Monday, March 28, 2022

இந்தியாவின் மிகபெரிய கோயில் எது தெரியுமா?

 இந்தியாவின் மிகபெரிய கோயில் எது தெரியுமா?

தெரிந்து கொள்வோம்
33 ஏக்கர் (14 லட்சம் சதுரடி) நிலப்பரப்பில்
திருவாரூரில் அமைந்துள்ள,
தியாகராஜர் கோயில்தான் இந்தியாவின்
மிகப் பெரிய கோயிலாகும்!
🏵️ 9 ராஜ கோபுரங்கள்,
🏵️ 80 விமானங்கள்,
🏵️ 12 பெரிய மதில்கள்,
🏵 13 மிகப்பெரிய மண்டபங்கள்,
🏵️ 15 தீர்த்தக்கிணறுகள்,
🏵️ 3 நந்தவனங்கள்,
🏵️3 பெரிய பிரகாரங்கள்,
🏵️ 365 லிங்கங்கள் (இவை வருடத்தின் மொத்த நாட்களை குறிப்பதாக சொல்கிறார்கள்),
🏵️ 100க்கும் மேற்பட்ட சன்னதிகள்,
🏵️ 86 விநாயகர் சிலைகள்,
🏵️ 24க்கும் மேற்பட்ட உள் கோயில்கள் என 33 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாக விளங்குகிறது.
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
சோழர்கள் கட்டிய கோவில் இது. சோழர்கள் மட்டுமல்லாமல், பல்லவர்கள், பாண்டியர்கள், விஜயநகர், தஞ்சை நாயக்கர் மற்றும் மராத்திய மன்னர்களும் தத்தம் ஆட்சியில் இக்கோயிலை சிறப்பாக நிர்வகித்துள்ளனர்.
*திருவாரூர் கோவிலுக்கு அழகு தருவது சுமார் 120 அடி உயரமுள்ள அதன் ராஜகோபுரமாகும்.*
தெற்கு வடக்காக 656 அடி அகலமும்,
கிழக்கு மேற்காக 846 அடி நீளமும்,
சுமார் 30 அடி உயரமுள்ள மதிற்சுவரை
நான்கு புறமும் கொண்டுள்ள நிலப்பரப்பில் ஆலயம் அமைந்துள்ளது.❗
நான்கு புறமும் கோபுரங்களையும், தேர் ஓடும் வீதியையும் சேர்த்து ஐந்து பிராகாரங்களுடனும் இவ்வாலயம் அமைந்துள்ளது.
ஸ்வாமியின் நடனம் அஜபா நடனம்.
ஸ்வாமி திருமேனி தரிசனம் கிடையாது. மார்கழி திருவாதிரை ஒரு பாதமும், பங்குனி உத்திரம் மற்றொறு பாதமும் தரிசனம் கிடைக்கும்.🙏
திருமேனியை யாரும் பார்த்தது கிடையாது. பார்த்தால் கண் குருடாகிவிடும் என்பதால் யாருக்கும் தரிசனமும் கிடையாது❗
அர்ச்சகர்களும் பார்த்தது கிடையாது.
கிழக்கு கோபுரத்தின் உள்புறம் உள்ள 1000 கல்தூண்கள், முன்காலத்தில், திருவிழாக்காலங்களில் பந்தல் போடுவதற்காக அமைக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் கோவில், அதன் முன்புறமுள்ள கமலாலயம் குளம், கோவிலைச் சார்ந்த தோட்டம் ஆகியவை ஒவ்வொன்றும் 5 வேலி நிலப்பரப்பில் அமைந்துள்ளதான சிறப்பு இத்தலத்திற்கு உண்டு.
*கோயில் ஐந்து வேலி,*
*குளம் ஐந்து வேலி,*
*செங்கழுநீர் ஓடை ஐந்து வேலி*
என்ற பழமொழி மூலம் இதன் சிறப்பை உணரலாம். (ஐந்து வேலி என்பது 1000 அடி நீளம் 700 அடி அகலம்).
கோவிலின் மொத்த பரப்பளவு 33 ஏக்கர் ஆகும். அதாவது பதினாலு லட்சத்து முப்பத்து ஏழாயிரத்து நானுற்று என்பது
(1437480 ) சதுர அடியாகும்
இவ்வளவு பிரமாண்டமான ஆலயத்தை முழுமையாக தரிசனம் செய்து முடிக்க வேண்டுமானால் ஒரு நாள் முழுவதும் செலவிட்டால் தான் முடியும்.
*சிவாயநம திருச்சிற்றம்பலம்.*

