Thursday, March 31, 2022

வஜ்ராயுத லிங்கம்,உப்பு லிங்கம்

 அனைத்து சிவ சொந்தங்களுக்கும் இனிய காலை வணக்கம் ...! ஓம் நமச்சிவாய திருச்சிற்றம்பலம் ஹரஹர மகாதேவா #உப்பு_லிங்கம் !

#ராமேஸ்வரம்ராமநாதர் #கோவிலில்உப்பு #லிங்கம்*_
#இதை_வஜ்ராயுத
#லிங்கம்_என்று
#அழைப்பர்.
காசிக்கு நிகராக போற்றப்படும் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் சீதை உருவாக்கிய சிவலிங்கம், அனுமன் கொண்டு வந்த காசி லிங்கம், தவிர வேறு ஒரு சிவலிங்கமும் சிறப்பாக போற்றப்படுகிறது. அதுதான் உப்பு லிங்கம்!
இது அதிக சக்தி வாய்ந்தது; அபூர்வமானதும்கூட. சுவாமி சந்நதிக்குப் பின்புறம் இந்த லிங்கம் உள்ளது. இந்த லிங்கத்திற்கு அபிஷேகம் நடைபெற்றாலும் லிங்கம் கரைவதில்லை. அதனால் இந்த லிங்கம் ‘வஜ்ராயுத லிங்கம்’ எனவும் போற்றப்படுகிறது. இவரை வழிபட்டால் சகல நோய்களும் குணமாகும் என்பது நம்பிக்கை. ராமேஸ்வரத்தில் சிவராத் திரி அன்று காலை திறக்கும் கோயிலை மறுநாள் பிற்பகலில்தான் மூடுவார்கள். இரவு முழுவதும் ஆலயத்தில் அபிஷேக ஆராதனைகள் நடக்கும். தேவராரம், திருவாசகம், ருத்ர, சமக பாராயணங்கள் தொடர்ந்து ஒலிக்க நான்கு ஜாமங்களிலும் தனித்தனி அலங்காரத்தில் சுவாமி திருவுலா வந்து அருட்பாலிப்பார்.
#உப்புலிங்கம்*
ராமேஸ்வரம் ராமநாதர் கோவிலில், ராமநாதர் சன்னிதிக்கு பின்புறம் உப்பு லிங்கம் உள்ளது. இந்த லிங்கத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
இந்த லிங்கம் வந்ததற்கு ஒரு கதை கூறப்படுகிறது.
ஒரு முறை சிலர், ‘இந்தக் கோவிலில் உள்ள லிங்கம் மணலால் ஆனது அல்ல என்றும், அப்படி மணலால் செய்யப்பட்டது என்றால், அபிஷேகத்தின் போது கரைந்திருக்க வேண்டும் என்றும் வாதம் செய்தார்கள்.
அந்த நேரத்தில் பாஸ்கரராயர் என்ற அம்பாள் பக்தர், தண்ணீரில் எளிதில் கரையும் தன்மையுடைய உப்பில் ஒரு லிங்கம் செய்து, அதற்கு அபிஷேகம் செய்தார். ஆனால் அந்த லிங்கம் கரையவில்லை.
‘அம்பாளை வணங்கும் தன்னால் பிரதிஷ்டை செய்த லிங்கமே கரையாதபோது, காக்கும் கடவுளின் மனைவியான சீதாதேவி பிரதிஷ்டை செய்த லிங்கம் கரையாததில் என்ன அதிசயம் இருக்கிறது’ என்று கூறினார். அவர் செய்த உப்பு லிங்கத்தை இப்போதும் நாம் தரிசனம் செய்யலாம்...
முப்பொழுதும்... நற்றுணையாவது நமசிவாயவே அருள்மிகு ஸ்ரீ பிரகலாதீஸ்வரர் சமேத லோகநாயகி அம்மாள் திருவடிகள் போற்றி போற்றி*
அடியேன்: ஞானன்
ஞானக்கண் அருட்பணி மன்றம் இ.துரைசாமியாபுரம் என் கடன் பணி செய்து கிடப்பதே. இறைப்பணி செய்வோம். இன்பமாக வாழ்வோ
May be an image of 1 person



No comments:

Featured Post

உணவு முறைல முடிஞ்ச அளவு மாற்றம் பண்ணுங்க.

  நாம ஏன் சோணகிரியா இருக்கோம்? தொத்த பாடியா இருக்கோம்? பழங்கால மக்களுக்கு மட்டும் எப்படி திமில் கொண்ட தோளும், மதர்த்த நெஞ்சும் வந்தது? உணவு ...