Tuesday, February 25, 2025

ந்த பொருளால் சிவனுக்கு அபிஷேகம் செய்வது நல்லது?

 மகாசிவராத்திரியில் எந்த ராசிக்காரர்கள் என்ன அபிஷேகம் செய்ய வேண்டும்?

மகாசிவராத்திரியில் எந்த ராசிக்காரர்கள் எந்த பொருளால் சிவனுக்கு அபிஷேகம் செய்வது நல்லது?
சிவனுக்கு உரிய நாளான மகாசிவராத்திரி நாளில் சிவபெருமானை நினைத்து விரதமிருந்தால் ஒருவர் நினைத்த காரியம், ஆசை மற்றும் அவர்களின் கஷ்டங்கள் நீங்கி சுகமுடன் வாழலாம்.
இந்நாளில் சிவபெருமானுக்கு பூஜை செய்வதால் சிவனின் அருள்பார்வையை பெறலாம். அதிலும் எந்த ராசிக்காரர்கள் எந்த பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்தால் சிவனின் அருளை முழுமையாக பெறமுடியும் என தெரிந்துகொண்டு அபிஷேகம் செய்தால் இன்னும் சிறப்பாக இருக்குமல்லவா...!
மேஷ ராசி
மேஷ ராசிக்காரர்கள், மகாசிவராத்திரி அன்று வெல்லம் கலந்த நீரை சிவலிங்கத்திற்குப் படைத்து, சிவ பஞ்சாக்ஷர மந்திரத்தை சொல்ல வேண்டும். இதனால் நினைத்தது அனைத்தும் நடக்கும்.
ரிஷப ராசி
ரிஷப ராசிக்காரர்கள், தயிரைக் கொண்டு சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்தால், வீட்டில் உள்ள பணப் பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
மிதுன ராசி
மிதுன ராசிக்காரர்கள், சிவலிங்கத்தை கரும்புச்சாறு கொண்டு அபிஷேகம் செய்தால் ஆசைகள் நிறைவேறும்.
கடக ராசி
கடக ராசிக்காரர்கள், சர்க்கரை சேர்த்த பால் கொண்டு சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்து, மந்தாரைப் பூவால் அலங்கரித்தால், நினைக்கும் காரியம் கூடிய விரைவில் நடக்கும்.
சிம்ம ராசி
சிம்ம ராசிக்காரர்கள், மகாசிவராத்திரி அன்று சிவப்பு சந்தனம் கலந்த பாலால் சிவனுக்கு அபிஷேகம் செய்தால், சிவன் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை வழங்குவார்.
கன்னி ராசி
கன்னி ராசிக்காரர்கள், பால் மற்றும் நீரால் சிவலிங்கத்தை அபிஷேகம் செய்தால், நல்ல ஆரோக்கியத்தை அருள்வார்.
துலாம் ராசி
துலாம் ராசிக்காரர்கள், பசு மாட்டுப் பாலால் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்தால், வாழ்வில் நல்ல செல்வ செழிப்போடு இருக்க அருள்புரிவார்.
விருச்சக ராசி
விருச்சக ராசிக்காரர்கள், தேன் அல்லது சர்க்கரை கலந்த நீரால் சிவனுக்கு அபிஷேகம் செய்வது மிகவும் நல்லது.
தனுசு ராசி
தனுசு ராசிக்காரர்கள், குங்குமப்பூ கலந்த பாலால் சிவனுக்கு அபிஷேகம் செய்து, சிவ பஞ்சாக்ஷர மந்திரத்தைப் படிக்க வேண்டும். இதனால் வாழ்வில் உள்ள இன்னல்கள் நீங்கும்.
மகர ராசி
மகர ராசிக்காரர்கள், மகாசிவராத்திரி அன்று சிவனுக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து, வில்வ பழத்தைப் படைத்தால், வாழ்வில் எதிலும் வெற்றிக் கிட்டச் செய்வார்.
கும்ப ராசி
மகாசிவராத்திரி அன்று கும்ப ராசிக்காரர்கள், இளநீர் அல்லது கடுகு எண்ணெயால் சிவலிங்கத்தை அபிஷேகம் செய்தால், நிதி ஆதாயம், லாபம் கிடைக்க உதவுவார்.
மீன ராசி
மீன ராசிக்காரர்கள், மகாசிவராத்திரி அன்று குங்குமப்பூ கலந்த பாலால் சிவனுக்கு அபிஷேகம் செய்தால், செல்வ செழிப்போடு இருக்க வழி வகுக்கும்
எல்லா வளமும் பெற மகாசிவராத்திரியில் விரதம் இருப்பது எப்படி?
மகாசிவராத்திரி விரத முறை..!
சிவபெருமானுக்குரிய விரதங்களிலேயே சிறந்தது மகாசிவராத்திரிதான். அதனால்தான் மகாசிவராத்திரியன்று நாம் சிவபெருமானை வழிபட்டால் நமது பாவங்கள் அனைத்தும் போய்விடும் என்று கூறுகின்றனர். மகாசிவராத்திரியன்று எவ்வாறு விரதம் இருக்க வேண்டும். விரதம் இருப்பதால் உண்டாகும் பலன் என்ன என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
👉 சிவராத்திரி விரதம் இருப்பதால் தெரியாமல் செய்த பாவங்களுடன், தெரிந்தே பாவங்கள் செய்திருந்தாலும் அவை நம்மை விட்டு நீங்கும் என்பது நம்பிக்கை.
👉 சிவராத்திரி தினத்தன்று முழு உபவாசத்தைக் கடைபிடித்தால் எம்பெருமான் வாழ்நாள் முழுவதும் காப்பாற்றுவதுடன் மகிழ்ச்சியையும், வாழ்வில் முன்னேற்றத்தையும் அளிப்பார் என்பது ஐதீகம்.
👉 மனிதர்களுக்கு ரொம்ப முக்கியமானது இரண்டு விஷயம். உணவு, நல்ல தூக்கம், இந்த இரண்டையும் விலக்கி, சிவனுக்காக நாம் விரதமிருப்பது தான் இந்த நாளின் நோக்கமாகும். உணவையும் உறக்கத்தையும் விலக்கினால் புலன்கள் தானாகவே அடங்கும். அப்போது இறையுணர்வு பெற முடியும். நினைத்த காரியம் சித்தி ஆகும்.
