Thursday, March 31, 2022

நம் வம்சம் வாழையடி வாழையாய் வளர அமாவாசையில் குலதெய்வ வழிபாடு !

 நம் வம்சம் வாழையடி வாழையாய் வளர அமாவாசையில் குலதெய்வ வழிபாடு !

இன்று பங்குனி 17, மார்ச் 31/3/2022
சிறப்பு: அமாவாசை விரதம்
வம்சத்தை வாழையடி வாழையாய் வளர செய்யும் குல தெய்வத்தையும் அமாவாசை நாளில் வழிபடுவது சிறப்பு.ஒவ்வொரு அமாவாசைக்கும் இந்த பிரபஞ்சம் முழுவதும் விசேஷமான சக்திகள் நிறைந்து காணப்படும் என்பது நியதி.அமாவாசையில் வழிபடும் வழிபாட்டு முறைகள் விசேஷமான பலன்களைத் கொடுக்கின்றன.
பங்குனி அமாவாசையில் குலதெய்வ கோவிலுக்கு சென்று வழிபடுவதும் அல்லது அவருடைய படத்தை வீட்டில் வைத்து தூப, தீப, ஆரத்தி காண்பித்து வழிபடுவதும் குலதெய்வ சாபத்தையும், தோஷத்தையும் போக்கும்.
அமாவாசையில் உணவேதும் உண்ணாமல் தினமும் மந்திரங்களை உச்சரித்து விரதமிருந்து வழிபட்டு வந்தால் சகல சௌபாக்கியங்களும் உண்டாகும் என்கிறது சாஸ்திரம். அமாவாசை விரதம் இருக்க சிறந்த நாளாக கருதப்படுகிறது. அன்றைய நாளில் பிரம்ம முகூர்த்தத்தில் எழுவது என்பது விசேஷ சக்திகளை கொடுக்கும். இது உங்களிடம் இருக்கும் கெட்ட சக்திகளை விலகி ஓட செய்யும்.
வீட்டை சுத்தம் செய்ய அன்றைய நாளில் தண்ணீருடன் சிறிது அளவு கல் உப்பு சேர்த்து துடைத்து எடுக்கலாம். காலை, மாலை இருவேளையும் பூஜை அறையில் விளக்கேற்றி வைக்க வேண்டும்.
அமாவாசை நாளில் விரதம் இருப்பவர்கள், விரதம் இல்லாதவர்கள் என்று யாராக இருந்தாலும் புலால் உணவைத் தவிர்ப்பது நல்லது. பூண்டு, வெங்காயம் போன்ற பொருட்களை சேர்த்த சைவ உணவை சேர்த்து தவிர்க்க வேண்டும். அமாவாசை தினத்தில் சாப்பிட கூடாத பொருட்கள் இது ஆகும்.
குலதெய்வ அருள் பெறவும் அமாவாசை நாளில் குலதெய்வ வழிபாடு செய்வது நல்லது.வீட்டில் நேர்மறை ஆற்றல்கள் அதிகரிக்க அமாவாசை நாளில் மந்திர ஸ்லோகங்களை உச்சரிப்பதும் அல்லது ஒலிக்க விடுவதும் செய்ய வேண்டும்.
உங்களுக்கு தெரிந்த சிறு சிறு மந்திரங்களை கூட அமாவாசை நாளில் உச்சரித்து பாருங்கள். நல்ல பலன்கள் எல்லாம் கிடைக்கும். பொன், பொருள் சேரவும், சகல சம்பத்தும் கிடைக்கும்.
அமாவாசை நாளில் முன்னோர்களின் ஆசி பெறுவது, குல தெய்வத்தை வணங்குதல், தினமும் வீட்டில் விளக்கேற்றி வழிபடுவதால், வீட்டில் இருக்கும் தரித்திர நிலை நீங்கும். திருமண தாமதம், ஏழ்மை விலகி உங்கள் அனைத்து முயற்சிக்கும் நல்ல வெற்றி ஏற்படும்.
No photo description available.



வாழ்வில் ஒருமுறையாவது சென்று தரிசிக்கவேண்டிய சிவஸ்தலம்..!

