Saturday, February 8, 2025

Advertisement-Appa Cards Printing Press thoothukudi

 Appa Cards Printing Press thoothukudi



https://maps.app.goo.gl/ySVd8jabYFQdEK8a6

முகவரி:
 R524+JFF, Victoria Extension Road,  Thoothukudi, Tamil Nadu 638001
ஃபோன்: 097877 09718

Candy festival in Kasi.

 காசியில் மிட்டாய்த் திருவிழா .



காசியில் கொண்டாடப்படும் விழாக்களில் மிட்டாய்த் திருவிழா மிக முக்கியமானது. லட்சக்கணக்கில் பக்தர்கள் வழிபடுவர் .இத் திருவிழா தீபாவளியின் போது கொண்டாடப்படுகிறது . காசி விஸ்வநாதர், அன்னபூரணி கோவில் களில் மட்டுமல்ல, காசியில் உள்ள கோயில்கள் மட்டுமல்ல, காசியை சுற்றி உள்ள பல்வேறு கோவில்களில் இந்த மிட்டாய்த் திருவிழா கொண்டாடப்படுகிறது மிட்டாய்த் திருவிழா என்பது பல்வேறு இனிப்புகளை செய்து அவை அனைத்தையும் கடவுளுக்கு படைப்பர். மூங்கில் தப்பையை செய்து அதில் லட்டுக்களை அடுக்கி லட்டு தேர் செய்வர். எனவே இதை லட்டுத் திருவிழா என்றும் கூறுவர் கோவில்களில் பணம் செலுத்தி பதிந்து வைத்தால் திருவிழா நிறை வடைந்ததும் அந்த இனிப்புகளை பிரசாதமாகத் தருவார்கள்.


Candy festival in Kasi.
Candy festival is very important among the festivals celebrated in Kasi. Millions of devotees are worshipped. This festival is celebrated during Diwali. This candy festival is celebrated not only in Kasi Vishwanathar, Annapurani temples, not only in the temples in Kasi, but also in various temples around Kasi. Candy festival is the one which makes various sweets and creates all of them to God. The one who makes bamboo mistake and stack laddu in it and chariot laddu. So, if the one who says it is Ladud festival, they will give the sweets as offering after the festival is over.

பஞ்ச தீபம் என்பது

 பஞ்ச தீபஎண்ணையை பயன்படுத்தாதீர் 


பஞ்ச தீபம் என்பது 


ஐந்துவகை விளக்கு 


கல் விளக்கு 

மண் விளக்கு

உலோகவிளக்கு 

கனிவகை விளக்கு 

மரவகை விளக்கு

இன்னும் பல உள்ளது 


இதில் ஒன்றிலிருந்து பலவகையாக பிரிகின்றது 


கல்வகை விளக்குகள் 


சிகப்புநிற கல் விளக்கு

 வெள்ளைநிற கல்விளக்கு

மஞ்சள் நிற கல்விளக்கு 

கருப்புநிற கல் விளக்கு 

இளஞ்சிவப்பு நிற கல் விளக்கு

கருஞ்சிவப்பு நிற கல் விளக்கு

வென்கருமை நிற கல் விளக்கு

பொன்வெள்ளை நிற கல் விளக்கு

மாவுக்கல் விளக்கு இப்படியாக பலவகை விளக்குகள் உள்ளது்இது காலப்போக்கில் மறைந்துவிட்டது


மண்விளக்கு அதுபோலவே பலவகை மண்களை கொண்டுதயாரிக்கப்பட்டுள்ளது 

களிமண்

செம்மண்

சுன்னாம்புமண்

மனல்மண் 


பலவகை உலோகங்களால் செய்யப்பட்டது 


பலவகை கனிகளால் செய்யப்படுபவைகள்


பலவகை திரிகள்


இளவம்பஞ்சிதிரி

தாமரைத்தண்டுதிரி

கண்ணிநூல்திரி

வெட்பாலைதிரி

எருக்கண்திரி

இப்படியாக இதுபோல் நிறையவே உள்ளது அதிலும் ஒவ்வொன்றிலும் பலவாக பிரிந்து கானப்படுகின்றது


பலவகை எண்ணை


ஆமணக்கு எண்ணைய்

தேங்காய் எண்ணைய் 

இழுப்பை எண்ணைய்

புங்கம் எண்ணைய்

வேம்பு எண்ணைய்

எள்ளு எண்ணைய்

கடுகு எண்ணைய்

கடலை எண்ணைய்

இன்னும் பல வகையாக உள்ளது

மஞ்சளெண்ணை

அட்டமாசித்து எண்ணைய்

நெய் இன்னும் பலவகைகள் உள்ளது


எந்த திசையில் வைக்கவேண்டும் எனவும் 

எந்த தேவதைக்கு வைக்க எது உகந்தது என்றும் சாத்திரங்களில் உள்ளது 


இருப்பதை மிக சுறுக்கமாக கூறியுள்ளேன் 


ஆகையால் பஞ்ச தீப எண்ணை வியபார நோக்கத்தில் வேண்டாத எண்ணைய்களைக்கொண்டு தயாரிக்கின்றனர் அதில் உண்டாகும் தீமையால் இந்த உலகமே பெரும் அழிவினை நோக்கி செல்லவே வழிவகுக்கும்


