Friday, February 21, 2025

திரிபலா பொடி மலச்சிக்கல் தீரும், குடல் புண் ஆறும்-1

திரிபலா பொடி
மலச்சிக்கல் தீரும், குடல் புண் ஆறும். இரத்தச் சோகை அதிக உடல் எடை குறையும். உடலில் அதிகப்படியாக உள்ள கொழுப்பு , வெளியேறும்.
நன்றாக காய வைத்த நெல்லி வற்றல்,கடுக்காய்த்தோல், மற்றும் தான்றிக்காய்த்தோல் பொடிகள் ,சம அளவில் கலந்ததே ,திரிபலா சூரணம்.
இதை, இரவில் ஒரு தேக்கரண்டி அளவு சுடுதண்ணீரில் கலந்து தினமும் சாப்பிட்டு வர , குடல் புண் ஆறும். இரத்தச் சோகை அதிக உடல் எடை குறையும்.உடலில் அதிகப்படியாக உள்ள கொழுப்பு , வெளியேறும்
உடல் முதுமை மாறி, இளமைப்பொலிவு ஏற்படும். மலச்சிக்கல் தீரும்.திரிபலாவில் க்ரீன் டீயை விடவும் அதிக ஆண்டி ஆக்ஸிடெண்டுகள் உள்ளதாக ஆய்வு கூறுகிறது
ஆங்கில மருந்துகள் நிறைய உட்கொள்பவர்கள், இம்மருந்தினை காலை- இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வர, ஆங்கில மருந்துகளால் உண்டாகும் பக்க விளைவுகளைக் குறைத்துக் கொள்ளலாம்.
திரிபலா குடல் அழற்சிக்குக்கூட நல்ல மருந்து.
திரிபலாவை புறக்காயங்களுக்கு மருந்தாகவும் பயன்படுத்தலாம். திரிபலா கலந்த கொதிக்கவைக்கப்பட்ட நீரால் காயங்களைக் கழுவதும் நல்ல பயன் தரும்.
அதேபோல வாய்ப்புண் வருகிற போதும் இதைப் பயன்படுத்தலாம்மேலும் சர்க்கரை நோய்க்கு இணை மருந்தாய் பயன்படுத்த லாம்
தொண்டை வலி:
சளி பிடிக்கிறதுக்கு ஒரு நாலைஞ்சு மணி நேரத்துக்கு முன்னாடி பாத்தீங்கன்னா தொண்டை ஒரு மாதிரி கரகரக்கும். அப்பவே தெரியணும், நமக்கு நாளைக்கு சளி பிடிக்கப் போவுதுன்னு. அந்த மாதிரி நேரத்துல நான் என்ன செய்வேண்டுமென்றல், கொஞ்சம் திரிபலாவை எடுத்து சுடுதண்ணியில போட்டு, நல்லா வாய் கொப்பளிக்க . சளி வராது. தொண்டைக்கும் இதமா இருக்கும். பிள்ளை அவ்வப்போது பள்ளிக்கூடத்திலிருந்து கொண்டுவரும் மற்ற தொண்டை வலிகளுக்கும் இது நல்ல மருந்து. வாய் கொப்புளிச்சுத் துப்பத் தெரிந்த குழந்தைகளுக்கும் கொடுக்கலாம். முழுங்கினாலும் பெரிய பிரச்சினை இல்ல, இருந்தாலும் ரொம்ப சின்ன பிள்ளைங்களுக்கு வேணாம்.
பல்லிடுக்குப் பிரச்சினை:
சில நேரம் பல்லிடுக்கில் உணவுத் துகள் மாட்டிக் கொள்கிறது. காரட் துண்டு, ஆட்டுக்கறி இப்படி. அப்போது கவனிக்காம விட்டுட்டா, அடுத்த நாள் வலிக்கும். அப்போ அந்தத் துணுக்கை floss போட்டு எடுத்துட்டாலும் வலிக்கும். அந்த நேரத்தில் திரிபலாவை சுடுதண்ணியில போட்டு வாய் கொப்பளிச்சா, அல்லது அந்த இடத்தில் வைத்து லேசாக பல் தேய்ப்பது போலத் தேய்த்தால் வலி மாயமாய்ப் போகிறது. மற்ற வகை பல்/ஈறு வலிகளுக்கும் இதைப் பயன்படுத்திப் பார்க்கலாம்.
திரிபலா எப்படி நமக்கு உதவுகின்றது?
திரிபலா என்பது அற்புதமான ஆயுர்வேத மருத்துவத் தயாரிப்பு ஆகும். ஆயுர்வேத மருத்துவர்களால், உலகம் முழுவதும் பரவலாக எந்த நோய்க்கும் மருந்தாகப் பயன்படுத்தப்படுவது திரிபலா. சர்க சம்ஹிதா என்னும் ஆயுர்வேத நூலில் முதல் அத்தியாயத்திலேயே திரிபலாவைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது என்பது ஆச்சரியமான விஷயமாகும். நெல்லிக்காய், கடுக்காய் மற்றும் தான்றிக்காய் ஆகிய இம்மூன்றின் கலவையானது அற்புதமான காயகல்பமாகி, தேவர்களின் அமிர்தத்தினைப் போல் எந்த ஒரு வியாதியையும் தீர்க்கும் அற்புத சக்தியினைப் பெற்றுள்ளது.
நோய் எதிர்ப்புச் சக்தி
ஆயுர்வேதத்தில் திரிபலா என்பது இளமையை பாதுகாக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது நமக்கு முதுமைத் தன்மையை நீக்கி இளமைத் தன்மையை அதிகரிக்கச் செய்யும் என்று பொருள். இது உடல் ஆரோக்கியத்தினை அதிகரிக்கவும், நோய் எதிர்ப்புச் சக்தியைக் கூட்டவும் உதவுகிறது. ஆரோக்கியமான வாழ்வில் நோய் எதிர்ப்புச் சக்தி என்பது ஒரு முக்கியமான அங்கமாகும். இது எப்போதுமே அதிகமாகவே இருக்க வேண்டும். நமது உடலில் இயற்கையாகவே அமைந்திருக்கும் தடுப்பு அரண்களைத் தாண்டி, உடலின் உள்ளே நுழையும் கிருமிகளை எதிர்த்துப் போராடும் ‘ஆன்டிபாடி’ (antibodies) எனப்படும் நோய் எதிர்ப்பு சக்திகளை அதிக அளவில் உற்பத்தி செய்ய, இந்த திரிபலா உதவுகிறது.
ஆன்டி-ஆக்ஸிடன்ட்