 வாழ்வில் ஒருமுறையாவது சென்று தரிசிக்கவேண்டிய சிவஸ்தலம்..!

சங்கரன்கோயில் சங்கர நாராயணர் கோயில்.
ஒரு வருடம் பழமும்,
ஒரு வருடம் சருகும்,
ஒரு வருடம் தண்ணீரும்,
ஒரு வருடம் அதுவும் கூட
இல்லாமல் விரதமிருந்தார்கள் அந்தக் கால ரிஷிகள்..
ஆனால் தமிழ்நாட்டில் ஒரு சிவஸ்தலம் இருக்கிறது.
எதுவுமே இங்கு தேவையில்லை.
ஒரே ஒரு வேளை பட்டினி இருந்து இத்தலத்து இறைவனை வணங்கினாலே போதும்.
பல நூறு யாகங்கள் செய்த பலன் கிடைத்து விடும்.
இங்கு ஒரு நாள் தங்கினால்
முற்பிறவியில் செய்த பாவமும்,
இரண்டு நாள் தங்கினால்
இப்பிறப்பில் செய்த பாவமும்,
மூன்று நாள் தங்கினால் மறுபிறவியில் பாவமே செய்ய இயலாத மன நிலையும் ஏற்படும்..
ஞாயிறன்று இங்கு சூரியனை
மனதில் நினைத்து விரதமிருப்பவர் கண் வியாதியின்றி இருப்பர்.
திங்களன்று சந்திரனை நினைத்து விரதமிருப்பவர் வாழ்வுக்குப் பின் சிவலோகம் அடைவர்.
செவ்வாயன்று விரதமிருப்பவர் நோய் மற்றும் சனிதோஷத்தில் இருந்து நிவர்த்தி பெறுவர்.
புதனன்று விரதமிருப்பவர் கல்வியில் சிறப்பாகத் திகழ்வர்.
வியாழனன்று விரதமிருந்தால் ஆசிரியர் பதவி பெறலாம்.
வெள்ளியன்று விரதமிருப்போர் இந்திரனைப்போல் செல்வவளத்துடன் வாழ்வர்.
சனிக்கிழமை விரதமிருப்பவர் பொறாமை முதலிய துர்குணங்கள் நீங்கப்பெறுவர்.
இந்த ஸ்தலத்திற்கு வந்தால் போதும் கொடிய பாவங்கள் நீங்கிவிடும்.
இக்கோயிலில் புற்றுமண்ணே பிரசாதம். இதை அத்தலத்து இறைவனே தருகிறார் என்ற பெருமைக்குரிது இத்தலம்.
இதற்கு புன்னைவனம் சீரரசை
என்றும் பெயருண்டு.
இங்கே ஒரு சிவனடியாருக்கு தானம் செய்தால் மற்ற தலங்களில் லட்சம் சிவனடியார்களுக்கு சேவை செய்த பலன் கிடைக்கும்...
இங்குள்ள குளத்தில் நீராடினால் குழந்தை பாக்கியம் உண்டு...
இங்கே தன் மகளுக்கு திருமணம் முடித்தால் கூட ஆயிரம் கன்னிகா தானம் செய்த பாக்கியம் கிடைக்கும்...
இவற்றை வேதவாக்கியமென நம்புவோர் மோட்சம் அடைவர் என்கிறார்
புராணக்கதைகளை உலகுக்கு அளித்த சூதமுனிவர்.
சங்கரனாகிய சிவனும்
நாராயணனாகிய திருமாலும் இணைந்திருக்கும் சங்கர நாராயணர் கோயில் தான் அது.
உக்கிரப் பாண்டியன் என்னும் மன்னனால் கட்டப்பட்ட இக்கோயிலின் தொன்மை கி.பி.1022 ( கோவிலமைப்பு ). இக்கோவிலில் ஆடித் தவசு விழா ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது
கோமதி அம்பாள் சமேத சங்கரலிங்க சுவாமி கோயில்…
இக்கோயிலின் இறைவன் சங்கரலிங்கசுவாமி; இறைவி கோமதி அம்மன் என்ற ஆவுடையம்மன்
திருநெல்வேலி மாவட்டம் சங்கரன் கோவிலில் அமைந்துள்ளது சங்கரநயினார் கோவில்.
இத்தலத்திற்கு
எப்படி செல்வது?
சங்கரன்கோவில், திருநெல்வேலியில் இருந்து சுமார் 58 கி.மீ தொலைவில் உள்ளது..
No photo description available.