வியபாரிகள் எந்த மாதிரியான தீமைகள் இந்த பஞ்ச தீப எண்ணையில் வரும்  என்பதை அறியாமல்  உள்ளனர் ஆகையால் அதனை அவசியமாக  அவர்களும்இந்த தகவலை தெரிந்துக்கொள்ளவேண்டும்

நமது உலகிற்க்கு வரவிருக்கும்  பெரும் தீமையை தவிர்க்கவும் 


சித்தர்வழி சிவனடியார் 

கந்தர்மலை

‘சோறுகண்ட இடம் சொர்க்கம்‘ என்று

 சிவ சிவ



#அன்னா நல்லபிஷேகம். 


சிறப்பு பதிவு : 2


சோறுதான் சொக்கநாதர்’

************


 ‘சோறுகண்ட இடம் சொர்க்கம்‘ என்று இன்றும் மக்கள் சொல்வதுண்டு. 


நாம் உண்ணும் அன்னமே ஆண்டவன். 


அவனே இதில் இருக்கிறான். 


நமக்கு படியளப்பவன். 


சிவலிங்கத்தின் மீது வடித்த சாதத்தை அப்பிவைத்து, பல வித காய்கள் கனிகள் எல்லாம் அலங்காரம் செய்து வைப்பார்கள். 


ருத்ரம் சமகம் பாராயணம் செய்தபின், தீபாராதனைக் காட்டுவார்கள்.


சிவலிங்கத்தின் மேல் பகுதியில் மனிதனால் தாங்கமுடியாத அதிர்வுகள் அதிகம் இருக்கும் என்று கருதுவதால், அதை பிரித்து குளத்தில் மீன்களுக்கும், பட்சிகளுக்கும், பசுவுக்கும் கொடுத்தபின், எஞ்சிய அடிபாகம் சோறு மனிதன் தாங்கவல்ல அதிர்வுகளை பெற்றுள்ளதால் அதைத்தான் நமக்கு பிரசாதமாக விநியோகம் செய்வார்கள் என்பது ஐதீகம்.


ஈசனை அன்னாபிஷேகத்தில் வழிபட்டால் உணவுக்கு குறைவின்றி படியளப்பான். 

சதுரகிரி மலைக்கு செல்ல அனுமதி !!

 சதுரகிரி மலைக்கு செல்ல அனுமதி !!


தை மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு சதுரகிரி மலை கோவிலுக்கு செல்ல, வரும் 10.02.2025 முதல் 13.02.2025 வரை 04 நாட்கள் அனுமதி வழங்கபட்டுள்ளது.


ஓம் சிவாய நமக 🙏🙏

Thursday, February 6, 2025

"மரு" (Skin Tag) உதிர...

 



"மரு" (Skin Tag) உதிர...

இன்றைய சூழ்நிலையில் ஏராளமானவர்களிடம் பரவலாக காணப்படுவது "மரு" [Skin Tag] ஆகும்.
இதனை சுலபமாக உடலில் இருந்து அகற்றலாம். அதற்கு அம்மான் பச்சரிசி செடி தேவை...
அம்மான் பச்சரிசியின் இலையினை ஒடித்தால், பால் தோன்றும். இதனை மரு மீது பூசவும்.
மேலும், சில இலைகளை ஒடித்து மரு முழுதும் பூசவும்.
இது போல் தினமும் பூசி வர, நான்கு ஐந்து தினங்களில் மரு உதிர்ந்து விடும்.

Saturday, February 1, 2025

தென் கைலாயம் வெள்ளியங்கிரி ஆண்டவர் 01.02.2025 காலை சிறப்பு பூஜை

 


தென் கைலாயம் வெள்ளியங்கிரி ஆண்டவர்

🙏
இன்று பிப்ரவரி 01.02.2025 காலை சிறப்பு பூஜை நடைபெற்று வெள்ளியங்கிரி மலை யாத்திரை செல்ல பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது..
அவன் அருளாலே அவன்தாள் வணங்கி 🙏
ஓம் சிவாய நமக 🙏
திருச்சிற்றம்பலம் 🙏

DR. HOWARD KELLY (1858-1943)

 