பல் வலியை நொடியில் போக்க

தீராத பல் வலியை நொடியில் போக்க வேண்டுமா? இதோ அற்புதமான 10 இயற்கை மருத்துவ முறைகள்!
நம்மில் சிலருக்கும் திடீரென அடிக்கடி பல்வலி வருவதுண்டு
நம் பற்களின் இரண்டு பாதுகாக்கும் கவசங்கள் இனாமல், டென்டின் உள்ளது. இரண்டையும் தாண்டி சொத்தை ஆழமாக பரவும் போது வலி ஏற்படுகின்றது. இதனை எளிதில் சரி செய்ய கீழ் குறிப்பிடப்பட்டுள்ள முறைகளை பின்பற்றினால் போதும். தற்போது அவற்றை பார்ப்போம்.
• மிளகுத் தூளுடன் உப்பு சேர்த்துப் பல் விளக்கி வர சொத்தைப் பல், பல்வலி, ஈறு வலி, வாய் துர்நாற்றம் போகும்.
• ஈறுகளில் வீக்கம் மற்றும் வலிக்கு பப்பாளிப் பாலை வீக்கத்தில் தடவி, இலேசாகத் தேய்க்க உள்ளிருந்த கெட்டநீர் வெளியேறி வலியும் வீக்கமும் போகும்.
• பல் வலி உள்ள போது பல் துலக்கியபின், ஒரு நெல்லிக்காயை நன்கு மென்று தின்னவும்.
• பிரம்ம தண்டு இலையை எரித்து சாம்பலாக்கி பல் தேய்க்க, பல் ஆட்டம், பல் சொத்தை, பல் கறை, பல்லில் இரத்தம் வடிதல் எல்லாமே தீரும்.
• ஆலமரப் பாலை பற்கள் மீது தடவினால் பல் ஆட்டம் நிற்கும்.ஆயில் புல்லிங் தினம் செய்ய பல் மற்றும் ஈறுகளில் ஏற்படும் வைரஸ், பாக்டீரியா தொற்றிலிருந்து விடுபடலாம்.
• கோவைப்பழம் அடிக்கடி சாப்பிட பல் பலப்படும். நந்தியாவட்டை வேரை வாயிலிட்டு மென்று துப்பவும்.ஒமத்தை நீர்விட்டு அரைத்து களி போல் கிளறி இளஞ்சூட்டில் பற்றுப்போடவும்.
• ஒரு பல் பூண்டை நசுக்கி, வலி உள்ள இடத்தில் வைக்கலாம். இதுபோல் கிராம்பை நசுக்கியும் வைக்கலாம்.)
• வாகை மரப் பட்டையை எரித்துப் பொடித்து பல் துலக்க ஈறு நோய் மற்றும் பல் வலி குணமாகும்.கருவேலம் பட்டைப் பொடியால் பல் துலக்கவும்.
• மாசிக்காயைத் தூளாக்கி, நீரில் கொதிக்க வைத்து கொப்பளிக்க ஈறு பலமடையும்.அசோக மரப் பட்டைப் பொடியுடன் உப்பு சேர்த்து விளக்கவும்.
• கடுகை பொடி செய்து வலிக்கும் இடத்தில் பற்று போடவும். வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவவும்.
நன்றிகளும்
பிரியங்களும்.

நாளை தேய்பிறை பிரதோஷம் 29.03.2022

 நாளை தேய்பிறை பிரதோஷம் 29.03.2022

செவ்வாய் பிரதோஷம்
செவ்வாய் கிழமை செய்யும் பிரதோஷ வழிபாடு உடல் நோய்களை போக்குகின்ற அற்புதமான வழிபாடு ஆகும்... செவ்வாய் பிரதோஷம் மனிதனுக்கு வரும் ருணம் அதாவது கடன் தொல்லைகள் மற்றும் ரணத்தை அதாவது உடல் பிணிகள் நீக்கக் கூடிய பிரதோஷம் என்பது கூடுதல் சிறப்பு இதனால் செவ்வாய் கிரகத்தால் ஏற்படும் கெடுபலன் நீங்கும் மேலும் பித்ரு மற்றும் சகோதர தோஷமும் விலகும்.
சந்திரன் காரகத்துவமான ஜலத்தில் கடகத்தில் செவ்வாய் நீசம் செவ்வாய் பிரதோஷத்தன்று ஜல பொருட்களான பால் பன்னீர் கொண்டு நந்தி தேவருக்கும் சிவபெருமானுக்கும் அபிஷேகம் செய்திட பகைவர்கள் விலகுவர் சகோதர ஒற்றுமை மேலோங்கும் கடன் தொல்லைகள் நீங்கும் உடல் ஆரோக்கியம் மேம்படும் நில மனை சேர்க்கைகள் உண்டாகும்.