மடிச்சங்கு

 மடிச்சங்கு

சங்குகள் பலவகைப்படும்; அவற்றுள் வலம்புரிச்சங்கு உயர்ந்ததாகும்; அதனை விட ஆயிரம் மடங்கு உயர்ந்தது '' மடிச்சங்கு ''. இச் சங்கின் மேற்புறம் விரல் போன்ற நீண்ட நாளம் என்ற அமைப்புகள் இருக்கும்.
இவற்றில் நீண்ட குழல் போன்ற துவாரங்களும் இருக்கும். இச்சங்கில் பாலை ஊற்றினால், அது மழை போன்று மெல்லிய தாரையாக நாளத்தின் வழியே வெளிப்படும். அப்போது அந்தச் சங்கு, பார்ப்பதற்கு பசுவின் மடி தோன்றும், அதன் மேலுள்ள நாளங்கள் பசுவின் மடிக்காம்புகள் போன்றும் காட்சியளிக்கும்.
இச்சங்கை சிவலிங்கத்தின் திருமுடி மேல் பிடித்துக் கொண்டு அதில் பாலை வார்த்து அபிஷேகம் செய்வார்கள். இப்படி அபிஷேகம் செய்யும் காட்சி, பசு தானே இறைவன் மீது பாலைப் பொழிவது போல இருக்கும் ! அப்போது அமிர்தவர்ஷிணி ராகம் இசைப்பர் ; பசுபதி திருவிருத்தம் ஓதுவர்; இச்சங்கை '' கோமடிச்சங்கு '' என்றும் கூறுவர் ; இதைக் கொண்டு இறைவனை முழுக்காட்டுவது, கோடி மடங்கு நன்மை தரும் என்பர் ;
வலம்புரிச் சங்கினை திருமகளாக போற்றுவதைப் போல , மடிச்சங்கினை பார்வதி தேவியாக போற்றுகின்றனர் !
No photo description available.


இன்று வரை உயிரியல் ரீதியாக அழியாத (immortal) ஒரே உயிரினம்:

 இன்று வரை உயிரியல் ரீதியாக அழியாத (immortal) ஒரே உயிரினம்:

