Wednesday, January 1, 2025

தமிழ்நாடு கேரளா எல்லையில் உள்ள ராமக்கல் மெட்டு...

 

தமிழ்நாடு கேரளா எல்லையில் உள்ள ராமக்கல் மெட்டு...

ஆசியாவிலேயே அதிகமாக காற்று வீசும் இடம் எந்த நேரமும் 35 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசிக்கொண்டே இருக்கும்..
கம்பம் மெட்டு வழியாகவும் இந்த இடத்திற்கு செல்லலாம் அல்லது குமுளிக்கு சென்று குமுளியில் இருந்து மூணாறு செல்லும் சாலை வழியாக நெடுமங்கண்டம் வழியாகவும் இந்த இடத்திற்கு வரலாம்...
உலகப் புகழ் பெற்ற டைட்டானிக் பட கதாநாயகன் லியானார்டோ டிகாப்ரியோ ஆசியாவில்லையே எனக்குப் பிடித்த சுற்றுலா தளங்களில் இந்த இடம் முதன்மையானது என்று குறிப்பிட்டுள்ளார்...
இந்த இடத்திற்கு மேலும் அழகு தருவது மலை உச்சியில் உள்ள குறவன் குறத்தி சிலை தான்..
வாருங்கள் ஒரு முறையாவது சென்று வருவோம்.


அழகிய சீத்தார்குண்டு அருவியும்

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களைப் பற்றி அறிந்து கொள்வோம்...

கண்ணுக்கும் நெஞ்சிக்கும் குளிர்ச்சி தரும் அழகிய மாவட்டம் பாலக்காடு மாவட்டம்...
கேரளா மாநிலத்தின் மிக அழகான அணை மிகப்பெரிய பூங்காவுடன் கூடிய அணை மலப்புழா அணை...
அணைக்கு அருகில் பாலக்காடு கோட்டை மிகவும் பிரம்மாண்டமான கோட்டை...
கேரளாவின் மிக அழகிய கிராமம் என்றால் அது கொல்லங்கோடு கிராமம் தான்...
கொல்லங்கோடு கிராமத்தின் அழகிய வயல்வெளிகள் முடிந்தவுடன் தொடங்கும் மலைப்பகுதிகள் அதுவே நெல்லியம்பதி மலைகள்...
நெல்லியாம்பதி மலையில்தான் அதிக காபி தோட்டங்கள் உள்ளது..
அழகிய சீத்தார்குண்டு அருவியும் உள்ளது

மகிழ்ச்சி என்பது என்ன...?

மகிழ்ச்சி என்பது என்ன...?

பிரபல துருக்கியக் கவிஞர் ஒருமுறை தனது ஓவிய நண்பரான அபிதின் தினோ என்பவரிடம் 'மகிழ்ச்சி' என்ற ஓவியத்தை உருவாக்கச் சொன்னார்.
ஒரு குடும்பம் அமைதியாக உறங்கிக் கொண்டிருப்பதை ஓவியமாக ஓவியர் சித்தரித்தார்.
கட்டிலின் ஒரு கால் உடைந்து, இரண்டு செங்கற்களால் தாங்கப்பட்டு, பாழடைந்த அவர்களது வீட்டின் மேற்கூரையில் மழை நீர் ஒழுகிக் கொண்டிருந்தது.
ஒரு குடை அந்த மழை நீரை தடுத்துக்கொண்டிருந்தது. அந்த குடும்பத்தின் நாய் கூட படுக்கையில் நிம்மதியாக தூங்கிக் கொண்டிருந்தது.
இந்த ஓவியம் அழியாததாக உலக புகழ் பெற்றதாக மாறியது.
இந்த ஓவியத்தை ஆழமாகப் பார்த்து, உண்மையில் மகிழ்ச்சி என்றால் என்ன என்று சிந்தியுங்கள் நண்பர்களே...
இந்த படத்தைப் பார்த்த பிறகு, மகிழ்ச்சி என்பது பிரச்சனைகள் இல்லாதது அல்ல, கடினமான சூழ்நிலைகளை ஏற்றுக்கொண்டு அமைதியைக் காண்பது என்று நான் நம்புகிறேன்.
சூழ்நிலை எவ்வளவு மோசமாக இருந்தாலும், உங்களிடம் இருப்பவற்றில் நல்லதைப் பார்க்க முயற்சி செய்யுங்கள்.
இருப்பதை சரியாக பயன்படுத்தினால், நினைப்பது தானாக வரும்.
நிம்மதி என்பது புற விஷயங்களில் அல்ல. அக விஷயங்களில் உள்ளது. உங்கள் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட விஷயங்களைப் பற்றி வருத்தப்படுவதை நிறுத்துங்கள்.
உங்கள் இதயம் கனமாக இருக்கும் போதெல்லாம், இந்த ஓவியத்தை நினைவில் கொள்ளுங்கள்.
எப்பொழுதும் திருப்தியாகவும் நிம்மதியாகவும் தூங்குங்கள்

