Friday, February 21, 2025

பல நோய்களுக்கான ஒரு மருந்து!!!-1

 பல நோய்களுக்கான ஒரு மருந்து!!!

* வெந்தயம். - 250gm
* ஓமம் - 100gm
* கருஞ்சீரகம் - 50gm
* மேலே உள்ள 3 பொருட்களையும் சுத்தம் செய்து அதை தனியாக கருகாமல் வறுத்து, தூள் செய்து ஒன்றாக கலந்து ஒரு கண்ணாடி குடுவையில் வைத்துக்கொள்ள வேண்டும்.
இக் கலவையை ஒரு ஸ்பூன் அளவு இரவு நேரத்தில் வெதுவெதுப்பான நீரில் உட்கொள்ள வேண்டும்.
இதை சாப்பிட்ட பின்பு எந்த உணவும் சாப்பிடக் கூடாது.
தினசரி இந்த கலவையை சாப்பிடுவதால் நம் உடலில் தேங்கி இருக்கும் அனைத்து நச்சு கழிவுகளும் மலம், சிறுநீர் மற்றும் வியர்வை மூலம் வெளியேற்றப்படுகிறது.
👉 தேவையான கொழும்பு எரிக்கப்பட்டு தேவையற்ற கொழுப்பு நீக்கப்படுகிறது.
👉 இரத்தம் சுத்திகரிக்கப்பட்டு சீரான இரத்த ஓட்டத்தை ஏற்படுத்துகிறது.
👉 இரத்த குழாய்களில் உள்ள அடைப்புகள் நீக்கப்படுகிறது.
👉 இருதயம் சீராக இயங்குகிறது.
👉 சருமத்தில் உள்ள சுருக்கங்கள் நீக்கப்படுகிறது.
👉 உடலில் உறுதியும், தேக மினுமினுப்பும், சுறுசுறுப்பும் உண்டாகிறது.
👉 எலும்புகள் உறுதியடைந்து எலும்பு தேய்மானம் நீங்குகிறது.
👉 ஈறுகளில் உள்ள பிரச்சனைகள் நீக்கப்பட்டு பற்கள் வலுவடைகிறது.
👉 கண் பார்வை
தெளிவடைகிறது.
👉 நல்ல முடி வளர்ச்சி உண்டாகிறது.
👉மலச்சிக்கல் நீங்குகிறது.
👉 நினைவாற்றல் மேம்படுகிறது.
கேட்கும் திறன் அதிகரிக்கிறது.
👉 பெண்கள் சம்மந்தப்பட்ட நோய்கள் நீங்குகிறது.
👉 மருந்துகளின் பக்க விளைவுகள் நீக்கப்படுகிறது.
👉 ஆண், பெண் சம்மந்தமான பாலியல் பலவீனங்கள் நீக்கப்படுகிறது.
👉 நீரிழிவு நோய் பராமரிக்கப்படுகிறது.
👍 இந்த கலவையை 2-3 மாதங்கள் தொடர்ந்து சாப்பிடும் போது நாட்பட்ட வியாதிகள் அனைத்தும் குறைகிறது.

மேஜிக்கல்சீட்ஸ் என்று சொல்லப்படும் வெந்தயம்!!

 #மேஜிக்கல்சீட்ஸ் என்று சொல்லப்படும் வெந்தயம்!!