வீடு_வீடாக பொருட்களை விநியோகிக்கும் அந்த சிறுவனுக்கு ரொம்ப பசித்தது. எதையாவது வாங்கி சாப்பிடலாம் என்றால் கையில் பணமே இல்லை. அருகில் இருந்த வீட்டில் ஏதாவது சாப்பிட கேட்கலாம் என்று நினைத்தான்.
அந்த வீட்டின் கதவைத் தட்டினான். ஒரு பெண் கதவைத் திறந்தாள். ஏதாவது கேட்கலாம் என்று நினைத்தான். ஆனால் கூச்சம். கேட்க மனம்வரவில்லை.
“கொ… கொஞ்சம் தண்ணி கிடைக்குமா குடிக்க?” தயக்கத்துடன் கேட்கிறான்.
அவள் சிறுவனின் கண்களில் இருந்த பசியை கவனிக்கிறாள். உள்ளே சென்றவள், ஒரு கப் பாலை கொண்டு வந்து கொடுத்தாள்.
பாலைக் குடித்து பசியாறிய சிறுவன் கேட்டான்… “நான் எவ்வளவு கடன்பட்டிருக்கிறேன்?”
“கடனா… அப்படி ஒன்றும் இல்லை. அன்பான செயலுக்கு விலை எதுவும் இல்லை என்று என் அம்மா சொல்லியிருக்கிறார்.” அவள் சிரித்துக்கொண்டே சொன்னாள்.
“ரொம்ப நன்றி…” சிறுவன் புன்னகையுடன் கடந்து சென்றான்.
ஆண்டுகள் கழிந்தன. கஷ்டப்பட்டு முட்டி மோதி படிப்பை முடித்த அந்த சிறுவன் மருத்துவம் படித்து அந்த நகரிலேயே மிகப் பெரிய டாக்டர் ஆனான்.அந்த சமயத்தில் அந்த பெண்ணுக்கோ ஒரு கொடிய நோய் வந்தது.
அவர் பணியாற்றிய மருத்துவமனையிலேயே அவளும் அனுமதிக்கப்பட்டிருந்தாள். அந்த டாக்டரிடமே அவளுடைய பரிசோதனையும் வந்தது.
மெடிக்கல் ரிப்போர்ட்டில் அந்த பெண்ணின் ஊர் பெயரை பார்த்ததும் அவருக்குள் ஒரு சின்ன மின்னல். விரைவாக வார்டுக்கு போய் அந்த பெண்ணை பார்த்தார். அவள் தான். தனது பசியாற்றிய அந்த தாயுள்ளம் தான்.
அன்று முதல் தனது அத்துனை உழைப்பையும் கவனத்தையும் செலுத்தி அந்த பெண்ணுக்கு சிகிச்சை அளித்தார்.
நீண்ட சிகிச்சைக்கு பின்னர் அவள் குணமானாள்.
பல லட்சங்கள் செலவானது.
மருத்துவமனை அந்த பெண்ணுக்கு ஒரு நீண்ட பில்லை அனுப்பியது.
இதை எப்படி கட்டப்போகிறோமோ என்று பதட்டத்துடன் அதை பிரித்தவள் திகைத்துப் போனாள்.
அந்த பில்லின் கடைசியில் கையால் எழுதப்பட்டிருந்தது.
“இந்த பில்லை நீங்கள் செலுத்தவேண்டியதில்லை.
ஒரு கப் பாலில் உங்கள் கடன் முழுதும் தீர்க்கப்பட்டுவிட்டது. இது நன்றி சொல்லும் நேரம்!”
அவளுக்கு கண்கள் பனித்தன.
அந்த சிறுவன் வேறு யாருமல்ல… அமெரிக்காவின் மிகப் பிரபல மருத்துவராக விளங்கிய DR. HOWARD KELLY (1858-1943) தான்.
நான் என்னன்னெவோ சொல்ல நினைச்சேன் முடிவுல. ஆனா கீழே பாருங்க அத்தனையையும் நம்ம வள்ளுவர் ரெண்டே வரியில சொல்லிட்டார்.
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி. (குறள் 226)
பொருள் : வறியவர்களின் பசியைப் போக்குங்கள். அது தான் செல்வம்.!

“ 7வது சொர்க்கம் வால்பாறை என்பது உண்மை தான்”

 “ 7வது சொர்க்கம் வால்பாறை என்பது உண்மை தான்”

வால்பாறை தன்னுள் இயற்கை அழகை கொட்டி வைத்திருக்கிறது.
கொடைக்கானலுக்கு மேற்கே மூணார் மலைப்பகுதியும் மூணாறுக்கு மேற்கே வால்பாறை மலைப்பகுதியும் உள்ளது.
வால்பாறையை சுற்றி காட்டும் ஜீப் ஓட்டுநர்கள் வால்பாறையை ஐந்து பகுதிகளாக பிரித்து சுற்றிக் காட்டுகிறார்கள்.
முதல் பகுதி..
ஆழியார் அணையில் இருந்து தொடங்கும் டைகர் வேலி.
மங்கி பால்ஸ்.ஆகியவை.
இரண்டாவது பகுதி,.
பாலாஜி கோயில்.
வெள்ளமலை தனல்.
அக்காமலை வியூ பாயிண்ட் ஆகியவை.
மூன்றாவது பகுதி.
கூழாங்கல்லாறு.
நீரார் டேம்.
சின்னக் கல்லாறு அருவி ஆகியவை..
நான்காவது பகுதி.
சித்தி விநாயகர் கோயில்.
நல்ல முடி பூஞ்சோலை.
நும்பர் பாறை வியூ பாயிண்ட்.ஆகியவை..
ஐந்தாவது பகுதி..
சோலையார் டேம்.
அதிரப்பள்ளி பால்ஸ்.
இதில் ஒன்றாவது பகுதியும் ஐந்தாவது பகுதியும் வால்பாறையில் இருந்து 40 கிலோ மீட்டருக்கு மேல் தூரம் கொண்டவை...
இரண்டு நாள் தங்கினால் வால்பாறையை முழுதும் சுற்றி பார்க்கலாம்.

