Thursday, March 27, 2025

நற்செயல்கள் - உலகிற்கு

உங்கள் வாழ்நாள் முழுவதற்குமான உங்களுடைய வாழ்க்கைத் துணை யார் ?

அம்மா ?
அப்பா ?
மனைவி ?
மகன் ?
மகள் ?
கணவன் ?
நண்பர்கள் ?

இதில் ஒருவரும் இல்லை...!

உங்கள் உண்மையான வாழ்க்கைத் துணை, உங்கள் உடம்புதான் !
உங்கள் உடம்பு செயல்படுவதை நிறுத்திவிட்டால் உங்களுடன் யாரும் இருக்கப்போவதில்லை...!

பிறப்பிலிருந்து இறப்பு வரை உங்களுடன் இருக்கப் போவது உங்கள் உடம்பு தான்.
உங்கள் உடம்புக்காக நீங்கள் எவ்வளவு பொறுப்புணர்வுடன் இருக்கிறீர்களோ,
அந்த அளவுக்கு உங்கள் உடம்பு உங்களைப் பார்த்துக் கொள்ளும்.
நீங்கள் என்ன உண்கிறீர்கள்,
என்ன உடற்பயிற்சி செய்கிறீர்கள்,
எந்த அளவுக்கு உடலுக்கு ஓய்வு தருகிறீர்கள்,
மன அழுத்தத்தை எவ்வாறு கையாளுகிறீர்கள்
என்பதையெல்லாம் பொருத்துத்தான் உங்கள் உடம்பு உங்களைப் பாதுகாக்கும்...!

உங்கள் உடம்பு மட்டும்தான் நீங்கள் வாழும் வரைக்கும் நிலையான உங்களுக்குரிய விலாசம் என்பதை ஞாபகத்தில் வையுங்கள் !
உங்களைத் தவிர வெளி ஆட்கள் வேறு யாரும் உங்கள் உடம்பிற்கு பாதுகாப்பாக இருக்க முடியாது என்பதையும் ஞாபகத்தில் வையுங்கள்...!