#அத்தனைக்கும் #அரு #மருந்து:
வெந்தயம் என்ற சமையல் அறையில் இருக்கும் விதைகள் இத்தனை நன்மைகள் உடையதா? என்று வியப்படைய வேண்டி இருக்கிறது. சிறுவயதில் அடிவயிற்று வலி என்றால் கொஞ்சம் வெந்தயத்தை கொடுத்து வாயில் போட்டுக்கொண்டு தண்ணீர் குடிக்க சொல்வார்கள் என் தாயார் .
ஆனால் மிகப் பெரிய பிரச்சனைகளுக்கு எல்லாம் ஒரு சாதாரண சமையலறை அஞ்சறைப் பெட்டியில் இருக்கும் வெந்தயம் பயன்படுகிறது என்றால் அதை நாம் ஏன் முறையாக பயன்படுத்தக் கூடாது?
#சர்க்கரைகுறைபாட்டை
#அக்கறையோடுவிரட்டும்:
வெந்தயத்தை அப்படியே போட்டுக் கொண்டு தினமும் விளங்குவது ஒரு சிலர் பழக்கம் இன்னும் சிலர் வெந்தயத்தை லேசாக வறுத்து பொடி செய்து தினம் ஒரு ஸ்பூன் அளவில் சாப்பிடுவது என்ற பழக்கத்தை உடையவர்கள் ஆனால் இதையெல்லாம் தாண்டி கொஞ்சம் மெனக்கெட்டு வெந்தயத்தை முளைகட்டி பயன்படுத்தும் பழக்கத்திற்கு நாம் வரவேண்டும்.
தினமும் 20 கிராம் அளவு முளைக்கட்டிய வெந்தயம் உங்கள் சர்க்கரையை இரண்டு மாதங்களில் கட்டுக்குள் கொண்டு வந்து விடும் இதை நானே பரிசோதித்து பார்த்தேன் என் நண்பர்களுக்கு சொல்லி அவர்களும் பலன் கண்டிருக்கிறார்கள் என்பதால் என் முகநூல் நண்பர்களுக்கும் சொல்ல வேண்டும் என்ற முனைப்பில் இதை எழுதிக் கொண்டிருக்கிறேன்.
#ஊறவைத்தவெந்தயம் #ஊருக்கேநல்லது:
வெந்தயத்தை தேவையான அளவு எடுத்துக் கொண்டு ஆறு மணி நேரங்கள் ஊற வைக்க வேண்டும் பிறகு அதை சுத்தமான துணியில் வடிகட்டி எடுத்து கட்டி 8 மணி நேரம் வைத்தால் முளைப்பு வந்துவிடும் ஒன்றரை சென்டிமீட்டருக்கும் சற்று அதிகமாக முளைப்பு வந்து விட்டால் அதில் இருக்கும் உங்களுக்கு பிடிக்காத கசப்பு சுவை நீங்கிவிடும் ஆனால் பலன் அதேதான் சாப்பிடுவதற்கு அவ்வளவு அருமையாக இருக்கும் ஆனால் 20 கிராம் அளவு போதுமானது இதை இரவு நேரங்களில் படுப்பதற்கு முன்பு சாப்பிடலாம் அல்லது காலையில் உணவு உண்ட பிறகு சாப்பிடலாம் ஏனென்றால் இரவில் சாப்பிட்ட உணவுக்கு வேலை இல்லை என்பதால் சர்க்கரை அதிகமாகும் அதை கட்டுக்குள் வைக்க இது மிகவும் பயன்படும்.
காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் லோ சுகர் ஆகும் என்பதால் காலை சிற்றுண்டி முடித்த பிறகு கூட சாப்பிடலாம்.
#இதயபாதுகாப்பின் #இதயம்:
சில ஆய்வு முடிவுகள் இதய பாதுகாப்பிற்கு இது மிகப் பெரிய உறுதுணையாக இருக்கிறது என்று சொல்கிறது முக்கியமாக ரத்தக் குழாய்களில் கொழுப்பு சேருவதை இது தடுக்கிறது.
#உங்களையார்என்று #எடைபோடும்:
உங்கள் உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க வெந்தயம் பயன்படுகிறது அது மட்டுமல்ல அதிகப்படியான எடை இருப்பவர்கள் தொடர்ந்து சாப்பிட்டால் எடை குறைந்து உங்களை ஸ்லிம் அண்ட் பிட்டாக காட்டும் அற்புதத்தை செய்யும் முளைகட்டிய வெந்தயம்.
#முடிஉடைவேந்தர்கள்:
பள்ளிச்செல்லும் மாணவ மாணவிகளுக்கு கூட முடி உதிர்தல் பிரச்சனை இப்பொழுதெல்லாம் ஆரம்பித்து விடுகிறது அதேபோல பொல்லாத பொடுகு தொல்லை தருகிறது இந்த இரண்டு பிரச்சனைகளுக்கும் உள்ளுக்கு எடுத்துக் கொள்ளும் வெந்தயமும் சரி செய்யும் அதே சமயம் வெந்தயத்தை ஊற வைத்து அரைத்து தலைக்கு தடவிக் கொண்டாலும் இந்த பிரச்சனை தீர்க்கப்படும் நீங்கள் முடி உடைய வேந்தர்களாக உலா வரலாம் என்பதற்கு இது கேரண்டி.
#இந்தியாவின்இரும்பு #மனிதர்கள்:
இரும்பு மனிதர் என்று போற்றப்படும் சர்தார் வல்லபாய் பட்டேல் போன்று நீங்களும் உடலில் இரும்பு சத்து அதிகமான மனிதராக போற்றப்படுவீர்கள். வெந்த+அயம்
என்ற சொல் சமைத்த இரும்புச் சத்து என்ற பொருளை தருகிறது என்று சித்த மருத்துவம் சொல்கிறது அதாவது இரும்புச்சத்தை நீங்கள் சமைத்து சாப்பிடுகிறீர்கள் என்று பொருள் அந்த அளவிற்கு உங்கள் இரும்பு சத்து அளவை சரி செய்து உங்களை இரும்பு மனிதர்களாக உலா வரச் செய்யும் மேஜிக்கை செய்கிறது வெந்தயம்.
#அந்தமூன்றுநாட்கள்:
மாதவிடாய் காலங்களில் அடிவயிற்று வலி வயிற்றுக் கடுப்பு போன்றவற்றால் அவதியுறும் பொழுது அந்த நாட்களில் வெந்தயம் பலன் தரும் என்ற சிந்தனை பெண்களுக்கு பெண் குழந்தைகளை வைத்திருப்பவர்களுக்கு வர வேண்டும் இதை நீங்கள் முன்கூட்டியே முளைகட்டி வைத்து திட்டமிட வேண்டும்.
#கண்ணானகண்ணன்:
கண்ணான கண்ணன் என்று போற்றப்படும் அளவிற்கு உங்கள் கண் பாதுகாப்பிற்கு கண்ணுக்கு குளிர்ச்சி தரும் அற்புத பொருளாக முளை கட்டிய வெந்தயம் திகழ்கிறது.
#மூலநோய்க்குகாலன்:
மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து ஆரம்பித்து அதன் முற்றிய நிலையான மூலநோய் வரை சரி செய்யும் வேலையை செய்கிறது முளைக்கட்டிய வெந்தயம்.
#மூன்றுமுக்கியசத்துக்கள்
வைட்டமின் சி,இரும்பு சத்து, பொட்டாசியம் ஆகிய மூன்றும் மிகவும் அவசியமான ஒன்று இந்த மூன்றும் ஒரு சேர உங்களுக்கு கிடைக்கிறது என்றால் அது முளைக்கட்டினால் மாத்திரம் சாத்தியம் அதனால் முளைகட்டிய வெந்தயம் உங்களுக்கு இந்த கூடுதல் பலனை தருவதற்காக காத்திருக்கிறது.
#உடல்சூட்டிற்குஉலை #வைக்கும்:
தொடர்ந்து முளைகட்டிய வெந்தயம் சாப்பிட்டு வர உடல் சூடு குறைந்து கட்டுக்குள் வரும் என்பதால் இதுவும் ஒரு கூடுதல் பலன் ஆனால் மேற்கண்ட எல்லா விஷயங்களையும் சரிசெய்யும் வெந்தயத்தை சைனஸ் பிரச்சனை உள்ளவர்கள் மட்டும் யோசித்து சாப்பிட வேண்டும். அல்லது அவர்கள் வறுத்து பொடி செய்து வெந்தயத்தை பயன்படுத்தலாம். ஏனென்றால் அந்த அளவிற்கு குளிர்ச்சியை அள்ளி வழங்கக் கூடியது முளைகட்டிய வெந்தயம் என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.
#மளிகைலிஸ்டில்
#நம்பர்ஒன்:
என்ன இந்த மாசம் மளிகை லிஸ்டில் முதல் மரியாதை இதற்குத்தானா?
ஒரு கிலோ வெந்தயம் வாங்கினால் போதுமா?
சாப்பிட ஆரம்பியுங்கள் இரும்பு சத்துக் கூடும் அப்புறம் மளிகை சாமானை தூக்குவதற்கு அந்த வெந்தயமே உங்களுக்கு உதவிடும் 😀.