கர்ம வினை

 *கர்ம வினை !*

உலகில் கோடிக்கணக்கான மக்கள் இருக்கிறார்கள். நாம் பழக்கம் வைத்துக் கொண்டிருப்பவர்கள் ஆயிரக்கணக்கு.
ஆனால் எதோ ஒரு *குறிப்பிட்ட* நபர் நமக்கு *துணைவராக* அல்லது *துணைவியாக*
*அமைவது* ஏன் ?
நம் வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்விலும்
ஒரு கர்மாவை நாம் ஏற்படுத்துகிறோம்.
அதாவது அந்தக் கர்மாக்களின் மூலம் ஒன்று நாம் ஏதாவது பெற்றுக் கொள்கிறோம், அல்லது அடுத்தவருக்கு ஏதேனும் ஒரு உபகாரம் செய்கிறோம்.
சில சமயங்களில் ஏமாற்றப்படுகிறோம். பல சமயங்களில் ஏமாற்றுகிறோம்.
சிலருக்கு நல்லது செய்கிறோம்.
பலரிடமிருந்து அளவுக்கு அதிகமாக
நன்மைகளைப்பெற்றுக் கொள்கிறோம்.
இந்த கொடுக்கல் வாங்கலே *"ருண பந்தம்"*
எனப்படுகிறது.
*சிலருடைய* உறவுகள் *ஆனந்தத்தைக்* கொடுக்கிறது.
சிலருடைய வருகை மட்டற்ற *மகிழ்ச்சியை* ஏற்படுத்துகிறது.
சிலர் கூடவே இருந்து *தொல்லைப் படுத்துகிறார்கள்.*
சிலரின் வருகை *துக்கத்தை* ஏற்படுத்துகிறது.
பல சமயங்களில் இது *ஏன்* நிகழ்கிறது என்று தெரியாமலேயே தன் போக்கில் நம் வாழ்வில் *பல நிகழ்ச்சிகள்* நடக்கின்றன.
கனவில் கூட காண முடியாத பல *ஆச்சர்யங்கள்* நமக்கு சிலசமயங்களில் ஏற்படுகிறது.
*இதற்கெல்லாம்* என்ன *காரணம் ?*
ஏன் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் ?
*நாமே* நம் தாயை, *தந்தையை,*
*சகோதர* சகோதரிகளை, *நண்பர்களை,* *மனைவியை,* *கணவனை,* *பிள்ளைகளை,* *தேர்ந்தெடுப்பதில்லை.*
நண்பர்களைத் தேர்ந்தெடுக்கலாம் என்று யாரேனும் கூறலாம். ஆனாலும் அதுவும்
*தானே* நிகழ வேண்டும். நம்மால் உருவாக்க முடியாது.
முயற்சி மட்டுமே நம்முடையது. முடிவு ? .
ஒரு சிலர் நம் வாழ்க்கையிலிருந்து திடீரென்று காணாமல் போய் விடுவர்.
அது இறப்பால் மட்டும் அல்ல , பல காரணங்களினால் நிகழும். அதே நபர் மீண்டும் நம் வாழ்வில் வேறு கோணத்தில்
#வேறு_பார்வையில் தோன்றுவர்.
எதோ ஒன்று நம்மை அடுத்தவர் பால் ஈர்க்கிறது, அல்லது அடுத்தவரை காரணம் இல்லாமல் வெறுக்க வைக்கிறது.
அது என்ன ?
*சமன்* செய்யாமல் மிச்சம் வைத்திருக்கும்
*கர்ம* கதிகளின்
*எச்சங்களே* அவ்வாறு ஒரு ஈர்ப்பை அல்லது வெறுப்பை ஏற்படுத்துகிறதா ?
இதற்கெல்லாம் தெரிந்த ஒரே காரணம் நம்முடைய *"கர்ம வினை"* தான் .
இது நாள் வரை எத்தனையோ பிறவிகளை நாம் கொண்டிருக்கிறோம்.
அத்தனைப் பிறப்பிலும் பலப் பல பாவ புண்ணியங்களை சேர்த்திருக்கிறோம்.
அந்தக் கூட்டின் பெயரே *"சஞ்சித கர்மா"* எனப்படுகிறது. அதன் ஒரு பகுதியை இந்தப் பிறவியில் அனுபவிக்க கொடுக்கப்படுகிறது. அதுவே *'பிராரப்தக் கர்மா'* எனப்படுகிறது.
இந்த பிராரப்தக் கர்மா நிறைவடையாமல்
நம்முடைய இந்தப் பிறவி முடிவடையாது.
நாம் இவ்வுலக வாழ்க்கையிலிருந்து விடுதலைப் பெற முடியாது.
இந்த வாழ்க்கை நடைமுறையில் நாம்
ஒவ்வொருவரிடமும் ஏதேனும் ஒன்றை கற்கிறோம் அல்லது கற்றுக்கொடுக்கிறோம்.
இதில் நாம் அனைவரும் அதிகமாக கற்பது அல்லது கற்பிப்பது நம் துணையுடன் மட்டுமே.
இது தவிர *'ஆகாம்ய கர்மா'* என்று ஒன்றுள்ளது. அது கொடுக்கப்பட்டுள்ள இந்தப் பிறவியில் நாம் செய்யும் நல்ல - கெட்ட செயல்களால் ஏற்படுவது.
யாராலும் யாருக்கும் எந்த கர்மாவையும் ஏற்படுத்தவோ உருவாக்கவோ முடியாது.
அவரவர்கள் செய்வினையின்
பயனாலேயே அவரவர்கள் அனுபவம் மற்றும்
வாழ்க்கை அமையும் .
துக்கமும், சந்தோஷமும், சண்டையும், சமாதானமும், ஏற்றமும், இறக்கமும், வெறுப்பும், ஆதரவும், அவரவர்கள் கர்ம கதியே.
இதைத் தான் _"தீதும் நன்றும் பிறர் தர வாரா"_
என நம் மதம் போதிக்கிறது.
நம்முடைய நல்ல கெட்ட காலங்களுக்கு
நாம் மட்டுமே பொறுப்பு.
அப்படி என்றால்
*ஆகாமி கர்மா* நம்முடைய கையிலேயே இருக்கிறது.
இந்தப் பிறவியில் யார் எப்படி இருந்தாலும், நீ எப்படி இருக்கப் போகிறாய் என்பது உன் கையிலேயே உள்ளது.
நீ செய்யும் நற்செயல்களையும், வினைச் செயல்களையும் நீ மட்டுமே எதோ ஒரு பிறவியில் அனுபவிக்கப் போகிறாய் என்பதை உணர்ந்தால்,
நீ என்ன செய்யப் போகிறாய் ?
எப்படி நடந்து கொள்ளப் போகிறாய் ?
எது போன்ற வாழ்க்கைத் தடத்தை
ஏற்படுத்திக்கொள்ளப் போகிறாய் என்பது
உனக்குப் புலப்படும்.
இதை போதிப்பது தான் *"ஆன்மீகம்"*
பாவ புண்ணியங்களுக்கு கூட்டல் கழித்தல் கிடையாது. இரண்டையும் நாம் அனுபவித்தே ஆகவேண்டும்.
பணம் மட்டுமே எல்லாப் பிரச்சனைகளையும்
தீர்த்துவிடும் என்று ஒரு சித்தாந்தம் உள்ளது.
ஆனால், பணமே இல்லாத ஒரு சாதாரண மனிதன் கூட தன்னுடைய வாழ்க்கையில் பல சமயங்களில் சந்தோஷமாக இருக்கிறான்.
அதேபோல பெரும் பணக்காரர்களையும் *'துக்கங்கள்*' விடுவதில்லை.
சர்க்கரை ஆலை அதிபரானாலும் Diabetic-
ஆக இருந்தால் இனிப்புப் பண்டங்களை
உண்ண முடியாது.
பல கார்களுக்குச் சொந்தக்காரராக இருந்தாலும் தனதுகால்களையே நடை பயிற்சிக்கு நம்ப வேண்டியதாக உள்ளது.
'வினை விதைத்த வழியில் விதி நடக்கும்'
'விதி வகுத்த வழியில் நாம் நடக்க வேண்டும்'