உடலில் செல்களுக்கிடையில் நடைபெறும் வளர்ச்சிதை மாற்றத்தில், சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்டாக திரிபலா செயலாற்றுகிறது. நமக்கு முதுமையைத் தரும் முக்கியமான காரணியான “கட்டற்ற காரணிகளை” (free radicals) உற்பத்தி செய்யும் வாய்ப்பைக் குறைக்கிறது. மேலும் செல்கள் முறையாகச் செயல்படுவதற்கு முக்கியமாகத் தேவைப்படும் மைட்டோகாண்டிரியா, கோல்கை உறுப்புகள், உட்கரு ஆகியவை சிறப்பாகச் செயல்படுவதையும் திரிபலா தூண்டுகிறது.
செரிமானமின்மை
செரிமானக் கோளாறுகளை திரிபலா அற்புதமாக குணப்படுத்துகிறது. அதிலும் உணவுப்பாதையில், மலத்தினை வெளித்தள்ளும் குடலியக்கத்தை சீராக செயல்பட வைக்கிறது. மேலும் இரத்தத்தில் உள்ள கொழுப்பினை கரைக்க தேவைப்படும் பைல் (Bile) திரவத்தினை கல்லீரலிலிருந்து சுரக்கவும் உதவுகிறது. உணவுப்பாதையில் தேவையான கார அமிலநிலையை (pH level) தேவையான நிலையில் பேணுவதற்கும் துணை புரிகிறது.
மலச்சிக்கல்
திரிபலா ஒரு சிறந்த குடல் சுத்திகரிப்பானாகச் செயல்படுகிறது. மலச்சிக்கலுக்கு அதிகமாகப் பரிந்துரைக்கப்படும் இயற்கை மருந்து திரிபலாவாகும். உடலிலுள்ள நச்சுப்பொருட்களை நீக்கும் நச்சு நீக்கியாகவும் இது செயலாற்றுகிறது. சிறந்த மலமிளக்கியாகவும் பயன்படுகிறது.
வயிற்றுப் பூச்சிகளும் தொற்றுகளும்
வயிற்றில் பூச்சி வளர்வதையும், தொற்றுக்களையும் கட்டுப்படுத்தும் சக்தி வாய்ந்தது தான் திரிபலா. குறிப்பாக வயிற்றிலிருந்து நாடாப்புழுக்களையும், வளையப்புழுக்களையும் வெளியே அகற்றுவதற்கு பெரிதும் உதவுகிறது. மேலும் உடலில் பூச்சிகளும், நுண்கிருமிகளும் வளர்வதற்கு உதவாத நச்சு நிலையை உடலில் பேணுவதற்கு திரிபலா உதவுகிறது.
இரத்தசோகை
இரத்தத்தில் இரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையினை அதிகரிக்க திரிபலா உதவுகிறது. இதன் மூலம் இரத்த சோகை என்னும் நோயைத் தீர்க்க முடியும். (இரத்த சோகை என்பது இரத்தத்தில், ஹீமோகுளோபின் எனப்படும் இரத்த சிவப்பு அணுக்களின் அளவு குறைந்து காணப்படும் நிலையாகும்).
சர்க்கரை நோய்
திரிபலா சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துவதில் சிறப்பு மிக்கது. நமது கணையத்தினைத் (pancreas) தூண்டி, இன்சுலினை சுரக்கச் செய்கிறது. கணையத்தில்தான் இன்சுலினைச் சுரக்கும் லாங்கர்ஹான் திட்டுக்கள் (langerhans) எனப்படும் சுரப்பிகள் உள்ளன. மேலும் உடலில் குளுகோஸின் அளவை சமநிலையில் பேணுவதில் பெரும் பொறுப்பு வகிப்பது இன்சுலின் ஆகும். மேலும் திரிபலா கசப்புச் சுவையுடன் இருப்பதனால், சர்க்கரை நோயின் ஒரு நிலையான ஹைப்பர்கிளைசீமியா (hyperglycemia) எனப்படும் அதிக சர்க்கரை நிலையில், இதனை எடுத்துக் கொள்வது சிறப்பானது.
உடல்பருமன்
இயல்பை விட உடல் பருமனானவர்கள், திரிபலாவை உட்கொள்வது மிகவும் பயன்தரும். இதனுடைய மருத்துவக் குணத்தினால் உடலிலுள்ள கொழுப்பின் அளவினைக் குறைக்க முடியும். நமது உடலில் கொழுப்பு படிவதற்குக் காரணமான அடிபோஸ் செல்களைக் குறி வைத்து செயல்படுவதால், கொழுப்பின் அளவு குறைகிறது. இதன் மூலம் உடல் பருமன் கட்டுப்படுத்தப்படுகிறது.
சருமப் பிரச்சனைகள்
இது இரத்தத்தினைச் சுத்தம் செய்து இரத்தத்திலுள்ள நச்சுப்பொருட்களை வெளியேற்றும் தன்மை கொண்டிருப்பதால், சரும நோய்களுக்கான மருத்துவத்தில் பெரும் பங்காற்றுகிறது. இரத்தத்தினைச் சுத்திகரிக்கும் தன்மை கொண்டிருப்பதால், தொற்று நோய்களையும் தீர்க்கும் குணம் கொண்டுள்ளது.
சுவாசக் கோளாறுகள்
சுவாசப் பாதையிலுள்ள அடைப்புகளை நீக்கி சீரான சுவாசம் ஏற்பட பெரிதும் உதவுகிறது. சைனஸ் என்னும் நோயைத் தீர்க்கும் மருந்தாகவும் இது செயல்படுகிறது. மேலும் நமது சுவாசப்பாதையிலுள்ள சளியில் பாக்டீரியாக்கள் வளராமலும் இது தடுக்கிறது.
தலைவலி
தலைவலிக்கு நிவாரணமாகவும் திரிபலா பயன்படுகிறது. குறிப்பாக வளர்சிதை மாற்றத்தின் இடையூறுகளால் உண்டாகும் தலைவலிக்கு சிறப்பான நிவாரணத்தை அளிக்கிறது.
புற்று நோய்
புதுடில்லியிலுள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மேற்கொண்ட சமீபத்திய ஆய்வுகளின் படி, திரிபலாவுக்கு புற்றுநோயைக் குணப்படுத்தும் திறன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புற்றுநோய் செல்களில் மைட்டேடிக் நிலையில் ஸ்பிண்டில் வடிவத்தோற்றம் உண்டாவதைக் குறைக்க உதவி செய்கிறது. அதன்மூலம், புற்றுநோய் செல்களில் மெடாஸ்டேடிஸ் (metastasis) வளரும் அபாயத்தையும் குறைக்கிறது.

