வியாபாரம் செய்து வந்தாள். பூ கட்டாத தினங்களில் கோயிலுக்கு சந்தனம் அரைத்துக் கொடுப்பது, கோயிலைப் பெருக்கிக் கோலமிடுவது. நந்தவனத்துக்கு நீர் பாய்ச்சுவது போன்ற வேலைகளை அவள் செய்து வந்தாள். 

(அது, பொன்மனை மகாதேவர் கோயிலுக்கும் நந்தீஸ்வரத்துக்கும் இடைப்பட்ட கோயில், கன்யாகுமரி மாவட்டம்.) 

அப்பெண்ணுக்கு, கோயிலுக்கு தினமும் வரும் பணக்காரப் பெண் ஒருத்தியோடு தோழமை ஏற்பட்டது. அது கைமாற்றாய் பணம் கேட்குமளவு வளர்ந்தது. 

ஒரு முறை அந்தப் பணக்கார நங்கையிடம் கொஞ்சம் பெரிய தொகையை வாங்கினாள் அவள். ஒரு மாதம் சென்றபின் பணத்தைத் திருப்பிக் கேட்டாள் செல்வவதி. 

இதோ, அதோ என்று சாக்குச் சொல்லி வந்தாள் ஏழைப் பெண். கடன் கொடுத்தவளோ, என் வீட்டாருக்குத் தெரியாமல் நகையை அடகு வைத்து இப்பணத்தைக் கொடுத்தேன். அடுத்த மாதம் என் மைத்துனர் திருமணம். 
அதற்குள் திருப்பாவிட்டால் என் கணவர் திட்டுவார். 

கடன் வாங்கும்போதே நம்மால் திரும்பக் கொடுக்க முடியுமா என்று யோசிக்க மாட்டாயா? என்று ஏசினாள்.
ஏழைப் பெண் கலங்கினாள்.

எல்லோரும் போனபிறகு அச்சாளீஸ்வரர் சன்னிதியில், ஈஸ்வரா! பணம் வைத்துக் கொண்டா கொடுக்காமல் இருக்கிறேன்! உன்னை நம்பித்தான் பொய் சொல்லப்போகிறேன், தண்டனையாக என்னைப் பழி வாங்கி விடாதே! என்று பிரார்த்தித்தாள். 
அடுத்த நாள் பணக்காரி கடனைக் கேட்டபோது, வீட்டுக்குப் போய் கணக்கு நோட்டைப் பார். உன் கடனை எப்பவோ கொடுத்து விட்டேன் என்று ஒரே போடாகப் போட்டாள் ஏழை. 
தனவந்தி வாயடைத்துப் போனாள்.

பிறகு சமாளித்துக்கொண்டு 
அடிப்பாவி! 
இப்படியா பொய் சொல்லுவே! 
ஊர் முக்கியஸ்தர்களைக் கூட்டி வருகிறேன். அச்சாளீஸ்வரர் சன்னிதியில் சத்தியம் செய்யவேண்டும் என்றாள். 
ஊர் கூடியது. 

ஏழைப்பெண் கோயிலை வலம் வந்து, அச்சாளீஸ்வரா! கடனைத் தந்து விட்டேன். இது சத்தியம் என்று கற்பூரத்தை அடித்தாள். 
பலரும் பணக்காரியை இகழ்வாகப் பார்த்தனர். 
செல்வவதி ஆவேசத்தோடு, 
அச்சாளீஸ்வரா! ஊரார் முன்பு என்னைப் பொய்யானவளாக்கி விட்டாயே! 
அசத்தியத்தை ஏற்று மவுனமாயிருக்கும் உன் தலையில் இடி விழட்டும் என சபித்தாள். 

அப்போது கார் மேகங்கள் கூடின. 
மழையும், இடியும், மின்னலுமாய் வெளுத்து வாங்கியது. அதில் ஒரு இடி ஸ்வாமி சன்னிதி விமானத்தில் விழுந்தது. லிங்கத் திருமேனியில் பிளவு ஏற்பட்டது.
உண்மையை இறைவன் நிரூபித்தான் என்று ஊரார் அதிசயித்தனர். 