நமக்கு விதிக்கப்பட்டது நம் கடமையைச்
செய்வது மட்டுமே. _பலனை ஆண்டவனிடம் விட்டுவிடுவோம்._
நடப்பதை ஏற்கும் பக்குவத்தை மட்டுமே நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும்.
அதை மாற்ற முயலும் போது, மேலும் மேலும் _துன்பத்தையும் சோகத்தையுமே_ பலனாகப் பெறுகிறோம்.
_எதற்கும் நிதானமும் பொறுமையும் தேவை._
_நமக்கு நடக்கும் நடக்கப்போகும்_ *நல்லதை* யாராலும் *கெடுக்க* முடியாது. அதேபோல் *தீமையையும்*
*கொடுக்க* முடியாது

ஒரு ஜாதகத்தில்

 t

பலன் சொல்ல 10 டிப்ஸ்
1.ஒரு ஜாதகத்தில் புதன் மறைவு ஸ்தானங்களான 6, 8,12 போன்ற இடங்களில் பலம் பெற்றிருக்கும் போது ஜாதகரால் புரிந்து கொள்ளப்பட முடியாத விஷயங்களை இல்லை என்றும் அளவிற்கு மறைபொருள் ஞானத்தினை தருவார்.
2.வாக்கு ஸ்தானமான இரண்டாம் வீட்டில் சூரியன் வலுப்பெற்று தொடர்பில் இருந்தால் ஜாதகர் மனதில் பட்டதை தைரியமாக பேசும் சுபாவம் உடையவராக இருப்பார்.
3.கடக லக்னகாரர்களுக்கு நான்கில் சனி உச்சம் பெற்றிருந்தால் 7ஆம் அதிபதி நான்காம் வீட்டில் உச்சம் பெறுகிறார் என்ற நிலையில் திருமணத்திற்கு பின்பு வீடு மனை வாகன வசதிகள் அமைவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
4.கன்னி மற்றும் மீன லக்னகாரர்களுக்கு தாய் எப்படியோ அதைப்போலவே தாரம். ஏனெனில் ஒருவரே 4 மற்றும் 7க்கு அதிபதி.
5.லக்னத்திற்கு 5ஆம் இடமான ஆழ்மன ஸ்தானத்தில் வலுப்பெற்ற குரு அமர்ந்திருக்கும் பொழுது ஜாதகருக்கு தான் செய்வது சரியா? தவறா? என்பதை மனசாட்சியின் வாயிலாக உணர்த்திக் கொண்டே இருப்பார்.
6.ஒரு கிரகம் ஆறாம் அதிபதி (அ) எட்டாம் அதிபதி சாரம் வாங்கி இருந்தாலும் சாரநாதன் ,சுபர்களின் வீட்டில் நின்றால் சுபர்களின் தொடர்பு பெற்றால் நன்மை.. கெடுதல் குறைவே.
7.ராணுவம் தொடர்புடைய பணிகளுக்கு 10-ம் வீடு (அ)அதிபதியுடன் செவ்வாய் மற்றும் ராகு தொடர்பு இருக்க வேண்டும்.
அது தொடர்புடைய தசைகளும் நடைமுறையில் இருக்க வேண்டும்.
8.ஒரு கிரகம் லக்னம் யோக இருப்பினும் நீனின் வீட்டில் இருக்கும்பொழுது யோகத்தினை செய்யும் தகுதியை சற்று இழக்கவே செய்யும்.
9.நவாம்சத்தின் குருவின் வீட்டில் நின்ற புதன் ஜாதகருக்கு நல்ல புத்திசாலித்தனத்தை தந்தே தீருவார்.
10.இலக்னம், இலக்னாதிபதியுடன் வலுப்பெற்ற சூரியன் தொடர்பு (அ)
பத்தாம் அதிபதி, பத்தாம் வீட்டுடன் சூரியன் தொடர்பில் இருக்கும் பொழுது குறிப்பிட்ட நேரத்திற்குள் வேலையை முடித்தாக வேண்டும் என்ற எண்ணம் உடையவராக ஜாதகர் இருப்பார். நேரம் தவறாமையை ஜாதகர் அதிகம் கடைபிடிப்பார்.சூரியன் ஒரு பொழுதும் உதிக்க மறப்பதில்லையே..

Gall Bladder stones remove without operation

*யாருக்காவது மூத்திரபையில் கல்லடைப்பு, Gall Bladder ல் கல்லடைப்பு இருந்தால் 




1,

கற்பூரவள்ளி leaf  1 no    (

Mexican mint,Scientific nameColeus amboinicus)



2,,

மிளகு    2 no     (

Piper nigrum)

 *இந்த இலையை அதிகாலையில் வெறும் வயிற்றில் இலையை வாயில் போட்டு நன்றாக மென்று விழுங்கவும்.*

 *ஒரு நாளைக்கு ஒரு இலை சுவைத்து சாப்பிடவும் சாப்பிட்ட பின்பு 3 மணி நேரத்திற்கு பச்சைத் தண்ணீர்கூட அருந்தக் கூடாது.*

*ஒரு நாளைக்கு ஒரு இலை வீதம் மூன்று நாளைக்கு இதே போல் மூன்று இலையை சாப்பிட்டு வந்தால் கல்லடைப்பு கண்டிப்பாக குணமாகும்...*


பகவான் இராமகிருஷ்ணர்-4

*இறைவன் எங்கும் நீக்கமற இருப்பது உண்மைதான் என்றாலும் புலி போன்ற கொடிய மிருகங்களின் முன்னால் போய் நிற்கக்கூடாது.*