வண்டி எண் 20672 பெங்களூரு cantonment இருந்து மதுரை வந்தே

 பயணிகள் கனிவான கவனத்திற்கு வண்டி எண் 20672 பெங்களூரு cantonment இருந்து மதுரை வந்தே பாரத் விரைவு ரயில் உள்ளது பெங்களூரு cantonment:1:30pm

கிருஷ்ணராஜபுரம்:1:43pm
சேலம்:4:42pm நாமக்கல்:5:23pm
கரூர்:5:48pm
திருச்சிராப்பள்ளி:7:20pm
திண்டுக்கல்:8:28pm
மதுரை :9:40pm குறிப்பு ( பெங்களூரு cantonment கட்டணம் இருந்து மதுரை கேட்டரிங் சேர்த்தால் 1432 உங்களுக்கு கேட்டரிங் தேவையில்லை என்றால் 1068 மட்டும் செவ்வாய் கிழமைகளில் கிடையாது ) தேவைப்படுவோர் பயன்படுத்திக் கொள்ளுங்கள் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

திரிபலா பொடி மலச்சிக்கல் தீரும், குடல் புண் ஆறும்-1

திரிபலா பொடி
மலச்சிக்கல் தீரும், குடல் புண் ஆறும். இரத்தச் சோகை அதிக உடல் எடை குறையும். உடலில் அதிகப்படியாக உள்ள கொழுப்பு , வெளியேறும்.
நன்றாக காய வைத்த நெல்லி வற்றல்,கடுக்காய்த்தோல், மற்றும் தான்றிக்காய்த்தோல் பொடிகள் ,சம அளவில் கலந்ததே ,திரிபலா சூரணம்.
இதை, இரவில் ஒரு தேக்கரண்டி அளவு சுடுதண்ணீரில் கலந்து தினமும் சாப்பிட்டு வர , குடல் புண் ஆறும். இரத்தச் சோகை அதிக உடல் எடை குறையும்.உடலில் அதிகப்படியாக உள்ள கொழுப்பு , வெளியேறும்
உடல் முதுமை மாறி, இளமைப்பொலிவு ஏற்படும். மலச்சிக்கல் தீரும்.திரிபலாவில் க்ரீன் டீயை விடவும் அதிக ஆண்டி ஆக்ஸிடெண்டுகள் உள்ளதாக ஆய்வு கூறுகிறது
ஆங்கில மருந்துகள் நிறைய உட்கொள்பவர்கள், இம்மருந்தினை காலை- இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வர, ஆங்கில மருந்துகளால் உண்டாகும் பக்க விளைவுகளைக் குறைத்துக் கொள்ளலாம்.
திரிபலா குடல் அழற்சிக்குக்கூட நல்ல மருந்து.
திரிபலாவை புறக்காயங்களுக்கு மருந்தாகவும் பயன்படுத்தலாம். திரிபலா கலந்த கொதிக்கவைக்கப்பட்ட நீரால் காயங்களைக் கழுவதும் நல்ல பயன் தரும்.
அதேபோல வாய்ப்புண் வருகிற போதும் இதைப் பயன்படுத்தலாம்மேலும் சர்க்கரை நோய்க்கு இணை மருந்தாய் பயன்படுத்த லாம்
தொண்டை வலி:
சளி பிடிக்கிறதுக்கு ஒரு நாலைஞ்சு மணி நேரத்துக்கு முன்னாடி பாத்தீங்கன்னா தொண்டை ஒரு மாதிரி கரகரக்கும். அப்பவே தெரியணும், நமக்கு நாளைக்கு சளி பிடிக்கப் போவுதுன்னு. அந்த மாதிரி நேரத்துல நான் என்ன செய்வேண்டுமென்றல், கொஞ்சம் திரிபலாவை எடுத்து சுடுதண்ணியில போட்டு, நல்லா வாய் கொப்பளிக்க . சளி வராது. தொண்டைக்கும் இதமா இருக்கும். பிள்ளை அவ்வப்போது பள்ளிக்கூடத்திலிருந்து கொண்டுவரும் மற்ற தொண்டை வலிகளுக்கும் இது நல்ல மருந்து. வாய் கொப்புளிச்சுத் துப்பத் தெரிந்த குழந்தைகளுக்கும் கொடுக்கலாம். முழுங்கினாலும் பெரிய பிரச்சினை இல்ல, இருந்தாலும் ரொம்ப சின்ன பிள்ளைங்களுக்கு வேணாம்.
பல்லிடுக்குப் பிரச்சினை:
சில நேரம் பல்லிடுக்கில் உணவுத் துகள் மாட்டிக் கொள்கிறது. காரட் துண்டு, ஆட்டுக்கறி இப்படி. அப்போது கவனிக்காம விட்டுட்டா, அடுத்த நாள் வலிக்கும். அப்போ அந்தத் துணுக்கை floss போட்டு எடுத்துட்டாலும் வலிக்கும். அந்த நேரத்தில் திரிபலாவை சுடுதண்ணியில போட்டு வாய் கொப்பளிச்சா, அல்லது அந்த இடத்தில் வைத்து லேசாக பல் தேய்ப்பது போலத் தேய்த்தால் வலி மாயமாய்ப் போகிறது. மற்ற வகை பல்/ஈறு வலிகளுக்கும் இதைப் பயன்படுத்திப் பார்க்கலாம்.
திரிபலா எப்படி நமக்கு உதவுகின்றது?
திரிபலா என்பது அற்புதமான ஆயுர்வேத மருத்துவத் தயாரிப்பு ஆகும். ஆயுர்வேத மருத்துவர்களால், உலகம் முழுவதும் பரவலாக எந்த நோய்க்கும் மருந்தாகப் பயன்படுத்தப்படுவது திரிபலா. சர்க சம்ஹிதா என்னும் ஆயுர்வேத நூலில் முதல் அத்தியாயத்திலேயே திரிபலாவைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது என்பது ஆச்சரியமான விஷயமாகும். நெல்லிக்காய், கடுக்காய் மற்றும் தான்றிக்காய் ஆகிய இம்மூன்றின் கலவையானது அற்புதமான காயகல்பமாகி, தேவர்களின் அமிர்தத்தினைப் போல் எந்த ஒரு வியாதியையும் தீர்க்கும் அற்புத சக்தியினைப் பெற்றுள்ளது.
நோய் எதிர்ப்புச் சக்தி
ஆயுர்வேதத்தில் திரிபலா என்பது இளமையை பாதுகாக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது நமக்கு முதுமைத் தன்மையை நீக்கி இளமைத் தன்மையை அதிகரிக்கச் செய்யும் என்று பொருள். இது உடல் ஆரோக்கியத்தினை அதிகரிக்கவும், நோய் எதிர்ப்புச் சக்தியைக் கூட்டவும் உதவுகிறது. ஆரோக்கியமான வாழ்வில் நோய் எதிர்ப்புச் சக்தி என்பது ஒரு முக்கியமான அங்கமாகும். இது எப்போதுமே அதிகமாகவே இருக்க வேண்டும். நமது உடலில் இயற்கையாகவே அமைந்திருக்கும் தடுப்பு அரண்களைத் தாண்டி, உடலின் உள்ளே நுழையும் கிருமிகளை எதிர்த்துப் போராடும் ‘ஆன்டிபாடி’ (antibodies) எனப்படும் நோய் எதிர்ப்பு சக்திகளை அதிக அளவில் உற்பத்தி செய்ய, இந்த திரிபலா உதவுகிறது.
