Monday, January 27, 2025

சித்தர்களின் தாய் வீடு என்று போற்றப்படும் ஆதி கதிர்காமம்

 ஒவ்வொரு வருடமும் ஒருமாத கால விரதமிருந்து செல்லும் அற்புதமான, அமானுஷ்யமான, ஆபத்தான கபில்வத்தை காட்டுவழி பயணம்....

(1) இலங்கையில் சித்தர்களின் தாய் வீடு என்று போற்றப்படும் ஆதி கதிர்காமம்....
(2) ஆதியில் குபேரன் இங்கு வழிபாடு இயற்றியதாக வரலாறு....
(3) தொடர்ச்சியாக 8 மணிநேரம் இலங்கையில் அடர்ந்த யாள மோனராகலை காட்டுக்குள் பல சிற்றாறுகள், வனங்களை கடந்து பயணித்தால் இயற்கையே கோயிலாக அமைத்த ஒரு அற்புத சித்தர்கள் வனம்...
(4) எந்த வித வெளியுலக தொடர்புமே இல்லாத சித்தர்களின் புனித பூமி
(5) முருக பெருமான் தவமியற்றி, அற்புத சக்திகளை பெற்று ஆதி சமாதியாகி ஒளியில் கலந்த அற்புத இடம்....
(6) நவகோடி சித்தர்களுக்கும் முருக பெருமான் தவத்தை கற்று கொடுத்த இடம்.....
(7) போகர் பெருமான் ஆதியில் தவமியற்றிய தபோவனம்
(😎 கதிர்காமத்தில் ஆதியில் இருந்த போகர் பெருமான் நவ பாஷாணங்களை கொண்டு உருவாக்கிய நவ பாஷாண வேல், நவாக்ஷரி யந்திரத்தை மறைத்து வைத்த இடம்...
(9) கஜபாகு மன்னன் முதல் முதலில் இலங்கையில் கண்ணகி வழிபாடு நடத்திய இடம்....
(10) இன்று வரை இலங்கையில் சிம்மாசனத்தில் அமரும் அரசர்கள், அமைச்சர்கள் யாராக இருந்தாலும் இங்கு சென்று வழிபாடு நடத்திய பின் தான் பதவியில் அமர்வது சாசனமாகவே உள்ளது. (முதல் முதலில் சிங்கள வரலாற்றில் துட்டகைமுனு இங்கு தொடங்கி வைத்தான். இந்த விதிமுறையை....
(11) முறையாக ஒருமாத காலம் விரதமிருந்து குறிப்பிட்ட விதிமுறைக்கமைய சென்று வழிபாடு நடத்தினால் கேட்ட வரங்கள் உடனே கிடைக்கும் அற்புத இடம்... (இது வரை என் அனுபவத்தில் பல்லாயிரம் பேரிடம் பார்த்த அனுபவம்....
(12) இன்று வரை வேற்று கிரக வாசிகள் வந்து இறங்கும் அற்புத இடமாக இந்த இடம் போற்ற படுகிறது....
1ம் நாள்:-
---------------
உகந்தை மலை நோக்கி பயணித்து மாலை உகந்தை மலை முருகன் ஆலயத்தை அடைதல்.
இரவு 7 மணிக்கு உகந்தை மலையில் வேல் பூஜை, 210 சித்தர்கள் வேள்வி, சிறப்பு அறிவுறுத்தல்கள் இரவு உணவை எடுத்தல், பயணம் பற்றிய அனைத்து அறிவுறுத்தல்கள் விடயங்களை பகிரல், தொடர்ந்து அனைவரும் ஓய்வு எடுத்தல்.
2ம் நாள்:-
----------------
அதிகாலை 5.30க்கு உகந்தை ஆலயத்தில் பயணம் சிறப்பாக அமைய சிறப்பு வழிபாடுகள்...
காலை 6.00 மணிக்கு விசேட ஜீப் மூலம் உகந்தையில் இருந்து கபிலவத்தை பயணம் ஆரம்பம். குமண சரணாலயத்தை கடந்து குமுக்கன் அம்மன் ஆலயத்தை அடைதல்.
காலை 8 மணிக்கு குமுக்கன் ஆற்றங்கரையில் அமைந்துள்ள "மிக சக்தி வாய்ந்த வன தேவதைக்கு சிறப்பு பொங்கல், சிறப்பு மடை பூஜைகள், சிறப்பு வன தேவதைகளுக்கு வன பூஜை"
தொடர்ந்து கபிலவத்தை நோக்கி பயணம்.....
காலை 11 மணிக்கு கும்பகர்ணன் ஆறு என்று சொல்லப்படும் குமுக்கன் ஆறு உற்பத்தியாகும் கும்பக கர்ப்ப பாறையில் அனைவரும் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பண வழிபாடு செய்தல். தொடர்ந்து மதிய உணவை எடுத்து கொண்டு அனைவரும் கபில வத்தை நோக்கி பயணம்.....
மாலை 4மணியளவில் கபிலவத்தை சித்தர்கள் வனத்தை அடைதல். அனைவரும் ஓய்வெடுத்து சித்தர்கள் வனங்கள் அனைத்தும் சுத்தி பார்த்தல்.
மாலை 5 மணிக்கு புண்ணிய ஆத்மாக்கள், வன தேவதைகள் அனைத்தும் வாசம் செய்யும் பாவங்களை எல்லாம் போக்கும் அபூர்வ மூலிகை சக்திகளை கொண்ட கபில நதி எனப்படும் கபிலவத்தை "கங்கையில் மரகத லிங்கத்துக்கு மாபெரும் ருத்ர அபிஷேகம்"
இரவு 7 மணிக்கு இரவு போசனங்கள் எடுத்தல், பயணத்தில் அனைவரின் அனுபவங்களை பகிரும் கலந்துரையாடல்....
இரவு 12 மணிக்கு நள்ளிருளில் அனைத்து தேவதைகளும் உலா வரும் சித்ரா பௌர்ணமி நன்னாளில் அற்புத நேரத்தில் கபில வன கங்கை கரையில் "இந்த உலகத்தை ஆளும் 210 சித்தர்களின் அதி சக்தி வாய்ந்த சித்தர்கள் வேள்வி, சிறப்பு வன பூஜை," சிறப்பு கூட்டு வழிபாடு. தொடர்ந்து கங்கை கரையில் அனைவரும் உறங்குதல்.....
3ம் நாள்:-
----------------
காலை 5 மணிக்கு நதியில் நீராடி நம் பிரார்த்தனைகள் அனைத்தும் நிறைவேற சப்த கன்னிகைகளுக்கு சிறப்பு பூஜை வழிபாடு, விசேட பொங்கல் பூஜை, இந்த உலகை நவகோடி சித்தர்களின் அருளாட்சியின் கீழ் முருக பெருமான் வாசம் செய்யும் கபில வன புளியமர நிழலில் கீழ் மாபெரும் கூட்டு வழிபாடு. தொடர்ந்து வனபோஜனம் செய்து வனத்தில் இயற்கை உணவை உட்கொள்ளல்....
காலை12 மணிக்கு அனைத்து வழிபாடுகளும் நிறைவு பெற்று கபிலவத்தையில் இருந்து மீண்டும் உகந்தை நோக்கி பயணித்தல்.
மாலை 6மணிக்கு உகந்தை ஆலயத்தில் இருந்து மீண்டும் நம் இல்லங்களுக்கு பயணித்தல்.
ஒவ்வொரு வருடமும் விரதமிருந்து முக்கியமான நம் சித்தர்களின் . நண்பர்களுடன் மட்டும் அங்கு சென்று நான் தரிசிக்கும் அபூர்வ பயணம்...
தொடர்ந்தும் அவன் அழைப்பான்... பயணிப்பேன்....
அவன் அழைப்பு இல்லாமல் கனவிலும் கூட யாரும் இங்கு சென்று சக்திகளை அடைய முடியாது....
அவன் அருளாலே
அவன் தாள் வணங்கி.....
ஓம் சிவ சிவ ஓம்
ஓம் சிவ சிவ ஓம்
ஓம் சிவ சிவ ஓம்

