எப்போதோ நூலகத்தில் படித்தது..
திருமண நாளன்று மணமகள் வீட்டார் மாப்பிள்ளைக்கு
சீர் வரிசை பொருட்கள் தருவார்கள்.
ஆனால் உண்மையில் சீர் வரிசை யாருக்கு தெரியுமா கொடுக்க வேண்டும் மொழிகளுக்கு எல்லாம் தாயாக விளங்குகிற தமிழ் மொழியை புதுப்பித்து, உயிர்ப்பித்து கொண்டிருக்கிற கொண்டிருக்கிற எழுத்தாளர்களுக்கு தான் சீர் வரிசை கொடுக்க வேண்டுமாம். என்னவோரு மாறுபட்ட சிந்தனை!
இவர்களையே ஊக்கப்படுத்தவது ஒவ்வொரு வாசகனின் கடமையும் கூட.
எனவே உங்கள் பகுதியில் நடக்கும் புத்தகத் திருவிழாவிற்கு சென்று ஒரு புத்தகமாவது வாங்கி வாசித்து மகிழுங்கள்.
(நண்பர்கள் யாரேனும் மதுரை புத்தகத் திருவிழாவிற்கு சென்று புத்தகங்கள் வாங்கினால் நீங்கள் வாங்கும் ஒரு புத்தகத்திற்கான தொகையை நானே செலுத்துகிறேன். உங்கள் வாசிப்பு உலகத்தில் நானும் ஒரு
பங்குதாரராக இருப்பதில் எனக்கு மகிழ்ச்சி தான்)
அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண்..
(பகையால் அழிவு வராமல் காக்கும் ஆயுதம் அறிவு ஒன்று தான்)