Sunday, April 24, 2022

2010 வருட கணக்கின் படி கலியுகம் 5111 வருடம் முடிந்து விட்டது

பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான
சகாதேவன் சாஸ்திரத்தில் வல்லவர். 🌳
🌕 இவர் இயற்றிய இந்த சாஸ்திரம் தமிழில் இருக்கிறது. கால ஸாஸ்திரம்
🎡🎡🎡🎡🎡🎡🎡🎡🎡🎡🎡🎡🎡🎡🎡🎡
⭕ கால அளவை கூறும் கால ஸாஸ்திரம்
தாமரை இதழ்களை எட்டு அடுக்கி ஒரு
நுட்பமான ஊசிக்கொண்டு துவாரம் பண்ணுவதற்கு ஆகும் நேரமே ஒரு க்ஷணமாகும்.
02 க்ஷணம்கள் 01 இல்லம்
02 இல்லம்கள் 01 காஷ்டை
02 காஷ்டைகள் 01 நிமேஷம்
02 நிமேஷங்கள் 01 துடி (15 விதற்பரைகள்)
02 துடிகள் 01 துரிதம் (30 விதற்பரைகள்)
02 துரிதம்கள் 01 தற்பரை (60 விதற்பரைகள் )
60 தற்பரைகள் 01 வினாழிகை
60 வினாழிகைகள் 01 நாழிகை
60 நாழிகைகள் 01 நாள்
07 நாட்கள் 01 வாரம்
(ஞாயிறு,திங்கள்,செவ்வாய்,புதன்,வியாழன்,வெள்ளி,சனி இவையே ஏழு நாட்கள்)🌿
🔥 பதினைந்து நாட்கள் ஒரு பக்ஷம்,🌿
(ப்ரதமை,த்வீதியை,த்ரீதியை,சதுர்த்தி,பஞ்சமி,ஷஷ்டி,ஸப்தமி,அஷ்டமி,நவமி,
தசமி,ஏகாதசி,த்வாதசி,த்ரயோதசி,சதுர்தசி,பௌர்ணமி.இது சுக்லபக்ஷம்)
(ப்ரதமை,த்வீதியை,த்ரீதியை,சதுர்த்தி,பஞ்சமி,ஷஷ்டி,ஸப்தமி,அஷ்டமி,நவமி,
தசமி,ஏகாதசி,த்வாதசி,த்ரயோதசி,சதுர்தசி,அமாவாசை.இது க்ருஷ்ணபக்ஷம்.)
இரண்டு பக்ஷங்கள் ஒரு மாதம்
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
மாதங்கள் இரண்டுவகைப்படும்
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
01 சந்திரமானம்🌿
02 ஸௌரமானம்🌿
01 சைத்திரம்
02 வைசாகம்
03 ஜேஷ்டம்
04 ஆஷாடம்
05 ச்ராவணம்
06 பாத்ரபதம்
07 ஆஸ்வீயுஜம்
08 கார்திகம்
09 மார்கசிரம்
10 புஷ்யம்
11 மாகம்
12 பால்குனம்
என இப்பன்னிரெண்டும் சாந்திரமான மாதங்கள் இவை சூரிய சந்திர்கள் கூடி பிரிதல் மூலம் எற்படுவதாம்.🌿
01 மேஷம் (சித்திரை)
02 ரிஷபம் (வைகாசி)
03 மிதுனம் (ஆனி)
04 கடகம் (ஆடி)
05 சிம்மம்(ஆவணி)
06 கன்னி (புரட்டாசி)
07 துலா (ஐப்பசி)
08 வ்ருச்சிகம் (கார்திகை)
09 தனுஸு (மார்கழி)
10 மகரம் (தை)
11 கும்பம் (மாசி)
12 மீனம் (பங்குனி)
என இப்பன்னிரெண்டு மாதங்கள் ஸௌரமான மாதங்களாகும்.🌿
இவை ஸூரியனுடைய ஓட்டத்தால் மட்டுமே ஏற்படுவதாகும்.🌿
இரண்டு மாதங்கள் சேர்ந்தது ஒரு ருது
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
01 வஸந்தம், (சித்திரை,வைகாசி)🍁
02 க்ரீஷ்மம்,(ஆனி,ஆடி)🍁
03 வர்ஷம்,(ஆவணி புரட்டாசி)🍁
04 சரத்,(ஐப்பசி,கார்த்திகை)🍁
05 ஹேமந்தம்,(மார்கழி,தை)🍁
06 சிசிரம்.(மாசி,பங்குனி)🍁
என ருதுக்கள் ஆறு வகைப்படும். 🍁
ருதுக்கள் மூன்று சேர்ந்த்து ஒரு அயணம்,
01 உத்ராயணம்,🌿
02 தக்ஷிணாயம்
என அயணங்கள் இரண்டு வகைப்படும்.🌿
இரண்டு அயணங்கள் சேர்ந்தது ஒரு வருஷம்.🌿
இவ்வாறு பக்ஷங்கள்லும்,மாதங்களாலும்,ருதுக்களாலும்,அயணங்களாலும், உருவான வருடங்கள் மொத்தம் அறுபதாகும் (60)
அவயைாவன
01 ப்ரபவ,02 விபவ 03 சுக்ல 04 ப்ரமோதூத 05 ப்ரஜோத்பத்தி 06 ஆங்கீரஸ 07 ஸ்ரீமுக 08 பவ 09 யுவ 10 தாது 11 ஈஸ்வர 12 வெகுதான்ய
13 ப்ரமாதி 14 விக்ரம் 15 விஷூ 16 சித்திரபானு 17 ஸுபானு 18 தாரண 19 பார்திப 20 விய 21 ஸர்வஜித் 22 ஸர்வதாரி 23 விரோதி
24 விக்ருதி 25 கர 26 நந்தன 27 விஜய 28 ஜய 29 மன்மத 30 துன்முகி 31 ஹேவிளம்பி 32 விளம்பி 33 விகாரி 34 ஸார்வாரி 35 பிலவ
36 சுபக்ருது 37 சோபக்ருது 38 க்ரோதி 39 விசுவாவசு 40 பராபவ 41 பிலவங்க 42 கீலக 43 ஸௌம்ய 44 ஸாதாரண 45 விரோதிக்ருது
46 பரிதாபி 47 ப்ரமாதீச 48 ஆனந்த் 49 ராக்ஷஸ 50 நள 51 பிங்கள் 52 காளயுக்தி 53 ஸித்தார்தி 54 ரௌத்ரி 55 துன்மதி 56 துந்துபி