Saturday, January 25, 2025

தாம்பரத்திலிருந்து செங்கோட்டை சிலம்பு அதிவேக விரைவு ரயில்

 பயணிகள் கனிவான கவனத்திற்கு வண்டி எண் 20681 தாம்பரத்திலிருந்து செங்கோட்டை சிலம்பு அதிவேக விரைவு ரயில் வாரம் மும்முறை (புதன், வெள்ளி, மற்றும் சனி ) ஆகிய தினங்களில்

தாம்பரம் :8:55pm
செங்கல்பட்டு :9:23pm மேல்மருவத்தூர் :9:48pm
விழுப்புரம் :10:58pm விருத்தாசலம் :11:40pm திருச்சிராப்பள்ளி :1:45Am .
புதுக்கோட்டை :2:30Am
காரைக்குடி :3:03Am தேவகோட்டை ரோடு :3:11Am சிவகங்கை :3:35Am
மானாமதுரை :4:03Am அருப்புக்கோட்டை :4:54Am
விருதுநகர் :5:18Am திருத்தங்கல்:5:36Am
சிவகாசி :5:44Am ஶ்ரீவில்லிபுத்தூர்:5:59Am ராஜபாளையம் :6:13Am சங்கரன்கோவில் :6:38Am பாம்புக்கோவில் சந்தை :6:54Am கடையநல்லூர்:7:09Am
தென்காசி :7:48Am செங்கோட்டை :8:30Am
#குறிப்பு ( இனி சிலம்பு அதிவேக விரைவு ரயில் சென்னை எழும்பூர் செல்லாது தாம்பரத்தில் இருந்து தான் புறப்படும் மற்றும் வந்து சேரும் )
அவசியம் #Share செய்யுங்கள் இது ஒருவருக்கு பயனுள்ளதாக இருக்கும் 💯
தேவைப்படுவோர் பயன்படுத்திக் கொள்ளுங்கள் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

உடைந்த எழும்பைக் கூட ஒட்ட வைக்கும் அருகாம்பச்சை என்றும்,

 உடைந்த எழும்பைக் கூட ஒட்ட வைக்கும் மூலிகை: அதிர்ந்து போன மருத்துவர்கள்.

இன்றைக்குத் தான் சாதாரண தலைவலிக்கே மருத்துவமனைக்கு ஓடுகிறோம். நம்முன்னோர்களை கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். அவர்களின் வாழ்க்கையில் மூலிகைகளே பிரதானமாக இருந்தது.
அவர்களின் மருத்துவத்தில் முக்கியப் பங்கு வகித்த மூலிகை தான் அருகாம்பச்சை என்றும், சதாப்பு இலைச்செடி என்றும் அழைக்கப்படும் அருவதா செடி. இதன் பூர்வீகம் மேலை நாடு என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் நம்மூரு காடுகளிலும் திபு, திபுவென வளர்ந்து விடுகிறது. அடர்ந்த காடுகளில் மற்றும் மலைகளில் இயற்கையாக உள்ள இந்தச் செடி மூன்றடி உயரம் மட்டுமே வளரும். இதன் இலைகள் முருங்கை இலைகள் போல, சின்னதாக தண்டுகளில் இணைந்து காணப்படும். இந்த செடியில் மஞ்சள் நிறத்தில் பூவும் பூக்கும்.
இவை வறட்சியை தாங்கி வளரும் தன்மையுடவை. இதன் இலைகள், வேர்கள், காய்கள் அனைத்தும் மருத்துவப் பலன்கள் நிறைந்தது. இவை வீடு, வணிக நிறுவனங்களிலும் அழகுக்காகவும் வளர்க்கப்படுகிறது. இந்த மூலிகை செடி இருக்கும் இடத்தில் ஈக்கள் மொய்க்காது. இந்த செடி நாய், பூனைகளுக்கும் ஆகாது.
இந்த இலைக்கு எழும்பு முறிவு பாதிப்புகளை குணமாக்கும் ஆற்றலும் உண்டு. முதுகு தண்டு பாதிப்பை குணமாக்கும். முதுகுத்தண்டுவட வலி மற்றும் முதுகு வலி பாதிப்புகளையும் இது குணமாக்கும். சிறுநீர் கழிக்கும் போது அவரும் எரிச்சலைப் போக்கும். சிறுநீர்த்தாரை அடைப்பை சரியாக்கும். கருப்பை பாதிப்புகளையும் அகற்றும். இந்த இலைகளுக்கு மூட்டுவலியை குணப்படுத்தும் தன்மையும் உண்டு. மன அழுத்தத்தினால் உருவாகும் நரம்பு பாதிப்புகளை குணப்படுத்தி இரத்தத்தை தூய்மைப்படுத்தி வயிற்றுப் புழுக்கள அழிக்கும்.
பெண்களுக்கு மாதவிலக்கில் ஏற்படும் இரத்தப் போக்கு பாதிப்புகளை சரி செய்யும். உடல் சூட்டையும் போக்கும். மேலும் அதனால் ஏற்படும் வாத உடல் வலி, வயிற்று வலியையும் போக்கும். சுளுக்கைக், கூட இந்த இலை சுளுக்கெடுத்து விடும். அதாவது போக வைத்துவிடும். மூலவியாதி, உடல் அணுக்களை பாதிக்கும் புற்றுவியாதி ஆகியவற்றையும் சரி செய்யும்.சுவாச பாதிப்பை போக்கும்.
இந்த இலைகளை பூண்டு சேர்த்து நீரில் கொதிக்க வைத்து, கீரையைப் போல் கடைந்து உணவில் சேர்த்து சாப்பிடலாம். இதனால் மூட்டு வலி, சிறுநீர்ப்பை அடைப்பு, மூச்சுத்திணறல் ஆகியவை ஓடிவிடும்.
இதேபோல் இந்த இலையை நிழலில் உலர்த்து, இடித்துப் பொடியாக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.
அதிமதுரப்பொடி, சதகுப்பை, கருஞ்சீரகம், இலவங்கப்பட்டை, இதையெல்லா பொடியாக்கி அனைத்தையும் ஒன்றாகக் கலந்து, அதில் சிறிதளவு எடுத்து அத்துடன் பணங்கற்கண்டு சேர்த்து தினமும் இருவேளை சாப்பிட்டு வர உடல் சூடு தணியும்.
உங்களை மன அழுத்தம் வாட்டுகிறதா? அதற்கும் கூட சதாப்பு இலை மருந்து தான். இந்த இலைகளை சிறிதுஎடுத்து, நன்கு மையமாக அரைத்து அத்துடன் சிறிது மிளகுத்தூள் சேர்த்து தினமும் இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் மன அழுத்த பாதிப்புகள் விலகி, மனநிலை இயல்பாகும்.
இந்த இலைச்சாறை தேனில் குழைத்தும் சாப்பிடலாம். இந்த இலையை நன்றாக அரைத்து அந்த விழுதை மிளகுத்தூள் சேர்த்து, கொஞ்சம் எடுத்து தாய்ப்பாலில் கலந்து குழந்தைகளுக்கு சங்கில் இட்டு வாயில் ஊட்டினால் குழந்தைகளின் மார்பு சளி மட்டுப்படும்.
பக்கவாத பாதிப்பால் பலரும் வீட்டுக்குள் முடங்கிப் போய் இருப்பார்கள். இவர்கள் சதாப்பிலைகளை நன்றாக அரைத்து உடலில் வாத பாதிப்பு உள்ள இடங்களில் மேலே தடவினால் சிறிது, சிறிதாக பாதிப்புகள் அகலும். இதேபோல் நரம்பு சுருட்டல் பாதிப்பையும் இது குணமாக்கும். இந்த இலைகளை நீரில் கொதிக்க வைத்து, அந்த நீர் வற்றியதும் ஆறவைத்து தினசரி இரண்டு அல்லது மூன்று வேளை பருகினால் மூட்டுவலி சரியாகும். குடல் புழு அழியும். இரத்த நாள அடைப்புகள் இருந்தால் அதையும் போக்கிவிடும்.
ஞாபசக்தியை அதிகரிப்பது, கண் வீக்கம், வலியை போக்குவது என இதன் பயன்கள் இன்னும் அதிகம். உங்க ஊர் நாட்டு மருந்து கடைகளில் இந்த இலை கிடைக்கிறதா என முயற்சித்து பாருங்களேன்.

