Friday, April 22, 2022

உணவும் எண்ணமும்

 வாழ்க வளமுடன் .

ஆசான் வேதாத்திரி மகரிஷி அவர்கள் நமக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம். மனித வாழ்வு எப்படி எல்லாம் இருக்க வேணடும் என்று நமக்கு உணர வைத்திருக்கிறார்.
உடல், உயிர், மனம் எனும் இம் மூன்றும் நமக்கு எந்தளவு முக்கியம் என்பதை நன்கு அறிவுறுத்தி உள்ளார்.
உடலுக்கு உணவின் அவசியத்தையும் அதன் அளவு முறைப் பற்றி 15 கவிகள் மூலமாக விளக்கி உள்ளார்.
இதோ இந்த கவி,
" உணவும் எண்ணமும் " என்ற தலைப்பிலே (21-12-1957) அன்று வடித்த கவியை இன்று பார்ப்போம்.
உண்ணும் உணவு உடல்மட்டும்
பாயும்,
எண்ணும் எண்ணங்கள் எங்குமே
பாயும்,
எண்ணமோ உணவில்
எழுச்சிபெறும் இயக்கமே,
உண்பதோ எண்ணத்தால்,
உற்றுப்பார்! உறவையறி!
%%%%%%%%%%%
அதாவது,
நாம் உண்ணும் உணவு உடல் மட்டுமே பாயும்.
எண்ணும் எண்ணங்கள் எல்லா இடத்திலும் பாயும்.
எண்ணம் என்பது உணவிலே எழுச்சி பெறுகின்ற இயக்கமாகும்.
நாம் உண்ணவேண்டும் என்று நினைப்பது நம்மில் எழும் எண்ணத்தால் தானே; அதை அறிந்தால் உறவை அறிவாய்.

ஏன் உண்ண வேண்டும் "

 வாழ்க வளமுடன் .

ஆசான் வேதாத்திரி மகரிஷி அவர்கள் மனித அடிப்படை வாழ்வுக்கு அவசியமான அனைத்தையும் விளக்கி விட்டார் கவிகளின் வாயிலாக.
உண்ணும் உணவைப் பற்றி விவரித்த குரு அவர்கள் இன்று அடுத்த கட்டமாக ஏன் உண்ண வேண்டும்? என்று இன்றைய கவியிலே விளக்குகிறார் பாருங்கள்!
தலைப்பு : " ஏன் உண்ண வேண்டும் "
(24-12-1956)
'இருப்பது நாம் புசிப்பதற்கே '
என்பார்கள் பாமரர்கள்;
'இருப்பதற்கே புசிக்கிறோம்'
என்பார் ஆராச்சியுளோர் ;
'இருப்பதனால் புசிக்கிறோம்'
என்பார்கள் முடிவறிந்தோர் ;
இருப்பது ஏன் ? புசிப்பது ஏன் ?
எனும் கேள்விக் கிவை பதில்கள்.
%%%%%%%%%
அதாவது,
பாமரமக்கள் நாம் இருப்பதற்கு சாப்பிடுகிறோம் என்பார்கள்.
சிந்தனையாளரோ, நாம் இருப்பதற்க்காகவே
சாப்பிடுகிறோம் என்பார்கள்.
நாலும் அறிந்தோர் நாம் இருப்பதனாலே சாப்பிடுகிறோம்
என்பார்கள்.
இருப்பது ஏன் ? சாப்பிடுவது ஏன் ?
என்ற கேள்விக்களுக்கு தான் இவை விடைகள்.

வாழ்க்கை_என்பது_என்ன...?

 வாழ்க்கை_என்பது_என்ன...?

