Wednesday, July 12, 2023

Memories of childhood

 p

                                            


வாழ்கை வாழுகிறோமா!!! வசிக்கிறோமா???
இட்லியை ஆசையுடன் பார்த்தோம் பண்டிகை நாட்களில் மட்டும்
கறிக்கடை ஊருக்கு ஒன்று மட்டும் தான் இருந்தது
நண்பர்களோடு எதையும் எதிர்பாராமல் தூய நட்பாய் பழகினோம்
ஒரு சினிமா பார்க்க ஒப்புதலுக்கு
ஒரு வாரம் தவம் கிடந்தோம்
அந்த காலம் தான் நன்றாக இருந்தது..
ஆரத்தி எடுக்க போட்டி போட்ட மதினிமார்கள் இருந்தார்கள்..
தாய்க்கு நிகராய் காவல் காத்த தாய் மாமன்கள் இருந்தார்கள்..
ஜரிகை குறைவான வேட்டி வாங்கி தந்ததற்காக சண்டை போட்ட பங்காளிகள் இருந்தார்கள்..
இழவு விழுந்த வீடுகளில் உறவினர் இடுகாடு வரை போனார்கள்..
அடுத்தடுத்து பெண்களுக்கு திருமணம் செய்தும்
மாறி மாறி பிள்ளைப் பேற்றிற்கு பெண்கள்
வந்தாலும் அம்மாக்கள் ஓய்வின்றி உழைத்தார்கள்
ஐந்தாறு பிள்ளைகள் இருந்தாலும் அப்பாவிற்கு மன அழுத்தங்கள் இல்லை..
ஒரே சோப்பை குடும்பம் முழுதும் உபயோகித்தும் தோல் நோய்கள் வரவில்லை..
கண்டதை உண்டாலும் செரித்தது.
தொலைக்காட்சி செய்திகளில் உண்மை இருந்தது..
பண்டிகை க்கு ஒரு மாதம் முன்பே ஆர்வமுடன் தயாரானோம்
உடுத்த புதுத்துணி கையில் தரும் போது ஆஸ்கார் விருது வாங்கும் கலைஞன் போல் உணர்ந்தோம்
ஃபேன் இல்லாமல் உறக்கம்.வந்தது..
எங்கோ ஏதோ ஒரு மூலையில் மருத்துவமனையும் ஹோட்டலும். இருந்தது..
வெயிலாலும் மழையாலும் பாதிப்பு இல்லை..
பிள்ளைப்பேறு செலவில்லாமல் சுகமாய் இருந்தது..
கல்வி கட்டணம் இல்லாமல் கிடைத்தது..
மாணவர்கள் ஆசிரியரிடம் அன்பாய் பணிவாய் இருந்தார்கள்..
ஆசிரியைகளிடம்.
எளிமை இருந்தது..
படுக்கையை எதிர்பாராமல் பாயில்
உறங்கினோம்
தாத்தா பாட்டி சொல்லும் கதை கேட்டுகொண்டே
அவர்கள் மடி மீது தலை வைத்து
நாம் உறங்கிய தருணம் கண்டோம்
பெரியப்பா சித்தப்பா உரிமையோடு அடித்தார்கள் நம் தப்பை சரி செய்ய
பெரிவர்களின் உடையைப் போட தயங்கியதில்லை..
அப்பா சொன்னால் அந்த வார்த்தை மறுக்காமல் ஏற்கப்பட்டது..
பெண் பார்க்க வந்தவனை பிடித்திருக்கிறது என்று சொல்ல வெட்கப்பட்டோம்...
காவிரிக் கரையில் பயமின்றி குளித்தோம் ஆற்று நீர் சுத்தமாய் இருந்தது..
பையில் இருக்கும் ஐந்து ரூபாய் க்கு அளவில்லா ஆனந்தம் கொண்டோம்
ஹோட்டலில் தாத்தா ஆசையோடு வாங்கி தரும் பூரி மசாலா க்கு எல்லையில்லாத மகிழ்ச்சி கண்டோம்
செல்போன் எதுவும் இல்லை
ஆனாலும் பேசிய நேரத்தில் வந்து சேர்ந்தனர் நண்பர்கள்
ஆசிரியர் மீது அசாத்திய மரியாதை இருந்தது
தாவணியில் தேவதைகளாக இளம் பெண்கள்
காதுகளை ரணமாக்காத இனிய பாடல் இசை கேட்டோம்
ஒரே குச்சி ஐஸ் வாங்கி எந்த சங்கோஜமும் இல்லாமல் நண்பர்கள் ஆளொக்கொரு கடி கடித்து சுவைத்தோம்
ஆண்கள் தான் சைக்கிள் ஓட்ட கற்றுக் கொடுத்தார்கள்..
மிகச்சிறிய வயதில் எல்லாம் பால் பேதங்கள் தோன்றவில்லை..
மொத்தத்தில் அப்போது வாழ்ந்தோம் இப்பொழுது வசிக்கிறோம் அவ்வளவே...
ஆமாம் தானே???