*அதுபோல கொடியவர்களிடமும் ஈஸ்வரன் இருப்பது உண்மைதான் என்றாலும் அவர்களிடம் நாம் சகவாசம் வைத்துக் கொள்வது சரியாகாது.*

-பகவான் இராமகிருஷ்ணர்-

நாளைய தமிழ் பஞ்சாங்கம், ஹோரை மற்றும் ராசிபலன்கள் :*28-03-2022

*நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து நாளைய தமிழ் பஞ்சாங்கம், ஹோரை மற்றும் ராசிபலன்கள் :*

28-03-2022

தமிழ் ஆண்டு, தேதி - பிலவ, பங்குனி 14 
நாள் - மேல் நோக்கு நாள்
பிறை - தேய்பிறை

*திதி*

கிருஷ்ண பக்ஷ ஏகாதசி - Mar 27 06:04 PM – Mar 28 04:15 PM

கிருஷ்ண பக்ஷ துவாதசி - Mar 28 04:15 PM – Mar 29 02:38 PM

*நட்சத்திரம்*

திருவோணம் - Mar 27 01:32 PM – Mar 28 12:24 PM

அவிட்டம் - Mar 28 12:24 PM – Mar 29 11:28 AM

*கரணம்*

பாலவம் - Mar 28 05:08 AM – Mar 28 04:15 PM

கௌலவம் - Mar 28 04:15 PM – Mar 29 03:25 AM

சைதுளை - Mar 29 03:25 AM – Mar 29 02:38 PM

*யோகம்*

ஸித்தம் - Mar 27 08:15 PM – Mar 28 05:39 PM

ஸாத்தியம் - Mar 28 05:39 PM – Mar 29 03:13 PM

*வாரம்*

திங்கட்கிழமை

*சூரியன் மற்றும் சந்திரன் நேரம்*

சூரியோதயம் - 6:11 AM
சூரியஸ்தமம் - 6:16 PM

சந்திரௌதயம் - Mar 28 3:14 AM
சந்திராஸ்தமனம் - Mar 28 2:58 PM

*அசுபமான காலம்*

இராகு - 7:42 AM – 9:12 AM
எமகண்டம் - 10:43 AM – 12:14 PM
குளிகை - 1:44 PM – 3:15 PM

துரமுஹுர்த்தம் - 12:38 PM – 01:26 PM, 03:03 PM – 03:51 PM

தியாஜ்யம் - 04:15 PM – 05:47 PM

*சுபமான காலம்*

அபிஜித் காலம் - 11:49 AM – 12:38 PM

அமிர்த காலம் - 01:28 AM – 03:01 AM

பிரம்மா முகூர்த்தம் - 04:35 AM – 05:23 AM

*ஆனந்ததி யோகம்*

ஸித்தி Upto - 12:24 PM
சுபம்

*வாரசூலை*

சூலம் - கிழக்கு
பரிகாரம் - தயிர்

____________________________

*திங்கள் ஹோரை*

காலை

06:00 - 07:00 - சந் - சுபம்
07:00 - 08:00 - சனி - அசுபம்
08:00 - 09:00 - குரு - சுபம்
09:00 - 10:00 - செவ் - அசுபம்
10:00 - 11:00 - சூரி - அசுபம்
11:00 - 12:00 - சுக் - சுபம்
                                                                                                                                                                                                            பிற்பகல்
                                                                                                                                                                                                            12:00 - 01:00 - புத - சுபம்
01:00 - 02:00 - சந் - சுபம்
02:00 - 03:00 - சனி - அசுபம்
        
மாலை 

03:00 - 04:00 - குரு - சுபம்
04:00 - 05:00 - செவ் - அசுபம்
05:00 - 06:00 - சூரி - அசுபம்
06:00 - 07:00 - சுக் - சுபம்
        
நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.

____________________________

*ராசிபலன்*

28-03-2022

மேஷம்
மார்ச் 28, 2022


பெரியோர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் முன்னேற்றமான சூழல் அமையும். குடும்பத்தில் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்து செல்லவும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான வெளியூர் பயணங்கள் சாதகமாகும். எந்தவொரு செயலிலும் பொறுமையை கடைபிடிப்பது நல்லது. சொத்துக்கள் சம்பந்தமான பிரச்சனைகளில் அனுகூலம் உண்டாகும். முயற்சிகள் ஈடேறும் நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



அஸ்வினி : முன்னேற்றமான நாள்.

பரணி : பயணங்கள் சாதகமாகும்.

கிருத்திகை : அனுகூலமான நாள்.
---------------------------------------




ரிஷபம்
மார்ச் 28, 2022


சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும். உறவினர்களுக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். உத்தியோக பணிகளில் இருந்துவந்த எதிர்ப்புகள் குறையும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கப் பெறுவீர்கள். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். இன்பமான நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்



கிருத்திகை : சாதகமான நாள்.

ரோகிணி : எதிர்ப்புகள் குறையும்.

மிருகசீரிஷம் : முயற்சிகள் ஈடேறும்.
---------------------------------------




மிதுனம்
மார்ச் 28, 2022


வெளியூர் பயணங்களால் புதுவிதமான அனுபவம் உண்டாகும். எதிர்காலம் சார்ந்த செயல்பாடுகளில் விழிப்புணர்வு வேண்டும். கடன் சார்ந்த முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். உத்தியோக பணிகளில் கவனத்துடன் செயல்படவும். எந்தவொரு காரியத்திலும் ஆர்வமின்றி செயல்படுவீர்கள். ஆடம்பர செலவுகளின் மூலம் சேமிப்பு குறையும். மதிப்பு மேம்படும் நாள்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்



மிருகசீரிஷம் : அனுபவம் ஏற்படும்.

திருவாதிரை : சிந்தித்து செயல்படவும்.