*மூச்சுப் பயிற்சி- நுரையீரல்களுக்கு...!*

*தியானப் பயிற்சி - மனதிற்கு...!*

*யோகாசன பயிற்சி - முழு உடம்பிற்கு...!*

*நடைப்பயிற்சி - இதயத்திற்கு...!*

*சிறந்த உணவு - ஜீரண உறுப்புகளுக்கு...!*

*நல்ல எண்ணங்கள் - ஆன்மாவிற்கு...!*

*நற்செயல்கள் - உலகிற்கு...!*

இதை உணர்ந்து வாழ்க்கையை முறையே
💐

நம் தவறான வாழ்கைமுறையால் ஏற்படும் தொந்தரவுகளுக்கு

1. உங்கள் குழந்தைகளை உறக்கத்திலிருந்து எழுப்புவதற்கு 5 நிமிடங்களுக்கு முன்னிருந்தே அவர்கள் அருகே அமர்ந்து அவர்களை தொட்டு எழுப்புங்கள்.
2. அவர்கள் தூங்குமிடத்திற்கு சென்று அவர்களோடு நாளைய அவர்களது வேலைகளை ஞாபகப்படுத்தி அவர்களது உள்ளங்களை குளிரச் செய்து அவர்களை தூங்க வையுங்கள் அது அவர்கள் காலை வேளையில் உற்சாகமாகமாகவும் சுறுசுறுப்புடன் எழும்புவதற்கு
துணை புரியும்.
3. உங்கள் பிள்ளைகளுக்கு அருகில் அமர்ந்து அவர்களிடம் நான் உங்களை அதிகம் நேசிக்கிறேன் உன்னால் நான் அதிகம் பெருமைப் படுகிறேன்
உனக்கு ஏதாவது நான் உதவிகள் செய்து தரவேண்டுமா?
நீ நல்ல ஒரு திறமை சாலி ஆற்றல் மிக்கவன் என்று சொல்லுங்கள் 
அவர்களை அன்பாக அனைத்து முத்தமிடுங்கள்.
4. காலையில் நித்திரையிலிருந்து எழும்பிய உடன்
டீவி பார்ப்பதையோ ஐபேட் மொபைல் போன்ஸ் போன்றவைகள் பாவிப்பதையோ ஒருகாலமும் அனுமதித்து விடாதீர்கள். 
ஏனெனில் அதன் கதிர்கள் தூங்கி எழும்பிய நிலையில் இருக்கும் கண்களுக்கு பாதிப்பை உண்டு பண்ணிவிடும்.
5.உங்கள் குழந்தைகள் உறங்கும் முன் அவர்களது முதுகை தடவி விடுங்கள். 
அது உங்களுக்கும் உங்கள் குழந்தைகளுக்கும்
இடையே ஓர் உணர்வு பூர்வமான தொடர்பை உண்டு பண்ணும்.
சிறந்த முறையில் குழந்தை நித்திரை கொள்வதற்கும், சாப்பிட்ட உணவு விரைவில் செரிமானமாவதற்கும் காரணமாய்
அமையும் 
6.குழந்தைகள் சற்று வளர்ந்து விட்டாலும் வாரத்தில் ஒரு நாளாவது குடும்பமாக
கணவன் மனைவி குழந்தைகள் என்று ஒரே இடத்தில் உறங்குங்கள். 
அது உங்கள் குழந்தைகளின் உள்ளத்திலிருக்கும் பாரத்தை
மனக் கவலைகளை நீக்கி 
உங்கள் மீது அவர்களையறியாத
ஓர் உள்ளார்ந்த பிணைப்பை ஏற்படுத்தி விடும்.
7. குழந்தைகளின் வேண்டுதல்கள் தேவைகள் நிறைவேறாத பொழுது அவர்கள் அழுது மன்றாடி ஒரு பொருளை அடைய முயற்சிப்பதை தடுத்து நிறுத்துங்கள். 
ஏனெனில் அழுதால் ஒரு பொருள் கிடைக்கும் என்ற மனப்பதிவை அது அவர்களுக்கு உண்டு பண்ணி பிடிவாதத்தால் சாதிக்க நினைக்கின்ற எண்ணம் அவர்களிடம் உண்டாகி விடும்.
8. உண்மை, நேர்மை, 
துணிவு, 
விட்டுக் கொடுத்தல், மன்னித்தல், 
அன்பு காட்டல் போன்ற நல்ல பண்புகள் மீது அவர்களுக்கு ஆர்வத்தை 
ஊட்டுங்கள்.
9. பொய், ஏமாற்று, 
திருட்டு, அநீதியிழைத்தல், பெருமை, பொறாமை, சூழ்ச்சி செய்தல் போன்ற கெட்ட குணங்களை வளரவிடாமல் அவர்களை எச்சரித்து வையுங்கள்.
10. பாதை ஒழுங்குகளைக் கற்றுக்கொடுங்கள்.
பாதையில் செல்லும் போது அமைதியாகவும், நிதானமாகவும் நடந்து கொள்ளப் பழக்குங்கள்.
உங்கள் குழந்தைகள் உங்களை அப்படியே பின்பற்ற முயற்சிப்பர். எனவே, நீங்கள் நல்ல முன்மாதிரியாக நடந்து அவர்களை வழிநடத்துங்கள்.
11. குழந்தைகளை படிக்கும் படி திணிக்காதீர்கள். 
கல்வியின் முக்கியத்துவம்,
ஏன் கற்க வேண்டும் என எடுத்துரையுங்கள்.
12. பிறருக்கு மத்தியில் குழந்தைகளை திட்டாதீர்கள். 
பெற்றோர்களாகிய நீங்கள் குழந்தைகளுக்கு முன் சண்டை பிடிக்காதீர்கள்.
அது உளவியல் பிரிவினைகளை ஏற்படுத்தும்.
13. அவர்களின் விளையாட்டு, ஓய்வு நேரம், மகிழ்ச்சிகரமான நேரங்களில் நீங்களும் அவர்களுடன் பங்கெடுங்கள். 
அவர்கள் பூரண பாதுகாப்புடனும், அன்பான அரவணைப்புடனும் வாழ்கின்றனர் என்பதை அவர்கள் உணரும் வண்ணம் நடந்துகொள்ளுங்கள்.
14. பிள்ளைகளின் அறிவை கண்ணியப்
படுத்துங்கள்; 
அவர்கள், பிரச்சினைகளை எப்படி எதிர்கொள்கின்றனர் என்பதை அவதானியுங்கள்.
15. குழந்தைகள் நவீன தொழில் நுட்பத்தைக் கற்றுக்கொள்ள உதவுங்கள்;
கணினி-இணையப் பயன்பாட்டை அவர்கள் அறிந்துகொள்ளவும், 
அதன் மூலம் பயன்பெறவும் வழிகாட்டுங்கள்.
16. சிறு வயதிலிருந்தே குழந்தைகளுக்கு நீதிக்கதைகளை போதிக்க வேண்டும். 
அது எதிர்காலத்தில் நேர்மையானவர்களாக வாழ்வதற்கு உதவியாக இருக்கும்.
17. அவர்கள் உடல் ஆரோக்கியம் மிக்க விளையாட்டுக்களில் ஈடுபட வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுங்கள்.
18. இயற்கை உபாதைகளை அடக்கி வைக்க கூடாது என்பதை கற்றுக்கொடுங்கள். 
குறிப்பாக சிறுநீரை அடக்கி வைப்பது ஆபத்தானது
(பயந்த 
சுபாவத்தையும்
தாழ்வு மனப்பான்மையையும் உண்டுபண்ணும், 
சிறுநீரகத்தில் மற்றும் சிறுநீர்ப் பாதையில் கற்கள் உருவாகும்) என்பதை புரியவையுங்கள்.
இப்படி தொடர்ந்து பழக்கப்படுத்திக் கொண்டால் பிள்ளைகளிடம் நல்லவிதமான மாற்றங்களை விரைவில் காண்பீர்கள்.
குறிப்பு:
நம் தவறான வாழ்கைமுறையால் ஏற்படும் தொந்தரவுகளுக்கு
எந்த மருந்துகளாலும் மருத்துவ
முறைகளாலும் நிரந்தராமான 
தீர்வை தர இயலாது.