👉 மகாசிவராத்திரி அன்று விரதம் இருந்தால் அசுவமேதயாகம் செய்த பலன் கிடைக்கும் என்று ஆகமங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விரதத்தை 24 அல்லது 12 வருடங்களாவது மேற்கொள்ள வேண்டும். அன்றைய தினம் இரவு முழுவதும் சிவபுராணம் படித்தோ அல்லது கேட்டோ சிவ சிந்தனையுடன் இருக்க வேண்டும். இப்படி செய்வதால் வாழ்வில் எல்லா வளமும் வந்து சேரும்.
சிவராத்திரி விரதம் இருப்பது எப்படி?
👉 மகா சிவராத்திரி அன்று விரதம் இருப்பவர்கள், சிவராத்திரிக்கு முதல் நாள் ஒருவேளை மட்டுமே உணவு உட்கொள்ள வேண்டும்.
👉 சிவராத்திரி அன்று அதிகாலையிலேயே எழுந்து குளித்து விட்டு, வீட்டில் உள்ள சிவபெருமானின் உருவப்படத்திற்கு தீப ஆராதனை காண்பித்து வழிபட வேண்டும்.
👉 தொடர்ந்து, சிவன் கோவிலுக்கு சென்று முறைப்படி தரிசனம் செய்ய வேண்டும். மாலையில் மீண்டும் குளித்து சிவபூஜை செய்ய வேண்டும்.
👉 வீட்டிலேயே இதை மேற்கொள்ளலாம். அருகில் உள்ள சிவன் கோவில்களில் நடைபெறும் சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்டும் வழிபடலாம்.
👉 பூஜையின் போது சிவாய நம என்ற மந்திரத்தை உச்சரிப்பது மனோ சக்தியை கொடுக்கும்.
👉 பூஜையின் போது, சிவனுக்கு உகந்த வில்வ இலைகளைக் கொண்டு அர்ச்சனை செய்வது மிகச் சிறந்த பலனை தரும். அன்றைய தினம் இரவில் தூங்கக்கூடாது.
👉 நான்கு ஜாமங்களிலும் தூங்காமல் பூஜை செய்து, மறுநாள் விடியற்காலையில் நீராடி, சிவனை வழிபட்டு, ஏழை-எளியவர்களுக்கு தங்களால் முடிந்த தானத்தை வழங்கி, விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.
👉 சிவராத்திரி முழுவதும் விரதம் இருக்க முடியாதவர்கள், ஒவ்வொரு ஜாமப் பூஜை முடித்த பிறகும் தண்ணீர், பால், பழங்களை உண்ணலாம்.
பூமிதானம், தங்க தானம், கோடிக்கணக்கான பசுக்கள் தானம், புராணங்களில் சொல்லப்பட்ட மற்றைய பல விரதங்களை நெடுங்காலம் கடை பிடிப்பது, நூறு அசுவமேதயாகம் செய்வது, பல முறை கங்கா ஸ்நானம் செய்வது ஆகிய அனைத்தையும் மேற்கொண்டாலும், ஒரு சிவராத்திரி விரதத்தை கடைபிடிப்பதற்கு ஈடாகாது என்பர்.
மகிமை மிக்க மகா சிவராத்திரி தோன்றியது திருவண்ணாமலை தலத்தில் தான் என்பது பலருக்கும் தெரியாத ரகசியமாக உள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தி தினத்தன்று மாத சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. மாசி மாதம் மட்டும் சிவராத்திரி, மகா சிவராத்திரி என்ற சிறப்பைப் பெற்றுள்ளது.
மகா சிவராத்திரி நாளில் பக்தர்கள் இரவு முழுவதும் கண் விழித்து சிவனை வழிபடுவார்கள். உலகம் முழுக்க உள்ள சிவாலயங்களில் மகா சிவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்படும்.
மகிமை மிக்க இந்த மகா சிவராத்திரி தோன்றியது திருவண்ணாமலை தலத்தில் தான் என்பது பலருக்கும் தெரியாத ரகசியமாக உள்ளது. இந்த நாளில்தான் கோடி சூரிய பிரகாசத்துடன் சிவபெருமான் லிங்க வடிவில் திருவண்ணாமலையில் தோன்றினார் என்று புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் பின்னணியில் ஒரு புராண நிகழ்வு சொல்லப்படுகிறது.
விஷ்ணுவுக்கும் பிரம்மாவுக்கும் ஒரு தடவை தம்மில் யார் பெரியவர் என்ற சண்டை ஏற்பட்டது. அவர்களது சண்டையைத் தீர்த்து வைக்குமாறு தேவர்கள் அனைவரும் சிவபெருமானிடம் முறையிட்டனர். அதை ஏற்று சிவபெருமான் மிகப்பெரிய நெருப்புப் பிழம்பாக விஷ்ணு, பிரம்மா இருவர் முன்பும் தோன்றினார். அந்த நெருப்புப் பிழம்பு மண்ணுக்கும், விண்ணுக்கும் பரவி மிகப் பிரமாண்டமாக காட்சி அளித்தது.
அந்த நெருப்புப் பிழம்பு விஷ்ணு, பிரம்மா இருவரிடமும் “எனது அடிமுடியை யார் முதலில் தொட்டு வருகிறீர்களோ, அவரே இந்த உலகின் பெரியவர் ஆவார்” என்றது. உடனே விஷ்ணு வராக (பன்றி) உருவம் எடுத்து அந்த நெருப்புப் பிழம்பின் அடியை காண்பதற்காக பூமியை துளைத்துச் சென்றார்.
பிரம்மனோ அன்னப் பறவையாக மாறி, நெருப்புப் பிழம்பின் முடியை கண்டு வருகிறேன் என்று உயரே பறந்து சென்றார். பல ஆண்டுகள், யுகங்களாக முயன்றும் விஷ்ணு, பிரம்மா இருவராலும் அந்த நெருப்புப் பிழம்பின் அடி, முடியை காண இயலவில்லை. இது ஈசனின் செயலாகத்தான் இருக்கும் என்பதை உணர்ந்த விஷ்ணு, தனது முயற்சியை கைவிட்டு திரும்பி வந்தார். அவரிடம் இருந்த ஆணவம் காணாமல் போய் விட்டது.