All reactions:
10

Hari budda magar, who lost both legs

Hari budda magar, who lost both legs


 Big Respect

🙏💕🇳🇵
Nothing Is Impossible
Hari budda magar, who lost both legs, has successfully climbed Mt.Everest 2023.

Mario Balotelli gives

 


Everyone makes fun of him.But no one knew Mario Balotelli gives 70% (percent) of his Salary to kids free education in Africa.

💜
Respect.🙏
#Congratulations

India ,tamilnadu,The situation of Kutralam.....Season

 India ,tamilnadu,The situation of Kutralam.....


Season 

 updates for whatsapp no,9600753806

what is happy life

 


பிரச்சனைகள் வந்தால் அதை சமாளிக்க கூடிய திறமையும்

 விருதுநகர் இதயம் நல்லெண்ணை அதிபர் விஆர்.முத்து அவர்களின் பதிவு……..

*"நமக்கு சிக்கல் உண்டாக்குபவருக்கு மாலையிட்டு மரியாதை செலுத்த வேண்டும்"*
எடுத்துக்காட்டாக ஒரு சம்பவத்தைக் கூறுகிறேன்.
முப்பது வருடங்களுக்கு முன்பு எங்களுக்கு Sales Tax இல் இருந்து ஒரு notice வந்தது.
"நீங்கள் எண்ணெய்க்கு மட்டும் தான் வரி போடுகிறீர்கள். Canக்கு வரி போடவில்லை. அப்படி இருந்தாலும் நீங்கள் கடந்த மூன்று வருடங்களுக்கு எண்ணெய்க்கு வரி கட்டியது போல canக்கும் வரி கட்ட வேண்டும். மூன்று வருடங்கள் நீங்கள் அந்த வரியை கொடுக்கவில்லை என்பதால் ஒன்றரை கோடி ரூபாய் நீங்கள் இப்பொழுது கட்ட வேண்டும்" என்று அந்த Sales Tax Officer கூறினார்.
இந்த billஐ பார்த்த எனது அப்பாவிற்கு அன்று இரவு முழுவதும் தூக்கம் இல்லை.
அவர் வருத்தம் என்னவென்றால் 40 வருடங்களாக தொழில் செய்து சம்பாதித்த மொத்த சம்பாத்தியமே ஒன்றரை கோடி தான்; ஒரே ஒரு noticeல் Sales Tax Department முழு சொத்தையும் அபகரிக்க போகிறார்கள் என்று சோகத்தில் ஆழ்ந்தார்.
முப்பது வருடங்களுக்கு முன்பு இதுதான் எங்கள் நிலைமை.
பின்பு ஏதாவது செய்யவேண்டும் என்று நான் மூன்று நடவடிக்கைகள் எடுத்தேன்.
*1) இந்த 40 வருடங்களாக சம்பாதித்தும் ஒன்றரை கோடி ரூபாயை கூட நம்மால் கட்ட முடியவில்லையே, என்ன தவறு செய்திருக்கிறோம் என்று ஆராய்ச்சி செய்தேன்.*
*2) இதுவரை 1% loss 1% profit என்று தான் வியாபாரம் செய்து கொண்டு இருந்திருக்கிறோம். இதைத் தெரிந்து கொண்ட பிறகு நான் 3% profit இல் தான் வியாபாரம் செய்வேன் என்று தீர்மானம் செய்து கொண்டேன்.*