கோபத்தில் உள்ள நபரிடம் கேட்டுப் பாருங்கள்.
வாழ்க்கை என்பது வீணான ஒன்று என்று கூறுவார்.
கவலையில் உள்ள நபரிடம் கேட்டுப் பாருங்கள்.
வாழ்க்கை மிகவும் மோசமான ஒன்று என்று கூறுவார்.
விரக்தியில் உள்ள நபரிடம் கேட்டுப் பாருங்கள்.
வாழ்க்கை வலிகள் நிறைந்தது என்று கூறுவார்.
தோல்வியில் உள்ள நபரிடம் கேட்டுப் பாருங்கள்.
வாழ்க்கை ஏமாற்றம் நிறைந்தது என்று கூறுவார்.
அதேபோல,
மகிழ்ச்சியாக உள்ள நபரிடம் கேட்டுப் பாருங்கள்.
வாழ்க்கை மிகவும் அழகானது என்று கூறுவார்.
வெற்றிபெற்ற நபரிடம் கேட்டுப் பாருங்கள்.
வாழ்க்கை கொண்டாட்டம் நிறைந்தது என்று கூறுவார்.
வாழ்க்கையை புரிந்துகொள்ள முயற்சி செய்யும் நபரிடம் கேட்டுப் பாருங்கள்.
வாழ்க்கை மிகவும் புதிரானது என்று கூறுவார்.
அனுபவம் நிறைந்த நபரிடம் கேட்டுப் பாருங்கள்.
வாழ்க்கை இன்பம், துன்பம் என இரண்டின் கலவை என்று கூறுவார்.
இதுதான் வாழ்க்கை, இப்படித்தான் வாழ்க்கை என்பது நமது சூழலும், அந்த சூழலில் நமக்குள் உருவான உணர்வுகளும், அந்த உணர்வுகள் வெளிப்படுத்தும் கண்ணோட்டமும் தான் முடிவு செய்கிறது.
எனவே, நாம் மாற்ற வேண்டியது நமது கண்ணோட்டத்தைத் தான்.
வாழ்க்கை பற்றிய நமது கண்ணோட்டம் சரியாக இருக்கும் எனில், நமது சூழல் மற்றும் உணர்வுகளும் சரியாக மாறிவிடும்.
இந்த உண்மையை நாம் உணர்ந்தால் மன அமைதியுடன் நம்‌ வாழ்க்கையை வாழலாம்.

கண்ணாடி ஏன் அணிகிறார்கள்?

 கண்ணாடி ஏன் அணிகிறார்கள்?

கண்ணாடி எதற்கு? இது என்ன கேள்வி கண் நன்றாக தெரிவதற்கு என்று பதில் வரும். சரி இவ்வளவு நாள் நன்றாக தெரிந்த கண் என்ன ஆனது?
கண் பார்வை சரியாக இல்லை என்பது விளைவா? மூலமா? பிரச்சினையின் வேர் பகுதி எது? உடலில் உள்ள உள்உறுப்புகளில் கழிவுதேக்கம் , இயக்க சக்தி குறைபாடு தான் கண்பார்வை பிரச்சினைக்கு மூலம் குறிப்பாக கல்லீரல் ,பித்தப்பை சரியாக இயங்கினால் கண்பார்வை நன்றாக தெரியும் என்பதை அறிந்து சிகிச்சை அளித்தால் பிரச்சினை தீருமா?
இல்லை கண்ணில் தான் பிரச்சினை என்ற கோணத்தில் சிகிச்சை அளித்தால் பிரச்சினை தீருமா?
எந்த ஒரு பிரச்சினையாக இருந்தாலும் ஆணிவேரை சரிசெய்தால் தீர்க்க முடியாத பிரச்சினை என்று உலகில் ஏதேனும் உண்டா?
கண்ணாடியின் பவர் கூட கூட கண்ணாடியை மாற்றும் போது கண்ணின் பவர் குறைந்து கொண்டே வருகிறது. நன்றாக கவனித்து பார்த்தால் நீங்கள் முதன் முதலில் கண்ணாடி அணியும் முன்பு தெரிந்த கொஞ்சம் பார்வை கூட கண்ணாடி அணிந்து பழகிய பிறகு தெரியாமல் போயிருக்கும் ஏனென்றால் உடலிற்கு செயற்கையாக கண்ணாடி அணிவதன் மூலம் கண் தன்னுடைய செயல்பாடுகளை குறைத்து கொள்கிறது. அதனால் தான் கண்ணாடி அணிபவர்கள் அவர்களின் கண்ணாடியை மாற்றிக்கொண்டே இருப்பார்கள். ஏனென்றால் கண்ணாடியின் பவர் நிலையாக இல்லாமல் மாறிக் கொண்டே இருக்கும்.
கண்ணாடியின் பவரே மாறும் போது கண்ணின் பவர் மாறி ஏன் கண் நன்றாக தெரியாது?