தூத்துக்குடி இருந்து பாலக்காடு பாலருவி தினசரி விரைவு ரயில்

 பயணிகள் கனிவான கவனத்திற்கு வண்டி எண் 16791 தூத்துக்குடி இருந்து பாலக்காடு பாலருவி தினசரி விரைவு ரயில் உள்ளது தூத்துக்குடி :10:00pm

துத்தி-மேலூர் :10:07pm
திருநெல்வேலி :10:55pm
சேரன்மகாதேவி :11:13pm
அம்பாசமுத்திரம் :11:29pm
கீழகடையம்:11:39pm
பாவூர்சத்திரம்:11:49pm
தென்காசி :12:03Am
செங்கோட்டை :12:35Am
தென்மலை :1:39Am
புனலூர் :2:40Am
அவனீஸ்வரம்:2:54Am
கொட்டாரக்கரை:3:03Am
எழுகோன்:3:10Am
குந்தாரா:3:20Am
கொல்லம் :4:30Am
பெரிநாடு:4:46Am
முண்ட்ரோத்துருத்து:4:52Am
சாஸ்தாங்கோட்டை:5:00Am
கருநாகப்பள்ளி:5:11Am
ஓச்சிறை :5:21Am காயம்குளம்:5:31Am
மாவேலிக்கரை:5:42Am
செரியநாடு:5:49Am
செங்கன்னூர்:5:56Am
திருவல்லவாழ்:6:07Am
சங்கனாச்சேரி:6:17Am
கோட்டயம்:6:40Am
ஏற்றுமானூர்:6:54Am
குருப்பந்தாரா:7:05Am
வைக்கம் சாலை:7:17Am
பிறவம்:7:26Am
முளந்துருத்தி:7:38Am
திருப்பூணித்துறை:7:52Am
எர்ணாகுளம் டவுன் :8:38Am
ஆலுவா:9:05Am
அங்கமாலி:9:17Am
திருச்சூர்:9:57Am
ஒட்டப்பாளையம்:10:48Am
பாலக்காடு:12:00pm தேவைப்படுவோர் பயன்படுத்திக் கொள்ளுங்கள் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

உயிரோட்டமுள்ள நந்தி

 உயிரோட்டமுள்ள நந்தி

சிவசைலம் பரமகல்யாணி உடனுறை சிவசைலநாதர் கோவில் திருநெல்வேலியிலிருந்து மேற்கே சுமார் 57 கிமீ தொலைவில் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் கடனை ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இக்கோவிலில் உள்ள நந்தி சிலையின் முதுகில் உளியால் ஏற்பட்ட ஒரு தழும்புள்ளது.
ஒரு சமயம் தேவர்களின் தலைவனான இந்திரனுக்கு சாபம் ஒன்று ஏற்பட்டது. அதற்கு விமோசனமாக சிவசைலத்தில் எழுந்தருளி இருக்கும் இறைவனுக்கு எதிராக ஒரு நந்தியை பிரதிஷ்டை செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டது. அதன்படி இந்திரன் தேவர்களின் சிற்பியான மயனை அழைத்து நந்தி விக்கிரகம் ஒன்றை நிர்மாணிக்க கூறினான். சிற்ப சாத்திரங்களை முறைப்படி கற்ற மயனும் சிவசைலம் வந்து இந்திரன் கூறியபடி சிற்ப சாத்திர விதிமுறைப்படி ஓர் அழகிய நந்தியை உருவாக்கினான். சிற்ப சாத்திரங்களின் அனைத்து விதிகளின் படியும் முழுமையாக விளங்கிய அந்த கல் நந்தி இறுதியில் உயிர் பெற்று அங்கிருந்து செல்ல எழ முயற்சித்தது. மயன் தன் கையில் இருந்த உளியால் நந்தியின் முதுகில் அழுத்த நந்தி அவ்விடத்திலேயே நிலையாக தங்கியது. இதனால் நந்தியின் வலது கால் சற்று உயர்த்தப்பட்ட நிலையிலும் மற்ற மூன்று கால்கள் வளைந்திருக்கிறது. உளியினால் மயன் அழுத்திய தழும்பை இன்றும் இந்த நந்தியின் மீது பார்க்க முடியும். இந்த நந்தியின் உடம்பில் இருக்கும் அணிகலன்களும் அது தன் வாலை பின்னங்கால் வழியாக வளைத்து வைத்திருப்பதும் அதன் அழகிற்கு மேலும் மெருகு ஊட்டுகின்றன.

