Monday, February 10, 2025

திருப்பரப்பு அருவி – கனியமுதம் பொழியும் இயற்கை அழகு!

 திருப்பரப்பு அருவி – கனியமுதம் பொழியும் இயற்கை அழகு!


தமிழ்நாட்டின் அழகிய சுற்றுலா தலங்களில் ஒன்றான திருப்பரப்பு அருவி, கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு பிரபலமான அருவியாகும். இதன் அழகு, தண்ணீரின் சத்தம், சுற்றியுள்ள இயற்கை மற்றும் புனித தலமாக இருக்கும் சிறப்புகள் இதை தனித்துவமாக்குகின்றன.
📍 திருப்பரப்பு அருவியின் இருப்பிடம்
🔹 தமிழ்நாடு – கன்னியாகுமரி மாவட்டம்
🔹 நாகர்கோவிலில் இருந்து சுமார் 35 கி.மீ தொலைவில்
🔹 குலசேகரம் அருகில், கோதையாறு ஆற்றின் ஒரு பகுதி
💦 அருவியின் சிறப்பம்சங்கள்
✅ இயற்கை அழகு – மலைக்கிராம சூழலில் அமைந்துள்ள இது சுற்றுலாப் பயணிகளை அதிகமாக ஈர்க்கிறது.
✅ குளிக்க உகந்த இடம் – அருவியின் கீழ் அமைந்துள்ள சிறிய குளத்தில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுகிறார்கள்.
✅ சுற்றியுள்ள பசுமை – பசுமையான மலைகளும் மரங்களும் சூழ்ந்துள்ளதால், இது ஒரு அமைதியான இடமாகும்.
✅ பரதவாஜேஸ்வரர் கோவில் – அருவிக்கு அருகில் பாரம்பரியமான இந்த கோவில் அமைந்துள்ளது.
⏳ திருப்பரப்பு அருவிக்கு செல்ல சிறந்த காலம்
🍃 ஜூன் – ஜனவரி: பருவ மழை காலத்திலும், இதன் பின்னணியில் உள்ள அணை திறக்கப்படும் போது அருவியின் வெள்ளப்பெருக்கு அதிகமாக இருக்கும்.
🚗 எப்படி செல்லலாம்?
🛣 சாலை வழி – நாகர்கோவில், கன்னியாகுமரி, திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் இருந்து பஸ்கள் மற்றும் தனியார் வாகனங்கள் மூலம் செல்லலாம்.
🚉 ரயில் வழி – நாகர்கோவில் ரயில் நிலையம் அருகிலுள்ளது.
✈️ விமானம் – திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையம் (சுமார் 55 கி.மீ தொலைவில்).
✨ திருப்பரப்பு அருவி – சுற்றுலா, பக்தி, இயற்கை இவை அனைத்தும் ஒரே இடத்தில்!
இயற்கையின் அணைத்து அருமைத் தருணங்களையும் அனுபவிக்க, திருப்பரப்பு அருவிக்கு ஒரு பயணம் சென்று வாருங்கள்! நீங்கள் அங்கு சென்ற அனுபவத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்!

பயணிகள் கனிவான கவனத்திற்கு வண்டி எண் 20682 செங்கோட்டை இருந்து

 பயணிகள் கனிவான கவனத்திற்கு வண்டி எண் 20682 செங்கோட்டை இருந்து தாம்பரம் வாரம் மும்முறை ( ஞாயிறு, வியாழன் மற்றும் சனி )ஆகிய தினங்களில் மட்டும் , செங்கோட்டை :5:10pm

தென்காசி :5:22pm
கடையநல்லூர்:5:37pm
பாம்பு கோயில் சந்தை :5:49pn
சங்கரன்கோவில் :5:59pm
ராஜபாளையம் :6:23pm
ஸ்ரீவில்லிபுத்தூர் :6:39pm
சிவகாசி :6:53pm
திருத்தங்கல்:7:00pm
விருதுநகர் :7:23pm
அருப்புக்கோட்டை :7:48pm
மானாமதுரை :8:28pm
சிவகங்கை :8:48pm
தேவகோட்டை ரோடு:9:13pm
காரைக்குடி:9:33pn
புதுக்கோட்டை:10:04pm
திருச்சிராப்பள்ளி:11:30pm
விருத்தாசலம் :1:00Am
விழுப்புரம்:2:00Am
மேல்மருவத்தூர் :2:53Am
செங்கல்பட்டு :3:23Am தாம்பரம்:4:25Am தேவைப்படுவோர் பயன்படுத்திக் கொள்ளுங்கள்

