Showing posts with label குருராம் சுரத்குமார் நினைவு தினம்(20.02.2001). Show all posts
Showing posts with label குருராம் சுரத்குமார் நினைவு தினம்(20.02.2001). Show all posts

Friday, February 21, 2025

குருராம் சுரத்குமார் நினைவு தினம்(20.02.2001)

 தலைமீது கைவைத்து தாமுணர பெரும்சக்தி அலைபோலே மேலெழுப்பும் ஆசானே குருயோகி!!

இலைபூ காய்கனியாக ஏற்றமதை நாளும்தந்து இருக்கின்றேன் உம்முடனே என்றுரைக்கும் குருயோகி!!
விலையாக பெரும்பக்தி விருப்பமுடன் ஏற்றுநிற்கும் வேதாந்த இறைமகனார் வெற்றியருள் குருயோகி!!
மலையருணை தலம்வாழ்ந்து மலர்க்கரத்தில் விசிறிகொண்டு மனத்தாலே வினையோட்டம் மாஜோதி குருயோகி!!
பிழையேதும் யான்செய்யும் பெருங்குற்றம் கருதாது இலகுவாக அதைவிலக்கி ஏற்றிடும் எம்குருயோகி!!
குலம்வாழ நலமாக குறைவின்றி நிறைவாக குருவாக வழிநடத்தி இறைசேர்ப்பாய் குருசுரத்யோகி!!!
குருராம் சுரத்குமார் நினைவு தினம்(20.02.2001)

Featured Post

ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதைகள் இருக்கிறது

ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதைகள் இருக்கிறது என்பதையும், ஓர் பலாப்பழத்தைப் பிளக்காமல் அதன் உள்ளிருக்கும் சுளையின் எண்ணிக்கையைய...