ஆன்டி-ஆக்ஸிடன்ட்
உடலில் செல்களுக்கிடையில் நடைபெறும் வளர்ச்சிதை மாற்றத்தில், சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்டாக திரிபலா செயலாற்றுகிறது. நமக்கு முதுமையைத் தரும் முக்கியமான காரணியான “கட்டற்ற காரணிகளை” (free radicals) உற்பத்தி செய்யும் வாய்ப்பைக் குறைக்கிறது. மேலும் செல்கள் முறையாகச் செயல்படுவதற்கு முக்கியமாகத் தேவைப்படும் மைட்டோகாண்டிரியா, கோல்கை உறுப்புகள், உட்கரு ஆகியவை சிறப்பாகச் செயல்படுவதையும் திரிபலா தூண்டுகிறது.
செரிமானமின்மை
செரிமானக் கோளாறுகளை திரிபலா அற்புதமாக குணப்படுத்துகிறது. அதிலும் உணவுப்பாதையில், மலத்தினை வெளித்தள்ளும் குடலியக்கத்தை சீராக செயல்பட வைக்கிறது. மேலும் இரத்தத்தில் உள்ள கொழுப்பினை கரைக்க தேவைப்படும் பைல் (Bile) திரவத்தினை கல்லீரலிலிருந்து சுரக்கவும் உதவுகிறது. உணவுப்பாதையில் தேவையான கார அமிலநிலையை (pH level) தேவையான நிலையில் பேணுவதற்கும் துணை புரிகிறது.
மலச்சிக்கல்
திரிபலா ஒரு சிறந்த குடல் சுத்திகரிப்பானாகச் செயல்படுகிறது. மலச்சிக்கலுக்கு அதிகமாகப் பரிந்துரைக்கப்படும் இயற்கை மருந்து திரிபலாவாகும். உடலிலுள்ள நச்சுப்பொருட்களை நீக்கும் நச்சு நீக்கியாகவும் இது செயலாற்றுகிறது. சிறந்த மலமிளக்கியாகவும் பயன்படுகிறது.
வயிற்றுப் பூச்சிகளும் தொற்றுகளும்
வயிற்றில் பூச்சி வளர்வதையும், தொற்றுக்களையும் கட்டுப்படுத்தும் சக்தி வாய்ந்தது தான் திரிபலா. குறிப்பாக வயிற்றிலிருந்து நாடாப்புழுக்களையும், வளையப்புழுக்களையும் வெளியே அகற்றுவதற்கு பெரிதும் உதவுகிறது. மேலும் உடலில் பூச்சிகளும், நுண்கிருமிகளும் வளர்வதற்கு உதவாத நச்சு நிலையை உடலில் பேணுவதற்கு திரிபலா உதவுகிறது.
இரத்தசோகை
இரத்தத்தில் இரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையினை அதிகரிக்க திரிபலா உதவுகிறது. இதன் மூலம் இரத்த சோகை என்னும் நோயைத் தீர்க்க முடியும். (இரத்த சோகை என்பது இரத்தத்தில், ஹீமோகுளோபின் எனப்படும் இரத்த சிவப்பு அணுக்களின் அளவு குறைந்து காணப்படும் நிலையாகும்).
சர்க்கரை நோய்
திரிபலா சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துவதில் சிறப்பு மிக்கது. நமது கணையத்தினைத் (pancreas) தூண்டி, இன்சுலினை சுரக்கச் செய்கிறது. கணையத்தில்தான் இன்சுலினைச் சுரக்கும் லாங்கர்ஹான் திட்டுக்கள் (langerhans) எனப்படும் சுரப்பிகள் உள்ளன. மேலும் உடலில் குளுகோஸின் அளவை சமநிலையில் பேணுவதில் பெரும் பொறுப்பு வகிப்பது இன்சுலின் ஆகும். மேலும் திரிபலா கசப்புச் சுவையுடன் இருப்பதனால், சர்க்கரை நோயின் ஒரு நிலையான ஹைப்பர்கிளைசீமியா (hyperglycemia) எனப்படும் அதிக சர்க்கரை நிலையில், இதனை எடுத்துக் கொள்வது சிறப்பானது.
உடல்பருமன்
இயல்பை விட உடல் பருமனானவர்கள், திரிபலாவை உட்கொள்வது மிகவும் பயன்தரும். இதனுடைய மருத்துவக் குணத்தினால் உடலிலுள்ள கொழுப்பின் அளவினைக் குறைக்க முடியும். நமது உடலில் கொழுப்பு படிவதற்குக் காரணமான அடிபோஸ் செல்களைக் குறி வைத்து செயல்படுவதால், கொழுப்பின் அளவு குறைகிறது. இதன் மூலம் உடல் பருமன் கட்டுப்படுத்தப்படுகிறது.
சருமப் பிரச்சனைகள்
இது இரத்தத்தினைச் சுத்தம் செய்து இரத்தத்திலுள்ள நச்சுப்பொருட்களை வெளியேற்றும் தன்மை கொண்டிருப்பதால், சரும நோய்களுக்கான மருத்துவத்தில் பெரும் பங்காற்றுகிறது. இரத்தத்தினைச் சுத்திகரிக்கும் தன்மை கொண்டிருப்பதால், தொற்று நோய்களையும் தீர்க்கும் குணம் கொண்டுள்ளது.
சுவாசக் கோளாறுகள்
சுவாசப் பாதையிலுள்ள அடைப்புகளை நீக்கி சீரான சுவாசம் ஏற்பட பெரிதும் உதவுகிறது. சைனஸ் என்னும் நோயைத் தீர்க்கும் மருந்தாகவும் இது செயல்படுகிறது. மேலும் நமது சுவாசப்பாதையிலுள்ள சளியில் பாக்டீரியாக்கள் வளராமலும் இது தடுக்கிறது.
தலைவலி
தலைவலிக்கு நிவாரணமாகவும் திரிபலா பயன்படுகிறது. குறிப்பாக வளர்சிதை மாற்றத்தின் இடையூறுகளால் உண்டாகும் தலைவலிக்கு சிறப்பான நிவாரணத்தை அளிக்கிறது.
புற்று நோய்
புதுடில்லியிலுள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மேற்கொண்ட சமீபத்திய ஆய்வுகளின் படி, திரிபலாவுக்கு புற்றுநோயைக் குணப்படுத்தும் திறன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புற்றுநோய் செல்களில் மைட்டேடிக் நிலையில் ஸ்பிண்டில் வடிவத்தோற்றம் உண்டாவதைக் குறைக்க உதவி செய்கிறது. அதன்மூலம், புற்றுநோய் செல்களில் மெடாஸ்டேடிஸ் (metastasis) வளரும் அபாயத்தையும் குறைக்கிறது.