செயலும், பேச்சும் வளமாக்கும் மௌன விரதம்!

மௌனம் இருந்தால் சிறப்பு

*செயலும், பேச்சும் வளமாக்கும் மௌன விரதம்!*

மாதம் ஒரு முறை பழச்சாறு மற்றும் தண்ணீர் மட்டும் உட்கொண்டு, மௌன விரதம் கடைபிடிக்க, மனம் பொலிவாகி, எண்ணங்களும் செயலும், பேச்சும் வளமாகும்.

*மௌன விரதம்*

*விரதங்களில் உயர்ந்ததாக கூறப்படுவது, மௌன விரதம்.*

உடலின் அனைத்துவகை இயக்கங்களை கட்டுப்படுத்துவதே, மௌனவிரதம். பேச்சு, எண்ணம், செயல் இவற்றை நிறுத்தி, மனதை இறை சிந்தனையில் செலுத்தி இருப்பதே, மௌன விரதமாகும்.

உண்ணாவிரதம், 
உடலை பட்டினி போட்டு, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது, மௌன விரதம், மனதை பட்டினி போட்டு, மன எண்ணங்களை மேம்படுத்துவது! மௌன விரதம், 

ஞானிகளாலும், பல்வேறு சமய பெரியோர்களாலும், மோன நிலையில் இறை நிலையை அடைய, அனுஷ்டிக்கப்பட்டது. 
மௌன விரதம் என்றால் பேசாமல் இருப்பது, எப்படி பேசாமல் இருப்பது?

வாயாலும், மனதாலும், செயலாலும் பேசாமல், ஓரிடத்தில் அமைதியாக இருப்பதே ஆகும். 
ஆழ்நிலையில் மௌனமாக இருப்பதே, மௌன விரதம்!. பேசிப் பயனிலா சூழலில், மௌனமாக இருப்பது, சிறந்த தீர்வாகும். மௌன விரதம் என்பது, தவ ஞானிகளுக்கு சிறந்த ஆன்மீக அரணாக விளங்கியது, பகவான் இரமணரும், காஞ்சி பெரியவரும் அவ்வப்போது மௌன விரதம் இருந்து மோன நிலையில் இறையுடன் கலந்திருப்பர். 

திருச்செந்தூர் திருமுருகனின் கந்த ஷஷ்டி விழாவின் கடைசி நாளில், முருகனடியார்கள், ஒரு வார காலம் அனுஷ்டித்த விரதத்தை, மௌன விரதம் இருந்தே நிறைவு செய்வர். 
இதன் மூலம், தங்கள் கோரிக்கைகளை சீரிய முறையில் முருகப்பெருமான் நடத்தித் தருவார் என்பது, முருகனடியார்களின் நம்பிக்கை.