ஆனால் பிரம்மாவிடம் இருந்த அகந்தை மட்டும் நீங்கவில்லை. உயர பறக்க முடியாமல் சோர்வடைந்து திரும்பிக் கொண்டிருந்த பிரம்மா, ஒரு தாழம்பூவை பார்த்தார். அந்த தாழம்பூ ஈசனின் முடியில் இருந்து விழுந்து பல நூறு யுகங்களாக கீழே வந்து கொண்டிருப்பதை அறிந்தார்.
நெருப்புப் பிழம்பின் முடியை தான் கண்டதாக பொய் சொல்ல வேண்டும் என்று அந்த தாழம்பூவிடம் பிரம்மா கேட்டுக் கொண்டார். தாழம்பூவும் அதற்கு சம்மதித்தது. தரை இறங்கியதும் அந்த தாழம்பூ பொய் சாட்சி சொன்னது. அவ்வளவுதான்.... நெருப்புப் பிழம்பாக இருந்த சிவபெருமானுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது. அந்த நெருப்புப் பிழம்பில் இருந்து சிவபெருமான் வெடித்துக் கொண்டு லிங்க வடிவில் வெளியில் வந்தார்.
விஷ்ணுவுக்கும், தேவர்களுக்கும் கேட்ட வரங்களை எல்லாம் கொடுத்த சிவபெருமான், பொய் சொன்னதற்காக பிரம்மாவுக்கு, பூமியில் கோவில் இல்லை என்றும், தாழம்பூவை பூஜைக்கு தகுதியற்ற மலராவாய் என்றும் சாபமிட்டார்.
இந்த நிகழ்ச்சி நடந்தது திருவண்ணாமலையில் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் உலகில் திருவண்ணாமலையில்தான் முதன் முதலில் அக்னி தோன்றியது என்கிறார்கள். இந்த அக்னியில் இருந்துதான் சூரியன், சந்திரன் பிரகாசங்கள் மற்றும் தீப ஒளிகள் தோன்றின என்று புராணங்களில் எழுதப்பட்டுள்ளது.
இந்த அக்னியில் இருந்து வெளியில் வந்த சிவபெருமான் “லிங்கோத்பவர்” வடிவில் காட்சிக் கொடுத்தார். இதனால் திருவண்ணாமலையில்தான் முதன் முதலில் லிங்க வழிபாடு தோன்றியது என்பது உறுதியாகிறது. மாசி மாத சிவராத்திரியன்று இந்த நிகழ்வு நடந்ததால், அது மகா சிவராத்திரி என்று சிறப்பித்துக் கூறப்படுகிறது. ஆக, மகா சிவராத்திரி விழா தோன்றிய தலமும் திருவண்ணாமலையே.
திருவண்ணாமலையில் இருந்துதான் லிங்கோத்பவர் வழிபாடும், மகா சிவராத்திரி கொண்டாட்டமும் மற்ற தலங்களுக்குப் பரவியது.
சிவபெருமானுக்குரிய முக்கிய 25 வடிவங்களில் முதலாவது அமைவது லிங்கோத்பவர் வடிவம்தான். லிங்கம் என்பது சிவ வடிவம். அந்த லிங்கத்தில் இருந்து தோன்றிய உருவம்தான் லிங்கோத்பவர். அதாவது லிங்கத்துக்கு தலை, கை, கால் முளைத்தால் கிடைக்கும் உருவம்தான் லிங்கோத்பவர்.
சிவபெருமான் முதலில் உருவம் இல்லாமல் அருவமாகத்தான் இருந்தார். ஆனால் உலக உயிர்கள் முன்பு தோன்ற நினைத்தபோது அருவுருவாகவும், பிறகு உருவமாகவும் தோன்றினார். அருவத்துக்கும், உருவத்துக்கும் இடையில் நின்றதே அருவுருவமாகும். இதுதான் திருவண்ணாமலையில் நெருப்புப் பிழம்பாக நின்ற லிங்கோத்பவர் உருவமாகும். எனவேதான் திருவண்ணாமலையில் லிங்கோத்பவர் வழிபாடு, மிக, மிக சிறப்பானதாகக் கருதப்படுகிறது.
திருவண்ணாமலை ஆலயத்தில் கருவறை கோஷ்டத்தில் மூலவருக்கு நேர் பின்புறத்தில் மேற்கு திசை நோக்கி லிங்கோத்பவர் இருப்பதை காணலாம். இந்த லிங்கோத்பவர், மும்மூர்த்திகளின் அருளையும் ஒரே திருவுருவில் வழங்கிக் கொண்டிருப்பதாக ஐதீகம்.
பொதுவாக லிங்கோத்பவரை பார்க்கும் போதெல்லாம் அவருக்கு விளக்கு ஏற்றி வைத்து வழிபட வேண்டும். மலையில் இருட்டத் தொடங்கும் நேரத்தில் இவர் சன்னதியில் விளக்கேற்றி வழிபட்டால் நமது ஆணவம், அகந்தை எல்லாம் ஓடோடி விடும்.
மகாசிவராத்திரி நாளில் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான சிவாலயங்களில் மூன்றாம் ஜாம பூஜையை லிங்கோத்பவருக்குரிய பூஜையாக நடத்துகிறார்கள். லிங்கத்தில் இருந்து வெளிப்பட்டு அருவுருவமாக லிங்கோத்பவர் அருள்பாவித்த காலமாக இதை சொல்கிறார்கள்.
ஆனால் திருவண்ணாமலை தலத்தில் மட்டும் மகா சிவராத்திரியின் இரண்டாம் ஜாம பூஜையை லிங்கோத்பவருக்குரிய பூஜையாக நடத்துகிறார்கள். லிங்கோத்பவர் முதன் முதலில் திருவண்ணாமலையில் தோன்றியவர் என்ற ஐதீகத்தின் அடிப்படையில் மற்ற தலங்களுக்கு முன்பாக இரண்டாம் ஜாமத்திலேயே திருவண்ணாமலையில் பூஜைகள் நடத்தப்படுவதாக ரமேஷ் குருக்கள் தெரிவித்தார்.