ராவணன், கும்பகர்ணன், விபீஷணன் ஆகியோர் அரக்க சகோதரர்கள். இவர்கள் மூவரும் தங்களுக்கென தனித்தன்மையான வரத்தைப் பெற வேண்டும் என்ற நோக்கில் பிரம்ம தேவரை நினைத்து கடுமையான தவம் இருக்க முடிவு செய்தனர்.
உங்களின் தவத்தால் என்னை மகிழ்ச்சி அடையச்செய்த உங்களுக்கு வரம் தர பிரம்மா வந்துள்ளேன். கண்களைத் திறக்கவும் என்றார்.
இதில் ராவணன் “எனக்கு மரணமில்லாத, அழியாத வரம் வேண்டும் ஐயனே” என்றான்.
அதற்கு பிரம்மா, “மகனே நீ விரும்பும் எத்தனை வரங்கள் வேண்டுமானாலும் என்னால் தர முடியும் ஆனால் சாகா வரம் மட்டும் தன்னால் அளிக்க முடியாது. அதற்கு பதிலாக வேறு ஏதேனும் வரத்தைக் கேள்” என்றார்.
பிரம்மன் கூட அளிக்க முடியாத வரத்தை இங்கு பூமியில் உள்ள ஒரு உயிரினம் பெற்றிருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?
ஆம் உள்ளது "Turritopsis dohrnii"
அது எப்படி சாத்தியம் என்று உங்களுக்கு தோன்றலாம்
வயதாகிவிடும் எண்ணத்தை யாரும் விரும்புவதில்லை. வயதான செயல்முறையிலிருந்து தப்பிக்க அல்லது தாமதப்படுத்த நமது பல மனித முயற்சிகள் இருந்தபோதிலும், இது வாழ்க்கையின் தவிர்க்க முடியாத பகுதியாகத் தெரிகிறது.இருப்பினும், ஒரு சில இனங்கள் வயதான செயல்முறையிலிருந்து முற்றிலும் தப்பிக்க முடியும்.
செல்லுலார் அளவில் , செல்கள் பிளவுபடுவதை நிறுத்தி இறுதியில் அவை இறந்துவிடுகின்றன.
இந்த வயது மூப்பு என்பது ஒரு உயிரினத்துக்கு அல்ல தோல் தசை போன்ற செல்களால் ஆன அனைத்திற்கும் பொருந்தும்.
நீங்கள் நினைப்பது போல் சாகாம் வரம் பெறவில்லை மாறாக உயிரியல் ரீதியாக
இந்த உயிரினத்துக்கு இறப்பு என்பது கிடையாது.
இந்த சிறிய, தெளிவாகத் தோற்றத்தை கொண்ட இந்த ஜெல்லி பிஷ் Turritopsis dohrnii வகைதான் நீங்கள் தேடிக்கொண்டிருக்கும் உயிரினம் உலகெங்கிலும் உள்ள கடல்களில் காணப்படுகிறது , மேலும் அவற்றின் வாழ்க்கைச் சுழற்சியின் முந்தைய கட்டத்திற்கு திரும்புவதன் மூலம் எல்லையற்ற முறை வாழ்வை திருப்ப முடியும்.
ஒரு புதிய ஜெல்லிமீன் வாழ்க்கை கருவுற்ற முட்டையுடன் தொடங்குகிறது, இது ஒரு பிளானுலா எனப்படும் லார்வா கட்டமாக வளர்கிறது. விரைவான நீச்சலுக்குப் பிறகு, பிளானுலா ஒரு மேற்பரப்பில் (ஒரு பாறை, அல்லது கடல் தளம், அல்லது ஒரு படகின் ஹல் போன்றவை) ஒட்டிக்கொள்கிறது, அங்கு அது ஒரு பாலிபாக உருவாகிறது: ஒரு முனையில் ஒரு வாயுடன் ஒரு குழாய் வடிவ அமைப்பு மற்றும் ஒரு வகையான கால் கொண்டுள்ளது மறுபுறம். இது சில நேரம் இடத்தில் சிக்கிக் கொள்கிறது , பாலிப்களின் ஒருவருக்கொருவர் உணவுக் குழாய்களைப் பகிர்ந்து கொள்ளும் சிறிய காலனியாக வளர்கிறது.
இறுதியில், ஜெல்லிமீன் இனங்களைப் பொறுத்து, இந்த பாலிப்களில் ‘மொட்டு’ என்று அழைக்கப்படும் ஒரு வளர்ச்சியை உருவாக்கும், அல்லது அது ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டுள்ள தனித்தனி பிரிவுகளை உருவாக்கிக்கொள்ளும், பின்னர் அவை காலனியின் மற்ற பகுதிகளிலிருந்து பிரிந்து செல்லக்கூடும். இந்த செயல்முறை ஜெல்லிமீன் வாழ்க்கைச் சுழற்சியின் அடுத்த கட்டங்களுக்கு காரணமாக அமைகிறது.எபிரா (ஒரு சிறிய ஜெல்லிமீன்) மற்றும் மெடுசா, இது பாலியல் இனப்பெருக்கம் செய்யக்கூடிய முழுமையான வயதுவந்த நிலை பெற்றிருக்கும்.
மற்ற ஜல்லி மீன்களுக்கு இதுவே கடைசி ஆகும்.
ஆனால் நமது உயிரினத்துக்கு அப்படி கிடையாது.
இது பட்டினி அல்லது காயம் போன்ற ஒருவித சுற்றுச்சூழல் அழுத்தத்தை எதிர்கொள்ளும்போது, ​​இதன் திசுக்களின் ஒரு சிறிய குமிழியாக மாறக்கூடும், பின்னர் அது வாழ்க்கையின் முதிர்ச்சியடையாத பாலிப் கட்டமாக மாறுகிறது. இது ஒரு பட்டாம்பூச்சி மீண்டும் ஒரு கம்பளிப்பூச்சியாக மாறுவது போன்றது.
இதன் வாழ்க்கை சுழற்சி முறை பதிவில் உள்ள படத்தில் இணைத்துள்ளேன்
அவை இன்னும் வேட்டையாடுபவர்களால் இறையாக அல்லது வேறு வழிகளால் கொல்லப்படலாம். இருப்பினும், சுற்றுச்சூழல் அழுத்தத்திற்கு பதிலளிக்கும் விதமாக வாழ்க்கை நிலைகளுக்கு இடையில் முன்னும் பின்னுமாக மாறுவதற்கான அவைகளின் திறன், கோட்பாட்டில் என்றென்றும் வாழ முடியும் என்பதாகும்.