நம் விருப்பங்கள் நிறைவு செய்யும்

மனதை தெளிவு படுத்தி இறை வழி பாடு செய்ய செய்ய நல்லவிதமான மாற்றத்தை உணரலாம். அதாவது தெளிவு என்பது எந்த விதமான எதிர்பார்ப்புமும் எதிர் பார்த்து செயல் படாமல் நமக்கு தேவை நிறைவு பெற்றாலும் பெற விடாமல் இருந்தாலும் வழி பாட்டை விடாமல் எவர் ஒருவர் பின் பற்றி வர இருக்கின்றார்களோ அவர்கள் மனம் நிம்மதி படும். அந்த நம்பிக்கை தன்மை ஓன்றே நம் விருப்பங்கள் நிறைவு செய்யும் நாம் எதிர் பாராத போதும்.

இன்னல்களை இனிதாக

 வாழ்க்கை தீர்மானிக்க பட்ட ஒன்று அதில் மாற்றங்களை அமைத்து கொள்ள பிரபஞ்சம் நமக்கான வாய்ப்பை வழங்கி உள்ளது. அதை முழுமையாக நம்பிக்கை கொண்டு செயல்படு இன்னல்களை இனிதாக கடந்து செல்ல முடியும்.

ஈர்ப்பு_விதி...

 #ஈர்ப்பு_விதி...

1. நாம் எதை ஈர்க்க வேண்டும் என்கிற தெளிவு.
2. அதன் மீதான முழுமையான உணர்வு.
3. அதை நோக்கிய நமது முழுமையான அர்ப்பணிப்பு.
இந்த மூன்றும் இருந்தால் நிச்சயமாக நம்மால் நாம் விரும்பியதை ஈர்க்க முடியும்.

உங்கள் கனவை மனக்கண்ணால் பாருங்கள்

 *உங்கள் கனவை மனக்கண்ணால் பாருங்கள்.* உங்களது காட்சி மிக முக்கியமானது.

_நீங்கள் எதைக் காண்கிறீர்களோ அதாகவே மாறுகிறீர்கள்._
*நான் காணும் நான் தான், நானாகப்போகும் நான்,* உங்களிடம் நீங்கள் நம்பிக்கை வைக்கக் கற்றுக் கொண்டால் நீங்கள் மாற விரும்பும் யாராகவும் நீங்கள் மாறலாம்.

நம்மோடு_நாம்...

 #நம்மோடு_நாம்...

ஒரு நாளில் நம்மைப் பற்றி நாம் சிந்திக்கும் நேரம் எவ்வளவு என்று சிந்தித்துப் பாருங்கள்.
கால ஓட்டத்தின் வேகத்தில் நம்மைப் பற்றி நாம் சிந்திப்பதே மறந்து போய்விட்டது என்கிற உண்மை அப்போது புரியும்.
அதுவும் தொடுபேசியின் வளர்ச்சிக்குப் பிறகு பிறர் என்ன செய்கிறார்கள் என்பதை மட்டுமே அதிகமாக பார்த்தும், கேட்டும், சிந்தித்தும் வருகிறோம்.
நம்மைப் பற்றி நாம் சிந்திக்க நேரமே இல்லை என்கிற மனநிலை பெரும்பாலான மக்களிடத்தில் ஆழமாகப் பதிந்து விட்டது.
ஒரு கட்டத்தில் நம்மைப் பற்றி நாம் புரிந்துகொள்ள வேண்டும் என்று சிலருக்குத் தோன்றுகிறது ஆனால், அதையும் தொடுபேசியில் தான் தேடுகிறோம் நமக்குள் நாம் தேடுவது இல்லை.
அப்படி இல்லையென்றால் வெளியே தேடிச் செல்கிறோம். யாராவது நமக்கு கற்றுத் தருவார்களா என்று தேடுகிறோம்.
ஆனால், என்ன நடந்தாலும் நமக்குள் நாம் தேடலாம் என்பதைப் பற்றி சிந்தித்துக் கூட பார்ப்பதே இல்லை.
நம்மை நாம் புரிந்துகொள்ள வேண்டும் எனில் அது நமக்குள் தான் நிகழும்.
நம்மோடு தினமும் நாம் எவ்வளவு நேரம் செலவு செய்கிறோம்?
உதாரணமாக, நாம் என்ன செய்கின்றோம்? நாம் பிறரிடம் எப்படி நடந்துகொள்கிறோம்? நம் எண்ணங்கள் நமக்குள் எப்படி உள்ளது? போன்றவை.
நமக்காக நாம் எவ்வளவு நேரம் செலவு செய்கிறோம்?
உதாரணமாக, புத்தகங்கள் படிப்பது, அமைதியாக அமர்ந்திருப்பது, உடற்பயிற்சி செய்வது போன்றவை.
தினமும் ஒரு மணி நேரமாவது நம்மோடு, நமக்காக நாம் நேரத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அது நம் வாழ்க்கையை மேம்படுத்த மிகவும் உறுதுணையாக இருக்கும்.