ஓரிதழ் தாமரை என்பது, மருத்துவ குணங்கள் நிரம்பிய தாவரம்


 

ஓரிதழ் தாமரை

ஓரிதழ் தாமரை என்பது, மருத்துவ குணங்கள் நிரம்பிய தாவரம். நிலத்தில் வளரும் சிறு செடி வகையை சேர்ந்தது. ஐயோனிடியம் சபருடிகோசம் என்ற அறிவியல் பெயர் கொண்ட இந்த செடி, ஆசிய நாடுகளில் அதிகப்படியாக காணப்படுகிறது.
இதன் இலை, தண்டு, பூ, வேர், காய் அனைத்துமே மருத்துவக் குணம் கொண்டவை. ஓரிதழ் தாமரையின் சமூலத்தை நிழலில் உலர்த்தி காயவைத்து பொடி செய்து பாலில் கலந்து காலை, மாலை என இருவேளையும் அருந்திவந்தால் உடல் வலுப்பெறும்.
ஓரிதழ் தாமரையின் இலையை அதிகாலையில் மென்று சாப்பிட்டு, பால் குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். இதேபோல், ஓரிதழ் தாமரையின் சமூலத்தையும் (வேர் முதல் பூ வரை) உண்டு வரலாம்.
நோயின் தாக்கத்திலிருந்து விடுபட்டவர்களுக்கு உடல் தேற ஒரிதழ் தாமரையின் சமூலம் நல்ல மருந்தாகும்.
மேகவெட்டை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஓரிதழ் தாமரை சமூலம், பச்சை கற்பூரம், கோரோசனை இவற்றை சம அளவு எடுத்து இடித்து பசுவின் நெய்யுடன் கலந்து மேகவெட்டை தாக்கிய பகுதிகளில் பூசி வந்தால் நோய் குணமாகும்; உடலில் உள்ள புண்களின் மீது தடவி வந்தால் புண்கள் விரைவில் ஆறும்.
காய்ச்சலால் அவதியுறுபவர்கள் ஓரிதழ் தாமரையின் சமூலத்தை கஷாயம் செய்து அருந்தி வந்தால் காய்ச்சல் நீங்கும். இரைப்பு நோய்க்கு இது அருமருந்தாகும். உடல் எடை குறைய ஓரிதழ் தாமரை கஷாயம் சிறந்த மருந்தாக உள்ளது. இளம் வயது ஆண்பிள்ளைகளுக்கு பருவ வயது வளர்ச்சியின் போது சில பாதிப்புகளால் இரவில் தூங்கும்போது விந்து வெளியேறும்.
தாது நஷ்டப்பட்டு உடல் தேறாமல் நோஞ்சான் போல் காணப்படுவர். இவர்கள் ஓரிதழ் தாமரையின் சமூலத்தை இடித்து தேன் அல்லது பாலில் கலந்து இரவு படுக்கைக்கு செல்லும்முன் சாப்பிட்டு வந்தால் இழந்த தாதுவை மீட்கலாம். இதன் சமூலத்தை (வேர் முதல் பூ வரை) அரைத்து சுண்டைக்காய் அளவு எடுத்து பசும்பாலில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் ஆண்களுக்கு ஏற்படக்கூடிய வெள்ளை ஒழுக்கு, அடி வயிறு வலி போன்றவை சரியாகும்
சமூலத்தை 21 நாட்கள் காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு 50 மில்லி ஆட்டுப்பால் குடித்து வருவதன்மூலம் இழந்தை ஆண்மை சக்தி திரும்பக் கிடைக்கும். ஓரிதழ் தாமரையை பயன்படுத்தி காயகல்பம் தயார் செய்து சாப்பிட்டு வந்தால் உடல் வலுப்பெறும்.
வெள்ளை நரை போக்க...
தலைமுடி வெள்ளையாக நரைத்து விடுதல் தற்போது பெரும் பிரச்னை. இதற்கு சிறந்த எளிய தீர்வு, மருதோன்றி இலையாகும். இந்த மருதோன்றியுடன்,
நிலவாரை என்பதை சேர்த்து இடித்து, நீர்விட்டு அரைத்துப்பூசி வந்தால் தலை முடி விரைவில் கறுப்பு நிறம் பெறும். மனித உடலில் தோன்றும் தோல்
வியாதிகளுல் படர்தாமரையும் ஒன்று. இதை, அருகம்புல்லும், மஞ்சளும் சேர்த்து அரைத்து, படர்தாமரையில் பூசி வர, படர்தாமரை மெல்லமெல்ல மறைந்துவிடும்.