நாக சாதுக்கள் எங்கிருந்து வருகிறார்கள்?

 நாக சாதுக்கள் எங்கிருந்து வருகிறார்கள்? கும்பமேளாவுக்குப் பிறகு எங்கு செல்கிறார்கள்

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளாவில் நாக சாதுக்கள் அதிக எண்ணிக்கையில் கலந்து கொள்கின்றனர் கும்பமேளாவுக்குப் பிறகு, அவர்கள் எங்கு திரும்பி செல்கின்றனர்?
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளா உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாஜ்ராஜில் தொடங்கி உள்ளது. இந்த கும்பமேளாவில் கலந்து புனித நீராடினால் பாவங்கள் நீங்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கையாக உள்ளது.
இந்த விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்கின்றனர். கும்பமேளாவின் போது, #சனாதன தர்மத்தின் தனித்துவமான மற்றும் மிகவும் துறவி மரபின் ஒரு பகுதியாக இருக்கும் நாக சாதுக்கள் அதிக எண்ணிக்கையில் கலந்து கொள்கிறார்கள். அவர்கள் கும்பமேளாவின் முக்கிய ஈர்ப்பாகவும் ஆன்மீக நிகழ்வின் மையமாகவும் உள்ளனர்.
நாக சாதுக்களின் மர்மமான வாழ்க்கை காரணமாக, அவர்களை கும்பமேளாவில் மட்டுமே சமூக ரீதியாகக் காண முடியும். அவர்கள் கும்பமேளாவிற்கு எப்படி வருகிறார்கள், அங்கிருந்து எப்படி செல்கிறார்கள் என்பது ஒரு மர்மம், ஏனென்றால் அவர்கள் பொதுவில் வந்து செல்வதை யாரும் பார்த்ததில்லை. லட்சக்கணக்கான இந்த நாக சாதுக்கள் எந்த வாகனத்தையும் அல்லது பொது வாகனத்தையும் பயன்படுத்தாமல், மக்களால் பார்க்கப்படாமல் கும்பமேளாவுக்கு வருகிறார்கள்.
அவர்கள் இமயமலையில் வசிப்பதாக நம்பப்படுகிறது, மேலும் அவர்கள் பொது மக்களிடையே காணப்படும் ஒரே நேரம் கும்பமேளா மட்டுமே. கும்பமேளாவில் உள்ள இரண்டு பெரிய நாக அகாராக்கள் மகாபரிநிர்வாணி அகாரா மற்றும் வாரணாசியில் உள்ள பஞ்சதஷ்ணம் ஜூனா அகாரா ஆகும்.
பெரும்பாலான நாக சாதுக்களும் இங்கிருந்து வருகிறார்கள். பெரும்பாலும் நாக சாதுக்கள் திரிசூலங்களை ஏந்தி தங்கள் உடல்களை சாம்பலால் மூடிக்கொள்கின்ற்னர். அவர்கள் ருத்ராட்ச மணிகள் மற்றும் விலங்குகளின் தோல்கள் போன்ற பாரம்பரிய உடைகளையும் அணிவார்கள்.
கும்பமேளாவில் குளிப்பதற்கான உரிமையை முதலில் பெறுபவர்கள் இவர்களே, அதன் பிறகு மற்ற பக்தர்கள் குளிக்க அனுமதிக்கப்படுகிறார்கள். ஆனால் அதன் பிறகு அவர்கள் அனைவரும் அந்தந்த மர்ம உலகங்களுக்குத் திரும்புகிறார்கள். அவர்களின் இந்த மர்ம உலகம் எங்கே என்பதை தெரிந்து கொள்வோம்...
நாக சாதுக்களின் மடம் (அகதாஸ்)
கும்பமேளாவின் போது, நாக சாதுக்கள் தங்கள் அகதாக்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள். கும்பமேளாவுக்குப் பிறகு, அவர்கள் அந்தந்த அகதாக்களுக்குத் திரும்புகிறார்கள். அகதாக்கள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ளன, மேலும் இந்த சாதுக்கள் அங்கு தியானம், சாதனா மற்றும் மத போதனைகளைப் பயிற்சி செய்கிறார்கள்.
ரகசிய மற்றும் ஒதுங்கிய சாதனா
நாக சாதுக்கள் தங்கள் துறவி வாழ்க்கை முறைக்கு பெயர் பெற்றவர்கள். கும்பமேளாவுக்குப் பிறகு, பல நாக சாதுக்கள் சாதனா மற்றும் தபஸ்யா செய்ய இமயமலை, காடுகள் அல்லது பிற அமைதியான மற்றும் ஒதுங்கிய இடங்களுக்குச் செல்கிறார்கள். அவர்கள் கடினமான தவங்கள் மற்றும் தியானத்தில் நேரத்தை செலவிடுகிறார்கள், இது அவர்களின் ஆன்மா மற்றும் சாதனாவின் முன்னேற்றத்திற்கு முக்கியமானதாகக் கருதப்படுகிறது. கும்பமேளா அல்லது பிற மத நிகழ்வுகள் நடைபெறும் போது மட்டுமே அவர்கள் பொதுவில் வருகிறார்கள்.
புனித யாத்திரைத் தலங்களில் வசிப்பது
சில நாக சாதுக்கள் காசி (வாரணாசி), ஹரித்வார், ரிஷிகேஷ், உஜ்ஜைன் அல்லது பிரயாக்ராஜ் போன்ற பிரபலமான புனித யாத்திரைத் தலங்களில் வசிக்கிறார்கள். இந்த இடங்கள் அவர்களுக்கு மத மற்றும் சமூக நடவடிக்கைகளின் மையமாகும். எப்படியிருந்தாலும், ஒரு நாகராக மாறுவது அல்லது புதிய நாகர்களின் தீட்சை பிரயாகை, நாசிக், ஹரித்வார் மற்றும் உஜ்ஜைன் கும்பமேளாவில் மட்டுமே நடைபெறுகிறது.
மதப் பயணங்கள்
நாக சாதுக்கள் இந்தியா முழுவதும் மதப் பயணங்களை மேற்கொள்கின்றனர். பல்வேறு கோயில்கள், புனித யாத்திரைத் தலங்கள் மற்றும் மத நிகழ்வுகளில் பங்கேற்பதன் மூலம் அவர்கள் தங்கள் இருப்பைக் குறிக்கின்றனர்.
பல நாக சாதுக்கள் ரகசியமாக வாழ்கிறார்கள், வழக்கமான சமூகத்திலிருந்து துண்டிக்கப்பட்ட வாழ்க்கையை நடத்துகிறார்கள். அவர்களின் ஆன்மீக பயிற்சி மற்றும் வாழ்க்கை முறை அவர்களை சமூகத்திலிருந்து வேறுபட்டவர்களாகவும், சுயாதீனமானவர்களாகவும் ஆக்குகிறது.

