Sunday, April 24, 2022

வடிவேல்துணை கொள்வேன்

 


வந்து வழிபட்டேன்! வல்வினைகள் இனியில்லை!! வாராது ஒருதொல்லை!!!

நிந்தை விலகுற்றேன்! நிலைமை உயர்வுற்றேன்!! நின்பத பிடிபெற்றேன்!!!
சிந்தை ஏற்றிட்டேன்! சிவன்மகன் மனம்பெற்றேன் !! சீர்காணும் பேறுற்றேன்!!!
மந்தம் மறந்திட்டேன்! மலர்ச்சி யான்பெறுவேன்!! மனதால்குடி செய்வேன்!!!
நந்த வனமாவேன்! நாளும் அன்பூப் பூப்பேன்!! நாதன்தோள் சேர்வேன்!!!
வந்தபயன் அறிவேன்! வையம்பெயர் நிலைவேன்!! வடிவேல்துணை கொள்வேன்!!!
கந்தாதினம் சொல்வேன்! காலேகதி பெறுவேன் !!கருணைப் புகழாவேன்!!!
முந்தி அடியாராய்!! முதன்மை முழுபெறுவேன்!! முருகவொளி அமர்வேன்!!!

No comments:

Featured Post

ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதைகள் இருக்கிறது

ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதைகள் இருக்கிறது என்பதையும், ஓர் பலாப்பழத்தைப் பிளக்காமல் அதன் உள்ளிருக்கும் சுளையின் எண்ணிக்கையைய...