குருராம் சுரத்குமார் நினைவு தினம்(20.02.2001)

 தலைமீது கைவைத்து தாமுணர பெரும்சக்தி அலைபோலே மேலெழுப்பும் ஆசானே குருயோகி!!

இலைபூ காய்கனியாக ஏற்றமதை நாளும்தந்து இருக்கின்றேன் உம்முடனே என்றுரைக்கும் குருயோகி!!
விலையாக பெரும்பக்தி விருப்பமுடன் ஏற்றுநிற்கும் வேதாந்த இறைமகனார் வெற்றியருள் குருயோகி!!
மலையருணை தலம்வாழ்ந்து மலர்க்கரத்தில் விசிறிகொண்டு மனத்தாலே வினையோட்டம் மாஜோதி குருயோகி!!
பிழையேதும் யான்செய்யும் பெருங்குற்றம் கருதாது இலகுவாக அதைவிலக்கி ஏற்றிடும் எம்குருயோகி!!
குலம்வாழ நலமாக குறைவின்றி நிறைவாக குருவாக வழிநடத்தி இறைசேர்ப்பாய் குருசுரத்யோகி!!!
குருராம் சுரத்குமார் நினைவு தினம்(20.02.2001)

நாமக்கல், ராசிபுரத்தில் இருந்து திருச்செந்தூர் செல்ல இணைப்பு ரயில்

 நாமக்கல், ராசிபுரத்தில் இருந்து திருச்செந்தூர் செல்ல இணைப்பு ரயில் சேவையை பயன்படுத்தி எளிதாக ரயிலில் சென்று வரலாம்.