முடவாட்டுகால் சூப் தினம் ஒரு கப் குடித்தால் மூட்டு

முடவாட்டுகால் சூப் தினம் ஒரு கப் குடித்தால் மூட்டு வலி பறந்தே போகும்..
முடவாட்டுக்கால் கிழங்கு. ஒரே இடத்தில் முடங்கியவர்களையும் இயக்க செய்யும் அருமருந்து என்று சொல்லப்படுகிறது. இது ஆட்டுக்கால் போன்று மேல் புறம் நார்களை கொண்டிருப்பதால் சைவ ஆட்டுக்கால் என்றும் அழைக்கப்படுகிறது. முடவன் ஆட்டுக்கால், ஆட்டுக்கால் கிழங்கு என்று அழைக்கப்படும் இதை சூப் வைத்து குடித்தால் மூட்டு வலிகளை போக்கும் நிவாரணியாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. முடவாட்டுக்கால் என்றால் என்ன, இதை எப்படி சூப் வைக்கலாம், இதன் நன்மைக்ள் என்னென்ன என்பதை இப்போது பார்க்கலாம்.
முடவாட்டுக்கால் கிழங்கு சூப் தயாரிக்கும் முறை
தேவை
முடவாட்டுக்கால் - 200 கிராம்
இஞ்சி பூண்டு விழுது -3 டீஸ்பூன்
மிளகு, சீரகம் - தலா 2 டீஸ்பூன்
கசகசா - 1 டீஸ்பூன் ( தேவையெனில்)
தேங்காய்த்துருவல் - 3 டீஸ்பூன் ( தேவையெனில்)
சின்ன வெங்காயம் - பொடியாக நறுக்கியது அரை கப்
தக்காளி - பொடியாக நறுக்கியது அரை கப்
இலவங்கப்பட்டை - சிறு துண்டு
பூண்டு - 3 பல்
உப்பு, மிளகுத்தூள், சீரகத்தூள், நல்லெண்ணெய் - தேவைக்கேற்ப
கொத்துமல்லித்தழை விரும்பினால் சேர்க்கலாம்.
செய்முறை:
முடவாட்டுக்கால் ஆட்டுக்கால் போன்று இருக்கும். இதை நன்றாக கழுவி மேல் தோலில் இருக்கும் ரோமங்களையும் அதன் புறணியையும் நீக்கி சுத்தம் செய்யவும். பிறகு சிறு துண்டுகளாக வெட்டிகொள்ளவும். முடவாட்டுக்கால் துண்டுகளாக சாப்பிட பிடிக்காதவர்கள் தோலை நீக்கி நன்றாக மைய அரைத்தும் பயன்படுத்தலாம்.
இஞ்சி, பூண்டு, கசகசா, தேங்காய்த்துருவல் அனைத்தையும் சேர்த்து மைய அரைக்கவும். சின்ன வெங்காயம், தக்காளி இரண்டையும் பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு இலவங்கப்பட்டை சேர்த்து வதக்க வேண்டும். பிறகு சாம்பார் வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கி கொள்ளவும். இவை வதங்கியதும் முடவாட்டுக்கால், அரைத்த மசாலா சேர்த்து ஒரு லிட்டர் நீர் விட்டு கொதிக்க விடவும். இது 20 நிமிடங்கள் வரை கொதிக்க வேண்டும். பிறகு இறக்கி பூண்டு தட்டி போட்டு இதை சூப் போல் டம்ளரில் விட்டு உப்பு, மிளகுத்தூள் தூவி குடிக்கவும்.
தொடர்ந்து 10 முதல் 15 நாட்கள் வரை தினமும் ஒரு டம்ளர் வீதம் குடித்து வந்தால் முடக்குவாதம், மூட்டுவலி ஓரளவு கட்டுப்படுவதை பார்க்கலாம்.
முடவாட்டுக்கால் கிழங்கு நன்மைகள் என்ன? எலும்புகளை அடர்த்தியாக வைத்திருக்குமா?
முடவாட்டுக்கால் எலும்பு அடர்த்தி நோயை தடுக்கும் திறன் கொண்டிருப்பதாக மருத்துவ ஆய்வுகள் தெரிவிப்பது குறிப்பிடத்தக்கது.
குழந்தைகளுக்கு வாதம் தாக்கினால் இந்த கிழங்கு போட்டு கொதிக்க வைத்த நீரில் குளிக்க வைத்தால் வாத நோய் குணமாகும். கழுத்து வலி, தோள்பட்டை வலி, முதுகு வலி போன்றவற்றை குணப்படுத்தும்.
இதன் பெயரே சொல்லும் நோய் தீர்க்கும் தன்மையை . முடவன் ஆட்டும் கால் என்பதாகும். முடக்குவாதம் வந்து முடங்கியவர்கள் இந்த சூப் குடித்துவந்தால் முடக்குவாதம் குணமாகும்.
முடவாட்டுக்கால் சூப் போன்று சட்னி, துவையலாகவும் செய்து சாப்பிடலாம்.
நாள்பட்ட மூட்டுவலி அது உடலில் எங்கு இருந்தாலும் அதன் வலி மேலும் தீவிரமாகமால் தடுக்க இந்த சூப் உதவும். இது உணவாக எடுத்துகொள்வதால் பக்க விளைவுகள் கிடையாது.
இன்று இளவயதிலேயே மூட்டு வலியை எதிர்கொள்பவர்கள் ஆரம்ப கட்டத்திலேயே கவனித்து முடவாட்டுக்கால் சூப் எடுத்துகொள்வதன் மூலம் மூட்டு வலி வராமலே தவிர்க்க முடியும்.
இந்த சூப் கடுமையான மூட்டுவலி, முழங்கால் வலி, குதிகால் வலி, கெண்டைக்கால் சதை இழுத்தல், உடலில் உண்டாகும் வலி,அசதி, தசைபிடிப்பு போன்ற அனைத்துமே சரியாகும்.
எல்லாம் சரி முடவாட்டுக்கால் எங்கு கிடைக்கும் என்கிறீர்களா? கொல்லி மலைபகுதிகளில் கிடைக்கும். சமீப காலமாக இது பல இடங்களில் கிடைக்கவும் செய்கிறது. முடவாட்டுக்கால் கிழங்கு ஆறுமாதங்கள் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம் என்றாலும் தற்போது எல்லா இடங்களிலும் கிடைக்கின்றன என்பதால் மொத்தமாக வாங்கி சேமிக்க முடியாதவர்கள் தேவைப்படும் போது வாங்கி பயன்படுத்தி கொள்ளலாம். முடவாட்டுக்கால் கிழங்கு பொடியும் தற்போது கிடைக்கிறது என்றாலும் அவை சரியான முறையில் தயாரிக்கப்பட்டவையா.. முடவாட்டுக்கால் கிழங்கு பொடியா என்பதை கவனித்து வாங்குவது முக்கியம்.