ஊரார் நிதி திரட்டி பணக்கார பக்தையிடம் கொடுக்க, அவள் வீட்டார் அதைக் கோயில் திருப்பணிக்கே தந்து விட்டனர்.
பிளவு பட்ட லிங்கம் அருகிலுள்ள தடாகத்தில் வைக்கப்பட்டது. கருவறையில் புதிய லிங்கம் ஸ்தாபித்தனர். 

மறுநாள் கருவறையை திறந்தபோது, அங்கே பிளவுபட்ட லிங்கமே இருந்தது. 
அபிஷேகம் செய்ய வசதியாக பிளவை மூடிக்கொள் என்று பக்தர்கள் தினமும் பிரார்த்திக்க பிளவு சிறிது சிறிதாகக் குறுகி, தற்போது வடு மட்டுமே தெரிகிறது. 

புதிதாகச் செய்த லிங்கம் புஷ்கரணியில் உள்ளது.
ஆலகாலம் உண்டனை அன்று உலகைக் காத்திட
நீல வானிடி தாங்கினை அபலை துயர் ஓட்டிட,
பால னிவனைத் துரத்திடும் பாப வினைகள் அழிந்திட,
கால காலனே அருள்வாய் அச்சாளீஸ்வர நாதனே
என்ற பாடலே இருக்கிறது.

திருச்சிற்றம்பலம்

ஸ்ரீ காலபைரவர்

ஸ்ரீ காலபைரவர் 

 அசுவினி, மகம்,மூலம் நட்சத்திரம் ஒன்றில் பிறந்தவர் தினமும் 108 முறை ஜெபிக்க அல்லது எழுத வேண்டிய மந்திரம்

" ஓம் ஹ்ரீம் பீஷன பைரவாய நமக"

பரணி,பூரம், பூரா டம் நட்சததிரம் ஒன்றில் பிறந்தவர் தினமும். 108 முறை ஜெபிக்க அல்லது எழுத வேண்டிய மந்திரம்
 
"ஓம் ஹ்ரீம் ருரு பைரவாய நமக"

கார்த்திகை,உத்திரம்,உத்திராடம் நட்சத்திரம் ஒன்றில் பிறந்தவர் தினமும். 108 முறை ஜெபிக்க அல்லது எழுத வேண்டிய மந்திரம்
 
"ஓம் ஹ்ரீம் ஶ்ரீ் ஶ்ரீ ஶ்ரீ சொர்ண பைரவாய நமக"

ரோகிணி,அஸ்தம், ஓணம் நட்சத்திரம் ஒன்றில் பிறந்தவர் தினமும் 108 முறை ஜெபிக்க அல்லது எழுத வேண்டிய மந்திரம் 

"ஓம் ஹ்ரீம் கபால பைரவாய நமக"

மிருகசீரிடம், சித்திரை,அவிட்டம் நட்சத்திரம் ஒன்றில் பிறந்தவர் தினமும் 108 முறை ஜெபிக்க அல்லது எழுத வேண்டிய மந்திரம் 
"ஓம் ஹ்ரீம் சண்ட பைரவாய நமக"

திருவாதிரை, சுவாதி, சதயம் நட்சத்திரம் ஒன்றில் பிறந்தவர் தினமும். 108 முறை ஜெபிக்க. அல்லது எழுத வேண்டிய மந்திரம்
 
"ஓம் ஹ்ரீம் சம்ஹார பைரவாய நமக"

புனர்பூசம், விசா கம்,பூரட்டாதி நட்சத்திரம் ஒன்றில் பிறந்தவர் தினமும் 108 முறை ஜெபிக்க அல்லது எழுத வேண்டிய மந்திரம்

" ஓம் ஹ்ரீம் அசிதாங்க பைரவாய நமக"

பூசம், அனுஷம், உத்திரட்டாதி நட்சத்திரம் ஒன்றில் பிறந்தவர் தினமும் 108 முறை வீதம் ஜெபிக்க. அல்லது எழுத வேண்டிய மந்திரம் 

"ஓம் ஹ்ரீம் குரோதன பைரவாய நமக"
ஆயில்யம், கேட்டை,ரேவதி நட்சத்திரம் ஒன்றில் பிறந்தவர் தினமும் 108 முறை ஜெபிக்க அல்லது எழுத வேண்டிய மந்திரம்
 