மலையும் சந்திக்கும் இடம் நீலகிரி

 மேற்கு தொடர்ச்சி மலைகளைப் பற்றியும் கிழக்கு தொடர்ச்சி மலைகளைப் பற்றியும் தெரிந்து கொள்வோம்...

மேற்கு தொடர்ச்சி மலைகள்...
கன்னியாகுமரி மலைகள் நெல்லை களக்காடு முண்டந்துறை மலைத் தொடர் பழனி மலைத்தொடர் மேகமலைத்தொடர் ஆனைமலைத் தொடர் முதுமலைத் தொடர்...
கிழக்கு தொடர்ச்சி மலைகள்...
சேர்வராயன் மலைத்தொடர் கல்வராயன் மலை தொடர் பச்சை மலைத்தொடர் கொல்லிமலை தொடர் பருவதமலை தொடர் திருவண்ணாமலை தொடர்...
மேற்கு தொடர்ச்சி மலையின் அதிகபட்ச உயரம் 8000 அடி ஊட்டியில் உள்ள தொட்டபெட்டா...
கிழக்கு தொடர்ச்சி மலையின் அதிகபட்ச உயரம் 5000 அடி ஏற்காடு பகுதிகள்...
கிழக்கு தொடர்ச்சி மலைகளில் பெரும்பாலும் சமவெளி பகுதிகளில் பயிரிடப்படும் பெரும்பாலான உணவு பயிர்கள் இங்கும் விளையும்...
மேற்கு தொடர்ச்சி மலைகளில் மலை பயிர்கள் மட்டுமே விளையும்...
மேற்கு தொடர்ச்சி மலைகள் தொடர்ச்சியாகவும் அடர்த்தியாகவும் பசுமையாகவும் இருக்கும்...
கிழக்குத் தொடர்ச்சி மலைகள் தொடர்ச்சியாக இல்லாமல் விட்டு விட்டு இருக்கும் பருவ மழை காலங்களில் மட்டுமே பசுமையாக இருக்கும்...
மேற்கு தொடர்ச்சி மலையும் கிழக்கு தொடர்ச்சி மலையும் சந்திக்கும் இடம் நீலகிரி.

ஆன்க்ஸியோலிடிக் விளைவுகளை

 யானை நெருஞ்சில்

சிறுநீரகம் சார்ந்த பிரச்னைகளுக்கு மிகுந்த பலனைக் கொடுக்கிறது. இதில் இருக்கக்கூடிய இலைகள், காய்கள், வேர், தண்டு அனைத்தும் மருத்துவ குணம் கொண்டது. இதை எடுத்துக்கொள்வதன் மூலம் சிறுநீரகக்கல் ஏற்படாமல் தடுக்கிறது.
சிறுநீரக் கல் இருக்கும் பட்சத்தில் எதை வெளியேற்ற உதவுகிறது. சிறுநீரகத்தொற்றால் ஏற்படக்கூடிய சிறுநீர் எரிச்சல், அடிவயிற்று வலி, சிறுநீர் மஞ்சலாக செல்வது ஆகியவை குணப்படுத்தப்படுகிறது.
யானை நெருஞ்சில் இலை சாறு சிறுநீரகத்தில் உருவாகும் ஆகிய பாக்டீரியாக்களை அழிக்கிறது. சிறுநீரகத்தை பாதுகாக்கிறது. சிறுநீர் துவாரம், ஆண்குறி புண், ஆண் மலட்டுத்தன்மை, விந்தணு குறைபாடு இவைகள் நீங்கும்.
பெண்களுக்கு ஏற்படும் வௌ்ளைப்படுதல், சிறுநீர் எரிச்சல், பால்வினை தொற்றுநோய்க்கள் போன்ற நோய்களை குணப்படுத்தும். ஆண்களுக்கு வயோதிகக்காலத்தில் ஏற்படும் பிராஸ்டேட் சுரப்பி வீக்கத்தினை சீர் செய்து பிராஸ்டேட் சுரப்பியை சீராக சுரக்கச் செய்கிறது.
இலை, காம்பு, காய் அனைத்தும் பிடுங்கி ஒரு கையளவு, 250 மிலி சுத்தமான நீரில் போட்டு 30 நிமிடம் வைத்தால் அந்த நீரானது எண்ணெய் அல்லது குழப்பு போல் ஆகம். இதைக் குடித்தால் மேற்கண்ட நோய்கள் போகும். மேலும் சொப்பனஸ்கலிதம், தாது உடைதல், சிறுநீ்ர் எரிச்சல் நீங்கும்.
யானை நெருஞ்சில் காயை காயவைத்து உலர்த்தி கஷாயம் செய்து குடித்து வந்தால் சிறுநீரகக் கல் நீங்கும். யானை நெருஞ்சிலின் சமூலம்(அனைத்தும்) அரைத்து நெல்லி அளவு எருமைத்தயிரில் கலக்கி காலை ஒரு வேளை மட்டும் மூன்று நாட்கள் எடுத்துக்கொண்டால் நீர்க்கட்டு, நீர் எரிச்சல், வெள்ளைப்படுதல், தேக எரிச்சல் நீங்கும்.
இதன் இலையை இடித்து சூரணம் செய்து இரண்டு வேளைப் பாலில் போட்டு நாட்டுச் சர்க்கரை கூட்டி சாப்பிட்டு வந்தால் வெள்ளைப்படுதல் மற்றும் வயிற்றுப்புண் நீங்கும். இதன் தண்டை இடித்துச் சாறு எடுத்து பாலில் கலக்கி உண்டு வந்தால் சிறுநீரக, எரிச்சல், விந்து நீர்த்துப்போதல், சிறுநீர் போகும்போது வலி , ஆண்மைக்குறைவு இவைகள் நீங்கும்.
மனநல கோளாறுகளுக்கு:
நெருஞ்சிலில் உள்ள சப்பைனின்களின் இருப்பு காரணமாக, மனத் தளர்ச்சி எதிர்ப்பு மற்றும் ஆன்க்ஸியோலிடிக் விளைவுகளை கொண்டுள்ளன, இதனால் இந்த மூலிகையை பதட்டம் மற்றும் மனச்சோர்வு மேலாண்மைக்கு பயன்படுத்தலாம்.
இதயத்திற்கு:
நெருஞ்சில் ஆண்டிஆக்சிடண்ட்டிகளால் நிறைந்து காணப்படுகிறது, இது கார்டியோ பாதுகாப்பு செயல்களுக்கு பொறுப்பானதாகும். இது இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்டிரால் அளவை குறைக்க உதவுகிறது மேலும் இதனால் இந்த மூலிகை அதிரோஸ்கிளிரோஸ் மற்றும் பிற இதய கோளாறுகளை தடுக்க உதவுகிறது.
நெருஞ்சிலின் பக்க விளைவுகள்
பெரும்பாலான ஆய்வுகள் நெருஞ்சில் நுகர்வு பாதுகாப்பானது மேலும் இது எந்த தீவிர பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது என்பதைக் காட்டுகின்றன. நெருஞ்சில் வயிறு கோளறுகளை ஏற்படுத்தலாம், இதனால் ஆண்களுக்கு புரோஸ்டேட் அளவு அதிகரிக்கக்கூடும். உங்கள் தினசரி உணவில் நெருஞ்சிலை சேர்த்து கொள்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனையை பெற்றுக் கொள்வது நல்லது.