முதலில் நமக்கு மௌனவிரதம் இருக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தாலே, நாம் மனித வாழ்வின் விளக்கத்தை அடையும் நீண்ட பயணத்தில், நம்மை இணைத்துக்கொள்கிறோம் என்றுதானே பொருள். மௌனவிரதம் என்பது நம்மை நாம் அமைதியாக மனதை ஒடுக்கி, இறை சிந்தனை அல்லது சிந்தனையை ஒருநிலைப்படுத்துவதாகும். 
இதனால் என்ன நடக்கும்?

அமைதியாக ஓரிடத்தில் தரையில் தர்ப்பை பாய் அல்லது கோரைப்பாய் விரித்து அமர்ந்து, 
அலைபாயும் மனதை ஒருமுகப்படுத்தி, சிந்திக்கும்போது, தினசரி வாழ்வில் நம்மை பாதிக்கும் அனைத்து செயல்களும் நம்முன் வந்துபோகும்.

இன்னும் சற்று ஆழமாக சிந்திக்க, அவையெல்லாம், நம்மாலேயே உண்டான பாதிப்புகள் என்பதையும் அறிந்து, அவற்றை எப்படி கடக்கவேண்டும் என்று சிந்திக்க, விடைகள் கிடைக்கும்.

மௌன விரதம், 
நம்மை நாம் ஆராய, நாம் இதுவரை வாழ்ந்த வாழ்வில் நாம் அடைந்தவை என்ன, இனி அடையவேண்டிய இலக்கு என்ன என்பதை, எந்தவித சமரசமும் இல்லாமல், உண்மை நிலையை நாம் உணர்ந்துகொள்ள முடியும். 

நம் வாழ்வு இலக்கில் இருந்து விலகிச்செல்வதை அறிந்தால், இலக்கை ஒட்டிய வழியில் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வாய்ப்பாகும்

இந்த மலை தென்னிந்தியாவின் டார்ஜிலிங்

இந்த மலை கர்நாடக மாநிலத்தில் உள்ள மிகவும் புகழ்பெற்ற மலையாகும்...

கோபால்சாமி மலை என்று அழைக்கப்படும் இந்த மலை மலையேற்றதற்கு மிகவும் புகழ்பெற்ற மலை...

இந்த மலை தென்னிந்தியாவின் டார்ஜிலிங் என அழைக்கப்படுகிறது...

தென்மேற்கு பருவமழை காலங்களில் மிக மிக பசுமையாகவும் அடர்ந்த புல்வெளிகளும் நிறைந்து காணப்படும் பசுமை நிறைந்த மலை...

ஒரே செங்குத்து மலை போன்று இருக்கும் ஒரே சாலை போன்று இருக்கும்...

ஆனை முடி சிகரம் மூணாறுக்கு அருகில்

இடுக்கி மாவட்டத்தில் உள்ள மூணார்...

95 சதவீதம் தமிழர்கள் வாழும் பகுதி...

நல்ல தண்ணி குதிரை புழா குண்டலாறு ஆகிய மூன்று ஆறுகள் சேரும் இடமே மூணாறு ஆகும்...

தென்னிந்தியாவின் மிக உயர்ந்த சிகரமான ஆனை முடி சிகரம் மூணாறுக்கு அருகில் தான் உள்ளது...

ஆனைமுடி சிகரமும் ஊட்டியில் உள்ள தொட்டபெட்டா சிகரமும் ஏறத்தாழ ஒரே உயரம் கொண்டதுதான்...

தொட்டபெட்டா வை விட ஆனை முடி சிகரம் வெறும் 20 அடி மட்டுமே அதிக உயரம் கொண்டது...


Thursday, March 20, 2025

Oatmeal-உளுந்து களி

உளுந்து களி......

தேவையான பொருள்கள்
உளுந்து - ஒரு கப்
கடலைப்பருப்பு - ஒரு கைப்பிடி
நல்லெண்ணெய் - 50 கிராம்
வெல்லம் - 100 கிராம்
ஏலக்காய் - ஒன்று
செய்முறை
உளுந்துடன் கடலைப்பருப்பை சேர்த்து மூழ்கும் அளவிற்கும் அதிகமாக‌ தண்ணீர் சேர்த்து ஒருமணி நேரம் ஊற‌ விடவும்.