குருராம் சுரத்குமார் நினைவு தினம்(20.02.2001)

 தலைமீது கைவைத்து தாமுணர பெரும்சக்தி அலைபோலே மேலெழுப்பும் ஆசானே குருயோகி!!

இலைபூ காய்கனியாக ஏற்றமதை நாளும்தந்து இருக்கின்றேன் உம்முடனே என்றுரைக்கும் குருயோகி!!
விலையாக பெரும்பக்தி விருப்பமுடன் ஏற்றுநிற்கும் வேதாந்த இறைமகனார் வெற்றியருள் குருயோகி!!
மலையருணை தலம்வாழ்ந்து மலர்க்கரத்தில் விசிறிகொண்டு மனத்தாலே வினையோட்டம் மாஜோதி குருயோகி!!
பிழையேதும் யான்செய்யும் பெருங்குற்றம் கருதாது இலகுவாக அதைவிலக்கி ஏற்றிடும் எம்குருயோகி!!
குலம்வாழ நலமாக குறைவின்றி நிறைவாக குருவாக வழிநடத்தி இறைசேர்ப்பாய் குருசுரத்யோகி!!!
குருராம் சுரத்குமார் நினைவு தினம்(20.02.2001)

நாமக்கல், ராசிபுரத்தில் இருந்து திருச்செந்தூர் செல்ல இணைப்பு ரயில்

 நாமக்கல், ராசிபுரத்தில் இருந்து திருச்செந்தூர் செல்ல இணைப்பு ரயில் சேவையை பயன்படுத்தி எளிதாக ரயிலில் சென்று வரலாம்.