பொங்கப்பூ,

 பொங்கல் பண்டிகைக்கு வீட்டின் முன்வைக்கும் பீளைப் பூவுக்கு பல்வேறு பெயர்கள் உள்ளன. பூளைப் பூ, பொங்கப்பூ, சிறுகண்பீளை, கண்ணுப் பிள்ளைச்செடி என பல்வேறு பெயர்களில் அழைக்கப் படுகின்றன. அமரன் தேசியா எனும் தாவர வகைக் குடும்பத்தைச் சேர்ந்தது. பீளைப்பூ பாம்பு கடிக்கு சிறந்த மருந்தாகும். இச்செடியில் பல மருத்துவ குணங்கள் உள்ளன. வீடுகளில் பூச்சிகள் பிரவேசிக்காமல் தடுக்கும். பொங்கல் திருவிழாவின்போது காப்புக் கட்டவும், வீடுகளுக்கும், மாடுகளுக்கும் தோரணம் கட்டவும் பயன்படுத்தப்படுகிறது.

இது ஒரு வற்றாத புதர் பயிர், பயிரிடப்படாத நிலங்களில் காணப்படுகிறது. மழைக் காலங்களில் நன்றாக வளரும். மழை நின்ற பிறகு பூப்பூக்கும். இதன் இலைகளை ரசம் தயாரிக்கவும் பயன்படுத்துகின்றனர். சீரான சிறுநீர் போக்குக்கும், விஷ முறிவுக்கும் உதவும். மேலும், நோய்த் தொற்றிலிருந்து பாதுகாக்கும் வகையில், ஆவாரம்பூ, மாவிலை, வேப்ப இலை ஆகிய மூன்றும் கூரைப்பூவுடன் இணைத்து கட்டப்படுகின்றன. இந்த மலரைப் பாதுகாக்கும் தாவரங்களாக ஆவாரம்பூ, மாவிலை, வேப்ப இலை உள்ளன. இத்தாவரங்கள் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, வைரஸ் எதிர்ப்பு தாவர மூலக்கூறுகளை கொண்டுள்ளதாக, சமீபத்திய ஆராய்ச்சிகள் மூலம் தெரிய வந்துள்ளன.

தென்காசி ரயில் பிரம்மிக்க வைக்கும் சுற்றுலா :

 தென்காசி ரயில் பிரம்மிக்க வைக்கும் சுற்றுலா :

(மனதை கவரும் பதிவு)
தமிழகத்தில் இரண்டே ரயில் சுற்றுலா பயணம் உள்ளது .ஒன்று நீலகிரி ரயில் மற்றொன்று தென்காசி ரயில்.
அழகிய ரயில் பாதைகள் உலகில் பல இருக்கலாம். அப்படிப்பட்ட ரயில் பாதைகளில் ஒன்று தமிழகத்திலும் இருக்கிறது, அது தென்காசி மாவட்டம் ‘செங்கோட்டை- கொல்லம்’ ரயில் பாதை. பசுமை செழித்து பச்சையாகப் பூத்துக்கிடக்கும் காட்டைக் கிழித்தபடி மலையின் மீது, ஒரு மலைப்பாம்பைப் போல வளைந்து நெளிந்து செல்லும் அந்த ரயில் பாதை அழகின் ஊற்று; உற்சாகத்தின் மறுவடிவம். அதேநேரம், மகிழ்ச்சிக்கும் பிரமிப்புக்கும் இணையாகத் திகிலையும் மிரட்சியையும் தரக்கூடியது அந்தப் பாதை.
இப்பயணத்தின்போது மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியின் இயற்கை அழகை ரசித்துக் கொண்டே பயணிப்பதுடன், மலைகளைக் குடைந்து அமைக்கப்பட்டுள்ள குகைகள், மலைகளை இணைத்துச் செல்லும் பாலங்கள் என, பயணமே மறக்க முடியாத இனிமையான அனுபவமாக இருக்கும்.
இந்தியாவில் உள்ள சிறப்பான இயற்கைக் காட்சிகள் கொண்ட ரயில் பாதைகளில் இதுவும் ஒன்று
குகைகளும், பாலங்களும்!
இந்த இடைப்பட்ட 49.38 கி.மீ. தூரத்திற்கான ரயில் பாதையில் ஏற்கனவே இருந்த நூற்றாண்டை கடந்த 5 குகைகளுடன், புதிதாகக் குடையப்பட்ட ஒரு குகையும் சேர்ந்து 6 குகைகளும், 23 பெரிய பாலங்களும், 178 சிறிய பாலங்களும் உள்ளன.
யோசித்துப் பாருங்கள்! இப்பகுதி எப்படியிருக்கும் என்று!....
இந்த வழித்தடத்தில் உள்ள பெரும்பாலான கற்பகாலங்கள் மலைகளை இணைக்கும் வகையில் கட்டப்பட்டவைதான். இவற்றை எல்லாம் கடந்தபின். அழகிய மலைகளின் நடுவே ரயில் சென்று புனலூர் ரயில் நிலையத்தை அடைகிறது.
இந்த 49.38 தூர ரயில் பாதையில் 60 சதவீதத்திற்கும் அதிகமான பாதை வளைவுகளாக உள்ளது. இதில் 52 வளைவுகள் 10 டிகிரியிலும், 5 வளைவுகள் 12.3 டிகிரியாவும் உள்ளது. அதனால் 30 முதல் 40 கி.மீ. வேகத்தில்தான் ரயில்கள் செல்லும்!
தென் தமிழகத்தின் தென்காசி, செங்கோட்டை, சங்கரன்கோயில், பாவூர்சத்திரம், ஆலங்குளம், கடையநல்லூர் பகுதிகளில் விளையும் காய்கறிகள், பூக்கள் மற்றும் தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து கேரள மாநிலத்தின் புனலூர் கொல்லம் பகுதிகளுக்கு செல்லும் சரக்குகளும் இத்தடத்தில்தான் முன்பு போல், இனிமேலும் கொண்டு செல்லப்படும்.
இனி வரும் நாட்களில் திருநெல்வேலி பகுதிக்கு சுற்றுலா வருபவர்கள், இந்த ரயில் பயணத்தையும் திட்டமிட்டு வருவது நல்லது!
50 கி.மீ. தூரத்திற்குள் கம்பீரமான மலைகள், அழகிய பசுமையான மலைச்சரிவுகள், மனதைக் கவரும் பள்ளத்தாக்குகள், சலசலவென தவழ்ந்தோடும் சிறு நீரோடைகள், எப்போதுமே மழைச்சாரல் விதவிதமான பாலங்கள், திகைப்பூட்டும் குகைகள் என வியப்பையும், மகிழ்ச்சியையும் ஊட்டும் இனிய பயணமாக இருக்கும்! வாழ்க்கையில் கட்டாயம் ஒருமுறையேனும் இந்த தென்காசி ரயில் பயணத்தில் பயணம் செய்யுங்கள்.
தென்காசி - கொல்லம் ரயில்வே காட்சிகளை கண்டு ரசித்தவர்கள் படங்களை பகிருங்கள்
வண்டி வண்டி ரயிலு வண்டி இப்பாடலில் வரும் காட்சிகள் அனைத்தும் தென்காசி ரயில் பயணத்தில் எடுக்கப்பட்டது