பின்னர் தண்ணீர் சேர்த்து சற்று கொரகொரப்பாக‌ அரைத்து கொள்ளவும்.

ஒரு வாணலியில் 50 கிராம் நல்லெண்ணெய் ஊற்றி அதில் அரைத்து வைத்துள்ள‌ உளுந்தை சேர்க்கவும்.

இதை கைவிடாமல் நன்கு கிளறவும். தேவைப்பட்டால் மேலும் நல்லெண்ணெய் சேர்த்துக் கொள்ளலாம். அதனுடன் ஒரு ஏலக்காயை பொடியாக்கி தூவவும்.

வெல்லத்தை பாகு காய்ச்சவும்.

வெல்லப்பாகை வடிக்கட்டி களியுடன் சேர்த்து நன்கு கிளறவும்.

விருப்பப்பட்டால் நெய்யில் வறுத்த‌ முந்திரியும் திராட்சையும் சேர்க்கலாம்.

சுவையான‌ சத்தான‌ உளுந்து களி தயார்......

80's, 90's Kids

#ஆண்கள்...❤️💚💜 🔵 அடிவயிறு நொந்துவிடும் என்று அந்த மூன்று நாட்களும் தொட்டியில் தண்ணீர் நிறைத்து வைக்கும் அப்பாக்கள்!!! 🔵 கிணற்றடியில் குளிக்கும் போது யாராவது எட்டிப்பார்த்தால் இரண்டு ஓலை கிடுகு வைத்து வேலியை உயர்த்தும் அண்ணன்மார்!!! 🔵 அயர்ந்து தூங்கும் போது சற்று ஆடை விலகியிருந்தால் போர்வையை போர்த்திவிட்டு செல்லும் தம்பிகள்!!! 🔵 பள்ளிக்கு நேரம் சென்றால் தம்பி பிள்ளையை ஒருக்கா அதில் இறக்கிவிடு என நம்பி ஏற்றிவிடும் அம்மாக்கள்!!! 🔵 பிள்ளை பெற்ற காலங்களில் மனைவியை வெந்நீர் வைத்து குளிப்பாட்டி பத்தியம் அரைத்து பார்த்த ஆருயிர் கணவன்மார்!!! 🔵 நன்மை தீமை நேரங்களில் மாமா மச்சான் உறவினர்கள் என்று எல்லோரும் ஓர் குறுகிய இடத்தில் கால்மாடு தலைமாடு என உறங்கிய காலம்!!! 🔵 எங்களை கூடிச்செல்ல முடியாத இடங்களுக்கு போகும் போது, பக்கத்து வீட்டில் நான்கு ஆண்பிள்ளைகள் இருந்தாலும் நம்பி ஒப்படைத்து விட்டு செல்லும் அம்மா!!! 🔵 பிரத்தியேக வகுப்புக்கள் முடிந்து வரும்போது இருட்டாகிவிட்டால் வீடுவரை சேர்ந்து வந்து விட்டுபோகும் ஆண் நட்புகள்!!! 🔵 ஆண் பெண் என்ற பேதமில்லாமல் அடித்துப்பிடித்து விளையாடுவதும் உறவுகளைக் கண்டால் அவர்கள் தோள் மீதும் மடிமீதிருந்தும் செல்லம் கொஞ்சுவதுமாய்... எந்த வக்கிரமும் இலாத உலகில் வாழ்ந்த கடைசி தலைமுறை நாம் என்பதே உண்மை🙏🙏 (80's, 90's Kids)

4- வகையான குழம்பு

4- வகையான குழம்பு
------------------------------------------------
கத்தரிக்காய் பருப்பு

தேவையான பொருட்கள் 
கத்தரிக்காய் 
துவரம் பருப்பு 
தக்காளி 
புளி 
காய்ந்த மிளகாய் 
சின்ன வெங்காயம்
சீரகம் 
பூண்டு 
மஞ்சள் தூள் 
பெருங்காயத்தூள்
நல்லெண்ணெய்
உப்பு 
கறிவேப்பிலை 
கொத்தமல்லி இலை 

செய்முறை 
குக்கரில், ஒரு டம்ளர் துவரம் பருப்பு, பொடியாக நறுக்கிய இரண்டு கத்தரிக்காய், நெல்லிக்காய் அளவு புளி, இரண்டு தக்காளி, மூன்று டம்ளர் தண்ணீர், 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய், இரண்டு பல் பூண்டு சேர்த்து இரண்டு விசில் விடவும். 