📌 நாமக்கல் - திருநெல்வேலி - திருச்செந்தூர் இணைப்பு ரயில் விவரம்:-
🚂 நாமக்கலில் தினசரி இரவு 11:00 மணிக்கு 17235 நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறினால் மறுநாள் அதிகாலை 5:25 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும். அங்கு இறங்கி காலை 7:15 மணிக்கு புறப்படும் 56727 திருச்செந்தூர் பயணிகள் ரயிலில் ஏறி ஶ்ரீவைகுண்டம், திருச்செந்தூர் போன்ற பகுதிகளுக்கு எளிதாக செல்லலாம்.
🚂 இதேபோல கோவிலுக்கு சென்று திரும்புவோர் தினசரி மாலை 4:25 மணிக்கு திருச்செந்தூரில் புறப்படும் 56730 திருநெல்வேலி பயணிகள் ரயிலில் ஏறி மாலை 5:50 மணியளவில் திருநெல்வேலி ரயில்நிலையம் வந்து இறங்கி, அருகில் இருக்கும் நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோவிலுக்கு பேருந்துகள் மூலம் சென்று மீண்டும் திருநெல்வேலி ரயில்நிலையம் வந்து இரவு 9:15 மணியளவில் வரும் 17236 SMVT பெங்களூரூ எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறி அதிகாலை 2:40 மணிக்கு நாமக்கல் வந்தடையலாம்.
👍 நாமக்கல் - திருநெல்வேலி வரை sleeper வகுப்பில் செல்ல ரூ. 225/- ம், திருநெல்வேலி - திருச்செந்தூர் வரை முன்பதிவில்லா வகுப்பில் செல்ல ரூ. 20/- ம் பயண கட்டணமாகும். இந்த குறைந்த கட்டணத்தில் வசதியாக குறைந்த நேரத்தில் பயணம் செய்ய முடியும். மேலும் நாமக்கலில் இருந்து இது போல அதிகம் பயணம் செய்வதால் புதிய ரயில் சேவைகள் கிடைக்கும் வாய்ப்பும் உள்ளது.
🙏 இந்த ரயிலின் முழு கால அட்டவணை இணைக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலில் வார நாட்களில் செல்ல எளிதாக டிக்கெட் கிடைக்கும் என்பதால் நாமக்கல் பகுதி மக்கள் முன்கூட்டியே திட்டமிட்டு முன்பதிவு செய்து பயனடைய கேட்டுக்கொள்கிறோம்💐.

saptha rishigal names in tamil

 


Inline image 1

வாழ்முனி, செம்முனி, முத்துமுனி, வீர முனி, கரு  முனி, வேதமுனி, சடா முனி 

இந்த முனிகளின் பெயர்களும் வண்ணங்களும் மாறுபட்டாலும் .
7 முனிகள்  என்பதில் மாற்றம் இல்லை .

இவர்களில் முத்துமுனி  சில இடங்களில் அய்யனார் என வழங்கப்படுகின்றார் .

வேலூர் மாவட்டம் வாழைப்பந்தல் எனும் ஊரில் உள்ள பச்சையம்மன் ஆலயம் மிகவும் பழமையானது . 
இங்கு வாமுனி செம்முனி   , சிவன்  மற்றும் விஷ்ணு  அம்சமாகக் கொள்கின்றனர்.

இவர்களில் சிலருக்கு சைவ படையல் தான் 

சப்த ரிஷிகள் 

அகத்தியர் , கஸ்யபர், அத்ரி, வசிஷ்டர், கௌதமர், வால்மீகி , பரத்வாஜர்  இவர்கள்  சப்த ரிஷிகள் எனப்படுவர் .

வேலூரில் உள்ள ஆற்காடு  பண்டைய காலத்தில் காடுகள் நிறைந்த இடமாகும் .

ஆர் (க் ) காடு  - ஆற்காடு

ஷதா ஆரண்ய ஷேத்திரம்  - 7 காடு கோயில்  எனப்படும் கோயில்கள் 7 ரிஷிகளுக்கும் எடுக்கப்பட்டு உள்ளது . இவை யாவும் சிவன் கோயில்கள் ஆகும்.

அப்படி என்னதான் ஸ்பெஷல் செம்மரம்?

 

அப்படி என்னதான் ஸ்பெஷல் செம்மரம்?