57 ருத்ரோத்காரி 58 ரக்தாக்ஷி 59 க்ரோதன 60 அக்ஷய. என்பனவையே 60 வருடங்களாகும்.🌿
🍒 இவ் அறுபது வருடங்கள் ஒன்று முடிந்தால் ஒரு பரிவ்ருத்தியாகும்.🌿
🍒 ஆறு பரிவ்ருத்திகள் சேர்ந்தால் ஒரு தேவவருடமாகும் அதாவது 360 மனித வருடங்களாகும்.🌿
🍒1200 தேவ வருடம் ஒரு கலியுகம் ( 432000 மனித வருடம்)🌿
2400 தேவ வருடம் ஒரு த்வாபரயுகம் (864000 மனித வருடம்)🌿
3600 தேவ வருடம் ஒரு த்ரேதாயுகம் (1296000 மனித வருடம்)🌿
4800 தேவ வருடம் ஒரு க்ருதயுகம் (1728000 மனித வருடம்)🌿
மேற்கூறப்பட்ட நான்கு யுகங்கள் ஒன்று சேர்ந்தது 12000 தேவயுகமாகும்.(4320000 மனித வருடமாகும்)இதை ஒரு சதுர்யுகம் அல்லது ஒரு மஹாயுகம் என்று கூறப்படுகிறது.🌿
🍒 மாஹாயுகங்கள் எழுபத்துஒன்றும்(71)சற்று சந்தி வருடங்களும் சேர்ந்த்து ஒரு மன்வந்த்ரம் எனப்படும்.🌿
இது ஒரு மனுவினுடைய காலமாகும்.🌿
மனுக்கள் மொத்தம் பதினான்கு(14)பேர்களாவார்.🌿
01) ஸ்வயம்புவ மனு 02) ஸ்வாரோசிஷ மனு 03) உத்தம மனு 04) தாமஸ மனு 05) ரைவத மனு 06) ஸாக்ஷூஸ மனு 07) வைவஸ்வத மனு 08) ஸாவர்ணி மனு 09) தக்ஷஸாவர்ணி மனு 10) ப்ரம்மஸாவர்ணி 11) தர்மஸாவர்ணி 12) ருத்ரஸாவர்ணி 13) தேவஸாவர்ணி 14) இந்த்ரஸாவர்ணி
போன்றவைகளே பதினான்கு மனுக்களின் பெயர்களாகும்.🌿
சந்தி வருடங்களுடன் கூடிய இம்மொத்த மனுக்களின் காலமும் ஒன்று சேர்ந்த்து ஒரு கல்பமாகும். 🌿
🍒 ஒரு கல்பம் என்பது மொத்தம் (1000) ஆயிரம் மஹாயுகங்களாகும்.🌿
ஒரு கல்பம் என்பது ப்ரம்மாவிற்கு அரை நாளாகும்.🌿
இரண்டு கல்பம் சேர்ந்த்து ப்ரம்மாவிற்கு ஒரு நாளாகும்.🌿
பகலில் ப்ரம்மாவிழித்திருந்து இரவில் உறங்குவார்.🌿
ப்ரம்மாவின் பகல் பொழுதிலேயே ஸ்ருட்டிகள் நடக்கும் இரவில் ப்ரபஞ்சத்தை ஒடுக்கிக்கொண்டு தூங்குவார்.🌿
ப்ரம்மாவின் மாதத்தில் முப்பது(30) பகல் பொழுதும் முப்பது (30) இரவு பொழுதும் அடங்கும்,🌿
01) வாமதேவ கல்பம் 02) ஸ்வேதவராஹ கல்பம் 03) நீல லோஹித கல்பம் 04) ரந்தர கல்பம் 05) ரௌரவ கல்பம் 06) தேவ கல்பம் 07) ப்ருகத் க்ருஷ்ண கல்பம் 08) கந்தர்ப கல்பம் 09) ஸத்ய கல்பம் 10) ஈசான கல்பம் 11) தம கல்பம் 12) ஸாரஸ்வத கல்பம் 13) உதான கல்பம் 14) காருட கல்பம் 15) கௌரம கல்பம் 16) நாரஸிம்ம கல்பம் 17) சமான கல்பம் 18) ஆக்னேய கல்பம் 19) ஸோம கல்பம் 20) மானவ கல்பம் 21) தத்புருஷ கல்பம் 22) வைகுண்ட கல்பம் 23) லக்ஷ்மி கல்பம் 24) ஸாவித்ரீ கல்பம் 25) கோர கல்பம் 26) வராஹ கல்பம் 27) வைராஜ கல்பம் 28) கௌரீ கல்பம் 29) மஹேஸ்வர கல்பம் 30) பித்ரு,என ஸ்ருஷ்டிகள் நடக்கும் ப்ரம்மாவின் பகல் பொழுதின் பெயர்களாகும்.🌿
இரவு காலத்தில் ப்ரம்மா உறங்குவதால் அந்தந்த கல்பத்தின் இரவாகவே கொள்ளப்படும்.🌿
அறுபது கல்பம்(60) சேர்ந்த்து ப்ரம்மாவிற்கு ஒரு மாதமாகும்,🌿
எழு நூற்று இருபது (720) கல்பம் சேர்ந்தது பிரம்மாவின் ஒரு வருடமாகும், 🌿
இந்த கணக்கின் படி ப்ரம்மா (100) ஆண்டு காலம் வாழ்வார்,🌿
பிரம்மாவின் பூர்ண ஆயுள் எழுபத்திரெண்டாயிரம் (72000) கல்பகாலமாகும்.🌿
இனி பிரம்மாவின் ஸ்ருஷ்டி முதல் சென்ற நாட்களை எவ்வாறு கணக்கிட வேண்டும் என்பதை கூறப்போகிறேன் கவனமாக கேட்கவும்.🌿
வாமதேவ கல்பம் முடிவடைந்து ஸ்வேதவராஹ கல்பத்தில் இதுவரை ஆறு மனுக்களின் காலமும் அவர்களின் சந்திவருடங்களும் முடிவடைந்து தற்சமயம் ஏழாவது மனுவான வைவஸ்வதமனுவின் காலத்தில் இருபத்துஏழு சதுர்யுகங்கள் முடிந்து இருபத்து எட்டாவது சதுர்யுகத்தில் நான்காவது யுகமான கலியுகம் நடந்துக்கொண்டிருக்கிறது.🌿
2010 வருட கணக்கின் படி கலியுகம் 5111 வருடம் முடிந்து விட்டது..🌿
இது சகாதேவன் சாஸ்திரத்தில் இருக்கிறது