📌 நாமக்கல் - திருநெல்வேலி - திருச்செந்தூர் இணைப்பு ரயில் விவரம்:-
🚂 நாமக்கலில் தினசரி இரவு 11:00 மணிக்கு 17235 நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறினால் மறுநாள் அதிகாலை 5:25 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும். அங்கு இறங்கி காலை 7:15 மணிக்கு புறப்படும் 56727 திருச்செந்தூர் பயணிகள் ரயிலில் ஏறி ஶ்ரீவைகுண்டம், திருச்செந்தூர் போன்ற பகுதிகளுக்கு எளிதாக செல்லலாம்.
🚂 இதேபோல கோவிலுக்கு சென்று திரும்புவோர் தினசரி மாலை 4:25 மணிக்கு திருச்செந்தூரில் புறப்படும் 56730 திருநெல்வேலி பயணிகள் ரயிலில் ஏறி மாலை 5:50 மணியளவில் திருநெல்வேலி ரயில்நிலையம் வந்து இறங்கி, அருகில் இருக்கும் நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோவிலுக்கு பேருந்துகள் மூலம் சென்று மீண்டும் திருநெல்வேலி ரயில்நிலையம் வந்து இரவு 9:15 மணியளவில் வரும் 17236 SMVT பெங்களூரூ எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறி அதிகாலை 2:40 மணிக்கு நாமக்கல் வந்தடையலாம்.
👍 நாமக்கல் - திருநெல்வேலி வரை sleeper வகுப்பில் செல்ல ரூ. 225/- ம், திருநெல்வேலி - திருச்செந்தூர் வரை முன்பதிவில்லா வகுப்பில் செல்ல ரூ. 20/- ம் பயண கட்டணமாகும். இந்த குறைந்த கட்டணத்தில் வசதியாக குறைந்த நேரத்தில் பயணம் செய்ய முடியும். மேலும் நாமக்கலில் இருந்து இது போல அதிகம் பயணம் செய்வதால் புதிய ரயில் சேவைகள் கிடைக்கும் வாய்ப்பும் உள்ளது.
🙏 இந்த ரயிலின் முழு கால அட்டவணை இணைக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலில் வார நாட்களில் செல்ல எளிதாக டிக்கெட் கிடைக்கும் என்பதால் நாமக்கல் பகுதி மக்கள் முன்கூட்டியே திட்டமிட்டு முன்பதிவு செய்து பயனடைய கேட்டுக்கொள்கிறோம்💐.

saptha rishigal names in tamil

 


Inline image 1

வாழ்முனி, செம்முனி, முத்துமுனி, வீர முனி, கரு  முனி, வேதமுனி, சடா முனி 

இந்த முனிகளின் பெயர்களும் வண்ணங்களும் மாறுபட்டாலும் .
7 முனிகள்  என்பதில் மாற்றம் இல்லை .

இவர்களில் முத்துமுனி  சில இடங்களில் அய்யனார் என வழங்கப்படுகின்றார் .

வேலூர் மாவட்டம் வாழைப்பந்தல் எனும் ஊரில் உள்ள பச்சையம்மன் ஆலயம் மிகவும் பழமையானது . 
இங்கு வாமுனி செம்முனி   , சிவன்  மற்றும் விஷ்ணு  அம்சமாகக் கொள்கின்றனர்.

இவர்களில் சிலருக்கு சைவ படையல் தான் 

சப்த ரிஷிகள் 

அகத்தியர் , கஸ்யபர், அத்ரி, வசிஷ்டர், கௌதமர், வால்மீகி , பரத்வாஜர்  இவர்கள்  சப்த ரிஷிகள் எனப்படுவர் .

வேலூரில் உள்ள ஆற்காடு  பண்டைய காலத்தில் காடுகள் நிறைந்த இடமாகும் .

ஆர் (க் ) காடு  - ஆற்காடு

ஷதா ஆரண்ய ஷேத்திரம்  - 7 காடு கோயில்  எனப்படும் கோயில்கள் 7 ரிஷிகளுக்கும் எடுக்கப்பட்டு உள்ளது . இவை யாவும் சிவன் கோயில்கள் ஆகும்.

அப்படி என்னதான் ஸ்பெஷல் செம்மரம்?

 

அப்படி என்னதான் ஸ்பெஷல் செம்மரம்?