அளவுக்கு மிஞ்சினால்

 

952 
வாழ்க வளமுடன்.
ஆசான் வேதாத்திரி மகரிஷி அவர்கள் மனித வாழ்வு சிறக்க உண்ணும் உணவு மிக மிக அவசியம் என்பதை 'உணவு ' என்கின்ற தலைப்பிலே பார்த்து வருகிறோம்.
இன்று " அளவோடு உணவு "
(20-10-1958)
என்ற கவியைப் பார்ப்போம்.
உணவே உடலாக வந்துள்ளது ;
ஆகையினால்
உணவை உண்டுதான் உயிர்
வாழவேண்டும்.
உணவில் அளவுமுறை மாறிட
மீறிட,
உணவாகவே உடல் மாறியும்
போமன்றோ?
:%%%%%%%%%%%
அதாவது,
உணவு தான் மிகவும் அவசியம் என்றாலும் அதிலும் அளவு முறை மிக மிக அவசியம். " அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் விஷம் அன்றோ!
உண்ணும் உணவுதானே உடலாக வந்துள்ளது. ஆகையினால் உணவை உண்டு தான் உயிர் வாழ வேண்டும்.
அதே நேரம் அளவு முறை மீறும் போது, மாறும் போது உணவாகவே உடல் மாறி விடாதா? விளைவு ?

உள்நோக்குப் பயணம்

 c

0 
. *அண்டத்தில் இருந்து உருவான பிண்டமே👨இந்தமனித உடல்👨 !!! நிலம் நீர், தீக்காற்றாகாயம் என ஐந்து பூதங்களும் உருவாக்கிய *நம்முடலை இறுதியில், ஐம்பூதங்களே உண்ணுகின்றன !!!*
*ஏக்கர் கணக்கில், மண்ணை வளைத்துபோடுகிறான் 👨மனிதன்👨. *முடிவில், வெறும் 6 அடி மண்ணே 👨அவனை👨 அடக்கி மண்ணாக்கி விடுகின்றது.*