கடந்த இருபது – முப்பது ஆண்டுகளாகச் சட்டத்துக்குப் புறம்பாகச் செம்மரங்கள் (Pterocarpus santalinus) வெட்டப்படுவதும் கடத்தப்படுவதும் அதிக அளவில் காணப்படுகிறது. இதற்கு இரண்டு முக்கியக் காரணங்கள் உள்ளன.
1.அதன் உற்பத்தி பரப்பளவு குறைவு.
2.அதன் விலைமதிப்பற்ற மருத்துவப் பயன்.
இது எண்டமிக் (Endemic) எனப்படும் ஓரிடவாழ்வித் தாவரம். அதாவது, கிழக்கு மலைத்தொடருக்கு மட்டுமே உரித்தான இயல் (Wild) தாவரம்.
இந்த மரங்கள் நன்கு உயர்ந்து வளரக்கூடியவை. இருந்தபோதும் வைரக்கட்டை (மரத்தின் உட்பகுதி) மட்டுமே அதிகப் பயனளிப்பதால், அதைப் பெறுவதற்காக மொத்த மரமுமே வெட்டப்படும் அழிவு அறுவடை (destructive harvesting) தவிர்க்க முடியாத ஒன்று. இதன் காரணமாகச் செம்மரம் ஏறத்தாழ அழியும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது. உலக அளவில் மிகவும் ஆபத்தான நிலையில் (Critically Endangered) உள்ள தாவரமாக, ஐ.யு.சி.என். (IUCN)என்ற பன்னாட்டு உயிரினப் பாதுகாப்பு நிறுவனம் செம்மரத்தை வகைப்படுத்தியுள்ளது.
செம்மரம் சட்டத்துக்குப் புறம்பாக அதிக அளவில் வெட்டப்படுவதற்கும், கடத்தப்படுவதற்கும் முக்கியக் காரணம் இதன் வைரக்கட்டைகள் தரும் மருத்துவப் பயன்கள்தான் (வேங்கைப் புலியும் மருத்துவக் காரணங்களுக்காகவே இந்தியாவிலிருந்து சீனாவுக்குச் சட்டவிரோதமாகக் கடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது). இந்தியாவின் செம்மரக் கட்டைகளைப் பல காலமாகக் கிட்டத்தட்ட மொத்தமாக ஏலத்தில் எடுத்துவரும் நாடு சீனா. மருத்துவப் பயன்களுக்காகவே அந்நாடு இதை வாங்கிவந்துள்ளது.
மருத்துவப் பயன்கள்
ஆயுர்வேத, சித்த மருத்துவ முறைகள் மட்டுமின்றி பழங்குடி மருத்துவத்திலும் இந்த மரக்கட்டையின் சாந்து (செஞ்சாந்து) அதிகமாகப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. மருத்துவத் தமிழில் செம்மரம், பிசனம், கணி, ரத்தச் சந்தனம், செஞ்சந்தனம், உதிரச் சந்தனம் என்ற பெயர்களில் செம்மரம் அழைக்கப்பட்டுவந்துள்ளது. ஆண் மலட்டுத்தன்மை, மூட்டுவலி, மூலம், வெட்டுக்காயம், வீக்கம், ரத்தபேதி, சீதபேதி, பாம்புக்கடி, தோல் நோய்கள், நீரிழிவு போன்ற பல நோய்களுக்கு இந்திய மருத்துவ முறைகளில் செம்மர வைரக்கட்டையின் சாந்தும் சாறும் பல காலமாகப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன
மலட்டுத்தன்மைக்கு…
இவற்றில் டீரோஸ்டில்பீன்கள் தோலின் நிறத்தை மாற்றும் பசைகளில் பெருமளவு பயன்படுத்தப்படுகின்றன. நொதிச்செயல்களை (தைரோசினேஸ் என்ற நொதி) கட்டுப்படுத்துவதன் மூலம், தோலின் நிறம் கருப்பு, பழுப்பாக மாறுவதை இந்த வேதி பொருட்கள் தடுக்கின்றன. கருப்பு, பழுப்புத் தோல்களை வெண்மையாக்குவதையும் இந்தப் பொருட்கள் கட்டுப்படுத்துகின்றன. மேலும், தோலின் மேல் புறஊதாக் கதிர்களின் தாக்கம் ஏற்படாமல் இவை பாதுகாக்கின்றன. இம்மரத்தில் உள்ள 16 சதவீதச் சாண்டலால்களும், பலவித மருத்துவப் பயன்களைக் கொண்டவை. இவற்றை எல்லாம்விட, இம்மரம் தரும் முக்கிய மருத்துவப் பயன் ஆண் மலட்டுத்தன்மை சிகிச்சைக்குப் பயன்படுவதுதான்.
அண்மையில் ஆந்திர அரசால் ஏலம் விடப்பட்ட செம்மர வைரக்கட்டைகளில் மூன்றாம் ரக கட்டை மட்டும் ரூ. 207 கோடிக்கும், முதல் ரகக் கட்டைகள் ஒரு டன் ரூ. 1.75 கோடிக்கும், இரண்டாம் ரகக் கட்டைகள் ஒரு டன் ரூ. 1.5 கோடிக்கும் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளன. இவ்வளவு விலை கொடுத்து ஏலம் எடுக்கப்பட்டதிலிருந்து செம்மரக்கட்டையின் மருத்துவ, அழகியல் அம்சங்கள் மிகவும் மதிப்பு வாய்ந்தவை என்பது தெளிவாகிறது.

சுத்தமான மணற்பரப்பு கொண்ட கடற்கரை இந்த மனப்பாடு

 தமிழ்நாட்டின் மிகவும் அழகான அமைதியான மக்கள் அதிகம் செல்லாத அழகிய கடற்கரை மனப்பாடு கடற்கரை...

இந்த கடற்கரை தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூருக்கு அருகே 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது...
மிகவும் அதிகமான கடல் அலைகள் இல்லாத சுத்தமான மணற்பரப்பு கொண்ட கடற்கரை இந்த மனப்பாடு கடற்கரை ❤️❤️

நாகர்கோவில் - மும்பை இடையே சிறப்பு ரயில்!

 நாகர்கோவில் - மும்பை இடையே சிறப்பு ரயில்!

மும்பையில் இருந்து நாகர்கோவிலுக்கும், நாகர்கோவிலில் இருந்து மும்பைக்கும் வாரம் இருமுறை சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. மும்பையில் இருந்து மார்ச் 10,12 & 17ஆம் தேதிகளில் இந்த ரயில் இயக்கப்படுகிறது. இதே போன்று நாகர்கோவிலில் இருந்து 11,13 & 18 ஆகிய தேதிகளில் இந்த ரயில் இயக்கப்படுகிறது. ரேணிகுண்டா, காட்பாடி, திருவண்ணாமலை, விழுப்புரம், திருச்சி, நெல்லை வழியாக இந்த ரயில் செல்லும்.