பயணிகள் கனிவான கவனத்திற்கு வண்டி எண் 20666 திருநெல்வேலி இருந்து

 பயணிகள் கனிவான கவனத்திற்கு வண்டி எண் 20666 திருநெல்வேலி இருந்து சென்னை எழும்பூர் வந்தே பாரத் விரைவுவண்டி உள்ளது

திருநெல்வேலி:6:05Am
விருதுநகர்:7:18Am
மதுரை:7:50Am
திண்டுக்கல்:8:38Am
திருச்சிராப்பள்ளி:9:45Am
விழுப்புரம்:11:46Am
தாம்பரம்:1:13pm
சென்னை எழும்பூர் :1:55pm
குறிப்பு (செவ்வாய் கிழமைகளில் கிடையாது ) அதைப் போல டிக்கெட் கட்டணம் 1155 தேவைப்பட்டால் கேட்டரிங் 308 =1463 இல்லைஎன்றால் 1155 மட்டுமே ) தேவைப்படுவோர் பயன்படுத்திக் கொள்ளுங்கள்

ஒரு உண்மையான சிவன் அடிமை- யோகி ராம் சுரத் குமார்....

 



ஒரு உண்மையான சிவன் அடிமை

தன் தேவைகளுக்காகக்
கவலை அடையத் தேவையில்லை.
அவனின் எஜமானன்
அவனது தேவைகள் அனைத்தையும்
நிறைவேற்றி வைப்பான்.
எனவே அவன் கவலையற்று, நிச்சிந்தையாக
சுதந்திரமாக இருக்கலாம்.
இதன் உட்பொருள்,
என் தந்தையிடம் நீ
பூர்ண சரணாகதியடைந்த
அடியவனாக இருந்தால்
நீ உன்னை நினைத்துக்
கவலையுறத் தேவையில்லை.
என் தந்தை உனது தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றுவார்.
நீ கவலையற்று, நிம்மதியாக,
சுதந்திரமாக இருக்கலாம்.
யோகி ராம் சுரத் குமார்....

நாகர்கோயில் இருந்து தாம்பரம் அதிவேக விரைவு ரயில் உள்ளது 22658

 பயணிகள் கனிவான கவனத்திற்கு வண்டி எண் 22658 நாகர்கோயில் இருந்து தாம்பரம் வாரம் மும்முறை( திங்கள்,செவ்வாய் மற்றும் வியாழன் ) ஆகிய தினங்களில் மட்டும் அதிவேக விரைவு ரயில் உள்ளது நாகர்கோயில் சந்திப்பு :5:05pm

வள்ளியூர்:5:37pm
திருநெல்வேலி:6:35pm
கோவில்பட்டி:7:28pm
சாத்தூர்:7:43pm
விருதுநகர்:8:13pm மதுரை:8:55pm
திண்டுக்கல்:10:02pm
திருச்சிராப்பள்ளி:11:15pm
விருத்தாசலம்:12:45Am
விழுப்புரம்:1:50Am
மேல்மருவத்தூர்:2:43Am
செங்கல்பட்டு:3:13Am
தாம்பரம்:4:10Am தேவைப்படுவோர் பயன்படுத்திக் கொள்ளுங்கள்

செங்கோட்டை இருந்து ஈரோடுக்கு ரயில் வண்டி எண்:- 16846

 பயணிகள் கனிவான கவனத்திற்கு வண்டி எண்:- 16846 செங்கோட்டை இருந்து ஈரோடுக்கு தினசரி விரைவு ரயில் உள்ளது.

செங்கோட்டை:5:10Am
தென்காசி:5:23Am
பாவூர்சத்திரம்:5:34Am
கீழகடையம்:5:43Am
அம்பாசமுத்திரம்:5:54Am
கல்லிடைக்குறிச்சி:6:00Am
சேரன்மகாதேவி:6:09Am
திருநெல்வேலி:6:25Am
வஞ்சிமணியாச்சி:6:54Am
கடம்பூர்:7:05Am
கோவில்பட்டி : 7:23Am சாத்தூர்:7:43Am துலுக்கபட்டி:7:54Am
விருதுநகர்:8:13Am
கள்ளிக்குடி:8:24Am
திருமங்கலம்:8:34Am
திருப்பரங்குன்றம்:8:44Am
மதுரை:9:15Am
சோழவந்தான்:9:39Am
கொடைக்கானல்ரோடு:9:58Am
அம்பத்துறை:10:14Am
திண்டுக்கல்:11:22Am
வெள்ளியணை:12:24Am
கரூர்:12:58pm
புகழுர்:1:19pm
கொடுமுடி:1:34pm
ஈரோடு:3:00pm