கடாயில், ஐந்து ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் சீரகம், 1/4 கப் சின்ன வெங்காயம், ஐந்து காய்ந்த மிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். 

வதங்கிய பின், வேக வைத்துள்ள பருப்பு, தேவையான அளவு உப்பு, சிறிதளவு கொத்தமல்லி இலை, 1/4 ஸ்பூன் பெருங்காயத்தூள் சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்க வைத்து, பின் மசித்து கொள்ளவும்.
💥🍁💥🍁💥🍁💥🍁💥🍁💥😊💥🍁

அவரைக்காய் கூட்டு

தேவையான பொருட்கள் 
அவரைக்காய் 
தேங்காய் 
தக்காளி 
காய்ந்த மிளகாய் 
சாம்பார் தூள் 
மிளகாய் தூள் 
பெரிய வெங்காயம் 
மஞ்சள் தூள் 
கடுகு 
கடலைப்பருப்பு 
உப்பு 
கறிவேப்பிலை 
கொத்தமல்லி இலை 
எண்ணெய் 

செய்முறை 
கடாயில், ஐந்து ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் கடுகு, ஒரு ஸ்பூன் கடலைப்பருப்பு, இரண்டு காய்ந்த மிளகாய், ஒரு பெரிய வெங்காயம், கறிவேப்பிலை, 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். 

வதங்கிய பின், ஒரு கப் பொடியாக நறுக்கிய அவரைக்காய், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், இரண்டு ஸ்பூன் சாம்பார் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கவும். 

பின்னர், 1/2 கப் அரைத்த தேங்காய், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும். 

இறுதியாக, கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கவும்.
💥🍁💥🍁💥🍁💥🍁💥🍁💥🍁💥🍁
முளைத்த பயிறு குழம்பு

தேவையான பொருட்கள்
பச்சைப்பயிறு
தட்டைப்பயிறு
கொள்ளு பருப்பு
கருப்பு சுண்டல்
சின்ன வெங்காயம்
தக்காளி
தனியா தூள்
சீரகம்
காய்ந்த மிளகாய்
தேங்காய்
புளி
மஞ்சள் தூள்
கத்திரிக்காய்
உருளைக்கிழங்கு
நல்லெண்ணெய்
கடுகு
கறிவேப்பிலை
கொத்தமல்லி இலை
உப்பு
பெருங்காயத்தூள்
செய்முறை
முதலில், 50 கிராம் பச்சைப்பயிறு, 50 கிராம் தட்டைப்பயிறு, 50 கிராம் கொள்ளு பருப்பு மற்றும் 50 கிராம் கருப்பு சுண்டல் சேர்த்து ஆறு மணி நேரங்கள் ஊற வைக்கவும்.

பின், ஊற வைத்துள்ள பயிறை முளைக்கட்டி வைத்து குக்கரில் போட்டு ஒரு விசில் வரும் வரை வேக வைக்கவும்.

ஒரு கடாயில், ஐந்து ஸ்பூன் நல்லெண்ணெய், 50 கிராம் சின்ன வெங்காயம், இரண்டு தக்காளி, ஆறு காய்ந்த மிளகாய், ஒரு ஸ்பூன் சீரகம் மற்றும் ஒரு கைப்பிடி கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

இரண்டு ஸ்பூன் தனியா தூள், ஒரு கப் துருவிய தேங்காய் சேர்த்து கலந்துவிட்டு இறக்கவும். ஆறிய பின் அரைக்கவும்.

மற்றொரு கடாயில் நான்கு ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் கடுகு, பத்து சின்ன வெங்காயம், இரண்டு காய்ந்த மிளகாய் மற்றும் சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

100 கிராம் கத்தரிக்காய் மற்றும் 100 கிராம் உருளைக்கிழங்கை சிறிய துண்டுகளாக நறுக்கி சேர்க்கவும். இதனுடன் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து விடவும்.