பெரும்பாலான பிரச்சனைகளைத் தீர்க்கும் ஒரே தைலம் எது தெரியுமா???

 பெரும்பாலான பிரச்சனைகளைத் தீர்க்கும் ஒரே தைலம் எது தெரியுமா???

இப்பொழுது அதன் செய்முறை பார்ப்போம். பிறகு அதன் பலன்களை பார்ப்போம்.
சித்த மருத்துவத்தில் செடி, கொடி, பட்டை, வேர், தழை முதலியவற்றை கொண்டு மருந்து செய்வது ஒரு முறை.
மற்றொன்று வீரம், பூரம்,லிங்கம்,தாளகம், துத்தம் போன்ற பாஷணாங்களை கொண்டு மருந்து செய்வது ஒரு முறை.
மற்றொன்று தங்கம், வெள்ளி, செம்பு, அயம், பித்தளை போன்ற உலோகங்களை கொண்டு மருந்து செய்வது ஒரு முறை.
மற்றொன்று வெடியுப்பு, இந்துப்பு, போன்ற உப்புக்களை கொண்டு செய்வது ஒரு முறை.
நாம் ஒரு முறையை பார்ப்போம்.
நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்.
* புதினா உப்பு
* ஓம உப்பு
* கட்டி கற்பூரம்
இம்மூன்றையும் சம அளவு வாங்கிக்கொள்ளவும். சுமார் 20கிராம் வாங்கிக்கொள்ளலாம். அது அவரவர் விருப்பம்.
சரி இதை காற்று புகாத ஒரு டப்பாவில் போட்டு அல்லது கண்ணாடி பாட்டிலில் போட்டு குலுக்க வேண்டும்.
இரண்டு மூன்று நிமிடங்கள் குலுக்கிய உடன் அது திட நிலையில் இருந்து திரவ நிலைக்கு மாறிவிடும்.
இப்பொழுது தைலம் தயார்.
இது மிகவும் வீரியமான தைலம்.
உடலில் எங்கெல்லாம் வலி உள்ளதோ அங்கெல்லாம் ஓரிரு சொட்டுகள் மட்டுமே தேய்க்கவேண்டும். முழங்கை, மூட்டு, இடுப்பு போன்ற இடங்களில் தேய்க்க வேண்டும்.
இதனுடைய பலன் இத்துடன் நின்றுவிட வில்லை. நீங்கள் பயன் படுத்தும் பல்பொடி மற்றும் பேஸ்ட் எதுவானாலும் அதில் சுமார் பத்து சொட்டுகள் விட்டால் போதும். ஆயுளுக்கும் பல் சம்பந்தமான பிரச்சனை கிட்ட வராது.
பல்லரணை , பற்குத்து , ஈறு வீக்கம் ,ஈறுகளில் சீழ் வடிதல் , வாய் துர் நாற்றம் போன்றவை அணுகவே அணுகாது .இருந்தால் தைலத்தை உபயோகிக்க ஓரிரு நாட்களில் பறந்தோடும்.
இதை 100 மிலி தேங்காய் எண்ணெயுடன் 15 சொட்டுக்கள் கலந்து பயன்படுத்த சாந்தமாக வேலை செய்யும்.சளி , இளைப்பிருமல் , ஆஸ்துமா போன்றவற்றிற்கு வெளிப்பிரயோகமாக தேய்த்துவிட நல்ல பலனளிக்கும். உள்ளே உறைந்திருக்கும் சளி இளகி தொல்லையில்லாமல் வெளியேறும்.
கோமா நிலையில் இருப்பவர்களுக்கு தைலத்தை பொட்டுக்கள் , பிடரி மற்றும் தலைக்கு இரத்தம் கொண்டு செல்லும் முக்கிய இரத்த நாளங்களின் மேல் ஒரிரு சொட்டுக்கள் விட்டு தேய்க்க விரைவில் விழித்தெழுவார்கள்.
சுரம் உள்ளவர்கள் காபி, டீ போன்ற வற்றில் மூன்று சொட்டுகள் விட்டு குடிக்க அடுத்த ஐந்து நிமிடங்களில் சுரம் பறந்தோடும்.
இந்த தைலம் கண்களுக்கு அதிக எரிச்சலை ஊட்ட வல்லது .எனவே கண்களுக்கு நெருக்கமாக இதை உபயோகிக்க வேண்டாம்.கண்ணில் பட்டுவிட்டாலோ அல்லது மின்சாரத் தைலம் தடவிய பின் கண்களில் கையை வைத்துவிட்டாலோ கடும் எரிச்சல் உண்டாகும் அப்போது குளிர்ந்த நீரில் எரிச்சல் தணியும் வரை கண்களைக் கழுவவும்.