உலக உயிர்கள் “நான்”, “எனது” என்பன போன்ற ஆணவம், அகந்தை கொள்ளாமல், தானும் இந்தப் பிரபஞ்சத்தில் ஒரு சிறு அணுவே என்பதை உணர்ந்து புரிந்து கொள்வதே லிங்கோத்பவர் வடிவத்தின் தத்துவமாக உள்ளது. இந்த வடிவை வழிபட்டால் உடல் நலமும், மோட்ச பிராப்தமும் கிடைக்கும். எனவேதான் இந்த வழிபாட்டை, “மோட்ச பிரதாயினி” என்று சொல்கிறார்கள்.
லிங்கோத்பவர் பூஜையின்போது மட்டும் சுவாமிக்கு நெய்பூசி, வெண்ணீர் அபிஷேகம் செய்து, பிறகு கம்பளி போர்த்தி தாழம்பூ சூட்டுவார்கள். இந்த ஒரு காலத்தில் மட்டுமே சிவனுக்கு தாழம்பூ அணிவிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
திருவண்ணாமலையில் மகா சிவராத்திரியன்று இந்த பூஜையை நேரில் பார்த்து தரிசித்தால் இரட்டிப்பு பலன்கள் கிடைக்கும். அன்றைய தினம் அதிகாலை 3 மணிக்கெல்லாம் அண்ணாமலையாருக்கு அபிஷேகம் செய்யப்படும். பிறகு தங்கக்கவசம் அலங்காரம் செய்து வழிபாடுகள் நடைபெறும். மதியம் வரை லட்சார்ச்சனை நடைபெறும்.
அன்றிரவு 4 ஜாம பூஜைகள் நடத்துவார்கள். இரவு 7 மணிக்கு முதல் ஜாம பூஜை, 11 மணிக்கு இரண்டாம் ஜாம பூஜை நள்ளிரவு 1 மணிக்கு மூன்றாம் ஜாம பூஜை, அதிகாலை 4 மணிக்கு நான்காம் ஜாம பூஜை நடத்துவார்கள்.
இதில் இரவு 11 மணி முதல் 1 மணி வரையிலான இரண்டாம் ஜாம பூஜை லிங்கோத்பவருக்கான பூஜையாக நடைபெறும். அடி, முடி காண முடியாதபடி சிவபெருமான் நெருப்புப் பிழம்பாக நின்ற நேரம் அது. எனவே இந்த நேரத்தில் லிங்கோத்பவரை வழிபாடு செய்வதும், கிரிவலம் வருவதும் மிகுந்த புண்ணியத்தைத் தரும்.
மகாசிவராத்திரி தினத்தன்று திருவண்ணாமலைக்கு வரும் பக்தர்களுக்காக இரவு முழுவதும் பன்னிரு திருமுறை இசைக் கச்சேரி நடைபெறும். ராஜகோபுரம் அருகே 108 தவில், நாதஸ்வர வித்வான்களின் கச்சேரி நடக்கும்.
கோவில் வளாகம் முழுவதும் பக்தர்கள் லட்ச தீபம் ஏற்றி வைப்பார்கள். கடந்த சுமார் 25 ஆண்டுகளாக திருவண்ணாமலையில் லட்சதீபம் ஏற்றப்பட்டு வருகிறது. மகாசிவராத்திரி தினத்தன்று லட்ச தீபத்தை பார்ப்பது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.
அது மட்டுமல்ல, கிரிவலம் வரும் பக்தர்கள், மகாசிவராத்திரி தினத்தில் மட்டும் வில்வ கூடையை ஏந்தியபடி கிரிவலம் செல்வது வித்தியாசமாக இருக்கும். நெருப்பு மலையாக இருக்கும் சிவபெருமானை குளிர்ச்சிப்படுத்த பக்தர்கள் கூடை, கூடையாக வில்வம் எடுத்துச் செல்கிறார்கள் என்பது ஐதீகமாகும். சிவராத்திரி கிரிவலம் காரியசித்தி தரும் என்பார்கள்.
சிவபெருமான் நெருப்பு மலையாக உருவெடுத்தது பற்றி பக்தர்களுக்கு ஒரு சந்தேகம் எழக்கூடும். கார்த்திகை தீபத்தன்றுதானே ஈசன் நெருப்பு உருவில் தோன்றினார் என்று நினைக்கலாம்.
உண்மையில் சிவபெருமான் திருவண்ணாமலையில் இரண்டு தடவை ஜோதி ரூபமாக தன்னை வெளிப்படுத்திக் கொண்டார். மாசி மாதம் விஷ்ணு, பிரம்மாவின் ஆணவத்தையும், அகந்தையையும் விரட்ட நெருப்புப் பிழம்பாக வந்தார். கார்த்திகை மாதம் அம்பாளுக்கு தன் இடப்பாகத்தில் இடம் கொடுத்தப்போது ஜோதிச்சுடராக வந்தார். முதல் ஜோதி தரிசனத்துக்கும் இரண்டாம் ஜோதி தரிசனத்துக்கும் வித்தியாசம் உள்ளதை பக்தர்கள் புரிந்து கொள்ள வேண்டும். மாசியில் நெருப்புப் பிழம்பு, கார்த்திகையில் ஜோதி சுடர்.
சிவபெருமான் ஜோதி ரூபமாக வெளிப்பட்டதால்தான் திருவண்ணாமலை தலம், “அக்னி தலம்” என்ற சிறப்பைப் பெற்றுள்ளது. அண்ணாமலையார் சன்னதியின்அர்த்த மண்டபத்தில் சிறிது நேரம் நின்று பாருங்கள்... அனல் வீசுவதுபோல இருக்கும். வியர்த்துக் கொட்டும். திருவண்ணாமலை நெருப்புத்தலம் என்பதை உறுதிப்படுத்த இந்த உதாரணம் ஒன்றே போதும் என்கிறார் ரமேஷ்குருக்கள்.
சமீபத்தில் விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் அணுவில் உள்ள எலக்ட்ரானுக்குள்ளும் லிங்கம் இருப்பதை கண்டுபிடித்தனர். எலக்ட்ரானுக்குள்ளும் பச்சை நிற வட்டமும, நடுவில் செந்நிறமான ஜோதி வடிவமும் இருப்பதைக் கண்டார்கள். இது திருவண்ணாமலையில் பச்சை பசேல் இயற்கை வளத்துக்கிடையே ஈசன் நெருப்புப் பிழம்பாக தோன்றியதை பிரதிபலிப்பதாக ஆன்மிக பெரியவர்கள் சொல்கிறார்கள்.
அந்த நெருப்பு மலைதான் பக்தர்கள் வழிபடுவதற்கு வசதியாக விஷ்ணு, பிரம்மா வேண்டுதலின்பேரில் சிறு லிங்கமாக மாறியது. அந்த லிங்கத்தை சுற்றியே தற்போதைய ஆலயம் உருவானது.