கடந்த இருபது – முப்பது ஆண்டுகளாகச் சட்டத்துக்குப் புறம்பாகச் செம்மரங்கள் (Pterocarpus santalinus) வெட்டப்படுவதும் கடத்தப்படுவதும் அதிக அளவில் காணப்படுகிறது. இதற்கு இரண்டு முக்கியக் காரணங்கள் உள்ளன.
1.அதன் உற்பத்தி பரப்பளவு குறைவு.
2.அதன் விலைமதிப்பற்ற மருத்துவப் பயன்.
இது எண்டமிக் (Endemic) எனப்படும் ஓரிடவாழ்வித் தாவரம். அதாவது, கிழக்கு மலைத்தொடருக்கு மட்டுமே உரித்தான இயல் (Wild) தாவரம்.
இந்த மரங்கள் நன்கு உயர்ந்து வளரக்கூடியவை. இருந்தபோதும் வைரக்கட்டை (மரத்தின் உட்பகுதி) மட்டுமே அதிகப் பயனளிப்பதால், அதைப் பெறுவதற்காக மொத்த மரமுமே வெட்டப்படும் அழிவு அறுவடை (destructive harvesting) தவிர்க்க முடியாத ஒன்று. இதன் காரணமாகச் செம்மரம் ஏறத்தாழ அழியும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது. உலக அளவில் மிகவும் ஆபத்தான நிலையில் (Critically Endangered) உள்ள தாவரமாக, ஐ.யு.சி.என். (IUCN)என்ற பன்னாட்டு உயிரினப் பாதுகாப்பு நிறுவனம் செம்மரத்தை வகைப்படுத்தியுள்ளது.
செம்மரம் சட்டத்துக்குப் புறம்பாக அதிக அளவில் வெட்டப்படுவதற்கும், கடத்தப்படுவதற்கும் முக்கியக் காரணம் இதன் வைரக்கட்டைகள் தரும் மருத்துவப் பயன்கள்தான் (வேங்கைப் புலியும் மருத்துவக் காரணங்களுக்காகவே இந்தியாவிலிருந்து சீனாவுக்குச் சட்டவிரோதமாகக் கடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது). இந்தியாவின் செம்மரக் கட்டைகளைப் பல காலமாகக் கிட்டத்தட்ட மொத்தமாக ஏலத்தில் எடுத்துவரும் நாடு சீனா. மருத்துவப் பயன்களுக்காகவே அந்நாடு இதை வாங்கிவந்துள்ளது.
மருத்துவப் பயன்கள்
ஆயுர்வேத, சித்த மருத்துவ முறைகள் மட்டுமின்றி பழங்குடி மருத்துவத்திலும் இந்த மரக்கட்டையின் சாந்து (செஞ்சாந்து) அதிகமாகப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. மருத்துவத் தமிழில் செம்மரம், பிசனம், கணி, ரத்தச் சந்தனம், செஞ்சந்தனம், உதிரச் சந்தனம் என்ற பெயர்களில் செம்மரம் அழைக்கப்பட்டுவந்துள்ளது. ஆண் மலட்டுத்தன்மை, மூட்டுவலி, மூலம், வெட்டுக்காயம், வீக்கம், ரத்தபேதி, சீதபேதி, பாம்புக்கடி, தோல் நோய்கள், நீரிழிவு போன்ற பல நோய்களுக்கு இந்திய மருத்துவ முறைகளில் செம்மர வைரக்கட்டையின் சாந்தும் சாறும் பல காலமாகப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன
மலட்டுத்தன்மைக்கு…
இவற்றில் டீரோஸ்டில்பீன்கள் தோலின் நிறத்தை மாற்றும் பசைகளில் பெருமளவு பயன்படுத்தப்படுகின்றன. நொதிச்செயல்களை (தைரோசினேஸ் என்ற நொதி) கட்டுப்படுத்துவதன் மூலம், தோலின் நிறம் கருப்பு, பழுப்பாக மாறுவதை இந்த வேதி பொருட்கள் தடுக்கின்றன. கருப்பு, பழுப்புத் தோல்களை வெண்மையாக்குவதையும் இந்தப் பொருட்கள் கட்டுப்படுத்துகின்றன. மேலும், தோலின் மேல் புறஊதாக் கதிர்களின் தாக்கம் ஏற்படாமல் இவை பாதுகாக்கின்றன. இம்மரத்தில் உள்ள 16 சதவீதச் சாண்டலால்களும், பலவித மருத்துவப் பயன்களைக் கொண்டவை. இவற்றை எல்லாம்விட, இம்மரம் தரும் முக்கிய மருத்துவப் பயன் ஆண் மலட்டுத்தன்மை சிகிச்சைக்குப் பயன்படுவதுதான்.
அண்மையில் ஆந்திர அரசால் ஏலம் விடப்பட்ட செம்மர வைரக்கட்டைகளில் மூன்றாம் ரக கட்டை மட்டும் ரூ. 207 கோடிக்கும், முதல் ரகக் கட்டைகள் ஒரு டன் ரூ. 1.75 கோடிக்கும், இரண்டாம் ரகக் கட்டைகள் ஒரு டன் ரூ. 1.5 கோடிக்கும் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளன. இவ்வளவு விலை கொடுத்து ஏலம் எடுக்கப்பட்டதிலிருந்து செம்மரக்கட்டையின் மருத்துவ, அழகியல் அம்சங்கள் மிகவும் மதிப்பு வாய்ந்தவை என்பது தெளிவாகிறது.

சுத்தமான மணற்பரப்பு கொண்ட கடற்கரை இந்த மனப்பாடு

 தமிழ்நாட்டின் மிகவும் அழகான அமைதியான மக்கள் அதிகம் செல்லாத அழகிய கடற்கரை மனப்பாடு கடற்கரை...

இந்த கடற்கரை தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூருக்கு அருகே 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது...
மிகவும் அதிகமான கடல் அலைகள் இல்லாத சுத்தமான மணற்பரப்பு கொண்ட கடற்கரை இந்த மனப்பாடு கடற்கரை ❤️❤️

நாகர்கோவில் - மும்பை இடையே சிறப்பு ரயில்!

 நாகர்கோவில் - மும்பை இடையே சிறப்பு ரயில்!

மும்பையில் இருந்து நாகர்கோவிலுக்கும், நாகர்கோவிலில் இருந்து மும்பைக்கும் வாரம் இருமுறை சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. மும்பையில் இருந்து மார்ச் 10,12 & 17ஆம் தேதிகளில் இந்த ரயில் இயக்கப்படுகிறது. இதே போன்று நாகர்கோவிலில் இருந்து 11,13 & 18 ஆகிய தேதிகளில் இந்த ரயில் இயக்கப்படுகிறது. ரேணிகுண்டா, காட்பாடி, திருவண்ணாமலை, விழுப்புரம், திருச்சி, நெல்லை வழியாக இந்த ரயில் செல்லும்.

பெரும்பாலான பிரச்சனைகளைத் தீர்க்கும் ஒரே தைலம் எது தெரியுமா???

 பெரும்பாலான பிரச்சனைகளைத் தீர்க்கும் ஒரே தைலம் எது தெரியுமா???