ராகு

 ஆளுமை, அரசன் (முதல்வர்/பிரதமர் போன்ற பதவிகள்), அதிகாரம், ஆட்சி போன்ற காரகங்கள் நவகிரகங்களில் சூரியனை குறிக்கும், புகழ், பிரம்மாண்டம், சொகுசு வாழ்க்கை, ஈர்ப்பு, போன்ற காரகங்கள் ராகுவை குறிக்கும், இவ்விரண்டும் ஒன்றிணைந்தால் தான் அந்த நபர் மிகப்பெரிய ஆளுமை கொண்ட அரசியல் பிரமுகர் எனும் அந்தஸ்த்தை பெற முடியும், இங்கே ராகுவுக்கு எதிர் கிரகம் சூரியன், சூரியனுக்கு ராகுவை கண்டால் ஆகாது ஏனெனில் அவரையே கிரகணம் செய்துவிடுவார், ராகு இல்லாத சூரியனை சனி எனும் மக்கள் ஏற்பதில்லை என்பதே இங்கே எதார்த்தம், அதாவது ஈர்ப்பில்லா (ராகு) ஆளுமையை (சூரியன்) மக்கள் (சனி) விரும்புவதில்லை இதற்கு பல உதாரணங்களை கூறலாம், அதே நேரத்தில் ஈர்ப்பும்+ஆளுமையும் ஒன்று சேர்ந்து ஆளும்போது அங்கே ஆசை எனும் ராகு ஆளுமையை (சூரியனை) தனக்கு ஏற்றபடி ஆட்டிவைத்து விழுங்க (கிரகணம்) பார்ப்பார், விழுங்கியதும் உண்டு, அப்படி விழுங்கும் போதெல்லாம் மக்கள் (சனியால்) ஆளுமை எனும் சூரியன் தூக்கி எரியப்படுகிறார், இதில் என்ன விந்தை என்றால் இரு எதிர் காரக கிரகங்கள் ஒன்றிணைத்தால் தான் ஆளுமையான அரசன் உருவாகிறான், அதே நேரத்தில் ஆளுமையான அரசன் (ஈர்ப்பு+அதிகாரம்) இரண்டிலும் சமநிலை தவறாமல் ஆட்சி செய்யும் போது நேர்மறையான அரசனாகிறார் அதே நேரத்தில் அவரது வாழ்நாள் (ஆட்சியின் ஆயுள்) சுருங்கிவிடுகிறது காரணம் ராகு, ஆக கிரகங்களின் பகையிலும் மனிதனுக்கு அத்தியாவசிய தேவையும் நன்மையும் உண்டு என்பதற்கு இதைவிட ஒரு உதாரணம் அவசியமில்லை என்றெண்ணுகிறேன்,

ஜீவ சமாதி என்றால் என்ன?