பழைய போக்குவரத்து நெரிசலில் அண்ணாசாலை!!!

 

வாலாஜா ரோடு மவுண்ட் ரோடு பிளாக்கர்ஸ் ரோடு ஆகியவை சந்திக்கும் பழைய போக்குவரத்து நெரிசலில் அண்ணாசாலை!!!

1970ல் எங்கு காணினும் ஃபியட் அம்பாசிடர்கள் மயமாக காட்சி அளிக்கும் அண்ணாசாலையில் நடுநடுவே பழைய சென்னையின் சில சிகப்பு பஸ்கள்!!!
இந்த டிராஃபிக்கை சுற்றிலும் எல்ஐசி தேவி தியேட்டர் பாட்டா ஷோரூம் ஓமந்தூரார் அரசினர் விடுதி காதி பவன் ரிச்சி தெரு பழைய உடுப்பி ஓட்டல் போன்ற மறக்க முடியாத இடங்கள் நிறைந்து இருந்த காலம்!!!

Palakkad Rural Kerala

 Palakkad Rural Kerala



25.02.2025 தென் கைலாயம் வெள்ளியங்கிரி ஆண்டவரின்

 

25.02.2025

தென் கைலாயம் வெள்ளியங்கிரி ஆண்டவரின் இன்றைய அலங்காரம் 🙏
தென்னாடுடைய சிவனே போற்றி 🙏
எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி 🙏
அவன் அருளாலே அவன்தாள் வணங்கி 🙏
ஓம் சிவாய நமக 🙏
திருச்சிற்றம்பலம் 🙏

தாமஸ் எடிசன், ஒரு காரை வடிவமைக்கும் யோசனையில்

 1896 ஆம் ஆண்டில், மின்சார விளக்கைக் கண்டுபிடித்த சிறந்த கண்டுபிடிப்பாளரான தாமஸ் எடிசன், ஒரு காரை வடிவமைக்கும் யோசனையில் வேலை செய்து கொண்டிருந்தார், அவர் தம்மிடம் வேலை பார்த்துக்கொண்டிருக்கும் ஒரு இளைஞன் ஒரு சோதனை காரை உருவாக்கி இருப்பதைக் கேள்விப்பட்டார்.

எடிசன் அந்த இளைஞனை நியூயார்க்கில் நடந்த தனது நிறுவனத்தின் பார்ட்டியில் சந்தித்து கார் பற்றி கேட்டறிந்தார். அவர் அவனது ஐடியாக்களால் ஈர்க்கப்பட்டார்! அந்த இளைஞனைப் போலவே அவருக்கும் ஒரு காரை வடிவமைக்கும் அதே யோசனை இருந்தது. எடிசன் மின்சார ஆற்றல் மூலமாக அந்த காரை இயக்கும் ஐடியாவில் இருந்தார், ஆனால் அந்த இளைஞன் காரை இயக்குவதற்கு பெட்ரோல் எஞ்சினைப் பயன்படுத்தப்போதாக கூறினான். அவர் ஆச்சர்யத்தில் தனது கையை மேஜை மீது குத்தி, "இளைஞரே, அபாரம், உண்மையில் உனது யோசனை சிறப்பானது. வெற்றிக்கான விஷயங்கள் அனைத்தும் உங்களிடம் உள்ளது! நீங்கள் பெரிய வெற்றி பெறுவீர்கள்" என்றார்.
அந்த நேரத்தில் அமெரிக்காவில் மிகவும் மதிக்கப்படும், கொண்டாடப்படும் கண்டுபிடிப்பாளரின் இந்த ஊக்கமூட்டும் வார்த்தைகளால், ஹென்றி ஃபோர்டு தனது வேலையைத் தொடர்ந்தார், ஒரு காரைக் கண்டுபிடித்தார், பிறகு ஒரு கார் தொழிற்சாலையை தொடங்கினார். பெரும் பணக்காரர் ஆனார்.
டிசம்பர் 9, 1914 அன்று, எடிசனின் ஆய்வகம் மற்றும் தொழிற்சாலை தீக்கிரையானது. அவர் 67 வயதானவர் மற்றும் காப்பீட்டுத் தொகை போதுமானதாக இல்லை. எறியும் சாம்பல் அடங்கும் முன், ஹென்றி ஃபோர்டு 7,50,000 டாலர்களுக்கான காசோலையை எடிசனிடம் கொடுத்தார், உங்களுக்கு மேலும் தேவைப்பட்டாலும் உதவ நான் இருக்கிறேன், என்று கூறிச் சென்றார்.
1916 ஆம் ஆண்டில், ஹென்றி ஃபோர்டு தனது வீட்டை எடிசனின் வீட்டிற்கு அடுத்த கட்டிடத்திற்கு மாற்றினார், சிறிது காலத்தில் எடிசன் நடக்க முடியாமல் சாய்வு நாற்காலியில் அவரது மருத்துவர்களால் உட்கார வைக்கபட்டபோது, ஹென்றி ஃபோர்டு தனது வீட்டில் ஒரு சக்கர நாற்காலியை வாங்கினார், தனது நண்பர் மற்றும் வழிகாட்டிக்காக, அவர் அங்கும் இங்கும் நகர வேண்டும் என்பதற்காக தமது வீட்டில் பெரிய அறையை நிறுவினார்.
எடிசன், ஹென்றி ஃபோர்டுக்கு தனது பலத்தை உணர்த்தினார், தன்மீது ஹென்றிக்கு நம்பிக்கை வர காரணமாக இருந்தார். அதனால் வாழ்நாள் முழுவதும் தமக்கான ஒரு நல்ல நண்பரைப் பெற்றார்!
பாடம் :
மற்றவர்களின் வெற்றியைக் கண்டு பொறாமை கொள்ளாதீர்கள். உங்களால் பந்தயத்தில் வெற்றிபெற முடியாவிட்டால், சாதனையை முறியடிக்க உங்களுக்கு முன்னால் ஓடுபவர்களுக்கு உதவுங்கள்!
உங்கள் மெழுகுவர்த்தி மற்றொரு மெழுகுவர்த்தியை ஏற்றும்போது அதன் ஒளியை இழக்காது!

பப்பாளியின் மருத்துவப் பண்புகள்.....!

 

பப்பாளியின் மருத்துவப் பண்புகள்.....!