வண்டி எண் 22616 கோயம்பத்தூர் இருந்து திருப்பதி இன்டர்சிட்டி ரயில் உள்ளது

 பயணிகள் கனிவான கவனத்திற்கு வண்டி எண் 22616 கோயம்பத்தூர் இருந்து திருப்பதி இன்டர்சிட்டி அதிவேக விரைவு ரயில் உள்ளது கோயம்பத்தூர் :6:10Am

திருப்பூர்:6:48Am
ஈரோடு :7:30Am
சேலம் :8:27Am
சாமல்பட்டி:9:34Am
ஜோலார்பேட்டை:10:03Am
காட்பாடி:11:18Am
சித்தூர்:11:48Am
பாகாலா:12:08pm
திருப்பதி :1:25pm குறிப்பு ( வாரத்தில் நான்கு நாட்கள் மட்டும்( ஞாயிறு, செவ்வாய், வியாழன் மற்றும் வெள்ளி ) தேவைப்படுவோர் பயன்படுத்திக் கொள்ளுங்கள்

மதுரை இருந்து குருவாயூர் தினசரி ரயில் உள்ளது எண் 16327

 பயணிகள் கனிவான கவனத்திறகு எண் 16327 மதுரை இருந்து குருவாயூர் தினசரி ரயில் உள்ளது மதுரை சந்திப்பு : 11:35Am

திருப்பரங்குன்றம் :11:44Am
திருமங்கலம் :11:54Am
கல்லிகுடி :12:03pm
விருதுநகர் சந்திப்பு :12:13pm
திருத்தங்கல்:12:29pm
சிவகாசி :12:39pm ஸ்ரீவில்லிபுத்தூர்:12:54pm
இராஜபாளையம் : 1:03pm
சங்கரன்கோவில் :1:29pm
பாம்பகோவில் சந்தை:1:39pm
கடையநல்லூர்:1:49pm
தென்காசி சந்திப்பு:2:13pm
செங்கோட்டை:3:15pm
பகவதிபுரம்:3:34pm
ஆர்யன்காவு:3:54pm
ஆர்யன்காவு நெந் பிளாக்:4:04pm
எடபாளயம் ஹல்ட்:4:10pm
கழுத்துருட்டி:4:19pm
தென்மலை :4:31pm ஓட்டுக்கள்:4:42pm
எடமன்:5:01pm
புனலூர் :5:55pm
ஆவ்னெஸ்சரம்:6:10pm
குரி :6:17pm
கொட்டாரக்கரா :6:27pm
ஏழுகொனெ :6:34pm
குன்டர ஈஸ்ட் :6:40pm
குன்டர :6:49pm
சாந்தனடொப் ஹல்ட் :6:57pm
கிலிகொல்லுர் :7:05pm
கொல்லம் ஜங்சன்:7:40pm
சாஸ்தான்கோட்டா:8:04pm
கருணாகப்பள்ளி:8:14pm
கயங்குளம் சந்தி:8:33pm
மாவேலிக்கரை:8:44pm
செங்கன்னூர் :8:56pm
திருவல்லா :9:06pm
சங்கனாச்சேரி:9:16pm
கோட்டயம் :9:42pm
எட்டுமனுர் :9:57pm
குருப்பந்த்தரா :10:05pm
வைகோம் ரோடு:10:13pm
பிரிவோம் ரோடு:10:22pm
முலன்டுருட்டி:10:36pm
திரிபுனிதிடுர :10:54pm
எர்ணாகுளம் டவுன்:11:32pm
இடப்பல்லி:11:44pm
களமசேரி:11:54pm
அலுவா:12:04Am
அங்கமலி:12:19Am
திருச்சூர் :1:23Am
குருவாயூர்:2:10Am தேவைப்படுவோர் பயன்படுத்திக் கொள்ளுங்கள் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

தேசிய புதைபடிவ மர பூங்கா, திருவக்கரை

 1940 இல் நிறுவப்பட்ட தேசிய புதைபடிவ மர பூங்கா, திருவக்கரை இந்திய மாநிலமான தமிழ்நாட்டில் உள்ள விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு புவியியல் பூங்கா ஆகும், இது இந்திய புவியியல் ஆய்வால் பராமரிக்கப்படுகிறது. திருவக்கரை கிராமத்திலிருந்து கிழக்கே 1 கிமீ தொலைவில் திண்டிவனம் மற்றும் பாண்டிச்சேரி இடையே சாலையில் அமைந்துள்ளது.