 ஜீவ சமாதி

என்றால் என்ன?
ஜீவ சமாதி என்றால் என்னவோ
ஏதோ என்று நினைக்காதீர்கள்.
சில மகான்கள் தங்கள் உடல் கெடாதவாறு விந்துவை உடலிலேயே இருக்கும்படி செய்து, தன் அறிவை உணர்வுகளை பிரபஞ்சத்தோடு இணையும் படி செய்து, தங்கள் உடலைச் சுற்றி நல்ல ஒரு காந்த களத்தை உருவாக்கி விடுவார்கள்.
அந்த காந்த களத்தில் நாம் நுழையும் போது நம் ஜீவகாந்தம் அந்த மகானின் உயர் காந்த உணர்வுகளோடு கலக்கும் போது, நமது சிந்தனை தளம் உயர வாய்ப்புண்டு. வேண்டாத எண்ணங்கள் நீங்கி, நாம் வாழ்வில் உயர நாம் என்ன செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வு நமக்கு கிட்டும்.
சுருக்கமாக, நமது குறைபாடுகளை நீக்கி நமக்கு வளமான வாழ்வை, நமது வினை பதிவுகளுக்கேற்ப, சீரமைக்க உதவும். அவ்வளவுதான்.
அங்கே போய் தியானம் செய்து அந்த உணர்வோடு கலந்து தன்னை மறக்கவேண்டும், தளம் மாற வேண்டும் என்று ஏதேதோ புரியாத வகையில் சொல்கிறார்களே? என்று சிலர் கூறுவார்கள்.
தியானம் என்றால் என்னவோ
ஏதோ என்று குழப்பிக் கொள்ளாதீர்கள்.
ஒரு செயலை முழுமனதுடன், சிந்தனை சிதறாமல் நீங்கள்செய்தால் அதுவே தியானம்தான்.
One thing at one will என்று மகரிஷி கூறுவார்.
ஜீவசமாதியில, உங்கள் கவனம் முழுவதும், அந்த மகானின் உயர் சிந்தனைகளோடு உங்கள் உணர்வுகளும் கலக்க வேண்டும் என்று இருந்தால் போதும்.
பிரபஞ்ச பேராற்றலும் உங்களோடு இணைந்து உங்களுக்குள்என்ன மாற்றம் தேவையோ அது இயல்பாக நடந்து விடும்.அவ்வளவுதான்.போட்டு குழப்பிக் கொள்ளாதீர்கள்.
எந்த சிறப்பான கோயிலுக்கு போனாலும் சித்தர் பீடம் இருக்கும். விசாரித்து அங்கே போய்,அமைதியாக இயல்பாக உங்கள் கவனத்தை அங்கேயே நிலை நிறுத்துங்கள்.மற்றவை தானாக நடக்கும்.
இன்னும் ஒரு சிறு விளக்கம்,,,
ஜீவசமாதி என்பது ஜீவன் + சமம்+ஆதி.
அதாவது ஆதியாகிய இறைவனிடம் இருந்த வந்த ஜீவனை சமன் செய்தல் என்று பொருள்.
ஞானிகள், யோகிகள், சித்தர்கள், சாதுக்கள் போன்றவர்கள் சித்தம் என்னும் அறிவைக் கொண்டு மனதை வெல்வதற்கு வாழ்வில் கடுமையான ஒழுக்கங்களையும், உயர்ந்த தவநெறிமுறைகளையும் தனது இரு கண்களினும் மேலாக பின்பற்றி வருகின்றனர்.
உடலையும் உன்னத்தையும்
மாசின்றி பேணி காக்கின்றனர்.
அனலமோதும் ஜீவனை ஒரு நிலைப்படுத்தி தன்னையே உயர்ந்தவனாக ஆக்குவதே சித்தர் கலை.
தன்னை அறிய தனக்கொரு கேடில்லை என்கிறார் திருமூலர்.
கடவுளை காண முயன்று கொண்டிருப்பவர்கள் பக்தர்கள்.
ஆனால் கண்டு தெளிந்தவர்கள் சித்தர்கள்.
யோக் என்றால் சமஸ்கிருத்தில் வழி
என்று பொருள்.
இறைவனைக் காணும்
வழியைக் கண்டவனே யோகி.
இறைவனைப் பற்றிய சிந்தனையுடன் சின் அல்லது ஆதி போன்ற முத்திரையில் யோகி அமரும் ஆசிரமம்தான் "யோகாஸ்ரமம்" எனவும் கூறுகின்றனர்.
சமாதியடைவது என்பது முடிவு பெறும்
ஒரு நிலையே அல்ல.
ஞானிகள் தங்களுடைய ஆற்றலும் அருளும் என்றுமே இந்த அண்டத்தில் நிலைத்திருக்கச் செய்து விட்டு இறைவனோடு இரண்டறக் கலக்கின்றனர்.
சமாதிநிலையில் இருப்பதும் யோகநெறியின் உச்ச நிலை என உரைக்கப்படுகிறது.
இவர்களின் உடல் மன இயக்கம் மட்டுமே நின்று போயிருக்குமே தவிர உயர் உடலை விட்டு பிரிவதில்லை என்கிறார் திருமூலர்.
இதை பதிவாக எளிமையாக போடுவதற்கு காரணம
எந்த புகழ் பெற்ற கோவிலுக்கு சென்றாலும்
ஜீவசமாதி விசாரித்தறிந்து அங்கு சிறிது நேரம் அமைதியாக அமர்ந்து நமது எண்ணங்களை மேம்படுத்திக் கொள்ளலாம்.
இந்த எண்ண உயர்வுக்கு நீங்கள் பெரிய தவ ஆற்றல் மிக்கவராகவோ, சித்தர்கள் போன்ற உணர்வுதளமோ தேவையில்லை.
Just relax,sit and concentrate.
கீழே உள்ள படம் கரூர் அருகேயுள்ள நெரூர் சதாசிவ பிரம்மரேந்திர சுவாமிகளின் ஜீவசமாதி.
இறையே குருவே சரணம்...
May be an image of outdoors


திப்பிலி அரிசி--மருக்கள்

 மருக்கள் மறைந்துவிடும்.