அழகு சுந்தரா…

 

==================================

சிவபெருமான் கண்ணாடியில் ரசித்த தனதுருவம்…
==================================
கயிலையில் அலங்கார மண்டபத்தில் ஒரு முறை சிவபெருமான் தன்னை கண்ணாடியில் கண்டார்.
ஒரு கணம் அவர் அழகில் அவரே சொக்கிப் போய்விட்டார். நம்மில் சிலர் கண்ணாடியில் தெரியும் நம் உருவத்தை பார்த்து பேசுவதில்லையா?
அது போல கண்ணாடியில் தெரிந்த தனது பிம்பத்தை நோக்கி, “அழகு சுந்தரா… கொஞ்சம் வெளியே வா!” என்று அழைத்தார்.
அழைப்பது யார்?
காலத்தையே நிர்ணயிப்பவன் அல்லவா?
அவரது வாக்கினின்று வெளிவருவது என்ன சாதாரண வார்த்தைகளா?
வேதங்களைவிட புனிதமானவை ஆயிற்றே..!
எனவே கண்ணாடியில் பார்த்து ரசித்த உருவம், உடனே நேரில் வந்துவிட்டது.
நிழல் நிஜமாகிவிட்டது….
பரமன் வாக்கிற்கு உள்ள வலிமை!!
தன்னுடைய பிம்பத்திலிருந்து வந்த அந்த உருவத்திற்கு ‘சுந்தரர்’ என்று பெயரிட்டார்.
பெயர் சூட்டினால் போதுமா?
ஏதாவது பணி தரவேண்டுமல்லவா?
தன்னுடைய திருநீற்று பேழையை தாங்கும் பணியை கொடுத்தார்.
(நிழலுக்கு கிடைச்ச பாக்கியத்தை பார்த்தீங்களா? ஹூம்… நிழலாய் இருந்தாலும் நல்லோர் நிழலாய் இருக்கவேண்டும்!)
எப்போதெல்லாம் இறைவன் திருநீறு பூசவேண்டும் என்று கருதுகிறானோ அப்போதெல்லாம் திருநீறு கொண்டு போகும் பணியை செய்து வந்தார் நிழலில் இருந்து உருவான ‘சுந்தரர்’. அதாவது ஈசனின் நேரடி உதவியாளர்.
நந்திக்கும் கிடைக்காத பேறு இது.
தேவர்கள் பாற்கடலை கடைந்த போது ஆலகால விஷம் உருவானது அல்லவா?
அந்த விஷத்தின் வீரியத்தால் பலரது பார்வை பாதிக்கப்பட்டது. அனைவரும் சிதறி ஓடினர். கடைசியில் அவர்கள் தஞ்சமடைந்த இடம் கயிலை. ஈசன் உடனே தனது முதன்மைத் தொண்டர் சுந்தரரைத் அந்த விஷத்தை எடுத்து வரச் சொன்னார். சுந்தரரும் சென்று அந்த விஷத்தை திரட்டி ஒரு சிறிய நெல்லிக்கனி அளவாக ஆக்கினார்.
அதை கொண்டு வந்து ஈசனிடம் ஒப்படைத்தார். ஈசன், இதை வெளியே விட்டுவைத்தால் ஆபத்து என்று கருதி உடனே அதை தான் வாங்கி விழுங்கிவிட்டார். இதைக் கண்டு அன்னை பதறிப் போய, விஷம் உள்ளே இறங்காதவாறு, தொண்டையில் கை வைத்துப் பிடித்தாள். விஷம் அப்படியே நின்றது.
அப்போது முதல் ஈசனுக்கு திருநீலகண்டம் என்று பெயர் ஏற்பட்டது.
விஷத்தை பார்த்தோர், அதை நுகர்ந்தோர், என அனைவரும் பாதிக்கப்பட்ட நிலையில், சுந்தரருக்கு மட்டும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை. காரணம், அவர் தினசரி திருநீற்றுப் பேழையை தாங்கி வந்ததால் திருநீற்றுக்கு விஷத்தை முறிக்கும் சக்தி உண்டு.
விஷத்தை தாங்கி வந்ததால் சுந்தரருக்கு ஆலால சுந்தரர் என்ற திருநாமம் உண்டாயிற்று.
சரி… இப்படி அணுக்கத் தொண்டராய் இருந்தவர் எப்படி பூவுலகில் பிறந்தார்?
கயிலையில் மிகப் பெரிய நந்தவனம் ஒன்று உண்டு. சிவபூஜைக்கு சிவகணங்கள் அங்கு தான் பூக்களை பறிப்பது வழக்கம். பார்வதி தேவியின் பணிப்பெண்களும் அங்கு தான் பூக்களை பறிப்பார்கள்.
