Articles on Interesting things in science, tamil culture and traditions and national updates,தமிழர்களின் கலாச்சாரம் கட்டுரை,வியக்க வைக்கும் தமிழர் அறிவியல்,புவி அறிவியல்,பிரபஞ்ச அறிவியல்
Monday, September 19, 2022
எந்த நிலையிலும் இறைவனை நம்பு!இறைவன் சிலவற்றை தாமதமாக கொடுப்பான்
Saturday, September 10, 2022
கொலஸ்ட்ரால் காரணமாக
Friday, August 19, 2022
நீ எதையும் உன்னுடன் கொண்டு போக முடியாது...!
ஒரு கிராமத்தில் வசித்து வந்த ஒரு மனிதன் திடீரென இறந்து போனான்...!
அவன் அதை உணரும் போது கையில் ஒரு பெட்டியுடன் கடவுள்
அவன் அருகில் வந்தார்...!
கடவுள் :
" வா மகனே...!
நாம் கிளம்புவதற்கான
நேரம் வந்து விட்டது...! "
மனிதன் :
" இப்பவேவா ?
இவ்வளவு சீக்கிரமாகவா ?
என்னுடைய திட்டங்கள்
என்ன ஆவது ? "
கடவுள் :
" மன்னித்துவிடு மகனே...!
உன்னை கொண்டு
செல்வதற்கான நேரம் இது...! "
மனிதன் :" அந்தப் பெட்டியில் என்ன உள்ளது ? "
கடவுள் :" உன்னுடைய உடைமைகள்...! "
மனிதன் :" என்னுடைய உடைமைகளா...!
என்னுடைய பொருட்கள், உடைகள், பணம்
எல்லாமே இதில்தான்
இருக்கின்றனவா ? "
கடவுள் :" நீ கூறியவை அனைத்தும்
உன்னுடையது அல்ல..
அவைகள் பூமியில்
நீ வாழ்வதற்கு தேவையானது...! "
மனிதன் :" அப்படியானால் என்னுடைய நினைவுகளா ? "
கடவுள் :" அவை காலத்தின் கோலம்...! "
மனிதன் :" என்னுடைய திறமைகளா ? "
கடவுள் :" அவை உன் சூழ்நிலைகளுடன் சம்பந்தப்பட்டது...! "
மனிதன் :" அப்படியென்றால் என்னுடைய குடும்பமும் நண்பர்களுமா ? "
கடவுள் :" மன்னிக்கவும் !குடும்பமும் நண்பர்களும் நீ வாழ்வதற்கான வழிகள்...!"
மனிதன் :" அப்படி என்றால் என் மனைவி மற்றும் மக்களா ? "
கடவுள் :" உன் மனைவியும் மக்களும் உனக்கு சொந்தமானவர்கள் அல்ல...! அவர்கள் உன் இதயத்துடன் சம்பந்தப்பட்டவர்கள்.! "
மனிதன் :" என் உடலா ? "
கடவுள் :"அதுவும் உனக்கு சொந்தமானதல்ல...!உடலும் குப்பையும் ஒன்று...! "
மனிதன் :" என் ஆன்மா ? "
கடவுள் :"அதுவும் உன்னுடையது அல்ல...! அது என்னுடையது...! "
🍂 மிகுந்த பயத்துடன் கடவுளிடமிருந்து அந்தப் பெட்டியை வாங்கி திறந்தவன்
காலி பெட்டியை கண்டுஅதிர்ச்சியடைகிறான்...!
🍂 கண்ணில் நீர்
வழிய கடவுளிடம்" என்னுடையது என்று எதுவும் இல்லையா ? "என கேட்க...!
கடவுள் சொல்கிறார் :🍂 அதுதான் உண்மை !நீ வாழும் ஒவ்வொரு நொடி மட்டுமே உன்னுடையது...!வாழ்க்கை என்பது நீ கடக்கும் ஒரு நொடிதான்...!
🍂 ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்...!
எல்லாமே உன்னுடையது என்று நினைக்காதே...!
🍂 ஒவ்வொரு நொடியும் வாழ்...! உன்னுடைய வாழ்க்கையை வாழ்...!
🍂 மகிழ்ச்சியாக வாழ்...! அது மட்டுமே நிரந்தரம்...!
🍂 உன் இறுதி காலத்தில்
நீ எதையும் உன்னுடன் கொண்டு போக முடியாது...!
🍂 வாழுகின்ற ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்வோம்..
இதை விட வேறு எவர் வாழ்க்கைப் பாடத்தை சொல்லித் தர முடியும்?
சிவகங்கை மாவட்டம் நெற்குப்பை to மகிபாலன்பட்டி செல்லும்
சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஓன்று, இன்று
உலகம் முழுவதும்
உச்சரிக்கப்படுகிறது.
யாதும் ஊரே யாவரும் கேளிர்....
இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது.
பாடலின்
எல்லா வரிகளும் வாழ்வின்
முழு தத்துவத்தைச்
சொல்கிறது.....
முழு பாடலும்... அதன் பொருளும்....
"யாதும் ஊரே; யாவரும் கேளிர்;
தீதும் நன்றும் பிறர்தர வாரா;
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;.....
சாதலும் புதுவது அன்றே;...
வாழ்தல் இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே;
மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது
கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
முறைவழிப் படூஉம் என்பது திறவோர்காட்சியின் தெளிந்தனம்...
ஆதலின் மாட்சியின்
பெயோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.
– கணியன் பூங்குன்றனார்
"யாதும் ஊரே யாவரும் கேளிர்...."