இந்த புதைபடிவ பூங்காக்கள்
பெட்ரிஃபைட் மர புதைபடிவங்களின் வீடு (மரங்களின் புதைபடிவங்கள்) அவை கிட்டத்தட்ட 20 மில்லியன் ஆண்டுகள் பழமையானவை.
மர படிமங்கள்
சுமார் 247 ஏக்கர் (100 ஹெக்டேர்) பரப்பளவைக் கொண்ட பூங்கா முழுவதும் 20 மில்லியன் ஆண்டுகள் பழமையான மரப் படிமங்கள் இந்தப் பூங்காவில் உள்ளன. இந்த பூங்கா ஒன்பது என்கிளேவ்களைக் கொண்டுள்ளது, ஆனால் 247 ஏக்கரில் (சுமார் 1 சதுர கிமீ) ஒரு சிறிய பகுதி மட்டுமே பொதுமக்களுக்கு திறக்கப்பட்டுள்ளது. மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பாரிய வெள்ளத்தின் போது புதைபடிவங்கள் உருவானதாக GSI இன் அதிகாரிகள் நம்புகின்றனர்.
..

துலே மரம் (அர்போல் டெல் துலே) என்பது மெக்சிகோவின்

 உலகின் அதிக சுற்றளவு( 43மீட்டர்) கொண்ட துலே மரம்...

துலே மரம் (அர்போல் டெல் துலே) என்பது மெக்சிகோவின் ஓக்ஸாக்காவில் உள்ள சாண்டா மரியா டெல் துலே நகரில் அமைந்துள்ள ஒரு மாபெரும் மான்டெசுமா சைப்ரஸ் (டாக்ஸோடியம் முக்ரோனேட்டம்) ஆகும். இது உலகின் மிக விட்டம் உடைய மர தண்டுகளில் ஒன்றைக் கொண்டிருப்பதற்காக பிரபலமானது.
துலே மரத்தைப் பற்றிய முக்கிய தகவல்கள்:
அறிவியல் பெயர்: டாக்ஸோடியம் முக்ரோனேட்டம்
இடம்: சாண்டா மரியா டெல் துலே, ஓக்ஸாகா, மெக்சிகோ
வயது: 1,500 முதல் 2,000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானதாக மதிப்பிடப்பட்டுள்ளது
தண்டு சுற்றளவு: சுமார் 42 மீட்டர் (138 அடி)
விட்டம்: தோராயமாக 14 மீட்டர் (46 அடி)
உயரம்: சுமார் 35–40 மீட்டர் (115–131 அடி)
எடை: 600 டன்களுக்கு மேல் என மதிப்பிடப்பட்டுள்ளது..

நாகர்கோயில் :3:50pm to தாம்பரம் :5:43Am ரயில் தினசரி உள்ளது வண்டி எண் 20692

 பயணிகள் கனிவான கவனத்திற்கு முற்றிலும் முன் பதிவில்லா அந்த்யோதயா விரைவு ரயில் தினசரி உள்ளது வண்டி எண் 20692 நாகர்கோயில் :3:50pm வள்ளியூர் : 4:23pm திருநெல்வேலி :5:10pm கோவில்பட்டி :6:07 pm சாத்தூர் :6:22pm விருதுநகர் :6:44pm மதுரை :7:35pm திண்டுக்கல் : 9:02pm திருச்சிராப்பள்ளி : 10:20pm தஞ்சாவூர் :11:18pm கும்பகோணம் : 11:52pm மயிலாடுதுறை : 12:33Am சிதம்பரம் : 1:13Am திருப்பதிரிபுலியூர் :1:59Am விழுப்புரம் :3:10Am செங்கல்பட்டு :4:38Am தாம்பரம் :5:43Am (குறிப்பு இந்த ரயிலில் பல ஆண்டுகளாக ஓடி கொண்டு இருக்கிறது தெரியாதவர்கள் தெரிஞ்சிகொங்க முன் பதிவில்லா 18 பெட்டிகள் உள்ளது அதைப்போல டிக்கெட் அந்த்யோதயா ரயில் என்று கேட்டு பெறவும் ) தேவைப்படுவோர் பயன்படுத்திக்கொள்ளுங்கள்