*3) மூன்றாவது நடவடிக்கை என்னவென்றால் நாங்கள் இந்த நீதிமன்ற வழக்கில் வெற்றியை அடைய வேண்டும்;* அதற்கு ஒரு வழக்கறிஞர் எங்களுக்குத் தேவைப்பட்டது. சாதாரணமாக எங்கள் அப்பா ஒரு வழக்கறிஞர் 2000 ரூபாய் கேட்டார் என்றால் 1500 ரூபாய் வாங்கிக் கொள்கிறீர்களா??? என்று தான் கேட்பார். ஆனால் இந்த வழக்கில் வெற்றி அடைந்தே ஆகவேண்டும் என்பதற்காக தமிழ் நாட்டிலேயே சிறந்த வழக்கறிஞரை நாங்கள் இதற்காக நியமித்தோம். வழக்கறிஞர், Mr. ரமணியிடம் இந்த வழக்கை ஒப்படைத்தோம்.
வழக்கு நடைபெற்றது. நீதிமன்றத்தில் stay வாங்கினார்கள்.
3 வருடங்கள் கிட்ட கடந்தன. அதற்குள் நாங்கள் அந்த ஒன்றரை கோடி ரூபாயை சம்பாதித்து விட்டோம்.
அதே நேரத்தில் இந்த மூன்று வருடங்களுக்குப் பிறகு நாங்கள் அந்த வழக்கில் வெற்றி அடைகிறோம்.
ஏன் வெற்றி அடைகிறோம் என்றால் நாம் வீட்டிற்கு Gas Cylinder வாங்குகிறோம்ல அதில் Gasக்கு மட்டும் தான் வரி கட்டுகிறோம், Cylinderக்கு இல்லை. அதேபோல தான் எண்ணெய்க்கு மட்டும் வரி வசூல் பண்றதுதான் சரி, canக்குத் தேவையில்லை என்று நீதிமன்றம் முடிவு செய்வதற்கு மூன்று வருடங்கள் ஆகின.
இந்த மூன்று வருடங்களில் எங்களுக்கு அந்த ஒன்றரை கோடி ரூபாய் கட்டுவது மிச்சம்.
பின்பு நாங்கள் இன்னொரு ஒன்றரை கோடி ரூபாயும் சம்பாதித்து விட்டோம்.
மக்களே!! எங்களுக்கு இந்த 3 கோடி லாபம், வியாபாரத்தில் வளர்ச்சி இரண்டையுமே கொடுத்தது அந்த Sales Tax Officer உருவாக்கின அந்த சிக்கல்தான்.
அதனால் எப்பொழுதெல்லாம் உங்களுக்கு வியாபாரத்தில் சிக்கல் வருகிறதோ, சிந்தியுங்கள்!! சிந்தித்தால் புதிய யோசனைகள் உங்களுக்கு வரும்.
அதனால் நான் இப்போ என்ன செய்ய வேண்டும் என்றால் எனக்கு சிக்கல் கொடுத்த அந்த Sales Tax Officerக்கு மாலையிட்டு மரியாதை செய்யவேண்டும். அவரால் தான் இவ்வளவு சிந்தித்து இந்த வளர்ச்சியை அடைந்து இருக்கிறேன்.
ஆகவே பிரச்சனைகள் வந்தால் அதை சமாளிக்க கூடிய திறமையும் அதனால் வளர்ச்சியும் ஏற்படும் பிரச்சனைகளை சமாளித்து பழகுங்கள்
##"இதயம்" முத்து
அண்ணாச்சியின் பதிவு.....👍🙏

ஏசி காரில் செல்பவர்கள் கவனத்திற்கு...People traveling in AC cars should be aware...