வாஞ்சி மணியாச்சி இருந்து திருச்செந்தூர் சாதாரண பயணிகள் ரயில்

 பயணிகள் கனிவான கவனத்திற்கு வண்டி எண் 56731 வாஞ்சி மணியாச்சி இருந்து திருச்செந்தூர் சாதாரண பயணிகள் ரயில் சேவை உள்ளது வாஞ்சி மணியாச்சி :11:00Am

நரைக்கினார்:11:07Am
கங்கைகொண்டான்:11:14Am
தாழையூத்து:11:21Am
திருநெல்வேலி :11:35Am பாளையங்கோட்டை:11:49Am செய்துங்கநல்லூர்:11:57Am தட்டான்குளம் : 12:04pm ஸ்ரீவைகுண்டம் :12:10pm ஆழ்வார்திருநகரி :12:16pm நாசரேத் : 12:21pm கச்சன்விளை: 12:27pm குரும்பூர் : 12:33pm ஆறுமுகநேரி: 12:39pm காயல்பட்டினம்:12:45pm திருச்செந்தூர் :1:30pm தேவைப்படுவோர் பயன்படுத்திக் கொள்ளுங்கள் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

மூளை ஆரோக்கியத்திற்கு அசிடைல்கொலின் அவசியம்.

 சங்குப்பூவின் நன்மைகள்

🪻🪻
சங்கு பூ உட்கொள்வது மூளையில் அசிடைல்கொலின் என்ற வேதிப்பொருளின் அளவை அதிகரிக்கிறது என்பதைக் காட்டுகிறது. நல்ல மூளை ஆரோக்கியத்திற்கு அசிடைல்கொலின் அவசியம். மூளையில் உள்ள உயர் அசிடைல்கொலின் அளவுகள் வயது தொடர்பான நினைவாற்றல் இழப்பைக் குறைத்து நினைவாற்றலை மேம்படுத்துவதாக அறியப்படுகிறது.
புற்றுநோய்களுக்கு எதிராக போராடும்
சங்கு பூ புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளை கொண்ட பொருட்கள் உள்ளன. சங்கு பூ தேநீரை உட்கொள்வது புற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் சில பங்கைக் கொண்டிருக்கலாம். இது புற்றுநோய் செல்களுக்குள் நுழைந்து அவற்றின் வளர்ச்சியைத் தடுக்கிறது.
அலர்ஜி எதிர்ப்பு பண்புகள்
சங்கு பூ டீயை உட்கொள்வதால் உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கலாம். உடல் வலி, ஒற்றைத் தலைவலி, காயங்கள் மற்றும் தலைவலியால் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கும்.
இரத்த அழுத்தத்தைக் குறைக்கும்
சங்கு பூ தேநீர் உட்கொள்வது இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும். உயர் இரத்த அழுத்தம் உள்ள நபர்கள் இதை உட்கொள்ளலாம்.
சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும்
சங்கு பூவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இது தோல் வயதான செயல்முறையை மெதுவாக்கும், முன்கூட்டிய வயதைத் தடுக்கும் மற்றும் ஒட்டுமொத்த தோல் தொனி மற்றும் அமைப்பு மேம்படுத்த.
முடி ஆரோக்கியத்தை மேம்படுத்தும்
சங்கு பூ மயிர்க்கால்களுக்கு ஊட்டமளிக்கிறது, முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது, முடி உதிர்வை குறைக்கிறது மற்றும் முடி நரைப்பதை மெதுவாக்குகிறது. சங்கு பூ பல முடி ஷாம்புகள், கண்டிஷனர்கள் மற்றும் பிற முடி தயாரிப்புகளில் ஒரு மூலப்பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது.
செரிமானத்திற்கு உதவும்
சங்கு பூ தேநீரில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் வயிற்று தசைகளை தளர்த்தவும், செரிமானத்திற்கு உதவவும் உதவும். இது குடலில் புழுக்களின் வளர்ச்சியைத் தடுக்க உதவுகிறது.
இரத்த சர்க்கரையை சீராக்கும்
சங்கு பூ தேநீர் நீரிழிவு மேலாண்மைக்கு உதவும். இது இரத்த ஓட்டத்தில் சர்க்கரையை உறிஞ்சி, இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது. நீரிழிவு நோயாளிகளுக்கு மருந்துகளுடன் சேர்த்து எடுத்துக் கொண்டால் தேநீர் நன்மை பயக்கும்.
தேநீர் தயாரிப்பு முறை:-
சங்கு பூ ஒரு நபருக்கு 6 பூ 200 தண்ணி சேர்த்து கொதிக்க விடவும் அதை அப்படியே வடித்து குடிக்கவும்

கேரளாவின் சுற்றுலா வருமானத்தில் வர்கலா

 வர்கலா - தமிழ்நாட்டில் சிலர் உச்சரிக்கும் பெயர். பாபநாச கடற்கரை என அழைக்கப்பட்டு பின்னாளில் வர்கலா என அழைக்கப்படுகிறது. கேரளாவின் சுற்றுலா வருமானத்தில் பெரும் பங்களிப்பை கொடுத்து வருவது வர்கலா.