ஒருமுறை சுந்தரர் அந்த நந்தவனத்தை கடந்து செல்ல முற்பட்டபோது, அப்போது அங்கு பூக்களை பறிக்க வந்த பார்வதி தேவியின் பணிப்பெண்கள் கமலினி, அனந்திதை என்ற இருவரையும் பார்த்தார். ஒரு இனம் புரியாத பரவசம் ஏற்பட்டது. அவர்கள் பேரழகில் மயங்கினார். அவர்களும் ஆலால சுந்தரரின் அழகில் மயங்கினர்.
இது இறைவனுக்கு உடனே தெரிந்துபோனது.
“சுந்தரா… நீ புவலகில் சென்று பிறந்து எல்லாவித இன்பங்களையும் துய்த்துப் பின்னர் மீண்டும் கயிலை வந்தால் போதும்” என்றார்.
சுந்தரர் கலங்கிப் போனார்… “தேவ தேவா… தங்களை விட்டு இமைப் பொழுதும் என்னால் பிரிந்திருக்க முடியாதே… என்னை மன்னித்து நல்லருள் செய்யுங்கள் சுவாமி” என்று பல்வேறு விதமாக மன்றாடினார்.
“கவலை வேண்டாம்… உரிய நேரம் வரும்போது நாம் உன்னை தடுத்தாட்கொள்வோம்” என்று திருவாய் மலர்ந்தருளினார் திருநீலகண்டர்.
பூலோகப் பிறப்பு
ஈசனின் ஆணையின்படி, பூவுலகில் தமிழகத்தில் திருநாவலூர் என்னும் தலத்தில் சடையனார்-இசைஞானியார் என்னும் சிவநெறி வழுவாமல் வாழ்ந்து வந்த தம்பதியர்க்கு மகனாக பிறந்தார் சுந்தரர்.
திருவாரூரில் உள்ள ஈசன் மீது அக்குடும்பத்தினர் பெரும் பக்தி கொண்டிருந்ததால் தங்கள் மகவுக்கு நம்பியாரூரர் என்று பெயரிட்டனர்.
பாலகனாயிருந்த நம்பியாரூரரின் அழகையும் தேஜஸையும் கண்டு வியந்த நரசிங்க முனையர் என்னும் குறுநில மன்னன், “இக்குழந்தை சம்பந்தரின் மறுபிறப்போ?” என்று எண்ணி வியந்து, நம்பியாரூரரின் பெற்றோரான சடையனார் – இசைஞானியார் இருவரின் அனுமதியையும் பெற்று தனது அரண்மனைக்கு கொண்டு சென்று, கல்வியும் ஞானமும் புகட்டி செல்லப் பிள்ளை போல வளர்க்கலானார்.
உரிய பருவம் வந்ததும் அவனுக்கு உபநயனம் செய்வித்து பல்விரு வித்தைகளையும் பயிற்றுவித்தார்.
அழகின் சிகரமாய் திகழ்ந்தார் இளைஞர் நம்பியாரூரர். அவருக்கு “நான்… நீ…” அனைவரும் போட்டிபோட்டு பெண்கொடுக்க முன்வந்தனர். புத்தூரைச் சேர்ந்த சடங்கவி சிவாச்சாரியார் என்பவரின் மகளுக்கு நம்பியாரூரை திருமணம் செய்விப்பது என்று முடிவு செய்து, திருமணம் நிச்சயத்தினர்.
சுந்தரருக்காக ஏற்கனவே கமலினியும் அனந்திதையும் பரவை நாச்சியாராகவும், சங்கிலி நாச்சியாராகவும் பிறந்து காத்திருக்க, இவர் இப்பெண்ணை மணந்துகொண்டால் என்னாவது? மேலும் உரிய நேரத்தில் தான் தடுத்தாட்கொள்வோம் என்று ஈசன், சுந்தரரிடம் கயிலையில் வாக்கு கொடுத்திருந்தபடியால், இறைவன் ஒரு கிழவரைப் போல வேடந்தாங்கி மணக்கோலத்தில் மங்கல நாண் கட்ட தயாராக இருந்த சுந்தரரிடம் வந்து நின்றார்.
“நிறுத்து… நம்மிடையே ஒரு வழக்கிருக்கிறது.
அதைத் தீர்த்த பிறகு உன் திருமணத்தை வைத்துக்கொள்” என்றார்.
பின்னர் சபையோரிடம், சுந்தரரின் பாட்டன், “நானும் எனது சந்ததியினரும் உனக்கு அடிமை” என்று எழுதி வைத்துச் சென்ற ஓலையை காண்பித்து சுந்தரர் தன் அனுமதியின்றி திருனமணம் செய்ய இயலாது என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