"ஓம் ஹ்ரீம் உன்மத்த பைரவாய நமக"

நம்முடைய கர்மவினைகளை வெகு விரைவாக மற்றும் முழுமையாக நீக்கக்கூடிய தெய்வங்கள் 
சிவபெருமான் மற்றும் 
அவருடைய அவதாரமான மகா கால பைரவ பெருமான்
 மற்றும் 
மகா கால பைரவர் பெருமானின் துணைவியான வராகி
 மற்றும் 
ஈசனின் இன்னொரு அவதாரமான சரபேஸ்வரர் பெருமான் ஆவார்.
 ஒரே ஒரு நாள் ஒரே ஒரு மணி நேரம் மட்டும் பைரவ மந்திரஜபம் அல்லது வராகி மந்திரம் ஜெபம் அல்லது சரபேஸ்வரர் மந்திரம் ஜெபம் செய்தால் போதாது .
ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் வீதம் குறைந்தது மூன்று ஆண்டுகள் ஜெபித்தால் மட்டுமே நம்முடைய கர்ம வினைகள் பெருமளவு குறையும் என்பதை இங்கே தெரிவித்துக் கொள்கின்றோம்.
 பிறந்த ராசி நட்சத்திரம் தெரியாதவர்கள் "ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ" என்ற மந்திரம் ஜெபித்தால் போதுமானது.
மகா கால பைரவ பெருமானின் அருளைப் பெறுவதற்கு வேறு பல வழிமுறைகளை நம்முடைய முன்னோர்களாகிய சித்தர்கள் தெரிவித்துள்ளார்கள் .

காளி மந்திரம் இது...

72 தலைமுறை புண்ணியம் செய்தவர்கள் மட்டுமே ஜபிக்க கூடிய காளி மந்திரம் இது...

சக்தியின் அம்சமாக போற்றப்படும் காளி காலங்களை கட்டுப்படுத்தும் சக்தி கொண்டவள். அவளை முழு மனதோடு வழிபடுவதன் மூலம் நம் இலட்சியத்தை நிச்சயம் அடையலாம் என்று கூறியுள்ளனர் சித்த பெருமக்கள். கிடைப்பதற்கரிய செல்வங்களையும் புகழையும் தரவல்ல ஒரு சிறப்பான காளி மந்திரம் இது....

மந்திரம்:
----------------

ஓம் க்ரீம் க்ரீம் க்ரீம் ஹ்ரீம் ஹ்ரீம்
ஹ்ரூம் ஹ்ரூம்
தக்ஷிணே காளிகே
க்ரீம் க்ரீம் க்ரீம் ஹ்ரீம் ஹ்ரீம்
ஹ்ரூம் ஹ்ரூம் ஸ்வாஹா||

மேலே உள்ள மந்திரமானது சாதாரண மந்திரம் அல்ல. 72 தலைமுறைகளாக தொடர்ந்து புண்ணியம் செய்த ஒருவராலேயே இந்த மந்திரத்தை தொடர்ந்து ஜபிக்க முடியும் என்று கூறுகிறது காளிகா புராணம்.

சிகப்பு நிற ஆடை அணிந்து, சிகப்பு நிற பூக்களை அர்ச்சனைக்கு வைத்து, காளிக்கு சிகப்பு நிற மாலை அணிவித்து, தினமும் 108 முறை சிகப்பு நிற மணி கொண்டு இந்த மந்திரத்தை ஜெபிப்பதன் பலனாக உலகத்தாரால் அரிது என்று சொல்லக்கூடிய பல செல்வங்கள் கிடைக்கும். அதோடு பேர் புகழ் என அனைத்தும் வந்து சேரும் என்று கூறுகிறது காளிகா புராணம்.

Featured Post

எண்ணம்_போல_வாழ்க்கை

#எண்ணம்_போல_வாழ்க்கை... ஒருமுறை, ஒரு பிச்சைக்காரன் ரயிலில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் போது, ​​ சூட் மற்றும் பூட்ஸ் அணிந்த ஒரு தொழிலதிபர...