கழுத்தின் கீழ்ப்பகுதியில் இரண்டு மிளகு சைஸ் மருக்கள் பாடாய் படுத்தின. டாக்டரிடம் போனேன்.. வேர் ஆழமா இருக்கு, அறுத்துடலாம்.. ஒரு லோக்கல் அனஸ்திஷியா கொடுத்து எடுத்துடலாம்னார்.

இல்ல டாக்டர், வீட்ல சொல்லிட்டு வரலை. நாளைக்கு காலைல வந்துரேன். மறுநாள் போனேன். வெயிட் பண்ண சொன்னார்கள். அருகில் இருந்த தமிழ் இந்துவை புரட்டினேன். மூடி வைத்து விட்டு டூட்டி நர்சிடம் ஒரு அவசர அழைப்பு. அப்புறம் வரேன். டாக்டர் கிட்ட சொல்லிடுங்க என்றதற்கு பிழைச்சுப்போங்க என்பது போல பார்த்தார்
நேராக ஒரு நாட்டு மருந்துக்கடை.100 கிராம் திப்பிலி அரிசி வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வந்து நைசாக அரைத்து, தேனில் குழைத்து மருவை சுற்றி திக் லேயராக தடவி 20 நிமிடம் கழித்து கழுவினேன். இப்படி நான்கே நாட்கள். மருக்கள் மறைந்துவிடும்.

மஹா வராஹி பூஜை

 தான் உண்டு தன்னுடைய வேலை உண்டு என்று வாழ்ந்து வரும் பலர் தான் மாந்திரீக தாக்குதல்களால்

அவதிப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.
அவர்கள் தினமும் இரவில் ஒரு முறை வராஹி மாலை ஜெபம் செய்து வர வேண்டும்.(கண்டிப்பாக அசைவம் மது தவிர்க்க வேண்டும்.)
4 ஆண்டுகள் தினமும் வராஹி மாலை ஜெபம் செய்து வருவதால் எல்லா விதமான பிரச்சினைகளும் மாந்திரீக பாதிப்புகளும் விலகி விடும்.
சீக்கிரம் எல்லா பிரச்னைகளும் மாந்திரீக பாதிப்புகளும் தீர வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்கள் தினமும் இரவில் ஐந்து முறை வராஹி மாலை ஜெபம் செய்து வர வேண்டும்.
தமிழ்நாட்டின் காவல் தெய்வம் மகா வராஹி அன்னையின் கருணையும் அருளும் தான் இதற்கு காரணம்!!!
சைவம் ,சாக்தம்,வைஷ்ணவம் என மூன்று வழிபாட்டு முறைகளிலும் முக்கிய தெய்வம் அன்னை மஹா வராஹி!!!
ராஜா ராஜா சோழன் இன்றைய ஆசிய கண்டம் ஆஸ்திரேலியா கண்டம் முழுவதையும் ஜெயித்து உலகத்தின் மிகப்பெரிய அரசை நிறுவியது மஹா வராஹி அம்மனின் அருளை பெற்ற பின்னர் தான்!!!
தமிழ்நாட்டில் சோழர்கள் 16,000 சிறு தானிய நெல் ரகங்களை கண்டு பிடித்ததும் மஹா வராஹியின் அருளால் தான்!!!
தேச துரோகிகள்
மொழி துரோகிகள்
இன துரோகிகள் இல்லாமல் பாரத நாட்டின் மக்கள் கடந்த 22,000 ஆண்டுகள் வாழ்ந்து வந்தது தினமும் மஹா வராஹி பூஜை மற்றும் ஜெபம் தினமும் வீட்டில் செய்து வந்ததால் தான்!!!
1800 வரை இமயம் முதல் இலங்கை வரை
குஜராத் முதல் தாய்லாந்து வரை
எல்லோரும் தினமும் வராஹி மாலை அல்லது வராஹி மந்திரங்களில் ஒன்றை இரவில் ஒரு மணி நேரம் வரை ஜெபம் செய்து வந்தார்கள் !!!
வராஹி வழிபாடு அருகி குறுகி போனதால் தான் இன்று ஊருக்கு ஒரு சில துரோகிகள் முளைத்து விட்டார்கள்.
நேர்மையாக உழைத்து வாழ்பவர்கள் பல்வேறு விதங்களில் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
May be an image of 1 person and text that says 'ஓம்ஜம் க்லெௌம் சிவ பஞ்சமியை நமஹ இந்த மந்திரத்தை தினமும் இரவில் 108 முறை எழுதவும் அல்லது செபிக்கவும். 6 வருடம் வரை... (அசைவம், மது தவிர்க்கவும்)'

the great tamilnadu leaders kumaraswami kamaraj

 