வீட்டிலேயே திரவ உரம் தயாரிப்பதற்கான வழிகாட்டி

 வீட்டிலேயே திரவ உரம் தயாரிப்பதற்கான வழிகாட்டி

பொருட்களைச் சேகரிக்கவும்:
தாவரக் கழிவுகளை (இலைகள், புல் துண்டுகள் போன்றவை) சேகரிக்கவும்.
காய்கறி தோல்கள், முட்டை ஓடுகள் மற்றும் மீதமுள்ள உணவு போன்ற சமையலறை கழிவுகளைச் சேர்க்கவும்.
ஒரு பெரிய பிளாஸ்டிக் டிரம் அல்லது கொள்கலன் மற்றும் தண்ணீரைத் தயாராக வைத்திருங்கள்.
தயாரிப்பு:
டிரம்மில் கரிமக் கழிவுகளை பாதியளவு நிரப்பவும்.
பொருட்களை மூழ்கடிக்க போதுமான தண்ணீரைச் சேர்க்கவும்.
கலவையை நன்கு கிளறவும்.
நொதித்தல்:
டிரம்மை காற்றோட்டத்தை அனுமதிக்க தளர்வாக மூடி வைக்கவும்.
நிழலான இடத்தில் வைக்கவும்.
2-3 வாரங்களுக்கு நொதிக்க விடவும், ஒவ்வொரு சில நாட்களுக்கும் கிளறவும்.
வடிகட்டுதல்:
நொதித்த பிறகு, ஒரு சல்லடை அல்லது துணியைப் பயன்படுத்தி திரவத்தை வடிகட்டவும்.
திரவ உரத்தை பாட்டில்களில் சேகரிக்கவும்.
பயன்பாடு:
உரத்தை நீர்த்துப்போகச் செய்யவும் (1 பகுதி உரத்தை 10 பகுதி தண்ணீருக்கு நீர்த்துப்போகச் செய்யவும்).
ஆரோக்கியமான வளர்ச்சிக்கு தாவரங்களுக்கு தண்ணீர் கொடுக்க இதைப் பயன்படுத்தவும்.

அடி முடி காண முடியாத இடம் ஒன்று

 அடி முடி காண முடியாத இடம் ஒன்று திருவண்ணாமலையில் இருக்கிறது என்றால் கேட்க மிக ஆச்சர்யமாக இருக்கிறது தானே...!!

அது எப்படி அவ்வளவு பெரிய திருவண்ணாமலையை மறைக்க எதனால் முடியும், மலை உச்சியில் தீபம் ஏற்றினால் சுற்றி இருபது கிலோமீட்டர் தாண்டி தெரியும்.
அப்படிப்பட்ட மலையை மறைக்க யாரால் முடியும் என்று தான் நினைக்க தோன்றும். நமக்கும் அவ்வாறே நினைக்க தோன்றியது ஆரம்பத்தில்,
கிரிவல பாதையில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நின்று பார்க்கும் போது அண்ணாமலையார் மலை சுற்றிலும் மறைந்து விடுகிறது. நின்று பார்க்கும் நமக்கு கொஞ்சம் கூட தெரியாமல் ஒரு சிறு மலை மறைத்து விடுகிறது.
அடியையும் பார்க்க முடிவதில்லை
முடியையும் பார்க்க முடிவதில்லை..
அப்படி மறைத்தவாறு நிற்கும் மலையின் பெயர் என்ன தெரியுமா?
உண்ணாமலை அம்மன் பெயரில் அழைக்கப்படும் மலை தான் அது. இதன் பின்னால் ஒரு கதையே இருக்கிறது என்கிறார்கள் விஷயம் தெரிந்தவர்கள்....
சிவனை சக்தி தனக்குள் நிறுத்தி மறைத்து வைத்திருக்கும் சூட்சுமம் நிறைந்த இடமாகும் அந்த இடம். அந்த இடம் தான் கண்ணப்பனார் கோயில் அமைந்திருக்கும் இடம். இதைப் பற்றி எழுத நேர்ந்தால் நிறைய சொல்ல வேண்டும். ஒற்றை பாறையில் ஒரு கோயில் அமைந்துள்ளது திருவண்ணாமலையில் என்றால் அது கண்ணப்பனார் கோயில் தான்.
ஆரம்ப காலத்தில் ரமணர் இங்கு அதிகம் இருந்து இருக்கிறார். உள் கிரிவல பாதை முடியும் இடமும் இதுவே எனலாம்‌‌. இந்த கோயில் அமர்ந்திருக்கும் பாறையின் கீழ் ஒரு குகை இருந்திருக்கிறது. அந்த குகையில் அமர்ந்து சித்தர்கள் தவம் செய்து வருவார்கள்.
அந்த குகையின் பெயர் புலிப்புகா குகையாம். அதற்கான ஆதாரம் இந்த பதிவில் இருக்கும் கல்வெட்டை பார்த்தாலே தெரியும். பல லட்சம் பக்தர்கள் மாதம் தோறும் கிரிவலம் வந்தாலும், யாரோ ஒரு சிலர்க்கு தான் இந்த கோயிலில் உள்ள கண்ணப்பனாரை வணங்கும் பாக்கியம் கிட்டும் என்பது அதிசயமே!!
ராகு கேது தோஷம் போக்க ஸ்ரீ காளஸ்த்ரி போக முடியாதவர்கள் இந்த கோயிலில் வந்து வணங்கினாலே தோஷம் போகும் என்கிறார்கள் சித்தர்கள்.
இந்த கோயில் அமைவிடத்தில் நின்று பார்த்தால் கார்த்திகை மஹா தீபம் ஏரிவதை பார்க்க முடியாது.
நூறு மீட்டர் தாண்டி சென்று பார்த்தால் தான் அண்ணாமலையின் தோற்றமே தெரியும் . அப்படிப்பட்ட அற்புதம் நிறைந்த இடங்கள் திருவண்ணாமலை யில் நிறைய இருக்கிறது..