* நல்ல மலமிளக்கி. மலச்சிக்கல் வயிற்றுக் கடுப்பு, செரிமானமின்மை, அமிலத்தொல்லை போன்ற பிரச்சனைகளுக்குஅருமருந்து......!
* பித்தத்தைப் போக்கும்......!
* உடலுக்குத் தென்பூட்டும்......!
* இதயத்திற்கு நல்லது......!
* மனநோய்களைக் குணமாக்குவதில் உதவும்......!
* கல்லீரலுக்கும் ஏற்றது......!
* கணைய வீக்கத்தைக் கட்டுப்படுத்தும்......!
* சிறுநீர்க் கோளாறுகளைத் தீர்க்கும்.....!
* கல்லீரல் கோளாறுகளைத் தீர்க்கும்.....
!* முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு உதவும்......!
*இரத்தச்சோகைக்குநிவாரணமளிக்கும்......!
* மண்ணீரல் வீக்க சிகிச்சையில் பப்பாளி பயன்படுகிறது......!
* பழுக்காத பச்சைப் பப்பாளித் துண்டுகள் அல்லது சாறை அருந்தினால், குடலிலுள்ள வட்டப்புழுக்கள்வெளியேறும்.....!
* பப்பாளியிலுள்ள ‘பப்பாயின்’ என்சைம்களில் ‘ஆர்ஜினைன்’ என்பது ஆண்களுக்கான உயிர் உற்பத்தித் திறனை மேம்படுத்தவும்,‘கார்பின்’ இருதயத்திற்கும், ஃபைப்ரின் இரத்தம் உறைதலுக்கும் உதவுகின்றது......!
* பப்பாளியிலுள்ள விதவிதமான என்சைம்களின் சேர்க்கை, புற்றுநோயைக் குணப்படுத்த வல்லது......!
* இளமைப் பொலிவைக் கூட்டி வயோதிகத்தைக் கட்டுப்படுத்துவதாக பப்பாளிகளை சிறப்பித்துக் கூறுவர்......!
* உடலிலுள்ள நச்சு முழுக்க பப்பாளியால் சுத்திகரிக்கப்படுகிறது......!
* இயற்கை மருத்துவச் சிகிச்சையின் கீழ் ‘பட்டினிச் சிகிச்சை’ மேற்கொள்கையில் பப்பாளிச் சாறும், வெள்ளரிச் சாறும் மாற்றி மாற்றிக் குடித்தால் உடல் கழிவுகள் நீக்கத்தில் பெரும்பயன் விளையும்......!
* ‘ஆண்டிபயாடிக்’ மருந்துகளில் சிகிச்சை பெற்றபின் ஒருவர், பப்பாளி நிறையச் சாப்பிட வேண்டும். ஏனெனில் குடல் தசைகளில் அழிக்கப்பட்டிருக்கும் நல்ல பாக்டீரியாக்களைமீண்டும் உற்பத்தி செய்வதற்கு பப்பாளி உதவும்......
!* நன்றாகப் பழுத்த பப்பாளிப் பழத்தின் விதைகள், குடல் புழுக்களை வெளியேற்ற உதவும். கூடவே தாகம் போக்குவதில் நல்ல பயன் தரும்.பப்பாளி இலைகளின் பொடி யானைக்கால் வியாதிக்கும், நரம்பு வலிகளுக்கும் மருந்தாக விளங்குகிறது......!
வருடம் முழுவதும் கிடைக்கக்கூடிய பழம் இது.
இதிலும் வைட்ட மின் ஏ உயிர் சத்து நிறைய இருக்கிறது.
பல் சம்மந்தமான குறை பாட்டிற்கும், சிறு நீர்ப்பையில் உண்டாகும் கல்லை கரைக்கவும் பப்பாளி சாப்பிட்டால் போதும்.
மேலும்- நரம்புகள் பலப் படவும், ஆண்மை தன்மை பலப்படவும், ரத்த விருத்தி உண்டாகவும், ஞாபக சக்தியை உண்டு பண்ணவும் பப்பாளி சாப்பிடுங்கள்......!
மாதவிடாய் சரியான அளவில் இன்றி கஷ்டப்பட்டு கொண்டி ருக்கும் பெண்மணிகள் தினமும் பப்பாளிப்பழம் உண்டு வந்தால் மாதவிடாய் குறைபாடு சீராகும்......!
அடிக்கடி பப்பாளி பழத்தினை உண்டு வருபவர்கள் எவ்வகை நோய்க்கும் ஆளாக நேரிடாது. எந்த வகையான தொற்று நோய் பரவினாலும், அது இவர்களை தாக்காது. பப்பாளி பழத்தில் இயற்கையாகவே விஷக்கிருமிகளை கொல்லும் ஒரு வகை சத்து இருப்பதால் பப்பாளி பழத்தை சாப்பிடுபவர்களின் ரத்தத்தில் நோய் கிருமிகள் தங்கி நோயை உண்டு பண்ண வாய்ப்பில்லை....
படித்துவிட்டு அதிகம் பகிருங்கள்.

sylvester stallone

 'ராக்கி', 'ரேம்போ' போன்ற கதாபாத்திரங்களில் நடித்து பல கோடி மக்களின் மனதைக் கொள்ளை அடித்தவர் திரைப்பட நடிகர் சில்வெஸ்டர் ஸ்டாலோன்.