The Great Kamaraj





*#காமராஜர் மறைவையொட்டி அப்பொழுதே துக்ளக் இதழில் ஆசிரியர் சோ அவர்கள் எழுதிய தலையங்க‌ம் !!*
(நாம் இப்போது நினைப்பதை அப்போது வெளிப்படுத்திய சோ)
பெருந்தலைவர் திரு. காமராஜர் மரணத்தின் போது அவர் எழுதிய இரங்கல் கட்டுரை இதோ!!!
''இனிமேல் என்ன இருக்கிறது?" என்ற கேள்விதான் மற்ற எல்லாக் கேள்விகளையும்விட முதலில் எழுந்தது . மீண்டும் மீண்டும் எழுகிறது.
◼யாராலும் இட்டு நிரப்ப முடியாத ஒரு வெற்றிடம் தோன்றிவிட்டது என்ற எண்ணம்தான் மேலிடுகிறது...
◼மனம் சாய்ந்த பிறகுதான் சாய்ந்தது அந்த உடல். சந்தேகமில்லை. அந்த மனத்தைச் சாய்த்தவர்கள் பலரும் ஒன்றுகூடி சாய்ந்துபோன உடலுக்கு மரியாதை செலுத்தினோம். வாழும்போது அவர் மனத்துக்கு நாம் செய்த தவறுகளைப் பொறுத்துக்கொண்ட அந்த மனிதன், செத்த பிறகு அவர் உடலுக்கு நாம் செய்த மரியாதையையும் பொறுத்துக்கொண்டார் என்ற நினைப்புத்தான் நெஞ்சை அழுத்துகிறது.
◼ஒரு சரித்திரம் முடிந்தது" என்று சொல்வார்கள் .
◼ஒரு சகாப்தம் முடிந்தது" என்று சொல்வார்கள்.
◼ஒரு தியாக பரம்பரை முடிந்தது'' என்று சொல்வார்கள் . *எல்லாமே முடிந்துவிட்டது" என்று சொல்வதுதான் உண்மையோ* என்ற சஞ்சலம் வாட்டுகிறது.
◼மனவேதனை பெரிதாக இருக்கிறதென்றால் , வெட்கமும் அவமானமும் அதைவிடப் பெரிதாக இருக்கிறது. துக்கம் பெரிதாக இருக்கிறதென்றால் , விரக்தி அதைவிட அதிகமாக இருக்கிறது.
◼வருடத்திற்கு ஒருமுறை நாம் நினைத்துப் பார்க்கும் நல்லவர்கள் பட்டியலில் அவரும்
சேர்ந்தாகிவிட்டது. நாம் நினைத்துப்பார்க்கும் நம் வயிறுகள் மிஞ்சியிருக்கின்றன. கோடானுகோடி வயிறுகளின் நினைப்பையே தனது மனத்தில் நிறுத்தியிருந்த அந்த மனிதர் போய்ச்சேர்ந்துவிட்டார்.
◼மற்றவர்களையெல்லாம் வாழவைக்க நினைத்த அந்த மனிதனை , வாழவேண்டிய விதத்தில் வாழவைக்காதவர்கள் எல்லாம் சேர்ந்து "வாழ்க'' என்ற கோஷம் வானதிரக்கிளப்பி , அவரை வானுலகிற்கு அனுப்பிவிட்டோம்.
◼நேர்மை விடைபெற்றுக் கொண்டுவிட்டது. பொதுப்பணி , சொல்லிக் கொள்ளாமலே புறப்பட்டுவிட்டது. தியாகம், நமது நன்றி தேவையில்லை என்ற எண்ணத்தில் நம்மைவிட்டு எங்கோ மறைந்துவிட்டது.
◼திரு.காமராஜ் அவர்களின் மறைவு நம்மை ஒரு சூன்யத்தில் ஆழ்த்தியிருக்கிறது. *இதை இப்போது நாம் உணரமாட்டோம். வருங்காலத்தில் "அவர்மட்டும் இப்போது இருந்திருந்தால்...!" என்ற வருத்தம் அடிக்கடி தோன்றத்தான் போகிறது. சந்தேகமில்லை.*
◼காலம் நமக்குப்புகட்டாத பாடத்தை , காலதேவன் நமக்கு சொல்லிக் கொடுத்துவிட்டான். ''எடுத்துச் செல்கிறேன் இவரை அனுபவியுங்கள் இனி!" என்று சாபமிட்டிருக்கிறான் காலதேவன். செய்த தவறுகளுக்கெல்லாம் அனுபவிப்போம்.... *நமக்கு வேண்டியதுதான்.*
◼யாரும் , யாருக்கும் அனுதாபம் தெரிவிக்கவேண்டிய அவசியமில்லை. சொல்லவேண்டிய அனுதாபங்களை நமக்கு நாமே சொல்லிக்கொள்வோம். அழவேண்டிய அழுகைகளை நமக்கு நாமே அழுதுகொள்வோம். அனுபவிக்கவேண்டிய தண்டனைகளை இனி நாம்தானே அனுபவிக்கப்போகிறோம்?
◼இனி நம்மால் அவரை வேதனைப்படுத்த முடியாது.
◼இனி நம்மால் அவரை அவமானப்படுத்த முடியாது. பட்டதுபோதும் என்று போய்விட்டார் அந்த நல்ல மனிதர்.... *படவேண்டியது இனி நாம்தான்...*

இது ஒரு Vedic maths என்று இன்று சொல்வார்கள்

 நாம் பார்த்தது பிடித்தது அவசியம் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியது பனையபுரம் கோயிலில் உள்ளது என பகிர்ந்துள்ளேன் !ஓம் நமசிவாய






இது எண்ணிக்கூட்டும் கூட்டுத்தொகை அல்ல...
பூமியின் இரு பெரும் சக்தி
2
சூரியன் சந்திரன்
3
முப்பெரும் தெய்வங்கள்
பிர.ஹரி.சிவன் ஆக்கல் காத்தல் அழித்தல்
4
நால்திசையும் அதனுள் அடக்கம்
நாலு சொன்ன வார்த்தைகளை பின்பற்று
7
ஏழ்பிறப்பும் இறைவன் படைப்பு
5 பஞ்சபூதங்கள் இன்று உலகம் இயங்காது
9
நம்மை உயர்த்துவது சோதிப்பதும் அண்டங்களிலுள்ள ஒன்பது கோள்கள்
6
கலியுககாலத்தில்
கவலை மாற்றி கருணை புரிய
சக்தியும் சிவனும் வேல் கொண்ட அய்யன்
ஆறுமுகன் அருளால் அனைவரும் சுபமே
8
என்திசையும் ஈசன் அருளால் கருணைக்கு
திசை எட்டு
1
சக்திகள் ஒன்றாகி சகல உலகிற்கு மூலமே ஆதி சக்தி. அவளே ஓம்சக்தி
இதன்குறிப்புதான் பெரியோர்கள் தருவது
இதை உணர்ந்தவர்களே
18
சித்தர்கள்
இது ஒரு Vedic maths என்று இன்று சொல்வார்கள் ஆனால் அந்த காலம் , அந்த சித்தர்கள் அவர்கள் படித்து உணர்ந்தது , இறைவன் அவர்களுக்கு குருவாக இருந்து கற்று கொடுத்தது !
எல்லாம் காரணமின்றி காவியங்கள் இருக்காது நல்லவர்களே

