ஒரு கிராமத்தில் வசித்து வந்த ஒரு மனிதன் திடீரென இறந்து போனான்...!
அவன் அதை உணரும் போது கையில் ஒரு பெட்டியுடன் கடவுள்
அவன் அருகில் வந்தார்...!
கடவுள் :
" வா மகனே...!
நாம் கிளம்புவதற்கான
நேரம் வந்து விட்டது...! "
மனிதன் :
" இப்பவேவா ?
இவ்வளவு சீக்கிரமாகவா ?
என்னுடைய திட்டங்கள்
என்ன ஆவது ? "
கடவுள் :
" மன்னித்துவிடு மகனே...!
உன்னை கொண்டு
செல்வதற்கான நேரம் இது...! "
மனிதன் :" அந்தப் பெட்டியில் என்ன உள்ளது ? "
கடவுள் :" உன்னுடைய உடைமைகள்...! "
மனிதன் :" என்னுடைய உடைமைகளா...!
என்னுடைய பொருட்கள், உடைகள், பணம்
எல்லாமே இதில்தான்
இருக்கின்றனவா ? "
கடவுள் :" நீ கூறியவை அனைத்தும்
உன்னுடையது அல்ல..
அவைகள் பூமியில்
நீ வாழ்வதற்கு தேவையானது...! "
மனிதன் :" அப்படியானால் என்னுடைய நினைவுகளா ? "
கடவுள் :" அவை காலத்தின் கோலம்...! "
மனிதன் :" என்னுடைய திறமைகளா ? "
கடவுள் :" அவை உன் சூழ்நிலைகளுடன் சம்பந்தப்பட்டது...! "
மனிதன் :" அப்படியென்றால் என்னுடைய குடும்பமும் நண்பர்களுமா ? "
கடவுள் :" மன்னிக்கவும் !குடும்பமும் நண்பர்களும் நீ வாழ்வதற்கான வழிகள்...!"
மனிதன் :" அப்படி என்றால் என் மனைவி மற்றும் மக்களா ? "
கடவுள் :" உன் மனைவியும் மக்களும் உனக்கு சொந்தமானவர்கள் அல்ல...! அவர்கள் உன் இதயத்துடன் சம்பந்தப்பட்டவர்கள்.! "
மனிதன் :" என் உடலா ? "
கடவுள் :"அதுவும் உனக்கு சொந்தமானதல்ல...!உடலும் குப்பையும் ஒன்று...! "
மனிதன் :" என் ஆன்மா ? "
கடவுள் :"அதுவும் உன்னுடையது அல்ல...! அது என்னுடையது...! "
🍂 மிகுந்த பயத்துடன் கடவுளிடமிருந்து அந்தப் பெட்டியை வாங்கி திறந்தவன்
காலி பெட்டியை கண்டுஅதிர்ச்சியடைகிறான்...!
🍂 கண்ணில் நீர்
வழிய கடவுளிடம்" என்னுடையது என்று எதுவும் இல்லையா ? "என கேட்க...!
கடவுள் சொல்கிறார் :🍂 அதுதான் உண்மை !நீ வாழும் ஒவ்வொரு நொடி மட்டுமே உன்னுடையது...!வாழ்க்கை என்பது நீ கடக்கும் ஒரு நொடிதான்...!
🍂 ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்...!
எல்லாமே உன்னுடையது என்று நினைக்காதே...!
🍂 ஒவ்வொரு நொடியும் வாழ்...! உன்னுடைய வாழ்க்கையை வாழ்...!
🍂 மகிழ்ச்சியாக வாழ்...! அது மட்டுமே நிரந்தரம்...!
🍂 உன் இறுதி காலத்தில்
நீ எதையும் உன்னுடன் கொண்டு போக முடியாது...!
🍂 வாழுகின்ற ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்வோம்..