·
#ஆஞ்சநேயரை_வழிபடுவதால்
#கிடைக்கும்_பலன்கள்
பலருக்கும் பிடித்த கடவுளில் ஆஞ்சநேயரும் ஒருவர். அவர் நடக்கவே முடியாத காரியங்களை மிகச் சுலபமாக நடத்தி வைக்க கூடியவர். கணவன் மனைவி சேர்த்து வாழ வழிவகுக்க கூடியவர்.




ஆஞ்சநேயரை வழிபட்டால் சிவனையும் பெருமாளையும் சேர்த்து வழிபட்ட புண்ணியம் கிடைக்கும்.
இராமாயணத்தில் முக்கிய அங்கமாக திகழ்பவர் அனுமன் தான்.
வியாழக்கிழமையும், சனிக்கிழமையும் அனுமனுக்கு முக்கிய வழிபாட்டு தினங்கள் ஆகும்.தொடர்புடைய படம்
அனுமனுக்கு வெண்ணெய் காப்பை சார்த்தி வழிபடுவதனால் கஷ்டங்களும் வெண்ணெய் உருகுவது போல் உருகி விடும்.

தொடர்புடைய படம்
அனுமனுக்கு திராட்சைப்பழம் பிரியமான நிவேதனப் பொருள். வெற்றி கிடைத்திட திராட்சைப் பழம் படைத்து வழிபட வேண்டும்.
அனுமனுக்கு செந்தூரம் பூசி, வடை மாலையோடு, ஸ்ரீராமஜெயம் எழுதிய காகித மாலையும் அணிவித்து அனுமனின் அருள் பெறலாம்.
அனுமனுக்கு துளசி மாலை சார்த்தி வழிபட்டால், சனீஸ்வரனின் பாதிப்புகளில் இருந்து விடுபடலாம்.
அனுமனை வணங்குவதால் புத்தி, பலம், புகழ், அஞ்சா நெஞ்சம், ஆரோக்கியம் ஆகியவற்றை பெறலாம்.
திருமணத்தடை நீங்க அனுமனுக்கு வியாழன் அன்று வெற்றிலை மாலை சார்த்தி வழிபட வேண்டும்.
துவங்கிய வேலைகளில் தடை நீங்க வியாழன், சனிக்கிழமைகளில் எலுமிச்சை மற்றும் வடைமாலை சார்த்தி வழிபடலாம்.


வெற்றி உண்டாக
ஸ்ரீராம தூத மஹாதீர
ருத்ரவீர்ய ஸமத் பவ
ஆஞ்ஜநா கர்ப்ப ஸம்பூத
வாயு புத்ர நமோஸ்துதே.





No comments:
Post a Comment