தேனி பக்கம் வாங்க.. கம்மி பட்ஜெட்டுல நிறைய விசிட் செய்யலாம்.!

வைகை அணை:

தேனியில் இருந்து 17 கி.மீ தொலைவில் இருக்கிறது. இங்கு சிறுவர் பூங்காவும் உண்டு
சுருளி அருவி:
தேனியில் இருந்து 49 கி.மீ தொலைவில் இருக்கும் பாதுகாப்பான அருவி, சுருளி அருவி ஆகும். இங்கு அனைவரும் நின்று குளிக்கவும் உடை மாற்றவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேற்குத்தொடர்ச்சி மலையில் இருந்து மூலிகைகளுடன் கலந்து வரும் இந்த சுருளி அருவி நீர் உடலுக்கு புதுத்தெம்பைத் தரக்கூடியது.
மேகமலை:
தேனியில் இருந்து சின்னமனூர் வழியாக 51 கி.மீ பயணித்தால் குலுகுலு மேகமலையை அடையலாம். தங்குமிடம் வசதியுண்டு.
கொழுக்குமலை:
தேனி மாவட்டம், போடிநாயக்கனூரில் இருந்து சூரியநெல்லி சென்று, அங்கிருந்து ஜீப் மூலமாக கொழுக்கு மலையை அடையலாம். கொழுக்கு மலை தேனி மாவட்டத்தில் இருந்தாலும் பாதை வசதி இல்லாததால், இன்றும் கேரள மாநில எல்லைக்குள் நுழைந்து தான், கொழுக்கு மலை செல்ல வேண்டும். தேனியில் இருந்து சூரியநெல்லி வழியாக 65 கி.மீ பயணித்து கொழுக்குமலையை அடையலாம். கேம்பிங் செய்யவும், சூரிய உதயத்திற்கு உற்ற இடமாக இந்த இடம் திகழ்கிறது. இங்கு ஆங்கிலேயர்கள் காலத்தில் உருவாக்கப்பட்ட தேயிலை பொடி தயாரிக்கும் தொழிற்சாலையும் உண்டு.

Wednesday, January 29, 2025

காரமடை வனப்பகுதி ,பரளிக்காடு பரிசல் துறையை


 கோவை - மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள காரமடையில் இருந்து மஞ்சூர் செல்லும் சாலையில் உள்ளது காரமடை வனப்பகுதி. இப்பகுதியில் மலைவாழ் மக்களுடன் இணைந்து சுற்றுச்சூழல் சுற்றுலாவை நடத்தி வருகிறது காரமடை வனத்துறை. சனி, ஞாயிறுகளில் அனுமதி. 20 பேருக்கு குறையாமல் முன்பதிவு செய்தால், எந்த நாளிலும் அனுமதிப்பார்கள். பரிசல் பயணம், மதிய உணவு, ஆற்று குளியலுக்கு பெரியவர்களுக்கு ரூ.300, 15 வயதுக்கு உட்பட்ட சிறியவர்களுக்கு ரூ.200 கட்டணம். கோவையில் இருந்து காரமடை வழியாக இரண்டரை மணி நேர பயணத்தில் பரளிக்காடு பரிசல் துறையை அடையலாம். காலை 10 மணி அளவில் பூச்சிமரத்தூரில் உள்ள பரிசல்துறையில் தயாராக இருக்க வேண்டும். அங்கு செல்ல பஸ் வசதி இல்லை. பைக், காரில் செல்லலாம்.