வண்டி எண் 16732 திருச்செந்தூர் இருந்து பாலக்காடு தினசரி விரைவு ரயில்

 பயணிகள் கனிவான கவனத்திற்கு வண்டி எண் 16732 திருச்செந்தூர் இருந்து பாலக்காடு தினசரி விரைவு ரயில் உள்ளது திருச்செந்தூர்:12:20pm

காயல்பட்டினம் :12:27pm
ஆறுமுகனேரி:12:30pm
குறும்பூர்:12:36pm
கச்சன்விலை :12:40pm
நாசரேத்:12:46pm
ஆழ்வார் திருநகரி :12:53pm ஸ்ரீவைகுண்டம்:12:59pm
பாளையங்கோட்டை:1:03pm
திருநெல்வேலி:1:25pm
தாழையுத்து:1:41pm
வாஞ்சி மணியாச்சி சந்திப்பு: 2:01pm
கடம்பூர் :2:14pm
கோவில்பட்டி:2:33pm
சாத்தூர்:2:56pm
விருதுநகர்:3:18pm
திருமங்கலம்:3:44pm
திருப்பரங்குன்றம்:3:59pm
மதுரை சந்திப்பு:4:20pm
சோழவந்தான்:4:44pm
கொடைக்கானல் ரோடு:4:58pm
அம்பாத்துரை:5:14pm
திண்டுக்கல்:5:47pm
ஒட்டன்சத்திரம்:6:23pm
பழனி:6:57pm
உடுமலைப்பேட்டை:7:18pm
கோமங்கலம்:7:32pm
பொள்ளாச்சி சந்திப்பு :7:58pm
ஆனைமலை ரோடு:8:07pm
மீனாட்சிபுரம்:8:15pm
முதலமட:8:24pm
கொல்லெங்கோடு:8:33pm
புதுனகரம் :8:41pm
பாலக்காடு டவுன் :8:55pm
பாலக்காடு ஜங்சன் :9:14pm தேவைப்படுவோர் பயன்படுத்திக் கொள்ளுங்கள்

மருத்துவ பழமொழிகள்:1

 மருத்துவ பழமொழிகள்:

அசைவம்சைவம்
🌿1) கோழைக்கு எதிர் தூதுவளை... நம் குடும்பத்தின் நன்மைக்கு துளசி இலை.
அசைவம்சைவம்
🌿2) வாதத்தை அடக்கும் முடக்கத்தான்.. நல் வாழ்வுக்கு வேண்டுமே முருங்கைதான்.
🌿3) கண்ணுக்கு நன்மை செய்யும் பொன்னாங்கண்ணி. மஞ்சள் காமாலைக்கு மருந்தாகும் கரிசலாங்கண்ணி.
🌿4) குடல் புண்ணை ஆற்றிடும் மணத்தக்காளி.. சிறுநீரைப் பெருக்கிடும் சிறுகீரை.
🌿5) கோழையை இளக்கும் குப்பைமேனிச் சாறு.
அசைவம்சைவம்
🌿6) அரணைக் கடியை ஆற்றும் சிறுகுறிஞ்சான்.
🌿7) காசநோய்க்கு கண்கண்ட வெந்தயக்கீரை.
🌱8) ஆசன வெடிப்புக்குத் துத்திக்கீரை.
🌿9) தொண்டை, காது, சுவாச நோய்களுக்குத் தூதுவளைக்கீரை.
🌿10) வெங்காயம் உண்போர்க்குத் தங்காயம் பழுதில்லை.
🌿11) கிழங்குகளில் கருணையன்றி வேறொன்றும் புசியாதே.
🌿12) நெஞ்சில் கபம் போம், நிறை இருமி நோயும் போம்.
விஞ்சு வாதத்தின் விளைவு போம்.
அசைவம்சைவம்
🌿13) நன்னாரி மேனியைப் பொன்னாக்கும்.
🌿14) விடா சுரத்திற்கு விஷ்ணுக் கரந்தை.
🌿15) விஷத்தைக் குடித்தவன் மிளகு நீர் குடிக்க வேண்டும்.
🌿16) ஆலம்பட்டை மேகத்தைப் போக்கும்.
🌿17) வில்வம் பித்தம் தீர்க்கும்.
🌿18) காலை இஞ்சி, கடும் பகல் சுக்கு, மாலை கடுக்காய் வாழ்வை வளமாக்கும் .
அசைவம்சைவம்
🌿19) அனைத்து வியாதிக்கும் அருகம்புல் சாறு.
இவ்வாறு மனித உடம்பைத் தாக்கும் நோய்களையும் மருத்துவரிடம் செல்லாமல், அந்நோயைத் தீர்க்க எடுத்துக்கொள்ள வேண்டிய மருந்துகளையும் மிகத் தெளிவாக எடுத்தியம்புகின்றன இப் பழமொழிகள்... படித்தால் மட்டும் போதாது பயன்படுத்தி பலன் பெறுங்கள் , மூலிகைவளம் என்பது இறைவனின் அருட்கொடைகளில் ஒன்று...

மரத்துண்டுகளின் வயதை கணக்கிடலாம்!

 மரத்துண்டுகளின் வளையங்களின் எண்ணிக்கையை வைத்து அதன் வயதை கணக்கிடலாம்!