புனர்பூசம் : சேமிப்பு குறையும்.
---------------------------------------




கடகம்
மார்ச் 28, 2022


புதுவிதமான பொலிவுடன் காணப்படுவீர்கள். உயர்கல்வி தொடர்பான செயல்பாடுகளில் தெளிவு பிறக்கும். பூர்வீக சொத்துக்களின் மூலம் சாதகமான சூழல் ஏற்படும். உங்களின் பலம் மற்றும் பலவீனத்தை அறிந்து கொள்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். வியாபார ரீதியாக வெளிவட்டார நட்பு கிடைக்கும். புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். விருப்பம் நிறைவேறும் நாள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 28

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை



புனர்பூசம் : தெளிவு பிறக்கும்.

பூசம் : நெருக்கம் அதிகரிக்கும்.

ஆயில்யம் : நட்பு கிடைக்கும்.
---------------------------------------




சிம்மம்
மார்ச் 28, 2022


மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தொழிலில் இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். வெளிவட்டாரத்தில் புதுவிதமான அனுபவம் உண்டாகும். ஆன்மிக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். எதிர்பாராத உதவியின் மூலம் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். கடினமான செயல்களையும் எளிதில் செய்து முடிப்பீர்கள். சுகமான நாள்.



அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்



மகம் : எதிர்ப்புகள் நீங்கும்.

பூரம் : ஈடுபாடு அதிகரிக்கும்.

உத்திரம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
---------------------------------------




கன்னி
மார்ச் 28, 2022


எடுக்கும் முயற்சிகளில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் நன்மை ஏற்படும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். காப்பீடு தொடர்பான தனவரவு கிடைப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும். பொருளாதாரம் தொடர்பான விஷயங்களில் மேன்மை உண்டாகும். வெற்றி கிடைக்கும் நாள்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்



உத்திரம் : அனுசரித்து செல்லவும்.

அஸ்தம் : துரிதம் ஏற்படும்.

சித்திரை : மேன்மை உண்டாகும்.
---------------------------------------




துலாம்
மார்ச் 28, 2022


சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். வெளிவட்டாரத்தில் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். பொன், பொருள் சேர்க்கை பற்றிய எண்ணம் மேம்படும். வியாபாரத்தில் நுட்பமான சிந்தனைகளின் மூலம் லாபம் உண்டாகும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். வெளியூர் பயணங்களின் மூலம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். தன்னம்பிக்கையான நாள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



சித்திரை : நம்பிக்கை அதிகரிக்கும்.

சுவாதி : லாபம் உண்டாகும்.

விசாகம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
---------------------------------------




விருச்சிகம்
மார்ச் 28, 2022


எந்தவொரு செயலிலும் முன் கோபத்தை குறைத்து கொண்டு செயல்படுவது நல்லது. சமூகத்தில் உங்களுடைய மதிப்பு அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களால் நன்மை ஏற்படும். பழைய நினைவுகளின் மூலம் செயல்பாடுகளில் தடுமாற்றம் உண்டாகும். உழைப்பிற்கு உண்டான பாராட்டுகள் கிடைக்கும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். உதவி கிடைக்கும் நாள்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்



விசாகம் : மதிப்பு அதிகரிக்கும்.

அனுஷம் : தடுமாற்றம் உண்டாகும்.

கேட்டை : வாய்ப்புகள் ஏற்படும்.
---------------------------------------




தனுசு
மார்ச் 28, 2022


மனதில் நினைத்த காரியங்கள் எண்ணிய விதத்தில் நிறைவேறும். மாணவர்களுக்கு விளையாட்டு சார்ந்த செயல்பாடுகளில் ஆர்வம் உண்டாகும். ஆடம்பர பொருட்களின் மீது விருப்பம் அதிகரிக்கும். பயணங்களால் அலைச்சல் ஏற்பட்டாலும் ஆதாயம் உண்டாகும். சாதுர்யமான பேச்சுக்களால் அனைவரையும் கவர்வீர்கள். வரவு மேம்படும் நாள்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு



மூலம் : எண்ணங்கள் ஈடேறும்.

பூராடம் : விருப்பம் அதிகரிக்கும்.

உத்திராடம் : ஆதாயகரமான நாள்.
---------------------------------------




மகரம்
மார்ச் 28, 2022


குடும்பத்துடன் வெளியூர் பயணம் சென்று வருவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சோர்வு ஏற்பட்டு நீங்கும். விருந்தினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். கூட்டாளிகளின் ஆலோசனையால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த மனவருத்தங்கள் குறையும். உடனிருப்பவர்களிடத்தில் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். தடைகள் குறையும் நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்



உத்திராடம் : சோர்வு நீங்கும்.

திருவோணம் : முன்னேற்றமான நாள்.

அவிட்டம் : விவாதங்களை தவிர்க்கவும்.
---------------------------------------




கும்பம்
மார்ச் 28, 2022


புதிய தொழில் தொடங்குவது தொடர்பான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணிகளில் சாதகமான சூழல் அமையும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலை காணப்படும். அரசு சம்பந்தமான செயல்பாடுகளில் காலதாமதம் உண்டாகும். மனதை உறுத்திய சில விஷயங்களுக்கு தெளிவு கிடைக்கும். அமைதி வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்



அவிட்டம் : சாதகமான நாள்.

சதயம் : காலதாமதம் உண்டாகும்.

பூரட்டாதி : தெளிவு கிடைக்கும்.
---------------------------------------




மீனம்
மார்ச் 28, 2022


மூத்த உடன்பிறப்புகளின் மூலம் ஆதாயம் உண்டாகும். உயர் அதிகாரிகளின் மூலம் ஒத்துழைப்பான சூழல் ஏற்படும். தொழிலை அபிவிருத்தி செய்வதற்கான தனவரவு கிடைக்கும். பிள்ளைகளின் மூலம் பெருமை உண்டாகும். மகான்களின் தரிசனம் மற்றும் ஆசிகள் கிடைக்கப் பெறுவீர்கள். சுபகாரிய முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். அன்பு நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்



பூரட்டாதி : ஆதாயகரமான நாள்.