வனத்துறையினர், அப்பகுதி மலைவாழ்மக்கள் வரவேற்பார்கள். சுக்கு காபி கொடுத்து உபசரிப்பார்கள். பரிசல் கரையில் இயற்கை எழிலோடு பெரிய மரங்களும், நிழலும் ஆசுவாசப்படுத்தும். அங்கிருந்தவாறு பரிசல் நடக்கும் பில்லூர் ஆற்றின் அழகை, இருபுறமும் மலைகள் பசுஞ்சுவராய் காட்சியளிப்பதை ரசிக்கலாம். 30&க்கும் அதிகமான பரிசல்கள் உள்ளன. ஒரு பரிசலில் 4 பேர் வீதம் செல்லலாம். 2 மணி நேரம் பரிசலில் பயணிக்கலாம்.
மலையடிவாரங்களில் தற்காலிகமாக இறங்கி ஓய்வெடுக்கலாம். வனப்பகுதியில் காலாற நடக்கலாம். அங்குள்ள மலைவாழ் குடியிருப்புகளை பார்வையிடலாம். சலிக்க, சலிக்க மேற்கொண்ட பரிசல் பயணம் முடிந்து பரிசல் கரையில் இறங்கினால் மலைவாழ் மக்கள் சமைத்த உணவு தயாராக இருக்கும்.
அதில் களி உருண்டை, நாட்டுக்கோழி குழம்பு, மீன் குழம்பு, வெஜிடபிள் பிரியாணி, கேசரி, சப்பாத்தி, கீரை மசியல், வெங்காய தயிர்பச்சடி, தயிர் சாதம், அப்பளம், ஊறுகாய் மினரல் வாட்டர் வழங்குவார்கள். உணவின் ருசி நம்மை கிறங்கடிக்கும். பரிசல் கரையில் உள்ள மர கயிறு ஊஞ்சலில் விளையாடி மகிழலாம்.அங்கிருந்து மாலை 3 மணியளவில் வனத்துறையினர் காரமடை செல்லும் வழியில் 20 கி.மீ. தூரத்தில் உள்ள பவானி ஆற்றுக்கு அழைத்து செல்வார்கள். கூழாங்கற்கள் நிறைந்த ஆற்றின் நீர் குளிர்ச்சியானது. மூழ்கி எழுந்தால் மொத்த களைப்பும் பறந்துபோய் புத்துணர்ச்சி வந்துவிடும்.
ஆற்றில் 5 மணி வரை ஆட்டம் போடலாம். பின்னர் வனத்துறையினர் வழியனுப்பி வைப்பார்கள். பரிசல் பயணம், ஆற்றுக்குளியல் வனத்துறையினரின் கண்காணிப்பில் நடப்பதால் தைரியமாக செல்லலாம். பரளிக்காடு சுற்றுச்சூழல் வனச்சுற்றுலாவை குடும்பத்தோடு குதூகலிக்கலாம். வன அதிகாரியை 90470 51011 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு 3 நாள் முன்பு முன்பதிவு செய்ய வேண்டும்.

சூரியமலை ! பாதாள குகைக்குள் கொங்கண சித்தர் !

 சூரியமலை ! பாதாள குகைக்குள் கொங்கண சித்தர் !