திருமணம் நின்றது. வெகுண்டெழுந்த சுந்தரர், அவர் கையிலிருந்த ஓலையை பிடுங்கி கசக்கி எறிந்து “போடா பைத்தியக்காரா” என்றார்.
“இது படி ஓலை தான். மூல ஓலை என்னிடம் பத்திரமாக இருக்கிறது” என்றார்.
தொடர்ந்து பஞ்சாயத்து கூடி, சுந்தரர் முதியவருக்கு அடிமை என்றும் அவர் சொல்படியே கேட்கவேண்டும் என்று தீர்ப்பானது.
தொடர்ந்து முதியவர் சுந்தரரை அழைத்து திருவெண்ணெய்நல்லூர் கோவிலுக்குள் புகுந்து பின்னர் மாயமாகிப் போனார். சித்தம் கலங்கிய சுந்தரர் செய்வதறியாது திகைத்து நின்று பொது, சிவபெருமான் ரிஷப வாகனத்தில் உமாதேவியோடு காட்சி தந்து, சுந்தரருக்கு கயிலையில் நடந்த அனைத்தையும் நினைவூட்டி, உன் அவதார நோக்கத்தை நிறைவேற்றவே நாம் உன்னை தடுத்தாட்கொண்டோம்.
நீ நம்மோடு வன்சொற்களைச் சொல்லி வன்றொண்டர் என்கிற பெயரைப் பெற்றாய். நமக்கு அன்பினோடு செய்யத்தக்க அருச்சனையாவது பாடலேயாம்.
ஆதலால், நம்மேலே தமிழ்ப்பாட்டுக்களைப் பாடு” என்று அருளிச்செய்ய சுந்தரர் அவரை ஏச பயன்படுத்திய “பித்தா என்ற வார்த்தையைக் கொண்டே முதல் பாடலை பாடியருளினார்.
பித்தா பிறை சூடி பெருமானே அருளாளா
எத்தால் மறவாதே நினைக்கின்றேன்
மனத்து உன்னை
வைத்தாய் பெண்ணை தென்பால்
வெண்ணை நல்லூர் அருள் துறையுள்
அத்தா உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனலாமே
சுந்தரர் அருளிய திருப்பதிகங்களை ‘திருப்பாட்டு’ என்று அழைப்பது மரபு. இவர் அருளியவை முப்பத்து எண்ணாயிரம் அவற்றில் கிடைத்த பதிகங்கள் 101 மட்டுமே.
சிவத் தலங்கள் தோறும் சென்று தேவாரப் பதிகங்கள் பாடி இறைவனைப் பணிந்தார். இறைவன் பால் இவர் கொண்டிருந்த பக்தி “சக மார்க்கம்” என்று சொல்லப்படுகின்ற தோழமை வழியைச் சார்ந்தது. இறைவனைத் தனது தோழனாகக் கருதித் தனக்குத் தேவையானவற்றை எல்லாம் கேட்டுப் பெற்றுக்கொண்டார்.
“நீள நினைந்தடியேன்” என்று தொடங்கும் அவர் பாடிய தேவாரப் பதிகம் மூலம், குண்டலூரில் தான் பெற்ற நெல்லை தனது ஊர் கொண்டு சேர்க்க இறைவனிடம் உதவி கேட்பதைக் காணலாம். இறைவனும் இவர் மற்றொருவரிடம் பொருள் பெற அனுமதித்ததில்லை.
சேரமான் பெருமானை இவர் சந்தித்து திரும்பும் போது, அம்மன்னர் பொன், பொருள், மணியிழைகள், ஆடைகள் போன்ற பல பொருட்களையும் இவருடன் அனுப்பி வைத்தார்.
திருமுருகன்பூண்டியில், இறைவன் அவற்றை எல்லாம் தமது பூதகணங்களை வேடர்களாக மாற்றி அவர்களைக் கொண்டு பறித்துக் கொண்டார். சுந்தரர் ’கொடுகு வெஞ்சிலை வடுகவேடுவர்….’ எனத்துவங்கும் பதிகம் பாடி இறைவனிடம் இருந்து பொருட்களைத் திரும்பப் பெற்றுக் கொண்டார்.
திருமுருகன்பூண்டி சிவபெருமான் கோவிலில் பைரவர் சந்நிதி அருகிலுள்ள குழியில் தான் சுந்தரரிடமிருந்து கவர்ந்த பொருட்களை இறைவன் வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.
தனது 18 ஆவது வயதில் இவர் சிவனடி சேர்ந்தார். இவர் வாழ்ந்தது கி. பி. எட்டாம் நூற்றாண்டளவிலாகும். இவர் பாடிய தேவாரங்கள் 7 ஆம் திருமுறையில் சேர்க்கப்பட்டுள்ளன.
சிவ சிவ