பணிவான மற்றும் அன்பான நடத்தைக்காக அந்த நபரை

 கற்றறிந்த_குரு ஒரு 35 வயது திருமணமான இளைஞனை தனது சொற்பொழிவின் போது எழுந்து நிற்கச் சொன்னார்.

"நீங்கள் ஒரு கடற்கரையில் நடந்து கொண்டிருக்கிறீர்கள். ஒரு இளம் அழகான பெண் முன்னால் இருந்து வருகிறார். நீங்கள் என்ன செய்வீர்கள்?"
அந்த இளைஞன் பதிலளித்தான் "அவள் பார்க்கப்படுவாள், அவளுடைய ஆளுமையை நான் பார்த்து பாராட்டத் தொடங்குவேன்".
குருஜி கேட்டார் "அந்தப் பெண் முன்னேறிய பிறகு, நீங்களும் திரும்பிப் பார்ப்பீர்களா?"
அந்த இளைஞன் சொன்னான் , ஆம், என் மனைவி என்னுடன் இல்லை என்றால்.... (கூட்டத்தில் அனைவரும் சிரிக்கிறார்கள்)
குருஜி மீண்டும் கேட்டார் "அந்த அழகான முகத்தை எவ்வளவு காலம் நினைவில் வைத்திருப்பீர்கள் என்று சொல்லுங்கள்?"
அந்த இளைஞன், "இன்னொரு அழகான முகம் தோன்றும் வரை 5-10 நிமிடங்கள் இருக்கலாம்" என்று பதிலளித்தார் மற்றும் புன்னகைத்தார்
குருஜி பின்னர் அந்த இளைஞனிடம் கூறினார் இப்போது கற்பனை செய்து பாருங்கள். நீங்கள் இங்கிருந்து செல்லும் போது, ​​நான் உங்களுக்கு ஒரு புத்தகப் பொட்டலத்தைக் கொடுத்தேன். உங்கள் வீட்டிலிருந்து 75 கிமீ தொலைவில் உள்ள ஒரு பெரிய பணக்காரரிடம் அந்த பாக்கெட்டை டெலிவரி செய்ய வேண்டும் என்று சொன்னேன். புத்தகங்களை விநியோகிக்க நீங்கள் அவருடைய வீட்டிற்குச் செல்கிறீர்கள். அவருடைய வீட்டைப் பார்த்தாலே அவர் ஒரு கோடீஸ்வரர் என்பது தெரிய வருகிறது. அவரது பங்களாவின் வராந்தாவில் 10 வாகனங்களும், வீட்டின் வெளியே 5 வாட்ச்மேன்களும் நிற்கின்றனர். உள்ளே புத்தகப் பொட்டலத்துடன் நீங்கள் வந்த தகவலை அனுப்பிவிட்டீர்கள், பிறகு அந்த மாண்புமிகு தானே வெளியே வந்து உங்களை வரவேற்றார். உங்களிடமிருந்து புத்தகப் பொட்டலத்தை எடுத்துக் கொண்டார். பின்னர் நீங்கள் அந்த இடத்தை விட்டு வெளியேறத் தொடங்கிய போது உங்களை அவரது வீட்டிற்குள் வரும்படி அவர் மிகவும் பணிவுடன் கேட்டுக் கொள்கிறார். அவர் உங்கள் பக்கத்தில் அமர்ந்து உங்களுக்கு சூடான தேநீர் மற்றும் உணவு கொடுத்தார். மிகவும் நன்றாக கவனித்து, இவ்வளவு சீக்கிரம் புத்தகங்களை அவரிடம் கொண்டு சேர்த்ததற்கு நன்றி கூறுகிறார். நீங்கள் திரும்பி வரவிருக்கும் போது, ​​அவர் உங்களிடம் கேட்கிறார் - நீங்கள் எப்படி என் வீட்டிற்கு வந்தீர்கள்? என்று. நீங்கள் சொன்னீர்கள் உள்ளூர் ரயிலில் என்று .
உடனே அவர் தனது டிரைவரிடம் தனது சொகுசு கார் ஒன்றில் உங்களை உங்கள் இலக்குக்கு அழைத்துச் செல்லுமாறு கேட்டுக்கொள்கிறார். நீங்கள் உங்கள் இடத்தை அடையும் நேரத்தில், அந்த கோடீஸ்வரர் உங்களை அழைத்து கேட்டார் தம்பி, நீங்கள் வசதியாக வந்துவிட்டீர்களா என்று..
குருஜி கேட்டார், இப்போது சொல்லுங்கள் இந்த மனிதரை எவ்வளவு காலம் நினைவில் வைத்திருப்பீர்கள்?
அந்த இளைஞன் சொன்னான் - குருஜி.. அவர் இவ்வளவு பெரிய கோடீஸ்வரராக இருந்தும் பணிவான மற்றும் அன்பான நடத்தைக்காக அந்த நபரை என் வாழ்நாளில் மறக்கவே முடியாது. இளைஞர்கள் கூட்டத்தில் உரையாற்றிய குருஜி - "இதுதான் வாழ்க்கையின் யதார்த்தம்" என்றார்.
"அழகான முகம் குறுகிய காலத்திற்கு நினைவில் இருக்கும், ஆனால் அழகான நடத்தை வாழ்நாள் முழுவதும் நினைவில் இருக்கும்."
*உங்கள் முகம் மற்றும் உடலின் அழகை விட உங்கள் நடத்தையின் அழகில் கவனம் செலுத்துங்கள். வாழ்க்கை உங்களுக்கு சுவாரஸ்யமாகவும், மறக்க முடியாத அழகாகவும் மற்றவர்களுக்கு உத்வேகமாகவும் மாறும்*
ஓம் நமசிவாய நம ஓம்

