Friday, August 19, 2022

நீ எதையும் உன்னுடன் கொண்டு போக முடியாது...!

 ஒரு கிராமத்தில் வசித்து வந்த ஒரு மனிதன் திடீரென இறந்து போனான்...! 

அவன் அதை உணரும் போது கையில் ஒரு பெட்டியுடன் கடவுள் 

அவன் அருகில் வந்தார்...!

கடவுள் :

" வா மகனே...! 

நாம் கிளம்புவதற்கான 

நேரம் வந்து விட்டது...! " 

மனிதன் :

" இப்பவேவா ? 

இவ்வளவு சீக்கிரமாகவா ?

என்னுடைய திட்டங்கள்

என்ன ஆவது ? "  

கடவுள் :

" மன்னித்துவிடு மகனே...!

உன்னை கொண்டு 

செல்வதற்கான நேரம் இது...! "

மனிதன் :" அந்தப் பெட்டியில் என்ன உள்ளது ? "

கடவுள் :" உன்னுடைய உடைமைகள்...! "

மனிதன் :" என்னுடைய உடைமைகளா...!

என்னுடைய பொருட்கள், உடைகள், பணம் 

எல்லாமே இதில்தான்

இருக்கின்றனவா ? "

கடவுள் :" நீ கூறியவை அனைத்தும் 

உன்னுடையது அல்ல.. 

அவைகள் பூமியில் 

நீ வாழ்வதற்கு தேவையானது...! "

மனிதன் :" அப்படியானால் என்னுடைய நினைவுகளா ? "

கடவுள் :" அவை காலத்தின் கோலம்...! "

மனிதன் :" என்னுடைய திறமைகளா ? "

கடவுள் :" அவை உன் சூழ்நிலைகளுடன் சம்பந்தப்பட்டது...! "

மனிதன் :" அப்படியென்றால் என்னுடைய குடும்பமும் நண்பர்களுமா ? "

கடவுள் :" மன்னிக்கவும் !குடும்பமும் நண்பர்களும் நீ வாழ்வதற்கான வழிகள்...!"

மனிதன் :" அப்படி என்றால் என் மனைவி மற்றும் மக்களா ? "

கடவுள் :" உன் மனைவியும் மக்களும் உனக்கு சொந்தமானவர்கள் அல்ல...! அவர்கள் உன் இதயத்துடன் சம்பந்தப்பட்டவர்கள்.! "

மனிதன் :" என் உடலா ? "

கடவுள் :"அதுவும் உனக்கு சொந்தமானதல்ல...!உடலும் குப்பையும் ஒன்று...! "

மனிதன் :" என் ஆன்மா ? "

கடவுள் :"அதுவும் உன்னுடையது அல்ல...! அது என்னுடையது...! "

🍂 மிகுந்த பயத்துடன் கடவுளிடமிருந்து அந்தப் பெட்டியை வாங்கி திறந்தவன் 

காலி பெட்டியை கண்டுஅதிர்ச்சியடைகிறான்...!

🍂 கண்ணில் நீர் 

வழிய கடவுளிடம்" என்னுடையது என்று எதுவும் இல்லையா ? "என கேட்க...!

கடவுள் சொல்கிறார் :🍂 அதுதான் உண்மை !நீ வாழும் ஒவ்வொரு நொடி மட்டுமே உன்னுடையது...!வாழ்க்கை என்பது நீ கடக்கும் ஒரு நொடிதான்...!

🍂 ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்...!

எல்லாமே உன்னுடையது என்று நினைக்காதே...!

🍂 ஒவ்வொரு நொடியும் வாழ்...! உன்னுடைய வாழ்க்கையை வாழ்...!

🍂 மகிழ்ச்சியாக வாழ்...! அது மட்டுமே நிரந்தரம்...!

🍂 உன் இறுதி காலத்தில் 

நீ எதையும் உன்னுடன் கொண்டு போக முடியாது...!

🍂 வாழுகின்ற ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்வோம்..

No comments:

Featured Post

உணவு முறைல முடிஞ்ச அளவு மாற்றம் பண்ணுங்க.

  நாம ஏன் சோணகிரியா இருக்கோம்? தொத்த பாடியா இருக்கோம்? பழங்கால மக்களுக்கு மட்டும் எப்படி திமில் கொண்ட தோளும், மதர்த்த நெஞ்சும் வந்தது? உணவு ...