*மண்ணை விரும்பிய 👨மனிதனை👨, அந்த மண்ணே இறுதியில், தின்றுவிடுகின்றது !!! ஹஹ்ஹஹா இதிலென்ன வேடிக்கை தெரியுமா?* *இதையெல்லாம்👨நாம்👨" புரியாமல் பார்த்துக் கொண்டு இருக்கின்றோம் என்பதுதான்* !!! *இந்த ஞானம் 👨நம்👨எல்லோர்க்கும் தெரியாமலில்லை !!!* *அது, நம்மனதில் நிலைக்க வில்லை* என்பதே உண்மை !!!
*வெட்டவெளியிலுள்ள விளக்கினை அனைப்பதற்கு, காற்று எத்திசையில் இருந்தும் வந்திடலாம்* !!! அதைப் போலவே,* *இறுமாப்போடு புலன் இன்பங்களில் மயங்கித் 👨திரிபவனுக்கு👨, எமன் எத்திசையில் இருந்தும் வந்திடலாம் !!!*
*ஆரோக்கியம், இளமை, வசதி, பாதுகாப்பு என நான்கும் *ஆனவமாக மாறி, 👨மனிதனது👨 அறிவுக்கண்ணை மறைக்கின்றன !!!*
*உன்னுடலை உன்னால் (காலனிடம் இருந்து) முழுவதுமாக, காப்பாற்ற முடியாது. எப்போதும் 👨உன்👨 மனதில் நிலைக்க வேண்டிய ஞானமிது*
*"நடைபாதை நடப்பதற்கே" என்று ஏன் சொல்ல வேண்டும்? ஏனெனில், அதை, நடப்பதற்குத் தவிர மற்ற எல்லா காரியங்களுக்கும் நாம் பயன்படுத்துவதால்தானே?*
*அதைப்போலவே, *வாழ்க்கை வாழ்வதற்கே* என்று ஏன் சொல்ல வேண்டும் ? ஏனெனில், *👨மனிதன்👨 எந்த நோக்கத்திற்காக படைக்கப் பட்டானோ ... *அதைத் தவிர மற்ற எல்லாவற்றையும் செய்து கொண்டு இருக்கின்றான்.*
*விரல் விட்டு எண்ணக்கூடிய சிலரைத்தவிர, *உலகில் 700 கோடி 👨மனிதர்களும்👨, மனித நோக்கத்தை (பிறவிப்பயனை) அடையாமலேயே இறந்து விடுகின்றனர்.*
*யார் 👨இவர்கள்👨 ? உண்டு உறங்கி உடல் வளர்த்து, *வாழ்ந்தும் வாழாமல் மறைகின்ற* இவர்கள், *பிறந்தும் பிறவாததற்கு சமம் !!!*
*கோவப் படாதீர்கள் !!! *இப்போது 👨உங்களுக்கு👨 வர வேண்டியது கோபம் அல்ல - சிந்தனை !!!
*அடுத்த கசப்பான உண்மையை சொல்லட்டுமா? 👨நீ👨 செய்யும் எல்லா தவறுகளுக்கும் காரணம், உன்மனதை நீ அதன்போக்கில் ஓட விடுவது தான்" !!! 👨உனக்கு👨 எதிரியே உன் மனம்தான்.*
*மனதை ஆள்பவனுக்கும் மனதால் ஆளப்படுபவனுக்கும்* ஒரு சிறிய வித்தியாசம் தான் !!!
*பேயோட்டுபவனுக்கும், 👿பேய்👿 பிடித்துக் கொண்டவனுக்கும்* உள்ள வித்தியாசம்தான் அது !!!*
ஆக, *👨நம்மில்👨 நிறைய பேருக்கு பேய் பிடித்திருக்கிறது என்று ஒப்புக் கொள்கிறீர்களா? ஒப்புக் கொள்ளாதவர்களே இங்கு அதிகம்* !!!
மனதை அதன் போக்கில் அனுமதிக்கும் இவர்களுக்கு *மிகமோசமான இன்னலைத் தரும் முக்கியமான 5 எதிரிகள்* உள்ளனர் !!!*
*காமம், குரோதம், லோபம், மதம், மாற்சரியம்* என்னும் ஐவரே அந்த எதிரிகள் !!! உன்மனதிற்கே தெரியதவாறு *உன்மனதினுள் நுழைவார்கள்.* இவர்கள் ரகசியமாக உன்னிடமுள்ள *ஞானத்தை திருடிக் கொள்வார்கள்.* உடனே, *நீ முட்டாளாகி, இன்னல்களைத் தேடிக் கொண்டு*, முடிவில் *உனக்கு மட்டும் தான் அதிகமான துன்பமென கடவுளை நொந்து கொள்வாய் !!!*
