Showing posts with label மரத்துண்டுகளின் வயதை கணக்கிடலாம்!. Show all posts
Showing posts with label மரத்துண்டுகளின் வயதை கணக்கிடலாம்!. Show all posts

Friday, February 21, 2025

மரத்துண்டுகளின் வயதை கணக்கிடலாம்!

 மரத்துண்டுகளின் வளையங்களின் எண்ணிக்கையை வைத்து அதன் வயதை கணக்கிடலாம்!

இந்த விஷயத்தைப் பிள்ளைகளுக்குப் பாடம் நடத்துகையில்தான் தெரிந்து கொண்டேன்.
அதுமுதல் என்னைக் கடக்கும் டிம்பர் லாரிகளில் அடுக்கிச் செல்லும் மரங்களை ஆவலாகப் பார்த்துக்கொண்டே செல்வேன்.
கொஞ்சம் கலையாகவும் தான்.யானை மனிதர்களால் எதற்காகவோ படுக்கவைக்கப்படுவதையும் பெரிய பெரிய மரங்கள் வெட்டி பேரோசையுடன் சாய்க்கப்படு
வதையும் ஒரே மனநிலையில் வைப்பேன்.
சமீபமாக கண்டங்கள் பற்றிய பாடம் நடத்திக் கொண்டிருந்தேன்.
நீண்ட நெடுங்காலத்திற்கு முன்பு பனிப்பிர
தேசங்களில் புதையுண்ட மரங்களும் அதன் வளையங்களும் மரத்தின் வயதை மட்டுமல்ல அந்தந்த ஆண்டுகளின் மழை வளம் மற்றும் வறட்சியைக் கணக்கிடவும் உதவின என்று வாசித்த உடனேயே....
மரத்தின் வளையங்களுக்
கான இடைவெளி அதன் அகலம் இவற்றை வைத்து கண்டுபிடிப்
பார்களோ என்று பிள்ளைகளிடம் சொல்லிவிட்டு மேலும் வாசித்தால் அதுதான்.
பிள்ளையைப் போலவே எஸ்.....!
என வெற்றிச் சமிக்ஞை செய்து கொண்டேன்.
இயற்கை குறித்த எனது யூகம் சரியாக இருந்த மகிழ்ச்சி.
இந்த வளையங்களை கிராமங்களில் வைரம் பாய்ந்த கட்டை என்பார்கள்.
ஆம்!
காலப்போக்கில் நடுவே கருப்பாக மாறும்.
பிஞ்சுமரம் மஞ்சள் பழுப்பு இளஞ்சிவப்பு என மாறி இறுதியில் கருப்பாக மாறினால் வைரம் தானே!
இலவம் காய்களை கடைந்து பஞ்சாக்க காராங்குச்சி வெட்டினால் குச்சியிலேயே வைரம் பாய்ந்திருக்கும் கண்டதுண்டு.
விடத்தேர் நாட்டுக்கருவை போன்ற மரங்களின் சிறு கம்பே வைரம் பாய்ந்திருக்கும்.
இவை வறக்காடுகளில் மழை தண்ணி இல்லாமல் வாழ்ந்திருக்கும்.
அவற்றிற்கு இயற்கையை எதிர்கொள்ளும் ஆற்றல் அதிகம்.
பிராய்லர் கோழி நாட்டுக்கோழி கிராமத்துமனிதன் நகரத்து மனிதன்...
அதிலும் வானம்பாத்த
பூமியில் வாழ்பவன் இவர்களது வாழ்க்கையை உற்றுப்பாருங்கள் உங்களுக்கே புரியும்.
ஆற்றங்கரையில் அதுவாய் விளைந்த கள்ளிப்பழங்களையோ இலந்தையையோ நீங்கள் கொண்டு வந்து இனம் மரபு எல்லாவற்றையும் மாற்றி சொகுசாய் உரம் தண்ணீர் எல்லாம் கொடுத்து வளர்த்தாலும் தாம்போக்குக்கு வளர்ந்த இயல்பின் ருசியை உணர இயலாது.
எங்கு பார்த்தாலும் நர்சரிகளின் வளர்ச்சி.
தாழையை வீட்டில் வளர்க்கக் கேட்கிறான் ஒரு மனிதன்.
முடவாட்டுக்கால் விதைக் கிழங்கு கிடைக்குமாம்!
பாறைகளில் தொற்றி அதன் கனிமங்களை உறிஞ்சி உயிருக்குப் போராடி வளர்வதால் தான் அதற்குள் அத்தனைச் சத்து.
என்று அதை சந்தைப்படுத்தி எங்கு பார்த்தாலும் எல்லா காலநிலையிலும் கிடைக்கிறதோ அது பனை ஓலையை ஊற வைத்த சாக்ரீம் பதனியே!
அல்லி,தாமரை,
வெங்காயத்தாமரை வித விதமான கள்ளிகளையும்
கூந்தல்பனை
போன்ற ஈச்சமரங்களின் மினியேச்சர் களையும் வீட்டிலும் மாடியிலும் வளர்த்து என்ன செய்யப் போகிறீர்கள் மக்களே!
மரத்தால் மாடிப்படி வைத்து ஹேங்கரில் செடியைத்தொங்கவிடுகிறீர்கள்!
உங்களோடு வாழவே பயமாக இருக்கிறது.
வாஸ்த்துச்செடிகளின் வருகை வேறு.
எங்கோ ஆரம்பித்து எங்கோ முடித்திருக்கிறேனா?
இயற்கையை யோசித்தால் இப்படித்தான் ஆகிடுறேன்.

Featured Post

ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதைகள் இருக்கிறது

ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதைகள் இருக்கிறது என்பதையும், ஓர் பலாப்பழத்தைப் பிளக்காமல் அதன் உள்ளிருக்கும் சுளையின் எண்ணிக்கையைய...