ஆண்டி சுனையின் மகிமையையும் ...அதில் ஏன் குளிக்க வேண்டாம்

 அன்பு ஆன்மீக உடன் பிறப்புக்களுக்கு வணக்கம்

🙏...நான் ஈசன் மகன் சிம்பு...நான் கூறியவாறு வெள்ளியங்கிரி ஆண்டி சுனையின் மகிமையையும் ...அதில் ஏன் குளிக்க வேண்டாம் எனவும் விளக்கியுள்ளேன்...இது இப்படியே தொடருமாயின்...என் என்னப்படி வரும் சித்ரா பௌர்ணிமியன்று பல லட்சக்கணக்கான பக்தர்கள் மலையேறுவர் அவர்கள் தாகத்தால் தவிக்கும் நிலை ஏற்படின்...அதன் விளைவு யாரை சாறும்...எனவே ஆண்டி சுனையை தாகசாந்திக்காக பயன்படுத்துவோம்...மலையை பாதுகாப்போம் தூய்மையாக வைத்திருப்போம்...நீரின்றி அமையாது உலகு...
சிவாய நம...
அதிகம் பகிருங்கள்...🙏



Monday, March 28, 2022

இறைவனை வணங்கும்போது

 இறைவனை வணங்கும்போது சிலர் கைகளை தலைக்குமேல் தூக்கி வணங்குகிறார்கள். சிலர் கைகளைக் குவித்து முகத்திற்கு அருகில் வைத்து வணங்குகிறார்கள். எது சரியானது?

இவை இரண்டு முறை மட்டுமல்லாது இன்னும் சிலர் நெஞ்சுக்கு நேராகக் கைகளைக் குவித்து வணங்குவர். இவை அனைத்துமே சரியானதுதான்.
கைகளை தலைக்குமேல் தூக்கி வணங்குவது என்பது உன்னை விட்டால் எனக்கு வேறு யாருமில்லை, நீ ஒருவனே எனக்குத் துணை என்று இறைவனைச் சரண் அடைவதன் வெளிப்பாடு. திரௌபதி கண்ணனைச் சரணடைந்தாளே அப்படி.
முகத்திற்கு அருகில் கைகளை குவித்து தலை குனிந்து வணங்குவது என்பது அடக்கத்தின் வெளிப்பாடு. உனக்குக் கீழ்தான் உலகமே இயங்குகிறது என்ற பொருளில் சாதாரணமாக எல்லோரும் வணங்குகின்ற முறை.
நெஞ்சிற்கு நேராக கைகளைக் குவித்து வணங்குவது என்பது இறைவா உன்னை என் நெஞ்சிற்குள்ளேயே வைத்திருக்கிறேன், எப்பொழுதும் என்னுடனேயே இருந்து என்னைக் காப்பாய் என்ற எண்ணத்தினைக் குறிக்கும்.
இவ்வாறாக அவரவர் எண்ணத்திற்குத் தக்கவாறு வணங்கும் முறையானது வேறுபடுகிறது.
May be an image of 1 person and text