பிறர்மீதுள்ள *"பொறாமையும் கோவமும் கூட *திறமையாக உன்மனதினுள் நுழைவார்கள்.* உன்னைத்தான் *அதிகமாக தண்டிப்பார்கள்"* இதைப் புரிந்து கொண்டால், அதுவே உயர்ந்த ஞானம். *அதுவே, பொறாமை கோவம் என்கிற இரு மனநோய்களுக்கும் சிறந்த மருந்து*
அடுத்தபடியாக, நாக்கை அடக்கினால், *பிறர் வெறுப்புக்கு பலியாகாமல் இருக்கலாம்*
போறாத குறைக்கு பொன்னம்மா குறை என்பார்கள் !!! 👨நம்👨 மனதில் உள்ள 😏வெறுப்பு😏. *ஆம் !!! 👨நமது👨மனமும் சிலர்மீது வெறுப்பை வாரி உமிழ்கின்றது*
ஆனால், "👨 அவர்கள்👨 அவ்வாறு வாழ்வதற்குதான் படைக்கப் பட்டு இருக்கின்றார்கள் They are created to live their own way. *இந்த ஞானமே நம்மனதில் உள்ள வெறுப்புக்கு மருந்து*
*எல்லாவற்றையும் சொன்ன பின்பு எது பிறவிப்பயன்? எது உண்மையான வாழ்க்கைப் பாதை? என்று சொல்லா விட்டால், இப்பதிவு நிறைவடையாது !!!*
சாஸ்த்திரங்கள் மனிதனுக்கு கூறும் இரண்டு அறிவுரைகள்.
1. *வாழு*
2. *வாழவிடு*
*Live And Let Live*
*மொத்தமுள்ள 70 லட்சம் உயிரினங்களில், 👨மனிதன்👨 இதுவரை கண்டுபிடித்துள்ள 15 லட்சம் விலங்கு உயிர்களுக்கும் *எந்த ஹிம்சையும் செய்யாதிருத்தலே* "வாழவிடு" என்ற சொல்லுக்கு பொருளாகும்.*
*ஒரு பேரனாக, மகனாக, நண்பனாக, கணவனாக, அப்பாவாக, தாத்தாவாக வாழ்ந்த ஆண்களும், ஒரு பேத்தியாக, மகளாக, தோழியாக, மனைவியாக, அம்மாவாக, பாட்டியாக வாழ்ந்த பெண்களும், *58வரை பிறருக்காக வாழ்கிறார்கள்* !!!
ஆனால், *அவன் வாழ்ந்து முடிச்சுட்டானப்பா* என்றல்லவா *இளைஞர்கள் எண்ணுகிறார்கள் ?*
ஆனால் உண்மை என்ன தெரியுமா? *அவர் இப்பொழுதுதான் தனக்காக வாழ ஆரம்பிக்கின்றார்*!!! அதாவது *இனிமேல் தான் அவர் தனது பிறவி நோக்கத்தை அடைய முற்படுகின்றார் !!!*
*அப்படியானால், 58 வயது வரை பிறருக்காக வாழ்கின்ற வாழ்க்கை உண்மையான வாழ்க்கை இல்லையா*?
*உன் அப்பாவும் அம்மாவும் உனக்காக வாழ்ந்த குடும்ப வாழ்க்கையை தவிர்த்து இருந்தால், நீ பிறந்திருக்கவே மாட்டாய் !!! எனவே, பிறருக்காக வாழ்கின்ற குடும்ப வாழ்க்கை மனிதனுக்கு அவசியமே !!! இருப்பினும் அதைக் காட்டிலும் அவசியமானது அவர்கள் தன்னை உணர வாழும் வாழ்க்கை !!!*
*வேதங்களிலும், இதிகாசங்களிலும், குறிப்பிட்டுள்ள முறையில் மனதை உள்முகமாக செலுத்தி அதன்படி வாழ்தலே, "வாழு" என்ற சொல்லின் பொருளாகும்*!!!
*இனி, சாஸ்திரங்கள் சுட்டிக் காட்டுகின்ற அந்த "வாழு" என்கிற வாழ்க்கையை 👨நாம்👨 உணர்ந்து விட்டால், இப்பதிவு நிறைவு பெற்றுவிடும் !!!*
அதற்கு இரண்டு மார்க்கங்கள் உள்ளன !!!
1. *வைராக்கியம். 2. கர்மயோகம்*
