Tuesday, February 25, 2025

Vetikunnu island...trekking...பரம்பிக்குளம்..

 பரம்பிக்குளம்...

Vetikunnu island...
இப்ப நினைச்சாலும் அத்தனை புத்துணர்வா இருக்கு...
Reserved forest...
அதுல கொஞ்சம் தூரம் trekking...
அப்புறம், 2 மணி நேரம் lakeல boating...
அதுவும் மூங்கில் படகு, துடுப்பு போட நாலு guards கூட வருவாங்க...
ஏரியை கடந்ததும்,
ஒரு தீவு...
அதுல ஒரே ஒரு building...
5 படுக்கையும், இரண்டு rest room இருக்கற ஒரு room...
சின்னதா ஒரு living room...
கூடவே ஒரு சமையல் அறை...
சுத்திலும் பெரிய காடு...
காட்டை சுத்தியும் ஏரி...
யானைகள் வராம இருக்க guest house முன்னாடி அகழி வெட்டியிருப்பாங்க...
அப்படியும் சில சமயம் யானைகள் வருவதுண்டு...
மான்கள் நிச்சயம் பார்க்கலாம்...
ஏரில முதலைகளையும் சுலபமா பார்க்கலாம்...
அதிர்ஷ்டம் இருந்தா சிறுத்தை, புலி கூட பார்க்கலாம்...
இப்படி ஒரு இடத்துல தான்,
ஒரு nyt தங்குனோம்...
காட்டோட வாசத்தை நாசியோட அத்தனை அணுக்கள்லயும் சுவாசிச்சோம்...
பறவைகள் சத்தத்தோட விடியல் அப்படி ஒரு அழகு...
மழை வாழ் மக்களோட கை பக்குவத்துல,
சமையல் அவ்ளோ ருசி...
5 நபர்கள் மட்டுமே தங்க அனுமதி...
மளிகை பொருள் நாம வாங்கிட்டு போயிடணும்...
கூட வர்ற guards சமைச்சு கொடுப்பாங்க...
Online booking மட்டும் தான்...
ஒரு இரவுக்கு 5 நபர்கள் தங்க,
சாப்பிட,
Trekking போக...
10000 rs charge பண்றாங்க...
www.parambikulam.org websiteல book பண்ணிக்கலாம்...
காடு, மலை, கானுயிர்களை நேசிக்கறவங்களுக்கு...
இது வரப் பிரசாதம்...
விருப்பம் இருக்கறவங்க ஒரு தடவை போய் பாருங்க

No comments:

Featured Post

ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதைகள் இருக்கிறது

ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதைகள் இருக்கிறது என்பதையும், ஓர் பலாப்பழத்தைப் பிளக்காமல் அதன் உள்ளிருக்கும் சுளையின் எண்ணிக்கையைய...