1/4 கப் புளிக்கரைசல் சேர்த்து கொதிக்க வைக்கவும். கொதிக்க தொடங்கியவுடன் அரைத்து வைத்துள்ள மசாலா, தயார் செய்து வைத்துள்ள முளைக்கட்டிய பயிறு, தேவையான அளவு தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து 20 நிமிடங்கள் வேக வைக்கவும்.

இறுதியாக 1/2 ஸ்பூன் பெருங்காயத்தூள் மற்றும் சிறிதளவு கொத்தமல்லி இலை சேர்க்கவும்
---------------------------------------------------------
உருளைக்கிழங்கு கிரேவி

தேவையான பொருட்கள் 
உருளைக்கிழங்கு 
பெரிய வெங்காயம் 
தக்காளி 
சோம்பு 
சிக்கன் மசாலா தூள் 
மிளகாய் தூள் 
கறி மசாலா தூள் 
மஞ்சள் தூள் 
பச்சை மிளகாய் 
இஞ்சி-பூண்டு விழுது
தேங்காய்
கறிவேப்பிலை 
கொத்தமல்லி இலை 
கடுகு
எண்ணெய் 
உப்பு 

செய்முறை 
முதலில், கடாயில் நான்கு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் சோம்பு, ஒரு பெரிய வெங்காயம், ஒரு தக்காளி சேர்த்து வதக்கவும். வதங்கிய பின், 1/4 கப் துருவிய தேங்காய் சேர்த்து கலந்து விட்டு இறக்கவும். இவை ஆறிய பின் நன்கு அரைத்துக் கொள்ளவும் 

மற்றொரு கடாயில், ஐந்து ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் கடுகு, சிறிதளவு கறிவேப்பிலை, நீளமாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், ஒரு தக்காளி, ஒரு ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது, நான்கு பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். 

பின்னர், பொடியாக நறுக்கிய ஒரு கப் உருளைக்கிழங்கு சேர்க்கவும். மேலும், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், ஒரு ஸ்பூன் சிக்கன் மசாலா தூள், 1/2 ஸ்பூன் கறி மசாலா தூள், 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கவும். 

இதனுடன், அரைத்து வைத்துள்ள மசாலா, தேவையான அளவு தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க தொடங்கியவுடன் அடுப்பை மெதுவாக வைத்து 15 நிமிடம் வேக வைக்கவும். 

இறுதியாக, சிறிதளவு கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து விடவும்.

Wednesday, March 19, 2025

சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு பத்திரமாக திரும்பினார்: ஒன்பது மாதங்களுக்கு


சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு பத்திரமாக திரும்பினார்: ஒன்பது மாதங்களுக்கு பிறகு ஒரு வெற்றி
மார்ச் 18, 2025 அன்று காலை 10:35 IST மணிக்கு ISS-லிருந்து பிரிந்த ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலம், 17 மணி நேர பயணத்துக்குப் பிறகு, இன்று அதிகாலை 3:27 IST மணிக்கு புளோரிடா கடற்கரையில், தல்லாஹாஸ்ஸி அருகே தண்ணீரில் தரையிறங்கியது. இதில் சுனிதா, புட்ச், நாசா விண்வெளி வீரர் நிக் ஹேக், ரஷ்ய விண்வெளி வீரர் அலெக்ஸாண்டர் கோர்புனோவ் ஆகியோர் பயணித்தனர். விண்கலம் பூமியின் வளிமண்டலத்தில் மீண்டும் நுழையும்போது 3,000 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பத்தை தாங்கி, பாராசூட் மூலம் பத்திரமாக இறங்கியது. தரையிறங்கியவுடன், சுனிதா புன்னகையுடன் கையசைத்து, நலமாக இருப்பதை உறுதிப்படுத்தினார். அந்த தருணத்தில், விண்கலத்தைச் சுற்றி நீந்திய டால்பின்களைப் போல, நமது இதயங்களும் மகிழ்ச்சியில் துள்ளியது. இது அவர்களின் நீண்ட, சவாலான பயணத்துக்கு ஒரு மகிழ்ச்சியான முடிவைத் தந்திருக்கிறது.
அடுத்த கட்டம்:
286 நாட்கள் விண்வெளியில் இருந்ததால், சுனிதாவும் புட்ச்சும் பூமியின் புவியீர்ப்புக்கு மீண்டும் பழக 45 நாள் மறுவாழ்வு (rehabilitation) திட்டத்தில் பங்கேற்பார்கள். இதில் எலும்பு பலவீனம், தசை இழப்பு, பார்வை மங்குதல் போன்றவற்றை சரிசெய்யும் பயிற்சிகள் இருக்கும். நாசாவின் கூற்றுப்படி, இவர்கள் நல்ல உடல்நிலையில் திரும்பியிருக்கிறார்கள், ஆனால் மருத்துவ பரிசோதனைகள் தொடரும்.
இந்த வெற்றிகரமான திரும்புதல், நாசா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தொழில்நுட்ப திறனுக்கு சான்று. "வாக்கு கொடுத்தோம், வாக்கை நிறைவேற்றினோம்" என்று அமெரிக்க வெள்ளை மாளிகை தெரிவித்திருக்கிறது. சுனிதாவின் இந்த சாதனை, உலகெங்கிலும் உள்ள விண்வெளி ஆர்வலர்களுக்கு ஒரு பெரிய உத்வேகமாக அமைந்திருக்கிறது.
286 நாட்கள் புவியீர்ப்பு இல்லாத விண்ணில் இருந்து, மீண்டும் நம்முடன் வந்திருக்கும் சுனிதாவுக்கு, இந்தியாவின் ஒவ்வொரு இதயத்திலிருந்தும் ஒரு வாழ்த்து. உடல் சோர்வுகளை மீட்டெடுக்க, மன உறுதியுடன் மீண்டு வர, மீண்டும் உன் பயணங்களைத் தொடர, உங்களுக்கு நமது மனமார்ந்த வாழ்த்துகள்!
நீங்களும் வாழ்த்தலாமே!