 ஏசி காரில் செல்பவர்கள் கவனத்திற்கு...

வாடகை காரில் செல்வோரும் கவனமாக இருங்கள்....
இது ஒரு டிரைவர் சொல்ல கேட்டது உங்களுக்காக நண்பர்களே.... 🌹
வாகன குளிரூட்டி AC யுடன் தொடர்புடைய கீழ்க்காட்டப்பட்ட ஒரு பட்டன் காணப்படும்.
இது ஆன் செய்துள்ள போது வாகனத்தின் உள்ளே உள்ள காற்றை எடுத்து குளிரூட்டும்.
இதை ஆஃப் செய்துள்ள போது வெளியில் இருந்து காற்றை எடுத்து குளிரூட்டும்.
நாம் வாகனம் செலுத்தும் போது வெளியில் இருந்து காற்றை எடுப்பதால் குளிரூட்டுவது சற்று குறைவாக இருப்பதாலும் வெளியில் இருந்து வேறுவித வாசனைகள் உள்ளே வருவதாலும் அநேகமாக எல்லோரும் காருக்குள்ளேயே இருக்கும் காற்றை குளிரூட்டும் (Internal cooling) பட்டனை ஆன் நிலையிலேயே வைத்திருப்போம்.
ஆனால் நீண்டதூரம் பயணம் செய்யும் போதோ அல்லது நிறைய நபர்கள் பயணம் செய்யும் போதோ உள்ளே உள்ள காற்றை எடுத்து குளிரூட்டும் சந்தர்ப்பத்தில் உள்ளே ஆக்ஸிஜன் அளவு குறைந்து நம் சுவாசம் காரணமாக கார்பன்டை ஆக்ஸைடு அதிகரித்து காணப்படும்.
இந்த வேளையில் வாகனம் செலுத்துபவருக்கு அதிக கொட்டாவி நித்திரை மயக்கம் உடல் சோர்வு என்பன ஏற்படும்.
இந்த வேளையிலேயே நாம் வாகனத்தை விட்டு வெளியில் வந்து கால் கையை அசைப்பதாலோ அல்லது முகம் கழுவுவதாலோ அல்லது ஒரு கடைக்கு சென்று ஒரு தேநீர் அருந்துவதாலோ பழைய நிலைக்கு வருவது போல உணர்வோம்.
அது உண்மையில் வெளியில் வந்து நல்ல ஆக்ஸிஜனை சுவாசிப்பதால் உடல் பழைய நிலைக்கு திரும்புகிறது.
இதேவேளை வாகனம் செலுத்தும் போது அதிக கொட்டாவி சோர்வு நித்திரை மயக்கம் வந்தால் அடிக்கடி கீழுள்ள பட்டனை ஆஃப் நிலைக்கு கொண்டு வந்து, வெளியில் உள்ள காற்று உள்ளே வர வாய்ப்பளித்தால் வெளியில் உள்ள காற்றில் இருந்து ஆக்ஸிஜன் உள்ளே வருவதால் கொட்டாவி குறைவதை உணர்வீர்கள்.
எனவே தூர பிரயாணம் செய்பவர்கள் நகர்ப்புற பகுதிகளில் இடையிடையே
(ஒன்று அல்லது இரண்டு மணி நேரங்களுக்கு ஒருமுறை ) கீழுள்ள பட்டனை ஒரு பதினைந்து நிமிடங்கள் ஆஃப் செய்து வெளியில் உள்ள காற்றை உள்ளே எடுத்து குளிரூட்டுவதால் நித்திரை மயக்கம் வருவதை ஓரளவு தடுக்கலாம் நாமும் உடல் சோர்வு இன்றியும் பயணிக்கலாம்.

Featured Post

எண்ணம்_போல_வாழ்க்கை

#எண்ணம்_போல_வாழ்க்கை... ஒருமுறை, ஒரு பிச்சைக்காரன் ரயிலில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் போது, ​​ சூட் மற்றும் பூட்ஸ் அணிந்த ஒரு தொழிலதிபர...