உத்திரட்டாதி : வரவு கிடைக்கும்.

ரேவதி : முடிவு ஏற்படும்.
---------------------------------------

*🤘ஓம் நமசிவாய🙏*

Sunday, March 27, 2022

மனைவி அமைவதெல்லாம்!!!!!

 மனைவி அமைவதெல்லாம்!!!!!

ஒரு ஏழை மனிதன் இருந்தான். அவனிடம் இரண்டே இரண்டு மாடுகள் மட்டும் இருந்தன....!!!
அதில் கிடைக்கும் பாலில்தான் அவனது வருமானம். மனைவி, குழந்தைகளுடன் மிகவும் வறுமையில் வாடினான்.
ஒரு முறை அந்த ஊருக்கு ஞானி ஒருவர் வந்தார். அவர் மிகவும் சக்தி வாய்ந்தவர் என்று எல்லாரும் பேசிக் கொண்டனர்.
அவனும் தன்னுடைய நிலையை அவரிடம் கூறி ஏதாவது உதவி பெறலாம் என்று அவரிடம் போய் நிலைமையை சொன்னான்.
அவரும் இன்று முதல் உன் வாழ்க்கை உயரும்" என்று ஆசி கூறினார்.
அன்று முதல் மாடுகள் அதிகமான பாலைக் கொடுத்தன. எப்படி நடந்தது என்று தெரியாதபடி வருமானம் பெருகியது. இரண்டு மாடுகள் நாலாகி, நான்கு எட்டாகி இப்போது அவனிடம் முப்பது மாடுகள். சிறிய கூரை வீடு பெரிய காரை வீடு ஆனது. திரும்பின இடமெல்லாம் செல்வச் செழிப்பு. நிற்கவும் நேரமில்லை.
ஆண்டுகள் ஓடின. மீண்டும் அதே ஞானி அந்த ஊருக்கு வந்தார். தான் ஆசீர்வதித்த மனிதன் இன்று பெரிய செல்வந்தன் என்று கேள்விப்பட்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.
அவன் அவரைத் தேடி வருவான் என்று எதிர்பார்த்தார். ஆனால் இரண்டு மூன்று நாட்கள் ஆகியும் குடியானவன் வரவில்லை. மனதில் அவருக்கு ஒரு சிறிய வருத்தம். இருந்தாலும் அவரே நேராக அவன் வீட்டுக்குப் போனார்.
அவர் சென்ற நேரத்தில் அவன் மாடுகளைக் குளிப்பாட்டிக் கொண்டிருந்தான். அவனது மனைவி ஞானியை வரவேற்று அமர வைத்து விட்டு அவரது வருகையை கணவனிடம் தெரிவித்தாள். அவனும் கொஞ்சம் நேரத்தில் வேலையை முடித்து விட்டு வந்துவிடுதாக சொல்லி அனுப்பினான்.
ஞானிக்கு வந்தது பாருங்கள் கோபம்.
காசு பணம் வந்ததும் பழசை எல்லாமே மறந்து விட்டாயா, நன்றி கெட்டவனே!. இனி உன்னிடம் இத்தனை மாடுகள் இருக்காது. பழைய படி இரண்டே மாடுதான் இனி எப்போதும் உனக்கு இருக்கும் "!. சபித்து விட்டு வேகமாகச் சென்று விட்டார்.
அவர் பேசியது எல்லாம் அவன் காதில் விழ, பதறியடித்து ஓடி வந்தான். அவர் இப்படிக் கோபித்துக் கொள்வாரென்று அவன் நினைக்கவே இல்லை. அவரை தேடி ஓடினான். ஆனால் அவர் எங்கு எனத்தெரியவில்லை. சோர்ந்து போய் வீடு திரும்பினான். கொல்லைப் புறத்தில் அவர் சபித்த படியே இரண்டே மாடுகள். தலையில் அடித்துக் கொண்டு அழுதான்.
என் அலட்சியத்தால் எல்லாம் போச்சே. இனி பழைய படி வறுமையில் கஷ்டப்படப் போறோமே! என்று புலம்பினான். அவன் மனைவி அவன் அருகில் வந்து சொன்னாள், "இந்த ரெண்டு மாட்டையும் இப்பவே சந்தைல கொண்டு போய் வித்துட்டு வந்துடுங்க".
அவனுக்கு மேலும் குழப்பம் வந்தது. "மாட்டை வித்துட்டு வருமானத்துக்கு என்ன செய்ய?!. இதைத் தவிர வேறு எந்த தொழிலும் எனக்கு தெரியாதே என்றான்.
மனைவி மறுபடியும் மாடுகளை விற்க வலியுறுத்தினாள்.
"சரி போ. நடக்கறது நடக்கட்டும் " என்று சொல்லி இருந்த இரு மாடுகளையும் ஓட்டிக்கொண்டு சந்தைக்குக் கிளம்பினான். நன்றாக வளர்க்கப்பட்ட மாடுகள் என்பதால் உடனே நல்ல விலைக்கு விற்பனையானது.
மனது கணக்க, கண்ணில் கண்ணீருடன் வீடு வந்து சேர்ந்தான். அவனது மனைவியோ முகம் நிறைந்த புன்னகையோடு அவனை வரவேற்றாள்.
குடியானவனுக்கோ ஒன்றுமே புரியவில்லை.
அவளாகவே சொன்னாள்.
கொஞ்சம் கொல்லைப் புறத்தில் போய்ப் பாருங்க என்றாள்.
போய் பார்த்தான்....
அவன் கண்களையே அவனாலேயே நம்ப முடியவில்லை. அங்கே வேறு இரண்டு புதிய மாடுகள்.கேள்வியுடன் மனைவி முகத்தை ஏறிட்டான்.
மனைவி சொன்னாள், எப்பவும் உங்க கிட்ட ரெண்டு மாடுதான் இருக்கணும்ங்கறதுதானே சாபம்?.
அப்ப நீங்க ரெண்டு மாட்டையும் வித்தாலும் அதே இடத்துக்கு ரெண்டு மாடு வந்திடும் இல்லையா?.
அவனுக்கு அவள் சொன்னதும் புரிந்தது,
☆புத்தியுள்ள பெண்ணை மனைவியாக அடைந்தவன் பாக்கியவான் என்பதும் புரிந்தது. அன்று முதல் தினமும் இரண்டு மாடுகளை விற்க ஆரம்பித்தான்.
முன்பை விடப் பெரிய பணக்காரன் ஆனான்.
சில நேரத்தில் நாம் தடுமாறும் போது தாங்கிப் பிடிப்பவள் மனைவிதான்.
உரிய நேரத்தில் சொல்லும்
அறிவுரையை இவளுக்கு என்ன தெரியும் என்று உதாசீனப்படுத்தி விடாதீர்கள். வாழும் வாழ்க்கையில் விட்டுக் கொடுத்தலே உயர்வை தரும். சிறு விஷயத்தை பூதாகரமாக பார்க்காதீர்கள். விட்டுக் கொடுத்தவன் கெட்டுப் போவது இல்லை.
குணவதியின் கரம் பிடித்த எல்லாருமே கோடிஸ்வரர்கள்தான்..!.
பெண்கள் குணவதியாக இருக்க ஆண்களும் காரணம்.....!!!!
எப்படி கதை.....