இந்த விஷயத்தைப் பிள்ளைகளுக்குப் பாடம் நடத்துகையில்தான் தெரிந்து கொண்டேன்.
அதுமுதல் என்னைக் கடக்கும் டிம்பர் லாரிகளில் அடுக்கிச் செல்லும் மரங்களை ஆவலாகப் பார்த்துக்கொண்டே செல்வேன்.
கொஞ்சம் கலையாகவும் தான்.யானை மனிதர்களால் எதற்காகவோ படுக்கவைக்கப்படுவதையும் பெரிய பெரிய மரங்கள் வெட்டி பேரோசையுடன் சாய்க்கப்படு
வதையும் ஒரே மனநிலையில் வைப்பேன்.
சமீபமாக கண்டங்கள் பற்றிய பாடம் நடத்திக் கொண்டிருந்தேன்.
நீண்ட நெடுங்காலத்திற்கு முன்பு பனிப்பிர
தேசங்களில் புதையுண்ட மரங்களும் அதன் வளையங்களும் மரத்தின் வயதை மட்டுமல்ல அந்தந்த ஆண்டுகளின் மழை வளம் மற்றும் வறட்சியைக் கணக்கிடவும் உதவின என்று வாசித்த உடனேயே....
மரத்தின் வளையங்களுக்
கான இடைவெளி அதன் அகலம் இவற்றை வைத்து கண்டுபிடிப்
பார்களோ என்று பிள்ளைகளிடம் சொல்லிவிட்டு மேலும் வாசித்தால் அதுதான்.
பிள்ளையைப் போலவே எஸ்.....!
என வெற்றிச் சமிக்ஞை செய்து கொண்டேன்.
இயற்கை குறித்த எனது யூகம் சரியாக இருந்த மகிழ்ச்சி.
இந்த வளையங்களை கிராமங்களில் வைரம் பாய்ந்த கட்டை என்பார்கள்.
ஆம்!
காலப்போக்கில் நடுவே கருப்பாக மாறும்.
பிஞ்சுமரம் மஞ்சள் பழுப்பு இளஞ்சிவப்பு என மாறி இறுதியில் கருப்பாக மாறினால் வைரம் தானே!
இலவம் காய்களை கடைந்து பஞ்சாக்க காராங்குச்சி வெட்டினால் குச்சியிலேயே வைரம் பாய்ந்திருக்கும் கண்டதுண்டு.
விடத்தேர் நாட்டுக்கருவை போன்ற மரங்களின் சிறு கம்பே வைரம் பாய்ந்திருக்கும்.
இவை வறக்காடுகளில் மழை தண்ணி இல்லாமல் வாழ்ந்திருக்கும்.
அவற்றிற்கு இயற்கையை எதிர்கொள்ளும் ஆற்றல் அதிகம்.
பிராய்லர் கோழி நாட்டுக்கோழி கிராமத்துமனிதன் நகரத்து மனிதன்...
அதிலும் வானம்பாத்த
பூமியில் வாழ்பவன் இவர்களது வாழ்க்கையை உற்றுப்பாருங்கள் உங்களுக்கே புரியும்.
ஆற்றங்கரையில் அதுவாய் விளைந்த கள்ளிப்பழங்களையோ இலந்தையையோ நீங்கள் கொண்டு வந்து இனம் மரபு எல்லாவற்றையும் மாற்றி சொகுசாய் உரம் தண்ணீர் எல்லாம் கொடுத்து வளர்த்தாலும் தாம்போக்குக்கு வளர்ந்த இயல்பின் ருசியை உணர இயலாது.
எங்கு பார்த்தாலும் நர்சரிகளின் வளர்ச்சி.
தாழையை வீட்டில் வளர்க்கக் கேட்கிறான் ஒரு மனிதன்.
முடவாட்டுக்கால் விதைக் கிழங்கு கிடைக்குமாம்!
பாறைகளில் தொற்றி அதன் கனிமங்களை உறிஞ்சி உயிருக்குப் போராடி வளர்வதால் தான் அதற்குள் அத்தனைச் சத்து.
என்று அதை சந்தைப்படுத்தி எங்கு பார்த்தாலும் எல்லா காலநிலையிலும் கிடைக்கிறதோ அது பனை ஓலையை ஊற வைத்த சாக்ரீம் பதனியே!
அல்லி,தாமரை,
வெங்காயத்தாமரை வித விதமான கள்ளிகளையும்
கூந்தல்பனை
போன்ற ஈச்சமரங்களின் மினியேச்சர் களையும் வீட்டிலும் மாடியிலும் வளர்த்து என்ன செய்யப் போகிறீர்கள் மக்களே!
மரத்தால் மாடிப்படி வைத்து ஹேங்கரில் செடியைத்தொங்கவிடுகிறீர்கள்!
உங்களோடு வாழவே பயமாக இருக்கிறது.
வாஸ்த்துச்செடிகளின் வருகை வேறு.
எங்கோ ஆரம்பித்து எங்கோ முடித்திருக்கிறேனா?
இயற்கையை யோசித்தால் இப்படித்தான் ஆகிடுறேன்.

Featured Post

ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதைகள் இருக்கிறது

ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதைகள் இருக்கிறது என்பதையும், ஓர் பலாப்பழத்தைப் பிளக்காமல் அதன் உள்ளிருக்கும் சுளையின் எண்ணிக்கையைய...