புலஸ்தியர் மகரிஷியால்

அகத்தியர்- ஓரு அதிசயம்! அபூர்வம்! ஆச்சர்யம்!

காசி மகராஜாவின் பெண் லோபமுத்ரா. அவரைத் திருமணம் செய்து கொண்டு பொதிகைக்கு அகத்தியர் வரும் பொழுது, அங்கிருக்கும் யோகிகள், ஞானிகள், சித்தர்கள் அனைவரும் அகத்தியரின் திருமண நிகழ்வை காண வேண்டும் என்று வேண்டிக் கொண்டதால், அவர்களுக்கு அகத்தியர் தன் திருமணக் காட்சி தந்து அருளினார்.
அபூர்வமான இந்தப் படத்தில் நிறைய ஆச்சரியமான விஷயங்கள் உள்ளது.
1. அகத்தியர் உட்கார்ந்து இருக்கக்கூடிய இந்தப் பாறையின் மேலிருக்கும் இந்த மரம் ஒரு ‘தேவதாரு மரம்’.
2. அகத்தியர் அணிந்திருக்கக் கூடிய ஆபரணங்களான தோள்வளை, கீரிடம், கைவளை, சண்ணவீரம், கால்வளை, தோடகம், போன்ற அனைத்தும் ‘திருத்தோடகன்’ என்னும் பொற்கொல்லரால் பிரத்தியேகமாக அகத்தியருக்காக செய்து கொடுக்கப்பட்டது.
3. அகத்தியர் அணிந்திருக்கும் பூணூலானது, விபூதி கலந்த ஒரு நிறத்தில் இருக்கும். இதன் பெயர் ‘திரிபூரணம்’ என்பதாகும். இது கௌதம முனிவரால் கொடுக்கப்பட்டது.
4. அகத்தியரும், லோபமுத்திரா அன்னையும் அணிந்திருக்கும் பூமாலையானது வன்னி, வில்வம், துருக்கத்தி, செம்பாலை ஆகிய 4 விதமான மலர்களால் தொடுக்கப்பட்ட மாலையாகும். இந்த மாலையை தொடுத்துக் கொடுத்தவர் லோபமுத்ரா அன்னையின் தோழியான ‘பர்வதினி’ என்பவர்.
5. லோபமுத்ரா தேவியானவர் ஶ்ரீ லலிதா பரமேஸ்வரியின் மிகப் பெரிய சக்தி உபாசகி. அம்பாளின் மிகப் பெரிய சிஷ்யையாக லோபமுத்ரா தேவியைப் பற்றி ‘லலிதா திரிசதை’ யில் கூறப்பட்டுள்ளது. ஶ்ரீ வித்யா உபாசனை செய்பவர்கள் சிவப்பு நிற பட்டு உடுத்துவர். அதனால் சிவப்பு நிற பட்டு தான் லோபமுத்ரா அன்னைக்கு திருமண ஆடையாக நெய்யப்பட்டது.
7. லோபமுத்ரா அன்னை அம்பாளையே அடைய வேண்டி நின்றதால் ‘லோபா’ என்று பெயர் வந்தது. ‘முத்திரா’ என்றால் ஆனந்தத்தைப் பெற்றவள் என்று பொருள்.