சர்வம் கிருஷ்ணார்பணம்

 

🌹 கிருஷ்ணார்பணம்!
”சர்வம் கிருஷ்ணார்பணம்” இந்த வாக்கியத்தை முதலில் கூறியது யார்?
சர்வம் கிருஷ்ணார்பணம் என்று சொன்னவன் கர்ணன்.
பரசுராம் என்ற பிரமணரின் சாபத்தால் பாரத போரில் தோற்ற கர்ணன்:
முன்னொருநாளில் அந்தணரால் கொடுக்கப்பட்ட சாபத்தால் போர் தருவாயில் கர்ணனின் தேர் சகதியில் சிக்கிக் கொள்கிறது.
பரசுராமரின் சாபத்தால் முக்கியமான தருணத்தில் அஸ்திரத்திற்கான மந்திரம் கர்ணனுக்கு மறந்து போகிறது.
கர்ணன் உடல் மீது அர்ஜுனனின் அம்புகள் தைத்தது. ஆனாலும் உயிர் பிரியவில்லை.
அந்தனராக வந்த கிருஷ்ண பகவான்:
பின்பு கிருஷ்ணபகவான் அந்தணர் வேடத்தில் கர்ணன் முன் தோன்றி தான் மலைகளில் தவம் பூண்டிருப்பதாகவும் கர்ணனின் கொடை குறித்து அறிந்ததால் கர்ணனிடன் யாசகம் பெற வேண்டி வந்ததாக உரைக்கிறார்.
இந்த இடத்தில் கிருஷ்ண பரமாத்மா பொய் உரைப்பதாக தோன்றும். ஆனால் அவ்வாரு அல்ல.
பகவான் அனைவர் மனதிலும் நித்தம் நித்தம் தவம் செய்து கொண்டுதான் இருக்கிறார்.
அதை நாம்தான் உணர மறுக்கிறோம்
சர்வம் கிருஷ்ணார்பனம்:
யாசகம் கேட்டு வந்திருப்பது அந்தனர் அல்ல கிருஷ்ணர்தான் என்றுணர்ந்த கர்ணன். என்னிடம் இல்லாததை கேட்டு என்னை இல்லை என்று சொல்ல வைத்துவிடாதே என்று அந்தனர் வேடம் பூண்ட கிருஷ்ண பரமாத்மாவை பணிகிறான்.
கிருஷ்ணரும் “நீர் செய்த புண்ணியத்தை கொடுப்பாயா” என்று வினவிகிறார்.
அதற்கு கர்ணன் “நான் செய்த, செய்யும், செய்யப் போகும் புண்ணியம் அனைத்தையும் உனக்கு தருகிறேன்” என்று இதயத்தில் தைத்த அம்பை எடுத்து தனது குருதியின் வாயிலாக தர்மம் செய்கிறான்.
அந்த சமயத்தில் கிருஷ்ணரை பார்த்து சர்வம் கிருஷ்ணார்பணம் என்று கூறுகிறான்.
யாசகத்தை பெற்றுக் கொண்டு தனது விஸ்வரூபத்தை கர்ணனுக்கு காட்டுகிறார்.
கர்ணன் பரவச நிலை அடைந்து “எனக்கு முக்தி வேண்டும் அப்படி முக்தி இல்லை என்றால் வரும் பிறப்புகளிலும் இல்லை என்று சொல்லா இதயம் வேண்டும் என்று வரம் கேட்கிறான்.
கிருஷ்ணரும் அருள்கிறார்.
இங்கே யாசகம் பெரும்போது கிருஷ்ணரின் கை தாழ்கிறது. கர்ணனின் கை உயருகிறது.
கர்ணனுக்கு ஒரு ஆசை உண்டு அது யாதெனில் எல்லாருக்கு யாசகம் செய்தாயிற்று, கிருஷ்ண பகவானுக்கு மட்டும் யாசகம் செய்யவில்லை என்பதுதான்.
பகவான் கிருஷ்ணன் தன் பக்தனுக்காக இங்கே தன்னை தாழ்த்திக் கொள்கிறார்.
நாமும் பக்தியுடன் பகவானிடம் வேண்டினால் கண்டிப்பாக நமது காலத்துக்குள் அதனை நமக்கு தந்து அருளுவான்.

வடிவேல்துணை கொள்வேன்

 


வந்து வழிபட்டேன்! வல்வினைகள் இனியில்லை!! வாராது ஒருதொல்லை!!!