எல்லா ஊரும்
எனது ஊர்....
எல்லா மக்களும் எனக்கு உறவினர் என்று நினைத்து,
அன்பே வாழ்வின் அடிப்படை,ஆதாரம் என்று
வாழ்ந்தால் , இந்த வாழ்வு நமக்கு எவ்வளவு இனிமையானது............. சுகமானது......
"தீதும் நன்றும் பிறர் தர வாரா...."
தீமையும்,நன்மையும் அடுத்தவரால் வருவதில்லை.......
எனும் உண்மையை,
உணர்ந்தால்,
சக மனிதர்களிடம்,
விருப்பு வெறுப்பு இல்லா ஒரு சம நிலை,சார்ந்த வாழ்வு கிட்டும்.....
"நோதலும் தணிதலும்
அவற்றோ ரன்ன...."
துன்பமும் ஆறுதலும்கூட
மற்றவர் தருவதில்லை....
மனம் பக்குவப்பட்டால்,
அமைதி அங்கேயே கிட்டும்...
"சாதல் புதுமை யில்லை.."
பிறந்த நாள் ஒன்று உண்டெனில் .....
இறக்கும் நாளும் ஒன்று உண்டு....*
இறப்பு புதியதல்ல....அது
இயற்கையானது....
எல்லோருக்கும்*
*பொதுவானது....
இந்த உண்மையை
உணர்ந்தும், உள் வாங்கியும் வாழ்ந்தால்....
எதற்கும் அஞ்சாமல்,
வாழ்க்கையை, வாழும் வரை ரசிக்கலாம்.......
"வாழ்தல்இனிது என மகிழ்ந்தன்றும் இலமே
முனிவின் இன்னாது என்றலும் இலமே....."
இந்த வாழ்க்கையில்
எது, எவர்க்கு, எப்போது,
என்னாகும் என்று
எவர்க்கும் தெரியாது.....
இந்த வாழ்க்கை மிகவும்
நிலை அற்றது.....
அதனால், இன்பம் வந்தால்
மிக்க மகிழ்வதும் வேண்டாம்...
துன்பம் வந்தால் வாழ்க்கையை வெறுக்கவும் வேண்டாம்......
வாழ்க்கையின் இயல்பை உணர்ந்து இயல்பாய் வாழ்வோம்......
"மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர் முறைவழிப் படூஉம் என்பது திறவோர் காட்சியின் தெளிந்தனம் ....."
இந்த வானம் நெருப்பாய்,
மின்னலையும் தருகிறது....
நாம் வாழ
மழையையும்
தருகிறது.....இயற்கை வழியில் அது,அது
அதன் பணியைச் செய்கிறது....
ஆற்று வெள்ளத்தில்,
கற்களோடு, அடித்து முட்டிச் செல்லும் படகு போல,
வாழ்க்கையும்,
சங்கடங்களில் அவர்,அவர் ஊழ்படி அதன் வழியில்
அடிபட்டு போய்க்கொண்டு
இருக்கும்....
இது இயல்பு என மனத்தெளிவு கொள்ளல் வேண்டும்...
"ஆதலின் மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே...."
இந்தத் தெளிவு
பெற்றால்.....,
பெரிய நிலையில் உள்ள பெரியவர்களைப் பார்த்து
மிகவும் வியந்து பாராட்டவும் வேண்டாம்...
சிறிய நிலையில் உள்ள
சிறியவர்களைப் பார்த்து
ஏளனம் செய்து இகழ்வதும்
வேண்டாம்.....
அவரவர் வாழ்வு
அவரவர்க்கு.....
அவற்றில் அவர்,அவர்கள்
பெரியவர்கள்...
இதை விட வேறு எவர்
வாழ்க்கைப் பாடத்தை
சொல்லித் தர முடியும்?
Saturday, August 13, 2022
ஏழையின் நிம்மதிக்கு காரணம்
வினை விதைத்தவன் வினை அறுப்பான் !
Friday, August 12, 2022
ஒருவர் தினசரி செய்ய வேண்டிய பழக்கங்கள்.
Wednesday, August 10, 2022
Monday, August 8, 2022
The distance between Babu Mahal and the Hotel Tamil Nadu in Krishnagiri
13 min (6.3 km)
via Madras High Rd, NH 48
and NH Service Road
Safe timings to go out for purchase of essentials in Chennai Tamil Nadu
CHENNAI:
Now, people will be safe to buy essentials only between 6 am and 1 pm,
List of the golden goat breeds of Tamil Nadu
sheep breeds ·
1. Mecheri ·
2. Chennai red ·
3. Ramanadhapuram white
4. Keezhakaraisal ·
5. Vembur ·
6. Neelagiri ·
7. Trichy black ·
8. Coimbatore.
9.KanniAdu
10,Kodi Adu
11,Salem Black
Featured Post
உணவு முறைல முடிஞ்ச அளவு மாற்றம் பண்ணுங்க.
நாம ஏன் சோணகிரியா இருக்கோம்? தொத்த பாடியா இருக்கோம்? பழங்கால மக்களுக்கு மட்டும் எப்படி திமில் கொண்ட தோளும், மதர்த்த நெஞ்சும் வந்தது? உணவு ...
-
ரசவாதம் -தங்கம் தயாரிக்கும் முறைகள் ரசவாதம் -தங்கம் (மூலிகைத் தங்கம்) தயாரிக்கும் முறைகள் Rasavatham ரசவாதம் – Alchemy in Siddha Syste...
-
korakkar siddhar space Prediction 1,Full moon show on everyday near earth , elephant head bones images show o...