மந்திர அட்சர எழுத்துகள் நிகழ்த்தும் தாக்கங்கள்:

 


அகத்தியர் மந்திர வாள் என்றும் அபூர்வ மந்திர நூலில் அகத்தியர் சொன்ன அபூர்வ மந்திர அட்சர எழுத்துகள் நிகழ்த்தும் தாக்கங்கள்:

(1) "நசி, மசி" என்றிட எமனையும்
வெல்லலாம்.
(2) "மசி, நசி" என்றிட மன்னனும்
மாண்டிடுவான்.
(3) "நங், நங்" நன்மைகள் உண்டாகும்.
(4) "அங் அங்" என்றால் மண்டலத்தில் இடி விழாது.
(5) "சிங், சிங்" என்றால் மிருகங்கள் ஓடும்.
(6) "வங், வங்" என்றால் உலகமெல்லாம் வசியமாகும்.
(7) "வசி, வசி" என்றால் பீடைகள்
விலகும்.
(😎 "மசி, மசி" என்றால் சகல
விஷங்களும் இறங்கும்.
(9) "அசி, அசி" என்றால்கேட்பவை
அமோகமாக பெருகும்.
(10) "உசி, உசி" என்றால் கேட்பவை யாவும் ஒழிந்து போகும்.
(11) "மசி, நசி, நசி, மசி" என்றால் பேய் பிசாசுகள் ஓடும்.
(12) "சிவ, சிவ" என்றால் தீவினைகள் அழியும்.
இது போன்ற எத்தனையோ ரகசிய பொக்கிஷங்கள் சித்தர்களால் உலக மக்களின் நலன் கருதி அருளப்பட்டன.
(1) மோகன மந்திரம்: "ஓம் ரீங் மோகய! மோகய!"
(2) சத்ருக்கள் வசியம்: "ஓம் ரீங் வசி!வசி!"
(3) நோய்கள் தீர: "ஓம் ரீங் நசி நசி"
(4) துஷ்ட மிருகம் ஓட "ஓம் ரீங் அங்"
(5) இகபர சித்தி: "ஓம் ரீங் சிவயவசி"
(6) தம்பனம்: "ஓம் ரீங் ஸ்தம்பய!
ஸ்தம்பய!"
(7) அகர்ஷனம்: "ஓம் ரீங் ஆகர்ஸ்ய!
ஆகர்ஸ்ய!"
(😎 உச்சாடனம் நோய்கள் தீர – "ஓம் ரீங் உச்சாடய! உச்சாடய!"
(9) செளபாக்கியம் பெற:
"ஓம் ரீங் சிவசிவ!"
(10) தெய்வ அருள் பெற:
"ஓம் சிவ சிவ ஓம்!"
(12) சத்ரு சம்ஹாரா மந்திரம்:
"ஓம் ரீங் மசி நசி நசி மசி"
(13) நெற்றிகண் மந்திரம்:
"ஓம் லம் சூஷ்மூநாயா நமக"
சிவ மந்திரப் பலன்கள்
---------------------------------
(01) "நங்சிவாயநம" - திருமணம் நிறைவேறும்.
(02) "அங்சிவாயநம" - தேக நோய் நீங்கும், ஆயுள் வளரும், விருத்தியாகம்.
(03) "வங்சிவாயநம" - யோக சித்திகள் பெறலாம்.
(04) "ஓம்அங்சிவாய" - எதற்கும் நிவாரணம் கிட்டும்.