அவர் பிறக்கும் போது மருத்துவரின் தவற்றால் பக்கவாதம் தாக்கி உடலில் ஒரு பக்கம் செயலற்றுப் போய் விட்டது. ஏழை என்பதாலும், பக்கவாதத்தால் பாதி முகம் பாதிக்கப்பட்டிருந்ததாலும் பள்ளியில் சக மாணவர்களின் கேலிப் பொருளானார்.
தன்னை கேலி செய்யும் மாணவர்களைப் பயமுறுத்த வேண்டும் என்று அவர் பாடி பில்டிங் பயிற்சிகளில் ஈடுபட்டார். பின் திரைப்பட நடிகர் ஆக வேண்டும் என்ற ஆசையும் துளிர் விடத் துவங்கியது.
1974 வாக்கில் அவருக்கு இருந்ததெல்லாம் கர்ப்பமுற்ற மனைவியும், அவருக்குப் பிரியமான ஒரு நாயும், பணம் கட்ட வேண்டிய ஏகப்பட்ட பில்களும், நடிப்புலகில் வெற்றி இல்லாத நிலையும் தான்.
ஆனால் அவருக்குள் ஒரு அணையா நெருப்பாக இருந்தது -"நான் உயர்ந்த நிலைக்கு வருவேன் என்ற கனவும் அதுகுறித்த நம்பிக்கையும் மட்டும் தான்."
விரைவில் அவர் கடன் சுமையால் முழுவதுமாக நொறுங்கிப்போன நிலைக்குள்ளானார்.
நிலைமை மோசமாகி மனைவியின் நகைகளை விற்றதோடு, வீடற்றவராகவும் ஆகிப்போனார். இரவு நேரத்தை நியூயார்க் நகர பஸ் ஸ்டாண்டில் தூங்கிக் கழிக்க வேண்டியதாயிற்று.
கடுமையான குளிரில் தன்னுடைய நாயும் சிரமப்பட வேண்டாம் என்று ஒரு மதுக்கடை வாசலில் நின்று, அங்கு வந்த ஒருவரிடம் தனது அன்புக்குரிய நாயை 25 டாலருக்கு விற்று விட்டார்.
இரண்டு வாரத்திற்குப் பின் அவர் உலகப் புகழ் பெற்ற முகம்மது அலி, சக் வெப்நர் இடையில் நடைபெற்ற குத்துச்சண்டையை டிவி-யில் பார்த்தார். அந்த குத்துச்சண்டைப் போட்டி அவருக்கு ஒரு தெய்வீக தூண்டுதல் போல் அமைந்தது.
அடுத்த 20 மணி நேரத்தில், இன்றும் வெறித் தனமாக ரசிக்கப் படுகின்ற 'ராக்கி' என்ற படத்தின் கதை வசனத்தைச் சிந்தித்துத் திட்டமிட்டு எழுதினார்.
அந்த கதையைக் கிட்டத்தட்ட 1,500 தயாரிப்பாளர்கள் வேண்டாம் என்று அலட்சியமாக ஒதுக்கித் தள்ளிய பிறகு ஒரு தயாரிப்பு நிறுவனம் 1,25,000 டாலருக்கு வாங்க முன் வந்தது.
ஆனால் ஸ்டாலோன் தான்தான் அந்த கதையில் ஹீரோவாக நடிப்பேன் என்று சொன்னதை அவர்கள் ஒப்புக் கொள்ளவில்லை.
ஹீரோக்கள் மிக அழகான தோற்றத்தை உடையவர்களாகவும் சரளமாக வசனம் பேசக் கூடியவர்களாகவும் இருந்த அந்த காலகட்டத்தில், கொன்னல் வாயுடையவராக குழறிப் பேசுகிற ஸ்டாலோன் அந்த பாத்திரத்துக்கு தகுதியானவர் இல்லை என்று சொன்னார்கள். ஸ்டாலோன் அதை ஏற்க மறுத்து விட்டார்.
ஒரு மாதம் கழித்து மீண்டும் அவர்கள் ஸ்டாலோனிடம் 3,50,000 டாலர் தருகிறோம் என்றார்கள். ஆனால் அவரே நடிப்பதற்கு அவர்கள் இப்பொழுதும் ஒத்துக் கொள்ளவில்லை.
வாய்ப்பை ஏற்றுக்கொள், கதையை மட்டும் விற்றுவிடு என்று எல்லாரும் சொன்னார்கள். அப்படிச் செய்யாமலிருப்பது 'பைத்தியக்காரத்தனம்' தான்... அது மிகப் பெரிய தொகை.
ஆனால் ஸ்டாலோன் இப்போதும் அதை ஏற்க மறுத்து விட்டார்.
அந்த ஸ்டூடியோவில் யாரோ ஒருவருக்கு ஸ்டாலோனின் கதை மிகவும் பிடித்திருந்தது. அதிர்ஷ்ட தேவதை துணிச்சல் உடையவர்களைத்தான் திரும்பிப் பார்க்கிறாள்... கடைசியாக அவர்கள் அந்த கதைக்கு 35,000 டாலர் கொடுப்பதுடன் ஹீரோ பாத்திரத்தில் ஸ்டாலோன் நடிக்கவும் ஒப்புக் கொண்டனர்!
பின்னர் நடந்ததெல்லாம் உலகமறிந்த வரலாறு.
அந்த படம் ஒரு மில்லியன் டாலர் செலவில் தயாரிக்கப்பட்டு, 200 மில்லியன் டாலரை சம்பாதித்துக் கொடுத்தது!
அது சிறந்த திரைப்படத்துக்கான ஆஸ்கார் விருதுடன், சிறந்த இயக்குநர் மற்றும் சிறந்த எடிட்டிங் ஆகியவற்றுக்கான ஆஸ்கார் விருதுகளையும் தட்டிச் சென்றது.
அடுத்த 20 வருடங்களுக்கு, 1990-களின் கடைசி வரையில், ஸ்டாலோன் தயாரிப்பாளர்களின் காமதேனுவாகவே விளங்கினார்... அவருடைய படங்கள் பில்லியன் கணக்கில் டாலர்களை குவித்தன.
அது இருக்கட்டும். அந்த முதல் 35,000 டாலரை வைத்து அவர் என்ன செய்தார் தெரியுமா?
பல வருடங்களுக்கு முன்பு தனது நாயை விற்ற அதே மதுக்கடையின் வாசலில் 3 நாள் காத்து நின்று, தன் நாயை வாங்கியவரைக் கண்டு பிடித்து, 15,000 டாலர் கொடுத்து தனக்குப் பிரியமான அந்த நாயை மீண்டும் வாங்கினார்.
சில்வெஸ்டர் ஸ்டாலோன் ஒரு சகாப்தம்

தமிழ்நாட்டில் எந்த ஊரில் என்ன வாங்கலாம்...!

 தமிழ்நாட்டில் எந்த ஊரில் என்ன வாங்கலாம்...!

திருநெல்வேலி - அல்வா
ஸ்ரீவில்லிபுத்தூர் - பால்கோவா
கோவில்பட்டி - கடலைமிட்டாய்
பண்ருட்டி - பலாப்பழம்
மார்த்தாண்டம் - தேன்
பவானி - ஜமுக்காளம்
உசிலம்பட்டி - ரொட்டி
நாச்சியார் கோவில் - விளக்கு, வெண்கலப் பொருட்கள்
பொள்ளாச்சி - தேங்காய்
வேதாரண்யம் - உப்பு
சேலம் - எவர்சில்வர், மாம்பழம், அலுமினியம், சேமியா
சாத்தூர் - காராசேவு, மிளகாய்
மதுரை - மல்லிகை, மரிக்கொழுந்து
திருப்பூர் - பனியன், ஜட்டி
உறையூர் - சுருட்டு,கைத்தறி புடவை
கும்பகோணம் - வெற்றிலை, சீவல்
தர்மபுரி - புளி, தர்பூசணி
ராஜபாளையம் - நாய்
தூத்துக்குடி - உப்பு
ஈரோடு - மஞ்சள், துணி
தஞ்சாவூர் - கதம்பம், தட்டு, தலையாட்டி பொம்மை
நீலகிரி - தைலம்
ஊட்டி - உருளைக்கிழங்கு, தேயிலை, வர்க்கி
கல்லிடைக்குறிச்சி - அப்பளம்
காரைக்குடி - ஓலைக்கூடை
செட்டிநாடு - பலகாரம்
திருபுவனம் - பட்டு
குடியாத்தம் - நுங்கு
கொள்ளிடம் - பிரம்பு பொருட்கள்
ஆலங்குடி - நிலக்கடலை
கரூர் - கொசுவலை
திருப்பாச்சி - அரிவாள்
காஞ்சிபுரம் - பட்டு, இட்லி
திண்டுக்கல் - பூட்டு, மலைப்பழம்
பத்தமடை - பாய்
பழனி - பஞ்சாமிர்தம், விபூதி
மணப்பாறை - முறுக்கு, மாடு
உடன்குடி - கருப்பட்டி
கவுந்தாம்பட்டி - வெல்லம்
ஊத்துக்குளி - வெண்ணெய்
கொடைக்கானல் - பேரிக்காய்
குற்றாலம் - நெல்லிக்காய்
அரியலூர் - கொத்தமல்லி
சிவகாசி - வெடி, தீப்பெட்டி, வாழ்த்து அட்டை
கன்னியாகுமரி - முத்து, பாசி, சங்குப் பொருட்கள்
திருச்செந்தூர் - கருப்பட்டி
குளித்தலை - வாழைப்பழம்
ஆம்பூர் - பிரியாணி, தோல் உற்பத்தி பொருள்கள்..
ஒட்டன்சத்திரம் - முருங்கைக்காய்,தக்காளி
ஓசூர் - ரோஜா
நாமக்கல் - முட்டை
பல்லடம் - கோழி
குன்னூர் - கேரட்
.
விருதுநகர் - பரோட்டா
திருச்சி - லால்கடை பூந்தி
வாணியம்பாடி - பிரியாணி , தோல் உற்பத்தி பொருள்கள்..