8. லோபமுத்ரா அன்னை காலில் அணிந்திருக்கும் மெட்டியானது ‘சரளி’ எனப்படும் ஒரு அபூர்வ வகையான வைரக்கல்லால் ஆன அணிகலானாகும். இதைக் கொடுத்ததே அகத்தியர் தான்.
9.லோபமுத்ரா அன்னையின் அருகில் உள்ள மயிலானது, அவரது தோழியான ‘சேதத்தரணி’ என்பவராவார்.
10. அகத்தியர் அருகில் உள்ள மான், அவரின் முதன்மைச் சீடரான புலஸ்தியர் மகரிஷியே ஆவார்.
11. லோபமுத்ரா அன்னையின் தோளில் அமர்ந்திருக்கும் கிளியானது மிகவும் விசேஷமானது. அன்னையினால் கண்டறியப்பட்ட மகாவித்தை ஒன்று உண்டு. அது ‘ஹாதி வித்தை’. அந்த வித்தைக்குரிய தேவியே லோபமுத்திரை தான். அந்த வித்தையை உபாசனை செய்து யோகநிலையில் வந்த ஒரு பெண் தான் ‘மயூஷினி’. அவரே கிளி உருவத்தில் அமர்ந்திருக்கிறார்.
12. லோபமுத்ரா அன்னையின் கையில் உள்ளது ‘அமிர்தக்கலசம்’. இது பரமேஸ்வரனால் கொடுக்கப்பட்டது.
13. அன்னையின் கூந்தலில் ‘பொற்காந்தல்’ எனப்படும் ஒரு மலர் சூடியிருக்கிறார்கள்.
இவ்வளவு விசேஷங்கள் நிறைந்த இந்த அபூர்வ திருமணக் காட்சியானது பொதிகை மலையில் உள்ள வடகிழக்கு பகுதியில் இருக்கும் ‘பூமண் மேடு’ என்னும் இடத்தில் தான் நிகழ்ந்தது. இந்த அரிய நிகழ்வுகள் அனைத்தும் அகத்தியரின் தலைமைச் சித்தரான புலஸ்தியர் மகரிஷியால் கூறப்பட்டது.
இவருக்கு பிடித்த பூ மல்லிப்பூ பிரசாதம் தயிர் சாதம் ஈம் என்ற பிஜட்சார மந்திரம் இவருடையது. ஓம் அகத்திசாய நமஹ நாமம் சொன்னால் அருள் புரிவார்.

Featured Post

ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதைகள் இருக்கிறது

ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதைகள் இருக்கிறது என்பதையும், ஓர் பலாப்பழத்தைப் பிளக்காமல் அதன் உள்ளிருக்கும் சுளையின் எண்ணிக்கையைய...