நிந்தை விலகுற்றேன்! நிலைமை உயர்வுற்றேன்!! நின்பத பிடிபெற்றேன்!!!
சிந்தை ஏற்றிட்டேன்! சிவன்மகன் மனம்பெற்றேன் !! சீர்காணும் பேறுற்றேன்!!!
மந்தம் மறந்திட்டேன்! மலர்ச்சி யான்பெறுவேன்!! மனதால்குடி செய்வேன்!!!
நந்த வனமாவேன்! நாளும் அன்பூப் பூப்பேன்!! நாதன்தோள் சேர்வேன்!!!
வந்தபயன் அறிவேன்! வையம்பெயர் நிலைவேன்!! வடிவேல்துணை கொள்வேன்!!!
கந்தாதினம் சொல்வேன்! காலேகதி பெறுவேன் !!கருணைப் புகழாவேன்!!!
முந்தி அடியாராய்!! முதன்மை முழுபெறுவேன்!! முருகவொளி அமர்வேன்!!!

கேதுவை அறிவோம்

 



கேதுவை அறிவோம்..!

துறவறத்தை கேது என்போம், துறவரத்திலும் பற்றுண்டு, அதாவது துறக்க வேண்டும் என்கிற பற்றே துறவரத்தை மேற்கொள்ள செய்கிறது, ஆக இங்கே தனக்கென்ன வேண்டும் என்பதை தேர்ந்தெடுத்து அதனை அடைய பயணிக்கிறார் கேது என்றே கூற முடியுமே தவிர கேது முற்றுமாக துறக்கிறார் என்று கூற முடியாது, ஆனால் கேது ஒரு புஜ்ஜியம் அதாவது எதனுடனும் கூட்ட முடியும் ஆனால் கழிக்க இயலாது, அதாவது எந்த காரகத்துடனும் கேதுவை இணைக்கலாம், ஆனால் எந்த காரகத்திலிருந்தும் கேதுவை பிரிக்க இயலாது என்கிறேன், கேதுவை துறவி/சித்தர் என்று ஒப்பிடுவதெல்லாம் ஒரு உவமைக்கே, கேது ஒரு புஜ்ஜியம் அதாவது ஒன்றுமில்லை என்பதே கேது, கேதுவுடன் இணைந்த கிரகங்கள் ஒன்றுமில்லா நிலைக்கே ஈர்க்கப்படும் அதன் காரணமாகவே துறவு எனும் பற்றற்ற நிலையை கொடுக்கிறார் கேது, ஆனாலும் பற்றற்று இருக்க வேண்டும் என்று எண்ணுவதே ஒரு பற்றாகும் என்பதை சாமர்த்தியமாக மறைக்கிறார் எனலாம், இப்படி தான் இருக்கும் கேதுவின் செயல்பாடும் எல்லாவற்றையும் துறந்துவிடு என்று ஏதோ ஒன்றை பிடித்துக்கொள்ள வைத்து விடுவார் கேது, அதுவும் சும்மா அல்ல அவரால் பிடித்துக்கொள்ளப்படும் காரகம் வாழ்நாள் முழுவதும் பின்தொடரும், ஆக கேதுவை சுயநலவாதி என்று கூறினால் பொறுத்தமாகவே இருக்கும், என் அனுபவத்தில் கேதுவுடன் ஒரே ராசியில் இணைந்த கிரக உயிர் காரக உறவுகள் சுயநலவாதிகளாகவே இருந்துள்ளனர், கேதுவின் பலமே துறவு துறவு என்று தனக்கான (கர்மம்) குறிக்கோளை (பலன்) அடைய கூட்டிசெல்வார், இதனை உணர்வதற்கு வழியே கிடையாது, சித்தர்கள் துவங்கி ஆசாமிவரை கேதுவை உணர முயற்சிக்கத்தான் முடியுமே தவிர, உணர்ந்துகொள்ள முடியாது ஆனால் கேது தன் பணியை முடித்த பின்னர் உணர்த்துவார் அதுவே கர்மமாகும், பொதுவாகவே கேது நின்ற வீட்டின் காரகங்களில் இந்த அனுபவத்தை ஒவ்வொருவரும் பெற்றுக்கொண்டே தான் இருப்போம், அதாவது ஜாதகத்தில் கேது நின்ற பாவத்தின் கேதுவுடன் இணைந்த கிரக காரகங்களை நாம் அணுக நினைக்கும்படி அணுகவே முடியாது, நினைத்தது ஒன்று நடந்தது ஒன்றாகவே இருக்கும் நடந்து முடிந்த பின்னர் தான் தெரியும் அது சாதக பலனா பாதக பலனா என்பதே, ஆக இனி கேதுவை கணிக்கும் போது நான் பதிவில் கூறிய காரகங்களை மனதில் வைத்து கணித்தால் 5% அவரை புரிந்துகொள்ள முடியும், கேது விருப்பப்பட்டால் இந்த பதிவை மேலும் சில பதிவுகளாக தொடர்வேன், கேதுவுக்கு எது விருப்பம் இந்த பதிவு பெரும்பான்மையானவருக்கு போய் சேர வேண்டும் என்பதே, ஆக ராகுவின் ஆசியால் அது நடக்கும், இப்படி தாங்க கேது உள்குத்து வைத்து வார்த்தையை விடவைக்கிறார் ஏனெனில் எனக்கு கேது+புதன் சேர்க்கை, மீண்டும் சந்திப்போம்..!

Featured Post

உணவு முறைல முடிஞ்ச அளவு மாற்றம் பண்ணுங்க.

  நாம ஏன் சோணகிரியா இருக்கோம்? தொத்த பாடியா இருக்கோம்? பழங்கால மக்களுக்கு மட்டும் எப்படி திமில் கொண்ட தோளும், மதர்த்த நெஞ்சும் வந்தது? உணவு ...