பல்வேறுவிதமான கடற்கரைகள் நிறைந்த ஒரு நகராட்சி வர்கலா. மலையுடன் கூடிய கடற்கரை, கருப்பு மணல் நிறைந்த கடற்கரை, முழுக்க முழுக்க பாறைகளால் இருக்கும் கடற்கரை என இருக்கும் ஆகச்சிறந்த சுற்றுலா மையம். நாங்கள் தேர்வு செய்தது பாறை மீது இருக்கும் ரீசார்ட். பாறை என சொன்னாலும் அது ஒரு மலை தான். ஊரே ஒரு மலை மீதுதான் இருக்கிறது. கேரளாவே மலைகளில் நகரம் தான். அதன் ஒரு பகுதி வர்கலா. ஏறத்தாழ ஐநூறு அடி உயரமான மலை முடிந்து உடன் கடல் ஆரம்பிக்கிறது. மலையை வெட்டியது போன்ற தோற்றம். மலையில் இருந்து படிக்கட்டுகள் வழியாக இறங்கி கடற்கரை நோக்கி நகரவேண்டும்
98% வெளிநாட்டு சுற்றுலா மக்களை நம்பியே நகரம் இயங்குகிறது. ஆகையால் இந்த பாறை கடற்கரையில் மட்டும் உணவும் அவர்கள் விரும்பும் அடிப்படையிலே இருக்கும். காஃபி கூட ஸ்டீம் காஃபி தான். பதினைஞ்சு வகை காஃபி இருக்கும். எல்லாமே அவர்கள் ஸ்டைல் தான். ஆனால் எந்த கடையை நீங்கள் தேர்வு செய்தாலும் உணவின் தரம் மிக சிறப்பாக இருக்கும். அமெரிக்கன் பிரேக் பாஸ்ட், இட்டாலியன் லஞ்ச் என்று தான் எங்கள் பொழுதுகள் கழிந்தன.
கடலை கடலாகவே பார்த்துக்கொண்டு அமர்ந்திருப்பது என்பது பெரிய வரம். அது இந்த நகரில் உங்களுக்கு வாய்க்கும் .வானில் பறக்கும் பார கிளைட் தொடங்கி எல்லா நீர் விளையாட்டுகளும் உண்டு. பாரகிளைடுக்கு பணம் மட்டும் போதாது, கடல் காற்றும், நிலத்தின் காற்றும் சரியாக பொறுந்தி போக வேண்டும். எங்களுக்கு நிலத்தில் இருந்து காற்று அடிக்காமல் போய்விட்டது. அதனால் சேவை ரத்து செய்துவிட்டார்கள்.
வர்கலா முழுக்க சுற்றுலா தளம் தான். அதிக ரிசார்ட்ஸ், ஹோம் ஸ்டே என இருக்கும். கிளிஃப் ரிசார்ட் என தேடினால் தான் இந்த வகை அறைகள் கிடைக்கும். வர்கலா கொஞ்சம் காஸ்டிலியான ஊர் நகராட்சி என்றாலும் முழு கட்டுப்பாடும் காவல்துறை வசம் இருக்கிறது. அறைக்குள் எல்லாமே கிடைக்கும்.
எல்லா உணகத்திலும் கனிவாக நம்மை நடத்துவார்கள். நாமாக பில் கேட்கும் வரை பில் வராது. காரனம் அங்கே இருந்து கடலை ரசிக்கும் வாய்ப்பை அவர்கள் வழங்குகிறார்கள்.
வாய்ப்பு இருந்தால் சென்று வாருங்கள்.அறைகள் என்று பார்த்தால் குறைந்த பட்சம் 2500 ல் இருந்து நல்ல அறைகள் கிடைக்கும். கடல் பார்த்து எனில் 12000 மேலேதான். பார்க்கிங் ஒரு பிரச்சினை. ஹோட்டலில் பார்க்கிங் இருக்கிறதா என விசாரித்து செல்லுங்கள்

தும்பை செடியின் இலை மற்றும் பூ ஆகிய இரண்டிலுமே

 தும்பை செடியின் இலை மற்றும் பூ ஆகிய இரண்டிலுமே பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கின்றன....

1. தும்பை பூவை, பாலில் போட்டு நன்கு காய்ச்சி குடித்து வந்தால், சளி தொல்லையை விரைவில் குணப்படுத்தலாம்....
2. சிறிதளவு தும்பை பூக்களை எடுத்து கசக்கி, அதன் சாற்றை மூக்கில் இரண்டு சொட்டு விட்டால் தீராத தலைவலியும் பறந்து போகும்....
3. 25 கிராம் அளவிற்கு தும்பைப் பூக்களை எடுத்து அதனை நல்லெண்ணையில் போட்டு காய்ச்சி, எண்ணெய் குளிர்ந்த பின் தலையில் தேய்த்து குளித்து வந்தால் தலைவலி தீரும்....
4. தும்பை பூ சாறுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் காய்ச்சல் குணமாகும்....
5. தும்பை பூ மற்றும் தும்பை இலை இரண்டையும் சம அளவு எடுத்து கசக்கி அதில் வரும் சாறை மூக்கில் விட்டால் மூக்கிலிருந்து வரும் ரத்தம் நின்று விடும்....
6. தும்பை இலையை அரைத்து, வடிகட்டி அதில் கிடைக்கும் சாற்றை காலை வெறும் வயிற்றில் மூன்று ஸ்பூன் அளவு குடித்து வந்தால் இளைப்பு பிரச்சனை சரியாகும்...
7. தும்பை இலைகளை கசக்கி விஷக்கடி ஏற்பட்ட இடத்தில் துணியுடன் சேர்த்து கட்டினால் விஷம் வெளியேறும்...

நோய்களைக் குணப்படுத்தும் தன்மை குப்பைமேனிக்கு

 விஷக்கடி, ரத்தமூலம், வாதநோய்,நமச்சல், ஆஸ்துமா, குடற்புழுக்கள், மூட்டுவலி மற்றும் தலைவலி போன்ற நோய்களைக் குணப்படுத்தும் தன்மை குப்பைமேனிக்கு உண்டு

Featured Post

ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதைகள் இருக்கிறது

ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதைகள் இருக்கிறது என்பதையும், ஓர் பலாப்பழத்தைப் பிளக்காமல் அதன் உள்ளிருக்கும் சுளையின் எண்ணிக்கையைய...