(05) "கிலிநமசிவாய" - வசிய சக்திகள் வந்தடையும்
(06) "ஹிரீநமசிவாய" - விரும்பியது நிறைவேறும்
(07)"ஐயும்நமசிவாய" -புத்தி வித்தை மேம்படும்.
(08) "நமசிவாய" - பேரருள், அமுதம் கிட்டும்.
(09) "உங்யுநமசிவாய" - வியாதிகள் விலகும்
(10) "கிலியுநமசிவாய" - நாடியது சித்திக்கும்.
(11) "சிங்வங்நமசிவாய" - கடன்கள் தீரும்.
(12) "நமசிவாயவங்" - பூமி கிடைக்கும்.
(13) "சவ்வுஞ்சிவாய" - சந்தான பாக்யம் ஏற்படும்.
(14) "சிங்றீங்" - வேதானந்த ஞானியாவார்
(15) "உங்றீம்" - ரிஷிகள் ஆவார்.
(16) "சிவாயநம" - மோட்சத்திற்கு வழி வகுக்கும்.
(17) "அங்நங் சிவாய" - தேக வளம் ஏற்படும்
(18) "அவ்வுஞ் சிவாயநம" - சிவ தரிசனம் காணலாம்
(19)"ஓம் நமசிவாய" - காலனை வெல்லலாம்.
(20) "லங்ஸ்ரீறியுங் நமசிவாய" - விளைச்சல் மேம்படும்.
(21) "ஓம் நமசிவாய" - வாணிபங்கள் மேன்மையுறும்.
(22) "ஓம் அங்உங்சிவாயநம" - வாழ்வு உயரும், வளம் பெருகும்.
(23) "ஓம் ஸ்ரீறியும் சிவாயநம" - அரச போகங்கள் கிடைக்கும்.
(24) "ஓம் நமசிவாய" - சிரரோகம் நீங்கும்.
(25) "ஓங் அங்சிவாய நம" - அக்னி குளிர்ச்சியைத் தரும்.
எந்த மந்திரத்தை விரும்புகிறோமோ அந்த மந்திரத்தை மட்டும் எடுத்துக் கொண்டு தினமும் 108 முறையோ 1008 முறையோ ஜெபம் செய்ய ஆரம்பியுங்கள். உங்கள் பக்தி, சிரத்தைக்கு ஏற்ப பலன் கிடைக்கும்.
மேற்கண்ட மந்திரங்களை தங்கள் தேவைகளுக்கு ஏற்ப உருவேற்றி ஜெபிக்க வேண்டும். மந்திரம் நன்மை செயலுக்குத்தான் பயன் படுத்த வேண்டும். மந்திரம் நன்கு செயல்பட சைவ உணவு மற்றும் சில யோக பயிற்சிகள் முக்கியம்.....
ஓம் சிவ-சிவ ஓம்
ஓம் சிவ-சிவ ஓம்
ஓம் சிவ-சிவ ஓம்

Featured Post

ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதைகள் இருக்கிறது

ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதைகள் இருக்கிறது என்பதையும், ஓர் பலாப்பழத்தைப் பிளக்காமல் அதன் உள்ளிருக்கும் சுளையின் எண்ணிக்கையைய...