பாணலிங்கம்.

புதன் தரும் சில புரிதல்கள் ..

 புதன் தரும் சில புரிதல்கள் ..

1.புத்திசாலித்தனம், பகுத்தறிவு தன்மை ,ஆராய்ச்சி, நகைச்சுவை, எழுத்து, தொலைத் தொடர்பு என அனைத்திற்கும் காரகம் வகிப்பவர் புதன்.
2.ஒருவர் எவ்வளவு ஏழ்மை நிலையில் பிறந்திருந்தாலும் கூட புதனின் புத்திசாலித்தனம் நன்றாக இருந்தால், மேன்மை நிலை அடைய இயலும் ..
3.புதன் ராகுவுடன் தொடர்பு பெரும்பொழுது, பெரிதுபடுத்தும் நல்லவை அல்லது கெட்டவை எந்த ஆதிபத்தியம் வாங்கியுள்ளது அதன் சார்ந்த விஷயங்களை பெரிது படுத்துவார்.
4.புதன் கேதுவுடன் இணையும் பொழுது, சிறந்த ஞானத்தை கொடுத்தாலும், பெரிய அளவில் இடத்திற்கு தகுந்தார் போல் பயன்படுத்த முடிவதில்லை.
5.கன்னியில் சுக்கிரன் நீச்சம் அடைந்தாலும், அங்கே புதனுடன் நீசபங்கம் அடையும் நிலையில், புதன் சுக்கிரன் எவ்வளவு அதிகமாக நீசபங்கம் படுகிறாரோ அந்த அளவிற்கு தன்னுடைய சுபத்தன்மை புதன் இழந்து விடுகிறார்...புதனின் முதன்மை நண்பராக கருதப்படும் சூரியன், பரிவர்த்தனை அமைப்பிலும், வாங்கியுள்ள ஆதிபத்திய தைப் பொறுத்து மிகுந்த நற்பலன்களை செய்கிறார்.
6.புதன், சனி 14 டிகிரிக்குள் இணைந்து பாவத்துவமான அமாவாசை யோகத்தில் மாட்டிக் கொண்டு,சுபர் தொடர்பு பெறவில்லையெனில் ஜாதகருக்கு அலித்தன்மை உருவாக்கி விடுகிறார்.
7.மனித உடலில் ஹார்மோனல் பிரச்சனைகளை உருவாக்குவதும் புதன் ராகு இணைவு பெற்று சுபத்துவம் பெறவில்லையெனில் ஏற்படுகிறது ..நரம்புகளை இயக்குபவர் புதன்.
8.முதுகு தண்டுவடம் நரம்பு சார்ந்த பிரச்சனைகள், Fits என்று சொல்லக்கூடிய வலிப்பு நோய் போன்றவை காரகம் வகிப்பவர் புதன்.
9.ஒருவருடைய சாமர்த்திய தன்மை, சமயோசித புத்தி, புத்திகூர்மை கணிதம், எழுத்து ஆற்றல், கவிதை (புதனுடன் சுக்கிரன் தொடர்பு) ஒரு இளைஞனை போன்றவர் புதன்.
10.தனித்த புதன் என்பது, சுபர் தன்மை பெற்றிருந்தாலும் 33% ஒளி தன்மை இருக்கும். அதாவது குருவை காட்டிலும், (குரு 100 சதவிகித ஒளி தன்மை என்றால் தனித்த புதன் 33 சதவிகித ஒளி தன்மையுடன் இருப்பார்) புதனின் அம்சமாக கருதப்படும் கடம்ப வாகினியான மதுரை மீனாட்சி அம்மன் ...வழிபாடு மற்றும் பச்சை மரங்களை நட்டு வளர்த்தல் அதற்கு நீர் ஊற்றுதல் போன்றவை புதனுக்கான சிறந்த பரிகாரங்கள் ஆகும்

Featured Post

ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதைகள் இருக்கிறது

ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதைகள் இருக்கிறது என்பதையும், ஓர் பலாப்பழத்தைப் பிளக்காமல் அதன் உள்ளிருக்கும் சுளையின் எண்ணிக்கையைய...