Sunday, April 24, 2022

வடிவேல்துணை கொள்வேன்

 


வந்து வழிபட்டேன்! வல்வினைகள் இனியில்லை!! வாராது ஒருதொல்லை!!!

நிந்தை விலகுற்றேன்! நிலைமை உயர்வுற்றேன்!! நின்பத பிடிபெற்றேன்!!!
சிந்தை ஏற்றிட்டேன்! சிவன்மகன் மனம்பெற்றேன் !! சீர்காணும் பேறுற்றேன்!!!
மந்தம் மறந்திட்டேன்! மலர்ச்சி யான்பெறுவேன்!! மனதால்குடி செய்வேன்!!!
நந்த வனமாவேன்! நாளும் அன்பூப் பூப்பேன்!! நாதன்தோள் சேர்வேன்!!!
வந்தபயன் அறிவேன்! வையம்பெயர் நிலைவேன்!! வடிவேல்துணை கொள்வேன்!!!
கந்தாதினம் சொல்வேன்! காலேகதி பெறுவேன் !!கருணைப் புகழாவேன்!!!
முந்தி அடியாராய்!! முதன்மை முழுபெறுவேன்!! முருகவொளி அமர்வேன்!!!

No comments:

Featured Post

உணவு முறைல முடிஞ்ச அளவு மாற்றம் பண்ணுங்க.

  நாம ஏன் சோணகிரியா இருக்கோம்? தொத்த பாடியா இருக்கோம்? பழங்கால மக்களுக்கு மட்டும் எப்படி திமில் கொண்ட தோளும், மதர்த்த நெஞ்சும் வந்தது? உணவு ...