இப்பொழுது அதன் செய்முறை பார்ப்போம். பிறகு அதன் பலன்களை பார்ப்போம்.
சித்த மருத்துவத்தில் செடி, கொடி, பட்டை, வேர், தழை முதலியவற்றை கொண்டு மருந்து செய்வது ஒரு முறை.
மற்றொன்று வீரம், பூரம்,லிங்கம்,தாளகம், துத்தம் போன்ற பாஷணாங்களை கொண்டு மருந்து செய்வது ஒரு முறை.
மற்றொன்று தங்கம், வெள்ளி, செம்பு, அயம், பித்தளை போன்ற உலோகங்களை கொண்டு மருந்து செய்வது ஒரு முறை.
மற்றொன்று வெடியுப்பு, இந்துப்பு, போன்ற உப்புக்களை கொண்டு செய்வது ஒரு முறை.
நாம் ஒரு முறையை பார்ப்போம்.
நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்.
* புதினா உப்பு
* ஓம உப்பு
* கட்டி கற்பூரம்
இம்மூன்றையும் சம அளவு வாங்கிக்கொள்ளவும். சுமார் 20கிராம் வாங்கிக்கொள்ளலாம். அது அவரவர் விருப்பம்.
சரி இதை காற்று புகாத ஒரு டப்பாவில் போட்டு அல்லது கண்ணாடி பாட்டிலில் போட்டு குலுக்க வேண்டும்.
இரண்டு மூன்று நிமிடங்கள் குலுக்கிய உடன் அது திட நிலையில் இருந்து திரவ நிலைக்கு மாறிவிடும்.
இப்பொழுது தைலம் தயார்.
இது மிகவும் வீரியமான தைலம்.
உடலில் எங்கெல்லாம் வலி உள்ளதோ அங்கெல்லாம் ஓரிரு சொட்டுகள் மட்டுமே தேய்க்கவேண்டும். முழங்கை, மூட்டு, இடுப்பு போன்ற இடங்களில் தேய்க்க வேண்டும்.
இதனுடைய பலன் இத்துடன் நின்றுவிட வில்லை. நீங்கள் பயன் படுத்தும் பல்பொடி மற்றும் பேஸ்ட் எதுவானாலும் அதில் சுமார் பத்து சொட்டுகள் விட்டால் போதும். ஆயுளுக்கும் பல் சம்பந்தமான பிரச்சனை கிட்ட வராது.
பல்லரணை , பற்குத்து , ஈறு வீக்கம் ,ஈறுகளில் சீழ் வடிதல் , வாய் துர் நாற்றம் போன்றவை அணுகவே அணுகாது .இருந்தால் தைலத்தை உபயோகிக்க ஓரிரு நாட்களில் பறந்தோடும்.
இதை 100 மிலி தேங்காய் எண்ணெயுடன் 15 சொட்டுக்கள் கலந்து பயன்படுத்த சாந்தமாக வேலை செய்யும்.சளி , இளைப்பிருமல் , ஆஸ்துமா போன்றவற்றிற்கு வெளிப்பிரயோகமாக தேய்த்துவிட நல்ல பலனளிக்கும். உள்ளே உறைந்திருக்கும் சளி இளகி தொல்லையில்லாமல் வெளியேறும்.
கோமா நிலையில் இருப்பவர்களுக்கு தைலத்தை பொட்டுக்கள் , பிடரி மற்றும் தலைக்கு இரத்தம் கொண்டு செல்லும் முக்கிய இரத்த நாளங்களின் மேல் ஒரிரு சொட்டுக்கள் விட்டு தேய்க்க விரைவில் விழித்தெழுவார்கள்.
சுரம் உள்ளவர்கள் காபி, டீ போன்ற வற்றில் மூன்று சொட்டுகள் விட்டு குடிக்க அடுத்த ஐந்து நிமிடங்களில் சுரம் பறந்தோடும்.
இந்த தைலம் கண்களுக்கு அதிக எரிச்சலை ஊட்ட வல்லது .எனவே கண்களுக்கு நெருக்கமாக இதை உபயோகிக்க வேண்டாம்.கண்ணில் பட்டுவிட்டாலோ அல்லது மின்சாரத் தைலம் தடவிய பின் கண்களில் கையை வைத்துவிட்டாலோ கடும் எரிச்சல் உண்டாகும் அப்போது குளிர்ந்த நீரில் எரிச்சல் தணியும் வரை கண்களைக் கழுவவும்.

வண்டி எண் 16732 திருச்செந்தூர் இருந்து பாலக்காடு தினசரி விரைவு ரயில்

 பயணிகள் கனிவான கவனத்திற்கு வண்டி எண் 16732 திருச்செந்தூர் இருந்து பாலக்காடு தினசரி விரைவு ரயில் உள்ளது திருச்செந்தூர்:12:20pm

காயல்பட்டினம் :12:27pm
ஆறுமுகனேரி:12:30pm
குறும்பூர்:12:36pm
கச்சன்விலை :12:40pm
நாசரேத்:12:46pm
ஆழ்வார் திருநகரி :12:53pm ஸ்ரீவைகுண்டம்:12:59pm
பாளையங்கோட்டை:1:03pm
திருநெல்வேலி:1:25pm
தாழையுத்து:1:41pm
வாஞ்சி மணியாச்சி சந்திப்பு: 2:01pm
கடம்பூர் :2:14pm
கோவில்பட்டி:2:33pm
சாத்தூர்:2:56pm
விருதுநகர்:3:18pm
திருமங்கலம்:3:44pm
திருப்பரங்குன்றம்:3:59pm
மதுரை சந்திப்பு:4:20pm
சோழவந்தான்:4:44pm
கொடைக்கானல் ரோடு:4:58pm
அம்பாத்துரை:5:14pm
திண்டுக்கல்:5:47pm
ஒட்டன்சத்திரம்:6:23pm
பழனி:6:57pm
உடுமலைப்பேட்டை:7:18pm
கோமங்கலம்:7:32pm
பொள்ளாச்சி சந்திப்பு :7:58pm
ஆனைமலை ரோடு:8:07pm
மீனாட்சிபுரம்:8:15pm
முதலமட:8:24pm
கொல்லெங்கோடு:8:33pm
புதுனகரம் :8:41pm
பாலக்காடு டவுன் :8:55pm
பாலக்காடு ஜங்சன் :9:14pm தேவைப்படுவோர் பயன்படுத்திக் கொள்ளுங்கள்

Featured Post

ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதைகள் இருக்கிறது

ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதைகள் இருக்கிறது என்பதையும், ஓர் பலாப்பழத்தைப் பிளக்காமல் அதன் உள்ளிருக்கும் சுளையின் எண்ணிக்கையைய...