சித்தர் வாழும் ஒற்றை மலை
சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகே கொங்கணா புரம் ஒன்றியத்தில் உள்ளது தங்காயூர் வேலம்மாள் வலசு என்ற பகுதி. இங்கிருந்து மேலும் 4 கி.மீ. சென்றால் சூரியமலை தென்படும். இந்த மலையைத்தான் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஒற்றை மலை என்று குறிப்பிடுகின்றனர். இந்த மலை ஊரை விட்டு சற்று ஒதுக்குப்புறமாக இருக்கிறது. இந்த மலையில் ஒரு மர்மக் குகை இருப்பதாகவும், அதற்கு பல மர்மங்கள் புதைந்திருப்பதாகவும் அங்குள்ளவர்கள் சில அமானுஷ்ய தகவல்களைத் தெரிவிக்கின்றனர்.
‘பாதாள குகைக்குள் வி‌ஷப்பூச்சிகள் அதிகம். அதனால் யாரும் நுழைய முடியாது. இந்தக் குகையில் கொங்கண சித்தர் என்ற முனிவர் வாழ்ந்ததாகவும், அவர் பல சித்து விளையாட்டுகளை செய்து வந்ததோடு, மருத்துவ மூலிகைகளை பயன்படுத்தி எந்தப் பொருளையும் தங்கமாக மாற்றும் வித்தையை கற்றவர்’ என்கின்றனர் இந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள். மலையை குடைந்து உருவாக்கப்பட்ட மர்மமான அந்த பாதாள குகையில் 2 அறைகள் உள்ளன. முதல் அறை சற்று பெரியதாக காணப்படுகிறது. 2–வது அறை சிறியது. இந்த அறையில் தான், படுத்தபடி நுழையும் அளவுக்கு மிகச்சிறிய துவாரம் காணப்படுகிறது. அதனுள் மைதானம் போன்ற இடமும், அதில் அமைக்கப்பட்ட நாலு கால் மண்டபத்தில் தங்கப் புதையலும் இருப்பதாகவும், அந்தப் புதையலை இன்றைக்கும் அந்த சித்தர்தான் பாதுகாத்து வருவதாகவும் இந்தப் பகுதி மக்கள் நம்புகிறார்கள்.
ஒரு சிலர் இன்னும் ஒரு படி மேல போய், ‘அந்த குகைக்குள் தங்க ஊஞ்சலில் அமர்ந்தபடி சித்தர் ஓய்வெடுத்து வருகிறார்’ என்கிறார்கள். ‘குகைக்குள் என்னதான் இருக்கிறது என்று பார்த்துவிடுவோமே..’ என்ற அசட்டு தைரியத்தில் சில அசகாய சூரர்கள் முயற்சி செய்தும் பார்த்துள்ளனராம். ஆனால் அவர்களால் அந்த துவாரத்தின் வழியே சிறிது தூரம் கூட செல்ல முடியவில்லை. மூச்சுத் திணறல் ஏற்பட்டு, போன வேகத்திலேயே பின்வாங்கிவிட்டார்களாம்.
குகைக்கு வெளியே மலைப் பாறையில் மேடை போல செதுக்கப்பட்டு, அதில் மூலிகைகளை அரைப்பதற்கு உரல் போல ஒரு துளை உள்ளது. அந்த இடத்தில் தியானம் செய்வதற்கு ஏற்ப சிறிய மேடை போன்ற அமைப்பும் இருக்கிறது. இவையெல்லாம் கொங்கண சித்தர் அங்கு வாழ்ந்ததை உறுதிப்படுத்தும் சான்றுகளாகவே அந்தப் பகுதி மக்கள் பார்க்கின்றனர். பாதாள குகைக்கு முன்பு 100 அடி தூரத்தில் கொங்கண சித்தரின் சிலை, விநாயகர் சிலை உள்ளிட்ட பல சிலைகளும் வைக்கப்பட்டுள்ளன. பவுர்ணமி மற்றும் வெள்ளி, சனிக்கிழமைகளில் இங்கு பக்தர்கள் தவறாமல் வழிபாடு செய்து வருகின்றனர்.

திருமூர்த்தி மலையை

 

உடுமலைப்பேட்டையில் இருந்து 21 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த பகுதிக்கு உடுமலைப்பேட்டை பேருந்து நிலையத்தில் இருந்து நாள் முழுவதும் பல பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

🛕இங்கு அமைந்துள்ள பஞ்ச லிங்க அருவியில் குளியலுக்காகவும், அமணலிங்கேஸ்வரர் தரிசனத்திற்காகவும் இங்கு ஏராளமான பக்தர்களும், சுற்றுலாப்பயணிகளும் வந்து செல்கின்றனர். வார இறுதி நாட்கள் என்றால் இரண்டு மடங்கு சுற்றுலாப்பயணிகள் இங்கு குவிந்து விடுகின்றனர்.
🚶🚶‍♂️கோவிலில் இருந்து சற்று மேல் நோக்கி நடந்தால் திருமூர்த்தி அருவியை அடையலாம், மூலிகை நிறைந்த நீர் சில்லென்று கொட்டும் அருவியில் குளித்தால், அனுபவம் சொல்ல வார்த்தைகள் இல்லை,
🍛உணவு தயார் செய்து எடுத்து போய் விட்டால் அருமையாக இந்த இடத்தை அனுபவிக்கலாம், காரணம் நிறைய கடைகளில் உணவு தரமானதாக இல்லை என்பதே, அருகில் உள்ள அமராவதி அணைக்கு சென்றால் மீன் சாப்பாடு சுட சுட கிடைத்து எனக்கு, உங்கள் அனுபவங்கள் இருந்தால் சொல்லுங்க தெரிந்துகொள்வோம்,
🚙நீங்கள் எங்கு இருந்து பயணப்பட்டாலும்
கோவை காந்திபுரத்தில் இருந்து சரியாக 82 கிலோ மீட்டர் பயணித்தால் திருமூர்த்தி மலையை அடைந்துவிடலாம்.
🚌திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து 84 கிலோ மீட்டர் தூரத்தில் இந்த தலம் அமைந்துள்ளது. வார இறுதியில் குழந்தைகளுடன், பெரியவர்களும் ஜாலியாக சென்றுவர ஏற்ற ஸ்பாட் இது

Featured Post

ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதைகள் இருக்கிறது

ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதைகள் இருக்கிறது என்பதையும், ஓர் பலாப்பழத்தைப் பிளக்காமல் அதன் உள்ளிருக்கும் சுளையின் எண்ணிக்கையைய...