திருப்பூர் இருந்து திருவண்ணாமலை செல்லும் பேருந்துகளை பற்றி லேசாக

 

கிரிவலம் எக்ஸ்பிரஸ் .

நண்பர்களே , திருப்பூர் இருந்து திருவண்ணாமலை
செல்லும் பேருந்துகளை பற்றி லேசாக
பார்ப்போம். கோவை மண்டலத்தில் இருந்து , 6 பேருந்துகள்
இயக்கப்படுகிறது. இந்த பேருந்து திருப்பூர் இருந்து புறப்பட்டு
நசியனூர் , சித்தோடு , செலம் , அரூர் , uttankarai , செங்கம்
வழியாக திருவண்ணாமலைக்கு செல்கிறது.
காலை நேரம் சரியாக 7:30 & 8:00 மணிக்கு புறப்பட்டு
மாலை நேரம் 4:45 ,5 மணிக்கு க்கு திருவண்ணாமலையில் சேருகிறது.
மதியம் 1:30 க்கு புறப்ட்டு
இரவு 9:45 க்கூ திருவண்ணாமலை யில் சேருகிறது.
கடைசி பேருந்து இரவு 9:30 &10 மணிக்கு புறப்பட்டு
காலையில் 6 மணிக்கு சேரும்.
திருவண்ணாமலையில் இருந்து காலை நேரத்தில 05:00 AM, 08:25 AM ; மதிய நேரத்தில், ; மாலை மற்றும் இரவு நேரத்தில, 19:30 PM ; NIGHT, 20:40 PM, 21:05 PM . பாதுகாப்பான இனிமையான பயணத்திற்கு நம் அரசு பேருந்துகளை பயன்படுத்தி கொள்ளுங்கள்.
ஓம் நமச்சிவாய

அதிகாலை குளிர்ல சில்லுனு பதநீர் குடிக்கணுமா?

 அதிகாலை குளிர்ல சில்லுனு பதநீர் குடிக்கணுமா?

பண்ருட்டியில் இருந்து அரசூர் நோக்கி போகும்போது மனம் தவிர்ந்த புத்தூர் கிராமத்திற்கு முன்பு இந்த பதநீர் கிடைக்கும்.
நேரடியாக பனை மரத்திலிருந்து இறக்கி வரப்பட்ட பதநீர் தெளிய வைத்து இங்கு விற்பனை செய்கிறார்கள்.
காலை 5 மணியிலிருந்து 9 மணி வரை கிடைக்கும். கலப்படமில்லாத உடலுக்கு ஆரோக்கியம் தரும் பதநீரை இந்த வழியா போகும்போது வாய்ப்பு கிடைச்சா வாங்கி குடிச்சு பாருங்க.
அரை லிட்டர் அளவுள்ள ஒரு சொம்பு பதநீர் 30 ரூபாய்.
உங்கள் பகுதியில் இது கிடைக்கிறதா? என்ன விலைல விக்கிறாங்கன்னு கமெண்ட்ல சொல்லுங்க.

120 ஆண்டுக்கு பிறகு ஒருமுறை மட்டுமே பூ பூக்கும் ஒரே மரம்

 

120 ஆண்டுக்கு பிறகு #ஒருமுறை மட்டுமே பூ பூக்கும்

ஒரே மரம்
#பனைமரம் மட்டுமே...
பனை மரம் தனது #120 வருட நிறைவுக்குபின்
இப்படி பூக்கும்...
இதோடு இதன்
வாழ்வு முடிந்துவிடும்...

Vetikunnu island...trekking...பரம்பிக்குளம்..

 பரம்பிக்குளம்...

Vetikunnu island...
இப்ப நினைச்சாலும் அத்தனை புத்துணர்வா இருக்கு...
Reserved forest...
அதுல கொஞ்சம் தூரம் trekking...
அப்புறம், 2 மணி நேரம் lakeல boating...
அதுவும் மூங்கில் படகு, துடுப்பு போட நாலு guards கூட வருவாங்க...
ஏரியை கடந்ததும்,
ஒரு தீவு...
அதுல ஒரே ஒரு building...
5 படுக்கையும், இரண்டு rest room இருக்கற ஒரு room...
சின்னதா ஒரு living room...
கூடவே ஒரு சமையல் அறை...
சுத்திலும் பெரிய காடு...
காட்டை சுத்தியும் ஏரி...
யானைகள் வராம இருக்க guest house முன்னாடி அகழி வெட்டியிருப்பாங்க...
அப்படியும் சில சமயம் யானைகள் வருவதுண்டு...
மான்கள் நிச்சயம் பார்க்கலாம்...
ஏரில முதலைகளையும் சுலபமா பார்க்கலாம்...
அதிர்ஷ்டம் இருந்தா சிறுத்தை, புலி கூட பார்க்கலாம்...
இப்படி ஒரு இடத்துல தான்,
ஒரு nyt தங்குனோம்...
காட்டோட வாசத்தை நாசியோட அத்தனை அணுக்கள்லயும் சுவாசிச்சோம்...
பறவைகள் சத்தத்தோட விடியல் அப்படி ஒரு அழகு...
மழை வாழ் மக்களோட கை பக்குவத்துல,
சமையல் அவ்ளோ ருசி...
5 நபர்கள் மட்டுமே தங்க அனுமதி...
மளிகை பொருள் நாம வாங்கிட்டு போயிடணும்...
கூட வர்ற guards சமைச்சு கொடுப்பாங்க...
Online booking மட்டும் தான்...
ஒரு இரவுக்கு 5 நபர்கள் தங்க,
சாப்பிட,
Trekking போக...
10000 rs charge பண்றாங்க...
www.parambikulam.org websiteல book பண்ணிக்கலாம்...
காடு, மலை, கானுயிர்களை நேசிக்கறவங்களுக்கு...
இது வரப் பிரசாதம்...
விருப்பம் இருக்கறவங்க ஒரு தடவை போய் பாருங்க

Featured Post

ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதைகள் இருக்கிறது

ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதைகள் இருக்கிறது என்பதையும், ஓர் பலாப்பழத்தைப் பிளக்காமல் அதன் உள்ளிருக்கும் சுளையின் எண்ணிக்கையைய...