*👨நீ👨 உயிர் வாழ்வதற்கான குறைந்தபட்ச அத்தியாவசிய தேவைகளோடு வாழுகின்ற தவ வாழ்க்கையை* (வைராக்கியம்) பின்பற்று !!!
*அதற்காக கார்-பங்களா, பணம்-பதவி, சொத்து-உறவு என்றெல்லாம் அனைத்தையும் விட்டுவிடு என்கிறாயா?*
*"ஆம் !!!" என்று உண்மையைச் சொன்னால்* என்னை முட்டாள் என்று சொல்லி விடுவீர்கள்.* உண்மைதானே?
ஏனெனில், ஒரு பொருளை பெருவதற்கு எவ்வளவு சிரமப் பட்டீர்களோ ... *இழக்கும்போது அதைவிட நீங்கள் சிரமப்படுவீர்கள்* !!!எனவே, அந்த உண்மையை வேறு சொற்களால், *மாற்றி சொல்லுகிறேன்.*
*எல்லாம் இருந்தும், மனதளவில் எதுவும் இல்லாதவனாக வாழ்ந்துவிடு* !!!
*இந்த வைராக்கிய வாழ்க்கையானது உனது மனதில் நற்குணங்களை நிலைக்கச் செய்து, தீய குணங்களில் இருந்து விடுதலை தரும் !!!*இதுவே, வைராக்கியத்தின் மூலம் பெறும் சித்த சுத்தி* !!! அப்படி வாழ்வது கடினமாக சிலருக்கு தோன்றினால், அவர்கள் *கர்ம யோகத்தின் மூலம், இந்த சித்த சுத்தியை பெறலாம்.*
கர்மயோகம் : *கீழே குறிப்பிட்ட எண்ணங்களை மனதில் முன்நிறுத்தி,செயல்களை செய்வதே, கர்மயோகம். மற்றவை கர்மம் எனப்படுகின்றன.*
*1. செயலுக்கு முன் 😘
*(a). எண்ணமும், சொல்லும், செயலும், ஒன்றாக இருத்தல்*
*(b). பொது நல நோக்கத்தோடு இருத்தல்,*
*(c). தர்ம காரியங்களில் மட்டுமே ஈடுபடுதல்*
*2. செயலின்போது 😘
*(a) பலன் நோக்கு இன்றி இருத்தல், அதாவது, தோள்வி பயமின்றியும், வெற்றிமோகம் இன்றியும் இருத்தல்.*
*(b). முழு முயற்சியுடனும் ஈடுபடுதல்.*
*3. செயலுக்குப் பின்*
*வெற்றி அல்லது தோள்வி ஆகிய விளைவுகள் எதுவாயினும், அதை இறைவனின் பிரசாதமாக விருப்பமுடன் ஏற்றுக் கொள்ளுதல்*
அதாவது, செயலுக்குமுன், *பலன் நோக்கமின்றியும்*, செயலின்போது *முழு முயற்சியோடும்*, செயலுக்குப்பின், *விளைவுகள் எதுவாயினும், விறுப்பு வெறுப்பின்றி, அவற்றை இறைவனின் பிரசாதமாக, ஏற்பதும்* என இவ்விதமான *நோக்கங்களோடு (ATTITUDE) செயலைச் செய்வது தான் கர்மயோகம் !!!*
வைராக்கியம், மற்றும் கர்மயோகம் மூலம், ஏன் சித்தத்தை சுத்தமாக்க வேண்டும்?
*உன் மனதை உள்முகமாக திசைதிருப்பி அதை சரியான பாதையில் பயணிக்கச் செய்வதற்கு சித்த சுத்தி என்கிற இந்த பயிற்சியே *அடிப்படைத் தகுதியாகும்*!!!
*இந்த அடிப்படைத் தகுதியை அடைந்த பின்பு நமது உள்நோக்குப் பயணம் மிகவும் சுலபமாகிவிடும் !!!*
*சுலபம் என்று குறிப்பிட்ட அந்த உள்நோக்கு பயணம் வெற்றி பெற்றால் அதன் பின் 🌏உலகமே🌏, உன் காலடியில் தான்*

Featured Post

உணவு முறைல முடிஞ்ச அளவு மாற்றம் பண்ணுங்க.

  நாம ஏன் சோணகிரியா இருக்கோம்? தொத்த பாடியா இருக்கோம்? பழங்கால மக்களுக்கு மட்டும் எப்படி திமில் கொண்ட தோளும், மதர்த்த நெஞ்சும் வந்தது? உணவு ...