இன்று ஒரு கிராம் தங்கத்தின் விலை என்ன ?

இன்று ஒரு கிராம் தங்கத்தின் விலை என்ன ?
1 கிராம் தங்கம் ரூ. 8050/-
8 கிராம் தங்கம் ரூ. 64,400/-
1 கிராம் செம்பு - 4.80
1.5 கிராம் செம்பு - 7.20 or 7/-
6.5 கிராம் தங்கம் - 52,325/-
6.5 கிராம் தங்கம் + 1.5 கிராம் செம்பு
அடக்கவிலை-52,325+7.2=52,332.2/-
1 பவுனுக்கு தங்கத்தில் - 64,400 - 52,332.20/-
லாபம்= 12067.80
சேதாரம் 1.5 கிராம் = 12075/-
1 பவுனுக்கு மொத்த லாபம் 24142.80
என்ன தலை சுத்துதா ?

ஆனால் இந்த விழிப்புணர்வை மக்கள் எப்போது உணர்கின்றார்களோ அன்று தங்கத்தின் விலை கண்டிப்பாக குறையும்...

How to make jasmine coffee....மல்லி காபி செய்வது எப்படி




மல்லி காபி செய்வது எப்படி....

தேவையானவை:  

தனியா - 150 கிராம், சுக்கு - 50 கிராம், மிளகு - 10 கிராம், திப்பிலி - 10 கிராம், சித்தரத்தை - 10 கிராம், சதகுப்பை - 10 கிராம், பனை வெல்லம் - தேவையான அளவு.

செய்முறை: 

பனை வெல்லம் நீங்கலாக மற்ற பொருட்களை தனித்தனியே வெறும் வாணலியில் வறுத்து, ஆற வைத்து, மிக்ஸியில் நைஸாக பொடிக்கவும். இந்தப் பொடியை காற்றுப் புகாத, ஈரமில்லாத டப்பாவில் போட்டு வைக்கவும். தேவையானபோது ஒரு டம்ளர் தண்ணீருக்கு இரண்டு டீஸ்பூன் பொடி, தேவையான அளவு பனை வெல்லம் சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு, இறக்கி வடிகட்டினால்... மணமான மல்லி காபி ரெடி!
குறிப்பு: சித்தரத்தையை நன்கு தட்டி உடைத்த பின் வறுக்கவும்.


Featured Post

ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதைகள் இருக்கிறது

ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதைகள் இருக்கிறது என்பதையும், ஓர் பலாப்பழத்தைப் பிளக்காமல் அதன் உள்ளிருக்கும் சுளையின் எண்ணிக்கையைய...