தூத்துக்குடியில் இடி மின்னலுடன் பெய்த மழை காரணமாக வெப்பம் தணிந்து மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
காற்றுசுழற்சி மற்றும் கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் தென்மாவட்டங்கள் ஓரிரு இடங்களில் மாா்ச் 1 முதல் 3-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் தூத்துக்குடியில் நேற்று இரவு முதல் லேசான மழை பெய்து வந்தது. அதிகாலை முதல் திடீரென இடி மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால் சிவன் கோவில், மார்க்கெட், வஉசி சாலை, திரேஸ் புரம் டூவிபுரம், முத்தம்மாள் காலனி உள்ளிட்ட மாநகரப் பகுதிகளில் காரணமாக சாலைகளில் மழைநீர் குளம் போல் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் சற்று சிரமம் அடைந்தனர். திடீர் மழையல் வெப்பம் தணிந்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.