கேது தரும் தொழில்களும்

 கேது தசாவும்

✈கேது தரும் தொழில்களும்
நவகிரகங்களில் மிகமிக வலிமையான கிரகம் கேதுவாகும்.
கேதுவுக்கு சொந்த வீடு இல்லாததால் அமர்ந்த இடம்,இணைந்த கிரகம், பார்வை செய்த கிரகம் ஆகியவற்றை கொண்டு பலன் அறிய வேண்டும்.
எல்லாம் அவன் செயல் என்று பற்று இல்லா நிலையையும்
ஆன்மீக எண்ணத்தையும் வாரி வழங்கும் கேது பகவான்
7 வருடங்கள் சுபத்துவமாக இருந்தால் நல்ல பலனையும்
பாவத்துவமாக இருந்தால்
விரக்தி, பைத்தியம்,வறுமை
தற்கொலை,தொழுநோய்,
நாய்கடி,பாம்புகடி மணமுறிவு
போன்ற கெடுபலனையும் வழங்குவார்.
கேது என்றால் சிதைத்தல் என்று பொருள் கொள்ளலாம் அதாவது எந்த பாவத்தில் உள்ளாரோ அந்த பாவக பலனை குறைக்கும்.
💢கேது எங்கு எப்படி அமர்ந்தால் யோகம்:
🌹லக்னத்துக்கு 3,6,11 ஆம் இடங்களில் கேது அமர்தல்
🌹கன்னி,விருட்சிகம்,கும்பத்தில் கேது அமர்தல்
🌹மேஷம்,கடகம்,சிம்மம்,விருட்சிகம்
தனுசு,மீனத்தை லக்னமாக கெண்டவர்களுக்கு பெரிய பாதகம் இருக்காது.
🌹கேதுவுக்கு இடம் கொடுத்த கிரகம் வலிமை அடைய வேண்டும்
🌹இயற்கை சுபர்களான குரு,சுக்கிரன்,வளர்பிறை சந்திரன் (கெடாமல்) கேதுவை பார்வை செய்தல்
💢கேது தரும் தொழில் அமைப்பு
ஒருவருடைய லக்னத்துக்கு
🌷 10மிடத்தில் கேது இருந்தாலோ (அ)
🌷பத்தாமிட அதிபதியுடன் இணைந்து இருந்தாலோ(அ)
🌷பத்தாம் அதிபதி கேதுவை பார்த்தாலோ
கீழ்கண்ட தொழில் செய்தால் வெற்றி பெறலாம்.
வேறு கிரகங்களின் தொடர்பு இருந்தால் சிறிது மாறுபடும்.
இதில் ஆன்மீகம் என்றால் ஆன்மீக சம்மந்தமான அனைத்து விஷயங்கள் அதாவது
யோகிகள்,அருளாளர்கள்,ஆன்மிக பொருள் விற்பனையாளர், கடவுள் சிலை வடித்தல், கோவில் திருப்பணி செய்யும் ஸ்தபதியார்,பூசகர்,பக்தி பாடல் பாடும் பாடகர்... என்று அனைத்து விஷயங்களையும் விரிவாக்கி கொள்ள வேண்டும்.
🌺ஆன்மீகம்
🌺வெளிநாடு
🌺தலை முடி
🌺மருத்துவம்
🌺எலக்டிரிகல்
🌺புலனாய்வு துறை
🌺சன்னியாசம்
🌺போதைப்பொருள்
🌺நூற்பாலை
🌺மாந்தீரிகம்
🌺ஐல்லி
🌺சட்ட விரோத தொழில்
🌺வெடி மருந்து
🌺போதைப் பொருள்
அடிமைத் தொழிலா,சுயதொழிலா என்று கண்டறிந்து செயல்பட்டால் முன்னேற்றம் அடையலாம்.
கேது தசாவால் துன்ப படுபவர்கள் கேதுவின் அதிதேவதையான வினாயகரின் காயத்திரி மந்திரத்தை பாராயணம் செய்தால் கெடுபலன் குறையும்.
மயிலாடுதுறை அருகில் உள்ள கீழ்பெரும்பள்ளம் கேது ஸ்தலத்தில் பரிகாரம் செய்து பலன் பெறலாம்.
நன்றி.

Featured Post

ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதைகள் இருக்கிறது

ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதைகள் இருக்கிறது என்பதையும், ஓர் பலாப்பழத்தைப் பிளக்காமல் அதன் உள்ளிருக்கும் சுளையின் எண்ணிக்கையைய...