Monday, July 25, 2022

காளி மந்திரம் இது...

72 தலைமுறை புண்ணியம் செய்தவர்கள் மட்டுமே ஜபிக்க கூடிய காளி மந்திரம் இது...

சக்தியின் அம்சமாக போற்றப்படும் காளி காலங்களை கட்டுப்படுத்தும் சக்தி கொண்டவள். அவளை முழு மனதோடு வழிபடுவதன் மூலம் நம் இலட்சியத்தை நிச்சயம் அடையலாம் என்று கூறியுள்ளனர் சித்த பெருமக்கள். கிடைப்பதற்கரிய செல்வங்களையும் புகழையும் தரவல்ல ஒரு சிறப்பான காளி மந்திரம் இது....

மந்திரம்:
----------------

ஓம் க்ரீம் க்ரீம் க்ரீம் ஹ்ரீம் ஹ்ரீம்
ஹ்ரூம் ஹ்ரூம்
தக்ஷிணே காளிகே
க்ரீம் க்ரீம் க்ரீம் ஹ்ரீம் ஹ்ரீம்
ஹ்ரூம் ஹ்ரூம் ஸ்வாஹா||

மேலே உள்ள மந்திரமானது சாதாரண மந்திரம் அல்ல. 72 தலைமுறைகளாக தொடர்ந்து புண்ணியம் செய்த ஒருவராலேயே இந்த மந்திரத்தை தொடர்ந்து ஜபிக்க முடியும் என்று கூறுகிறது காளிகா புராணம்.

சிகப்பு நிற ஆடை அணிந்து, சிகப்பு நிற பூக்களை அர்ச்சனைக்கு வைத்து, காளிக்கு சிகப்பு நிற மாலை அணிவித்து, தினமும் 108 முறை சிகப்பு நிற மணி கொண்டு இந்த மந்திரத்தை ஜெபிப்பதன் பலனாக உலகத்தாரால் அரிது என்று சொல்லக்கூடிய பல செல்வங்கள் கிடைக்கும். அதோடு பேர் புகழ் என அனைத்தும் வந்து சேரும் என்று கூறுகிறது காளிகா புராணம்.

No comments:

Featured Post

ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதைகள் இருக்கிறது

ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதைகள் இருக்கிறது என்பதையும், ஓர் பலாப்பழத்தைப் பிளக்காமல் அதன் உள்ளிருக்கும் சுளையின் எண்ணிக்கையைய...